Print this page
செவ்வாய்க்கிழமை, 08 January 2019 11:40

சக்திபீடம்-33-த2/தம்

Written by
Rate this item
(0 votes)

சக்திபீடம்-33-த2/தம்

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

#*#*#*#*#
எண் சக்திபீடம்-33 

அட்சரம் த2/தம்(பதினேழாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் உஜ்ஜயினி/ அவந்திகா/
அட்சரதேவிகள் ஸ்தாண்வீதேவி/ நீலகண்டசரஸ்வதிதேவி
அங்கம் இடதுமுழங்கை
பைரவர்/இறைவன் காலபைரவர்
அங்கதேவி/ இறைவி மங்களசண்டிகா/ மகாகாளி ஹர்சித்தி
பீடங்கள் உஜ்ஜயின்யை நம
51-ல் நம் உடலில் இடது முழங்ககால்
ஊர் உஜ்ஜயினி/ கனக்சிருங்கா, குமுதவதி/ குசஸ்தலி, பத்மாவதி/ ப்ரதிகல்பா, போகவதி/ ஹிரண்யவதி
அருகில் ருத்ரசாகர் ஏரி அருகில்
மாகாணம்/நாடு மத்யபிரதேசம்

இது உஜ்ஜயின் எனும் மகாசக்தி பீடம். இங்கு கவச மந்திரங்கள் சித்தி அடையும். இந்த ஆலயம் ஹரசித்தி ஆலயம் எனப்படும். காளி உருவம் ஹரசித்தி என்ற பெயரில் இங்கு தங்கியவள். நவதுர்க்கைகளில் இவள் சித்திதா எனப்படுபவள். விக்ரமாதித்திய ராஜனின் குலதெய்வம்.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

நான்கு கரங்களில் அறுகம்புல்- என்ற தர்பை, உடுக்கை, வர-அபய முத்திரகளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
பஞ்ச வக்த்ரா ஸிதா தாக்யா நீல கண்டா சரஸ்வதீ
சாரி காம் டமரூம் தத்தே வ்ருஷா ரூடா வராபௌ:

#####

Read 9513 times
Login to post comments