Print this page
செவ்வாய்க்கிழமை, 08 January 2019 16:02

சக்திபீடம்-43-ர/ரம்

Written by
Rate this item
(0 votes)

சக்திபீடம்-43-ர/ரம்

ஓம்நமசிவய!

உருகுவோருள்ளத் தொளியே பெருமருள் சுரக்கும்
பெருமான் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் உம்பர்
கட்கரசே ஒருவ பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய்
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-43 

அட்சரம் ர/ரம்(இருபத்தேழாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் புனித கயிலாய மலை
அட்சரதேவிகள் ரக்தாதேவி/ ரேஜுஷ்வலா/ ரேசிகாதேவி
அங்கம் நிணம்-தேகக்கொழுப்பு
பைரவர்/இறைவன் பைரவர்
அங்கதேவி/ இறைவி அர்த்தநாரீ
பீடங்கள் ஸ்ரீசைலாயை நம
51-ல் நம் உடலில் வலது தோள்பட்டை
ஊர் கயிலை
அருகில் மேற்கு திபெத்தின் அருகில்
மாகாணம்/நாடு திபெத்(வாஸவ லோகம்)

இது மேரு பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரங்கள் பலிக்கும். வடதுருவத்தை மகா மேரு என்பர். நம் கண்களுக்கு மேருவாக கட்சி தருவது கயிலைமலை.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

பச்சைநிற மேனி—சிவந்த நிற ஆடை- ஐந்து முகங்கள்- எட்டுக் கரங்கள்- வலது கரங்களில்- அபய முத்திரை, அங்குசம், சூலம், பாசம், இடது கரங்களில்- கட்கம், கேடயம், கதை, வர முத்திரையுடன் சிம்ம வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ரம் ரூபா ரேசிகா ச்யாமா ஸிம்ஹஸ்தா லோஹி தாம் சுகா
பஞ்சாஸ் யாஷ்ட கரைர் தத்தே தக்ஷ வாம க்ரமேண ஸா
கட்க கேடாங்குச கதா பாசம் சூல வராபயாந்:

#####

Read 11450 times Last modified on திங்கட்கிழமை, 14 June 2021 10:39
Login to post comments