Print this page
திங்கட்கிழமை, 07 January 2019 19:16

சக்திபீடம்-13-ஓ/ஓம்

Written by
Rate this item
(0 votes)

சக்திபீடம்-13-ஓ/ஓம்

ஓம்நமசிவய!

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-13 

அட்சரம் ஓ/ஓம்(பதின்மூன்றாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் கைலாச பர்வதம் அருகில்
அட்சரதேவிகள் ஓம்காரதேவி/ அஷ்வனிதேவி
அங்கம் முன்கரம்/ உள்ளங்கை
பைரவர்/இறைவன் அமரேஷ்வர்/அமரர்
அங்கதேவி/இறைவி தாஷாயணி
பீடங்கள் கைலாஸாயை நம
51-ல் நம் உடலில் மேற் பற்கள்
ஊர் மானசரோவர்
அருகில் கைலாச பர்வதத்தின் அருகில்
மாகாணம்/நாடு திபெத்

இது கைலாச எனும் மகாசக்தி பீடம். இங்கு ஜபிக்கப்படும் மந்திரங்களினால் தேவி திருப்தி அடைவாள். அங்கம் விழுந்து பள்ளமான இப்பகுதி பிரம்மனின் காருண்ய மனமே காரணமாகி நீர் நிரம்பி மான சரோவர் எனப்பட்டது. சரோவர்- நீர்நிலை. இரு பெரும் மலைகளுக்கிடையில் அமைந்துள்ளது. இது புனித நீர். மனசரோவர் ஏரிக்கரையில் கிடைக்கும் கற்களை எடுத்து வந்து பக்தர்கள் பூஜிக்கின்றனர்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

சிவப்பு நிறமேனி- ஆறு முகங்கள், பன்னிரண்டு கரங்களுடன். வலது கரங்களில்-அங்குசம், அம்பு, கத்தி, பாச்க்கயிறு, சங்கு, சின்முத்திரை, இது கரங்களில்- சூலம், வில், கேடயம், முஸலம்,(குருந்தடி) புஸ்தகம், அபயமுத்திரையுடன் காட்சி. மயில் வாகனம்.
தியானஸ்லோகம்:
ஓம் காரத் வச்வி நீ தேவி ரக்த வர்ணா ஷடா நநா
மயூ கார்க பாஹூ ஸ்யாத் தத்தே தக்ஷேங் குச ஷரம்
கட்கம் பாசம் ச சிந் முத்ராம் தரம் ச கேக ரேக்ஷணா
புஸ்தகம் சா பயம் சைவ ஸர்வ சத்ரு பயங்கரீ:

#####

Read 9840 times
Login to post comments