gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

விநாயகர்

Written by

                                         ஓம்விக்னேஸ்வராய நமக! 

விநாயகர்-- வி + நாயகர் -- சிறந்த தலைவர் 
கணபதி -- 18 கணங்களுக்கும் பதி. கணபதியை பரம்பொருளாக வழிபடும்முறை கணாபத்யம் எனப்படும். க- என்பது மனோவாக்குகள், ண- அவற்றைக் கடந்த நிலை, ஈசன்- இறைவன், கணேசன்= கண+ ஈசன். 51 வகை கணபதி உண்டு. சந்தான, சுவர்ண, நவநீத, ஹரித்ரா, மகா, உச்சிஷ்ட ஆகிய அறுவரும் பிரதானமானவர்கள். கணபதி அறிவையும் பயனையும் தருவதால் சித்தி, புத்தி என்ற இரு தேவிகளும், க்ஷேமம், லாபம் என்ற இரு புத்திரர்களும் உண்டு. கணாபத்திய வழிபாடுமுறை மறைந்து விட்டாலும் கணபதியே முதல் வழிபாட்டிற்கு உரியவர். இடையூறு என்ற விக்னத்தை போக்குபவர். 

வேறு பெயர்கள் -- கஜானன்- யானைமுகம். (கஜம் என்றால் யானை. ஆனனம் என்றால் முகம்.) லம்போதரன்- வயிறு பெருத்து இருப்பதால். ஏகதந்தன்- ஒரு தந்தம் ஒடிந்திருப்பதால். விக்கினஹரன்- விக்னேஸ்வரன்- விக்கினங்களைப் போக்குவதால். குகராஜஸ- முறம்போன்ற காதுகள். கணநாதர்- கணங்களுக்குத் தலைவர்.

செவ்வாய்க்கிழமை -- மாசிமாத செவ்வாய்க்கிழமை பூக்களால் அர்ச்சனை செய்து பூஜை வழிபாடு- நினைத்த நல்லகாரியம் வெற்றி பெரும்.

வெள்ளிக்கிழமை -- எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விரதம் இருந்து பூஜை வழிபாடு சிறப்பு. சூரியன் இடப ராசியில் இருக்கும். வைகாசிமாத வளர்பிறை வெள்ளி விரதம் இருக்க விசேஷமான நாள். அன்று வழிபட்டு பயனடைந்தவர்கள் அத்திரி மகரிஷி- சூரிய சந்திரர்களை பிள்ளைகளாகப் பெற்றார். குபேரன் சங்க நிதி, பதும நிதிகளைப் பெற்றார்
சனிக்கிழமை -- கிரக தோஷங்கள் உள்ளோர் சனிக்கிழமையன்று பூஜை செய்து வழிபாடு நன்மை.
ஏற்ற திதி -- வளர்பிறை சதுர்த்தி. ஆவணி வளார்பிறை சதுர்த்தி சாலச் சிறந்தது. இது பிள்ளையார் சதுர்த்தி ஆகும். அன்று விரதம் இருந்து துதிகளைப் படித்து வந்தால் நல்ல பலன்கள் கிட்டும். அன்று இரவு சந்திரனை தரிசித்தால் வழிபாட்டின் பூரண பலன் கிட்டும், நினைத்த நல்ல காரியங்கள் ஜெயம். ஒவ்வொரு நாளும் அந்தந்த திதிகளின்படி வெவ்வேறு வடிவினை வணங்குவது கூடுதல் பலனைத் தரும். கணபதியின் உருவங்கள் வேண்டிய வடிவில் இல்லையென்றால் அந்த பெயரை ஒன்பதுமுறை இருக்கும் கணபதிமுன் சொல்லி வேண்டவும். அமாவாசை- நிருத்த கணபதி, பிரதமை- பாலகணபதி, துவிதை- தருண கணபதி, த்ரிதியை- பக்தி கணபதி, சதுர்த்தி- வீர கணபதி, பஞ்சமி- சக்தி கணபதி, சஷ்டி- துவிஜ கணபதி, சப்தமி- சித்தி கணபதி, அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி, நவமி- விக்ன கணபதி, தசமி- க்ஷிப்ர கணபதி, ஏகாதசி- ஹேரம்ப கணபதி, துவாதசி- லக்ஷ்மி கணபதி, த்ரையோதசி- மகா கணபதி, சதுர்த்தசி- விஜய கணபதி, பௌர்ணமி- நித்ய கணபதி,

வணங்கும்முறை - எந்நாளும் எப்போதும் விநாயகரை வணங்கலாம். அரசமரத்தடி விநாயகர் அருகில் நீர் நிலைகள் இருந்தால் நீரால் அபிசேகம் செய்யவும். வெள்ளெருக்கு. அருகம்புல் ஆகியவைகளைச் சார்த்தவும். தெரிந்த துதிகளை விநாயகப் பெருமானை மனத்தில் நினைத்து சொல்லவும். தீப ஆரதனைக் காட்டி வணங்கவும். இரு கை விரல்களை மடக்கி நெற்றிப் பொட்டில் இடம் வலம் மாறி லேசான அழுத்தம் கொடுத்து தடவிக் கொள்ளவும். காதுகளை ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலால் இடம் வலம் மாற்றிப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடவும். பின் கணபதியை இடம் வலம் சுற்றி வந்து வணங்கவும்.
கோவில்களில் வெள்ளெருக்கு. அருகம்புல் ஆகியவைகளைச் அர்ச்சகரிடம் தரவும். அவர் தீப ஆரதனைக் காட்ட கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து வணங்கவும். இரு கை விரல்களை மடக்கி நெற்றிப் பொட்டில் இடம் வலம் மாறி லேசான அழுத்தம் கொடுத்து தடவிக் கொள்ளவும். காதுகளை ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலால் இடம் வலம் மாற்றிப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போட்டு வணங்கவும்.
இறைவனுக்கு நெய்வேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத்தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். வசதியுள்ளவர்கள் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு உடன் படையலுக்கு பொங்கல். சுண்டல் தந்து பூஜை முடிந்ததும் அருகில் உள்ள எல்லோருக்கும் பிரசாதம் வழங்கவும்.
எந்த இடமாயிருந்தாலும் அவரைத் தொட்டு வணங்கக்கூடாது. அவர் உடல் பூதகணம். பாதம் தொட்டு வணங்க வேண்டும். அவரின் கால் தேவபாதம். தேவபாதங்களைத் தொட்டு வணங்கினால் நினைத்த காரியம் கை கூடும். ஒற்றைக் கொம்பன், இரு செவியன், முக்கண்ணன், சதுர்புஜன், ஐங்கரன், ஆறாதாரத்துள்ளான் அவனை வணங்கின் ஏழுபிறவி நீங்கி, எண்திசை போற்ற, நவமணிகளும் சம்பத்தும் பெற்று வாழ்வர்.

வன்னி: பொதுவாக  அரசு+வேம்பு மரத்தடியில் இருக்கும் விநாயகர் வன்னி மரத்தடியிலும் இருப்பதுண்டு. அவுரவர், சுமேதை தம்பதியினரின் மகள் சமீக்கும் மந்தாரனுக்கும் மணம் முடிந்து வரும் வழியில் துதிக்கை வேண்டிப்பெற்ற புருசுண்டி முனிவரின் வித்தியாசமான வடிவைப் பார்த்து சிரிக்க சாபம். விநாயகரிடம் விமோசனம் கேட்க சமீ ஆகிய வன்னி மரத்தின்கீழ் தான் கோவில் கொள்வதாகவும், மந்தார(ன்) மரத்தின் பூ பத்திரங்களை உகந்ததாக ஏற்றுக் கொளவதாகவும் அருள். அன்று முதல் வன்னி மரத்தடியும் விநாயகரின் இருப்பிடங்களில் ஒன்றானது. வன்னி வெற்றியின் அடையாளம். துர்க்கை தவக்கோலத்தில் இருக்குமிடம். அக்னியின் அம்சம் நிறைந்தது. சனிபகவானுக்குரியது வன்னி பத்ரம்.

உகந்த மலர்கள்: செம்பருத்தி, ரோஜா, தும்பை, மந்தாரை, அருகம்புல்

அருகம்புல்: எமனின் மகன் அமலாசுரன். எமனின் மகன் என்ற கர்வத்தில் அனைவரையும் துன்புறுத்துவதுபோல் விநாயகரிடமும்வர விநாயகர் அவனை விழுங்கி விட்டார். அதனால் அவருக்கு வயிற்றில் கடும் எரிச்சல் ஏற்பட்டது. இதுகண்ட அகத்தியர் 21 அருகம் புற்களை விநாயகர் வயிற்றில் வைத்து பூஜை செய்ய எரிச்சல் மறைந்தது. அன்று முதல் விநாயகருக்கு அருகம்புல் சமர்பிப்பது வழக்கமானது.

தோப்புக்கரணம்: மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை விளையாட்டாக விழுங்கிவிட்டார். அது வயிற்றைக் கிழித்து விடுமோ என அனைவரும் நினைக்க பெருமாள் தன் காதுகளை கையால் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்து கொள்வதைப் பார்த்த விநாயகர் வயிறு குலுங்கச் சிரிக்க விஷ்ணு சக்கரம் வெளிவந்தது. அன்று முதல் தோப்புக் கரணம் பழக்கமானது. தோர்ப்பி-கைகள். கர்ணம்-காது. தோர்ப்பிகர்ணம் மருவி தோப்புக்கரணம் ஆனது.

 

உள்ளே.....

1.“விநாயகர் துதிகள்”-தினமும் /வேண்டும்போது.

2.“விநாயகா போற்றி”

3.“விநாயகா போற்றி போற்றி”

4.“108 போற்றி” 

5.“108 போற்றி” 

6.“ஜய ஜய கணபதி” 

7.“பிள்ளையார் துதி”

8.“விநாயகர் சதுர்த்தி” அன்று / தினமும் எல்லாச் செயல்களும் வெற்றிபெற.

9.“விநாயகர் கவசம்”-தடைகள் தகரும், எண்ணம் ஈடேறும், நலம்பெற- காசிப முனிவர்-மூன்று      காலமும்.

10.“ருணஹர விநாயகா தோத்ரம்”-கடன் நீங்கி-அனைத்து வளங்களும் பெற- தினமும் 1/2முறை. 

11.“விநாயகர் அகவல்” - ஒளவையார் அருளியது

12.“டுண்டி கணபதி துதி”- தடைகள் தகரும், எண்ணம் ஈடேறும், நலம்பெற-ஆதிசங்கரர் பாடியது-தினமும்.

13.“ஸ்ரீகணேச புஜங்கம்” -ஆதிசங்கரர்-அருள் பெற.

14.“ஸ்ரீகற்பக விநாயகர்”

15.“ஸ்ரீகணேச சரணம்” 

1.விநாயகர் துதிகள்-தினமும் /வேண்டும்போது.

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள்நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை 
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!

 

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

 

விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

 

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை 
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

 

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

 

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

 

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

 

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே! 
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே! 
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

 

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

 

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை 
முக்கட் கடாயானை முன்!

 

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

 

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

 

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை 
வருத்த எண்ணுகின்ற மலம்!

 

நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே, 
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா, 
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே! 

 

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும் 
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!

 

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

 

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

 

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

 

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து

என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

 

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க 
வளரொளி விநாயகனே வா!

 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

 

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.

 

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.

 

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

 

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!

 

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும் 
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!

 

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.


அகரமென அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப்
போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

 

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத்
திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொல்லுநால்
வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை
யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி
வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

                                                                                                                                                                                                                                                                              பண்ணியம்,ஏந்தும் கரந்தனைக்காக்கிப்
பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச
வியன்கரம் தந்தைதாய்காக்கி 
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக்
கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச்
சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                நீடாழிஉலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                          ஆணிலேஅன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே
அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங்
கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல்
என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே
விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

2.“விநாயகா போற்றி”

ஓம் அகரமாய் எழுந்தாய் போற்றி

ஓம் அறிவாக மலர்ந்தாய் போற்றி
ஓம் அகிலத்தின் புகலே போற்றி
ஓம் அறுகினை உவப்பாய் போற்றி

ஓம் அறுமுகன் அண்ணா போற்றி
ஓம் அமுதமே அனையாய் போற்றி

ஓம் அரசடி அமர்வாய் போற்றி
ஓம் அன்பர்கள் அகத்தாய் போற்றி

ஓம் அரன் முதன்மகனே போற்றி
ஓம் ஆனைமா முகனே போற்றி
ஓம் ஆதாரப் பொருளே போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி

ஓம் ஆருயிர்த் துணையே போற்றி
ஓம் ஆறணி சடையாய் போற்றி
ஓம் ஆக்கமே தருவாய் போற்றி
ஓம் ஆரண முதலே போற்றி

ஓம் ஆதியாம் தேவே போற்றி
ஓம் ஆகம முடியே போற்றி
ஓம் இந்தொழிற் சடையாய் போற்றி
ஓம் இலங்குமோர் கொம்பாய் போற்றி

ஓம் இருள்கடி சுடரே போற்றி
ஓம் இதயத்துள் இனிப்பாய் போற்றி
ஓம் இடரெல்லாம் களைவாய் போற்றி
ஓம் இளயானை முகத்தாய் போற்றி

ஓம் இச்சைகள் அளிப்பாய் போற்றி 
ஓம் இன்னல்கள் ஒழிப்பாய் போற்றி 
ஓம் இமயவர் தலைவா போற்றி 
ஓம் ஈசனார் மகனே போற்றி

ஓம் ஈடிலாக் களிறே போற்றி 
ஓம் ஈண்டுவார் நிழலே போற்றி 
ஓம் ஈசானத் திறையே போற்றி 
ஓம் ஈறிலா முதலோய் போற்றி

ஓம் ஈந்திடும் கரத்தாய் போற்றி 
ஓம் ஈசன்தன் குமரா போற்றி 
ஓம் ஈசையாள் மகனே போற்றி 
ஓம் ஈரநெஞ்சுடையாய் போற்றி

ஓம் உம்பர்கோனே போற்றி 
ஓம் உலகினர் புகலே போற்றி 
ஓம் உமைதிரு மகனே போற்றி 
ஓம் உருவினில் மலையே போற்றி

ஓம் உளம் அருட் கனியே போற்றி 
ஓம் உயர்ந்தவர் துணையே போற்றி 
ஓம் உளவளம் தருவாய் போற்றி 
ஓம் உதிரச் செந்நிறத்தாய் போற்றி

ஓம் உன்னிய முடிப்பாய் போற்றி 
ஓம் ஊரெல்லாம் உறைவாய் போற்றி 
ஓம் ஊழ்த்தெழும் உணர்வே போற்றி 
ஓம் ஊனங்கள் நிறைப்பாய் போற்றி

ஓம் ஊக்கங்கள் நிறைப்பாய் போற்றி
ஓம் ஊர்க்குளக் கரையாய் போற்றி 
ஓம் ஊங்கார நாதா போற்றி 
ஓம் ஊழிகள் கடந்தாய் போற்றி

ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி 
ஓம் ஊர்மதிச் சடையாய் போற்றி 
ஓம் எருக்கினை அணிவாய் போற்றி 
ஓம் எங்கனும் இருப்பாய் போற்றி

ஓம் எல்லாமும் ஆனாய் போற்றி 
ஓம் எல்லோர்க்கும் தலைவா போற்றி 
ஓம் எண்குண வடிவே போற்றி
ஓம் எல்லையில்லா அருளே போற்றி

ஓம் எழில்நுதற் கண்ணாய் போற்றி 
ஓம் என்றுமே உள்ளாய் போற்றி
ஓம் எம்பரா போற்றி போற்றி 
ஓம் ஏவல்கள் களைவாய் போற்றி

ஓம் ஏந்தொழிற் கொம்பா போற்றி
ஓம் ஏக்கங்கள் தவிர்ப்பாய் போற்றி
ஓம் ஏதங்கள் கடிவாய் போற்றி
ஓம் ஏர்முனைத் தேவே போற்றி

ஓம் ஏகம்பர் மகனே போற்றி
ஓம் ஏதிலார் துணையே போற்றி
ஓம் ஏரானை முகத்தாய் போற்றி
ஓம் ஏந்தலே போற்றி போற்றி

ஓம் ஐங்காரச் செல்வா போற்றி
ஓம் ஐம்பூத முதலே போற்றி
ஓம் ஐமுக அய்யா போற்றி
ஓம் ஐயம் ஒழி கணேசா போற்றி

ஓம் ஐந்நிலத் தேவே போற்றி
ஓம் ஐம்புலன் கடிவாய் போற்றி
ஓம் ஐவனம் தருவாய் போற்றி
ஓம் ஐயைதன் மகனே போற்றி

ஓம் ஐயனே போற்றி போற்றி
ஓம் ஒப்பிலா ஒருவ போற்றி
ஓம் ஒள்ளிய வடிவே போற்றி
ஓம் ஒற்றைவெண் கொம்பாய் போற்றி

ஓம் ஒளிநுதற் கண்ணாய் போற்றி
ஓம் ஓட்பங்கள் தருவாய் போற்றி
ஓம் ஒலியெலாம் ஆவாய் போற்றி
ஓம் ஒழுகுமும் மதத்தாய் போற்றி

ஓம் ஒண்பதக் கழலாய் போற்றி
ஓம் ஒளிர்ஞானக் களிறே போற்றி போற்றி
ஓம் ஓங்கார வடிவே போற்றி
ஓம் ஓதுவார் மனத்தாய் போற்றி

ஓம் ஓங்குமோர் எழிலாய் போற்றி
ஓம் ஓங்குபேர் அருளாய் போற்றி
ஓம் ஓமெனும் பொருளே போற்றி
ஓம் ஓடோடி வருவாய் போற்றி

ஓம் ஓதாதே உணர்ந்தாய் போற்றி
ஓம் ஓய்விலாத் தேவே போற்றி
ஓம் ஓங்கார முதல்வா போற்றி 
ஓம் கணபதித் தேவா போற்றி

ஓம் கதிதரும் இறையே போற்றி
ஓம் கங்காளன் மகனே போற்றி
ஓம் கன்னியாள் சுதனே போற்றி
ஓம் கடுக்கையந் தாராய் போற்றி

ஓம் கணேசனே காப்பாய் போற்றி
ஓம் கவலைகள் தீர்ப்பாய் போற்றி
ஓம் கங்கையாள் புதல்வா போற்றி
ஓம் கணநாதா போற்றி போற்றி

ஓம் மூவுலகாளும் முதல்வா போற்றி!
ஓம் முக்குணங்கடந்த நாதா போற்றி!
ஓம் கற்பகக் களிரே குருவே போற்றி!
ஓம் நாலிறு புயத்தாய் நாயகா போற்றி!

ஓம் நாற்றிசை போற்றும் தலைவா போற்றி!
ஓம் நானற்றவிடமே நிற்பாய் போற்றி!
ஓம் அல்லல் களையும் அருளே போற்றி!
ஓம் எல்லாம் வல்ல இறைவா போற்றி!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே போற்றி!
சிறந்தொளிரும் மங்கள சொரூபனே போற்றி!
ஓவறு சித்திகளனைத்தும் உதவுவோய் போற்றி!
ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்

மேவியொளிர் சரணே போற்றி! 
மததாரை விரவியதிண் கபோலனே போற்றி!
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

3.“விநாயகா போற்றி போற்றி”

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் போற்றி!

பூமெனும் பொருள் தொறும் பொலிவாய் போற்றி
அகரம் முதலென ஆனாய் போற்றி!
அகர உகர ஆதி போற்றி! 

மகரமாய் நின்ற வானவ போற்றி!
பகர்முன்னவாம் பரமே போற்றி! போற்றி!

மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய் போற்றி!
கண்ணுள் மணியாய்க் கலந்தாய் போற்றி!

நீர்தீக் காற்றாய் நின்றாய் போற்றி! 
கார் குளிராகக் கணிந்தாய் போற்றி!
பகலவன் நிலவாய்ப் பரந்தாய் போற்றி!
நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி! போற்றி!

மழைபொழி இமயவல்லி சேய் போற்றி!

தழைசெவி எண்தோள் தலைவ போற்றி!
திங்கட் சடையோன் செல்வ போற்றி!
எங்கட்கு அருளும் இறைவா போற்றி!

ஆறுமுகச் செவ்வேட்கு அண்ணா போற்றி!
சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி! போற்றி!

செம்பொன் மேனிச் செம்மால் போற்றி!
உம்பர் போற்றும் உம்பல் போற்றி!

பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ போற்றி!
எண்ணிய எண்ணியாங் கிசைப்பாய் போற்றி!
அப்பமும் அவலும் கப்புவாய் போற்றி!
முப்புரி நூல் மார்பு அப்பா போற்றி! போற்றி!

எள்ளுருண்டை பொரி ஏற்போய் போற்றி
தள்ளுறு தெவிட்டாத் தேனே போற்றி!
மூவர் மொழியிடம் மொழிந்தாய் போற்றி
தேவர்க்கு அரிய தேவா போற்றி!

மாலுக்கு அருளிய மதகரி போற்றி!
பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி! போற்றி!

பாரதம் எழுதிய பரூஉக்கர போற்றி!
மாரதம் அச்சொடி மதவலி போற்றி!

மாங்கனி அரன்பால் வாங்கினோய் போற்றி!
ஈங்கினி எம்பால் எழுந்தருள் போற்றி!
கரும்பாயிரங்கொள் கள்வா போற்றி!
அரும்பொருளே எம் ஐயா போற்றி! போற்றி!

திணைபால் கடந்த தேவே போற்றி!

புனையாய் இடர்க்கடல் போக்குவோய் போற்றி!
பேழை வயிற்றுப் பெம்மன் போற்றி!
ஏழைக்கிரங்கும் எம்மிறை போற்றி!

அடியவர் உள்ளம் அமர்ந்தாய் போற்றி!
அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி! போற்றி!

திருநீற்றொளிசேர் செம்மால் போற்றி!
இருவேறுருவ ஈசா போற்றி!

உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி!
கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி!
நம்பியாண்டார்க்கருள் நல்லாய் போற்றி!
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!

உருகுவோருள்ளத் தொளியே போற்றி!
பெருமருள் சுரக்கும் பெருமான் போற்றி!
தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி!
உம்பர்கட்கரசே ஒருவ போற்றி!

பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய் போற்றி!
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!

மூவாச் சாவா முத்தா போற்றி!
ஆவா எங்களுக்கு அருள்வாய் போற்றி!

தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய் போற்றி!
அமிழ்தாய் எம் அகத்தானாய் போற்றி!
மழவிளங்களிறே மணியே போற்றி!
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!

பெருச்சாளியூரும் பிரானே போற்றி!

நரிச்செயலார் பால் நண்ணாய் போற்றி!
செந்தாமரைத்தாள் தேவா போற்றி!
நந்தா மணியே நாயக போற்றி!

இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி! 
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!

ஆங்காரம்முளை அறுப்பாய் போற்றி!
பாங்கார் இன்பப் பராபர போற்றி!

கற்றவர் விழுங்கும் கனியே போற்றி!
மற்றவர் காணாமலையே போற்றி!
சொல்லொடு பொருளின் தொடர்பே போற்றி!

கல்லும் கரைக்க வல்லோய் போற்றி! போற்றி!
தொந்தி வயிற்றுத் தந்தி போற்றி!
முந்திய பொருட்கும் முந்தியோய் போற்றி!

ஐந்துகையுடைய ஐய போற்றி!

ஐந்தொழில் ஆற்றும் அமர போற்றி!

அருளாய் அருள்வாய் ஆண்டவ போற்றி!
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!

கயமுக அசுரனைக் காய்ந்தாய் போற்றி!
மயலறும் இன்ப வாழ்வே போற்றி!

ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் போற்றி!
பானை வயிற்றுப் பரமே போற்றி!
கடம்பொழி யானைக் கன்றே போற்றி!
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!
பாலொடு தேனும் பருகுவோய் போற்றி!
மேலொடு கீழாய் மிளிர்வாய் போற்றி!
எய்ப்பில் வைப்பாய் இருந்தோய் போற்றி!
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் போற்றி!

நால்லார்க் கெட்டும் நாதா போற்றி!
பொல்லா மணியே புராதன போற்றி! போற்றி!

அறிவின் வரம்பை அகன்றாய் போற்றி!
குறிகுணங் கடந்த குன்றே போற்றி!

எட்டு வான் குணத்தெந்தாய் போற்றி!
கட்டறு களிற்று முகத்தோய் போற்றி!
மலரில் மணமாய் வளர்ந்தாய் போற்றி!
அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!போற்றி!

ஓங்கார முகத்தொருத்தல் போற்றி!    
ஏங்கா துயிர்க்கருள் இயற்கை போற்றி!
எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய் போற்றி!
பண்ணூம் எழுத்துமாய் பரந்தாய் போற்றி!

அருவே உருவே அருவுருவே போற்றி!
பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி! போற்றி!

புகர்முகக் களிற்றுப் புண்ணிய போற்றி!
அகலிடம் நிறைய அமர்ந்தோய் போற்றி!

செல்வம் அருள்க தேவா போற்றி!
நல்லன எமக்கருள் நாயக போற்றி!
ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி
காக்க எங்களை உன் கழலிணை போற்றி! போற்றியே!

4.“108 போற்றி”

ஓம் அங்குச தாரா போற்றி!

ஓம் அரவ நாணோய் போற்றி!
ஓம் அர்க்க விநாயக போற்றி!
ஓம் அன்பு கணபதி போற்றி!

ஓம் ஆகு வாகனா போற்றி!
ஓம் ஆனை மாமுகனே போற்றி!
ஓம் இளம் பிறை அணிந்தோய் போற்றி!
ஓம் ஈசன் மைந்தனே போற்றி!

ஓம் உச்சிப் பிள்ளையே போற்றி!
ஓம் உடுண்டி விநாயகா போற்றி!
ஓம் ஊர்த்தவ கணபதியே போற்றி!
ஓம் எண்கர விநாயகா போற்றி!

ஓம் ஏக தந்த விநாயகா போற்றி!
ஓம் ஐங்கர விநாயகா போற்றி!
ஓம் கண நாயகா போற்றி!
ஓம் கணபதியே போற்றி!

ஓம் கரிமுக விநாயகா போற்றி!
ஓம் கருணை விநாயகா போற்றி!
ஓம் கணேசா போற்றி!
ஓம் கண்டா கணபதி போற்றி!

ஓம் கமல விநாயகா போற்றி!
ஓம் கஜ கன்ன விநாயகா போற்றி!
ஓம் குருந்தாள் விநாயகா போற்றி!
ஓம் கூத்தாடும் பிள்ளையே போற்றி!

ஓம் கௌரி மைந்தா போற்றி!
ஓம் சக்தி விநாயகா போற்றி!
ஓம் சங்கரன் மைந்தா போற்றி!
ஓம் சங்கரி மைந்தா போற்றி!

ஓம் சங்குபாணி விநாயகா போற்றி!
ஓம் சதுர் முக கணபதியே போற்றி!
ஓம் சந்தான விநாயகா போற்றி!
ஓம் சித்தி விநாயகா போற்றி!

ஓம் சித்தி புத்தி விநாயகா போற்றி!
ஓம் சிந்தாமணி விநாயகா போற்றி! 
ஓம் சிந்தூர விநாயகா போற்றி!
ஓம் சிவசக்தி விநாயகா போற்றி!

ஓம் சுந்திர விநாயகா போற்றி!
ஓம் சுமுக விநாயகா போற்றி!
ஓம் சுமங்கல விநாயகா போற்றி!
ஓம் செல்வ விநாயகா போற்றி!

ஓம் ஞான விநாயகா போற்றி!
ஓம் தந்திமுக விநாயகா போற்றி!
ஓம் தத்துவ விநாயகா போற்றி!
ஓம் தருண கணபதியே போற்றி!

ஓம் திரிமுக விநாயகா போற்றி!
ஓம் துங்கக் கரிமுகனே போற்றி!
ஓம் துண்டி விநாயகா போற்றி!
ஓம் துன்முக விநாயகா போற்றி!

ஓம் தும்பிக்கை நாதா போற்றி!
ஓம் துளைக்கர விநாயகா போற்றி!
ஓம் தேசிய விநாயகா போற்றி!
ஓம் தொப்பக் கணபதியே போற்றி!

ஓம் நர்த்தன விநாயகா போற்றி!
ஓம் நவசக்தி விநாயகா போற்றி!
ஓம் நித்திய கணபதியே போற்றி!
ஓம் பஞ்சமுக விநாயகா போற்றி!

ஓம் பக்தி விநாயகா போற்றி!
ஓம் பஞ்சபூத விநாயகா போற்றி!
ஓம் பாகீரத விநாயகா போற்றி!
ஓம் பாசாங்குச விநாயகா போற்றி!

ஓம் பாதாள விநாயகா போற்றி!
ஓம் பார்வதி மைந்தா போற்றி!
ஓம் பாலசந்திர விநாயகா போற்றி!
ஓம் பால விநாயகா போற்றி!

ஓம் பிரசன்ன விநாயகா போற்றி!
ஓம் பிரணவப் பொருளே போற்றி!
ஓம் பிள்ளையாரே போற்றி!
ஓம் பிறையெயிற்றோனே போற்றி!

ஓம் புண்ணியநாதா போற்றி!
ஓம் பூத விநாயகா போற்றி!
ஓம் பெருச்சாளி வாகனா போற்றி!
ஓம் பொல்லாப் பிள்ளையே போற்றி!

ஓம் மகா கணபதி போற்றி!
ஓம் மங்கள கணபதி போற்றி!
ஓம் மந்திர விநாயகா போற்றி!
ஓம் மணக்குள விநாயகா போற்றி!

ஓம் மயூர விநாயகா போற்றி!
ஓம் முக்கண் விநாயகா போற்றி!
ஓம் முக்குருணி விநாயகா போற்றி!
ஓம் முச்சந்தி விநாயகா போற்றி!

ஓம் முத்து கணபதியே போற்றி!
ஓம் முழுமுதற் கோமானே போற்றி!
ஓம் மூலப் பொருளே போற்றி!
ஓம் மூஷிக வாகனா போற்றி!

ஓம் மோதக விநாயகா போற்றி!
ஓம் யாணை முகத்தனே போற்றி!
ஓம் ரத்தின விநாயகா போற்றி!
ஓம் ராஜகணபதியே போற்றி!

ஓம் லம்போதர கணபதியேபோற்றி!
ஓம் வல்லபை விநாயகா போற்றி!
ஓம் வரசக்தி விநாயகா போற்றி!
ஓம் வன்னி விநாயகா போற்றி!

ஓம் வக்கிர துண்ட விநாயகா போற்றி!
ஓம் வாதாபி கணபதியே போற்றி!
ஓம் விகட கணபதியே போற்றி!
ஓம் விக்கின விநாயகா போற்றி!

ஓம் விக்னேஸ்வரா போற்றி!
ஓம் வினை தீர்க்கும் விநாயகா போற்றி!
ஓம் விஷ்னு விநாயகா போற்றி!
ஓம் வீம விநாயகா போற்றி!

ஓம் வெற்றி விநாயகா போற்றி!
ஓம் வேத விநாயகா போற்றி!
ஓம் வீர கணபதியே போற்றி!
ஓம் வைர விநாயகா போற்றி!

ஓம் வரத விநாயகா போற்றி!
ஓம் ஜோதி விநாயகா போற்றி!
ஓம் விஜய விநாயகா போற்றி!
ஓம் வினைதீர் விநாயகா போற்றி!

5.“108 போற்றி”

ஓம் ஓம் எனும் பொருளே ஒப்பிலாப் போற்றி!

ஓம் உயர்வற உயர்நலப் புகலே போற்றி!
ஓம் எண்தோனவனின் செல்வா போற்றி!
ஓம் இமயச் செல்விமகனே போற்றி!

ஓம் காங்கேயன் மகிழ் தமையா போற்றி!
ஓம் கற்பக மூர்த்தியாம் கடவுளே போற்றி!

ஓம் வேழமுகத்துக் கடவுளே போற்றி!
ஓம் பேழைபெரு வயிறுடையாய் போற்றி!

ஓம் இருகையுடைய எந்தாய் போற்றி!
ஓம் ஒருகை லிங்கம் எந்தினாய் போற்றி!
ஓம் மணம்விரி மலர்த்தொடை சூடினாய் போற்றி!
ஓம் மாமதச் சிந்தூரக் களபமே போற்றி!

ஓம் மதிப்பவர் மனத்துறு மணியே போற்றி!

ஓம் நெடும்பொறிற் சரணம் அடைந்தோம் போற்றி!
ஓம் நெஞ்சத்து ஒடுங்கும் நீரினாய் போற்றி!
ஓம் ஆரண நுண்பொருள் ஆனாய் போற்றி!

ஓம் ஆட்கொண்டருளும் அரனே போற்றி!
ஓம் பக்தர் சித்தத்தை அறியுமானாய் போற்றி!

ஓம் பரில சேடம் அளிப்பாய் போற்றி!
ஓம் எண்ணிய எண்ணியாங்கு ஈவாய் போற்றி!

ஓம் தண்கடமாமுகத் தலைவா போற்றி!
ஓம் முக்கட் செம்மேனியெனே போற்றி!
ஓம் முக்கட் பரமாம் முதல்வா போற்றி!

ஓம் வரம் எல்லாம் தரு வள்ளல் போற்றி!
ஓம் பரமன் ஆகிய கணேசா போற்றி!
ஓம் பாரதம் எழுதி பரூஉக்கர போற்றி!

ஓம் மாரத அச்சொடி மதவலி போற்றி!

ஓம் சித்தி யானை தன் பொற்பதம் போற்றி!

ஓம் சச்சிதானந்த போகமே போற்றி!
ஓம் காரணனே எம் கணபதி போற்றி!

ஓம் கருணை முதிர் இளங்கன்றே போற்றி!
ஓம் கரகம் கவிழ்த்த கரியே போற்றி!

ஓம் கயமா முகனைக் கடிந்தாய் போற்றி!
ஓம் விக்ன விநாயகா விமலா போற்றி!
ஓம் எனை நினைந்தடிமை கொள்வாய் போற்றி!
ஓம் உனை நான் நினைய அருள்வாய் போற்றி!

ஓம் அடியார் உள்ளக் கோயிலாய் போற்றி!

ஓம் அறக் கருணை புரி அழகா போற்றி!
ஓம் பொருள் நான்கினையும் தருவாய் போற்றி!
ஓம் புகுந்தென் உள்ளம் பிரியாய் போற்றி!

ஓம் மண்ணின் ஐங்குணம் ஆனாய் போற்றி!
ஓம் நீரிடை நான்காய் நின்றாய் போற்றி!

ஓம் தீயின் மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
ஓம் வளியின் இரண்டாய் வதிந்தாய் போற்றி!

ஓம் வெளியின் ஒன்றாய் விளங்கினாய் போற்றி!
ஓம் உலகனைத்துமாய் ஒளிர்வாய் போற்றி!
ஓம் உவந்தன் சரணம் அடைந்தோம் போற்றி!
ஓம் செய்வினை முதலும் நீயே போற்றி!

ஓம் செயப்படு பொருளும் நீயே போற்றி!
ஓம் சொந்தாமரைப் பூம்பாதம் போற்றி!
ஓம் அற்புதக் கற்பகக் களிறே போற்றி!
ஓம் முப்பழம் நுகரும் அப்பனே போற்றி!

ஓம் இப்பொழுது என்னை ஆட்கொள் போற்றி!
ஓம் தாயாய் எனக்கும் எழுந்தருள் போற்றி!

ஓம் பொருந்தவே வந்தேன் உளம்புகு போற்றி!
ஓம் குருவடிவாகி ஆட்கொள் போற்றி!

ஓம் திருவடி வைத்தே அருள்வாய் போற்றி!
ஓம் வாடா வகைதான் வழங்குக போற்றி!
ஓம் கோடயுதத்தால் வினைதீர் போற்றி!
ஓம் உவட்டா உபதேசம் புகட்டுக போற்றி!

ஓம் தெவிட்டாத ஞானத்தெளி அருள் போற்றி!

ஓம் இன்புறு கருணையின் இனிதருள் போற்றி!
ஓம் இருவினை தம்மை அறுப்பாய் போற்றி!
ஓம் இருள் கடிந்தென்னை ஏந்துக போற்றி!

ஓம் நலம் ஒரு நான்கும் தந்தருள் போற்றி!
ஓம் மலம் ஒரு மூன்றின் மயக்கறு போற்றி!

ஓம் எண் முகமாம் இனிதருள் போற்றி!
ஓம் இருத்தி முத்தி இனிதருள் போற்றி!

ஓம் என்னை அறிவித்து எனக்கருள் போற்றி!
ஓம் முன்னை வினையின் முதல்களைப் போற்றி!
ஓம் அருள்தரும் ஆனந்தத்துள் அழுத்துக போற்றி!

ஓம் அல்லல் களையும் அரசே போற்றி!
ஓம் அருள்வழி காட்டி ஆட்கொள் போற்றி!
ஓம் தத்துவ நிலையைத் தருவாய் போற்றி!

ஓம் வித்தக விநாயக விரை கழல் போற்றி!

ஓம் பால்நிலா மருப்புக் கரத்தானே போற்றி!

ஓம் பாசாங்குசப் படை தாங்குவாய் போற்றி!
ஓம் கரிசினேற் இரண்டு கரத்தனே போற்றி!

ஓம் காப்பாய் மூலப்பொருளே போற்றி!

ஓம் பிறர்க்கெலாம் புகலிடம் ஆளாய் போற்றி!
ஓம் புகல்தனக்குஇல்லா பொருளே போற்றி!
ஓம் வித்தைகள் பிறக்கும் இடமே போற்றி!

ஓம் விக்கின சமர்த்த விநாயகர் போற்றி!

ஓம் தம்பி தனக்காக வனத்தணைந்தாய் போற்றி!

ஓம் தாதை வலத்தால் அருள் கைக் கனியோய் போற்றி!
ஓம் அன்பர் தமக்கான நிலைப் பொருளே போற்றி!
ஓம் ஐந்துகரத்தனை முகப்பெருமாள் போற்றி!
ஓம் நம்பியாண்டார்க்கு அருள் நலமே போற்றி!

ஓம் கற்பகமே என் கருத்தே போற்றி!
ஓம் கடைகண் அருள் நீ தருவாய் போற்றி!

ஓம் தடையிலாது என் செயல் முடிப்பாய் போற்றி!
ஓம் எம்மை தஞ்சமாய் ஏற்பாய் போற்றி!

ஓம் எம்பால் அன்பே இனிதருள் போற்றி!
ஓம் ஏழை எமக்கு அருள் ஈவாய் போற்றி!
ஓம் எய்ப்பினில் வைப்பாய் இருப்பாய் போற்றி!
ஓம் விழையும் நலங்கள் தருவாய் போற்றி!

ஓம் தழையும் நல் இன்பங்கள் தருவாய் போற்றி!
ஓம் தனக்கு ஒப்பில்லாத தலைவா போற்றி!
ஓம் எனக்கு அருள் தருவாய் இனியா போற்றி!
ஓம் நூறு வயதும் தருவாய் போற்றி!

ஓம் நவக்கிரக தோஷங்கள் நீக்குவாய் போற்றி!
ஓம் பேறுகள் யாவும் தருவாய் போற்றி!

ஓம் விண்மழை தந்து களிப்பாய் போற்றி!
ஓம் கண்ணிய நலமே காப்பாய்போற்றி!

ஓம் ஞாலத் துயர்கள் தீர்ப்பாய் போற்றி!
ஓம் கோல நல் வாழ்வே குறிப்பாய் போற்றி!
ஓம் ஆற்றல் நல்ல வழி அருள்வாய் போற்றி!
ஓம் போற்றி! போற்றி! உன் அடைக்கலம் போற்றி!

6.“ஜய ஜய கணபதி”

சிந்தித்தவர்கருள் கணபதி ஜயஜய

சீரிய ஆனைக்கன்றே ஜயஜய

அன்புடை அமரர்கள் காப்பாய் ஜயஜய

ஆவித் துணையே கணபதி ஜயஜய

இண்டைச் சடைமுடி இறைவா ஜயஜய

ஈசன் தந்தருள் மகனே ஜயஜய
உன்னிய கருமம் முடிப்பாய் ஜயஜய
ஊர்த்துவ சக்தி உகந்தாய் ஜயஜய

எம்பெருமானே இறைவா ஜயஜய
ஏழுலகுந்தொழ நின்றாய் ஜயஜய
ஐயா கணபதி நம்பியே ஜயஜய
ஒற்றை மருப்புடை வித்தகா ஜயஜய

ஓங்கிய ஆனைக் கன்றே ஜயஜய
ஒளவிய மில்லா அருளே ஜயஜய
அக்கரவஸ்த்து ஆனவா ஜயஜய

கணபதி என்வினை களைவாய் ஜயஜய

ஙப்போல் மழுவொன்றேந்தியோய் ஜயஜய
சங்கரன் மகனே சதுரா ஜயஜய
ஞய நம்பினர்பாலாடியே ஜயஜய
இடம்படு விக்கின விநாயகா ஜயஜய

இணங்கிய பிள்ளைகள் தலைவா ஜயஜய

தத்துவ மறைதெரி வித்தகா ஜயஜய
நன்னெறி விக்கின விநாயக ஜயஜய 
பள்ளியிலுறைதரும் பிள்ளாய் ஜயஜய

மன்றுளாடும் மணியே ஜயஜய

இயங்கிய ஞானக் குன்றே ஜயஜய
அரவக் கிண்கிணி ஆர்ப்பாய் ஜயஜய
இலகக் கொம்பொன்றேந்தினோய் ஜயஜய

வஞ்சனை பலவும் தீர்ப்பாய் ஜயஜய
அழகிய ஆனைக்கன்றே ஜயஜய

இளமத யாணை முகத்தாய் ஜயஜய
இரகுபதி விக்கின விநாயகா ஜயஜய
அனந்தலோடாதியில் அடிதொழ அருளே!

7.“பிள்ளையார் துதி”

பிள்ளையார்! பிள்ளையார்! பெரிய தொந்தி பிள்ளையார்!

பையப்பைய நடந்துவந்து பழம்பறித்த பிள்ளையார்!
செல்வம் தரும் பிள்ளையார்! சிவல்புரியின் பிள்ளையார்!
சங்கரனின் மூத்தமகன் சாமிநாதப் பிள்ளையார்!

வேலவனை வழியனுப்பி வெற்றிதரும் பிள்ளையார்!
வீடுவந்தவுடன் விருந்து வைக்கும் பிள்ளையார்!
குள்ளகுள்ள பிள்ளையார்! குண்டுவயத்து பிள்ளையார்!
குட்டிகட்டி உக்கிபோட்டு கும்பிடலாம் பிள்ளையார்!

கருணையுள்ளபிள்ளையார்! கண்மாய்க்கரை பிள்ளையார்!
காலமெல்லாம் காத்திருந்து கணக்கெழுதும் பிள்ளையார்!
ஆற்றங்கரைப் பிள்ளையார்! ஐந்துகர பிள்ளையார்!
அன்னையைப்போல் பெண்பார்க்கும் ஆணைமுக பிள்ளையார்!

சித்திதரும் பிள்ளையார்! முக்திதரும் பிள்ளையார்!

செந்தில் வடிவேலனுக்கு முந்திவந்த பிள்ளையார்!
பரம் பொருளாம் பிள்ளையார்! பரமன் மகன் பிள்ளையார்!
பழநி சென்று வந்தபேர்க்கு பலன் கொடுக்கும் பிள்ளையார்!

பிள்ளையார்பிள்ளையார்! பெருமைவாய்ந்த பிள்ளையார்!
பிள்ளையார்! பிள்ளையார்! அருளைத்தரும் பிள்ளையார்!
ஆற்றங்கரை ஓரத்திலே அரசமரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்! வினைகள் தீர்க்கும் பிள்ளையார்!
ஆறுமுக வேலனின் அண்ணனான பிள்ளையார்!
நேருதுன்பம் யாவையும் தீர்த்துவைக்கும் பிள்ளையார்!
மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்
அஞ்செழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார்!

அவல்பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும்
கவலையின்றி உண்ணுவார்! கண்ணைமூடித் தூங்குவார்
கலியுகத்தின் விந்தையைக் காணவேண்டி அனுதினம்
எலிமீதேறி இஷ்டம் போல சுற்றும் பிள்ளையார்!

8.“விநாயகர் சதுர்த்தி” அன்று / தினமும்-- எல்லாச் செயல்களிலும் வெற்றிபெற.

ஓம் எனும் மூல மந்திரத்திற்கு அதிபதியான கணபதியை வணங்குகின்றேன். பூத கணங்களுக்குத் தலைவனாக விளங்குபவரே, இடையூறுகளை இல்லாது செய்பவரே, அழகான நீண்ட துதிக்கை உடையவரே, யானையின் முகங்கொண்டவரே, கங்கா, கௌரி என்ற இரண்டு தாய்களைக் கொண்டவரே, பக்தர்களுக்கு என்றும் குறைவில்லா அருள் பொழிபவரே, ஒரு தந்தம் கொண்டவரே, அழகிய பெரிய யானையின் காதுகளைக் கொண்டவரே, உலக மக்களைக் காக்கும் முதல் கடவுளே, பரமன்-உமாவின் புத்திரரே, உனக்கு எனது வணக்கங்கள். எனது பிரச்சனைகளையெல்லாம் விலக்கி நிம்மதிப் பெருவாழ்வு வாழ வழி காண்பிப்பீராக!  

9.“விநாயகர் கவசம்”-தடைகள் தகரும், எண்ணம் ஈடேறும், நலம்பெற- காசிப முனிவர் பாடியது- மூன்று காலமும்

வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க! 

வாய்ந்தசென்னி அளவுபடா அதிக சவுந்தர தேகம்

மதோத்கடர்தாம் அமர்ந்து காக்க! விளரற

நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க!

புருவந் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க!

தடவிழிகள் பாலசந்திரனார் காக்க!

கவின்வளர் அதரம் கசமுகர் காக்க!

தாலங் கணக்கீரிடர் காக்க!

நவில்சிபுகம் கிரிசை சுதர் காக்க!

நனி வாக்கை விநாயகர்தாம் காக்க!
அவிர்நகை துன்முகர் காக்க!
அள் எழிற் செஞ்செவி பாச பாணி காக்க!

தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி 
நாசியைக் சித்திதார்த்தர் காக்க! காமருபூ 
முகந்தன்னைக் குணேசர் நனி காக்க!
களம் கணேசர் காக்க!

வாமமுறும் இருதோளும் வயங்கு கந்தபூர்வசர் 
தாம் மகிழ்ந்து காக்க! ஏமமுறு மணிமுலை 
விக்கின விநாசர் காக்க! இதயந் தன்னைத் 
தோமகலுங் கணநாதர் காக்க!

அகட்டினைத் துலங்கு ஏரம்பர் காக்க!
பக்கம் இரண்டையும் தராதரர் காக்க! 
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க!

விளங்கிலிங்கம் வியாளபூடணர்தாம் காக்க!

தக்க குய்யந்தன்னை வக்கிரதுண்டர் காக்க! 
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க! 
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க!
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க!

இருபதம் ஏக தந்தர் காக்க! வாழ்கரம் 
க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க! முன்கையை 
வணங்குவார் நோய் ஆழ்தரச்செய் ஆசாபுரகர் காக்க!

கேழ்கிளறும் நகங்கள் விநாயகர் காக்க!

கிழக்கினிற் புத்தீசர் காக்க!
அக்கினியிற் சித்தீசர் காக்க! 
உமாபுத்திரர் தென் திசை காக்க! 
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க!

விக்கினவர்த்தனர் மேற்கென்னுந் திக்கதனிற் காக்க!
வாயுவிற் கசகன்னர் காக்க! 
திகழ்வு தீசி தக்க நிதிபன் காக்க! 
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க!

ஏகதந்தர்பகல் முழுதுங் காக்க! இரவினும் சந்தி
இரண்டன் மாட்டும் ஒகையின் விக்கினகிருது காக்க!
இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினி பேய்
இவையாதி உயிர்த்திறத்தால் வருந்துயரும் 
முடிவிலாத வேகமுறு பிணிபலவும் விலக்கு 
பாசாங்குசர்தாம் விரைந்து காக்க!

மதி,ஞானம், தவம், தானம், மானம், ஒளி, புகழ்,

குலம், வண்சரீரம், முற்றும் பதிவான தனம்,

தானியம், கிருகம், மனைவி, மைந்தர், பயில்

நட்பாதிக் கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க!

காமர் பவுத்திரர் முன்னான விதியாரும்

சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க!

வென்றி,சீவிதம் கபிலர் காக்க!

கரியாதியெலாம் விகடர் காக்க!

என்றிவ்வாறிது தனை முக்காலுமும் ஓதிடின்,

நும்பால் இடையூறென்றும் ஒன்றுறா, முனிவரர்காள்,

அறிமின்கள், யாரொருவர் ஓதினாலும் மன்ற ஆங்கவர்

தேகம் பிணியற வச்சிர தேகமாகி மின்னும்!

10.“ருணஹர விநாயகா தோத்ரம்.”- பதினைந்து எழுத்துக்களை பீஜாட்சர மந்திரமாகக் கொண்ட கணபதியின் இந்த துதி, மகா மந்திரம் போல் சக்தி வாய்ந்தது, தேவகுருவான ஞான பிரகஸ்பதியைப் போல ஞானம் பெறலாம். குபேரனைப்போல தனத்தைப் பெறலாம். பூதபிரேத பிசாசுகளினால் ஏற்படும் பயங்கள் நீங்கும். இது வேதத்திற்கு சமமான துதியாகும். கடன் நீங்கி-அனைத்து வளங்களும் பெற- தினமும் 1முறை/2முறை

செந்தழல் நிறத்தில் உள்ளவரும், இரு கரங்களை உடையவரும், தாமரை மலரிலமர்ந்து அருள்பவரும், பருத்த வயிறையுடையவரும், பிரம்மாதி தேவர்களால் எப்போதும் துதிக்கப்படுபவரும், சித்தர்களால் சூழப்பட்டவருமான சித்தி விநாயகரை துதிக்கின்றேன்.

ஆதியில் பிரும்மாவால் தனது சிருஷ்டித் தொழில் நன்கு நடைபெற கிரமத்துடன் பூஜை செய்யப்பட்ட தெய்வமான பார்வதி புத்ரன், எனது கடன்களிலிருந்து நிவாரணமளிக்கட்டும்.

திரிபுராந்தக வதத்திற்குமுன் தந்தை சம்புவால் முறைப்படி பூஜிக்கப்பட்ட உமாசுதன் என் கடன்களை நசிக்கச் செய்யட்டும்.

மஹிஷாசுர வதத்திற்கு முன்னால் தேவியால் பூஜிக்கப்பட்ட உமாபாலனான கணநாதன் எனது கடன்களை நிவர்த்தி செய்து என்னைக் காப்பாற்றட்டும்.

இரண்யகசிபு போன்ற அசுரர்களை வதம் செய்வதற்கு ஏதுவாக விஷ்ணுவால் அர்ச்சிக்கப்பட்ட தெய்வமான பார்வதி குமரன், எனது கடன் தொல்லையைப் போக்கி என்னைக் காப்பாற்றட்டும்.

தாரகாசுரனை வதம் செய்வதற்காக குமரக் கடவுளால் பூஜிக்கப்பட்ட பெருமைக்குரிய கடவுளான அம்பிகை பாலன் எனது கடன் சுமையை நாசம் செய்யட்டும்.

ஆதியில் காரிய சித்திக்காக சூரிய பகவானால் பூஜை செய்யப்பட்ட தேவனான பார்வதி மைந்தன் என் கடன் தொல்லையைப் போக்கட்டும்.

சந்திரன், ஒளி குன்றாமலிருக்க வேண்டி பூஜித்த இறைவனான உமா மைந்தன் எனக்கு ருணநாசம் செய்து அருளட்டும்.

வேள்விகளைக் காப்பதற்காக விஸ்வாமித்திரரால் பூஜிக்கப்பட்ட பார்வதி குமாரனாகிய தெய்வம், கடன் எனும் இக்கட்டில் இருந்து என்னை விடுதலை செய்யட்டும்.

11.“விநாயகர் அகவல்”- ஒளவையார் அருளியது

சீதக் களபச் செந்தாமரைப்பூம்

பாதச் சிலம்பு பல இசை பாடப்
பொன் அரை ஞானும் பூந்துகில்ஆடையும் 
வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்ப

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழ் ஒளி மார்பும்

சொற்பதம் கடந்த திரிய மெய்ஞான

அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகனனே!
இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டித்

தாயாய்எனக்குத் தான் எழுந்து அருளி 
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே 
திருத்திய முதல் ஐந்து எழுத்தும் தெளிவாய்
பொருந்தவே வந்து என் உளம்தனில் புகுந்து

குரு வடிவாகிக் குவலயம் தன்னில்

திருவடி வைத்துத் திறம் இது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டாஉபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து 

இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து
தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பதுவாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்கிசை நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக்

கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசைபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலதாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முகதூலமும் சதுர்முக சூக்மமும்
எண்முகம் ஆக இனிது எனக்கு அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியட்டு நிலையும் தெரிசனப்படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி 

இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிற்கும் ஒன்று இடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்

எல்லையில்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அனுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட 
வித்தக விநாயகன் விரைகழல் சரணே!

12.“டுண்டி கணபதி துதி”- தடைகள் தகரும், எண்ணம் ஈடேறும், நலம்பெற- ஆதிசங்கரர் பாடியது- தினமும்.

களித்தோர் கையில் மோதகம், நினைத்தோர் முக்தி சாதகம்,

வளைத்து மின்னும் சந்திரன் களித்து வாழும் மத்தகம்,
களத்தவர்க்கே அருள்மழை தழைதுதிக்கை வித்தகன்,
முளைத்தெழும் கயாசூரன் உயிர் குடித்த தற்பரன்,

திளைத்தெழும் தயைக்கடல் முளைத்துதித்த மூத்தவன்,
கிளைத்தெழுந்த இன்னல்கள் துகைத்தெறிந்த தாளவன்,
இளைத்தவர் களைத்தவர்கருள் பொழிந்த காவலன்,
களிப்பளிக்கும் நாயகம் விநாயகன் கழல் சரன்.

வணக்கமற்ற மூடர்கள் பயப்படும் பலத்தவன்,
கணக்கிலாத கதிர்விரி ககன சோதியொத்தவன்
இணக்கமுற்ற உப்பரின் இன்னல் தீர் நலத்தவன்
சுணக்கமுற்ற நல்லவர் விபத்தனுக்கும் வித்தகன்

கணேசுரன் கயேசுரன் தனேசுரன் சுரேசுரன்
பணேசுரன் விளங்குதொந்தி பஞ்சமுக விக்னேஸ்வரன்
கணம்கணம் துயர்மலை பொடிப்பொடிசெய் காவலன்
அணங்கு வல்லபை மகிழ் கணங்கள் நாதன் கழல் சரண்.

அனைத்துயிர்க்கும் நல்லவன், அரக்கரை வெல்லவல்லவன்,
கனைக்கும் யானை முகத்தவன், பருத்த நல்ல வயிற்றவன்,
நினைத்தவர்க்கும் வெற்றிநல்கு பனிப்பிறைத் தலைவன்,
மனதில் எண்ணும் ஆசைகள் முடித்து வைக்கும் தூயவன்,

தனத்தனத் தனாவெனா நடிக்கும் விக்னவிநாயகன்,
சினத்தைவென்ற சீகரன் சயத்தை நல்கு சேகரன்,
வனப்புமிழ் திறத்தவன் நெருப்புமிழ் நிறத்தவன்,
குணக்கடல் தயைக்கடல் இசைக்கடல் கழல் சரண்.

மிடிமை போக்கும் இறையவன், மடமை நீக்கும் மறையவன்,
குடிமை நல்கும் ஆண்டவன், குழந்தை தூய தாண்டவன்,
நடம் இடும் பரன் மகன், நலம் இலார் கொல் ஆண்மகன்,
அடங்கல் அண்ட அடுக்குகள், அடங்கித் தீய்ந்து வேகையில்,

அடங்கொணாமல் ஆடுவான், கடக் கொணாத சோதியான்,
தடக்கை வில் தனஞ்சயன், குடங்கைப் பூசை கொள்ளுவான்
தடங்கடம் மதம் சொரி, தந்தியுன் முகத்தவன்,
தடம் கை ஐங்கரன் பரன், தொடங்கு பூங் கழல் சரண்.

இலங்கு வெள்ளி வெண்பிறை விளங்கு கொம்பு வீரன்,
துலங்கு வெள்ளி மாமலை விளங்கரன் சிவன் மகன்,
கலங்கு மன்பர் கண்மழை கணம் விலக்கு தீரமன்
நலங்கொள் நல்லவர் மனம் தினம் விளங்கு தீபப்பொன்

சலங்கு தண்டை கிண்கிணி சரச ரத்ன பாடகம் 
குலங்கு பொற் சிலம்புகள் விளங்கு கால் விநாயகன்
சலங்கொள் மாது கங்கையும் அக்கங்கையாளின் தங்கையும்
மனங்களிக்கும் யானைமன் கனிந்த செங்கழல் சரண்.

மகாகணேச பஞ்ச ரத்னம் அன்புடன் படிப்பவர்
மகா விநாயகன் கழல் நினைந்து பக்தி செய்பவர்
மகா மலர் வளர்மகள் மலைமகள் கலைமகள்
மகா மகேசுரன் அருள் கடைக்கண் பெற்றுப் பூவிலே

சுகாம்ருதம் உடல்நலம் இலக்கியம் செய் வல்லமை
சயாதி நன்மை புத்திரர் சகத்தில் வாழ்வு சொல்வளம்
சிவாநுபூதிச் செல்வராய்ச் சிறந்த ஞானம் உற்று நல்
மகா கணேசர் பாதமே அடைந்து வாழ்வர் மானிடர்.

13.“ஸ்ரீகணேச புஜங்கம்” - அருள் பெற -ஆதிசங்கரர்

கணகணவென ஒலிசெய்மணி இசையினில்

கவினுறு கற்பகக் கணபதி களிப்பவர் 
மனநிறை மதகரி இருசெவி முறமென
மகிழ்வுறு தாண்டவம் ஏற்புற நடிப்பவர் 
பெருவயி றதனிடை அரவினை அணியென
பெருமையில் உரிமையில் அருமையா யணிபவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.

ஒலியில்வலிபெறும் தெளிவுறு வீணையின்
ஒலியினை ஒடுக்கிய மலர்முகம் உடையவர்
நவமுடன் சிறிதசை துதிக்கையின் நுனியில்
உளநிறை மாதுளங் கனியினை உடையவர்
புழை செவி வழிகிற மதமழை நறுமணம்
புணர்மகிழ் வண்டினப் பெருந்தொகை உடையவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.

இளங்கதிர் செம்மலர் இனைவுறு செம்மணி
துலங்கிய பூந்தளிர் அனைய நல் ஒளியினர்
விளங்கிய ஒருதனி தானெனத் தனித்தவர்
இலங்கிடு பெருவயிறொருபுடை சாய்ந்துபின்
வரம்தரத் தொங்கிட வளை துதிக்கையொடு
திறம்பெறு ஒருகோடுடையவர் கணபதி 
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.

பலபல ஒளிபெறு மணிநிறை புனைவுறு
வளமுடை மகுடமும் வளமுடன் அணிபவர்
நலமுடை மௌலியில் மதியதன் கலையினை
அழகென அணியென அழகினுக் கழகெனத்
துலங்கியே பிறவித் தொடர்பினை அழித்திட
விளங்கிய காரண விளைவெனவானவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.

உயர்வுறத் தூக்கிய கொடியெனத் திகழ்வுறு
ஒளிர்துதிக் கையதன் ஆதியில் இலகுறும் 
அயர்வறு புருவ அசைவினில் அழகிய
மகிர்வருள் இணைவிழி மல்கிய பெருமையர்
துயரறு தேவதைத் தோகையர் சாமரம்
துணைகொடு வழிபடும் தூயநற் கணபதி
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன்.

பலமுறைதுடிதுடித் தசைவுறும் கண்ணினை
வலமுற சிவந்திடும் வடிவழகுடையவர்
நலமுறு தயைமுதல் மென்மையும் பெருங்குணம்
இலகிய பலவிதப் பிறவிகள் உடையவர்
உறவென அறமென உரியபல்லீலைகள்
புரிபவர் யோகியர் துதி செய்யும் கணபதி
ஓமெனும் ஓங்காரத் துட்பொருள் ஆனவர்
ஏமமாம் சிவகணத் தலைவரைத் துதிக்கின்றேன்.

ஓங்காரவடிவமே தானெனும் தூயவர்
மாறுபாடற்றவர் முக்குணம்
நீங்கிய ஆனந்த வடிவமே தன்னுரு
நேர்ந்து வேறோரு வற்றவர் யாவரும்
ஏங்கியே அடைந்திடும் சிறப்பிடம் இதுவென
எண்ணிலா வேதமும் தோற்றிய காரணர்
பாங்குடன் தொன்மையும் திறமையும் கொண்டவர்
பண்பாளார் போற்றிடும் அவரையே துதிக்கின்றேன்.

பேரறிவானந்த அமைதியும் உடையவ!
பேசறு அரன்மகன் ஆன எம் இறைவா!
வீறுகொள் லீலைகள் அளவில புரிபவா!
வேறிலை தானென விளங்கிடும் அரியவ!
நீறென உலகழித் தளித்திடும் கருணையே!
நேர்ந்த இவ்வுலகிதன் ஆணியாம் பெரியவ!
மாறிலா மனதுடன் மதகளி உன்றனை
மனமொழி மெய்கொடு வணங்கினேன்!அருளுக!

எங்கனும் நிறைந்தவர் ஈசனின் மகனிவர்
பொங்கிய கருணையர் புகழ்விழை விதனையே
மங்களக் கதிரொளி பரவிடு காலையில்
மனமொழி மெய்களால் துதிப்பவர் எவர்க்கும்
பொங்கிடும் புனலென வாக்கது வாய்க்கும்
புரிந்திடும் வினைவலம் பொலிந்திடும் உண்மை
தங்கியே அருள் தரக் கணபது இருக்கத்
தரணியில் பெறமுடியாததும் உண்டோ!

14.“ஸ்ரீகற்பக விநாயகர்”

அற்புதக் கீர்த்தி வேண்டினேன்! 

ஆனந்த வாழ்க்கை வேண்டினேன்!
நற்பொருள் குவிதல் வேண்டினேன்! 
நலமெலாம்பெருக வேண்டினேன்!

கற்பகமூர்த்தி தெய்வக் களஞ்சியத் 
திருக்கை சென்று பொற்பதம் 
பணிந்து பார்த்தேன்பொய்யில்லை! 

கண்ட உண்மையது!

பிள்ளையார்பட்டி என்னும் 
பேரருள் சுரங்கத்தின் கண்
உள்ளவன் மலையில் பூத்த
உருவத்தின் இயற்கைத் தோன்றல்
தெள்ளிய மனத்தார்க்கு எல்லாம்
திருவருள் வழங்கும் தெய்வம்
கள்ளமில்லா பக்தர் தந்தை
கற்பக மூர்த்தி யன்றோ!

மூலமுதல் ஆனவனே கற்பகமூர்த்தி நீ
முன்வந்து காத்தருள்வாய் கற்பகமூர்த்தி
காலமிது காலமிது கற்பகமூர்த்தி- என்
கவலைகளை தீர்த்தருள்வாய் கற்பகமூர்த்தி

நல்ல நல்ல சேதிவரும் கற்பகமூர்த்தி-மனம்
நாடியது தேடிவரும் கற்பகமூர்த்தி
வல்லமைகள் பொங்கி வர கற்பகமூர்த்தி
வணங்கினேன் வெற்றி தரும் கற்பகமூர்த்தி

வெற்றிதர வருவாயே கற்பகமூர்த்தி-நான் 
வேண்டும் வரம் தந்தருளவாய் கற்பகமூர்த்தி
உற்றதுணை தெய்வமே கற்பகமூர்த்தி-உன்னை
ஓதுவதும் செய்தவமே கற்பகமூர்த்தி.

மங்களம்அனைத்தையும் தந்தருளும் அப்பனே!
மகிமை மிகும் என் ஐயனே!
வாசித்து நேசித்து பூசித்து வருவோரை
வாழ்வித்துவரும் ஈசனே!

சங்கர,சதாசிவ,சடாதரன் மைந்தனே!
சக்தி சிவகாமி மகனே!
தன்னடி பணிந்தாரைத் தலைமேற் சுமந்தருளும்
தயவுடைய மகராசனே!

இங்குயாம் உன்னையே துணையாக நம்பினோம்
எமது குறை யாவும் களைவாய்!
இப்போதும் எப்போதும் தப்பேதும் வாராமல்
எம்மை நீ காத்து வருவாய்!

பங்கய வயல் சூழும் பிள்ளையார் பட்டி வளர்
பரம கருணாமூர்த்தியே!
பதினாறு பேறுகளும் அடியார்கள் பெறுமாறு 
பாலித்தருள் வாழ்த்தியே!

கைத்தல நிறைகணி அப்பமொடு அவல்பொரி
கப்பிய கரிமுகனடி பேணிக்
கற்றிடு அடியவர் புத்தியுலுறைபவ
கற்பகம் என வினை கடிதேகும்

மத்தமும் மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறானை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே!

முத்தமிழ்ழடை வினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவனுறை ரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா!

அத்துயரது கொடு சுப்ரமணி படும்
அப்புன மதனிடை யிபமாகி
அக்குறமகளுடன் சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமானே!

15.“ஸ்ரீகணேச சரணம்”

வித்தகனே விநாயகனே சரணம்!

வேழமுக நாயகனே சரணம்!
தத்துவமே தமிழ் கடவுளே சரணம்!
தாயகத்தின் முழுமுதலே சரணம்!

சத்தியத்தின் சந்நிதியே சரணம்!

தர்மம் காக்கும் சங்கொலியே சரணம்!
உத்தமனே ஓம் உருவே சரணம்!
உலகம் காக்கும் திருவுருவே சரணம்!

கல்லில் வந்த கற்பகமே சரணம்!
காணும் இன்பம் அற்புதமே சரணம்!
வெள்ளைக் கொம்பின் ஒளிமுகமே சரணம்!
வெற்றிதரும் விழிமுகமே சரணம்!

ஞாலம்போற்றும் அருள் நிதியே சரணம்!

நம்பிக்கையின் அதிபதியே சரணம்!
சீலம் மிகு சிலம்பொலியே சரணம்!
செல்வம் தரும் வலம்புரியே சரணம்!

ஆலமரஅகல் விளக்கே சரணம்!
ஆற்றங்கரைப் புகழ் விளக்கே சரணம்!
கோலமிகு குணநிதியே சரணம்!
கும்பிடுவோம் கணபதியே சரணம்!

பாதம் சரணம் சரணம் கணேசா!

பக்தர்கள் தலைவா பார்வதி புதல்வா!
பணிவுடன் வணங்குகின்றோம்
பூஜைக்கு வந்து அருள் புரிவாய் கணேசா!

கற்பகக் கடவுளே கணநாதா!
கதிரவன் நியே புவநேசா!
முத்தமிழ்க் காவலா மும்மூர்த்தி தலைவா!
மூஷிக வாகனப் பெருமானே!

கடலின்அலையும் நீயாவாய்!

கலைகள் திருமகள் நீயாவாய்!
சக்தியும் நீயே! சிவனும் நீயே!
முக்தி விநாயகப் பெருமானே!

ஆயிரத்தெட்டு அண்டங்கட்க்கும்
அடியாக் கெல்லாம் அடியார்க்கும்
அருள்வழுகாட்டி திருவருள் புரிந்து
ஆட்கொள்ளும் அய்யா ஆனைமுகா!

                       ******
சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்
பிரசன்னவதனம் த்யாயேத்
சர்வ விக்நோப சாந்தயே!

 

மூஷிக வாகன மோதக ஹஸ்த.
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்கின விநாயக! பாத நமஸ்தே!

“அரசமர துதி”:--

அரசு:- பிரம்மா, விஷ்னு, சிவன் ஆகியோரின் அம்சம்- தெளிவும், புத்துணர்ச்சியும், முழுமையான சுவாசத்திற்கும் காலை/ மாலை சுற்றும் போது. பிரமஹத்தியால் பீடிக்கப்பட்டவனும், குருவைக் கொன்ற தோஷமுள்ளவனும், பரம தரித்திரனும், தீராப்பிணி உள்ளவனும், இந்த துதியினை தொடர்ந்து ஜபித்து தோஷம் நீங்கி சகல சுகத்தையும் பெற!

விருட்ச ராஜனே! ஆயுள், பலம், கீர்த்தி, காந்தி, குழந்தைகள், பசுக்கள், பொருட்கள், வேதம், புத்தி, மேதமை ஆகிய அனைத்தையும் நீ எனக்கு தந்தருளவேண்டும்.

வருண பகவான் தங்களை நாலா திசையிலும் ரட்சிக்க வேண்டும். தாங்கள் வளர்ந்துள்ள இடத்தில் எப்போதும் மழையிருக்க வேண்டும், தங்களைச் சுற்றி பசுமையான புற்கள் படர்ந்து இருக்க வேண்டும். தங்களுக்கு சுகமுண்டாகட்டும்.

எங்களின் பார்வைக் குறைபாடு, கை நடுக்கம், கெட்ட கனவு, வீண் கவலை, எதிரி பயம் ஆகியவற்றை தாங்கள் தான் போக்க வேண்டும்.

மிகமிக உயர்வானவனும், எல்லாவிதமான பாக்கியங்களையும் அளிக்கின்றவனும், கெட்ட கனவுகளைத் தடுப்பவனும், நல்ல கனவுகளின் பயனை அளிக்கின்றவனுமான அஸ்வத்தமே, பேரரசே தங்களுக்கு என் நமஸ்காரங்கள்.

அடிபாகம் பிரமனின் அம்சமாகவும், நடுவில் விஷ்னுவின் சொரூபமாகவும், நுனியில் சிவனின் வடிவமாகவும், மரங்களின் அரசனாக உள்ளவனுக்கு என் வணக்கங்கள்.

அரசமரமே! பல நூற்றாண்டுகளில் என்னால் சம்பாதிக்கப்பட்ட பாவமூட்டைகளை நீதான் அழிக்க வேண்டும். மரங்களுக்குள் ராஜாவானதாலேயே அரசமரம் என்றழைக்கப் படுபவரே அஸ்வத்தமே! எல்லாச் செல்வங்களையும் எனக்கு அருள வேண்டும்.

எந்த அரசைப் பார்த்தாலே வியாதிகள் போகுமோ, தொட்டால் பாவங்கள் விலகுமோ, எதை நாடினால் வெகுகாலம் வாழலாமோ, அப்படிப்பட்ட அரச மரத்தை வணங்குகின்றேன்.

நல்ல பாக்யசாலியும் பேரழகும் கொண்ட அரச மரமே! நான் வேண்டிடும் அனைத்து நன்மைகளையும் கொடுத்தருள வேண்டுகிறேன், எதிரிகளை வெல்லும் ஆற்றலையும் அருள வேண்டும்.

ஆயுள், மக்கட்செல்வம், பொருள், தானியம், அழகு, சகல செல்வங்கள் யாவற்றையும் கொடுக்க வேண்டும். தேவ சொருபமான அரச மரமே உம்மைச் சரணடைகின்றேன்.

ருக் யஜுர், சாம, அதர்வன வேதங்களின் மொத்த உருவமாகவும், சர்வரூபியாகவும், வேதத்திற்கு காரணமாயும் உள்ள அரச மரமே- நீ எப்பொழுதும் மகரிஷிகளால் போற்றப்படுகின்றாய். உனக்கு என் நமஸ்காரங்கள்.      

                                     ஓம்விக்னேஸ்வராய நமக! 

குருஸ்ரீ பகோரா - சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

o‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’

oஎல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின்       இரகசியம் அல்லவா! அது அற்புத இலக்கணம்.

oசந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த   ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை.

oஉலகின் எந்த ஒரு விஷயமும் காரணமின்றி நடைபெறுவதில்லை!

oமனிதனால் முடியாதது அவனது கடந்த இழந்தகாலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.

oஉனது வாழ்நாள் ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் பற்றி சிந்தித்து என்ன பயன்! இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.

oஉண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான்

oஒரு உயிருக்கு அழுகிய ஒன்று மற்றொன்றுக்கு ஜீவாதாரம்.

o‘அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்’ என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.

“சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880746
All
26880746
Your IP: 3.93.173.205
2024-03-19 16:17

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg