gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

தியான யோகம்

Written by

   ஓம் நமசிவாய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே

கழியவரும் பொருளே, கண்ணே - செழிய

கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை

அலாலயனே, சூழாதென் அன்பு!

               ******

1.தியான யோகம்  

         இந்த வழிமுறை ஒரு தந்திர யோகமாகும். மும்மூர்த்திகளுக்கும் மேலான ஒன்று பரமசிவன் பார்வதிக்கு கூறுவது போல் அவர் பைரவர் என்றும் பைரவியிடம் கூறுவதுபோல் சொல்லப்பட்டது. அட்டாங்க யோக முறையில் இதுவும் ஒரு வகை. தியானப்பயிற்சில் யோக நிலைகள், முத்திரைகள், யோக ஆசனங்கள், பிராண குண்டலினி சக்திகள், மந்திர ஜபம் முதலியன கூறப்பட்டுள்ளது. எல்லோருக்கும் மேலான பைரவரின் இயல்புகள் பலவும் வேறுபடக் கூறியிருப்பதற்கான உண்மைகளும், பரம், அபரம், பராபரம் மூன்று சக்தி நிலைகளின் உண்மைகள்யாவும் பைரவர் பைரவியிடம் விளக்குவதே மையப் பொருள். பைரவர் எனப்படுவது சக்தி வாய்ந்த எழுத்தல்ல, மூன்று சக்தியோ, அர்த்த சந்திரன், நிரோதினி, நாத பிந்து, குண்டலினியோ அல்ல.  இவை ஒரு குழந்தையின் குழந்தை மனத்திற்கேற்ப அது நம்புவதற்காக உண்மை போன்று சில வற்றைக் கூறும் தாயின் பேச்சு. யோகசாதகனைத் தூண்ட பயன்படும் சாதனம். கருத்து, காலம், இடம், காரணம், காரியம் எல்லாவற்றிற்கும் மேலானவர் பைரவர். ஆணவம் நீக்கி எல்லா எண்ணங்களையும் நீங்கிய ஆத்மாவில் வெளிப்படுபவர் பைரவர். விமலனாய், எங்கும் பரிபூரணமாய் நிறைந்தவராய் வடிவமில்லாதவராய் உள்ளவர் பைரவர். பைரவியும் விதிவிலக்கு இல்லாதவளாய் அவருடன் சேர்ந்தே இருக்கும் சக்தி. அந்த பைரவரை அடையும் வழிவகைகள் உடலில் உள்ள சக்கரங்களை மையமாக நினைத்து அதில் மனதை ஒரு முகப்படுத்தி தியானயோகம் மூலம் அறியலாம்.

                

தியானயோகம்-1

மேல் நோக்கிய பிராணன் சக்தி மார்பின் நடுவிலும், கீழ் நோக்கிப் போகும் அபானன் ஜீவசக்தி துவாத சாந்தத்திலும் உள்ளதால் அவைகளை கூர்ந்து நோக்கினால் பைரவர் அங்கே நிலை கொண்டிருப்பதை உணரலாம். மூச்சு இழுத்தல், வெளியிடுதல் முயற்சியால்- பிரணாயாமத்தால் தோன்றுவதை உணரலாம்.

துவாத சாந்தம் உச்சந்தலைக்கு மேல் 12 விரல் அங்குலம் உயரத்தைக் குறிக்கும். துவாத சாந்தம் 2 வகையாகும். அவை உள், வெளி துவாத சாந்தம் எனப்படும். உள் துவாத சாந்தம் மூக்கிலிருந்து 12 விரல் அங்குலம் உள்பக்கமாக உச்சந்தலை அருகில் வரும். இது மேல் புள்ளி எனவும் நடுமார்பில் உள்பக்கமாக நுரையீரல் தண்டின் கீழ்முணை கீழ்புள்ளியாகும். மேல் புள்ளி, கீழ் புள்ளி இரண்டும் விஸர்க்கம் ஆகும். வெளி துவாத சாந்தம் 1.புருவ மத்திக்குமேல் ஒருசாண்-12 விரல் உயரம். 2. தலை உச்சிக்குமேல் ஒரு சாண் உயரம் என்பதாகும்.

கீழ்ப் புள்ளியிலிருந்து பிராணன் தோன்றி மேல் புள்ளி- துவாத சாந்தம் வரை செல்லும். மேல் புள்ளியிலிருந்து அபானன் தோன்றி கீழ்ப் புள்ளி- மார்பு நடு வரை செல்லும். பராசக்தி அருள் அந்த இரு புள்ளிகளிலும் இருப்பதால் இப்புள்ளிகளை உணர்ந்து தியானம் செய்தால் கடவுள் அருளைப் பெறலாம்.

மூச்சுவிடும்போது வெப்பமான கரியமில வாயுவுடன் பிராணன் வரும். மூச்சு விடும்போது உடம்பில் உள்ள உறுப்புகளில் இருந்து இயல்பாக வெளியாவது பிராணன். அது கரியமில வாயுவுடன் வெளியேறாமல் இருக்கவே மெதுவாக மூச்சு விடச்சொன்னார்கள். மூச்சை நீண்ட நேரம் அடக்கும்போது நிறைய பிராணான் தோன்றி நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும். இதையே பிரணாயாமம் என்றனர்.

மூச்சை இழுக்கும் பயிற்சியில் மூக்கில் இடா, பிங்களா நாடிகள் செயலால் துவாத சாந்தத்தில் அபானனாகிய ஜீவ சக்தி உண்டாகி மார்பு நடு வரையில் செல்லுகிறது. இது இரண்டும் காந்த சக்தியாகும். அபானன் தென் துருவக் காந்தம், பிராணன் வடதுருவக் காந்தம்.

மூச்சை இழுக்கும்போது ‘ஹம்’ என்றும் மூச்சை விடும்போது ‘ஸம்’ என மந்திர ஒலிகளை உபயோகிக்கவும். ஹம் பிராணன் தோற்று விக்கும் கீழ்ப்புள்ளியில் தொடங்குவது ஆண்மையை சிவனைக் குறிக்கும். ஸம் அபானனை தோற்று விக்கும் மேல் புள்ளியில் தொடங்குவது பெண்மையை சக்தியைக் குறிக்கும். இதை ஹம்ஸம், ஸோஹம் என மாற்றிச் சொல்வது சிவோக பாவனை என்பதாகும். தாரணை, பாவனை இரண்டும் ஒன்றுதான். வேள்வி, குடமுழுக்கு சடங்குகளில் ஸோஹம்- பாவனை செய்வதால் தியானம்யோகம் வரும். இரு புள்ளிகளை மனதில் கண்டு கொள்ள வேண்டும். பிரணாயாமத்தால் வாயுக்கள் தோன்றுதல், பயணம் செய்தல் என்பவைகளை உணரல் வேண்டும். அந்த வாயுக்களின் பயணத்தோடு மனத்தை செலுத்தினால் தியானம் வசமாகும்.

தியானயோகம்-2

பிராணன், அபானன் இரண்டும் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வருவதே இல்லை. வெளி, உள் முயற்சியால் உற்று நோக்கும்போது பைரவர் நிலைகள் தெரியும். மூச்சை இழுத்தல்-பூரகம், மூச்சை வெளியேற்றுதல்- ரேசகம், மூச்சை அடக்குதல்- கும்பகம் ஆகிய மூன்றும் பிராணாயாமம் எனப்படும். மூச்சை வெளியேற்றி மூச்சை உள்ளே இழுக்காமல் வெளியேறிய காற்றை உள்ளே வரவிடாமல் அடக்கும் வெளிக் கும்பகத்தால் பிராணன் துவாத சாந்தத்தில் பரவுவதையும், மூச்சை இழுத்து அது வெளியே வராதபடி உள்ளேயே அடக்கும் உள் கும்பகத்தால் அபானன் மார்பு நடுப் பகுதியில் பரவுவதையும் உற்று அறியலாம். காந்த சக்தி பரவுவதால் உணர்வது அனுபவத்தல் இனிமையாக இருக்கும். அப்போது பைரவர் பைரவியை உணரலாம். பிராணன், அபானன் இரண்டும் பயன முடிவில் ஒரு சிறிதும் திரும்பாமல் சென்று முடியும் எல்லையில் கலந்துவிடும்.

தியானயோகம்-3

நடு மார்பிலிருந்து தலை உச்சிக்குப் போகும் பிராண சக்தியும், உச்சந்தலையிலிருந்து நடு மார்புக்கு வரும் அபான வாயுவும் இயங்காத ஒரு நிலை நிர்விகல்ப நிலையாகும், அப்போது மைய நாடியில் பைரவரை அணுக வாய்ப்புகள் ஏற்படும். நிர்விகல்ப நிலையில் பிராணன், அபானன் இரண்டையும் மனதால் பிரித்து அறிய முடியாத நிலையே பைரவரை அணுகும் நிர்விகல்ப நிலை. விகல்பம்- பிரித்து அறியும் உணர்வு. நிர்- இல்லாததைக் குறிக்கும். தியானம் செய்யும்போது தொடங்கிய நிலை மறந்து, உயர்ந்து வந்த நிலையில் மனம் பற்றிக் கொண்ட இடா, பிங்களா நாடிகளின் உணர்வால் அறிந்த பிராண, அபான சக்திகள், நம் நினைவை விட்டு அகன்று இருநாடிகளுக்கு நடுவில் உள்ள சுழுமுனை நாடியில் உணர்வு பதிந்தால் நிர்விகல்ப நிலை உண்டாகும். சுழுமுனை நாடியில் ஒன்றி உணர்ந்த நிலையே கடவுளை உணரும் நிலை. இந்நிலையில் மூச்சை இழுப்பது வெளிவிடுவது செய்ய இயலாமல் மறந்து போனது போல் ஆகி நம் மூச்சு வேகம் மிகவும் குறைந்துபோம். அந்த நினைவே அற்றுப் போகும்.

தியானயோகம்-4

மூச்சை இழுப்பது, வெளிவிடுவது என்ற செய்கைகள் கும்பக முறையால் கட்டுப்படுத்தப் பெறும்போது சாந்தம் ஆகி மனஅமைதி சக்தி உண்டாவதால் இது சாந்த சக்தி பைரவ நிலை எனப்படும். உள்பக்கமாகவும் வெளிப்பக்கமாகவும் கும்பகம் செய்வதால் பிராண சக்தியே சாந்த சக்தியாக மாறும். பிராணன், அபானன் சக்திகள் நிர்விகல்பமாகி பிரித்தறிய முடியா நிலையில் அவை இல்லாது போவதால் அதன் விளைவாக வரும் புதிய நிலையே சாந்த சக்தி பைரவ நிலை யாகும். எல்லாவற்றையும் விகல்பித்து பிரித்து உணரும் போது தான் உயிருடன் இருப்பதை உணர்வதற்கும், தூங்குகிறோம், விழிக்கிறோம் என்பவைகளை உணர சிறிதளவாவது ஆணவம் வேண்டும் அந்தச் சிறிதளவும் இல்லாத நிலை நிர்விகல்ப நிலை அதாவது சாந்த நிலை எனப்படும். நிர்விகல்ப நிலையில் உண்டாகும் சாந்ததை உணர்கிற உணர்ச்சி இல்லாமல் போகும். அந்த மேனியிலும், பாவனைகளிலும் முகத்திலும் தோன்றும் தேஜஸ் முதலிய திவ்ய ஒலியால் இது பிறரால் உணரப்படும். நிர்விகல்ப நிலைக்குப்போய் திரும்ப விகல்ப நிலைக்கு வந்தபின், தான் இதுவரை சாந்த நிலையில் இருந்ததை உணரமுடியும். முழுவதுமாக சாந்த நிலையை அடைவது பைரவரை அடைந்த நிலையாகும்.

தியான யோகம்-5

மூலாதாரச் சக்கரத்தில் உள்ள சக்தியைத் தியானம் செய்தால் அந்த சக்தி நுண்ணிய துகள்களாக மேலே சென்று துவாத சாந்தத்தில் கலந்து மறையும்போது பைரவர் தோன்றுவார். முதுகு எலும்பின் அடியில், நீர்விடும் உறுப்புக்கு கீழே இருவிரல், மலவாயிலிருந்து மேலே இருவிரல் தூரத்திலிருப்பது மூலாதாரம் என்ற ஒரு ஆதாரத் தாமரையாகும். எல்லா உயிர்களுக்கும் உடம்பின் கீழ்ப்பகுதில் உள்ள இதில் ஒளிமிகுந்த ஜோதிவடிவமான குண்டலினி சக்தி உள்ளது. இதிலிருந்துதான் பிராண சக்தி புறப்பட்டு மார்பின் நடுவில் சேகரிக்கப் பட்டு மூச்சு வெளியேறும்போது துவாத சாந்தத்தில் சேரும் இதை பிராண குண்டலி என்பர். நெருப்பை ஊதினால் கனிந்து எரிவது போல் தியானத்தாலும் பிராணாயாமத்தாலும் குண்டலினி நெருப்பைக் கனிய வைத்து மிகுதியாகும்போது ஓரளவு நுட்பமாக மேலே சுழுமுனை நாடி வழியே செல்லும். பிராண சக்தி துவாத சாந்தத்திற்கு போகும்போது இந்த மையநாடி வழியாக போகும். குண்டலினியைத் தியானிக்கும்போது சக்தியுடன் ஒளித் துகல்களும் இதே நாடிவழி போகும். பிராண சக்தி உள் துவாத சாந்தத்தோடு முடிந்து போகும். குண்டலினி ஒளித்துகள்கள் வெளி துவாத சாந்தம் வரை போகும். இப்படி குண்டலினி ஒளித்துணுக்குகள் சகஸ்ரராம் என்னும் பிரம்ம ரந்திரத்தில் சேர்வதே யோக சித்தியாகும். அப்போது பைரவர் காட்சியை உணரலாம்.

தியானயோகம்-6

குண்டலினி சக்தியை தியானம் செய்யும்போது மிகப்பிரகாசமான ஒளி மூலாதாரத்திலிருந்து ஆதார கமலங்களைக் கடந்து பிரம்மந்திரம் எனும் ஆயிரம் இதழ்த் தாமரையில் சென்று கலக்கும்போது பைரவரைக் காணலாம். இடா, பிங்களா சுழுமுனை நாடிகள் பிரம்மந்திரத்தில்தான் முடிவடைகிறது. சுழுமுனை நாடி எல்லா ஆதாரத் தாமரைகளின் வழியே துளத்துக் கொண்டு செல்கின்றது. இடா, பிங்களை நாடிகள் இந்த ஆதாரத் தாமரைகளை இடம் வலமாக பின்னிப் பின்னி வளைந்து செல்கின்றது. ஆதார கமலத்திற்கு முன் தமக்குள் மாறிக்கொண்டு, அக்கமலத்தை கடந்த பிறகு மறுபடியும் மாறிப் பின்னிக் கொள்ளும். ஒளித் துகள்களாகச் செல்வது அந்தரமாகிய துவாத சாந்தத்தில் போகாது உறுப்பாகிய சகஸ்ராரம் தாமரையிலே கலக்கும். கடக்கும் சக்கரங்களிலும் இது தங்காது. இந்நிலையே பைரவராகிய கடவுளை அடைவதாகும்.

தியானயோகம்-7

குண்டலினி சக்தி மேலேறும்போது கீழிருந்து மேலாக உள்ள 12 சக்தி மையங்களை கடவுள் வெளிப்பட்டு நம் உணர்வுக்கு வரும்வரை 12 எழுத்துக்களைக் கொண்டு தியானம் செய்ய வேண்டும். மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை தியானிக்கும்போது அது நெருப்பாகக் கனிந்து மேல் நோக்கி ஆறு யோக ஆதாரக் கமலங்கள் வழியாகவும் அதற்கு இணையான இடங்களிலும் குண்டலினி சக்தி வெளிப்படும். தியானம் படிப்படியாக உயர்ந்து மேலே போவதை உணரும்போது தியானம் தொடங்கிய இடத்தையும் அது முடியும் இடத்தையும் நினைந்தால் குண்டலினி சக்தி தொடர்ந்து கீழிருந்து மேலே வந்து கொண்டிருக்கும். 12 எழுத்துகளுடன் இச்சக்தி மையங்களை இனைத்துப் பழகி பதிவாகினால் தியானிக்கும்போது தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு மின்னல் கொடியாக ஒளியும் உணர்வும் நம் உணர்வுக்கு வரும்.

12 சக்தி மையங்களும் அதற்குரிய எழுத்துக்களும்.

அ-மூலாதாரம்

ஆ-சுவாதிட்டானம்-சிறுநீர் வாய்

இ-இடா, பிங்களா, சுழுமுனை மூன்றின் முடிச்சு

ஈ-மணிப்பூரகம்-தொப்புள்

உ-அநாகதம் -மார்பு நடுப் பகுதி

ஊ-விசுக்தி-தொண்டைக்குழி

எ-மேல் அண்ணம்/அடிநாக்கு

ஏ-ஆக்ஞா-புருவ மத்தி

ஐ-லலாடம்- புருவ மத்தியிலிருந்து 2 விரல் உயரம்

ஒ-பிரம்மரந்திரம்/ ஸகஸ்ராரம் எனும் 1000 தாமரை- லலாடத்திலிருந்து 2 விரல்

ஓ-சக்தி- லலாடத்திலிருந்து 3 விரல்

ஒள-வியாபினி- லலாடத்திலிருந்து 4 விரல்

மூலாதாரத்தில் தொடங்கிய குண்டலினியாகிய ஒளி எல்லா மையங்களின் வழியாக மேலேறி வியாபினியில் முடிவடையும். இந்த 12 இடங்களையும் கையால் தொட்டு மனதால் ஞாபகம் செய்து பழகவேண்டும்.

தியானயோகம்-8

மூர்த்தாந்தம் எனும் துவாத சாந்தம் முழுவதும் பிராணசக்தி- குண்டலினி சக்தி நிறைந்திருக்கும். அது புருவமத்தி எனும் பாலத்தைக் கடக்கும்போது பிராணசக்தி என்பதுமாறி சித்சக்தி என்ற நிலையாகிவிடும். அப்போது எல்லாவித மனத் தொடர்புகள் அடங்கி விடும். துவாத சாந்தத்திற்கு மேலும் இச்சக்தி உயரும்போது எல்லாம் வல்ல இறைவனைக் காணலாம். மூர்த்தி– உடம்பு. அதன் முடிவு அந்தம். உடலின் முடிவு மூர்த்தாந்தம். பிராண சக்தி– குண்டலினி சக்தி– உருவமுள்ள ஒளிப்பொருளின் சக்தி– தானே அறிவுடைய பொருளல்ல. சித்சக்தி– அருவப் பொருளின் சக்தி– அறிவுமயமான சக்தி.

தியானயோகம்-9

மயிலின் தோகையில் உள்ள வட்டங்களைப்போல் சூன்யபஞ்சகம் எனும் ஐந்து வெற்றிடங்களை ஐந்து வட்டங்களாக மார்பின் நடுவில் ஐந்து பஞ்ச தன்மாத்திரைகள் வடிவமாக நினைத்து சூன்ய தியானம் செய்ய வேண்டும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களுக்கும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஞானேந்திரியங்களுக்கும் தன் மாத்திரைகள் மூலமாகும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து அறிவையும் தரும் மூலகங்களே தன்மாத்திரை ஆகும். இந்த ஐந்து அறிவுக்கு உதவும் கருவிகளுக்கும் உலகிற்கும் காரணமாக இருப்பது பஞ்ச பூதங்களே.

தியானயோகம்-10

பஞ்ச சூன்யத்தை வெளிகளிலும், சுவர்களிலும் உயர்ந்த யோக மனிதர்கள் மீதும் பொருந்த வைத்துத் தியானித்தால் உயர்ந்த நன்மை பயக்கும். எல்லா இடத்திலும் உள்ல பஞ்ச தன் மாத்திரைகள் விளங்கும்.

தியானயோகம்-11

கபாலத்திற்குள் மனத்தை நிறுத்திக் கண்களை மூடிக்கொண்டு அங்குள்ள குண்டலினி ஒளியைத் தியானம் செய்தால் உயர்ந்த குறிக்கோளான சிவசக்தி ஐக்கியத்தை படிப்படியாக அடையலாம். க-பராசக்தி, பாலம்-பாதுகாக்கும் சிவம். மூலாதாரக் குண்டலினி பராசக்தியாகவும், மேலுள்ள சகஸ்ராரம் சிவமாகவும் கருதினால், கீழுள்ள பராசக்தி மேல் வருவதை உத்ரகோசமங்கை என்பர்.

தியானயோகம்-12

மத்திய நாடியாகிய சுழுமுனை நாடி தாமரைத் தண்டினைப் போல் மிகவும் நுண்ணியதாக உடல் நடுவே உள்ளது. இந்த நாடியின் உள்ளே தியானம் செய்தால் கடவுள் இருப்பதை உணரலாம். சுழுமுனை மூலாதாரத்திலிருந்து தொடங்கி எல்லா ஆதாரச் சக்கரங்களின் வழியே சகஸ்ராரம் எனும் பிரம்மமந்திரத்தை அடைகிறது. இதன் இருபுறாமும் இடா பிங்களா நாடிகள் அடிக்கடி இடம் வலமாக மாறி இருக்கும். பிராண அபான சக்திகள் சுழுமுனையுடன் ஒவ்வொரு ஆதாரத்திலும் வந்து கலந்து செல்லும். சுழுமுனையில் எப்போதும் குண்டலினி இருக்கும். அதை தியானித்தால் அரிய சக்திகள் அடையலாம்.

தியானயோகம்-13

ஞானேந்திரியங்களை கை விரல்களால் மூடினால் புருவ மத்தியில் ஒளி தோன்றும். அதை தியானம் செய்தால் அதுவும் மறையும். இந்த நிலை உயரிய யோக சாதனமாகும். இந்த முத்திரையை கேசரி முத்திரை என்பர். நான்கு பொறிகளையும் கை விரல்களால் அடைத்த பின் ஐந்தாவதாகிய தோல்- உடம்பு அடைத்தோம் என்ற உணர்விலேயே அடைபடும். புருவ மத்தியை தியானம் செய்வதாலும், மூலாதாரம் அல்லது தொப்புளிலிருந்து ஓம் என்ற ஒலியை புருவமத்தி வரை சொல்வதாலும், ஒளி பயிற்சியின் முதிர்ச்சியில் தெரியும். பின் அந்த ஒளியை தியானித்தல் அது மறையும். அந்த நிலையே உயர்ந்த யோக சாதனை பலனைத்தரும்.

தியானயோகம்-14

பொட்டுத் திலகம் போன்ற ஒளியைத் தலையிலும், சிகாந்தம் எனப்படும் பிரம்மத் துவாரம் சிகையின் முடிவிலும் இதயத்திலும் தரிசிக்க வேண்டும். தாமம்- கண்ணின் ஒளி போன்றே நாடிகளில் இத் திலகம் போன்ற ஒளித் தோன்றும். இதைத் தரிசித்து யோகம் செய்தால் ஒவ்வொன்றையும் பிரித்து உணரும் நிலையை-விகல்ப நிலையை இழந்து கடவுள் காட்சியைக் காண்பான். குண்டலியின் ஒர் ஒளியணுவும், காலில் உள்ள ஒளி அணுக்களும், புருவ மத்தியில் உள்ள ஒளியணுவும் சேர்ந்து இந்த நெற்றிப் பொட்டு ஒளியை உண்டாக்கும். அப்போது மன விகாரங்கள் மறையும். தெய்வ தரிசனம் கிடைக்கும். நடுமார்பில் தியானித்தால் அது பொற்சபை அல்லது சிற்றம்பலம் அல்லது சிதாகாசம் அல்லது தகராகசம் என்பர். தகரம்- சிறியது, ஆகாசம்- வெளி, சித்+ ஆகாசம்- சித்தமாகிய ஆகாசம். சிறு+ அம்பலம்– சித்தமாகிய வெளி. புருவ மத்தியில் தியானித்தால் சிற்சபை அல்லது பேரம்பலம் என்பர்.

தியானயோகம்-15

சாதாரண காதினால் கேட்க முடியாததும் தானாகவே ஒலிப்பதுமான அநாகத ஒலியை கூர்ந்து உணரும்போது அது உடல் நடுவில் ஆறுபோல் ஓடித் தலை வரை போகும்போது பிரம்மம் எனப்படும் கடவுள் நிலையை உணரலாம். கடவுளாகிய பிரம்மம் ஒளியாகவும் நாதமாகவும் உள்ளதால் விந்து நாதம் எனலாம். விந்து-ஒளி. எனவே பிரம்ம நாதம் என்றும் கூறுவர். அநாதக ஒலி என்பது மார்பின் நடுப்பகுதியில் உள்ள ஆதாரக் கமலம் யாராலும் எழுப்பப்படாமலும் தானகவே ஒலிப்பது. மணி, வீணை, தேனியின் ரிங்காரம், முரசு, புல்லாங்குழல் போன்ற பத்து நாதங்களையும் யோகியால் உணர முடியுமாதலால் தசநாதங்கள் தாமாக ஒலிப்பனவாகும். மூலாதாரம், அநாகதம் இயற்கையில் நாத ஒலி இடங்கள். மேலும் தச நாடிகளில் காற்று நுழையும்போது ஒலி தோன்றுவதால் இந்த மூன்றுவகை ஒலிகளுமே தசநாதங்களாக மாறி ஒலிக்கும். அவைகளை உற்று நோக்கி உணர்வது ‘உன் முகமாதல் என்பதாகும். இந்த தசநாதங்களும் சுழுமுனைத்தண்டில் போவதை உணரலாம். அதில் ஒன்றை உணர்ந்து தியானித்தால் அது மெல்ல மறையும். அந்நிலையில் இறைவன் நம் உணர்வுக்கு வருவார்.

தியானயோகம்-16

பிரணவமாகிய ‘ஓம்’ என்பதை சரியாக உச்சரித்து வெளியையும் தியானித்தால் அந்த சூன்யத்தை உணர்வுடன் அடையலாம். மூலாதாரத்தில் அல்லது தொப்புள் பகுதியிலிருந்து தியானம் தொடங்கி புருவ மத்தி வரியிலோ, அதற்குமேல் ஒரு விரல் தூரத்திலுள்ள அர்த்த சந்திரன் வரையிலோ, உச்சந்தலையில் உள்ள பிரம்ம நாளம் வரையிலோ சென்று முடித்தல். உள்ளே துவாத சாந்தம் புருவ மத்தியிலிருந்து 12 விரல் வரையிலும் வெளியே சூன்யம் உச்சி தலைக்குமேல் 12 விரல் வரையிலும் இந்த தியானம் செல்லும்.

தியானயோகம்-17

ஓம் அல்லது எதாவது மந்திர ஒலியை உச்சரிக்கும்போது நடுவில் தோன்றும் இடைவெளி சூன்யமாகும். பின் அதையே தியானித்தால் சூன்யத்தின் சக்தியால் சூன்யத்தின் இயல்பை உணரலாம். ஓம் மந்திர ஓசையின் இடையில் உள்ள காலப்பகுதி. ஓர் ஒலியைக்கூறி பின் அடுத்ததைக் கூறும்வரை ஏற்படும் இடைவெளி, அ,உ,ம் என்ற கூட்டெழுத்தாகிய ஓம்- ஐ நீட்டி உச்சரித்தால் தோன்றும் இடைவெளி. இந்த இடைவெளிகள் பராசக்தியின் வடிவங்கள். ஆழ்ந்து உணர்ந்து ஐக்கியமாகும்போது பிராணசக்தி, உடல் பற்றிய உணர்வு குறைந்து பற்று நீங்க பாவனையால் இறைவனைக் காணலாம்.

தியானயோகம்-18

வீணை முதலாகிய கருவிகளின் ஒலியை உடலினுள் கேட்டுப் பழகினால் அதை இடைவிடாது கேட்டு உணரலாம். நீளமான அவ்வோசைகளின் முடிவில் ஆகாச ஒலி அடிப்படையை உணர்ந்து நாதானுபவத்தை அனுபவிக்கலாம். மந்திர ஒலிகளை ஓதிப் பழகியதால் நாடிகளில் உள்ள ஒலிகள் பரிச்சயமாகி தசநாத ஒலிகளாய் நம் உணர்வுக்கு அருகில் ஒவ்வொரு நாடியிலும் ஒவ்வோர் இசையாய் இயற்கையான ஒலிப்போக்கில் செல்லும்போது நாம் அதனுடன் ஐக்கியமாகி நாதத்தின் நுண்ணிய நிலையை உணர்ந்தால் கடவுளை உணரும் வாய்ப்பு வரும்.

தியானயோகம்-19

எல்லாப் பிண்ட மந்திரங்களும் வரிசையாகப் பிந்துவிலிருந்து நாதாந்தம் கடந்து வெளி சூன்யம் வரை போய்க் கொண்டே இருக்கும். மந்திர ஒளி, அசைவு ஆகியவற்றுடன் அந்த எல்லையைத் தியானித்தால் சிவமாகலாம். பிண்டமந்திரம்- அ-தொப்புளிலும், உ- மார்பு நடுவிலும், ம்- மேல் அண்ணம்/ உள்நாக்கு சேர்ந்த ஓம் மற்றும் தூல உடலின் ஒன்பது உறுப்புக்களுக்குமான ஒன்பது எழுத்துகள் ஆகும். ஓம் என்பதை மௌனமாக இசைத்தால் அதிலிருந்து பிரியும் 9 எழுத்துக்கள் பிற இடங்களில் ஒலிப்பதாகும்.

1.புருவ மத்தியாகிய பிந்து –நடுப்புள்ளி-ஹ எழுத்தை ஹம் என்றும்

2.அதிலிருந்து ஒரு விரல் அர்த்தசந்திரன்-ர எழுத்தை ரம் என்றும்

3.அதிலிருந்து ஒரு விரல் நிரோதினி-க்ஷ எழுத்தை க்ஷம் என்றும்

4.அதிலிருந்து ஒரு விரல் நாதம்-ம எழுத்தை மம் என்றும்

5.அதிலிருந்து ஒரு விரல் பிரம்மந்திரம்-நாதாந்தம்-ல எழுத்தை லம் என்றும்          

6.அதிலிருந்து ஒரு விரல் சக்தி-தலைதோல்பகுதி-வ எழுத்தை வம் என்றும்       

7.அதிலிருந்து ஒரு விரல் வியாபினி-குடுமியின் அடி-ய எழுத்தை யம் என்றும்      

8.அதிலிருந்து ஒரு விரல் சமனா-குடுமியின்நடு-ந எழுத்தை நம் என்றும்

9.அதிலிருந்து ஒரு விரல் உன்மனா- குடுமி முடிவு-உ எழுத்தை உம் என்றும்

சொல்லி அந்த இடங்களைத் தியானித்தால் ஆணவ மலத்துடன் கூடிய சித்தம் சிவமயமாகும்.

தியானயோகம்-20

தனித்தனியே இல்லாமல் எல்லா இடமும் சுத்த வெளியாகத் தியானித்து மனத்தில் எந்த விதமான கற்பனையின்றி இருந்தால் எங்கும் பரவிய பேர் உணர்வு கடவுளை உணர்த்தலாம். ஸர்வாதிக்கம் என்றால் தன் உடம்பை எண்ணாமல், நான் என்ற உணர்வையும் இழந்து உலகமுழுவதும் வெறும் சூன்யமாக இருப்பதை உணர்தல். முதலில் எல்லா பொருள்கள் இருப்பதை மறந்து தான் என்ற சுய உணர்வு மட்டும் பரவி பின்னர் அதுவும் இல்லாது சூன்யமாக உணர்வது- நிர்விகல்ப உணர்வு நிலை.

தியானயோகம்-21

தானும் பிரபஞ்சமும் வெளியாய் உள்ளது என எண்ணும் மூல ஆதாரமான பாவணையால் உடலில் தோன்றும் பிராண சக்தி மீதியாகும். சூன்யமான மனத்தோடு செய்யும் இந்த சூன்ய பாவனை நிர்விகல்ப உணர்வு பெற உதவும். ப்ருஷ்த சூன்யம்- தனக்கு மேலே உள்ள வெளி, மூலசூன்யம்- மூலாதாரம் முதல் எல்லாம் சூன்யம். மனத்தில் வேறு ஒன்றும் கருதாமல் மனமே சூன்ய பாவனையில் இருப்பதாகும்.

தியானயோகம்-22

மேல் வெளி- ப்ருஷ்த சூன்யம், கீழ்வெளி- மூல சூன்யம், நடுவெளி- ஹ்ருச் சூன்யம் ஆகிய மூன்று வெளிகளைத் தியானம் செய்தால் நிர்விகல்ப நிலை ஏற்படும். அது சிவத்துடன் கூடும் நிலை. காண்பவன், காணப்படும் பொருள், காட்டுமறிவு மூன்றும் சூன்யமாக உணர்தலாகும். வானவெளி ஒன்றும் இல்லாத சூன்யமல்ல. கண்ணுக்குத் தெரியாத நுண்பொருள்கள் இருப்பதால்தான் ஒலி, ஒளி, எண்ணம் ஆகியவை கடந்து போகின்றன். காணுவது, அனுபவிப்பது, கருதுவது ஆகியவற்றிற்கு மேலாக இருக்கும் ஓர் அனுபவமே எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும்.

தியானயோகம்-23

நம் உடம்பையே சூன்யப் பொருளாக கணநேரம் நினைத்தால் எல்லாக் கற்பனையிலிருந்தும் வெளியேறலாம். கற்பனை இல்லா நிலையில் கடவுளை அடையலாம். கற்பனை என்பது விகல்பம். நிர்விகல்பம்– கற்பனையற்ற நிலை. உடலை அதன் ஓரம்கூட நினையாது அது வெரும் பைபோன்ற வெளியாக கருதி தியானித்தால்– பைரவ சிவம் எங்கும் உருவமாக இல்லாது விகல்பமும் இல்லாது இருக்கும் நிலையில் தியானித்தால் பைரவராக மாற்றம் வரும்.

தியானயோகம்-24

உடனடியாக நம் உடலை வெளியாக பாவிக்க முடியாவிடில் உடலில் உள்ள உறுப்புக்கல் ஒவ்வொன்றையும் முதலில் அதன் வடிவத்தையும் பிறகு அவ்வடிவமே ஒரு வெளியாகவும் தியானிக்கவும். மிருகேக்ஷணே –மான்விழியாள். உடலின் உள்பொருள்களை முதலில் உணருதல் பின் அதை வெற்றிடமாக மெல்ல மெல்ல உணர்தல்.

தியானயோகம்-25

உடம்பில் உள்ள மேல் தோலைத்தவிர அதற்குள் ஏதுமில்லை என்று இருப்பதை இல்லாமல் உணர்வதால் எங்கும் பரவிய தியான உணர்வு ஏற்படும். உடம்பிலுள்ள உறுப்புக்களுக்கான சக்தி இயக்கம் அண்ட வெளியிலிருந்தே வரும் இடத்தை நோக்கி அண்ட வெளியில் செல்லும் உணர்வில் தியானித்தால் எல்லாவற்றிற்கும் காரணமான பொருளை கடவுளை அடையும் நிலைவரும். சிறிய சுன்யத்திலிருந்து பெரிய சூன்யத்தை அடையலாம்.

தியானயோகம்-26

மனத்தை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலன்களோடு கொண்டிருக்கும் தொடர்பை பிரித்து வேறு ஒன்றில் செலுத்தி ஒரு நிலைப்படுத்தி மார்பின் நடுவே உள்ள இதய ஆகாசத்தில் நிறுத்துவது- சிதாகாசம்- தகர ஆகாசம்- சிற்றம்பலம் ஆகும். அவன் எல்லப் பொருள்களிலிருந்தும் விடுபட்டு பரம் பொருளை அடைவதில் வெற்றி கண்பான். ஒரு சிறிய கடுகளவு இடத்தில் மனத்தைப் பதிய வைக்கும்போது தியானம் வலுத்தால் தியானிப்பவன், தியானம், தியானிக்கும் இடம், செயல் எல்லாம் பாலில் கலந்த நீர்போல் மறையும். அதுபோன்றே விஸ்வத்தில் பரம்பொருள் அடைவதே ஸௌபாக்கியம்.

தியானயோகம்-27

உடல் உணர்வு முழுவதும் திரட்டி மனதை துவாத சாந்தத்தில் கரையச் செய்தால் இறைவனை அடையலாம்.உடலில்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் -பஞ்ச பூதங்கள்- 5

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்-தன் மாத்திரைகள்- 5

மெய், வாய், கண், மூக்கு, செவி-ஞானேந்திரியம்- 5

கால், கை, நாக்கு, மலவாய், நீர்வாய்-கர்மேந்திரியம்- 5

மனம், புத்தி, சித்தம், அகங்காரம்-அந்தக்கரணம்- 4

மொத்தம் 24 தத்துவங்களும் வாழ்விற்கு அருள் புரிந்து துணை நிற்கும் சுத்த மாயா அசுத்த மாயா தத்துவங்கள் 12 ஆக மொத்தம் 36 தத்துவங்கள்.

தியானயோகம்-28

மீண்டும் மீண்டும் துவாத சாந்ததப் பெருவெளியில் மனத்தை எங்கிருந்து எப்படி செலுத்தினாலும் திரிந்து, அலைந்து, குறைந்து, நிறைந்தும் காணும் அந்த மனம் அடங்கும்போது அந்தச் சிறந்த நிலையை மனம் அடையும். க்ஷீணவிர்த்தேர்- மனம் விருத்தியடைந்து ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவி துன்பமடையாமல் குறைந்து அடங்கும். தலை உச்சியில் எண்ணம் எப்போதும் இருக்கவேண்டும்.

தியானயோகம்-29

உலகை ஊழிக்காலத்தில் அழிக்கும் ருத்திரனின் சக்தியாகிய காலாக்னியால் உடல் முழுவதும் தகிக்க என நினைத்து தியானம் செய்தால் அவனின் உண்மையான இயல்பு வந்தடையும். நம் வலது கால் பெருவிரல் தொடங்கி உடல் முழுவதும் பரவுவது காலாக்கினியாகும். இது பிங்கள நாடியாகும். இதை நினைத்து தியானம் செய்தால் மாயா சக்தியால் நம் உடலில் ஏற்பட்ட அசுத்தங்கள் யாவும் நீங்கிய சுத்த தேகத்தினால் தெய்வ சக்தியை உணரலாம்.

தியானயோகம்-30

தன் உடலை காலாக்னியால் எரித்தது போல் இப்பிரபஞ்சம் முழுவதும் எரிக்கப்பட்டதாக பாவனை செய்தால் அவனுள்ளே மிக உயர்ந்த சக்தியுடைய மனிதன் ஒருவன் தோன்றுவான். இது சூன்யத் தியானம் ஆகும். கண்ணில் காணப்படுவதை சூன்யமாக கருதாமல் அந்தகாட்சியை எரிவதாக கண்டால் அங்கு சூன்யம் உணர முடியும். அவனே அவனுக்குள் ஒரு குறையும் இல்லா மனிதனாய் தோன்றுவான்.

தியானயோகம்-31

தன் உடம்பிற்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் படிப்படியான காரணம் எது என்று சூட்சுமத்துள் சூட்சுமமாய்த் தியானித்துப் பார்தால் எல்லா காரணங்களும் பராசக்தியும் தெரியும். சிவன்– சக்தி– சதாசிவம்– ஈஸ்வரன்– மூலப்பிரகிருதி– அகங்காரம்– புத்தி– தன் மாத்திரைகள்– வளரும் மகா பூதங்கள் ஆகியவற்றின் கலப்பால் உண்டாகிய பிரபஞ்சமும் நம் உடலும் ஆகிய தூல வடிவங்கள் யாவும் பரிணாமமாக வளரும் அடுக்கு நிலை வளர்ச்சிகளை சிந்திக்கும் தியான முயற்சி அவனுக்கு கடவுளைக் காட்டும்.

தியானயோகம்-32

மூச்சு விடும்போது பிராணசக்தி முழுவதுமாகவோ குறைவாகவோ வந்தாலும், மனத்தில் துவாத சாந்தத்தையோ இதயத்தையோ பற்றிக்கொண்டு அங்குள்ள சக்தியை தியானம் செய்தால் வீடுபேறும் சுதந்திர இயற்கைச் சக்தியும் கிடைக்கும். பீனாம்- மூச்சை ஒலியுடன் இழுத்து விடுவது. துர்பலாம்- மூச்சை மெதுவாக விடுவது.துவாதர்கோசரே- தலையின் மேலுள்ள 12 விரல்பகுதியின் சக்திகள். மூச்சு விடுவதில் மனம் சொல்லாமல் இதயத்தில் சக்திகளை தியானிப்பது என்பது சிதாகாசப் பெருவெளியை மார்பு நடுப் புள்ளியில் வைத்து தியானம் செய்வது ஆகும்.

தியானயோகம்-33

பிரபஞ்சமாகிய தூலப் பொருள் முழுவதையும் ஆறு அத்வாக்கள் மூலமாகப் படிப்படியாகத் தியானம் செய்யும்போது தூலப் பொருள்களாகிய பருப் பொருள்கள் அது தோன்றக் காரணமாயிருந்த நுண்பொருள்களிலும், நுண்பொருள்கள் தோன்றக் காரணமாகிய பரமாகிய அவற்றின் தலைமைப் பொருள்களிலும் அடங்கும் போது மனம் கரைந்து விடுவதை உணருவது சின்மயமாகுதல் எனும் மனோலயம் ஆகும். அத்வா-வழி. பிரபஞ்சத்திற்கு காரணமான தத்துவங்களுக்கு காரணமானவை கலைகள் ஆகியவற்றிற்கு மேலே இருந்து வரும் சக்தியே காரணம். இந்த 3 அடுக்கை தியானித்தல் நன்று. ஆறுவகை அத்வாக்களும் மூன்று வகையில் அடங்கும். 1.புவனம்-பதன், 2.தத்துவம்-மந்திரம், 3.கலை- வண்ணம், அல்லது 1.பரம்-அதிசூக்குமம்= கலை+வண்ணம், 2.பராபரம்- சூக்குமம்= தத்துவம்+மந்திரம், 3.அபரம்- தூலம்= புவனம்+பதம். சமுத்திர நீர் ஆவியாகும்போது அதிசூக்குமமாக இருப்பதால் கண்ணுக்குத் தெரியாது. அது கலையைப் போல்-. ஆவியான நீர் குளிந்தால் வரும் மழை நீர் தத்துவம் போல்- அந்த நீரில் தாவரம் முளைப்பது புவனம் போல் ஒன்றிலிருந்து ஒன்றாக பரிணாமம் ஆகிறது. கடவுளிடமிருந்து வண்ணமும்+கலை இரண்டும் வந்து அவை மந்திரமும்+தத்துவமும் ஆகி பின் பதமாகவும் புவனமாகவும் விரிகின்றது. ஒலியும் அதன் பொருளும் நாமார்த்தப் பிரபஞ்சம் எனப்படும். நாமம்= பெயர்+ அர்த்தம்= அதற்குரிய பொருள். புவனம் என்ற பிரபஞ்சம், அதற்கு காரணமான தத்துவங்கள், அதற்கு காராணமான கலைகள், இவற்றிற்கும் மேலே தெய்வம் என்ற இந்த மூன்று அடுக்கையும் தியானித்தல் மனோலயம்/ சின்மயம் எனப்படும். மனத்தில் பொருள்கள் ஐக்கியமானாலும், பொருள்கள் யாவற்றிலும் மனம் சென்று கலப்பதும் மனோலயம். கடவுள் மனத்தினுள் வருவதும், மனம் கடவுளின்மேல் இணைவதும் லயம். கடவுளின் ஒளியால் தோன்றும் நிறங்களும் அந்த நிறங்களின் அனுக்கள்-கலை ஆகும். மந்திரச்சொற்கள் சேர்ந்து சொல்- பதம் ஆகும். சொல் பிரபஞ்சமும், பொருள் பிரபஞ்சமும் பதங்களுள் அடங்கும். ஒளியாக வானத்தில் தெரிந்ததைத் தியானித்து அதனுடன் ஐக்கியமானார் விசுவாமித்திரர். பின் அந்த ஒளியை 24 மந்திரச் சொற்கள் ஆக்கினார். அவை இனைந்து பதமாகியது. அந்த பதம்

“ஓம் பூர் புவ ஸ்வக

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

த்யோ யோந: ப்ரசோதயாத்—இந்த காயத்ரி பிரபஞ்சம் முழுவதையும் குறிக்கும்.

பிரபஞ்ச பொருள்கள் எல்லாவற்றையும் நினைக்க எண்ணற்ற பதங்கள் தேவையில்லை. ஓம் ஸர்வம் சிவமயம் ஜகத்என்பதே பிரபஞ்சப்பொருள் யாவற்றையும் குறித்தும், கலந்தும் அதற்குமேலே உள்ள கடவுளையும் குறிக்கும். ஓம்- பிரம்மத்தையும், ஜகத்-மூலப்பிரகிருதியில் பிரபஞ்சத்தின் எல்லாப் பகுதியையும், ஸர்வம்- எதுவும் விடுபடவில்லை என்றும், சிவம்- மந்திரம்- கடவுளை உணர்த்துவது, மயம்-மந்திரமாகிய கடவுளின் ஒளி நிறம், கலை ஆகியவற்றைக் குறிக்கும். இது விச் வத்தியானம் / விச்மயத் தியானம் என்பர். சிவமயம் என்று தியானித்தால் சிவனின் செவ்வொளி நம்மைச் சூழும்போது பந்தங்கள் யாவும் விடும். இத்தியானம் 30 நொடிளுக்கு மேல் செய்ய வேண்டாம். சமாதி நிலைக்கு போவீர். மீள்வது கடினம்.

தியானயோகம்-34

பிரபஞ்சம் தழுவிய சிவத்தைச் சைவ தத்துவப்படி ஒரு பகுதியும் விடாமல் விச்மயத் தியானம் செய்வதால் எங்கும் பரவி நிலைத்துள்ள சிவத்தை உணரும் சிறந்த விழிப்புணர்வு- மஹோதயம் ஏற்படும். சிவஸ்ரூபம் பெற்ற ஆன்மாவாய் எங்கும் தானே பரவியிருப்பது உண்மை என்று உணரலாம்.

தியானயோகம்-35

தேவி! இந்த பிரபஞ்சம் முழுவதுமே சூன்யம்- வெறும் வெளி என்று தியானம் செய்தால் மனத்தில் சூன்யாதி சூன்ய உணர்வு மிகுந்து மனமும் வெறும் வெளியாகிவிடும். மனத்தில் பூர்வஜன்ம வாசனைகள், தற்போதைய அனுபவங்கள் யாவும் சுவடுகள் இல்லாமல் அழியும். புதிய எதையும் உற்றுணர முடியும். பரம்பொருளை உணரலாம். இந்நிலையில் பிரபஞ்சம் மாயை, பொய், கற்பனை ஆகும். பூதங்கள் யாவும் சூன்யம். விச்மயத் தியானமாகிய இது முடியும் வரை அவனின் மனத்தில் பிரபஞ்சம் தோன்றாது.

தியானயோகம்-36

பிரபஞ்சம் முழுவதும் சூன்யமாக உணர ஒரு பானையைத் தலையில் கவிழ்த்து அதனுள் கண்களைத் திறந்து பானைக்குள்ளேயே பார்த்து சூன்யப் பயிற்சி செய்தால் அவன் மனத்தை வெட்ட வெளியாக்கும். கடவுளைச் சூன்யத்தில் கரைந்த பொருளாக உணரலாம். மனம் சிவத்தையே ஐக்கியமாகக் கொள்ளத் தயாராகும்.

தியானயோகம்-37

கண்களில் வடிவம், நிறம் ஆகியவற்றால் கவர்ச்சி தோன்றி மனத்தில் பலவித எண்ணங்கள் ஒன்றில் பலவாகத் தோன்றிக் கொண்டே இருக்குமாதலால், எதுவும் இல்லாத வெட்ட வெளியில் இருந்து சுற்றிலும் விழித்து நோக்கினால் மனத்திற்கு விகற்பம்- கற்பனை செய்ய எதுவும் துணையாக இல்லாததால் மனத்தின் வேலையாகிய கற்பனைகளைச் செய்ய முடியாமல் போய் மனம் முற்றிலும் அடங்கி விடும். கண்களை வலிய மூடிக்கொள்ளாமல் இயற்கையாக மூடித்திறந்து விழித்து மனம் வளராது எண்ணங்கள் தோன்றாது பார்ப்பது நலம் பயக்கும்.

தியானயோகம்-38

இரு பொருள்களைக் காணும்போதோ அல்லது இரு கருத்துக்களைச் சந்திக்கும்போதோ அவைகளை உற்று நோக்காது இரண்டிற்கும் நடுவில் அதன் தாக்கம் குறைந்திருக்குமாதலால் நடுநிலை நீதியாக மனத்தை அங்கே நிறுத்தி தியானம் செய்தால் இரண்டிற்கும் நடுவிலான உண்மை உணர்வு தெரியும்.

தியானயோகம்-39

ஒரு பொருளில் இருந்து வெளியேற வேண்டும் என நினைக்கும் மனம் உடனே விலகி விடாமல் அதிலேயே தீவிர சிந்தனையால் விடாப் பிடியாக இருந்து கொண்டு வேறு ஒன்றில் பற்றுக் கொள்ளாமல் இருப்பது உண்மை உணர்வு வெளிப்பட உதவும்.

தியானயோகம்-40

ஒருவன் திட சித்தமாக இருந்து தன் மனத்தளவில் உடலை எண்ணுவதிலும் பிரபஞ்சத்தை எண்ணுவதிலும் அளவிலும் தனித்தனியாக அன்றி ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் தியானத்தால் பரமோதயம் எனும் பரம் பொருளை அறியும்போது தெய்வீக உணர்வும் ஒளியும் அவனைச் சேரும். உடம்பு பிண்டம் பிரபஞ்சம் அண்டம். என்ற உணர்வு கொள்க.

தியானயோகம்-41

மூச்சை இழுப்பது வெளிவிடுவது எனும் இரு முயற்சிகளின் தொடர்பாகப் பிராணன் உள்ளுக்குள் எழுந்து துவாத சாந்தம் வழிபோய் முடியும்- இழுக்கப் பெறும் அபானன் காற்றும் வெளிப் பகுதியில் தலைவரை ஏறி முடிந்து போகும். இதை அறிபவனுக்கு எதையும் உள்ளுணர்வோடு கற்றறிய இயலும்.

தியானயோகம்-42

அண்டமாகிய பிரபஞ்சத்தையும் பிண்டமாகிய தன் உடலையும் தனித்தனியே தியானிக்காமல் இரண்டையும் இணையாக வைத்து ஒரே நேரத்தில் ஆழ்ந்து தியானிப்பவன், பரமானந்தத்தையும் பரம்பொருள் அருளையும் தானே அடைவான். ஐந்து புலன்கள் தரும் செய்திகளை நம் மனத்தாலும், பல பிறவி உணர்வுகளாகிய மாயையாலும் உணர்வது வெறும் ஆனந்தம். இவைகளைத் தந்த பரம்பொருளின் நேரடித் தொடர்பை உணர்ந்தால் பரமானந்த மயமாகும். அது என்றும் மாறாத இயல்புடையதாகும்.

தியானயோகம்-43

அண்ட பிண்ட தியானத்தின்போது உடலையும் பிரபஞ்சத்தையும் இணைத்து தியானிக்கும்போது இதய குகையாகிய மனத்தில் திடுமென உண்டாகி விரிந்து பரவும் மகானந்தம் பரம்பொருள் உணர்வை நமக்குள் வெளிப்படுத்தும். ம்ருகேக்ஷணே- மான் விழி மாதே.

தியானயோகம்-44

கண்கள் காதுகள் மூக்குத் துளைகள் வாய் பொறிகளைக் கைகளால் மூடிக் கொண்டு தியானம் செய்யும் போது சுழுமுனை நாடி வழியே பிராண சக்தி உச்சியை நோக்கி எறும்பு ஊர்வது போல்செல்லும் நேரத்தில் தெய்வீகமான அனுபவம் உண்டாகும். தியான முயற்சியில் சுழுமுனை நாடியில் பிராணசக்தி அதிகமாகச் செல்லும். பொறி புலன்களில் வரும் உணர்வுகளை மூடி அடக்குவதால் குண்டலினியின் ஒரு பகுதியான பிராணசக்தி மேலும் மிகுதியாகச் செல்லும். ஐம்பொறிகளை அடக்கும்போது அவைகளால் உண்டாகும் அறிவு, உணர்வு, கற்பனை முதலியன தடைப்படுவதால் மனம் தன் பரபரப்புத் தன்மையை இழந்து இருப்பதாலும் குண்டலினி உயர வாய்ப்புகளாகும்.

தியானயோகம்-45

வாஹினி என்றும் விஷம் என்றும் பேசப்படும் பிராண சக்திகளின் போக்கில் சித்தத்தைச் செலுத்தினால் உடலுறவு போல் இன்பத்தைப் பெறுவர். பிராணசக்தியை உற்று நோக்குவதால் உண்டாகும் இன்பம் அது. கண்டு, கேட்டு, உண்டு, முகந்து, உற்று அறியும் ஐந்துவகை இன்பங்களும் ஒரு பெண்ணிடத்தில் இருப்பதால் ஐம்புலன்களும் தனித்தனியாக இல்லாமல் ஒன்று சேர்ந்தால் பெண்ணுடன் கூடும் உணர்வைப் பெறலாம். தியானத்தின்போது ஐம்புலன்களும் ஒன்றாகின்றன. அதனால் மூளையின் அலைகளின் மகிழ்ச்சியில் உள்ள அடையாளம் மன மகிழ்ச்சி. மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி அதஹ குண்டலினி / வாஹினி எனப்படும். மூலாதாரத்தின் வழியே ஏறுவதற்கு தயாரான நிலையில் இருப்பதால் வாஹினி என்றும் ஏறும் நிலைக்கு வந்தபின் அதுவே விஷம் எனப்படும். மார்பு, தொண்டைக்குழி, புருவமத்தி முதலிய இடங்களுக்கு வரும் குண்டலினியே ஊர்த்துவ குண்டலினி எனப்படும். வாஹினி என்பது குண்டலினியை ஏற்றிச் செல்லும் பிராணசக்தியாம். இந்த இரண்டின் அசைவை மூலாதாரம் முதல் உச்சந்தலை வரை உற்று நோக்கும் யோகத்தின் பயன் உடலுறவு இன்பம் போன்றது.

தியானயோகம்-46

ஒரு பெண்ணுடன் ஆண் கொள்ளும் உச்சமான புணர்ச்சியின்பம் பிரம்மத்துடன் ஒன்றுபடும் இன்பமாகும்- அது அவனுடைய ஆத்மாவிலிருந்து வரும் இன்பமேயாகும். மனிதனின் இன்பங்கள் யாவும் மனம், அறிவு, அகங்காரம், ஆத்மா விலிருந்து உண்டாவதுதான். தியானத்தின்போது கிடைக்கும் இன்பம் அவனுக்கு உள்ளிருந்தே கிடைகிறது. தியானத்தின் போது பிரமத்தோடு தொடர்பு கொள்வதால் அங்கிருந்து இன்பம் வருகிறது. பிரம்மமும் ஆத்மமும் ஒன்று ஆகையால் உடலுறவின்போதும் உச்ச இன்ப உணர்ச்சி ஆத்மா அல்லது பிரம்மத்திலிருந்து வருகிறது. பொதுவாக எல்லா உணர்ச்சிகளும் கடவுளிடமிருந்து வருகின்றது. உடலுறவின் உச்சத்தில் நிகழும் பரிபூரண இன்பமும் ஆத்மா- பிரம்மம்- கடவுளிடமிருந்து வருகின்றது.

தியானயோகம்47

உடலுறவு இன்பத்தைப் பொறுத்த வரையில் எதிரிலோ அருகிலோ ஒரு பெண் இல்லாதபோதும், அப்பெண்ணுடன் நிகழ்த்திய பலவித இன்பச் செய்கைகள் நினைவில் இருந்து இன்ப உணர்வை வெளிப்படுத்தவே செய்யும். பெண்ணுடன் ஏற்பட்ட இன்பம் ஆத்மாவின் அனுபவம். ஞாபகம் என்பது ஆத்மாவிலிருந்து உருவாகும் ஓர் உணர்ச்சி. எனவே பெண் அருகில் இல்லாதபோதும் நினைவில் பதிந்த உணர்வு இன்பம் தரும்.

தியானயோகம்-48

ஏதாவது ஒரு மகிழ்ச்சி வரும்போதோ, பல நாளாய் பாராதிருந்த அன்புடைய ஒருவரைக் காணும் மகிழ்ச்சியின்போதோ தோன்றும் அந்த மகிழ்வை ஆத்ம உணர்வை கூர்ந்து தியானம் செய்தால் ஆத்ம அனுபவம் ஏற்பட்டு இரண்டாம் மகிழ்வுக்கான காரணத்தையும் தெய்வீக உணர்வு செயல்படுவதையும் உணரலாம்.

தியானயோகம்-49

உண்ணுதல், பருகுதல் முதலிய செயல்களால் உண்டாகும் திருப்தியையும் அதன் விளைவான மகிழ்ச்சியையும் தியானத்துப் பழகினால் தெய்வத்தால் உண்டாகும் மஹா ஆனந்தம் என்ற பேரின்பத்தை இயல்புடன் உணரலாம்.சிற்றின்பங்கள் உலகப் பொருள்களை அனுபவிப்பதால் தோன்றுவதாகத் தோன்றினாலும் அது ஆத்மாவின் அனுபவமாகத்தான் இருக்கும். பிற பொருளினால் அந்த மகிழ்ச்சி வருவதாக மாயத்தால் தெரிகிறது. இம் மகிழ்ச்சியை தியானித்தால் மாயை விலகி ஆத்ம அனுபவமே என்ற உண்மை தெரியும். மகா ஆனந்தம் என்பது பரமாத்மா ஜீவாத்மா ஐக்கியமே என்பதை உணரலாம்.

தியானயோகம்-50

அரிதான இசையில் மனம் ஒன்றித் தியானித்தாலும், அது போன்றே பிற பொருள்களைத் தியானித்தாலும் அந்த மகிழ்ச்சியோடு மனம் ஒன்றி விரிந்து பரவும். மனமும் மகிழ்ச்சிகளும் ஒன்றுபடும். ஞானேந்திரியம் அனுபவித்ததை மனம் ஏற்பதும் மனம் ஏற்றதை மகிழ்வாக ஆத்மா அனுபவிப்பதும் ஆகிய செயல்பாடுகளால் ஒன்றில் ஒன்ராக இருந்து மகிழ்ச்சியை உணரும் தெய்வீக நிலையை அறியலாம். மனம் ஒன்றில் மட்டும் முழுமையாக ஈடுபட்டு பிற பொருள்களில் உள்ள ஈடுபாட்டை அந்த நேரத்தில் இழக்கிறது.

தியானயோகம்-51

எதில் எதில் மனம் திருப்தி காண்கிறதோ அதையெல்லாம் ஆழ்ந்து தியானிக்க வேண்டும். அதனால் அந்த திருப்தியும், அதன் காரணமான மகிழ்ச்சியும் இறை அருளினால் ஏற்பட்ட பரமானந்த வடிவம் என்பது வெளிப்படும். ஆழ்ந்த தியானத்தின்போது வேறு எல்லாம் மறந்து விலக மனமும் தியானிக்கப்படும் மகிழ்ச்சியும் மட்டுமே இணைந்து பரமானந்தம் என உணரலாம். பராமாத்மாவிடமிருந்து வருவதால் இது பரானந்த நிலை ஆகும்.

தியானயோகம்-52

மனத்தின் எண்ண அலைகள் ஓய்ந்திருக்கும் நேரமான நனவிற்கும் தூக்கத்திற்கும் இடையிலான தூக்கம் வருவதற்குமுன் அந்த நிலையைத் தியானம் செய்தால் பராசக்தியை உணரலாம். உலகம் சார்ந்த எண்ணங்களை மனம் நினைவுக்கு கொண்டுவராத அந்த நடுப்பகுதியில் மனத்தின் விரிவு அடங்கி எண்ண அலைகள் சுருங்கி இருப்பதால் பரவுலகம் பரம்பொருள் முதலியன உணரலாம்.

தியானயோகம்-53

சூரிய ஒளி முதலியவற்றின் ஒரு சிறு பகுதியை கண் மூலம் உற்று நோக்கி தியானித்தால் ஜீவாத்மாவின் ஆத்மரூபம் ஒளி வெளிப்படும்.

தியானயோகம்-54

சுரங்கினி, குரோதனா, பைரவி, லேலிஹானயா, கேசரி ஆகிய முத்திரைகளால் தெய்வீக பிரபஞ்சம் உணர்வு வடிவில் நெருக்கமாகும். கால் விரல்கள் மூலமாக பூமியின் ஆகர்ஷண சக்தி- காந்தமும், கை விரல்கள் மூலம் சூரிய ஒளியின்மூலம் உள் சென்று இரண்டும் நாடிகள் வழியாக மின் காந்த அலைகளாக எல்லா உறுப்புக்களுக்கும் செல்கின்றன. முத்திரைகளைச் செய்யும்போது ஞானேந்திரியம், இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், மூளை முதலிய உறுப்புகளில் மின்காந்த அலைகள் நன்கு செயல்பட்டு தியான முயற்சிக்கு துணைபுரியும். கைவிரல்களால் செய்யும் முத்திரைகளிலும், உடம்பின் உறுப்புக்களால் செய்யும் முத்திரைகளாலும் மின்சக்தி வேறுபாடு அடையும்.

தியானயோகம்-55

வலது பிருஷ்டத்தை தரையில் படிய வைத்து, இடது பிருஷ்டத்தை மேலே உயர்த்தி மடித்து, இடது கால் பாதத்தை வலது தொடைமீது பதித்து, இரு கைகளால் இடது முழங்காலைக் கோர்த்து உயர்த்துவதுபோல முதுகு வளையாது கேசரி முத்திரையாகப் பார்த்து இருந்தால் அமைதிக்கு காரணமான சத்துவ குணம் அதிகமாகும். வலம் இடம் மாற்றி செய்யலாம்.

தியானயோகம்-56

மனம் அமைதி காணும்படி அமர்ந்து, கைகள் இரண்டையும் தலைவரை உயர்த்தி, மடக்கித் தலையில் இரு கைகளும் இடம் வலமாகவும், வலம் இடமாகவும் வைத்துக் கொண்டு அக்குள் குழிகளையே பார்த்து மாறி மாறிப் பார்த்து மனம் ஒன்றினால் அமைதி உண்டாகும். அக்குள்களில் வெளிக்காற்று பட்டால் நிணநீர் மையங்கள் சாந்தியடைவதால் மனம் அமைதி இயற்கையாக ஏற்படும்.

தியானயோகம்-57

கண்களால் ஒரு பொருளை மட்டும் உற்று நோக்கி கவனம் யாவும் உடம்புக்கு உள்ளே செலுத்தி தியானித்தால் சிவத்தை ஐக்கியமாக உணரலாம். காட்சி ஓரிடத்திலும் கவனம் ஓரிடத்திலும் வைத்தால் கண்ணுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு விடுபட்டு உணர்வதற்கும் பார்ப்பதற்கும் இடைப்பட்ட நடு இடத்தை மனம் பற்றினால் துரிய நிலையடைந்து பயன்கள் கிட்டும்.

தியானயோகம்-58

வாயை நன்கு திறந்து கொண்டு, நாக்கை உள்ளே மடித்துக் கொண்டு, மனத்தைத் திறந்த வாயில் நிறுத்தி, மனத்தளவில் ‘ஹ’ ஒலியை எழுப்பிக் கொண்டும் இருந்தால் அமைதி அடையலாம். ஒரு நாளைக்கு ஒரு சில நிமிடங்கள் செய்தால் பிராண சக்தி சேமிப்பாகும். வேலை செய்த பிறகும், செய்யும் முன்னும் செய்தால் பலன்.

தியானயோகம்-59

ஓரிடத்தில் இருக்கையில் அமர்ந்து தன் உடலை எதுவும் தாங்கியிருக்க வில்லை அந்தரத்தில் இருக்கிறோம் என்று தான் இருக்கும் இருக்கையை மனத்திலிருந்து வெளியேற்றி தியானம் செய்தால் பழைய பிறவி எண்ணங்கள் மனத்திலிருந்து நீங்கும். புதிய எண்ணங்களும் தானே தோன்றாது. படுத்துக் கொண்டும் இப்படி தியானிக்கலாம்.

தியானயோகம்-60

வாகனங்களில் போகும் போது உடம்பு மெல்ல அசைவதால் மனம் அமைதி அடைந்து தேவர்களால் ஏற்படும் மானவம், சித்தம், தேவம் எனும் திவ்ரயாகா அமைதி கிட்டும். குருவினாலோ, சித்தர்களினாலோ, தேவர்களாலோ இந்த மூன்றும் தீட்சை மூலம் பெறலாம். மற்றவற்கு தாம் என்ற உணர்வு உடலுக்கும் யோகியருக்கு அந்த உணர்வு ஆத்மாவிற்கும் ஏற்படுமாதலால், அவருக்கு உடம்பு அசையும்போது ஆத்மாவை நினைத்து மனம் அசையாது உறுதியாக இருக்கும். அவர்க்கு இந்த உடம்பு மிகை யாகும். உடம்பு அதிர்தல் அசைதல் ஆகிய பொழுதில் உள்ளே கடவுள் அசையாது இருப்பதாக கருதுவர். உடல் வேறு ஆத்மா வேறு என தீர்க்கமாக உணர்தல் ஆகும்.

தியானயோகம்-61

அகன்றதும் எட்டாததும் விரிந்து நீளமாய்ச் செல்லுவதுமாகிய தெளிவான எல்லையற்ற பொருளான ஆகாயத்தை அசையாமல் உற்று நோக்கி அதில் ஐக்கியமானால் சிறிய எண்ணங்கள் மனத் திரையிலிருந்து நீங்கி எண்ணங்கள் வளராத தெளிந்த மனமாகி தெய்வத்தை பைரவரைக் காணலாம்.

தியானயோகம்-62

முதலில் ஆகாயம் முதலாக அனைத்துப் பிரபஞ்சமும் பாவித்தபின், பைரவரை நெஞ்சில் தியானித்து பின் பைரவர் திருவடியின் கீழ் பிரபஞ்சம் இருப்பதால், அது தன் தலைக்கு உள்ளேயே அடங்கி விடுவதாகவும், பின் அது மறைந்து பைரவர் மட்டும் தெரிந்தபின், அவர் ஒளியில் அந்த பிரபஞ்சம் விளங்குவதாக மீண்டும் தியானம் செய்க. இது உடலையும் பிரபஞ்சத்தையும் இனைத்து தியானித்தல் ஆகும்.

தியானயோகம்-63

நனவு, தூக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளிலும் யோகியும் பைரவரும் இரண்டாகத் தோன்றாமல் துரியத்தைப் போல் ஒன்றாகவே தோன்றுவர். நான் எனத் தன்னையும் அது என மற்றதையும் பிரித்து பிரித்து எல்லப்பொருளையும் நனவு நிலையில் உணருவது இயல்பு. ஒரு காட்சியை பார்ப்பவனாகத் தனித்தனியே இருப்பது இயல்பு. உறக்கத்தில் உறக்கம் வேறு தான்வேறாக இருப்பதில்லை. அதுபோலவே துரிய நிலையிலும் தான் வேறு கடவுள் வேறு என தனித்து இருப்பதில்லை. இந்த துரிய நிலை அனுபத்தை மற்ற நிலைகளிலும் ஒருமித்த உணர்வாக பெறவேண்டும்.

தியானயோகம்-64

நிலவு தோன்றாத தேய்பிறை இரவில் நல்ல இருளில் கண்கள் திறந்து அந்த இருளையே தியானிப்பவர் பைரவர் இயல்பை உணர்வார். சிவன் சிவந்த நிறம். பைரவர் கரியமேனி. பைரவர் நிறத்தையே இருளாக வைத்து தியானித்தால் பைரவர் இயல்பை உணர்வர்.

தியானயோகம்-65

முதலில் கண்களை மூடியபடி தேய்பிறை இரவின் இருளைத் தியானித்து பிறகு பைரவர் வடிவத்தை கண் திறந்தபடி தியானித்தால் பைரவரை அடையலாம். ஒன்றைத் தியானித்து அதனையே அடைதலாகும்.

தியானயோகம்-66

நம் உணர்வுக் கருவிகளில் ஒரு பகுதி பழுதாகி விட்டாலோ சூழ்நிலையால் தெளிவாக இல்லாவிட்டாலோ உணரவேண்டிய ஒன்றை உணராது சூன்யத்தை உருவாக்கும். அந்தச் சூன்யத்தில் தன்னைச் செலுத்தினால் தான் வேறு ஆத்மா வேறு என்ற நிலை மாறி தானே ஆத்மா என்ற நிலை வரும்.

தியானயோகம்-67

பிந்து எனும் புள்ளியையும், விஸர்க்கம் எனும் இரு புள்ளிகளையும் விலக்கி விட்டு மூச்சை அடக்கும்போது உயிர் எழுத்தாகிய ‘அ’ வை மௌனமாக மனத்தளவில் உச்சரித்தால் எல்லா ஞானமும் கிடைக்கும். அம் எனும்போது மூச்சை உள் இழுத்தல்- உதடுகள் ஒட்டும், அஹ எனும்போது வாய் திறத்தல்- மூச்சை வெளிவிடுதல். இந்த இரண்டும் புள்ளிகளுடன் இருப்பதால் இதை விலக்கி விட்டால் அடுத்தது மூச்சை அடக்குவது என்பதாகும். அப்போது மனத்தளவில் ‘அ’ என்பதை உச்சரிக்க வேண்டும். மூச்சை அடக்கி தொப்புளிலிருந்து மேலே உயரச் செய்யும் பயிற்சியில் ‘அ’ என்பதை உச்சரிக்க வேண்டும். இது அசுரக்கலையாகும். இது பிரம்மரந்திரம் வரை ஏறுவதே ஞானம்கிட்ட வழி. ‘அ’ என்பது வாய் திறந்தால் தோன்றுவது. வாய் திறந்து உச்சரிக்கும் எல்லா சொல்லுக்கும் இதுவே அடிப்படை எழுத்து.

தியானயோகம்-68

விஸர்க்கம் என்னும் இரட்டைப் புள்ளிகளை நினைத்து அதையே தியானித்தால் எல்லாப் பொருள்களிலும் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பிரமத்தின் உள்ளே ஒருவனால் செல்ல முடியும். ஒளிதரும் காரணத்தால் எழுத்துக்களை வர்ணம் எனலாம்.

தியானயோகம்-69

தன் ஆத்மாவை எல்லையற்று விரிந்து நிற்கும் விசும்பிற்கும் மேலாகக் கருதி தியானித்தால் சித்தத்தில் உல்ல சக்தி நம் ஆத்மாவின் வியாகத்தை தெளிவாகக் காட்டும். விசும்பு போல் எல்லை காணமுடியாத பெரும் பொருளாக நம் ஆத்மாவை எண்ணித் தியானம் செய்வது வியோமாகாரம் ஆகும். எங்கும் பரவிய பொருளாக கருதினால் சிறிய பொருள்களிலிருந்து மனம் விடுபட்டு எல்லாப் பற்றும் விலகிச் செல்லும்.

தியானயோகம்-70

தன் உடலில் எங்காவது ஓரிடத்தில் ஊசி பொன்ற பொருள்களால் குத்திக் கொண்டு அந்த இடத்தையே கூர்ந்து நோக்கினால் பைரவர் இயல்பை உணரலாம். ஊசி முனை குத்திய இடத்தில் மட்டுமே வலிப்பதால் மனம் அந்த இடத்தை மட்டுமே சுற்றி இருக்கும். அப்படி குவியும் போது கடவுளை நினைத்தால் நலம். கைப் பெரு விரலையும் சுட்டு விரலையும் இனைத்தால் புறங்கையில் ஒரு மேடு உண்டாகும் அங்கு குத்தினால் மூளைக்கு உணர்வு அதிகமாகும். இன்ப துன்பங்களில் மனம் பதியும்போது தியானித்தல் எளிது.

தியானயோகம்-71

நினைத்தல், விரும்புதல், ஆய்தல், முயலுதல் ஆகிய எண்ணங்கள் எழுவதற்கு தேவையான உறுப்புகளான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அந்தகரணங்கள் தம்மிடம் இல்லை என முழுவதுமாக நம்பினால் அந்த எண்ணங்கள் இல்லாத சலனமில்லாத மனம் ஏற்படும். அந்த சலனமில்லா மனத்தில் தோன்றும் உணர்வு கடவுளிடம் உள்ள சுத்தசைதன்யம் உணர்வாகும் ஆதலால் கடவுளை உணர்வது எளிது.

தியானயோகம்-72

எல்லாத் தத்துவங்களையும் முழுமையாகச் செயல்படவிடாது, தன் பக்கம் இழுத்து, அவற்றைத் திசை திருப்பி மயக்குவது மாயா சக்திக்கு இயல்பாகையால் அதன் ஆளுகையிலிருந்து தப்ப முடியாது. குழம்பில் சேர்த்த காய்கறிகளில் உப்பு, புளி உரைப்பு யாவும் கலப்பதுபோல் மாயையில் விழுந்த எல்லாத் தத்துவங்களிலும் மாயா சக்தியின் திறமை வெளிப்படும்.

தியானயோகம்-73

ஓர் ஆசை தோன்றி வரும்போது அதை உணர்ந்து, அந்த இடத்திலேயே சிந்தனையைச் செலுத்தி அந்த ஆசையை நிறுத்தவேண்டும்.நினைத்தல், விரும்புதல், ஆய்தல், முயலுதல் ஆகிய எண்ணங்கள் எழுவதற்கு தேவையான உறுப்புகளான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அந்தகரணங்களின் முயற்சியால்தான் ஒர் ஆசை எழுவதால் அதைத் தொடர்ந்தால் ஆரம்ப இடத்தை உணரலாம். அடக்க அடக்க மேலும் மேலும் அந்த ஆசை விரியும். இரண்டு கிளைகளுக்கிடையில் நிலை நிறுத்தினால் எண்ணச் சலனம் நின்றுவிடும்.

தியானயோகம்-74

ஒருவன் மாயையால் வரும் துன்பம், மயக்கங்களை விலக்கு முகமாக நான் எப்போதும் சித்தானந்த மயமாகவே இருக்கிறேன் என எண்ணித் தியானம் செய்தால் எண்ணங்களின் சலனம் தோன்றாது.

தியானயோகம்-75

ஒரு விருப்பமோ கருத்தோ தோன்றும் போது ஒருவன் தன் மனம் முதலிய கருவிகளைச் செயல்படாமல் நிறுத்தி அந்த ஆசை அல்லது கருத்தின் மேல் எண்ணங்களை உறுதியாக நிறுத்தினால் அவன் தன் ஆத்ம இயற்கையை உணரலாம். வண்டிச் சக்கரத்தின் ஆரக்கால்கள் சுற்றும்போது அதிகமாகவும் நிற்கும்போது குறைந்தும் காணப்படுவது போல் மனம் செயல் படாமல் நின்றால் எண்ணங்கள் குறைந்து தியானத்தில் பலன் கிட்டும்.

தியானயோகம்-76

மனிதனுடைய எல்லா அறிவுக்கும் காரணம் ஏதுமில்லை, ஆதாரம் ஏதுமில்லை, ஏமாற்றுதல் அதில் இல்லை என மாயை வசமானதை விடுவித்து அதையே நினைத்து தியானம் செய்தால் சிவனின் இயற்கை அறிவும் நம் ஆத்ம அறிவும் ஒரு நிலையடைவதால் சிவன் இயல்பை அடையலாம்.

தியானயோகம்-77

எல்லா உடம்புகளிலும் உள்ள ஆத்மா ஒன்றேயாம், சிறிய புழு முதல் பெரிய யானை வரை உள்ள உயிர்களின் ஆத்மாவில் வேறுபாடில்லை ஆதலால் ஒரே ஆத்மா வேறு வேறு உடல்களிலிலும் பிரிந்துள்ளது. கடவுளின் அரசாங்கத்தில் எல்லா உயிர்களின் உடல், நிறம், இடம் வேறு வேறாக இருந்தாலும் ஒரே அரசின் பற்றுதல் எல்லாவற்றிற்குள்ளும் இருந்து கடவுளின் உணர்வுகள் உயிர்கள் மீது பரப்பப்படுவதால் எல்லா உயிர்களின் ஆத்மாவும் ஒன்றே.

தியானயோகம்-78

காமம், குரோதம்-கோபம், லோபம்-கஞ்சத்தனம்-பொறாமை, மதம்-முரட்டுத்தன்மை, மோகம்- ஆசை, மார்த்சரியம்-மாறுபடல் முதலிய ஆறு தீய குணங்களில் ஈடுபட்டு ஒருமித்த மனம் உடையவராய் இருப்பவர்க்கு அந்த உணர்வுகளின் அடிப்படை ஆத்ம உணர்வின் அடிப்படையாகும். குணங்களில் குற்றம் எனப்படும் ஆறில் ஒன்று வந்து சேர்ந்தாலும் எல்லாவற்றையும் மறந்து அதை மட்டுமே எண்ணி அதிலேயே மூழ்கி கிடப்பதால் அந்த உணர்வின் வலிமையை உணருவதுபோல் வேறு எதையும் சிந்திக்காது ஒன்றில் மட்டும் ஈடுபட்டு தியானம் செய்யும்போது அது தேவையற்ற உணர்வு எனத் தெளிந்து எல்லா உணர்வுகளுக்கும் அடிப்படை தெய்வீக உணர்வும் இதுபோல் வளமை மிக்கதாக இருக்கும் என உணரலாம்.

தியானயோகம்-79

நீரின் மேல் படகு பயணத்தில் காணும் இயற்கை காட்சிகளின் உண்மையை முதலில் உணராமல் அதற்கான காரணங்களை கற்பனையாகக் கொண்டு, யாரால் படைக்கப்பட்டது, ஒரு மந்திரவாதியாலா, அல்லது ஓவியமாக தீட்டப்பட்டதா என்ற மாயையான பல உணர்வுகளுடன் மயக்கம் தரும் காடுகள் மற்றும் இயற்கை காட்சிகள் பற்றியும் நினைத்து தியானித்தால் அது அளவு கடந்த எல்லையில்லா மகிழ்வை உணர்வு தரும்.

தியானயோகம்-80

ஆத்ம உணர்வு இன்பம் துன்பம் இரண்டினாலும் பாதிக்கப்படாமல் நடுவில் தெளிவாக இருக்கும்.

தியானயோகம்-81

தன் உடலில் உள்ள எல்லாத் தொடர்புகளையும் விட்டு விலகி தன் உடல் இல்லை, நான் எங்கும் இருக்கிறேன் எனத் தியானம் செய்தால் மேலோங்கிய இன்பம் கிடைக்கும். ஆன்மாவை உடலில் இருந்து பிரித்து, எங்கும் எதிலும் நானே இருக்கின்றேன் என நினைத்து எல்லா உயிர்களிலும் ஒரே ஆத்மா என நினைத்து நான் அதுதான் என இனைய வேண்டும்.

தியானயோகம்-82

இச்சை-விருப்பம், ஞானம்-அறிவு, கிரியை-செயல் ஆகிய உணர்வுகள் எல்லா உயிர்களுக்கும் கடவுளிடமிருந்து பெறப்பட்ட இவை எல்லா ஆத்மாவிற்கும் பொதுவான இவைகள் என்னால் கருதுவதோ, விரும்புவதோ முதலிய செய்கைகள் இனி உண்டாகாது பிற பொருள்களிலிருந்து இச்செய்கைகள் உண்டாகலாம் என தியானித்தால் அவன் எங்கும் பரவிய பொருளாக இருப்பான்.

தியானயோகம்-83

எல்லா உயிர்களுக்கும், கண்பவன் காணப்படுவது என்றவற்றுக்குள் உள்ள உணர்வு பொதுவானது. யோகி இந்த இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை சிந்திக்க வேண்டும்.ஒரு மரத்தை ஒருவன் பார்த்தால் மரத்திற்கும் அவனுக்கும் ஓர் தொடர்பு உணர்வு உண்டு. இது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அம்மரத்தோடு ஐக்கியமாதல் அல்லது ஆகாதிருத்தல் போன்ற வேறுபாட்டை உற்று நோக்கினால் அதற்குள்ளும் ஓர் ஆத்மாவே இருக்கும். கண்ணால் மனிதன் காண்கிறான். மரம் பார்ப்பதில்லை. ஆனால் அவனின் அருகாமையை அது அறிகிறது. இந்த உணர்வை ஆராய்ந்து பார்த்தல் வேண்டும்.

தியானயோகம்-84

பொதுவாக தியானம் செய்வதற்கு நம் உடல் முன் நிற்கத் தேவையில்லை. எல்லா உடல்களுக்கும் அப்பாலாக மேலாக தியான உணர்வு தனித்தே இருக்கும். இதை உணர்ந்தவர் எல்லா இடத்திலும் பரவியிருக்கும் நிலையை அடைவான். பரம்பொருள் பற்றியோ வேறு ஒன்று பற்றியோ தியானம் செய்வதற்கு நம் உடல் கண்ணில் படவேண்டியது இல்லை. பிரபஞ்சம் முழுவதும் உள்ள எல்லா உடல்களுக்கும் தியான உணர்வுக்கும் தொடர்பு இல்லை என உறுதியாக உணர்பவர் எல்லா இடத்திலும் பரவ முடியும்.

தியானயோகம்-85

மனத்தின் ஆதாரங்கள் என்பது ஐந்து பொறிபுலன்கள் வழியாக வருவதும் மனத்தினுள் எண்ணங்களாக அசைபோடுவதும் ஆகியன எல்லாம் விலக்கி விட்டால் எல்லாக் கற்பனைகளும் விலகி ஆத்மா இயற்கையை அடையும். அது பைரவர் நிலையாகும். இருவகை ஆதாரங்களும் நீங்கிய மனம் தன் செயலிழந்துவிடும் அது நிர்விகல்ப நிலையாகும். மனம் அலையாது அடங்கும்போது ஆத்ம இயற்கை பரமாத்மாவிடம் இயல்பாக இருக்கும்.

தியானயோகம்-86

பரமேஸ்வரன் எல்லாச் சக்திகளுடன் எங்கும் நிறைந்து எல்லாம் அறிந்தவர். நானும் அந்தச் சிவமாகவே இருக்கின்றேன் என்ற தீவிர நம்பிக்கை கொள்பவன் சிவமாகிறான். நம்முள்ளே ஆத்மாவிற்கு சிவத்தினுடைய இயல்புகள் இருந்தாலும் அவை மாயையால் மறைந்துள்ளன. நான் சிவன் என்ற நம்பிக்கையுடன் சிவனுக்குள்ள எல்லா இயல்பும் எனக்குண்டு என தியானித்தால் மாயையையின் மறைவு விலகி மெல்ல மெல்ல ஆத்மானுபவம் கிட்டி சிவமாவது எனப்படும்.

தியானயோகம்-87

நீரிலிருந்து அலைகளும், நெருப்பிலிருந்து ஒளிகளும், சூரியனிலிருந்து ஒளிக் கற்றைகளும் இப்படி பல்வேறு பிரபஞ்சப் பொருள்களிலிருந்தும் தோன்றும் அலைகள் யாவும் பரம் பொருளிலிருந்துதான் தோன்றுகிறது. ஒளி, ஒலி, சக்தி, அசைவு முதலியவற்றை எல்லாப் பொருள்களும் அனுக்கள் மூலம் நொடிக்கு நொடி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. பரம் பொருளே எல்லாப் பொருளகளின் ஆத்மாவாக இருப்பதால் அலைகள் அங்கிருந்தே வருகின்றன.

தியானயோகம்-88

ஒருவன் வேகமாகச் சுழன்று சுழலும் சக்தியால் உடலின் சக்தி குவிந்து விரைவாகப் பூமியில் கீழே விழுந்ததால் உண்டாகும் விறுவிறுப்பான மயக்கம்போல் ஏறும் உணர்வு சக்தியே பரம்பொருளின் விசை உடம்பில் ஏற்பட்டதற்கு காரணம். இந்த பரபரப்பு ஓயும் நிலையான சமநிலையில் கடவுளை உணரலாம். எல்லா உடலிலும் தெய்வீக சக்தி சமமாகவே உள்ளது.

தியானயோகம்-89

நமக்குள்ளே குறைந்த சக்தியாலோ, அறியாமையாலோ பொருள்களை அறிய முடியாத பெரும் குழப்பம் மனத்தைச் சுழலச் செய்து மீண்டும் தெளிவடைந்து சமநிலையடையும். அப்போது நிர்விகல்ப நிலை எண்ணங்கள் இல்லாத நிலை உண்டாகி பரம் பொருளை உணரலாம்.                                 

தியானயோகம்-90

கண்களை விழித்துப் பாராமல் ஓரிடத்தில் பார்வையை நிலை நிறுத்தினால் எந்த ஆதாரத்தையும் கைக் கொள்ளாத நிலை கைவல்யநிலை உடனே உண்டாகும். அந்த நிலையில் காதுகள் மலவாய், குறிவாய் முதலியன திறந்திருக்க ஓசை எதுவும் எழுப்பாது உடலுக்குள் ஒலிக்கும் இதயத் துடிப்பு முதலிய அநாகத இயற்கை ஓசையை உற்றுக் கேட்டால் பரப்பிரம்மத்தினுள் இணையலாம். இந்த நிலை எல்லா எண்ண அலைகளும் அடங்கும் அதுவே நிர்விகல்ப நிலை.

தியானயோகம்-91

ஒரு ஆழமான கிணற்றின் மேலிருந்து கிணற்றுக்குள் தெரியும் வானத்தை இமைக்காது நோக்கினால் நிர்விகல்ப நிலையை அடையலாம். வானம் மேலிருப்பதை அறிந்துள்ள மனம் அது கீழிருப்பது கண்டு அலைவு ஏற்படும். அப்போது அதை தியானித்தால் நிர்விகல்ப நிலை ஏற்படும்.

தியானயோகம்-92

மனம் எங்கு எங்கு செல்கின்றதோ அங்கே அங்கே சிவம் இருப்பதை உணரமுடியும். சொல் பிரபஞ்சம், பொருள் பிரபஞ்சம் என்ற இரண்டிலும் எங்கும் பரவியிருக்கும் சிவனை நினைத்து எங்கும் எதிலும் தியானம் செய்யலாம்.

தியானயோகம்-93

மனம், வாக்கிற்கு எட்டாத பொருளாயினும் பிரபஞ்சம் முழுவதும் தழுவிய தியானத்தில் பரம்பொருள் புலன், மனம், சொல்லிற்கு எட்டாததாயிருந்தாலும் நம் புலன் உணர்வுக்குக் கட்டுப்பட்டுத் தெரிவான். அந்த தியானத்தில் மனதை ஐக்கியப்படுத்தி பரம்பொருளை உணரலாம்.

தியானயோகம்-94

துன்பம், மகிழ்ச்சி, தீவிர பெரு மூச்சிலும், தும்மல் வரும் போதும் அல்லது முடிந்ததும், போரிலிருந்து தப்பி ஓடும்போதும், தீவிரமாகச் சிந்திக்கும்போதும், கோபம் வரும்போதும் முடியும் போதும், உள்ள உணர்வு பிரம்மத்தை உணரும் உணர்வைப் போலவே இருக்கும். மேலே சொன்ன நிகழ்வுகளில் மனம் பதியாமல் இருப்பதே தெய்வ உணர்வை அனுபவிப்பதாகும்.

தியானயோகம்-95

தன் மனத்தில் உள்ள எண்ணங்களை வடிகட்டி ஓரிடத்தைத் தேர்வு செய்து அதில் விட்டு விட்டு உடம்பிலிருந்து வெளியேறிவிட்டதாக நினைத்து தியானம் செய்தால் பிறவி வாசனையால் உண்டகிய எல்லா இயல்புகளும் அனுபவங்களும் முழுவதுமாக வெளியேறி உடம்பை பற்றிய உணர்வையும் இழக்கும்போது இருக்கும் தூய உணர்வு கடவுளை அடைய தக்க உணர்வாகும்.

தியானயோகம்-96

ஒரு பொருளைப் பார்த்து அறிந்த பிறகு அந்தப் பார்வையையும், அப்பொருள் பற்றிய அறிவையும், அது பதிவு செய்த நினைவையும் மனத்திலிருந்து நீக்கிவிடும்போது அவன் ஒரு சூன்யத்தையே அங்கு உணர்வான். உலகைப் பார்ப்பதும் தன் உடலைப் பார்ப்பதும் முடிந்த பிறகு அந்த எண்ணங்கள் மறக்கப்படும்போது தன் உடலும் இந்த உலகமும் சூன்யமாக இருப்பதாக உணரலாம். பொருளைச் சூன்யமாக பாவிக்காமல் அப்பொருளை படிப்படியாக சூன்யமாக்குவது ஆகும்.

தியானயோகம்-97

தானும் கடவுளும் வேறுவேறு அல்ல என்ற ஆத்ம பூர்வமான கடவுள் மேல் ஆழ்ந்த பக்தியும், பொருள்களில் வரும் இன்பத்தை விட்டு விலகி இறை உணர்வோடு இருக்கும் ஒருவனின் அறிவு பராசக்தியினால் தூண்டப்பட்டு தடையற்ற வழியில் செலுத்தப்படும் அந்த அறிவைத் தியானித்தால் கடவுளை அடையலாம்.

தியானயோகம்-98

ஒரு பொருளை உற்று நோக்கும்போது பிற பொருள்கள் ஒருவித சூன்யத்தில் மூழ்கும். அந்தச் சூன்யத்தை எந்த பற்றும் இல்லாத மனத்தோடு தியானித்தால் மனம் அமைதியடையும். பாதையில் நடந்து செல்லும்போது எத்தனைபேர் இருந்தாலும் நம் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் மற்ற ஒலிகளை பின்னுக்குத் தள்ளி அது நம் காதில் விழும். கூட்டமாகப் பலர் இருந்தாலும் நாம் ஒருவரைப் பார்க்கும்போது அவர் மட்டுமே முதன்மையாகத் தெரிவார். எனவே ஒரு பொருளைப் பார்க்கும்போது மற்றவைகள் சூன்யமாகத் தெரியும். அதை தியானம் செய்தால் மனம் அமைதி பெறும்.

தியானயோகம்-99

உலகத்தில் துய்மை எனச் சொல்வதெல்லாம் புறத்தூய்மை எனும் உடலைத் தூய்மை செய்வதையே ஆகும், ஆனால் தூய்மை என்பது மனத்தூய்மை எனும் அகத்தூய்மை ஆகும். மனத்தில் எண்ண அலைகள் இல்லாத தூய்மையே மகிழ்ச்சிக்கு காரணமாகும். எண்ணச் சலனம் எதுவும் இல்லாது இருப்பது அகத்தூய்மை என்றும் அதுவே நிர்விகல்பம் ஆகும்,

தியானயோகம்-100

காற்றைப்போல், சூரிய சந்திரர் ஒளி போல் யாவர்க்கும், பொதுவாய் உணராதவர்களையும் சேர்த்து எல்லா இடத்திலும் பைரவரின் இயற்கை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் உண்மையை உணர்ந்தால் நாம் வேறு கடவுள் வேறு என்ற துவைத உணர்வு குறைந்து நாமும் அவரும் ஒருவரே என்ற சுத்த அத்வைத உணர்வை அடைந்து மகிழலாம்.

தியானயோகம்-101

பரம்பொருளே எல்லப் பொருளிலும் நிறைந்துள்ளது என்ற உண்மை அறிவை நம்பி அந்தக் கருத்தில் பிடிப்பாக இருந்து, பகைவர், நண்பர் இன்பம், துன்பம் மதிப்பு, அவமதிப்பு ஆகியவற்றையும் பரம்பொருள் பிரசாதமாக எண்ணும் ஒருவன் இடைவிடாத இன்பத்தை அடைவான்.

தியானயோகம்-102

ஒருவன் யாரிடமும் விருப்பு வெருப்புக் கொள்ளாமல் அவற்றிலிருந்து விடுபட்டால் அவனுக்குள் பிரம்ம பாவனையாகிய உணர்வுகள் மேலோங்கும். பிரமத்திற்குறிய குணங்களை மேற்கொண்டால் அதே இயல்புகள் உண்டாகும்.

தியானயோகம்-103

உள் பொருளாக இல்லாததைத் தியானித்துப் பெறமுடியாது. ஆனால் எந்த ஆதாரமும் இல்லாது சூன்யமாய் இருக்கும் ஒன்றாயின் அதை தியானம் செய்து அமைதி பெறுவது பைரவர் பாவனையாகும். இல்பொருள்- எக்காலமும் முளைக்காத முயல் கொம்பு, குதிரைக் கொம்பு, ஆகாயத்தாமரை முதலியன.

தியானயோகம்-104

கடவுளுக்குரிய இலக்கணங்கள் கொண்ட எப்போதும் உள்ளதாகவும் ஆதாரம் அற்றதாகவும், சூன்யமாகவும் எங்கும் பரவியதாகவும் எல்லையற்றதாய் உள்ள ஆகாயத்தை தியானித்தால் அதே இலக்கணங்கள் கொண்ட பிரம்மம் பாவனையாகும். ஒத்த இயல்புடைய இராண்டில் ஒன்றைத் தியானித்தால் மற்றதும் எளிதில் வசமாகும்.

தியானயோகம்-105

மனத்திற்குள் எந்தப் பொருள் சென்றாலும் அதை வெளியேற்றி மனதில் இருக்கவோ பதியவோ விடாமல் செய்தால் எப்பொருளுக்கும் மனதில் சலனம் ஏற்படாது. மனச்சலனம் இல்லா நிலையே கடவுளை தியானிக்க சிறந்த வழியாகும்.

தியானயோகம்-106

கடவுளாகிய பைரவரின் அருள் ஒளி கிரியா சக்தியுடன் கூடி பிரபஞ்சத்தை உருவாக்கி அதனுள் எல்லாப் பொருளுமாய் நிறைந்துள்ளது. ப+ஜ+ர+வ என்ற நான்கு ஓசைகளால் ஆனது பைரவ- ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலுக்கும் உரியவர். இந்த நாமத்தை உச்சரித்து தியானித்தால் சிவமாகலாம். எந்த சொல்லை உச்சரித்தாலும் பிராணசக்தி அந்த ஓசையின் ஒலியலையை நிறமாக மாற்றிச் சுழுமுனை வழியாக பிரம்மரந்திரம் வரை சென்று முடியும். ஓசை அதற்குறிய நிற ஒளியாகும்.

தியானயோகம்-107

எல்லாம் என்னுடையதே, எங்கும் நானே இருக்கிறேன் என்று எண்ணித் தியானம் செய்தால் அந்த எண்ணத்திற்கு ஆதாரம் கடவுளைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாததால் சாந்தி கிடைக்கும். நான், என் வீடு என்றால் அதற்கு அழியும் பொருளான உடல் ஆதரவு தரும். நானே பிரம்மம் என்று தியானம் செய்தால் பிரம்மமே ஆதாரமாகும். நான் என்ற உணர்வு மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மாயா சக்திகளின் பிடியில் உள்ள சிறியது ஆனால் கடவுளின் தன்மை பெரியது. என்னுடையது இப்பிரபஞ்சம் என்றால் போட்டிக்கு வாய்ப்பு இல்லாததால் அமைதி தானாக வரும்.

தியானயோகம்-108

நித்தியமானது, எங்கும் நிறைந்திருப்பது, யவர் ஆதரவும் தேவையற்றது, எங்கும் பரந்து விரிந்திருப்பது, என்ற கடவுளின் குணங்களைத் தியானம் செய்தால் பரம்பொருளின் தன்மை அடையலாம். ஒன்றின் குணங்களைத் தியானித்தால் அவர் அதையே தன் குணமாகப் பெறுவர்.

தியானயோகம்-109

இந்திரஜாலம் போல் மாயைகள் நிறைந்தது இப்பிரபஞ்சம் என உணர்ந்தவன் மன அமைதி அடைவான். மாயாஜாலம் உண்மைகளும் ஆதாரங்களும் இல்லாதவை. பூமிக்கும் கோள்களுக்கும் அண்டங்களுக்கும் ஆதாரமின்றி அந்தரத்தில் சுழலுகின்றன. கண்ணுக்குத் தெரியாத தத்துவம் அதைத் தாங்கி நிறுத்துகிறது. கடவுள் தன் அனுக்கிரகத்தால் இதை செய்துள்ளதால் செய்முறை காரண காரியங்கள் தெரியவில்லை. ஆகவே பிரப்ஞ்சம் உண்மையற்றது என எண்ணினால் அமைதி வரும். காரியத்தின் உண்மை தெரியலாம். காரணத்தின் உண்மை தெரியவில்லை. உண்மையை அறிய இயலாது.

தியானயோகம்-110

பரம்பொருள் எப்போதும் மாறுதலுக்கு உரியது அல்ல. மாற்றம் இல்லாமல் ஒரு செயலைச் செய்ய முடியாது. எல்லாப் பொருளுக்கும் அடிப்படை அறிவும் செயலுமாக உள்ளது. எனவே மாற்றமடையாமல் பொருள்களை பரம்பொருள் செய்திருக்க முடியாது. எனவே உலகம் ஒரு சூன்யம். அறிவு, செயல் இரண்டும் மாறுதலுக்குட்பட்ட ஒருவரிடமே இருக்க முடியும், கடவுள் மாறுதலுக்கு உட்பட்டவர் இல்லை. உலகின் பொருள்கள் அறிவு செயல் சார்ந்தே உருவாகியுள்ளதால் பிரபஞ்சம் ஒரு சூன்யம். கடவுளின் அறிவு பேரறிவு. அவற்றை மாயா சக்திகள் ஓரளவு பெற்றபின் உலகைப் படைத்துள்ளன. மாயா சக்திகளால் உருவான பிரபஞ்சம் மாயாமாய் தோன்றுவதால் அது உண்மையல்ல எனத் தியானம் செய்தால் அமைதி உண்டாகும்.

தியானயோகம்-111

சிற்றறிவு உடையவர்க்கே உண்டாகும் எந்த பந்தமாகிய அடிமைத்தனமும், மோட்சமாகிய விடுதலையும் எனக்கு இல்லை. சூரியனின் நிழல் நீரில் தெரிவதுபோல பிரபஞ்சம் என்பது எனது புத்தியில் தோன்றும் ஒரு மாயை என உணர்ந்து தியானம் செய்க. பிரபஞ்சம் மாயை, அதிலிருந்து தன் உடலிலிருந்து, மனம் ஆத்மா ஆகியவற்றையும் பிரித்து தியானம் செய்ய பிரபஞ்சத்தை விட்டு விலகும் நினைவு வரும்.

தியான யோகம்-112

இன்ப துன்பங்களை எல்லாரும் புலன்கள் வழியாகவே உணர்கிறோம். அந்த புலன்களிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உள்ளே செலுத்தி ஆத்ம உணர்வுடன் இருக்க வேண்டும். உடம்பிலிருந்து மனத்தை பிரித்து பொறிகளான ஞானேந்திரியங்களில் இருந்து விடுபடுகிறோம். சிலர் விழித்திருந்தாலும் நாம் கூப்பிடுவது அவர் காதில் விழுவதில்லை. பார்வையில் பொருள்கள் தட்டுப்படுவதில்லை. முகர்தல், உண்ணுதல், தொடு உணர்ச்சி என்ற ஐந்தும் மனம் உடம்பிலிருந்து பிரிக்கப்பட்டதும் செயல்படாத அனுபவத்தை நாம் பெறுகிறோம். நானே எங்குமாய், எல்லாமுமாய், எப்போதுமாய் இருக்கின்றேன் என்ற உணர்வு அடைந்தால் சலன மனத்திலிருந்து விடுபட்டு நமக்குள் நாமாக இருக்கும் நிலையான சக்தி உணர்வு நிலையை அடைகிறோம்.

தியானயோகம்-113

ஞானத்தால் எல்லாப் பொருள்களும் உணரப்பட்டு ஆத்ம உணர்வைத் தருவதால் ஆத்மாவும் ஞானமும் வேறு வேறானவை அல்ல என்று உணர்ந்து தியானம் செய்க. உணர்த்துகிறது எதுவோ அதுவே உணரப்பட்டதாகும். கண்ணாடி உபயோகித்தால் பார்வை தெரிகிறது. பொருள் தெரிவது கண்ணாடியால்தான் என்றாலும் கண்ணாடியும் கண்ணும் இணைந்தால்தான் பார்வை. இவ்வாறே ஆத்மாவும் ஞானமும் பிரிக்க முடியா. ஆத்மாவின் இயற்கை ஞானம் என உணர்ந்து தியானம் செய்யவும்.

113-தியானயோகங்களின் தொகுப்பு

1.பிராணா, அபான சக்திகள் தொடங்கும் இடத்தை இரு புள்ளிகளாக கொள்க.

2.அப்புள்ளிகளில் எழுந்த காந்த சக்திகள் முடியும் இடம்

3.இவைகளுக்கு நடுவே நிர்விகல்ப உணர்வு தோன்றி இவை மறைந்து விடும்

4.இந்த உணர்வினால் சாந்தம் பயனாகும்

5.குண்டலினி சக்தி மேலேறும்போது ஒளித்துகள்களாக உயரும்

6.ஆறு ஆதார சக்கரத்தின் வழி குண்டலினி உயரும்

7.குண்டலினி 12 இடங்களில் வெளிப்படும்

8.பிராண சக்தியான குண்டலினி சித்சக்தியாக மாறும்

9.பஞ்ச சூன்யங்களைத் தியானித்தல்

10.அவற்றை பிற பொருள்களின்மேல் தியானித்தல்

11.கபாலத்தின் உள்ளே தியானித்தல்

12.தாமரை நூல்போல் நுண்ணிய சுழுமுனை நாடி உள்ளே தியானம்

13.புருவ மத்தியில் ஒளிப் பொட்டுத் தியானம்

14.உச்சித்துளை, மார்பு, நடு ஆகிய இடங்களில் ஒளிப்பொட்டைத் தியானித்தல்

15.இயற்கையான தசநாதங்களைத்தியானித்தல்

16.ஓம் என்ற உச்சரிப்பை துவாதசாந்தம் வரை உச்சரிப்பது

17.ஒலிகளின் உச்சரிப்பில் ஏற்படும் இடைவெளியைத் தியானித்தல்

18.பத்துவித வாத்திய ஒலிகளை உணரத் தொடங்கினால் நாதமயமான கடவுளை உணரலாம்

19.பிண்ட மந்திரங்களை உரிய உருப்புகளில் வைத்து தியானம் செய்தால் தெய்வ அருள்

20.நிர்விகல்ப உணர்வுடன் உலகமெங்கும் பரவெளியாக உணர்க

21.தானும் பிரபஞ்சமும் சூன்யமாக உள்ளதாக பாவனை செய்தால் பிராண சக்தி அதிகமாகும்.

22.மேல், நடு, கீழ் என்ற வெளிகளைத் தியானிதால் கடவுளை அடையலாம்.

23.தன் உடலையே சூன்யமாகப் பாவித்து பழகினால் கடவுள் நிலை- நிர்விகல்ப நிலையடையலாம்.

24.தொடக்கத்தில் உடலை வெளியாக நினைக்க முடியாவிட்டால் உறுப்புக்களை நினைத்து அவை வெளியாக இருப்பதாக மெல்ல மெல்ல உணர்க.

25.உடம்பின் தோலை மட்டும் ஒரு போர்வையாகக் கருதி அதனுள் எது ஒன்றும் இல்லாத வெளியாக உணர்ந்தால் எங்கும் பரவிய உணர்வு கிட்டும்

26.மார்பு நடுவாகிய தகராகாசத்தை தியானிப்பதால் பரமவெளியில் பரம்பொருளை அடையலாம்.

27.துவாத சாந்தத்தில் மனத்தை ஒரு நிலைப்படுத்தி வைத்தால் பரம்பொருளை அடையலாம்.

28.எங்கிருந்தாலும், எப்படியாவது துவாத சாந்தத்தில் மீண்டும் மீண்டும் மனத்தை செலுத்துபவர் சிறந்த நிலை அடைவர்.

29.காலாக்னியால் இந்த உடல் தகனம் ஆகட்டும் எனத் தியானித்தால் தன் உண்மை இயல்பை அறியலாம்,

30.தன் உடல் போல் பிரபஞ்சமும் காலாக்னியால் எரிந்ததாய் உணர்வு வரும்போது தனக்குள் ஒரு பெரிய மனிதன் குறையற்றவனாய் தோன்றுவான்

31.அண்ட பிண்டமாகிய நம் உடலையும் பிரபஞ்சத்தையும் காரணம் எவை எவை என்று ஆய்ந்து தியானித்தால் கடைசியில் பராசக்தியில் நாமாக நிற்போம்

32.துவாதசாந்தத்திலும் இதயத்திலும் செய்யும் தியானம் முக்தியையும் இயற்கை சக்தியையும் தரும்

33.அத்துவாக்கள் ஆறின்படி இப்பிரபஞ்சத்தை ஐக்கியமாக்கி தியானித்தால் பரம்பொருள் மனோலயமாகும்

34.விச்வமயத் தியானம் செய்து சிவஸ்வரூபம் பெற்று எங்கும் இருக்கும் யோக நிலையை அடைவது மஹோதயம் ஆகும்

35.இந்த தியானம் செய்தால் மரணம் தெளிந்து சூன்யமாகி பழைய வாசனைகள் அழிந்து எதையும் ஏற்கத் தயாராக இருப்பான்

36.பானையோ, கூடாரமோ செய்து அதற்குள் விழித்துப்பார்த்து சூன்யத்தை உணர்தல் வேண்டும்

37.மலை உச்சியில் மரம் முதலியன இல்லாத வெளிகளில் சூன்யத்தைப்பார்த்து மனம் அடங்கும்

38.இரண்டு பொருள்கள் அல்லது கருத்துக்களுக்கு நடுவே உண்மை உணர்வு இருப்பதை உற்று உணரலாம்

39.இரு கருத்துகளில் ஒன்றிலிருந்து விலகுவதாக முடிவு செய்யும்போது உடனே அடுத்தற்கு மாறிவிடாது விலகுவதில் ஊன்றி சிந்திக்க வேண்டும்

40.உடல் அளவிலும் பிரபஞ்ச அளவிலும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் தியானத்தால் பரம் பொருளை அறியும் வாய்ப்பு ஏற்படும்

41.பிராணன் முடியும் இடமும் மூச்சு இழுக்கும்போது தலைவரை சென்று முடிவதையும் உணர்வது உள்ளுணர்வைத் தூண்டுவது ஆகும்

42.உடம்பையும் பிரபஞ்சத்தையும் இணைத்து தியானம் செய்யும்போது பரமானந்தத்தையும் பரம்பொருளின் அருளையும் உணரலாம்

43.யோகத்தின் போது மனக் குகையில் மகா ஆனந்தம் தானாகத் தோன்றும் கடவுள் வடிவம்

44.ஐம்பொறிகளையும் அடக்கும்போது பிராணசக்தி சுழுமுனை வழியே நின்று நின்று மேல் ஏறுவது எறும்பு ஊர்வது போல் உணர்வுக்கு வரும்.

45.கீழுள்ள குண்டலினியும் மேல் ஏறும் குண்டலினியும் உற்று நோக்கி அவற்றின் அசைவை உணர்பவன் உடலுறவு இன்பம் போல் மகிழ்வுஅடைவான்

46.பாலின்பமும் மனிதனின் ஆத்மாவிலிருந்து வரும் பிரம்ம ஆனந்தமே

47.பெண்ணைக் கொண்டு இன்பம் பெறுவதும் அவளின்றி அவளுடன் நடந்ததை எண்ணி இன்பம் அடைதலும் ஆத்ம உணர்வேயாகும்.

48.மகிழ்ச்சியின் வேர்வரை தியானம் செய்து ஆத்ம அனுபவம் பெறவேண்டும்

49.உண்ணல், பருகல் ஆகிய திருப்திகளின் அடிப்படையை ஆராய்ந்தால் பேரின்பத்தின் இயல்பை உணர முடியும்

50.இசையிலும், பிறவற்றிலும் ஒன்றி ஈடுபடும் ஒருவனுக்கு பிறபொருள்களிலிருந்து  விடுபடுவதும் ஆத்மானந்த இயல்பை விளக்கும்

51.எங்கெங்கே மனம் மகிழ்ச்சியில் ஈடுபட்டு அதிலேயே ஊன்றி எதைத் தியானிக்கிறதோ அதுவே பரமானந்தம் ஆகும்

52.நனவுக்கும் தூக்கத்திற்கும் நடுவில் உள்ள எண்ணங்கள் இல்லா நிலையைத் தியானித்தால் பராசக்தியை உணரலாம்

53.சூரிய ஒளி முதலிய ஒளிகளை உற்று நோக்கித் தியானம் செய்பவருக்கு ஆத்ம ஜோதி தெரியும்

54.முத்திரைகள் மூலம் பிரபஞ்ச வெளியை உணரலாம்

55.சாத்வீக குணம் அதிகமாகுபடி ஒரு பிட்டத்தில் அமர்ந்து கேசரி முத்திரையாக பார்க்க

56.கைகளை தலையில் சுமத்தி அக்குள்களைப் பார்த்து அதில் ஒன்றினால் அமைதி வரும்

57.கண்பார்வை ஓரிடத்திலும் கருத்தின் நோக்கம் ஓரிடத்திலும் என இரண்டாக பிரித்து பார்க்கவும்

58.வாய் திறந்து நாக்கை மடித்து மனத்தை வாயுள் நிறுத்தி மனத்தளவில் ‘ஹ’ சொல்லுக

59.தன் உடல் எந்த இடத்தாலும் அல்லது இருக்கையாலும் தாங்கப்படாமல் அந்தரத்தில் ருப்பதாக நினைப்பது மனத்தில் தோன்றும் பழைய புதிய எண்ணங்களை நீக்கும்.

60.வாகனங்களில் செல்லும்போது உடல் மட்டும் அசைவதை உணர்வது அமைதி தரும்

61.நீலவானையே நெடுநேரம் நோக்கியிருந்தால் கடவுளை உணர்ந்து மனம் தெளிவடையும்

62.பிரபஞ்சம் பைரவர் திருவடியில் அடங்கி விடுவதாகவும், அவரும் ஒருவரின் தலைக்குள்ளேயே அடங்கி மீள்வதாக பாவனை கொள்ளவும்

63.துரியத்தில் மட்டுமல்லாது கனவு, நனவு உறக்கத்திலும் வேறுபடாது ஒருமித்த தன் உணர்வைப் பெறுதல் யோகம் செய்பவருக்குரியதாகும்

64.பைரவர் நிறம் போன்ற கரிய இருளை தியானித்தால் அவரை அனுகலாம்

65.தேய்பிறை இரவைக் கண் மூடியபடி தியானித்து பிறகு பைரவரையே கண் திறந்து தியானிக்க வேண்டும்

66.அறிவில் தோன்றும் சூன்யத்தை தியானித்தால் ஆத்ம உணர்வு கிடைக்கும்

67.மூச்சை அட்க்கும்போது ‘அ’ என மனத்தால் உச்சரித்தால் ஞானம் கிடைக்கும்

68.எழுத்து முடிவில் விசர்க்கம் போல் எல்லாப் பற்றுகளும் முழுவதுமாக விட்டு விலகினால் பிரம்மத்தினோடு இணையும்

69.ஆன்மாவை எங்கும் விரிந்த பொருளாகத் தியானம் செய்தால் சிறிய பொருள்களில் அது சிக்காது.

70.உடலில் ஊசியால் துளைத்த இடத்தில் வலி மிகும் அந்த குவிந்த இடத்தில் கடவுளை உணரமுயற்சி கொள்வது எளிதானது

71.அந்தக்கரணங்கள் தனக்கு இல்லை என தியானம் செய்தால் எண்ணங்களும் சலனமும் மனதில் தோன்றாது. தெளிந்த மனத்தில் சுத்த சைதன்யம் தோன்றும்

72.மாயா சக்தி எல்லாரையும் வசப்படுத்தி மயக்கும்

73.உள்ளிருந்து எழும் ஆசையை இடமறிந்து நிறுத்தி இரண்டு ஆசைகளுக்கும் நடுவே தியானம் செய்யவும்

74.எப்போதும் தான் சித்தானந்தமயமாகவே இருப்பதாகத் தியானித்தால் அகந்தை நீங்கும், மாயை விலகும்

75.ஆசை அல்லது கருத்து நமக்குள் உதயமாகும்போது அதையே கூர்ந்து தியானித்தால் நம் ஆத்மாவின் இயற்கையை உணரலாம்

76.மாய வசப்பட்டது என் அறிவு இல்லை என்பதை காரணகாரியமற்ற அறிவு என தியானி

77.எல்லா உயிரினங்களிலிலும் உள்ள ஆத்மா வேறுபட்டதல்ல ஒரே ஆத்மாவே பிரிந்துள்ளது என உணரவும்

78.உயிர்களின் குணக் குற்றங்கலாகிய ஆறும் வரும்போது நம் உணர்வின் வலிமை வெளிப்படும். ஒருவன் நல்லுணர்வை வலிமையாகச் செய்தால் தெய்வ நிலையை அடையலாம்.

79.படகுப் பயணத்தில் சுழலும் இயற்கை காட்சிகளின் காரணம் தெரியாமல் கற்பனையாகத் தியானித்தாலும் அதன் உண்மை தெரிய வரும்.

80.இன்ப துன்பம் இரண்டின் நடிவில் ஆத்மஉணர்வு உள்ளதால் அதையே தியானம் செய்க

81.நான் உடம்பு இல்லை என விலக்கிக்கொண்டு நானே எங்கும் இருக்கின்றேன் என தியானித்தால் இறையனுபவம் கிடைக்கும்.

82.இச்சை, ஞானம் முதலிய செய்கைகள் இனி என்னிடமிருந்து வராது ஒரு குடத்திலிருந்தோ வேறு பொருளிலிருந்தோ வரும் என உணர்வதால் எங்கும் பரவிய பொருளாக இருக்க முடியும்.

83.காண்பவன் காணப்படும் பொருள் என்ற உணர்வு எல்லா உடல்களுக்கும் பொதுவானது என ஒருவன் அதன் வேறுபாட்டைச் சிந்திக்க வேண்டும்.

84.தேகங்கள் துணை இல்லாமலே தியானம் நிகழும். இது எல்லா உடல்களுக்கும் பொதுவானது. இதை உணருபவரே எல்லா இடங்களிலும் இருப்பவராவார்.

85.மனம் செயல் இழந்து நிர்விகல்ப நிலையாகும்போது நம் ஆத்மா பரம்பொருள் போல் இயற்கை இயல்புடையதாகும்

86.சிவனுக்குரிய பரம்பொருள் இயல்புகள் தனக்கும் உள்ளதாகக் கருதித் தியானிப்பவன் சிவனாகா ஆவான்

87.பரம்பொருளே பிரபஞ்சம் முழுவதுமாகப் பரவியிருப்பதால் எல்லாப் பொருள்களின் அசைவுகளும் பரம்பொருளில் இருந்தே வருகின்றன.

88.சுழன்று சுழன்று கீழே மயங்கி விழுந்தவர் அனுபவிக்கும் மொத்த சக்தி, வலிமையும் நமக்குள் உள்ள தெய்வ சக்திகளின் சேமிப்பாகும். அதனால் வரும் தெளிவினால் கடவுளை உணர்க.

89.சக்தி இல்லாததாலோ அறியாமையாலோ எதையும் புரிந்து கொள்ள முடியாத குழப்பம் மனத்தைக் கலக்கி எண்ண அலைகளே இல்லாத நிலைவரும்போது அதில் கடவுளை உணரலாம்

90.தனித்த பாவனையில் உள்முகம் நோக்கி இயற்கை ஓசையை உடம்பிற்குள் உற்றுக் கேட்பவர் பிரம்ம நிலை அடைவர்.

91.நீர் நிலைகளில் தெரியும் நீலவானத்தைக் கொண்டு தியானித்தால் நிர்விகல்ப நிலை உண்டாகும்

92.எங்கும் பரவிய காரணத்தால் மனம் எங்கே சென்றாலும் சிவம் அங்கே காணப்படும்

93.பிரபஞ்சம் தழுவிய தியானத்தில் சிவன் நம் புலன் உணர்வுக்கு தெரிவான்.

94.தும்மல், இன்பதுன்பம் பெருமூச்சு, கோபம், பயம் முதலிய தீவிர உணர்வுகளால் பாதிக்கப் பட்டவர் மனதில் உலக நிகழ்வுகள் பதிவதில்லை. கடவுளை உணரும்போது உலக விவகாரங்களில் மனம் பதிவதில்லை

95.உடலைவிட்டு மனமும் மனத்தை விட்டு எண்ணங்களும் நீங்கிய நிலையே கடவுளை உணரத்தொடங்கும்

96.பார்த்த ஒரு பொருளிலிருந்து பார்வையும் அது பற்றிய அறிவையும் அந்த எண்ணத்தையும் விலக்கி வந்தால் அந்தப் பொருளே சூன்யமாயிருப்பதால் அதை தியானம் செய்யலாம்.

97.பக்தியும், உலகப் பொருள்களைவிட்டு விலகுவதும் ஒருவனின் அறிவைத் தூண்டி தூய்மை செய்யும் அறிவை தியானம் செய்து இறைவனை அடையலாம்.

98.ஒரு பொருளை ஊன்றிப் பார்க்கும்போது பிற பொருள்களின் மேல் படரும் சூன்யத்தை தியானம் செய்தால் அமைதி கிட்டும்.

99.புறத்தூய்மை தூய்மையாகாது. அகத்தூய்மையே தூய்மையாகும்.அதனால் அமைதி உண்டாகும்.

100.எங்கும் வெளிப்பட்டபடி உள்ள கடவுள் இயற்கையை உணர்வோர் அவை தம்மோடு இனைந்ததாகவே கொள்வர்

101.பரம் பொருளே எங்கும் எல்லாவற்றிலும் நிறைந்துள்ளதாகக் கருதி எந்த நிலைகளிலும் பாதிக்கப்படாத ஒருவனுக்கு நிலையான இன்பம் கிடைக்கும்

102.விருப்பு வெறுப்பு யாவரிடமும் இல்லாத் ஒருவன் பிரம்ம இயல்பை அடைவான்

103.சூன்யத்தை கூடத் தியானித்து பெறலாம். இல்பொருளைத் தியானிக்க முடியாது,

104.ஆகாசத்திற்குரிய பல இலக்கணம் கடவுளுக்கும் இருப்பதால் ஆகாசத்தை தியானித்தால் கடவுள் காட்சி தருவார்

105.மனத்தில் எந்தப் பொருளாலும் பதிவுகள் உண்டாகாமல் தடுப்பதே மனச் சலனத்தை நீக்கும் வழியாகும்

106.எங்கும் நிறைந்த எல்லாவற்றையும் தந்த அருள் ஒளியாகிய பைரவ எனும் நாமத்தை உச்சரித்தால் சிவமாகலாம்

107.எங்கும் நானே இருக்கிறேன். எல்லாமும் நானாக இருக்கிறேன் என கடவுளைப் போலவே எண்ணித் தியானித்தால் கடவுளின் பூரண சக்தியுடன் இருக்கலாம்

108.கடவுள் குணங்களைத் தியானம் செய்ய கடவுள் தன்மைஉடையவனாக ஆவான்

109.மாயாஜாலம் போன்ற இப்பிரபஞ்சத்தை உண்மையற்றதாக உணர்பவன் அமைதி அடைகிறான்

110.பேரறிவும் பெருந்திறமும் கொண்ட கடவுளிடமிருந்த மாயா சக்திகள் அவற்றைப் பெற்று உலகைப் படைத்ததால் இந்த உலகமே சூன்யமாக மாயையாக உள்ளது.

111.அடிமையும் விடுதலையும் எனக்கு இல்லை. அவை சிற்றறிவினருக்கே உரியவையாகும். இப்பிரபஞ்சம் மாயை என்று தியானம் செய்யலாம்

112.இன்ப துன்பங்களால் அழியும் புலன்களிலிருந்து விடுபட்டு ஆத்ம உணர்வுக்குள் நமக்குள் நாமாக இருக்க தியானம் செய்யவும்

113.காண்பதும் காண்பவனும் ஒன்றே. ஆத்மாவும் ஞானமும் ஒன்றே என தியானம் செய்க.

தியானப்பயிற்சி-பொது

1.மனம், புத்தி, பிராணசக்தி, ஆத்மா ஆகிய நான்கும் ஒன்றாகி தியானம் செய்தால் பைரவர் வெளிப்படுவர்.

மனம்- உணர்வு தொடர்புடையது- விருப்பம், நினைவு, மறதி ஆகியவைகளைச் செயல்படுத்தும்

புத்தி- அறிவு தொடர்புடையது- ஆராய்தல், சிந்தித்தல், அறிதல், தெளிதல், தவிர்ப்பன தவிர்த்தல், கொள்வன கொள்ளல் முதலிய வற்றிற்கு உரியது

பிராணசக்தி- பிராணசக்தி மேலெழும்புவதால் இது வாயு எனப்படும். உடலில் உள்ள எல்லா சக்திகளுக்கும் அடிப்படையானது.

ஆத்மா- மனமும் புத்தியும் இரட்டைப் பூவைப் போல் ஒட்டிய பகுதியேயாகும். இவைகளை விட்டு பிராணன் தனியாக செயல்படாது, மனம், புத்தி, பிராணன் ஆகிய மூன்றும் ஆத்மாவின் உணர்வுடன் மேலே எழுவதுதான் தியானம்.

பிராண சக்தி பிரபஞ்ச சக்தியோடு இணைய மனமும் புத்தியும் வேறு வேறு பக்கம் செல்லாமல் இம்முயற்சிக்குத் துணை செய்வதுதான் தியானம்.

2.மனச்சலனம் உள்ளதை நன்கு அறிந்தவன் தியான நிலைகளை அறிந்தவன் ஆவான்

3.இங்கு கூறப்பட்டுள்ள தியானப்பயிற்சியில் ஏதாவது ஒன்றைப் பயிற்சி செய்தால் அவருள் பைரவர் வருவார். அவர் மற்றவர்களுக்கு தீட்சை தந்து ஆசீர்வதிக்கலாம்.

4.ஒரு தியானப்பயிற்சி -பாவனையிலிருந்து வெற்றி பெறும் ஒருவன் முதுமை மற்றும் சாவிலிருந்து விடுபடுவான். அட்டமா சித்திகளை பெருவான். அட்டமா சித்திகள் எனப்படுவது-

அணிமா-தன் உடலை அணு அளவு செய்து கொள்வது

மகிமா -தன் உடலை மிகப் பெரிய உடலாக்குதல்

கரிமா -கட்டுப்படாததும், கட்டுப்படுத்துவதை மீறிக் கொள்வதுமாதல்

லகிமா-பஞ்சுபோல் இலேசான உடல் ஆகுதல்

பிராப்தி-நினைத்ததை அடைதல்

பிராகாம்யம்-நிறைவுள்ளவனாகுதல்

ஈசத்துவம்-கடவுள் செய்யும் ஆட்சிச் செய்கைகளைச் செய்தல்

வசித்துவம்-அனைவரையும் அனைத்தையும் தன் வசம் ஆக்கிக்கொள்ளுதல்.

1.ஒரு தியானப்பயிற்சி -பாவனையிலிருந்து வெற்றி பெறும் ஒருவனுக்கு பிறர்போல் உலகியல் வாழ்வு கடமைகள் தேவையில்லை அதனால் எந்த பாதிப்பும் இல்லை.

2.ஒரு தியானப்பயிற்சி -பாவனையிலிருந்து வெற்றி பெறும் ஒருவனுக்கு ஜபம் முதலியன தனியே செய்ய வேண்டியதில்லை. வேறு யோகமும் தேவையில்லை. அவனே வணக்கத்திற்குரியவன் ஆகின்றான்.

3.வணங்குபவனுக்கும் வணங்கப்படுபவனுக்கும்-கடவுள் வேறுபாடு தேவையில்லை. அவர் உச்சரிக்கும் மந்திரங்களால் அவர் ஆத்மாவே மந்திரங்களை அடிக்கடி எதிரொலி செய்து ஆத்மாவையே மந்திராத்மாவாகச் செய்யும்போது கடவுள் பக்தன் என்ற வேறுபாடு இல்லை.

4.ஒரு சிலை வடிவின் மேலும் தியானம் செய்வது தியானமாகாது. புத்தியில் எந்த உருவும் ஏற்காமல் புத்தியில் சலனமில்லாமல் ஐக்கியமாதலே தியானம். கடவுள் சிலைகளை வழிபடப் பயன்படுத்தலாம். தியானத்திற்குரிய ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. பரம்பொருளாக கொள்ளத்தக்க வானம், மலை, நீர், சூரியன் முதலிய பொருள்களில் ஐக்கியமாகி தியானிக்கலாம்.

5.வழிபாடு என்பது பூ, மணப் பொருள் தந்து கும்பிடுதல் அல்ல- உரிய மன எழுச்சியைத் தியானத்தைக் கடவுள் உணர்வுடன் இனைத்தல்தான் வழிபாடு.

6.தியானப்பயிற்சி ஒன்றை பயிற்சிகளில் நாள்தோறும் தெளிவும் தீவிரமும் தந்து அதன் குறிக்கோளை அடையுமளவு திருத்தம் பெறுவதே திருப்தி.

7.பைரவராகிய லட்சியமே தீயாகவும், மனம் பொறி புலன்கள் ஞானம் முதலிய யாவும் ஊற்றும் நெய்யாகவும் கொள்வதே உண்மையான வேள்வியாகும்

8.தியாகம், தொண்டு என்பனவைகளால் பெறுவது ஆனந்தமேயாகும். ருத்ர சக்தியை அடைவதும் உணர்வதும் யாத்திரைக்குரிய புண்ணிய செயலாம். பாபங்களை அழிப்பதும் காப்பதும் அதுவேயாகும்.

9.ஆன்ம விடுதலையை உணர்தல் ஆனந்தம் அடைதல் ஆகியவற்றிற்கு மூலமான தியான வெற்றியே தீர்த்தம் ஆடுவது.

10.பரமசிவமும் சக்தியும் நெருங்கிவந்து ஐக்கியமாவது படையல் ஆகும்

11.மூச்சுப்பயிற்சியால் குண்டலினி அசைந்து எழப் பெறுவதே பெரிய யாத்திரையாகும்.

12.‘ஹம்ஸம், ஸோஹம்’ மூச்சு மந்திரத்தை பாவனையாக கொள்க

13.வெளிவிடுதல் மூச்சில் ‘ஸ’ என்றும் உள் வரும் மூச்சில் ‘ஹ’ என்றும் இவை ஹம்ஸஹ் என இனைந்தும் நாள் முழுவதும் இந்த ஜபம் மூச்சு விடுதலால் நடைபெறுகிறது.

14.இவைகள் மரணமில்லாப் பெருவாழ்விற்காக கூறப்பட்டவை. இதை உணராதவர்களுக்கு நம்பாதவர்களுக்காக சொல்லவில்லை. நம்பிக்கையில்லாதோர் வேறுஒரு குருவைத் தேடி அலைவர். மனத்தின் சலனம் குறைந்தவர் ஏற்றுச் செய்க. துறவு நிலை எய்திய யாவருக்கும் இது பயன்படட்டும்.

*********

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879857
All
26879857
Your IP: 44.204.164.147
2024-03-19 11:52

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg