ஊர்:திருஇடைச்சுரம்#தி.த-27.திருவடிசூலம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஞானபுரீஸ்வரர், ஸ்ரீஇடைச்சுரநாதர்(சு)
இறைவி: ஸ்ரீகோவர்த்னாம்பிகை, ஸ்ரீஇமயமடக்கொடி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீபிரமாண்டேஸ்வரர், ஸ்ரீபிரமாண்டேஸ்வரி, ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை
முகப்புவாயில்.
2பிரகாரங்கள்.
மரம்-வில்வம்.
தீர்-அரசானிக்குளம்,தாமரைக்குளம்.
4காலவழிபாடு.
தி.நே.0700-1100,1630-1900
#23062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
2000ஆண்டுகள் பழமை. ருத்ரசதன் சிவபக்தன். தன் பூஜைகளுக்கென கோசாலை வைத்திருந்தான். ஈசன் திருவிளையாடல் காரணமாக அனைத்து பசுக்களுக்கும் நோய் வந்து கோபூஜைக்கு உதவவில்லை. மன்னன் கோபூஜைக்கு நாடு முழுவதும் தேடியும் நோயில்லா பசு கிடைக்கவில்லை பார்வதி பசுவாகவும் ஈசன் இடையராகவும் வந்து இது தெவீகப் பசு என ருத்ரசதனிடம் அளித்தார். அரண்மனைப் பசு என்ற அந்தஸ்தில் பூஜை முடிந்ததும் ஓரிடத்தில் கட்டாமல் இருக்க பசு வனப்பகுதிக்குச் சென்று தன் மடிப் பாலை ஓரிடத்தில் கறப்பது கண்டு சேவகர்கள் மன்னனிடம் சொல்ல அடுத்தநாள் பசுவைப் பின்தொடர அது பால்சொரிந்த இடத்தில் மறைய அந்த இடத்தை தோண்ட கிடைத்த லிங்கம் மன்னனால் பிரதிஷ்டை செய்து வழிபாடு.
இடையன் உருவில்-ஈசன், பல திருத்தலங்களைப் பாடி மகிழ்ந்த சம்பந்தர் வழியில் களைப்புமிகுதியால் வில்வமரக்காட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரையில் அமர்ந்திருந்தார். அருகில் கோவில் இருப்பதை யாரும் சொல்லவில்லை. இறைவன் தன்னிடத்திற்கு வந்த சம்பந்தரை தாமே அழைப்பதுதான் முறை என இடையன் உருவில் மோர்கொண்டு வந்து கொடுத்து தனது இருப்பிடம்வர அழைத்தார். அந்த அழைப்பிற்கிணங்க சம்பந்தர் இடையரின் இல்லம் சென்றபோது இடையனாக வந்த ஈசன் லிங்கத்தில் மறைய சம்பந்தர் ஆனந்தமடைந்து பாடல்பாடினார். மலைகளுக்கிடையில் தலம்- இடை- ஈசுவரம்= இடைச்சுரம். திருவிடைச்சுரம் மருவி திருவடிசூலம் என்றானது. அம்பாள் பசு வடிவில் பால் சொரிந்து வழிபாடு- கெளதமரிஷி சனற்குமரர் வழிபட்டது. ஞானப்பயிர் தழைக்க உத்வி செய்யக் கேட்ட சனத்குமாரரை இங்கு தவம் செய்து ஞானமார்க்கம் சிறக்க பூஜை செய்ய அருள்- ஞானபுரீஸ்வரர். மூலவர் மரகதலிங்கம்- தீபாஆராதனை பிரகாசமாக மரகதலிங்க தரிசனம். சிவராத்ரி சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். ஐயர்அருகில்
வரை படம்: விரிவாக்கு(enlarge)