Print this page
செவ்வாய்க்கிழமை, 10 December 2019 08:09

திருமந்திரத் தொகை!குருமட வரலாறு

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

#####

திருமந்திரத் தொகை!

99. மூலன் என்ற நான் உரைத்த மூவாயிரம் தமிழ் மந்திரம் உடைய திருமந்திர மாலையை உலக உயிர்கள் உய்யும் பொருட்டே இறைவன் அருளால் செய்யப்பட்டது. உலக உயிர்கள் காலை எழுந்தவுடன் இதை ஓதி வந்தால் தலைவனை அடைந்து இன்பமெய்துவர்.

100. திருமந்திர நூலில் ஒன்பது தந்திர வகை மூவாயிரம் பாடலுடன் முத்தி நிலையைக் கூறுவது ஆகும். அறிவார்ந்த மூவாயிரம் பாடலும் பொதுவமாய் சிறப்புமாய் அமந்து ஒதுவார்க்கு நன்மை அளிப்பவை.

திருச்சிற்றம்பலம்

#####

குருமட வரலாறு!

101 கயிலாய பரம்பரையில் தோன்றி சன்மார்க்கத்தை போதிக்கும் மடங்கள் ஏழு. அவைகளுள் முன் தோன்றிய மூலன் மடத்தில் வந்த ஆசிரியர் வகைப் படுத்தப்பட்ட ஒன்பது தந்திரங்களையும் அவற்றில் சொல்லிய மூவாயிரம் மந்திரங்களையும் மேற்கொள்ள அழகிய ஆகமத்தில் கூறியவற்றை எடுத்துச் சொன்னார்.

102 சிவானந்தத்தில் திளைத்த காலாங்கர், அகோரர், நலந்தரும் நன்மை அளிக்கும் மாளிகைத்தேவர், நாதநாதர், அறிவுமயமான பரமானந்தர், போகதேவர், உலகில் இருக்கும் திருமூலர் ஆகிய எழுவரும் குற்றம் என்ற பிறவிப் பிணி இலாலாதவர்கள்.

திருச்சிற்றம்பலம்

#####

Read 1655 times Last modified on செவ்வாய்க்கிழமை, 03 October 2023 05:52
Login to post comments