Print this page
புதன்கிழமை, 15 March 2023 15:28

கர்மங்கள்-பாவங்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!


தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக் கடக்களிற்றைக்
கருத்துள் இருத்துவாம்! கணபதி என்றிடக் கலங்கும்
வல்வினை கணபதி என்றிடக் காலனும் கைதொழும் கணபதி
என்றிடக் கருமமாதலால் கணபதி என்றிடக் கருமமில்லையே!


#*#*#*#*#

 

34.கர்மங்கள்-பாவங்கள்!

 

கர்மங்கள் 3வகை.

பிறவிகள் தொடர்புடைய கர்மங்கள் 3வகை அவை

சஞ்சிதம்- முற்பிறவியில் செய்தவை,

ஆகாமியம்- முற்பிறவியின் பலனாக அவ்வினைகளை ஏற்று மறுபிறவி அடைந்து அனுபவிக்கும் சுப. அசுப கர்மாக்கள்.

பிராரத்துவம்- ஆகாமிய கர்மாவை உடலால் அனுபவிப்பது


பத்து பாபங்கள்-

வாக்கினால் நான்கு- 1.கடுஞ்சொல், 2.உண்மையில்லாத பேச்சு, 3.அவதூறான பேச்சு, 4.அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமான பேச்சு.

சரீரத்தால் மூன்று- 1.நமக்கு என்று கொடுக்கப்படாத பொருளை எடுத்துக் கொள்வது, 2. அநியாயமாக பிறரைத் துன்புறுத்துவது. 3. பிறர் மனைமேல் ஆசை கொள்வது.

மனதால் மூன்று- 1.மற்றவர் பொருளை அடைய திட்டமிடல், 2. கெட்ட எண்ணங்களை நினைத்தல், 3. பொய்யான ஆசை கொள்ளுதல்.

மனதில் உறுதிகொண்டு இந்த பத்தும் செய்யேன் என வைகாசி அமாவாசைக்குப் பின்வரும் தசமி அன்று சேதுவில் நீராடி செயல்படின் பாபங்கள் தீரும் என்பது நியதி

பாவங்கள் விலக சந்தியாவந்தனம்-

பொழுது புலரும் முன் சந்தியாவந்தனத்தை துவக்கி, சூரியோதயம் வரை மூன்று முறை செய்யவும். இது இரவு செய்த பாவங்களைப் போக்கவல்லது. மாலை சூரியன் அஸ்தமிக்கும்முன் சந்தி செய்தால் பகலில் செய்த பாவங்கள் விலகும். சந்தியா தேவியை மூன்று காலங்களிலும் வழிபடல் வேண்டும்.


#*#*#*#*#

Read 356 times
Login to post comments