ஊர்:திருக்கோகர்ணம்#தி.த-267+அ-11.கோகர்ணா.ருத்ரயோனி,வருணாவர்த்தம், ராமசேதுகாசி
இறைவன்:ஸ்ரீசமஸ்தானமஹாபலேஸ்வரர்,பிராணலிங்கேஸ்வரர்,கோகர்னேஸ்வர்,ஆத்மலிங்கேஸ்வரர்
இறைவி:ஸ்ரீகோகர்ணேஸ்வரி,ஸ்ரீதாமரைகௌரி
பிறசன்னதிகள்:ஸ்ரீதாமரகௌரி,ஸ்ரீ ரிஷபதேவர்.ஸ்ரீதத்தாத்ரேயர்.ஸ்ரீதுவிபுஜவிநாயகர்.ஸ்ரீகோகர்ணநாயகி. ஸ்ரீஆதிகோகர்ணேஸ்வரர்.
கிழக்கு,மேற்குகோபுரவாயில்.
மரம்: தீர்-33-தாம்ரகௌரி,பிரம்குண்ட.கோடி,கோகர்ண,கமண்டல
தி.நே-06-12,17-2000
# 06-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
கோ-பசு, கர்ணம்-காது, சுவாமி பசுவின்காது போல குழைந்து காணப்படுவதால்- கோகர்ணம். கயிலையிலிருந்து இராவணன் கொணர்ந்த பிராண லிங்கத்தை சிறுநீர் உபாதையால் சிறுவனாக வந்த விநாயகர் கையில் கொடுத்து கீழே வைக்காமலிருக்க வேண்ட மூன்று முறை அழைத்தும் இராவணன் வராததால் கீழே வைத்து மீண்டும் இராவணன் எடுக்க முயன்ற போது பாணம் பசுவின் காது போல குழைந்தது-கோகர்ணம். பிரமன், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், சரஸ்வதி, வசிட்டர், இராவணன், நாகராசன் வழிபட்டது. பக்தர்கள் திருமேனியை தொட்டு நீராட்டி மலர்சூட்டி வழிபடலாம். சிவராத்திரி சிறப்பு. பாணத்தில் குழி உள்ளே கொட்டைப்பாக்கு அளவில் மூலவர்-சாளக்கிராமம். விநாயகர் லிங்கத்தை கீழே வைத்ததால் இராவணன் தலையில் குட்டியதால் குழி-விநாயகருக்குத் தனி கோவில். சூரியன் வழிபாடு, பாஸ்கரத் தலம்.
ஒருசமயம் இந்த தலம் கடல் நீரில், மூழ்கி ஆலயம் இருக்குமிடம் தெரியவில்லை. முனிவர்கள் கோகர்ணேஸ்வரரை தரிசிக்க இயலாமல் தவித்தார்கள். பரசுராமரிடம் சென்று அவரின் உதவியை வேண்டினார்கள். அவர்களுக்கு உதவ எண்னம் கொண்ட பரசுராமர் சமுத்திரக் கரையை அடைந்து சமுத்திர ராஜனே, பரசுராமராகிய நான் வேண்டுகின்றேன், தரிசனம் செய்ய இயலாமல் முனிவர்கள் தவிக்கின்றார்கள். புனிதமான இத்தலத்தை நீரிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றார். சமுத்திரராஜனிடமிருந்து பதில் ஏதுமில்லை. கோபம் கொண்ட பரசுராமர் ஆக்னேய அஸ்திரத்தை எடுக்க பதைபதைத்து வந்தான். சினம் தணிந்த பரசுராமர், கோகர்ண தலம் வெளியே வர ஏதுவாக நாலாபக்கமும் இடம்விட்டு விலகிச் செல்வாயாக என்றார். அவ்வாறே நடைபெர முனிவர்களும் மக்களும் ஆனந்தத்துடன் கோகர்ணேஸ்வரரை வழிபட்டனர். பரசுராமர் மகேந்திரிபுரிக்குச் சென்றார்.
பிரம்மனின் இருப்பிடமான சதாசிருங்கம் மலையில் கருடன் துர்முகன் என்ற பாம்பை தவறவிட்டு தேடிக் கிடைக்காததால் இம்மலையைப் பெயர்த்து எடுத்துச் சென்றான். பிரம்மன் மலையை அழுத்த அது கோகர்ணத்தில் இறங்கியது. அம்மலையில் இருந்த 2கோடித் தீர்ங்களில் ஒரு கோடி கடலிலும் மற்றொரு கோடி அங்குள்ள தீர்த்தங்களில் கலந்து ஒன்றாகி கோடித்தீர்த்தமானது. கமண்டலம் கமண்டல தீர்த்தமானது. முதலில் கோடி தீர்த்தத்தில் நீராடி, பின் கடலில் நீராடி, பிண்ட தர்ப்பணம் செய்து, மீண்டும் நீராடி மகாபலேஸ்வரரை வழிபடுதல் சிறப்பு. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். பார்வதி தேவியின் நவ பெயர்கள்.1.ஷைலபுத்ரி, 2.பிரம்மசாரினி, 3.சந்திரகாந்தா, 4.குஷ்மாந்தா, 5.ஸ்கண்டமாதா, 6.காத்யாயினி, 7.காளாராத்ரி, 8.மகாகௌரி, 9.சித்தாத்ரி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)