Print this page
திங்கட்கிழமை, 07 January 2019 16:45

சக்திபீடம்-5-உ/உம்

Written by
Rate this item
(0 votes)

சக்திபீடம்-5-உ/உம்

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#*#*#*#*#
எண் சக்திபீடம்-5 

அட்சரம் உ/உம்(ஐந்தாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் காஷ்மீரம்
அட்சரதேவிகள் உமாதேவி/உக்ரா
அங்கம் மேல்கழுத்து
பைரவர்/இறைவன் த்ரிசந்தேஷ்வரர்
அங்கதேவி/இறைவி மகாமாயா
பீடங்கள் புரஷ்திரகாஷ்மீராயை நம
51-ல் நம் உடலில் வலது காது
ஊர் அமர்நாத்
அருகில் ஸ்ரீநகர் அருகில்
மாகாணம்/நாடு காஷ்மீர்

இது காஷ்மீர எனும் மகாசக்தி பீடம். சதிதேவி அமர்நாத் பனி லிங்கத்தில் ஐக்கியம் ஆனதால் அமர்நாத் பனி லிங்கத்தையே தேவி ஸ்வரூபமாக பாவித்து வணங்குவர். யார் இங்கு எந்த தேவதை மந்திரத்தை ஜபித்தாலும் அவருக்கு மந்திர சித்தியாகும்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

வெண்மை நிறமேனி- ஆறுகரங்களில் வலது கைகளில் திரிசூலம், அங்குசம், வரமுத்திரை, இடது கைகளில் பாசம், கதை, அபய முத்திரையுடன் காட்சி.
தியானஸ்லோகம்:
உக்ராதேவீ ஹயுகாராக்யா ஷட்புஜா ஸிம்ஹகா ஸிதா
தக்ஷே சூலாங்குச வராந் வாமே பாச கதா பயாத்:

#####

Read 9638 times Last modified on திங்கட்கிழமை, 07 January 2019 16:55
Login to post comments