ஊர்:திருவாரூர்#தி.த-204+மு+அ102. ஸ்ரீபுரம். தியாகராஜாகோயில், திருமூலட்டானம், சேத்ரவரபுரம், ஆடகேசுபுரம், தேவயாகபுரம், முசுகுந்தபுரம், கலிசெலாநகரம், அந்தரகேசுபுரம், வன்மீகநாதபுரம், தேவாசிரியபுரம், சமற்காபுரம், மூலாதாரபுரம். கமலாலயபுரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவன்மீகநாதர், ஸ்ரீபுற்றிடங்கொண்டார்,ஸ்ரீபார்ப்பதீசுவரர்,ஸ்ரீதியாகராஜர்
இறைவி:ஸ்ரீகமலாம்பிகை4கரங்கள்-யோகாசனம். ஸ்ரீஅல்லியங்கோதை, ஸ்ரீ நீலோத்பலாம்பாள்-4கரங்கள்
தாயார்
உற்சவர்: : பிறசன்னதிகள்:ஸ்ரீதியாகராஜர். ஸ்ரீநாகநாதர்-யோகாம்பாள். ஸ்ரீரிண-ருணவிமோச்சனர், ஸ்ரீசந்திரசேகர்-தருணேந்துகேசரியம்மை, ஸ்ரீமகாதேவலிங்கம், ஸ்ரீசர்வலிங்கம், ஸ்ரீருத்ரலிங்கம், ஸ்ரீஇந்திரலிங்கம். ஸ்ரீநீலலோகிதலிங்கம், ஸ்ரீஈசான்யலிங்கம், ஸ்ரீவிஜயலிங்கம், ஸ்ரீபீமலிங்கம், ஸ்ரீதேவதேவலிங்கம். ஸ்ரீதியாகராஜர் மார்பில் ஸ்ரீசக்கரம், ஸ்ரீஎமன்-சண்டேஸ்வரராக, ஸ்ரீமேதாதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஆறுமுகர்-வள்ளி, தெய்வானையுடன்
த.வி-வீதிவிடங்கவிநாயகர்.
4புறமும்ராஜகோபுரம்-7கோபுரங்கள்.7நி.118'கிழக்குகோபுரம்
5பிரகாரங்கள்
தீர்-கமலாலயம்-தேவதீர்த்தம்(64)கயா,சங்கு-அமுததீர்த்தம்,முக்திகிணறு,செங்கழுநீரோடை, வாணி-சரஸ்வதி.
மரம்-பாதிரி.
தேர்-96'உயரஆழித்தேர்-20பட்டைகள்.
மகாமகம்-12ஆண்டுக்குஒருமுறை
6காலவழிபாடுகள்
தி.நே-0530-12, 16-2030
#23012010-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04366-242343
உடலின் 7 ஆதாரங்கள்-மூலாதாரத்தலம். பஞ்சபூத பிருதிவி தலம்-1/5. பிறக்க முக்தி தலம். பரவையர் அவதாரப்பதி. கமலை-பராசக்தி தவம் செய்யுமிடம். திருமகள், இராமர், மன்மதன் திருமால், பிரம்மா, இந்திரன், ஏகாதருத்திரர், விசுவாமித்திரர், அகத்தியர், மகாபலி, துர்வாசர், மேனகை, முசுகுந்தன், தசரதன், லவ-குசர், புரூவரசு, சுந்தரர், சம்பந்தர், நாவுக்கரசர், பட்டினத்து அடிகள், அருணகிரியார் வழிபட்டது. சங்கீத மூர்த்திகள் தியாகையர், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரிகள் அவதாரத்தலம். சப்தவிடங்க- வீதிவிடங்க- அஜபா நடனம் தலம்-1/7. திருமூலட்டானம். கமலாம்பாள்-பராசக்திபீடம்- ஸ்ரீபுரம். அஷரபீடம்-51 எழுதுக்கள்- திருவாசி- தியானம் செய்யவும். தீர்த்தக் கிணறு- முக்திக் கிணறு. தேவாசிரியம்- சிங்காதனத்து ஓவியங்கள். 1000கால் மண்டபம். வடக்கு பிரகாரத்தில் 7கோபுர தரிசனம். ரணவிமோசனேஸ்வரர்- ஆறாதபுண் ஆறும். கடன்கள் தீறும். 2சண்டேசுவரர்- எமசண்டர், ஆதிசண்டர். கமலாயகுளம், சந்திரசேகர், பைரவர் சன்னதி சிறப்பு. 50சிவலிங்க திருமேனிகள். ஆண்டு விழா, பங்குனி பிரம்மோற்சவம் சிறப்பு- ஆழித்தேரின் மேலேறி தியாகேசபெருமான் தரிசனம். நந்தியின் மேற்பரப்பில் 27நட்சத்திரங்கள்+ இராசி சக்கரம்.சனிபகவான் தோஷநிவர்த்திக்காக இங்கு வழிபட்டார். நவகிரகங்கள் நேர் வரிசையில். திருநள்ளாற்றில் சனிபகவானை தரிசித்தவர்கள் தங்களது முழு தோஷமும் நீங்க திருவாரூர் வான்மீகரையும் நவகிரக சனியையும் வழிபட வேண்டும். கமலாம்பாள்-3தேவியரின் சங்கமம். க-கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள். நீலாம்பாள் அருகில் நிற்கும் தொழியின் தோளில் இருக்கும் முருகனைத் தடவிக்கொடுக்கும் நிலை சிறப்பு. தோஷநிவர்த்தி சனி. திருவிடை மருதூர் பரிவாரத் தலம்- சோமாஸ்கந்தர்-8/9. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
கடந்த ஜென்மத்தில் குரங்காகப் பிறந்து வில்வ இலைகளை லிங்கத்தின்மேல் பிய்த்து போட்ட செயலுக்காக இப்பிறவியில் மனிதனாக- முகுந்த சக்ரவர்த்தியாக பிறந்தது. சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்த விஷ்ணு ஒரு நாள் தன் முன்னே தோன்றிய ஈசனிடம் தனக்கு புத்திரப்பாக்யம் அருள வேண்டினார். சிவனை தன் நெஞ்சத்தில் நிறுத்தி ஆனந்தத்தில் ஆட திருமாலின் உள் வெளி மூச்சுக் காற்றால் சிவனும் ஆடினார்- உச்சுவாசம், நிச்சுவாசம் என்ற அந்த ஆட்டத்தால்-அஜபா நடனம்- சிவன் மகிழ்வெய்தினார். விஷ்னுவின் மூச்சுக் காற்றல் நடனம் ஆடிய சிவனை தன்னுடன் வைத்துக் கொள்ள தேவேந்திரன் விரும்பி விஷ்ணுவிடம் யாசித்து தியாகராஜரைப் பெற்று வழிபட்டு வந்தான். தியாகர் வரவால் அவனது பிரச்சனைகள் தீர்ந்தாலும் புதிய பிரச்சனையாக வலாசுரன் தேவேந்திரனை தோற்கடித்து விரட்டியடிக்க நண்பன் முசுகுந்தரிடம் உதவி கேட்க முசுகுந்தன் வெகுண்டெழுந்து வலாசுரனுடன் போரிட்டு அவனைக் கொன்றான். தேவருலகை விட்டு திரும்பும்போது தேவேந்திரன் வணங்கிய தியாகராஜரை கேட்க மனமில்லாத தேவேந்திரன் அவரைப் போன்றே 6 தியாகராஜரை உருவாக்கியும் அதில் உண்மையான தியாகரை முசுகுந்தன் இறையால் கண்டு பெற்றுவந்து திருவாரூரில் வழிபட்டான். தேவேந்திரன் இன்னல் தீர்த்து விஷ்ணுக்கு அருள் புரிந்த-தியாகராஜர் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)