Print this page
செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:46

மூவகைச் சீவ வர்க்கம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக் களிப்பாம்.

#####

மூவகைச் சீவ வர்க்கம்!

492. சக்தியும் சிவனும் சேர்ந்து விளையாட்டாக உயிர்களை உடலில் புகுத்தி சுத்தமும் அசுத்தமும் ஆன மாயையுடன் சேர்த்து சுத்தமான மேல் பகுதியை அடையச் செய்து உயிகளின் உள்ளத்தில் விளங்கி துரிய நிலையில் சிவரூபம் காட்டி அருள் செய்வர்.

493. தெளிந்த ஞானம் உடைய விஞ்ஞான கலர் நால்வகையினரும், பேருழிக் காலத்தில் ஞானத்தைப் பெறும் பிரளயகாலத்தவர் மூவரும் உலக வாழ்வில் பொருந்தி அறியாமையை உடைய சகலர் மூவகையினருமாக விஞ்ஞான கலர் முதலிய மூவகைப் பட்டவரும் மொத்தம் பத்து பிரிவாக உள்ளார்கள்.

494. விஞ்ஞான கலர் ஆணவத்தை மட்டும் உடைய தன்மை நீங்கிய வரும், ஆன்ம ஞானம் உடைய அட்டவித்தியே சரபதம் சார்ந்தவரும், உயர்ந்த ஞானம் உடைய ஏழுகோடி மந்திரேசுவரரும், உண்மையான ஞானம் பெற்றுள்ள ஆணவ மல வாசனையை விட்டவரும் என நால்வகையினர் ஆவர்.

455. விஞ்ஞான கலரில் பக்குவம் குறைவு பொருந்தியவர் உடம்புடன் கூடியிருக்கின்றபோது ஜீவன் முக்தியடையாமல் அடுத்த பிறவியில் சிவனை அடைவர். இரண்டாம் நிலையினரான பிரளயகலர் இரு பிறப்புகளில் நூற்றெட்டூ ருத்திரப் பதம் அடைவர். மாயையினது வலிமையால் பினைக்கப்பட்ட சகலர் மும்மலம் கெடாது இருப்பர்.

496. ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களை உடைய சகலரில் சிலர் சித்துசிவனைப் பேணி ஞான வடிவமாயினர். ஞானம் கிரியை என்பவை ஒத்து சதாசிவ நிலையைப் பற்றி நிற்பவர் ஆணவம் கன்மம் மயைகளைக் கடந்து மேலே நிற்பவர் ஆவார். ஞானம் கிரியை என்பவை ஒத்து நிறக ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்களை நீக்கமாட்டாதவர் சகலர் ஆவர்.

497. சிவமாகி ஐந்து (ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி) மலங்களை வென்றவர் சித்தராய் வீடுபேற்றை அடைந்து அழிவில்லாத நிலையில் இருப்பர். பசு பாசத்தன்மை நீங்கியவரான அவர் பிறவி நீங்கினவர் ஆவார். சிவனது தத்துவங்களை (சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவம், ம்கேசுவரம், உருத்திரம், திருமால், நான்முகன்,) விரும்பி அறிந்தவர் ஆவார்.

498. விஞ்ஞான கலர் ஆணவம் என்ற மலத்தை மட்டுமே கொண்டுள்ளது. விஞ்ஞான கலரைப் போன்று சுத்த மாயையில் உள்ள பிரளயகலர் இரண்டு மலம் உடையது. கருவி கொண்டு உணரும் சகலரும் அஞ்ஞானத்தால் அறிவற்றவர் ஆவார். இந்த மூவகை உயிர் இனங்கள் உத்தமம், மத்திமம், அதமம் என்றுள்ளதால் ஒவ்வொரு பிரிவும் சேர்ந்து ஒன்பதாய் இருக்கின்றன.

499. விஞ்ஞான கலர் ஞான கன்மத்தால் உயிரின் உள்ளே நின்று உணர்த்தப் பெற்றும் பிரளயகலர் உள்நின்று உணர்த்தப்படாமையினால் வித்தியா மண்டலங்களை அடைந்தும், சகலர் ஞானத்தை படிப்படியாய் பெற மாயா உடலைக் கொண்டு திரும்ப திரும்ப பிறந்து உண்மையான ஞானத்தை அடைந்து சிவசாயுச்சிய பதம் அடைவர்.

500. ஆணவம் கொண்டுள்ள அஞ்ஞானத்தை கனவிலும் நீங்கியவர் விந்து நாதம் ஆகியவற்றை சகல நிலையில் உடம்புடன் காண முடியும்.. ஆணவம் ஆகிய மலங்களைப் பொருந்திய சகலரோ சிவதத்துவ மண்டலங்களை மலங்கள் நீங்கிய பின்பே அடைவர்.

#####

Read 2127 times Last modified on சனிக்கிழமை, 17 October 2020 10:42
Login to post comments