Print this page
செவ்வாய்க்கிழமை, 08 January 2019 06:00

சக்திபீடம்-21-ங்/நம்

Written by
Rate this item
(0 votes)

சக்திபீடம்-21-ங்/நம்

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-21 

அட்சரம் ங்/நம்(ஐந்தாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் குடட்சாத்ரி குன்றின் அடிவாரம்
அட்சரதேவிகள் டர்ணாதேவி/ அருந்ததிஷக்தி
அங்கம் வலதுஅக்குள்
பைரவர்/இறைவன் காலபைரவர்
அங்கதேவி/இறைவி மூகாம்பிகை
பீடங்கள் குலாந்தகாயை நம
51-ல் நம் உடலில் வலது கைவிரல் நுனியில்
ஊர் கொல்லூர்
அருகில் சௌபர்ணிகாநதிக்கரை
மாகாணம்/நாடு கர்நாடகம்

இது குலாந்தக பீடம் எனும் மகாசக்தி பீடம். சத்ருக்களை அழிப்பதற்கு பிரயோகிக்கும் மந்திரங்களுக்கு ஸித்தி அளிக்க வல்லது. மங்களூரிலிருந்து140 கி.மீ. குலாந்தகம் எனும் சக்திபீடம். பத்திரகளி அம்மன் கோவில் பீடசக்தி முகாம்பிகை. அருகில் வானமே கூரையாக் உள்ள ஒரு கற்பாறை- அம்மனின் அக்குள் விழுந்து பாறையானது.

பிரஹாரத்தில் பஞ்சமுக விநாயகர், சங்கர பீடம், நாக உருவில் சுப்ரமண்யர், ஆஞ்சநேயர், சந்திரமௌலீஸ்வரர், லிங்கேஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், பார்த்தேஸ்வரர், பிராணாலிங்கேவரர் சன்னதிகள். வெளிப்புறத்தில் சௌடேஸ்வரி அம்மன். ஆனியில் ஜெயந்தி, ஆடியில் லட்சுமி ஆராதனை, புரட்டாசி நவராத்திரி, மாசி தேர்த் திருவிழா சிறப்பு.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

ரக்த வண்ண நிற மேனி-ஆறு முகங்கள்-ஆறு கரங்கள்- வலது கரங்களில் அம்பு, கத்தி, அபய முத்திரை, இடது கரங்களில்- வில், கேடயம், வரத முத்திரையுடன் மயில் வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
அ நந்த சக்திர் தேவேசீ ரக்தா பர்ஹிண வாஹ நா
ஷடா ந நேஷூ சாபாஸி கேட தாநா பயாந் விதா:

#####

Read 9575 times
Login to post comments