ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
#####
உபசாந்தம்!
2506. சிவஞானமே வீடுபேறு அடைவதற்கு வாயில். சிவனிடத்தில் தன் முனைப்பு இல்லாமல் அவனது திருவடியைப் பொருந்த்தியிருப்பதே பத்தி செய்வதற்கு வாயிலாகும். சிவத்தைப் பொருந்த்திச் சிவமாவதே எண்பெருஞ் சித்தி அடைவ்தற்கு வழியாகும். உயிர் வெறுப்பு இல்லாது அடங்கி இருப்பதே சத்தியை அடைவதற்கு உரிய வாயிலாகும்.
2507. காரிய உபாதி ஏழும் தூவா மயையில் இலய முறைப்படி ஒடுங்கும். காரண உபாதி ஏழும் பராகாயமான சிவத்தில் இலயம் அடையும். காரிய உபாதி காரண உபாதிகளின் வாசனை பற்று அற நீங்கினால் பெருமையுடைய உபசந்த நிலை பொருந்தும்.
2508. சிவ தத்துவத்தையும் கடந்து துரிய நிலையில் நிற்பது ஆன்மத் தூய்மையாகும். முற்படும் சாக்கிராதீத நிலையில் உடலில் பொருந்தும் பரம் வெளிப்பட்டு நிற்கும். அந்தப் பரம் தன்னில் உடனான சிவ வியாபகத்தில் நிற்பதே உபசாந்தம்.
2509. உயிர் முப்பத்தாறு தத்துவங்களின் சேர்க்கையால் ஆணவ மலத்தளையை நீக்கிக் கொள்ளுதல் கிடைத்தற்கரிய பேறான தன் இயல்பான வடிவத்தை அறிதல். தன் உண்மை அறிந்தபின் தத்துவங்களினின்று நீங்கித் தூய்மை அடைதல். அளவுபடுத்திச் சொல்ல முடியாத இன்ப நிலை பெறல். ஒளிக்கெல்லாம் ஒளியைத் தரும் சிவனிடம் அடங்கி இருத்தல் என்பவை தத்துவங்களின் மாறுபட்ட உபசாந்தம் ஆகும்…
2510. தனக்கு வாய்த்த உபசாந்தம் அமையப் போய்ப் பொருந்திய சிவமாய் ஆதலால் சிவானந்தத்தில் ஆழ்ந்து அந்த நினைவு நீங்குதலும் மௌன நிலையாகிய சுக அனுபவத்தோடு நின்று அதையும் நீங்குதல் என்பது உபசாந்தநிலை அமைவதற்கு வேண்டிய பத்துப் படிகள் ஆகும்.
2511. பரை ஒளியில் கலப்பைப் பெற்றுப் பரத்துடன் பிரிவு இல்லாமல் அலையற்ற ஆழமான கடல் நீரை ஒத்து நின்று குருவின் உபதேசத்தை உணர்ந்து சிவானந்தத்தை அனுபவிக்கும் ஆன்மா பேச்சு அற்ற பேரானந்தத்தை அடைந்து பிறவிக் கடல் நீங்கியவன் ஆவான்.
#####