Print this page
செவ்வாய்க்கிழமை, 08 January 2019 11:25

சக்திபீடம்-30-ட4/டம்

Written by
Rate this item
(0 votes)

சக்திபீடம்-30-ட4/டம்

ஓம்நமசிவய!

விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

#*#*#*#*#
எண் சக்திபீடம்-30 

அட்சரம் ட4/டம்(பதினான்காவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் மகாராஷ்டிர மாநிலம்-ஏலாபுரம்/ வெருள்
அட்சரதேவிகள் டங்காரிணீதேவி/ ஸ்ரீகணா /ஸ்ரீதநாதேவி
அங்கம் வலதுதொடை
பைரவர்/இறைவன் அர்த்தநாரீஸ்வரர்
அங்கதேவி/ இறைவி டங்கரீணிதேவி
பீடங்கள் ஏலாபுராயை நம
51-ல் நம் உடலில் வலது கால் விரலடியில்
ஊர் வெரூல்
அருகில் எல்லோரா அருகில். அவுரங்காபத்-25 கி.மீ
மாகாணம்/நாடு மகாராஷ்டிரா

இது ஏலாபுரபீடம் என்கிற  மகாசக்தி பீடம். அம்மனுக்கு உருவமில்லை. சிவன் அர்த்தநாரீஸ்வராக இருப்பதால் அப்பனுக்குள்ளே அம்மை இருப்பதாக பாவித்து வழிபாடு

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

மின்னலைப் போன்ற ஒளியுடையவள். ஐந்து முகங்கள்- சதுர் புஜங்கள். வலது கரங்களில் டங்கா, அபுய முத்திர, இடது கரங்களில் சூலம், வர முத்திரையுடன் மயில் வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
டரூபினி ஸ்ரீ த நாக்யா பஞ்ச வக்த்ரா மயூரகா
தடித் கௌரீ கரைர் தத்தே சூல டங்க வராபயாந்:

#####

Read 10964 times
Login to post comments