Print this page
செவ்வாய்க்கிழமை, 08 January 2019 11:34

சக்திபீடம்-32-த1/தம்

Written by
Rate this item
(0 votes)

சக்திபீடம்-32-த1/தம்

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!

#*#*#*#*#
எண் சக்திபீடம்-32 

அட்சரம் த1/தம்(பதினாறாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் மகத நாட்டின் படலிபுத்திரம்/ புஷ்ப்புரா/ குஸாமாபுரம்
அட்சரதேவிகள் தமஸ்யாதேவி/ சரஸ்வதிதேவி
அங்கம் வலதுமுழங்கால்
பைரவர்/இறைவன் வ்யோமதேவர்/ வத்ரசன்/வ்யோமகேசர்
அங்கதேவி/ இறைவி சர்வானந்தகரி/ நர்மதா
பீடங்கள் ஜயந்திகாயை நம
51-ல் நம் உடலில் இடது தொடை மேற்பகுதி
ஊர் பாட்னா/ பாடலிபுத்திரம்/
அருகில் பாட்னா ர.நி-10 கி.மீ படிபடன்தேவி மந்திர், ஹரிமந்திரின் தென்கிழக்கில் சோட்டிபடன்தேவி மந்திர்
மாகாணம்/நாடு பீகார்

இது ஜயந்திபுரம் எனும் மகாசக்தி பீடம். இங்கு தனுர் வேதத்தை லட்சம் முறை ஜபித்தால் ஸித்தி கிட்டும். இரு சக்திபீடங்கள்- அன்னையின் வலது முழங்கால் விழுந்த இடத்தில் தோன்றிய கோவிலை படிபடன்தேவி, மந்திர் என்றும், துணி வீழ்ந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை சோட்டிபடன்தேவி மந்திர் என்று அழைக்கின்றனர். படிபடன்தேவி மற்றும் சேட்டிபடன்தேவி கோவில்களின் கருவரையில் மூன்று உருவங்கள் (மகாகாளி, மகாசரஸ்வதி, மகாலட்சுமி).

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

வெண் நிற ஆடையில் வெண்தாமரை போன்ற முகத்துடன் நான்கு கரங்களில் வீணை, தந்திரி, வர அபய முத்திரையுடன் வெண்தாமரை மலரில் அமர்ந்து காட்சி.
தியானஸ்லோகம்:
தாக்யா ஸரஸ்வதீ சுப்ரா ஸித பத்மாந நாம்சுகா
ஏக வக்த்ரா கரைர் தத்தே வீணா தந்த்ரீ வராபயாந்:

#####

Read 10842 times Last modified on திங்கட்கிழமை, 14 June 2021 10:40
Login to post comments