gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சிவன்

Written by

                                       ஓம்சிவாயநமக!

சிவன்- முழுமுதல் காக்கும் கடவுள்
பெருமான்- சைவ சமய நெறிகளின் தலைவன். 
வேறுபெயர்கள்- கயிலைநாதன், சிவபெருமான், சதாசிவம், நமச்சிவாயன், ருத்ரன், ஆலாலகாலன், நீலகண்டன்.
கிரகங்களின் சேர்க்கை நிகழும்போது நீர்நிலைகளில் நீராடுவது ஆயுள்மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஞானம் சேர்த்து அறிவினை விசாலமாக்கும்.

உகந்த நாட்கள்- சிவராத்திரி, மகாசிவராத்திரி, ஆருத்ர தரிசனம், திங்கட்கிழமை, பௌர்ணமி, பிரதோஷ தினங்கள் சிறப்பு, எந்நாளும் வழிபடலாம்.

உகந்த மலர்கள்- தும்பை, செம்பருத்தி, முல்லை, மருது, மல்லி, வில்வம், சங்கு சிறப்பு. தாழம்பூ தவிர மற்ற பூக்களை உபயோகிக்கலாம்.
மகாகும்பமேளா- பொதுவாக சூரியன் மேஷராசிக்கும், குருபகவான்-பிரஹஸ்பதி கும்பராசியிலும் பிரவேசிக்கும் போது கும்பமேளா நடைபெறும். பிரஹஸ்பதி, சூரியன் இரண்டும் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் நாள் மாகா கும்பமேளா நாளாகும். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளிப்பட்ட அமிர்தம் அசுரர்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பெருமாள் எடுத்துக்கொண்டு ஓடினார். 12நாட்கள் (நமக்கு 1நாள் ஒருவருடம்) அசுரர்கள் துரத்தினர். அப்படிச் செல்லும்போது சில துளிகள் கீழே சிந்தின. அவை விழுந்த நான்கு இடம் அலகாபாத்-பிரயாகை (திரிவேணிசங்கமம்), நாசிக் (கோதாவரி), உஜ்ஜயினி (ஷிப்ரா நதி), ஹரித்துவார் (கங்கை). அமுதம் விழுந்த நீர் நிலைகளில் அன்றைய தினம் அமுதம் பொங்குவதாக ஐதீகம். 6 வருடத்திற்கு ஒருமுறை அலஹாபத்தில் நடப்பது அர்த்த கும்பமேளா எனப்படும். 12 வருடங்களுக்கு ஒருமுறை நடப்பது பூர்ண கும்பமேளா. மகா கும்பமேளா என்பது 12 பூர்ண கும்பமேளாக்களுக்கு ஒருமுறை வருவது. இது அலகாபாத்தில் மட்டுமே நடக்கும். அன்றைய தினம் சிவன் குருவாக இருந்து பிரமனுக்கும் தேவர்களுக்கும் உபதேசம் செய்கிறார்.
மகாமகம்- 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசிமாத மகநட்சத்திர நாளில் குருபகவான் சிம்மராசிக்கு வருவார். அன்று புண்ணிய நதிகள் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி ஆகிய அனைத்தும் தங்களின் பாவங்களைப் போக்க கும்பகோணம் மகாமகக் குளத்தில் வந்து நீராடுவர். அன்று அங்கு நீராடல் சிறப்பு. 144 வருடத்திற்கு ஒரு முறை மாமாங்கமாகும்.
மாசிமகம்- மாசிமாதபௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் அமையும். மாசிமாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம். சிம்மராசிக்கு உரிய மகநட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது விசேடம். இறைவனை கடலில் நீராட்டுவது வழக்கம். அடியவர்களும் நீராடி புண்ணியம் சேர்த்தலாகும். அன்றுதான் அம்பிகை அவதரித்த நாளாகும். 
வணங்கும்முறை-  கோவிலுக்கு அருகில் சென்றதும் கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும். கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. உள்ளே சென்றதும் முதலில் துவஜஸ்தம்பம் எனும் கொடிமரத்தின் முன்பு எட்டு அங்கங்களும் தரையில் படும்படி விழுந்து வணங்கி எழவும். நந்தி பகவானின் வாலைப் பக்தியுடன் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளவும். அங்கிருந்தபடியே நந்தியின் கொம்புகளிடையே மூலத்தானத்தில் உள்ள லிங்கப் பெருமானைப் பார்த்து வணங்கவும். கோவிலின் உள்ளே இடதுபுறம் இருக்கும் விநாயகரை வணங்கி கருவரைக்குச் செல்லவும். வழியில் தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றி அங்கிருந்தபடியே அதை இறைவனுக்கு காட்டி பின் அதற்குரிய இடத்தில் வைக்கவும். ஆண்கள் மேலாடை இல்லாமல் தரிசனம் செய்வது சிறப்பாகும். கருவறையில் இடப்பக்கம் ஆண்களும் வலது புறம் பெண்களும் தரிசனம் செய்தல் வேண்டும். 
இறைவனுக்கு நெய்வேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத் தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். நீங்கள் கொண்டுவந்த பழங்கள், பூக்கள் மற்றும் அர்ச்சனைக்குரிய பொருள்களை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு அமைதியாக இறைவனின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டிருங்கள். அர்ச்சகர் மந்திரங்கள் சொல்லி மணி ஒலி எழுப்பும்போது கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து மனதாற வணங்குங்கள். ஆராதனை செய்த தீபத்தை ஏற்று திருநீறு பெற்று நமசிவாயா எனச்சொல்லி நெற்றியில் மூன்று விரலால் இட்டுக் கொள்ளவும். சில கோவில்களில் ஒரே இடத்தில் இருந்து ஐயனோடு அம்மையும் தரிசனம் செய்யும் வண்ணம் இருக்கும். 
அம்மனை தரிசிக்க செல்லும் வழியில் தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றி அங்கிருந்தபடியே அதை இறைவிக்கு காட்டி பின் அதற்குரிய இடத்தில் வைக்கவும். அங்கு அப்படியே மனமுருகி அம்மையிடம் வேண்டிக் கொள்ளுங்கள். சில கோவில்களில் அம்மன் சன்னதி தனித்து இருக்கும். அம்மன் சன்னதியின் சுற்றில் சண்டிகேஸ்வரி இருப்பார். அவரை வணங்கவும். பெரிய கோவில்களில் தலமரம் இருக்கும். அங்கு வணங்கியபின் அடுத்து ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியை வணங்கவும். பின் பரிவார தேவதைகளை வணங்கவும். துர்க்கை சண்டிகேசுவரரை வணங்கி நவகிரகங்களை வல இடமாக ஒன்று அல்லது ஒன்பது சுற்றுகள் சுறிவந்து வணங்கவும். பிறகு நடராசர், சனி பகவான் தனி சன்னதி, காலபைரவர், சந்திரன் சூரியன் சன்னதிகளில் வணங்கி கோவிலை உள்சுற்றாக சுற்றிவந்து கொடிமரத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக வீழ்ந்து இருகை கூப்பி வணங்கி எழுந்திருந்து மண்டபத்தில் இறை சிந்தனையுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்து பின் புறப்படுங்கள்.

உள்ளே.....

1.108 சிவன்போற்றி”-தினமும்/நேரம்கிடைக்கும்போது

2.“108 லிங்கம்போற்றி”-தினமும்/நேரம்கிடைக்கும்போது

3.“லிங்கம் போற்றி”-தினமும் 

4.“108 போற்றி”-போதும்என்ற மனம், பொறாமையற்ற குணம் அடைய- தினமும்/ நேரம் கிடைக்கும் போது

5.“போற்றி”- மனத்தின் இருள்நீங்கி நல்லெண்ணங்கள் மலர - தினமும் / நேரம் கிடைக்கும் போது 

6.“துவாதச லிங்கங்கள் துதி” - ஜோதிர்லிங்கங்கள் துதி- ஆதிசங்கரர் -சிவன் அருள் கிடைக்க- தினமும் 

7.“சிவ அகவல்”- வாழ்வில் ஏற்றமடைய, குறை, குற்றங்கள் நீங்க- தினமும்/ நேரம் கிடைக்கும்போது. 

8.“108 சிவஅஷ்டோத்ர நாமா நமக”-இறையருள்பெற, மனத்தின் இருள் நீங்க நல்லெண்ணங்கள் மலர - தினமும் / நேரம் கிடைக்கும் போது 

9.“சிவ கவசம்”- வேண்டுவன கிடைக்க, ஆரோக்கியம் அடைய- தினமும்/ நேரம் கிடைக்கும் போது.

10.“சிவகவசம்”- பஞ்சமா பாதங்கள், பகைகள் ஒலிந்திட- வறுமைநீங்க- விடபமுனி அருளியது-முடிந்த போது. 

11.“நமசிவாய தெய்வம்”- வாழ்வில் ஏற்றமடைய, உயர்வடைய - தினமும்/ நேரம் கிடைக்கும் போது.

12.“சிவ துதி”- வறுமை நீங்க, வளம் பெருக-வசிஷ்டர் அருளியது- தினமும் / வேண்டும் போது. 

13.“சித்தபேச ஸ்தோத்திரம்”- நடராஜப்பெருமானை நினைத்து- மனக்கவலை அகல, நன்மைகள் பெருக

14.“108 நடராஜர் போற்றி” -தினமும்

15.“சிவசடாட்சரதுதி”- சீரான வாழ்விற்கு- மார்கழி திருவாதிரை, மாசிவளர்பிறை சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி நாட்களில். 

16. “சிவபஞ்சாக்ஷர துதி” ஆதிசங்கரர்-தினமும் 

17. “நோய் தீர்க்கும் பதிகம்”- திருநீற்றின்மகிமை-ஞான சம்பந்தர் அருளியது- நோய்தீர எப்போதும். 

18.“திரு நீற்றுத் துதி”- திருநீற்றின் மகிமை-ஸ்காந்த புராணம்- திருமகளின் அருள் சேர. 

19."சிவபார்வதி துதி”- -வற்றாதசெல்வம், குன்றாதஆயுள் பெற- ஈசன்-சிவ, ஈஸ்வரி-சிவா-சிவசிவா ஸ்துதி. 

20.“உமாமகேஸ்வரர் துதி” -ஆதிசங்கரர்- குடும்பவாழ்வில் மங்களகரமான பலன்கள் பெற -தினமும் 

21.“ஸ்ரீதட்சிணாமுர்த்தி துதி”- குழந்தைபருவம், வாலிபம், முதுமை, விழிப்பு, சொப்பனம் முதலிய மாறுபாடுகள் ஊடே ‘நான்’ எனஎன்றும் மாறுபடாமல்-சிவன் தன்னை வெளிப்படுத்துதல்- வியாழன் மற்றும் பௌர்ணமி. 

22.“குரு - தட்சிணாமூர்த்தி வணக்கம்”-வியாழன்

23.“ஸ்ரீகும்பேஸ்வரர் துதி”-கிரக தோஷங்கள் நீங்கி வேண்டிய வளம்பெற- மாசி மகத்தன்று. 

24.“காலபைரவ அஷ்டகம்” -மனப்பயங்கள் விலக, ஆரோக்கிய வாழ்வுக்கு- தினமும்-நேரம் கிடைக்கும் போதெல்லாம்-ஆதிசங்கரர் அருளியது. 

25.“பைரவ அஷ்டகம்” -செல்வ சேமிப்பு, தடைகள் தகர்க்க, ஆரோக்கிய வாழ்வுக்கு- தினமும்-நேரம் கிடைக்கும் போதெல்லாம். 

26.ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம்- துர்கைச் சித்தர்- தினமும் 

27.“மகாசாஸ்தா துதி”-பகை, பயம்நீங்க, பிணிகள், கவலை விலக, செல்வங்கள் கைகூடும்- சிவ+விஷ்னு- ப்ருஹதீச்வரர்- கார்த்திகை மாதம் காலை/மாலை. 

28.“மகாசாஸ்தா அஷ்டகம்”-அருள், பொருள், ஆரோக்யம் பெற -கார்த்திகை மாதம் காலை/ மாலை.  
29.“சரபாஷ்டகம்” -துக்கங்கள், தோஷங்கள், நோய்நீங்க-ஞாயிற்றுக் கிழமை ராகுகாலத்தில். 

30.சிவபுராணம்-தினமும்/வேண்டும்பொழுது

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--மங்களங்கள் பெருக-மனக்குறை- பாவங்களிலிருந்து விலகி-நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

1.“108 சிவன்போற்றி”-தினமும்/நேரம் கிடைக்கும்போது

ஓம் அப்பா போற்றி!
ஓம் அரனே போற்றி! 
ஓம் அரசே போற்றி!
ஓம் அமுதே போற்றி! 
ஓம் அழகே போற்றி! 
ஓம் அத்தா போற்றி!
ஓம் அற்புதா போற்றி! 
ஓம் அறிவா போற்றி!

ஓம் அம்பலா போற்றி!
ஓம் அரியோய் போற்றி! 
ஓம் அருந்தவா போற்றி! 
ஓம் அனுவே போற்றி!
ஓம் அன்பா போற்றி! 
ஓம் ஆதியே போற்றி! 
ஓம் ஆத்மா போற்றி!
ஓம் ஆரமுதே போற்றி!

ஓம் ஆரணனே போற்றி! 
ஓம் ஆண்டவா போற்றி!
ஓம் ஆலவாயா போற்றி! 
ஓம் ஆரூரா போற்றி! 
ஓம் இறைவா போற்றி!
ஓம் இடபா போற்றி! 
ஓம் இன்பா போற்றி! 
ஓம் ஈசா போற்றி!

ஓம் உடையாய் போற்றி! 
ஓம் உணர்வே போற்றி! 
ஓம் உயிரே போற்றி!
ஓம் ஊழியே போற்றி! 
ஓம் எண்ணே போற்றி! 
ஓம் எழுத்தே போற்றி!
ஓம் எண் குணா போற்றி! 
ஓம் எழிலா போற்றி!

ஓம் எளியா போற்றி!
ஓம் ஏகா போற்றி! 
ஓம் ஏழிசையே போற்றி! 
ஓம் ஏறுர்ந்தாய் போற்றி!
ஓம் ஐயா போற்றி! 
ஓம் ஒருவா போற்றி! 
ஓம் ஒப்பிலானே போற்றி!
ஓம் ஒளியே போற்றி! 
ஓம் ஓங்காரா போற்றி! 
ஓம் கடம்பா போற்றி!
ஓம் கதிரே போற்றி!
ஓம் கதியே போற்றி!
ஓம் கனியே போற்றி!
ஓம் கலையே போற்றி!
ஓம் காருண்யா போற்றி!
ஓம் குறியே போற்றி!

ஓம் குணமே போற்றி!
ஓம் கூத்தா போற்றி!
ஓம் கூன்பிறையாய் போற்றி!
ஓம் சங்கரா போற்றி!
ஓம் சதுரா போற்றி!
ஓம் சதாசிவா போற்றி!
ஓம் சிவையே போற்றி!
ஓம் சிவமே போற்றி!

ஓம் சித்தமே போற்றி!
ஓம் சீரா போற்றி!
ஓம் சுடரே போற்றி!
ஓம் சுந்தரா போற்றி!
ஓம் செல்வா போற்றி!
ஓம் செங்கணா போற்றி!
ஓம் சொல்லே போற்றி!
ஓம் ஞாயிறே போற்றி!

ஓம் ஞானமே போற்றி!
ஓம் தமிழே போற்றி!
ஓம் தத்துவா போற்றி!
ஓம் தலைவா போற்றி!
ஓம் தந்தையே போற்றி!
ஓம் தாயே போற்றி!
ஓம் தாண்டவா போற்றி!
ஓம் திங்களே போற்றி!

ஓம் திசையே போற்றி!
ஓம் திரிசூலா போற்றி!
ஓம் துணையே போற்றி!
ஓம் தெளிவே போற்றி!
ஓம் தேவதேவா போற்றி!
ஓம் தோழா போற்றி!
ஓம் நமசிவாயா போற்றி!
ஓம் நண்பா போற்றி!

ஓம் நஞ்சுண்டாய் போற்றி!
ஓம் நான்மறையாய் போற்றி!
ஓம் நிறைவா போற்றி!
ஓம் நினைவே போற்றி!
ஓம் நீலகண்டா போற்றி!
ஓம் நெறியே போற்றி!
ஓம் பண்ணே போற்றி!
ஓம் பித்தா போற்றி!

ஓம் புனிதா போற்றி!
ஓம் புராணா போற்றி!
ஓம் பெரியோய் போற்றி!
ஓம் பொருளே போற்றி!
ஓம் பொங்கரவா போற்றி!
ஓம் மதிசூடியே போற்றி!
ஓம் மருந்தே போற்றி!
ஓம் மலையே போற்றி!

ஓம் மனமே போற்றி!
ஓம் மணாளா போற்றி!
ஓம் மணியே போற்றி!
ஓம் மெய்யே போற்றி!
ஓம் முகிலே போற்றி!
ஓம் முக்தா போற்றி!
ஓம் முதல்வா போற்றி!
ஓம் வானமே போற்றி!

ஓம் வாழ்வே போற்றி! 
ஓம் வையமே போற்றி!
ஓம் விநயனே போற்றி!
ஓம் விநாயகனே போற்றி! போற்றி!

2.“108 லிங்கம் போற்றி”-தினமும்

ஓம் அங்க லிங்கமே போற்றி! 
ஓம் அருவுரு லிங்கமே போற்றி! 
ஓம் அபய லிங்கமே போற்றி! 
ஓம் அம்ருத லிங்கமே போற்றி!

ஓம் அபிஷேக லிங்கமே போற்றி! 
ஓம் அனாதி லிங்கமே போற்றி! 
ஓம் அகண்ட லிங்கமே போற்றி! 
ஓம் அட்சர லிங்கமே போற்றி!

ஓம் அப்பு லிங்கமே போற்றி! 
ஓம் ஆதி லிங்கமே போற்றி! 
ஓம் ஆதார லிங்கமே போற்றி! 
ஓம் ஆத்ம லிங்கமே போற்றி!

ஓம் ஆனந்த லிங்கமே போற்றி! 
ஓம் ஆகாச லிங்கமே போற்றி! 
ஓம் ஆலாஸ்ய லிங்கமே போற்றி! 
ஓம் ஆத்யந்த லிங்கமே போற்றி!

ஓம் ஆபத்பாந்தவ லிங்கமே போற்றி! 
ஓம் ஆரண்ய லிங்கமே போற்றி! 
ஓம் ஈஸ்வர லிங்கமே போற்றி! 
ஓம் ஈசான்ய லிங்கமே போற்றி!

ஓம் உக்ர லிங்கமே போற்றி! 
ஓம் ஊர்த்துவ லிங்கமே போற்றி! 
ஓம் ஏகாந்த லிங்கமே போற்றி! 
ஓம் ஓம்கார லிங்கமே போற்றி!

ஓம் கனக லிங்கமே போற்றி! 
ஓம் காருண்ய லிங்கமே போற்றி! 
ஓம் காசி லிங்கமே போற்றி! 
ஓம் காஞ்சி லிங்கமே போற்றி!

ஓம் காளத்தி லிங்கமே போற்றி! 
ஓம் கிரி லிங்கமே போற்றி! 
ஓம் குரு லிங்கமே போற்றி! 
ஓம் கேதார லிங்கமே போற்றி!

ஓம் கைலாச லிங்கமே போற்றி! 
ஓம் கோடி லிங்கமே போற்றி! 
ஓம் சக்தி லிங்கமே போற்றி! 
ஓம் சங்கர லிங்கமே போற்றி!

ஓம் சதாசிவ லிங்கமே போற்றி! 
ஓம் சச்சிதானந்த லிங்கமே போற்றி! 
ஓம் சகஸ்வர லிங்கமே போற்றி! 
ஓம் சம்ஹார லிங்கமே போற்றி!

ஓம் சாட்சி லிங்கமே போற்றி! 
ஓம் சாளக்கிராம லிங்கமே போற்றி! 
ஓம் சாந்த லிங்கமே போற்றி! 
ஓம் சிவ லிங்கமே போற்றி!

ஓம் சித்த லிங்கமே போற்றி! 
ஓம் சிதம்பர லிங்கமே போற்றி! 
ஓம் சீதள லிங்கமே போற்றி! 
ஓம் சுத்த லிங்கமே போற்றி!

ஓம் சுயம்பு லிங்கமே போற்றி! 
ஓம் சுவர்ண லிங்கமே போற்றி! 
ஓம் சுந்தர லிங்கமே போற்றி! 
ஓம் ஸ்தூல லிங்கமே போற்றி!

ஓம் சூட்சம லிங்கமே போற்றி! 
ஓம் ஸ்படிக லிங்கமே போற்றி! 
ஓம் ஸ்திர லிங்கமே போற்றி! 
ஓம் சைதன்ய லிங்கமே போற்றி!

ஓம் ஜய லிங்கமே போற்றி! 
ஓம் ஜம்பு லிங்கமே போற்றி! 
ஓம் ஜீவ லிங்கமே போற்றி! 
ஓம் ஜோதி லிங்கமே போற்றி!

ஓம் ஞானலிங்கமே போற்றி! 
ஓம் தர்ம லிங்கமே போற்றி! 
ஓம் தாணு லிங்கமே போற்றி! 
ஓம் தேவ லிங்கமே போற்றி!

ஓம் நடன லிங்கமே போற்றி! 
ஓம் நாக லிங்கமே போற்றி! 
ஓம் நித்ய லிங்கமே போற்றி! 
ஓம் நிர்மல லிங்கமே போற்றி!

ஓம் பரம லிங்கமே போற்றி! 
ஓம் பங்கஜ லிங்கமே போற்றி! 
ஓம் பஞ்ச லிங்கமே போற்றி! 
ஓம் பஞ்சாட்சர லிங்கமே போற்றி!

ஓம் பத்ரி லிங்கமே போற்றி! 
ஓம் பக்த லிங்கமே போற்றி! 
ஓம் பாபாநாச லிங்கமே போற்றி! 
ஓம் பிராண லிங்கமே போற்றி!

ஓம் பிரம்ம லிங்கமே போற்றி! 
ஓம் பிரகாச லிங்கமே போற்றி! 
ஓம் பீஜ லிங்கமே போற்றி! 
ஓம் புவன லிங்கமே போற்றி! 
ஓம் பூத லிங்கமே போற்றி! 
ஓம் பூர்ண லிங்கமே போற்றி! 
ஓம் பூஜ்ய லிங்கமே போற்றி! 
ஓம் மரகத லிங்கமே போற்றி!

ஓம் மஹா லிங்கமே போற்றி! 
ஓம் மகேஸ்வர லிங்கமே போற்றி! 
ஓம் மார்க்கபந்து லிங்கமே போற்றி!
ஓம் மார்க்கண்டேய லிங்கமே போற்றி!

ஓம் மிருத்யுஞ்சய லிங்கமே போற்றி!
ஓம் முக்தி லிங்கமே போற்றி!
ஓம் மூல லிங்கமே போற்றி!
ஓம் மூர்த்தி லிங்கமே போற்றி!

ஓம் மேரு லிங்கமே போற்றி!
ஓம் மேனி லிங்கமே போற்றி!
ஓம் மோட்ச லிங்கமே போற்றி!
ஓம் யக்ஞ லிங்கமே போற்றி!

ஓம் யோக லிங்கமே போற்றி!
ஓம் ராம லிங்கமே போற்றி!
ஓம் ராஜ லிங்கமே போற்றி!
ஓம் ருத்ர லிங்கமே போற்றி!

ஓம் வாயு லிங்கமே போற்றி!
ஓம் விஸ்வ லிங்கமே போற்றி!
ஓம் விசித்திர லிங்கமே போற்றி!
ஓம் வீர்ய லிங்கமே போற்றி!

ஓம் வேத லிங்கமே போற்றி!
ஓம் வைத்ய லிங்கமே போற்றி!
ஓம் ஹ்ருதய லிங்கமே போற்றி!
ஓம் லிங்கோத் பவனே போற்றி! போற்றி! போற்றி!

3.“லிங்கம் போற்றி”-தினமும்

கருனை வடிவே கைலாச லிங்கம்
காசினி காக்கும் விசுவ லிங்கம்
திருப்பரங்குன்றின் பரங்குன்ற லிங்கம்
திருவானைகாலில் ஜம்பு லிங்கம்

ஆடல் புரிந்த கூடல் லிங்கம்
அன்பைப் பொழியும் ஆட்கொண்ட லிங்கம்
பாடலில் சிறந்த மருதீச லிங்கம்
பக்திக் கடலின் திருவீச லிங்கம்

வெற்றி நல்கும் செயங்கொண்ட லிங்கம்
விண்ணவர் போற்றும் வளரொளி லிங்கம்
கற்றவர் ஏற்றும் ஐநூற்று லிங்கம்
கண்ணனின் ஒளியாம் காளத்தி லிங்கம்

சுயம்பாய் வந்த தாந்தோன்றி லிங்கம்
சொர்க்கம் நல்கும் தேசிய லிங்கம்
பயனாம் நயனாம் பசுபதி லிங்கம்
பாலய நாட்டின் சண்டீஸ்வர லிங்கம்

புள்ளூர் வாழும் வைத்திய லிங்கம்
பொங்கும் மங்கள சங்கர லிங்கம்
உள்ளம் உறைந்த பூசலர் லிங்கம்
உயர்ந்த மயிலைக் கபாலி லிங்கம்

மார்க்கண்டன் காத்த அமுதீச லிங்கம்
மாதேவன் வீர சேகர லிங்கம்
ஆர்த்துப் போற்றும் காளீஸ்வர லிங்கம்
ஆவுடைக் கோவிலின் ஜோதி லிங்கம்

4.“108 போற்றி”-போதும் என்ற மனம், பொறாமையற்ற குணம் அடைய- தினமும்.

அகரமே அறிவே போற்றி!
அகஞ்சுடர் விளக்கே போற்றி!
அகந்தை நோய் அழிப்பாய் போற்றி!
அகத்தனே போற்றி! போற்றி!

அடியர்கள் துணையே போற்றி!
அணுவினுள் அணுவே போற்றி!
அண்டங்கள் கடந்தாய் போற்றி!
அம்மையே அப்பா போற்றி!

அருமறை முடிவே போற்றி!
அருந்தவர் நினைவே போற்றி!
அரும்பிறை அணிந்தாய் போற்றி!
அரஹரா போற்றி! போற்றி!

அலைகடல் விரிவே போற்றி!
அவிரொளி சடையாய் போற்றி!
அழகனாம் அமுதே போற்றி!
அறிந்திடு மொழியே போற்றி!

அளப்பிலா அருளே போற்றி!
அன்பெனும் மலையே போற்றி!
ஆடரவு அணியாய் போற்றி!
ஆடிடும் கூத்தா போற்றி!

ஆதாரப் பொருளே போற்றி!
ஆதியே அருளே போற்றி!
ஆலால கண்டா போற்றி!
ஆலமர் குருவே போற்றி!

ஆலவாய் அப்பா போற்றி!
ஆரூரின் தியாகா போற்றி!
ஆற்றலே போற்றி! போற்றி!
இடபவா கனத்தாய் போற்றி!

இதயத்தே கனிவாய் போற்றி!
இமயவள் பங்கா போற்றி!
இமையவர் உளத்தாய் போற்றி!
இரக்கமே வடிவாய் போற்றி!

இருட்கறை மிடற்றாய் போற்றி!
இருவினை தவிர்ப்பாய் போற்றி!
இன்னல்கள் களைவாய் போற்றி!
இனிமையே நிறைப்பாய் போற்றி!

இனியவர் மனத்தாய் போற்றி!
இனிய செந்தமிழே போற்றி!
இலக்கியச் செல்வா போற்றி!
இறைவனே போற்றி! போற்றி!

ஈசனே போற்றி! போற்றி!
ஈசானத் திறையே போற்றி!
ஈடிலா பிரானே போற்றி!
ஈந்தருள் தேவே போற்றி!

ஈமத்தே குமிப்பாய் போற்றி!
உடுக்கையின் ஒலியே போற்றி!
உடைகரித் தோலாய் போற்றி!
உடையனே போற்றி! போற்றி!

உணவொடு நீரே போற்றி!
உரைகடந் தொளிர்வாய் போற்றி!
உருவொடும் அருவே போற்றி!
உமையொரு பாகா போற்றி!

உலகின் முதலே போற்றி! 
உள்ளொளிர் சுடரே போற்றி!
ஊக்கமே உணர்வே போற்றி!
ஊங்கார ஒலியே போற்றி!

ஊரெல்லாம் உவப்பாய் போற்றி!
ஊழினை விதிப்பாய் போற்றி!
எண்குண வடிவே போற்றி!
எம்பிரான் போற்றி! போற்றி!

எரிதவழ் விழியாய் போற்றி!
எருதேறும் ஈசா போற்றி!
எல்லையில் எழிலே போற்றி!
ஏக நாயகனே போற்றி! போற்றி!

ஏகம்பா இறைவா போற்றி!
ஏக்கமே களைவாய் போற்றி!
ஏந்துகூர் மழுவாய் போற்றி!
ஏந்தலே போற்றி! போற்றி!

ஏத்துவார் ஏத்தே போற்றி!
ஏதிலார் புகழே போற்றி!
ஏர்முனைச் செல்வா போற்றி!
ஏற்றமே தருவாய் போற்றி!

ஐம்பூத வடிவே போற்றி!
ஐம்புலன் அவிப்பாய் போற்றி!
ஐயங்கள் களைவாய் போற்றி!
ஐயனே அரனே போற்றி!

ஓண்குழைக் காதா போற்றி!
ஒப்பிலா மணியே போற்றி!
ஒளியெறி நுதலாய் போற்றி!
ஒள்ளிழை பாகா போற்றி!

ஒப்பிலாய் போற்றி! போற்றி!
கண்கள் மூன்றுடையாய் போற்றி!
கண்ணப்பர் முதலே போற்றி!
கருணைமா கடலே போற்றி!

கறைதிகழ் கண்டா போற்றி!
காமனை எரித்தாய் போற்றி!
காலனை கடிந்தாய் போற்றி!
கடவுளே போற்றி! போற்றி!

சிவமெனும் பொருளே போற்றி!
செவ்வொளி வடிவே போற்றி!
தவநிலை முடிவே போற்றி!
தண்பதம் தருவாய் போற்றி!

பவலமெலாம் தவிர்ப்பாய் போற்றி!
பரமெனும் பொருளே போற்றி!
புலியூரான் உளத்தாய் போற்றி!
புரந்து அருள்வாய் போற்றி!

புண்ணியா போற்றி! போற்றி!
புனர் ஜன்மம் தந்தோனே போற்றி!
புகழ் தருவோனே போற்றி!
பூமி நாயகனே இறைவா போற்றி!

மலையான் மருமானே போற்றி!
மலைவாழ் நாயகனே போற்றி!
மாதா வானவனே இறைவா போற்றி!
மகத்தா னாவனே போற்றி! போற்றி!

வண்ண நீல வடிவானவனே போற்றி!
வடிவம் பல கொண்டவனே போற்றி!
வாழ வழி காட்டுபவனே போற்றி!
வாழும் இறைவா போற்றி! போற்றி!

5.“போற்றி”- மனத்தின் இருள் நீங்கி நல்லெண்ணங்கள் மலர - தினமும் / நேரம் கிடைக்கும் போது

கைதார வல்ல கடவுள் போற்றி!
ஆடக மதுரை யரசே போற்றி!
கூடல் இலங்கு குருமணி போற்றி!
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி!

இன்றெனக் காரமுதானாய் போற்றி!
மூவா நான்மறை முதல்வா போற்றி!
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி!
மின்னா ருருவ விகிர்தா போற்றி!

கல்நார் உரித்த கனியே போற்றி!
காவாய் கனகக் குன்றே போற்றி!
ஆவா என் தனக்கு அருளாய் போற்றி!
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி!

இடரைக் களையும் எந்தாய் போற்றி!
ஈச போற்றி! இறைவ போற்றி!
தேசப் பளிங்கின் திரளே போற்றி!
அரசே போற்றி! அமுதே போற்றி!
விரைசேர் சரண விகிர்தா போற்றி!

வேதி போற்றி! விமலா போற்றி!
ஆதி போற்றி! அறிவே போற்றி!
கதியே போற்றி! கனியே போற்றி!
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி!
உடையாய் போற்றி! உணர்வே போற்றி!

கடையேன் அடைமை கண்டாய் போற்றி!
ஐயா போற்றி! அணுவே போற்றி!
சைவா போற்றி! தலைவா போற்றி!
குறியே போற்றி! குணமே போற்றி!
நெறியே போற்றி! நினைவே போற்றி!

வானோர்க்கு அரிய மருந்தே போற்றி!
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி!
மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
ஆழாமே அருள் அரசே போற்றி!
தோழா போற்றி துணைவா போற்றி!

வாழ்வே போற்றி! என் வைப்பே போற்றி!
முத்தா போற்றி! முதல்வா போற்றி!
அத்தா போற்றி! அரனே போற்றி!
உரையுணர்வு இறந்த ஒருவ போற்றி!
விரிகடல் உலகின் விளைவே போற்றி!

அருமையிலெளிய அழகே போற்றி!
கருமுகிலாகிய கண்ணே போற்றி!
மன்னிய திருவருள் மலையே போற்றி!
என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்தசேவக போற்றி!

தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி!
அழிவிலா ஆனந்த வாரி போற்றி!
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி!
முழுவதும் இறந்த முதல்வா போற்றி!
மனோர் நோக்கி மணாளா போற்றி!

வானகத்து அமரர் தாயே போற்றி!
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி!
நீரிடை நான்காய் திகழ்ந்தாய் போற்றி!
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!
அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி!
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி!
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி!
இடைமருது உறையும் எந்தாய் போற்றி!

சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!
சீரார் திருவையாறா போற்றி!
அண்ணா மலைஎம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி!

ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி!
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே போற்றி!
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!
மற்றோர் பற்றிங்கு அறியேன் போற்றி!

குற்றாலத்தெம் கூத்தா போற்றி!
கோகழிமேவிய கோவே போற்றி!
ஈங்கோய் மலைஎம் எந்தாய் போற்றி!
பாங்கார் பழனத் தழகா போற்றி!
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி!

அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி!
இத்தி தன்னின் கீழிரு மூவர்க்கு 
அத்திக்கு அருளிய அரசே போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கு இறைவா போற்றி!

ஏனக் குருளைக்கு அருளினை போற்றி!
மானக் கயிலை மலையாய் போற்றி!
அருளிட வேண்டும் அம்மான் போற்றி!
இருள்கெட அருளும் இறைவா போற்றி!
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி!

களங்கொளக் கருத அருளாய் போற்றி!
அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி!
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி!
அத்தா போற்றி! ஐயா போற்றி!
நித்தா போற்றி! நிமலா போற்றி!

பக்தா போற்றி! பவனே போற்றி!
பெரியாய் போற்றி! பிரானே போற்றி!
அரியாய் போற்றி! அமலா போற்றி!
மறையோர் கோல நெறியே போற்றி!
முறையோ தரியேன் முதல்வா போற்றி!

உறவே போற்றி! உயிரே போற்றி!
சிறவே போற்றி! சிவமே போற்றி!
மஞ்சா போற்றி! மணாளா போற்றி!
பஞ்சு ஏர் அடியாள் பங்கா போற்றி! 
அலைந்தேன் நாயேன் அடியேன் போற்றி!

இலங்கு சுடர் எம் ஈசா போற்றி!
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி!
குவைப்பதி மலிந்த கோவே போற்றி!
மலைநாடுடைய மன்னே போற்றி!
கலையாரரிகே சரியாய் போற்றி!

திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி!
பெருப்பமர் பூவணத் தரனே போற்றி!
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி!
மருவிய கருணை மலையே போற்றி!
துரியமும் இறந்த சுடரே போற்றி!

தெரிவு அரிதாகிய தெளிவே போற்றி!
தோளா முத்தச் சுடரே போற்றி!
ஆளானவர்கட்கு அன்பா போற்றி!
ஆரா அமுதே அருளே போற்றி!
பேராயிரம் உடைய பெம்மான் போற்றி!

தாளி அறுகின் தாராய் போற்றி!
நீளொளியாகிய நிருத்தா போற்றி!
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி!
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி!
மந்திர மாமலை மேயாய் போற்றி!

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி!
புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி!
அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி!
கருங் குருவிக்கன்று அருளினை போற்றி!
இரும்புலன் புலர இசைந்தனை போற்றி!

படியுறப் பயின்ற பாவக போற்றி!
அடியொடு நடுவீறு ஆனாய் போற்றி!
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
பரகதி பாண்டியர்கு அருளினை போற்றி!
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி!

செழுமலர்ச் சிவபுரத்து அரசே போற்றி!
கழுநீர் மாலைக் கடவுள் போற்றி!
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி!
பிழைப்பு வாய்ப்பு ஒன்றறியா நாயேன்
குழைத்தசொல் மாலை கொண்டருள் போற்றி!

புரம்பல எரித்த புராண போற்றி!
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி!
போற்றி! போற்றி! புயங்கப் பெருமான்
போற்றி! போற்றி! புராண காரண
போற்றி! போற்றி! சயசய போற்றி!

6.“துவாதச லிங்கங்கள் துதி” - ஜோதிர்லிங்கங்கள் துதி- ஆதிசங்கரர் -சிவன் அருள் கிடைக்க- தினமும்

பரிசுத்தமானதும், மிக்க அழகானதுமான சௌராஷ்டிர தேசத்தில் பக்தியை அளிப்பதற்காக கருணையாய் அவதாரம் செய்தவரும், சந்திரகலையை சிரோபூஷணமாக கொண்டவரும் ஜோதிர்மயமாக இருக்கிறவருமான சோமநாதர் என்ற லிங்கத்தை சரணமாக அடைகிறேன்.

நிகராகக் கூறப்படும் மலைகளுள் பெரியதானதும் தேன்கள் எப்போதும் சான்னித்தமாக இருக்கப்படுகிறதுமான ஸ்ரீசைலம் எனும் இடத்தில் சந்தோஷமாக வசிக்கிறவரும், சம்சார சாகரத்திற்கு அணைபோல் உள்ளவருமான மல்லிகார்ஜுனர் என்ற லிங்கத்தை வணங்குகிறேன்.

அவந்திகா நகரத்தில் சாது ஜனங்களுக்கு முக்தி அளிப்பதற்காக அவதாரம் செய்தவரும், தேவர்களுக்கு ஈசனுமான மஹாகாலேஷ்வரன் என்ற லிங்கத்தை, அகால மரணம் ஏற்படாமல் இருக்க வேண்டி நமஸ்கரிக்கின்றேன்.

காவேரி, நர்மதை இவ்விரண்டின் பரிசுத்தம்மான சங்கமத்தின் சமீபத்தில், மாந்தாத்ருபுரத்தில் ஸஜ்ஜனங்களை கரை ஏற்ற வேண்டி வசிக்கிறவரும், ஓம்காரேஸ்வர லிங்கம் என்று பிரசித்தி பெற்றதும் அத்விதீயருமான ஸ்ரீ பரமேஸ்வரனைத் துதிக்கின்றேன்.

ஈசான-வடகிழக்கு திக்கில் ப்ராஜ்வலிகா நிதானத்தில்- ருத்ரபூமியில் வசிக்கிறவரும், பார்வதி தேவியுடன் கூடியவரும், தேவர்கள், அசுரர்கள் இவர்களால் பூஜிக்கப்பட்ட பாத பத்மங்களை உடையவருமான ஸ்ரீவைத்யநாதர் என்ற லிங்கத்தை நான் வணங்குகின்றேன்.

தென்திசையில் மிக்க அழகான சதங்கம் எனும் நகரத்தில் பலவிதமான சமபத்துக்களுடன் அலங்கரித்த அங்கங்களுடன் கூடியவரும், சிறந்த பக்தியையும் மோக்ஷத்தையும் அளிக்கிறவருமான ஸ்ரீநாகேஷ்வரர் என்ற லிங்கத்தை சரண் அடைகின்றேன்.

இமயமலையில் தாழ்வான பிரதேசத்தில் கேதாரம் என்ற சிகரத்தில் ரமிக்கிறவரும், முனிசிரேஷ்டர்களாலும் தேவர்கள், அசுரர்கள், யஷர்கள், நாகர்கள் முதலியவர்களாலும் எப்போதும் பூஜிக்கப்படுகிறவரும் அத்விதீயருமான கேதாரேஸ்வரர் என்றலிங்கத்தை துதிக்கின்றேன்.

பரிசுத்தமான சஹயமலையின் சிகரத்தில் கோதாவரி நதிக்கரையில் சுத்தமான இடத்தில் வசிப்பவரான எவரை தரிசனம் செய்வதால் பாவங்கள் விலகுகின்றனவோ அந்த த்ரியம்பகேஸ்வரர் என்ற லிங்கத்தை துதிக்கின்றேன்.

தாமிரபரணி நதி சேரும் சமுத்திரக்கரையில் கணக்கற்ற பாணங்களைக் கொண்டு அணைகட்டி ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட அந்த ராமேஸ்வரர் எனும் லிங்கத்தை நான் நியதியாய் வணங்குகின்றேன்.

டாகினீ, சாகினீ முதலிய புதகணங்களால் பூஜிக்கப்படுகிறவரும் பக்தர்களுக்கு ஹிதத்தை அளிக்கிறவரும், பீமேஸ்வரலிங்கம் என்று பிரசித்தி பெற்றவருமான அந்த பரமேஸ்வர லிங்கத்தை வணங்குகின்றேன்.

காசியில் ஆனந்தவனத்தில் ஆனந்தத்துடன் வசிப்பவரும், சந்தோஷக் குவியலாய் விளங்குகிறவரும், பாபக் குவியல் அற்றவரும், அனாதரர்களுக்கு நாதனும், வாராணாசி சேத்ர நாயகனும் ஆன ஸ்ரீவிஸ்வநாதர் என்ற லிங்கத்தை சரணமாக அடைகின்றேன்.

அழகாயும் விசாலமாயும் உள்ள இலாபுரம் என்ற இடத்தில் விளங்குகிறவரும், உலகத்தில் மிகச் சிறந்தவரும் பெரிய உதாரஸ்வரூபத்தை உடையவரும் க்ருஷ்ணேச்வர லிங்கம் என்று பெயர் பெற்றவரும் ஆகிய பரமேஸ்வரனை சரணம் அடைகின்றேன்.

7.“சிவ அகவல்”- வாழ்வில் ஏற்றமடைய, குறை, குற்றங்கள் நீங்க- தினமும்/ நேரம் கிடைக்கும் போது.

அகர முதல்வனென்று இருப்போய் போற்றி!
ஆல நீழல் அமர்ந்தோய் போற்றி!
இளமான் இடக்கரம் ஏற்றோய் போற்றி!
ஈசானமெனும் முகத்தோய் போற்றி!
உருத்திர மந்திரம் உவப்போய் போற்றி!
ஊழி முற்றினும் நிலைப்போய் போற்றி!
எருக்க மலரினையணிந்தாய் போற்றி!
ஏறுமீதேறி வருவோய் போற்றி!

ஐம்பெரும் பூதம் படைத்தோய் போற்றி! 
ஒப்பார் மிக்கார் இல்லோய் போற்றி!
ஓங்காரமெனத் திகழ்வோய் போற்றி!
ஒளவிய மற்றோர்க் கணித்தோய் போற்றி!
அஃகாப் பேரருள் பொழிவோய் போற்றி!
கண்ணுக்கு இனிய வடிவோய் போற்றி!
காமனைக் காய்த்த விழியோய் போற்றி!
கிரிதனை வில்லென ஏற்றோய் போற்றி!

கீதம் ஓர்க்கும் செவியோய் போற்றி!
குறையேதில்லாப் பெரியோய் போற்றி!
கூத்தம் பலந்தனில் ஆடுவோய் போற்றி!
கெடுமதி அரக்கனைச் செற்றோய் போற்றி!
கேழில்மா பரஞ்சோதியாய் போற்றி!
கைத்தலம் மழுவொன் றேந்தியோய் போற்றி!
கொன்றை வேய்ந்த சடையோய் போற்றி!
கோதில் நஃல்லறம் ஓதுவோய் போற்றி!

கௌரீ தன்னை மணந்தோய் போற்றி!
ஙப்போல் குழைவார்க் கருள்வோய் போற்றி!
சக்தியோஜாத முகத்தோய் போற்றி!
சான்றோர் தொழுதிடும் சுழலோய் போற்றி!
சிற்றம்பலத்தே ஆடுவாய் போற்றி!
சீர்மிகு வாசகம் உவந்தோய் போற்றி!
சுத்த நிர்க்குணச் சோதியோய் போற்றி!
சூதிலார்க்குச் சேயோய் போற்றி!

செந்தழல் அன்ன மேனியாய் போற்றி!
சேண்திகழ் கயிலை உறைவோய் போற்றி!
சைவப் பேரொளி பொழிவோய் போற்றி!
சொற்பதம் கடந்த இறையோய் போற்றி!
சோதித் தூணென நீண்டோய் போற்றி!
சௌபாக்கியமெலாம் நல்குவாய் போற்றி!
ஞயம்பட மொழிவார்க்கினியோய் போற்றி!
ஞானநுதல் விழி பெற்றோய் போற்றி!

ஞிமுறு மிழற்றும் தாரோய் போற்றி!
தத்புருஷமெனும் முகத்தோய் போற்றி!
தாயினும் சாலப் பரிவோய் போற்றி!
திலகவதிக்கருள் புரிந்தோய் போற்றி!
தீயினை ஏற்ற கரத்தோய் போற்றி!
துடிகொண்டெழுத்தெலாம் ஒலித்தோய் போற்றி!
தூநீர்க் கங்கை மிலைந்தோய் போற்றி!
தென்பால் நோக்கி அமர்ந்தோய் போற்றி!

தேவ தேவனென்றிருப்போய் போற்றி!
தைப்பூசந்தனை உவப்போய் போற்றி!
தொழுவார்க்கிரங்கி அருள்வோய் போற்றி!
தோன்றாத்துணையென நிற்போய் போற்றி!
நந்தன் பத்தியை மெச்சியோய் போற்றி!
நாவரசர்க்கருள் பூத்தோய் போற்றி!
நிதிபதியொடு நட்புடையோய் போற்றி!
நீக்கமற்றெங்கும் நிறைந்தோய் போற்றி!

நுணக்கரு நுட்பென இருப்போய் போற்றி!
நூறாயிரம்பெயர் கொண்டோய் போற்றி!
நெய்தயிர் ஆன்பால் ஆடுவோய் போற்றி!
நேரிய அறந்தனை உரைத்தாய் போற்றி!
நைவளப் பண்கேட்டுவப்போய் போற்றி!
நொடிக்குள் முப்புரம் செற்றோய் போற்றி!
நோக்கரு நோக்கென இருப்போய் போற்றி!
பரிமேல் பரிவுடன் வந்தொய் போற்றி!

பார்பதம் அண்டம் கடந்தோய் போற்றி!
பிட்டுண்டடி யுண்டிருந்தோய் போற்றி!
பீடார் மதுரை உறைவோய் போற்றி!
புனித வதியினை ஆண்டோய் போற்றி!
பூவுள் நாற்றம் போன்றோய் போற்றி!
பொய்மழை எனவருள் பொழிவோய் போற்றி!
பேரானந்தம் விளைப்போய் போற்றி! 
பையரவம் இடை அசைத்தோய் போற்றி!

பொன்னென மின்னும் மேனியாய் போற்றி!
போக்கும் வரவும் இல்லோய் போற்றி!
பௌவம் சூழ்பார் காப்போய் போற்றி!
மலரவன் காணா முடியோய் போற்றி!
மாலவன் காணாக் கழலோய் போற்றி!
மின்னிடுஞ் சூலம் ஏற்றோய் போற்றி!
மீளா வுலகு தருவோய் போற்றி!
முத்தமிழ் போற்றும் புலவோய் போற்றி!

மூவா மேனி அழகோய் போற்றி!
மெய்யெலாம் வெண்ணீறு அணிந்தோய் போற்றி!
மேதகு காஞ்சி உறைந்தோய் போற்றி!
மைவளர் நஞ்சமிடற்றோய் போற்றி!
மொய்வலி முயலகன் அழுத்தினோய் போற்றி!
மோனத் திருந்தறம் உரைத்தோய் போற்றி!
மௌவல் மாலை பூண்டோய் போற்றி!
மணிவண்ணா போற்றி!

யாணை முகத்தினைப் படைத்தோய் போற்றி!
வந்திப் பார்க்கருள் நல்குவோய் போற்றி!
வாமதேவ முகத்தோய் போற்றி!
விசயற் கம்பு தந்தோய் போற்றி!
வீரி தன்னை பயந்தோய் போற்றி!
வெற்றி வேலனைப் பயந்தோய் போற்றி!
வேடன் விழிதர ஆண்டோய் போற்றி! 
வையை வெள்ளம் மிகுத்தோய் போற்றி!

அஃகா இன்பம் அளிப்போய் போற்றி!
ஒளடதம் நோய்க்கெனத் திகழ்வோய் போற்றி!
ஓருரு ஒருபெயர் இல்லோய் போற்றி!
ஒருவனென்ன ஒளிர்வோய் போற்றி!
ஐந்திணை நிலமெலாம் உரியோய் போற்றி!
ஏழிசை மடுக்கும் செவியோய் போற்றி!
என்பு மாலை பூண்டோய் போற்றி!
ஊனினை உருக்கெழில் உருவோய் போற்றி!

உலக உயிர்க்கெலாம் விழியோய் போற்றி!
ஈறு நடுமுதல் ஆனோய் போற்றி!
இசைவல் காழியன் ஆண்டோய் போற்றி!
ஆரூரன் தனை ஆண்டோய் போற்றி!
அகோர முகந்தனை யுடையோய் போற்றி!
போற்றி! போற்றி! பரமா போற்றி!

சரணம் சரணம் சிவனே சரணம்!
அரணாம் அரணம் நீயே அரணம்!
என் பிழையாவும் பொறுத்திடு ஐயா!
என் கல் மனத்தைக் குழைத்திடு ஐயா!
என்னை இன்னே ஆட்கொள் ஐயா!
சரணம் சரணம் சரணம் சிவனே!

8.“108 சிவ அஷ்டோத்ர நாமா நமக”- இறையருள் பெற, மனத்தின் இருள் நீங்க நல்லெண்ணங்கள் மலர - தினமும் / நேரம் கிடைக்கும் போது

ஓம் சிவாய நமக!
ஓம் மஹேச்வராய நமக!
ஓம் சம்பவே நமக!
ஓம் பினாகிநே நமக!
ஓம் சசிசேகராய நமக!

ஓம் வாமதேவாய நமக!
ஓம் விருபாக்ஷாய நமக!
ஓம் கபர்தினே நமக!
ஓம் நீலலோஹிதாய நமக!
ஓம் சங்கராய நமக!

ஓம் சூலபாணயெ நமக!
ஓம் கட்வாங்கிநே நமக!
ஓம் விஷ்னுவல்லாபாய நமக!
ஓம் சிபி விஷ்டாய நமக!
ஓம் அம்பிகா நாதாய நமக!
ஓம் ஸ்ரீகண்டாய நமக!
ஓம் பக்தவத்ஸலாய நமக!
ஓம் பவாய நமக!
ஓம் சர்வாய நமக!
ஓம் திரிலோககேசாய நமக!

ஓம் சதிகண்டாய நமக!
ஓம் சிவாப்ரியாய நமக!
ஓம் உக்ராய நமக!
ஓம் கபாலிநே நமக!
ஓம் காமாரயே நமக!

ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமக!
ஓம் கங்காதராய நமக!
ஓம் லலாடாக்ஷாய நமக!
ஓம் காலகாலாய நமக!
ஓம் க்ருபாநிதயே நமக!

ஓம் பீமாய நமக!
ஓம் பரசுஹஸ்தாய நமக!
ஓம் ம்ருகபாணயே நமக!
ஓம் ஜடாதராய நமக!
ஓம் கைலாஸவாஸிநெ நமக!

ஓம் கவசிநே நமக!
ஓம் கடோராய நமக!
ஓம் திரிபுராந்தகாய நமக!
ஓம் வ்ருஷாங்காய நமக!
ஓம் வ்ருஷபாரூடாய நமக!

ஓம் பஸ்மோத்தூவித விக்ரஹாய நமக!
ஓம் ஸாமப்ரியாய நமக!
ஓம் ஸ்வரமயாய நமக!
ஓம் த்ரயீமூர்த்தயே நமக!
ஓம் அநீச்வராய நமக!

ஓம் ஸர்வஜ்ஞாய நமக!
ஓம் பரமாத்மநே நமக!
ஓம் ஸேரமஸூர்யாக்நி லோசனாய நமக!
ஓம் ஹவிஷே நமக!
ஓம் யக்ஞ மாயாய நமக!

ஓம் ஸோமாய நமக!
ஓம் பஞ்சவக்த்ராய நமக!
ஓம் ஸதாசிவாய நமக!
ஓம் விச்வேச்வராய நமக!
ஓம் வீரபத்ராய நமக!

ஓம் கணநாதாய நமக!
ஓம் ப்ரஜாபதயே நமக!
ஓம் ஹிரண்ய ரேதஸே நமக!
ஓம் துர்தர்ஷாய நமக!
ஓம் கிரீசாய நமக!

ஓம் கிரிசாய நமக!
ஓம் அநகாய நமக!
ஓம் புஜங்க பூஷனாய நமக!
ஓம் பர்க்காய நமக!
ஓம் கிரிதன்வநே நமக!

ஓம் கிரிப்ரியா நமக!
ஓம் க்ருத்தி வாஸஸே நமக!
ஓம் புராராதயே நமக!
ஓம் பகவதே நமக!
ஓம் ப்ரமதாதியாய நமக!

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமக!
ஓம் ஸூக்ஷ்மதனவே நமக!
ஓம் ஜகத்வ்யாபினே நமக!
ஓம் ஜகத் குரவே நமக!
ஓம் வ்யோமகேசாய நமக!

ஓம் மஹா ஸேந ஐநகாய நமக!
ஓம் சாருவி க்ரமாய நமக!
ஓம் ருத்ராய நமக!
ஓம் பூதபூதயே நமக!
ஓம் ஸ்தாணவே நமக!

ஓம் அஹிர்புத்ன்யாய நமக!
ஓம் திகம்பராய நமக!
ஓம் அஷ்டமூர்த்தயே நமக!
ஓம் அநேகாத்மநே நமக!
ஓம் ஸாத்விகாய நமக!

ஓம் சுத்த விக்ரஹாய நமக!
ஓம் சாத்வதாய நமக!
ஓம் கண்டபரசவே நமக!
ஓம் அஜாய நமக!
ஓம் பாசவிமோசகாய நமக!

ஓம் ம்ருடாய நமக!
ஓம் பசுபதேயே நமக!
ஓம் தேவாய நமக!
ஓம் மஹாதேவாய நமக!
ஓம் அவ்யயாயே நமக!

ஓம் ஹரயே நமக!
ஓம் பஷதந்தபிதே நமக!
ஓம் அவ்யக்ராய நமக!
ஓம் பகதேத்ரபிதே நமக!
ஓம் தக்ஷாத்வரஹராய நமக!

ஓம் ஹராயே நமக!
ஓம் அவ்யக்தாய நமக!
ஓம் ஸஹஸ்ராக்ஷாய நமக!
ஓம் ஸஹஸ்ரபதே நமக!
ஓம் அபவர்க்கப்ரதாய நமக!

ஓம் அனந்தாய நமக!
ஓம் தாரகாய நமக!
ஓம் பரமேச்வராய நமக!

9.“சிவ கவசம்”- வேண்டுவன கிடைக்க, ஆரோக்கியம் அடைய- தினமும்/ நேரம் கிடைக்கும் போது.

அமுதமொழியாள் உமையவள் கணவ! 
அரிதரி தரிதனும் மனித்தப் பிறவி
அவனியில் எடுத்துழல் அடியேன் என்னை
அஞ்சலென்றருளிக் காத்திட வருக!
அக்கு வடந்தனை அணிந்தோய் வருக!
அங்கி அங்கை ஏற்றோய் வருக!
அச்சுறு புரந்தனை எரித்தோய் வருக!
அஞ்சலி புரிவோர்க்கு அருள்வோய் வருக!

அட்டமா குணங்கள் செறிந்தோய் வருக! 
அண்ணா மலைதனில் உறையோய் வருக!
அத்தி உரிதனை உடுத்தோய் வருக!
அந்தி வண்ணம் கொண்டோய் வருக!
அப்பும் ஆரும் மிலைந்தோய் வருக!
அம்மை அப்பனாம் வடிவோய் வருக!
அய்ந்தினை நிலமெலாம் உரியோய் வருக!
அர்ச்சனை ஆற்றுவார்க் கருள்வோய் வருக!

அல்லற் பிறவி அறுப்போய் வருக!
அவ்வியத் தக்கனை ஒறுத்தோய் வருக!
அள்ளிப் பருகும் அமுதோய் வருக!
அற்பொழுதெரி கொண்டாடுவோய் வருக!
மத்தம் மதியம் கூவிளம் அறுகு
தும்பை எருக்கு எழில்நீர் கங்கை
பொன்னெனப் பூத்துக் குலுங்கும் கொன்றை
யாவும் மிலைந்த முடியோய் வருக!

அன்னமென் நடையாள் வேட்டோய் வருக!
கண்டு தண்டாக் கவின் மிகு பொலிவு
மிளிரும் ஒளிமிகு முகத்தோய் வருக!
செங்கதிர் பரப்பும் ஞாயிறு வலப்பால்
தன்கதிர் பரப்பும் மதியம் இடப்பால்
தழலென ஞானம் பொழிவிழி நுதலில்
கொண்டு பொலியும் கண்ணா வருக!
விழுந்து பரந்த சடையோய் வருக!

நீறு பொலியும் நுதலோய் வருக!
குழைவளர் இசைநுகர் செவியோய் வருக!
கடல் நஞ்சேற்ற கழுத்தோய் வருக!
கல்லினும் வலிய தோளோய் வருக!
கொன்றை தவழும் மார்போய் வருக!
செறுநர் ஒறுக்கும் கரத்தோய் வருக!
அரவம் அசைத்த இடையோய் வருக!
உறுநர்த் தாங்கும் அடியோய் வருக!

குவளைக் கண்ணி கூறோய் வருக!
அடல்விடை மீதினிது அமர்ந்தோய் வருக!
அடியேன் என்னைக் காத்தற் பொருட்டுச் 
சூலம் சுழற்றி இன்னே வருக!
உயர்தனிச் சூலமென் உச்சி காக்க!
பிழையாச் சூலமென் பின்தலை காக்க!
முனைமலி சூலமென் முந்தலை காக்க! 
கூர்மலி சூலமென் குழல் காக்க!

நுண்ணிய சூலமென் நுதலினைக் காக்க!
புகழ்மலி சூலமென் புருவம் காக்க!
இலைமலி சூலமென் இடவிழி காக்க!
வலமலி சூலமென் வலவிழி காக்க!
இனையில் சூலமென் இமைகள் காக்க!
இகல்மலி சூலமென் இடச்செவி காக்க!
வலிமலி சூலமென் வலச்செவி காக்க!
கதிர்மலி சூலமென் கன்னம் காக்க!

நலிமலி சூலமென் நாசி காக்க!
வாட்டும் சூலமென் வாயினைக் காக்க!
நீண்ட சூலமென் நாவைக் காக்க!
பரமன் சூலமென் பற்களைக் காக்க!
ஊறுசெய் சூலமென் உதடுகள் காக்க!
மின்னுஞ் சூலமென் மிடறு காக்க!
பீடுடைச் சூலமென் பிடரி காக்க!
தோலாச் சூலமென் தோளினைக் காக்க!

மாறில் சூலமென் மார்பினைக் காக்க!
வச்சிரச் சூலமென் வயிற்றினைக் காக்க!
முக்கணன் சூலமென் முதுகினைக் காக்க!
வீறுடைச் சூலமென் விலாவினைக் காக்க!
அழுந்துஞ் சூலமென் அரைதனைக் காக்க!
பிளந்திடுஞ் சூலமென் பிருட்டம் காக்க!
கருத்திடுஞ் சூலமென் கழிகுறி காக்க!
கடுக்கும் சூலமென் கொப்பூழ் காக்க!

முத்தலைச் சூலமென் முழங்கை காக்க!
முனைமலி சூலமென் முன்கரம் காக்க!
அழித்திடுஞ் சூலமென் அங்கை காக்க!
புண்விளை சூலமென் புறங்கை காக்க!
பெம்மான் சூலமென் பெருவிரல் காக்க!
கூத்தன் சூலமென் குறிவிரல் காக்க!
நடுக்குஞ் சூலமென் நடுவிரல் காக்க!
அம்பலன் சூலமென் அணிவிரல் காக்க!

சிவன் திருச் சூலமென் சிறுவிரல் காக்க!
தொளைக்குஞ் சூலமென் தொடைதனைக் காக்க!
முந்துறுஞ் சூலமென் முழந்தாள் காக்க!
கனன்றெழுஞ் சூலமென் கணுக்கால் காக்க!
குலைக்குஞ் சூலமென் குதிகால் காக்க!
பாய்ந்திடுஞ் சூலமென் பாதம் காக்க!
நச்சுச் சூலமென் நரம்பெலாம் காக்க!
குத்திடும்ஞ் சூலமென் குருதி காக்க!

இடர்தரு சூலமென் இரைப்பை காக்க!
வதைக்குஞ் சூலமென் வளிப்பை காக்க!
குதறுஞ் சூலமென் குடரினைக் காக்க!
எத்துஞ் சூலமென் என்பெலாம் காக்க!
மூளெரிச் சூலமென் மூட்டெலாம் காக்க!
நாதன் சூலமென் நாடி காக்க!
மூவிலைச் சூலமென் மூளை காக்க!
மாய்க்குஞ் சூலமென் மேனி காக்க!

வருந்துஞ் சூலமென் வாதம் காக்க!
பிழையாச் சூலமென் பித்தம் காக்க!
சினந்திடுஞ் சூலமென் சிலேத்துமம் காக்க!
உலவாச் சூலமென் உயிரைக் காக்க!
உடலுரு பிணியும் உள்ளம் பிணியும் 
உன்னற்கரியா நீயெனைக் காக்க!
வான்மின் பொழுதும் வானிடி பொழுதும்
வான்மதிச் சடையா நீயெனைக் காக்க!

பெய்மழைப் பொழுதும் பொய்மழைப் பொழுதும் 
பெரும்புனற் சடையா நீயெனைக் காக்க!
இளவெயிற் பொழுதும் கடுவெயிற் பொழுதும் 
இளமான் கரத்த நீயெனைக் காக்க!
முன்பனிப் பொழுதும் பின்பனிப் பொழுதும் 
முறுவல் முகத்தா நீயெனைக் காக்க!
நிலவழி ஏகினும் நீர்வழி ஏகினும் 
நிகரில் பண்பா நீயெனைக் காக்க!

வனவழு ஏகினும் வான்வழி ஏகினும்
வரிப்புலியதளா நீயெனைக் காக்க!
மலைப்புறு மலைவழி ஏகுங் காலை
மலையாள் கணவா நீயெனைக் காக்க!
சென்றிடும் பொழுதும் நின்றிடும் பொழுதும்
செவ்வனல் வண்ணா நீயெனைக் காக்க! 
ஆடும் பொழுதும் ஓடும் பொழுதும் 
ஆடல் மன்னா நீயெனைக் காக்க!

அறிதுயிற் பொழுதும் நெடுந்துயிற் பொழுதும்
அறிதற்கரியா நீயெனைக் காக்க!
விழித்திடும் பொழுதும் எழுந்திடும் பொழுதும்
விரிமலர்ப் பாதா நீயெனைக் காக்க!
வடபால் ஏகினும் தென்பால் ஏகினும்
வயித்திய நாதா நீயெனைக் காக்க!
மேற்பால் ஏகினும் கீழ்ப்பால் ஏகினும்
மேதகு நீற்றா நீயெனைக் காக்க!

கோணத் திக்கெலாம் ஏகுங் காலை 
கொடுமழுப் படையா நீயெனைக் காக்க!
மேலே எழும்பினும் கீழே ஆழினும் 
மெய்யுரை நாவா நீயெனைக் காக்க!
புனல்மிகு பாயினும் அனல்மிகு பற்றினும் 
புரம் எரி விழியா நீயெனைக் காக்க!
விண்துலங்கிடினும் மண்துலங்கிடினும் 
விரிபட அரவா நீயெனைக் காக்க!

கேடு விளைவிக்கும் புயல்நனி வீசில் 
கேடிலியப்பா நீயெனைக் காக்க!
காலைப் பொழுதும் மாலை பொழுதும்
கால காலா நீயெனைக் காக்க!
வைகறைப் பொழுதும் மையிருட் பொழுதும்
வைந்நுதிப் படையா நீயெனைக் காக்க! 
ஏற்படு பொழுதும் உச்சிப் பொழுதும்
எண் வடிவீசா நீயெனைக் காக்க!

நாண்மீன் பிறழினும் கோண்மீன் பிறழினும் 
நாரி யண்ணா நீயெனைக் காக்க!
உண்ணும் பொழுதும் பருகும் பொழுதும்
உலக நாதா நீயெனைக் காக்க! 
கனமழை பொழியக் களிமண் செறிந்த
வழுக்கு நிலத்தில் உழலும் பொழுது
வழுவா வண்ணம் கோல் பெற்றாற்போல் 
வயிறு காய் பசிக் காற்றாராகி
யாண்டு நாடினும் உணவில்லை யாகப்
பொல்லா விதிக்கும் போகா வுயிர்க்கும்
நொந்து நொந்து நலியும் பொழுது 
கொளக் கொளக் குறையா அளஅள அஃகா
அமுது தரவல கலன் பெற்றாற்போல் 
நளியிரு முந்நீர் நாவாய் செல்ல
வளிமிகு வீச நாவாய் கவிழ
உய்வழியின்றி நையும் பொழுதில்
உய்வழி காட்டி உளமுவப் பூட்டும் உறுவலி
மாபெரும் புணை பெற்றாற்போல்
அதிர் கடல் தன்னில் அருங்கலந் தானும் 
செல்வழிச் செவ்வனே செல்லுழிச் செல்வழி
அந்தோ வழுவ அந்தி நேர 
மாதிரம் எங்கும் காரிருள் சூழக்
கரையெங்குளதென அறியா நிலையில் 
கரையிங் குளதென நலங்கரை துணையெனப்
பேரொளி பாய்ச்சும் கலங்கரை விளக்கம்
கண்ணுற்றாற்போல் எண்ணரு பிறவியில்
பலப்பல தாயரும் தந்தையாரும் 
பெற்றுப் பெற்றுப் பேதை யானும்
உழைக்க லாகாத் துயருள் உழல 
ஊன்று கோலென உறுபெரும் புணையெனக்
கலங்கரை விளக்கெனப் பெரும்பிணி மருந்தென 
நின் திருப்பாதம் காணப் பெற்றேன்!

நின்னருளாலே நின்தாள் பற்றினேன்!
நீயலால் இங்கு மெய்த் தாதை யுண்டோ!
உமையெலால் இங்கு மெய் அன்னை யுண்டோ!
திருவடி யல்லால் துணையும் உண்டோ!
திருநீறல்லால் காப்பும் உண்டோ!
திருமந்திரமலால் படையும் உண்டோ!
திருவருள் அல்லால் நிழலும் உண்டோ!
இந்நாள் காறும் பாவியான் இழைத்த
மாபெரும் பிழையும் சாலப் பொருத்துத்
தோள்திகழ் நீற்றனாய் என்முன் தோன்றிச்
சுந்தர நீற்றை எனக்கணிவித்து 
நாயோன் என்னைத் தூயோன் ஆக்கி
எனை ஆட் கொள்க! எனை ஆட் கொள்க! 
எனை ஆட் கொள்க எம்மான் நீயே!

10.“சிவகவசம்”- பஞ்சமா பாதங்கள், பகைகள், வறுமை நீங்க- விடபமுனி அருளியது-தினமும் /முடிந்தபோது.

பங்கயத் தவிசின் மேவி இருந்துடல் பற்று நீங்கி அங்கு நற்பூத சுத்தி அடைவுடன் செய்த பின்னர் கங்கையைத் தரித்த சென்னிக் கற்பகத் தருவைச் செம்பொற் கொங்கை வெற்பனை பச்சைக் கொடியொடும் உளத்தில் வைத்தே

அகில நாயகனாய் ஞான ஆனந்த ரூபியாகித் துகள் தரும் அனுவாய் வெற்பின் தோற்றமாம் உயிரை எல்லாம் தகவுடன் அவனியாகித் தரிப்பவன் எம்மை இந்த மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க!

குரைபுனல் உருவம் கொண்டு கூழ்தொறும் பயன்கள் நல்கித் தரையிடை உயிர்கள் யாவும் தளர்ந்திடா வண்ணம் காப்போன் நிரைநிரை முகில்கள் ஈண்டி நெடுவரை முகட்டில் பெய்யும் விரைபுனல் அதனுள் வீழ்ந்து விளிந்திடாது எம்மைக் காக்க!

கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுட் தீயால் நடலை செய்து அமலைதாளம் அறைதர நடிக்கும் ஈசன் இடைநெறி வளை தாபத்தில் எறிதரு சூறைக் காற்றில் தடைபடாது எம்மை இந்தத் தடங்கடல் உலகில் காக்க!

தூய கண் மூன்றினோடு சுடரும்பொன் வதனம் நான்கும் பாயும் மான் மழுவினோடு பகர் வரத அபயங்கள் மேயதிண் புயங்கள் நான்கும் மிளிரும் மின் அனைய தேசும் ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை அதனில் காக்க!

மான்மழு சூலம்தோட்டி வனைதரும் அக்க மாலை கூன்மலி அங்குசம் தீ தம்ருகம் கொண்ட செங்கை நான்முகம் முக்கண் நீல நள்ளிருள் வண்ணங் கொண்டே ஆன்வரும் அகோர மூர்த்தி தந்திசை அதனில் காக்க!

திவண்மறி அக்கமாலை செங்கையோர் இரண்டும் தாங்க அவிர்தரும் இரண்டு செங்கை வரதத்தோடு அபயம் தாங்கக் கவினிறை வதனம் நான்கும் கண்ணொரு மூன்றும் காட்டும் தவளாமாமேனிச் சத்தியோசாதம் மேல் திசையில் காக்க!

கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம் அறை தரு தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்திப் பொறைகொள் நான்முகத்தி முக்கட் பொன்னிற மேனியோடு மறைபுகழ் வாமதேவன் வடதிசை அதனில் காக்க!

அங்குசம் கபாலம் சூலம் அணிவரத அபயங்கள் சங்கு மான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தித் திங்களில் தவள மேனி திருமுகம் ஐந்தும் பெற்ற எங்கள் ஈசான தேவன் இரு விசிம்பெங்கும் காக்க!

சந்திரமௌலி சென்னி தனிநுதல் கண்ணன் நெற்றி மைந்து உறுபகன் கண் தொட்டோன் வரி விழிகில நாதன் கொந்துணர் நாசி வேதம் கூறுவோன் செவி கபாலி அந்தில் செங்கபோலந் தூய ஐம்முகன் வதனம் முற்றும்

வளமறை பயிலும் நாவன் நாமணி நீலகண்டன் களமடு பினாகபாணி கையினை தருமவாகு கிளர்புயம் தக்கன் யாகம் கெடுத்தவன் மார்பு தூய ஒளி தரு மேரு வில்லி உதர மன்மதனைக் காய்ந்தோன்

இடை இபமுகத்தோன் தாதை உந்தி நம் ஈசன் மன்னும் புடைவளர் அரை குபேர மித்திரன் பொருவில் வாமம் படர் சகதீசன் மன்னும் பாய்தரும் இடபகேது மிடைதரு கணைக்கால் எந்தை விமலன் செம்பாதம் காக்க!

வருபகல் முதல் யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம் பொறுவறு வாமதேவன் புகன்றிடு மூன்றாம் யாமம் செருமலி மழுவாள் அங்கை திரியம்பகன் நாலாம் யாமம் பெருவலி இடப ஊர்தி பிணியாற இனிது காக்க!

கங்குலின் முதல் யாமத்துக்துக் கலைமதி முடிந்தோன் காக்க! தங்கிய இரண்டாம் யாமம் சானவி தரித்தோன் காக்க! பொங்கிய மூன்றாம் யாமம் புரிசடை அண்ணல் காக்க! பங்கமில் நாலாம் யாமம் கௌரிதன் பதியே காக்க!

அனைத்துள காலம் எல்லாம் அந்தற் கடிந்தோனுள்ளும் தனிப்பெரு முதலாய் நின்ற சங்கரன் புறமும் தானு வனப்புறு நடுவும் தூய பசுபதி மற்றும் எங்கும் நினைத்திடற்கரிய நோன்மைச் சதாசிவ நிமலன் காக்க!

நிற்புழிப் புவன நாதன் ஏகுழி நிமல மேனிப் பொற்பிரமன் ஆதி நாதன் இருப்புழிப் பொருவிலாத அற்புத வேத வேத்தியன் அருந்துயில் கொள்ளும் ஆங்கண் தற்பல சிவன் வழிக்கு சாமள ருத்திரன் காக்க!

மலைமுதல் துருக்கம் தம்மில் புராரி காத்திடுக மன்னும் சிலைவலி வேடரூபன் செறிந்த கானகத்தில் காக்க! கொலையமர் கற்பத் தண்ட கோடிகள் குலுங்க நக்குப் பலபடி நடிக்கும் வீரபத்திரன் முழுதும் காக்க!

பல்லுளைப் புரவித் திண்தேர் படுமதக்களிறு பாய்மா வில்லுடைப் பதாதி தொக்கு மிடைந்திடும் எண்ணில் கோடி கொல்லியன் மாலை வைவேல் குறுகலர் குறுங்காலை வல்லியோர் பங்கன் செங்கை மழுப்படை துணித்துக் காக்க!

தத்துநீர்ப் புணரி ஆடைத் தரணியைச் சுமந்து மானப் பைந்தலை நெடிய பாந்தள் பஃறலை அனைத்துந் தேய்ந்து முத்தலை படைத்த தொக்கும் மூரிவெங்கனல் கொள்சூலம் பொய்த்தொழில் கள்வர் தம்மைப் பொருதழித்து இனிது காக்க!

முடங்களை முதலாய் உள்ள முழுவலிக் கொடிய மாக்கள் அடங்கலம் பினாகம் கொல்க என்றிவை அனைத்தும் உள்ளம் தடம்பட நினைந்து பாவம் செயும் சிவகசம் தன்னை உடன்பட தரிப்பையானால் உலம் பெருகுவுவ தோளாய்

பஞ்ச பாதங்கள் போம் பகைகள் மாய்ந்திடும் அஞ்சலில் மறலியும் அஞ்சி ஆட்செயும் வஞ்சநோய் ஒழிந்திடும் வறுமை தீர்ந்திடும் தஞ்சமென்றிதனை நீ தரித்தல் வேண்டுமால் சிதம்பரம் தனிலாடும் சுந்தரத் தெய்வம்!

11.“நமசிவாய தெய்வம்”- வாழ்வில் ஏற்றமடைய, உயர்வடைய - தினமும்/ நேரம் கிடைக்கும் போது.

நமசிவாயத் தெய்வம் நானறிந்த தெய்வம்!
சமயத்தில் துணைவரும் சதாசிவத் தெய்வம்!
இமையோர்கள் ஏத்தும் எழுல்மிகு தெய்வம்!
உமைதேவி ஓர்பாகமான அன்புத் தெய்வம்!

பிறவிப் பிணிதீர்க்கும் பெருந்துறைத் தெய்வம்!
புலியூரில் வாழும் பொற்சபைத் தெய்வம்!
அறிவாற்சிவனான ஆளுடை அடிகளை
அருகினில் கொண்ட அம்பலத் தெய்வம்!

சிதம்பரம் தனிலாடும் சுந்தரத் தெய்வம்!
பதஞ்சலி புலிப்பாணி போற்றும் தெய்வம்!
நிதம் சுகம் வாழ்வில் வளர்க்கும் தெய்வம்!
பதம் சொல் யாவையும் கடந்திடும் தெய்வம்!

நால்வர் நெஞ்சில் நிலைத்திட்ட தெய்வம்!
பால்போல் மனங்களில் பதிந்திடும் தெய்வம்!
வேல்விழி உமையாள் வணங்கும் தெய்வம்!
கால்தூக்கி ஆடும் கனகசபைத் தெய்வம்!

மறையீறும் அறியா முழுமுதல் தெய்வம்!
மூவருடன் தேவாசுரர் தொழுதிடும் தெய்வம்!
பிறைமதி உயிர்வாழ அருள்தந்த தெய்வம்!
பிறப்பும் இறப்பும் அற்றதோர் தெய்வம்!

ஆதியும் அந்தமும் இல்லாத தெய்வம்!
வேதம் நால்வர்க்கு ஓதிய தெய்வம்!
காதில் குழையுடன் தோடுடைத் தெய்வம்!
ஜோதி வடிவமாய் நின்றிடும் தெய்வம்!

பாண்டியனாய் மதுரையை ஆண்ட நல் தெய்வம்!
மீண்டும் வாரா வழியருள் தெய்வம்!
வேண்டுவோர் வேண்டுபவை வழங்கிடும் தெய்வம்!
தாண்டவ மூர்த்தியாய் திகழ்ந்திடும் தெய்வம்!

ஆலமுண்டு அமரர்க்கு அமுதீந்த தெய்வம்!
மாலுக்கு ஆழியை மகிழ்ந்தளித்த தெய்வம்!
பாலனுக்குப் பாற்கடல் பரிந்தளித்த தெய்வம்!
காலமெல்லாம் நம்மைக் காத்திடும் தெய்வம்!

பரிமேல் அழகனாய் விளங்கிய தெய்வம்!
கரியின் உரியைப் போர்த்திடும் தெய்வம்!
அரிவை பாதியாய் அமைந்திடும் தெய்வம்!
புரியாத பொருளாய் இருந்திடும் தெய்வம்!

கற்றார்க்கும் கல்லார்க்கும் உற்றதோர் தெய்வம்!
பெற்றவனாய் உயிர்களைக் காத்திடும் தெய்வம்!
போற்றினும் தூற்றினும் பொறுத்திடும் தெய்வம்!
ஐம்பெறும் பூதமாய் விளங்கிடும் தெய்வம்!

நம்பினோர்க்கு என்றும் நலமருளும் தெய்வம்!
இம்மைக்கும் மறுமைக்கும் துனைவரும் தெய்வம்!
மும்மை மலமறுத்து முக்திதரும் தெய்வம்!
வாயற்ற உயிர்களையும் வாழ்விக்கும் தெய்வம்!
பேய் என்ற போதினிலும் பொறுத்தருளும் தெய்வம்!
மாயப் பிறப்பறுக்கும் மகாதேவ தெய்வம்!
தாயாக மாறிவரும் தந்தையந்த தெய்வம்!
சிலந்திக்கும் குருவிக்கும் சிறப்பளித்த தெய்வம்!

வலம்தந்த குரங்கிறகு வாழ்வளித்த தெய்வம்!
எலியொன்று திரி தீண்ட உலகாளும் புலியாக
நில உலகில் புகழ்வீச வரம் தந்த தெய்வம்!
கல்லினுள் தேரைக்கும் கதியான தெய்வம்!

கருவான உயிருக்குப் பொருளான தெய்வம்!
சொல்லுக்குள் அடங்காத சிவமெனும் தெய்வம்!
சொல்லிவிடும் போதில் சிறப்பீயும் தெய்வம்!
அடியாரைக் காக்கும் அன்புமிகு தெய்வம்!

நெடியோனும் மலரவனும் காணாத தெய்வம்!
முடிவும் முதலுமாய் இருந்திடும் தெய்வம்!
வடிவென்று ஒன்றும் இல்லாத தெய்வம்!
எண்ணும் எழுத்துமாய் இருந்திடும் தெய்வம்!

இசையும் பொருளுமாய் இருந்திடும் தெய்வம்!
கண்ணின் மணியாய்க் காக்கும் தெய்வம்!
கயிலை என்னும் மலையில் வாழும் தெய்வம்!
உரைகள் கடந்து உயர்ந்திடும் தெய்வம்!

வரையின்றிக் கருணை பொழிந்திடும் தெய்வம்!
விரிசடையில் நதியேற்று உயிர்காத்த தெய்வம்!
இருசுடரைக் கண்களாய் கொண்டிடும் தெய்வம்!
அன்பர்கள் குறைதீர்க்க அவனிவந்த தெய்வம்!

துன்பங்கள் யாவும் இன்பமாக்கும் தெய்வம்!
புன்னகை ஒன்றால் புரமெரித்த தெய்வம்!
இன்னருள் காட்டியே ஏற்றம் தந்த தெய்வம்!
மன்மதன் பிழை பொறுத்து உயிர் அளித்த தெய்வம்!

என்பினை மாலையாய் ஏற்றிடும் தெய்வம்!
இன்னிசைப் பாடலில் இசைந்திடும் தெய்வம்!
பெண்ணாகி ஆணாகி அலியாகும் தெய்வம்!
ஓம்சிவம் சிவமென ஒலிக்கும் சிலம்பில்

நாம்துணை துணையென நவின்றிடும் தெய்வம்!
இராமனும் கண்ணனும் வணங்கிடும் தெய்வம்!
காமரூபம் அந்த சோமநாத தெய்வம்!
வித்தேதும் இன்றியே விளைத்திடும் தெய்வம்!

பக்தரின் சித்தமெல்லாம் பரவிடும் தெய்வம்!
நித்தம் ஒரு கோலம் கொண்டிடும் தெய்வம்!
தத்துவத்தின் பொருளாய்த் திகழ்ந்திடும் தெய்வம்!
பார்மீதில் பலபொருளாய் திகழ்ந்திடும் தெய்வம்!

யாரான போதும் அருள்தரும் தெய்வம்!
பேராயிரம் கொண்ட பெரியதோர் தெய்வம்!
வராத நெறிகாட்டிச் சேர்த்திடும் தெய்வம்!
முன்னைப் பழம்பொருட்கும் முற்பட்ட தெய்வம்!

மூவரையும் யவரையும் படைத்திடும் தெய்வம்!
ஐந்தொழில் புரிந்திடும் ஆதிமுதல் தெய்வம்!
அறிவுக்கு எட்டாத அம்மையப்ப தெய்வம்!
கணபதி என்னும் குழந்தையான தெய்வம்!

மணக்கோலம் கொண்ட சுந்தரேச தெய்வம்!
சின்மய ரூபம் கொண்ட யோகியான தெய்வம்!
பெண்ணொரு பாகம் கொண்ட போகி அந்தத் தெய்வம்!
ஓங்காரப் பொருளாய் ஒளிர்ந்திடும் தெய்வம்!

ஆங்காரம் தவிர்த்திடும் ஏகாந்த தெய்வம்!
நினைக்காத போதும் நலமருள் தெய்வம்!
அனைத்துலகும் ஈன்ற அன்புமயத் தெய்வம்!
நல்லவர் நாடிநிற்கும் நமசிவாய தெய்வம்!

நாளும் என் நெஞ்சில் வளர்ந்திடும் தெய்வம்!
பாலில் நெய்போல பரந்துள்ள தெய்வம்!
வேலனாகி வந்து நின்று விளையாடும் தெய்வம்!
எங்கும் எப்போதும் உடன்வரும் தெய்வம்!

எதிலும் சிவகாமி நிறைந்திடும் தெய்வம்!
ஒருமுறை சொன்னாலும் உயர்வருளும் தெய்வம்!
உள்ளத் தூய்மையைத் தந்திடும் தெய்வம்!
உலகெல்லாம் தானாய் ஓங்கிடும் தெய்வம்!

தென்பால் ஆடும் தெய்வமே பொற்றி போற்றி!
அன்பால் உன்னைத் துதித்தேன் போற்றி போற்றி!
உன்பால் நான் என்றும் போற்றி போற்றி!
எனை ஆட்கொள் ஈசனே போற்றி போற்றி!

12.“சிவ துதி”- வறுமை நீங்க, வளம் பெருக-வசிஷ்டர் அருளியது- தினமும் / வேண்டும் போது.

அனைத்து ஜீவன்களும் முக்தியடைய கைதூக்கி விடும் ஈசனே உன்னை வணங்குகின்றேன்! கர்ம பலன்களைச் சரியாக கொடுப்பவரே, பூத கணங்களின் அதிபதியே, உன்னை வணங்குகின்றேன்! இசையில் மிகுந்த இச்சை கொண்டுள்ளவரே, நந்தியை வாகனமாக கொண்டவரே, யாணைத் தோலை போர்த்தியவரே, மலை போன்ற வறுமை கொண்டோரையும் அந்த வருமைக் கடலிருந்து மீட்டு சந்தோஷம் என்ற வாழ்வை அருள்பவரே, மகேசனே உன்னை வணங்குகின்றேன்!

13.“சித்தபேச ஸ்தோத்திரம்”- நடராஜப்பெருமானை நினைத்து- மனக்கவலை அகல, நன்மைகள் பெருக

திருவாதிரை அபிஷேக காலத்தில் அழகு கோலம் காட்டும் ஈசனே, உமக்கு நமஸ்காரம். சந்தன அபிஷேகத்தால் சந்தோஷத்தை அடைகிறவரே, உலகத்தோர் அனைவரது மனக்கவலையையும் போக்கும் மஹாப் பிரதோஷ புண்ணிய காலத்து நாயகனே, உமக்கு நமஸ்காரம். பிரம்மா, நாராயணன், நந்திகேசர், நாரதமுனி இவர்களுடன் சேர்ந்து நர்த்தனம் செய்யும் நடராஜரே, சித்தபேசனே உம்மை வணங்குகின்றோம்.

14.“108 நடராஜர் போற்றி”-தினமும்

ஓம் நடராஜனே போற்றி! 
ஓம் நடன காந்தனே போற்றி!
ஓம் அழகனே போற்றி!
ஓம் அபய கரனே போற்றி!

ஓம் அகத்தாடுபவனே போற்றி!
ஓம் அஜாபா நடனனே போற்றி!
ஓம் அம்பலவானனே போற்றி!
ஓம் அம்சபாத நடனனே போற்றி!

ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி!
ஓம் அரவு அணிநாதனே போற்றி!
ஓம் அருள் தாண்டவனே போற்றி!
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி!

ஓம் ஆடலரசனே போற்றி!
ஓம் ஆனந்த தாண்டவனே போற்றி!
ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி!
ஓம் ஆடியடக்குபவனே போற்றி!

ஓம் ஆபத்பாந்தவனே போற்றி!
ஓம் ஆதிஷேசனுக்கு அருளியவனே போற்றி!
ஓம் இசையரசனே போற்றி!
ஓம் இன்னிசைப் பிரியனே போற்றி!

ஓம் ஈரெண்கரனே போற்றி!
ஓம் ஈர்க்கும் நடனனே போற்றி!
ஓம் உடுக்கை கையனே போற்றி!
ஓம் உன்மத்த நடனனே போற்றி!

ஓம் உண்மைப் பொருளே போற்றி!
ஓம் உமா தாண்டவனே போற்றி!
ஓம் ஊழித் தாண்டவனே போற்றி!
ஓம் கங்கணபாணியே போற்றி!

ஓம் கங்காதரனே போற்றி!
ஓம் கமல நடனனே போற்றி!
ஓம் கனக சபயனே போற்றி!
ஓம் கருணா மூர்த்தியே போற்றி!

ஓம் கங்காவதாரண நடனனே போற்றி!
ஓம் கால்மாறி ஆடியவனே போற்றி!
ஓம் காளிகா தாண்டவனே போற்றி!
ஓம் கிங்கிணி பாதனே போற்றி!

ஓம் குக்குட நடனனே போற்றி!
ஓம் கூத்தனே போற்றி!
ஓம் கூழ் ஏற்றவனே போற்றி!
ஓம் கௌரி தாண்டவனே போற்றி!

ஓம் கௌமாரப் பிரியனே போற்றி!
ஓம் சடை முடியனே போற்றி!
ஓம் சத்ரு நாசகனே போற்றி!
ஓம் சந்திர சேகரனே போற்றி!

ஓம் சதுர தாண்டவனே போற்றி!
ஓம் சந்தியா தாண்டவனே போற்றி!
ஓம் சம்ஹார தாண்டவனே போற்றி!
ஓம் சித் சபையனே போற்றி!
ஓம் சிவ சக்தி ரூபனே போற்றி!
ஓம் சுயம்பு மூர்த்தியே போற்றி!
ஓம் சுந்தர தாண்டவனே போற்றி!
ஓம் சூலதாரியே போற்றி!

ஓம் சூழ் ஒளியனே போற்றி!
ஓம் ஞானசுந்தர தாண்டவனே போற்றி!
ஓம் திரிபுராந்தகனே போற்றி!
ஓம் திரிபுர தாண்டவனே போற்றி!

ஓம் திருக் கூத்தனே போற்றி!
ஓம் திருவாதிரை நாயகனே போற்றி!
ஓம் திருநீற்றுப் பிரியனே போற்றி!
ஓம் தில்லை வாணனே போற்றி!

ஓம் துதிப்போர் பிரியனே போற்றி!
ஓம் துயர் துடைப்பவனே போற்றி!
ஓம் தேவ சபையோனே போற்றி!
ஓம் தேவாதி தேவனே போற்றி!

ஓம் நாத ரூபனே போற்றி!
ஓம் நாகராஜனே போற்றி!
ஓம் நாகாபரணனே போற்றி!
ஓம் நாதாந்த நடனனே போற்றி!

ஓம் நிருத்த சபையானே போற்றி!
ஓம் நிலவு அணிவோனே போற்றி!
ஓம் நீறணிந்தவனே போற்றி!
ஓம் நூற்றெட்டு தாண்டவனே போற்றி!

ஓம் பக்தர்க் கெளியவனே போற்றி!
ஓம் பரமதாண்டவனே போற்றி!
ஓம் பஞ்ச சபையானே போற்றி!
ஓம் பதஞ்சலிக்கு அருளியவனே போற்றி!
ஓம் பஞ்சாட்சார ரூபனே போற்றி!
ஓம் பாண்டியனுக்கு இரங்கியவனே போற்றி!
ஓம் பிழை பொறுப்பவனே போற்றி!
ஓம் பிருங்கி நடனனே போற்றி!

ஓம் பிரம்படி பட்டவனே போற்றி!
ஓம் பிறையணி நாதனே போற்றி!
ஓம் பிழம்பேந்தியவனே போற்றி!
ஓம் புலித்தோலணிவானே போற்றி!

ஓம் புஜங்க லலித தாண்டவனே போற்றி!
ஓம் பிரச்னரூபனே போற்றி!
ஓம் பிரதோஷ தாண்டவனே போற்றி!
ஓம் மண் சுமந்தவனே போற்றி!

ஓம் மழுவேந்தியவனே போற்றி!
ஓம் மான்கரனே போற்றி!
ஓம் முக்கண்ணனே போற்றி!
ஓம் முனி தாண்டவனே போற்றி!

ஓம் மும்மலமறுப்பவனே போற்றி!
ஓம் முயலக சம்காரனே போற்றி!
ஓம் முக்தி அருள்பவனே போற்றி!
ஓம் முகமண்டல தாண்டவனே போற்றி!

ஓம் ரஜத சபையனே போற்றி!
ஓம் ரட்சக தாண்டவனே போற்றி!
ஓம் ருத்ர தாண்டவனே போற்றி!
ஓம் ருத்ரட்சதாரியே போற்றி!

ஓம் ருண விமோசனனே போற்றி!
ஓம் லயிப்பவனே போற்றி!
ஓம் லலிதா நாயகனே போற்றி!
ஓம் வலிய ஆட்கொள்வோனே போற்றி!
ஓம் விரிசடையோனே போற்றி!
ஓம் விஞ்ஞகனே போற்றி!
ஓம் வினைதீர்க்கும் எம்மானே போற்றி! 
ஓம் போற்றி! ஓம்போற்றி! ஓம்போற்றி!

15.“சிவசடாட்சரதுதி”- சீரான வாழ்விற்கு- மார்கழி திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி நாட்களில்.

ஓங்காரமே பரப்பிரம்மம் அனைத்தும் ஓங்காரத்திலிருந்து தோன்றியவை. ‘அ’ கார ‘உ’ கார ‘ம’ கார சங்கமத்தினால் தோன்றிய ஓங்காரனுக்கு என் நமஸ்காரம்.
தேவதேவரே உமக்கு நமஸ்காரம், பரமேஸ்வரரே உமக்கு நமஸ்காரம். வெள்ளேற்று அண்ணலே நமஸ்காரம். ‘ந’ கார சொரூபரே உமக்கு நமஸ்காரம்
மகாதேவரும் மகாத்மாவும் மகாபாதங்களை அழிப்பவரும், நடராஜனுமாகிய ‘ம’ கார சொரூபனுக்கு நமஸ்காரம்.
க்ஷேமங்களை அளிப்பவரும் சாந்த ரூபரும், ஜகந்நாதனும், எல்லா உலகையும் காப்பவரும், க்ஷேமம் என்ற பதத்திற்கு இறைவனும் ‘சி’ கார சொரூபனும் ஆகியவருக்கு நமஸ்காரம்.
எவருக்கு காளை வாகனமோ, வாசுகி கழுத்தில் அணியாக உள்ளதோ, எவரின் இடப்பக்கம் அன்னை பராசக்தி இருக்கிறாளோ, அந்த ‘வ’ கார சொரூபருக்கு என் நமஸ்காரம்.
எந்த இடத்தில் எல்லாம் சர்வ வியாபியான மகேஸ்வரன் லிங்க உருவில் நாளும் பூஜிக்கப்படுகிறாரோ அங்கெல்லாம் அருளும் அந்த ‘ய’ கார சொரூபருக்கு நமஸ்காரம்.
சக்தியிடம் கூடிய ஓங்காரத்தை யோகிகள் நாளும் தியானித்து, அபீஷ்டங்களையும் மோஷத்தையும் பெறுகிறார்கள். அந்த ஓங்கார சொரூபருக்கு நமஸ்காரம்.
மகாதேவரே பரம மந்திரம், மகாதேவரே மேலான தவம். மகாதேவரே மேன்மையான வித்யை. மகாதேவரே அனைவருக்கும் போக்கிடம். அவருக்கு என் நமஸ்காரம்.
ஓம் நமசிவாய என்றுகூறி லிங்கத்தை வழிபடுவோர்க்கு ஆசைகளைத் தீர்த்து மோஷத்தை அளிக்கவல்ல விச்வ ரூபருக்கு நமஸ்காரம்.
சோமன், நட்சத்திரங்கள், போலன்றி ஸ்வயம் பிரகாசமாயும் எந்தவிதமான தளையோ தடையோ அல்லாதவரும் ஆனவருக்கு நமஸ்காரம்.
மகாதேவரும் பெரும் ஜோதி சொரூபரும், எல்லையற்ற தேஜசை உடையவரும், சாந்த மூர்த்தியும், பிரம்மமும், லிங்கமூர்த்தியுமான சிவனுக்கே நமஸ்காரம்.
ஓங்காரமானவரும், விஷேசமானவரும், துந்துபி வாத்தியத்துக்குரியவரும், ருத்ரரும், பிரதான தெய்வமுமான நம சிவாயத்தை வணங்குகிறேன்.
சர்வ லோகங்களுக்கும் குருவானவரும், எல்லா பாவ நோய்களையும் தீர்க்கும் மருந்தீஸ்வரரும், எல்லா வித்யைகளுக்கும் ஆதார நிதியாக இருப்பவருமான தட்சிணா மூர்த்தியை வணங்குகிறேன்.
ஞானநந்தரும், ஞானரூபரும் அனைத்து ஞானங்களுக்கும் ஆணிவேராய் இருப்பவரும் தவத்தின் பலனைக் கொடுப்பவரும், எல்லாச் செல்வங்களையும் அளிப்பவருமான சநாதனரை- ஆதி முதல்வனை வணங்குகின்றேன்.
சத்யமானவரும், பரபிரம்ம புருஷரும், அர்த்தநாரீஸ்வரரான சிவனின் இடப்பாகமர்ந்த அன்னை கருமை நிறம், அண்ணலின் வடபாகம் சிவப்பு. பவளம் போன்ற மேனியான கிருஷ்ண பிங்களரும், அப்பாலுக்கு அப்பாலானவரும் விசேஷமான கண்களையுடையவரும், விஸ்வ ரூபியுமானவரை நமஸ்கரிக்கின்றேன்.
எல்லா இஷ்டங்களையும் சித்திக்கச் செய்பவரும், இரவானவரும், பகலுமானவரும், உமாபதியும், எல்லா வித்யைகளுக்கும் அதிபதியானவரும், எல்லா ஈஸ்வரர்களுக்கும் மேலான சர்வேஸ்வரராக தாமேயானவருமாகியவரை நமஸ்கரிக்கின்றேன்.
பசுக்கூட்டங்கள், தனம், தீர்க்காயுள், பலம், மக்கள், மற்றும் அனைத்து வளங்களும் மகாவிஷ்ணு போன்ற வளமும் சிவ சங்கல்பத்தால் நிச்சயம் கிடைக்கும். உன்னை நமஸ்கரிக்கின்றேன்.
சத்யம்-அன்னை, ஞானம்-தந்தை, தர்மம்-தமையன், கருணை-நண்பன், சாந்தி-பத்தினி, பொறுமை-சகிப்புத்தன்மை-பிள்ளைகள், என்ற ஆறு வகையான பந்தங்கள் அனைத்தும் எனக்கு நீயே. யாவுமாக நீயே இருந்து காப்பவன் நீயே. உன்னைப் பணிகிறேன். உனக்கு நமஸ்காரம்.
சிவசிவ சிவாய நமக! நமசிவாய சிவசிவ சிவாய நமக! சிவசிவ சிவாய நமக!

16.“சிவபஞ்சாக்ஷர துதி”ஆதிசங்கரர்-தினமும்

நாகபதி மலையானே! நயனங்கள் மூன்றானே!
ஆகமணி நீற்றானே! அருந்தேவா பேரீசா!
ஆகுநித்யா! தூயவனே! ஆர்திசையின் ஆடையனே!
நாகமுறை நகாரனே! நமசிவாயனே! போற்றி!

மன்மங்கை நீர்ச்சாந்தம் மணங்கமிழ்ப் பூசிட்டோய்!
தொல்நந்தி ப்ரமதபதி தூத்தலைவா! மகேசனே!
நல்மண மந்தாரமுதல் நறைமலராற் பூசை கொள்வோய்!
நல்லுறவே மகாரனே! நமசிவாயனே போற்றி!

சிவமூர்த்தி! கவுரிமுக சீர்க்கமல வனமலர்த்தும்
நவக்கதிரே! தட்சமகம் நசித்திட்டோய்! நீலகண்டா!
துவண்டாடும் விடைக்கொடியைத் தூக்கியவா! தொல்பொருளே!
நவநவத்தோய்! சிகாரனே! நமசிவாயனே போற்றி!

வசிட்டமுனி கலசமுனி கௌதம மா முனிவோர்கள்
இசைவானோர் அருச்சிக்கும் எந்தை! அரசேகரனே!
மிசைக்கதிரோன் திங்கள், தீ விழிமூன்றாய் ஆனவனே!
நசிவில்லாய்! வகாரனே நமசிவாயனே! போற்றி!

யட்ச உரு எடுத்தோனே! எழிலாரும் சடைதரித்தோய்!
இச்சையுடன் பினானமதை எந்ந்து திருக்கையானே!
அட்சரனே! சிறந்தோனே! அருந்தெவா! திகம்பரனே!
நட்புல யகாரனே! நமசிவா யனே! போற்றி!

சிவனுடைய பஞ்சாட்சரத்தால் சேர்த்திட்ட இதை
சிவ சந்நிதிமுன் செப்பிடுவர் யாவரவர்
சிவனுலகை அடைந்து, பின் சிவனோடு ஒன்றி
சிவனுடைப் பேரானந்தம் சார்ந்ததனில் ஆழ்குவர்.

17.“நோய் தீர்க்கும் பதிகம்”- திருநீற்றின் மகிமை- ஞான சம்பந்தர் அருளியது- நோய்தீர எப்போதும்.

மந்திரம் ஆவது நீறு. வானவர் மேலது நீறு. சுந்தரம் ஆவது நீறு. துதிக்கப்படுவது நீறு. தந்திரம் ஆவது நீறு. சமயத்தில் உள்ளது நீறு. செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாய் திருநீறே!

வேதத்தில் உள்ளது நீறு. வெந்துயர் தீர்ப்பது நீறு. போதம் தருவது நீறு. புன்மை தவிர்ப்பது நீறு. சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆலவாயாம் திரு நீறே!

முக்தி தருவது நீறு. முனிவரணிவது நீறு. சத்யம் ஆவது நீறு. தக்கோர் புகழ்வது நீறு, பக்தி தருவது நீறு. பரவ இனியது நீறு. சித்தி தருவது நீறு, திரு ஆலவாயான் திருநீறே!

காண இனியது நீறு. கவினைத் தருவது நீறு. பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு. மரணம் தகைவது நீறு. மதியைத் தருவது நீறு. சேணம் தருவது நீறு. திரு ஆலவாயான் திருநீறே!

பூச இனியது நீறு. புண்ணியமாவது நீறு. பேச இனியது நீறு. பெருந்தவத்தோர்களுக்கு எல்லாம் ஆசை கொடுப்பது நீறு. அந்தமாவது நீறு. தேசம்புகழ்வது நீறு. திரு ஆலவாயான் நீறே!

அருத்தமாவது நீறு. அவல மறுப்பது நீறு, வருத்தம் தணிப்பது நீறு, வானம் அளிப்பது நீறு. பொருத்தம் ஆவது நீறு. புண்ணியர் பூசும் வெண்ணீறு. திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே!

எயிலது அட்டது நீறு. இருமைக்கும் உள்ளது நீறு. பயிலப்படுவது நீறு. பாக்கியாமாவது நீறு. துயிலை தடுப்பது நீறு. சுத்தமாவது நீறு. அயிலைப் பொலிதரு சூலத் திரு ஆலவாயான் திருநீறே!

இராவணன் மேலது நீறு. எண்ணத் தகுவதுநீறு. பராவணம் ஆவது நீறு. பாவம் அறுப்பது நீறு. தராவணம் ஆவது நீறு. தத்துவம் ஆவது நீறு. அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே!

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக் கண் திகைப்பிப்பது நீறு. கருத இனியது நீறு. எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு. அண்டத்து அவர் பணிந்து ஏத்தும் ஆலவாயன் திருநீறே!

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி ஆயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!

அபிராமி பட்டர் அருளியது

மணியே! மணியின் ஓளியே! ஒளிரும் மணிபுனைந்த அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப் பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே! பணியேன் ஒருவரை நின் பதம பாதம் பணிந்த பின்னே!

18.“திருநீற்றுத்துதி”-திருநீற்றின்மகிமை-ஸ்காந்தபுராணம்-திருமகளின் அருள் சேர.

தரித்துக் கொண்ட உடனே எல்லா பாவங்களையும் போக்கவல்லது விபூதி. அதை ஜபிப்பதாலும், சிறிதளவு உட்கொள்வதாலும், பூசிக்கொள்வதாலும் எல்லா சுகங்களையும் அளிப்பது. எல்லாவற்றையும் தரக்கூடியது என்பதாலேயே அதற்கு பஸ்மம் என்ற பெயர் ஏற்பட்டது.

உரிய மந்திரங்களைச் சொல்லி சரியான முறையில் தயாரிக்கப்பட்ட விபூதியை எவனொருவன் தரிக்கிறானோ, அவனுடைய எல்லா பாவங்களும் விலகுவதோடு அவனுடைய எல்லா விருப்பங்களும் கைகூடலாகும்.

பார்வதியின் பதியான பரமேஸ்வரனுடைய மகிமையை எப்படி எவராலும் அறிய முடியாதோ, அவ்வாறே திருநீறின் உயர்வையும் எவராலும் அறிய முடியாது என்பது வேத வேதாந்தங்களில் கரை கண்ட பெரியோர்களின் வாக்கு.

முனிவர்களுக்கு விபூதியின் மகிமையை உபதேசிக்கும் விதமாக இந்தத்துதி அமைந்திருப்பதால், முனிவர்களே என்றழைத்து கூறப்பட்டுள்ளது. இதையே நமக்கான உபதேசமாகவும் கொள்ளவேண்டும்.

மனித ஆன்மாக்களே, திருநீறை நீரில் குழைத்து நெற்றி, கழுத்து, மார்பு, வயிறின் இருபக்கங்கள், தோள்கள், கைகளின் மேல்பாகம், கைகளின் நடுபாகம், மணிக்கட்டுகள், முதுகு, பிடரி ஆகிய பதினைந்து இடங்களிலும் மூன்று கோடுகளாக தரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மும்மூர்த்திகள் உள்ளிட்ட எல்லோராலும் வணங்குவதற்குரிய பெருமையைப் பெற்றவர்களாவார்கள். சகல செல்வங்களும் அவர்களைத் தேடிவந்து சேரும். திருமகள் அருள் பரி பூரணமாகக் கிட்டும்.

19.“சிவபார்வதி துதி"-வற்றாதசெல்வம், குன்றாத ஆயுள் பெற- ஈசன்-சிவ, ஈஸ்வரி-சிவா -சிவசிவா ஸ்துதி சிறப்பு

கயிலை நாதரான கிரீசரைப் போற்றுகிறேன். மலையரசன் மகளான கிரிஜாவை வணங்குகிறேன். ரிஷபக் கொடியுடையவருக்கு நமஸ்காரம். நமஸ்காரம். சிம்மக் கொடியைக் கொண்ட சிவைக்கு வணக்கம்.

மகிமை மிக்க விபூதியை தரிப்பவருக்கு வணக்கம். சந்தனாபிஷேகப்பிரியரைப் போற்றுகிறேன். வணக்கம். கொம்பின் நுனி போன்ற கூர்விழியாள் ஈஸ்வரிக்கு வணக்கம். தாமரை கண்ணாளைப் போற்றித் துதிக்கிறேன்.

திரிசூலமேந்தியவரே, உமக்கு நமஸ்காரம். ஒளிரும் தாமரையைக் கையில் ஏந்தியவளுக்கு வணக்கம். திசைகளையே ஆடைகளாகக் கொண்ட திகம்பரருக்கு நமஸ்காரம். பல வண்ண ஆடைகள் உடுத்தும் சிவைக்கு போற்றி வணக்கம்.

சந்திரனை அணியாகக் கொண்டவருக்கு வணக்கம். ஒளிரும் பல ஆபரணங்களை அணிந்து திகழும் சிவைக்கு நமஸ்காரம். பொன்னாலான தோடுகளை அணிந்தவர்க்கு வணக்கம். ரத்னங்கள் பதித்த காது வளையங்களணிந்த சிவைக்கு நமஸ்காரம்.

த்ரிபுராகரனை அழித்தவனே போற்றி. மது என்னும் அரக்கனை அழித்தவரே போற்றி. அந்தகனை அழித்தவரே போற்றி. கைடபரை அழித்தவரே போற்றி. வணக்கம்.

பரம ஞான வடிவானவர்க்கு நமஸ்காரம். வானமழைபோல் அருளை அள்ளிப் பொழியும் சிவைக்கு வணக்கம். பனித்த சடையுடைய ஜடாதரனைப் போற்றுகிறேன். வணக்கம். கருநாகம் போன்ற கருங் குழலை உடையவளுக்கு வணக்கம்.

கற்பூர வாசனையில் மகிழ்பவரே போற்றி. குங்குமம் தரிப்பதில் ஆனந்திக்கும் சுந்தரியாளே போற்றி. வில்வம், மாம்பழம் ஆகியவற்றை பிரசாதமாக விரும்பி ஏற்றுக் கொள்பவரே நமஸ்காரம். மல்லிகை மணத்தால் கவரப்பட்டவளே! வணக்கம்.

பூமண்டலம் அனைத்தையும் அலங்கரிப்பவரே வணக்கம். அழகான அபூர்வமான மணிகளாலான ஆபரணங்களால் ஜொலிப்பவளே வணக்கம். வேத வேதாந்தங்களால் போற்றப்படுபவருக்கு வணக்கம். அந்த விஸ்வேஸ்வரராலேயே நாளும் போற்றப் படுபவளுக்கு நமஸ்காரம்.

அனைத்து தேவர்களாலும் பூஜிக்கப்படுபவருக்கு வணக்கம். பத்மா/ மகாலட்சுமியால் சமர்ப்பிக்கப்பட்ட பாதுகையை உடையவனுக்கு வணக்கம். சிவையால் ஆலிங்கனம் செய்யப்பட்ட சிவனுக்கு நமஸ்காரம். சிவனால் ஆலிங்கனம் செய்யப்பட்ட சிவைக்கு வணக்கம்.

உலகின் ஆதியான பிதாவைப் போற்றுகிறேன். வணக்கம். மலைமகளாகிய மகேஸ்வரிக்கு வணக்கம். மன்மதனை அழித்தவரே போற்றி. பக்தர்கள் வேண்டியவற்றை நிறைவேற்றும் காமாட்சியே போற்றி.

பிரபஞ்சத்தை ஆலகால விஷத்திலிருந்து காப்பாற்ற தானே அதை உண்டவரே. வணக்கம். அமுதத்தையே தானாக வரித்து அமுத மயமானவளே வணக்கம். உலக ரட்சகரான மகேஸ்வரனுக்கு வணக்கம். மணம் கமழும் சந்தன மயமான தேவிக்கு வணக்கம். உலகத்துக்கே தாயும் தந்தையுமாக விளங்கும் உமாமகேஸ்வரனுக்கு வணக்கம். உமது ஆசியால் சகல வளமும் பெருகிட அருள்வீராக,

20.“உமா மகேஸ்வரர் துதி” - ஆதிசங்கரர்- குடும்ப வாழ்க்கையில் மங்களகரமான பலன்கள் பெற -தினமும்
என்றைக்கும் இளமையானவர்களும், உலகங்களுக்கு சர்வ மங்களத்தை அளிப்பவர்களும், பார்வதியை மணக்க வேண்டும் என்று பரமசிவன் தவம் செய்ய, பரமசிவனை மணக்க வேண்டும் என பார்வதி தவம் செய்ய, அதனால் ஒரே சரீரத்தில் இணைபிரியாது இருப்பவர்களும், மலையரசனின் மகளான உமாவுக்கும், காளைக் கொடியுடைய மகேஸ்வரனுக்கும் எனது வணக்கங்கள்.

ஆனந்தத்தைத் தரும் திருவிழாக்களை உடையவர்களும், காதலர்கள்போல எப்போதும் ஒன்றாயிருப்பவர்களும், தம்மை வணங்கும் பக்தர்களுக்கு, விரும்பியதையெல்லாம் அளிப்பவர்களும், மகாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்டு, அர்ச்சனை செய்யப்பட்ட பாதுகையை உடையவர்களுமான உமா மகேஸ்வரர்களான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

காளையை வாகனமாகக் கொண்டவர்களும், தர்மத்தை தாங்கி நிற்பவர்களும், படைக்கும் கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு, மூவுலகிற்கும் அதிபதியான தேவராஜன் ஆகியோரால் பூஜிக்கப்படுபவர்களும், விபூதி வாசனை சந்தனம் ஆகியவற்றைப் பூசிக்கொண்ட அர்த்தநாரீஸ்வரரான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

உலகத்தை காக்கின்றவர்களும், உலகின் தலைவன் தலைவியும், வெற்றிதரும் மங்களமான் உருவத்தைக் கொண்டவர்களும், ஜம்பாகரனைக் கொன்ற தேவேந்திரன் போன்றவர்களால் கால்களில் விழுந்து வணங்கப் படுபவர்களுமான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

கஷ்டங்களுக்கும் குடும்ப பந்தத்திற்கும் மருந்தாக இருப்பவர்களும், நமசிவாய என்ற மந்திரத்தில் ஆனந்தமாக வசிப்பவர்களும், உலகம் அனைத்தையும் படைத்து, காத்து, தீயதை அழித்து ஆகிய மூன்று தொழில்களையும் புரிபவர்களான சிவ தம்பதிகள் சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

மிகச் சிறந்த அழகுடையவர்களும், இணைபிரியாத மனம் உடையவர்களும், எல்லா உலகங்களுக்கும் நிகரற்ற நன்மை செய்கிறவர்களும், ஆகிய சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

கலிதோஷத்தை நாசம் செய்து காப்பாற்றுகிறவர்களும், உடலில் ஒரு பதியில் அஸ்தியான சாம்பல் ஆபரணமும், மறு பாதியில் மங்கள ஆபரணங்களும் அணிந்தவர்களும், கயிலாயம் என்னும் மலையில் வீற்றிருக்கும் கண்கண்ட தெய்வங்களான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

தீய விஷயங்களையும் பாவத்தையும் முற்றிலும் அழிப்பவர்களும், எல்லா உலகங்களிலும் ஒப்புயர்வில்லாமல் சிறப்பானவர்களும், எங்கும் தடைபடாதவர்களும், நினைத்தபோதெல்லாம் பக்தர்களைக் காக்கின்றவர்களுமான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.
தம்பதிகளாக ரதத்தில் செல்பவர்களும், சூரியன், சாந்திரன், அக்னி ஆகிய மூவரையும் முக்கண்களாகப் பெற்றவர்களும், பதினாறு கலைகளுடன் பரிபூரணமாகப் பிரகாசிக்கும் சந்திரன் போல ஒளிவீசும் தாமரைக்கு ஒப்பான முகமுடையவர்களும் ஆகிய உமா மகேஸ்வரரான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

கூந்தலையும் ஜடாமுடியும் தாங்கியவர்களௌம், பிறப்பு, இறப்பு இல்லாதவர்களும், மகாவிஷ்ணு, தாமரையில் உதித்த பிரம்மா ஆகிய இருவரால் பூஜிக்கப்படுகின்ற சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

மூன்று கண்களையுடையவர்களும் வில்வ மாலையையும், மல்லிகை மாலையையும் தரிப்பவர்களும், அழகிய சுந்தரிகளில் சிறந்தவளான தலைவியும், அடக்கமுள்ளவர்களில் சிறந்தவரான தலைவனும் ஆகிய உமா மகேஸ்வரர் ஆகிய இருவருக்கும் வணக்கம்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள பசுக்களான மனிதர்களை காப்பாற்றுகிறவர்களும், பக்தர்களுக்கு ஞானம் அளித்து, முக்தியையும் அளிப்பவர்களும், மூவுலகத்தையும் காப்பதென்று முடிவெடுத்து, அது பற்றியே எப்போதும் யோசிப்பவர்களும், தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்படுபவர்களுமான சங்கரர், பார்வதி ஆகிய இருவருக்கும் வணக்கம்.

21.“ஸ்ரீதட்சிணாமுர்த்தி துதி”- குழந்தைபருவம், வாலிபம், முதுமை, விழிப்பு, சொப்பனம் முதலிய மாறுபாடுகள் ஊடே ‘நான்’ என என்றும் மாறுபடாமல்-சிவன் தன்னை வெளிப்படுத்துதல்- வியாழன் மற்றும் பௌர்ணமி.

தன் இடது மடியில் இருத்தி பர்வத ரஜகுமாரியாகிய பார்வதிதேவியை அனைத்துக் கொண்டிருக்கும் ஈசனே, வணக்கம். கையில் நீலோத்பல மலரை ஏந்தி இளமைமிக்கவளாய் சந்திர ஒளிபோன்ற முகத்தையுடைய அம்பிகையை காதலுடன் பார்க்கின்றவரே, வணக்கம். அம்பாளை அனைத்த தன் திருக்கரத்தினால் புத்தகத்தையும் கீழ்க்கரத்தில் அமிர்தம் நிரம்பிய கும்பத்தையும் இன்னொரு கரத்தில் ஞானமுத்திரையையும், வேறொரு கரத்தில் முத்துமயமான ஜபமாலையையும் தரித்திருக்கிறவரே, தட்சிணாமூர்த்தியே, உமக்கு எனது வணக்கங்கள்.

மௌனமான விளக்கத்தாலேயே பரப்பிரம்ம தத்துவத்தைப் பிரகடனம் செய்பவரும், யுவவடிவினரும் மிகவும் கிழவர்களான பிரம்ம நிஷ்டர்களான ரிஷிகளாகிய சிஷ்யர்களால் சூழ்ப்பட்டவரும், ஆனந்தரூபியும், தன் ஆன்மாவிலேயே ரசிப்பவரும், நகைமுகத்தினருமான தக்ஷிணாமூர்த்தியே உமக்கு எனது வணக்கங்கள்.

கண்ணாடியில் காணும் நகரம் போன்றதும், தனக்குள்ளேயே இருப்பதுமான இவ்வுலகை, தூக்கத்தில் தன்னொருவனிடமிருந்தே பலவற்றை உண்டாக்கிக் கனவு காண்பதுபோல் மாயையினால் வெளியில் உண்டானதைப்போல் பார்த்துக் கொண்டு எந்த ஜீவன் தூங்கி விழித்த சமயம்- ஞானம் வந்த சமயத்தில், இரண்டில்லாத யாவற்றிற்கும் காரணமாகிய தன் ஆத்மாவையே நேரில் நான்தான் அந்த ஆத்மா என்று உணருகிறானோ, அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய தெய்வமான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு இந்த எனது வணக்கங்கள் உரித்தாகுக.

விதையின் உள்ளே முளையிருப்பது போல் சிருஷ்டிக்கு முன்பு வேற்றுமையில்லாததும் சிருஷ்டிக்குப் பிறகு ஈசனின் சக்தியாகிய மாயையினால் கற்பித்த தேசம் காலம் அவற்றின் சேர்க்கை ஆகிய வேற்றுமையினால் பற்பல விதமாயிருக்கின்றதுமான இந்த உலகை, எவர் இந்திரஜாலம் செய்பவனைப் போலவும் தன் இஷ்டத்தினாலேயே சிருஷ்டிக்கிறாரோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய தெய்வமான ஸ்ரீதக்ஷிணாமூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

எந்த பரமாத்மாவினுடைய சத்ரூபமானது, எக்காலத்திலும் எந்த தேசத்திலும் இருக்கிறது என்ற அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயமான, வெளிப்பாடே இல்லாமலிருக்கும் பொருளுக்கு ஒப்பான வெளி வஸ்துகளை அடைந்து விளங்குகிறதோ, அதாவது புறபிரபஞ்சம் போல விளங்குகின்றதோ, சரணம் அடைந்தவர்களை நியே பரமாத்மாவாக இருக்கிறாய், தத்துவம் அஸி என்ற வேத வாக்யத்தினால் நேருக்கு நேராகவே எவர் தத்வஸ்வரூபமான ஆத்மாவை அறிவிக்கிறாரோ, எவரை நேராக அனுபவிப்பதால் பிறவியென்னும் கடலில் மறுமுறை வருகை உண்டாகாதோ, அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

பற்பல ஓட்டைகளோடு கூடிய குடத்தின் உள்ளே இருக்கின்ற விளக்கின் ஒளி அந்த ஒட்டைகள் மூலம் கசிவது போல் எந்த ஆத்மாவினுடைய அறிவு, கண் முதலிய புலன்கள் வழியாக வெளியில் செல்லுகிறதோ, நான் அறிகிறேன் என்று விளங்குகிற அந்த ஆத்மாவான யாதொன்றையே இந்த எல்லாமான உலகமும் பின்பற்றி விளங்குகிறதோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

உடலையும், உயிர் மூச்சையும் புலன்களையும் கணத்திற்கோர்முறை மாறுகின்ற புத்தியையும் ஒன்றுமில்லாத சூன்ய நிலையையும் ‘தான்’ என்று தத்வவாதிகள், பெண்கள், குழந்தைகள், அறிவற்றவர்கள் இவர்களுக்கு ஒப்பாக மிகவும் ஏமாந்தவர்களாக அறிந்தார்கள். இவ்வாறு மாயா சக்தியின் விலாசங்களால் உண்டாக்கப்பட பெரும் மயக்கத்தை அகற்றும் அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

எந்த ஆத்மா தூக்கத்தில் மாயையினால் மூடப்பட்டிருப்பதால் ராகு மறைத்த சூர்ய சந்திரர்களுக்கு ஒப்பாக ஸத் (இருத்தல்) ரூபமாக மட்டும் இருந்து கொண்டு இந்திரியங்களை செயலற்றவனாக அடக்கி இருந்தானோ, எந்த ஆத்மா விழித்துக்கொண்ட சமயத்தில் முன்பு இதுவரையில் தூங்கினேன் என்று நினைக்கப்படுகின்றானோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

குழந்தைப் பருவம், இளமை, முதுமை முதலானதும் அப்படியே ஜாக்ரத்- விழிப்பு, கனவு, தூக்கம் முதலானதுமான வேறுபட்ட எல்ல அவஸ்தைகளிலும் வேறுபடாமல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதும், எப்பொழுதும் நான் என்று உள்ளே விளங்குவதுமான தன்னைக் காட்டிலும் வேற்றுமை இல்லாத பரமாத்மாவை, தன்னை சேவிப்பவர்களுக்கு எந்த தக்ஷிணாமூர்த்தி மங்களமான சின் முத்திரையினால் பிரத்யட்சமாகக் காண்பிக்கிறாரோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

தூக்கத்திலோ, விழிப்பிலோ எந்தஒரு ஆத்மா மாயையினால் பற்பல மருளை அடைவிக்கப்பட்டவராக இந்த உலகை காரிய காரணத்தன்மையோடும், தான்- தன் தலைவன் என்ற உறவோடும், சீடன்- ஆசான் என்ற தன்மையோடும், அப்படியே தகப்பன் மகன் என்றும் பற்பல வேற்றுமையை உடையதாகப் பார்க்கிறாரோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

எந்த பரமேஸ்வரனுக்கே பூமி, ஜலம், அக்னி, காற்று, சூரியன், சந்திரன், உயிர் என்று இவ்விதம் இந்த அசைகின்றதும் அசையாததுமான எட்டு உருவம் பிரகாசிக்கின்றதோ, உலகத்தின் உண்மையை சோதிக்கின்றவர்களுக்கு எங்கும் நிறைந்த எந்த பரமாத்மாவைக் காட்டிலும் வேறு ஒன்றும் இல்லையோ அந்த சச்சிதானந்த சம்பத்து பொருந்திய குருவின் உருவமுடைய தெற்கு நோக்கிய ஸ்ரீதக்ஷிணா மூர்த்திக்கு எனது வணக்கங்கள்.

இந்த துதியில் எல்லாம் ஒரே ஆத்மரூபம் என்ற தத்துவம் எவ்வாறு விளக்கப் பெற்றிருக்கிறதோ அவ்வாறு அறிவதால், இந்த துதியை கேட்டாலும், இதன் பொருளை மனதால் சிந்திப்பதாலும், தியானம் செய்வதாலும் பிறருக்கு நன்றாகச் சொல்வதாலும் எல்லாமும் ஒரே ஆத்மாவாக இருக்கும் நிலையாகிய பெரிய ஐச்வர்யத்தோடு கூடிய பரமாத்ம தன்மை ஏற்படும். மேலும் எட்டாக வகுக்கப்பட்ட அணிமாதி சித்திகளான ஐச்வர்யம் தானாக கைகூடும்.

22.“குரு - தட்சிணாமூர்த்தி வணக்கம்”-வியாழன்

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கு முதல் கற்ற கல்வி
வல்லலார்கள் நால்வர்க்கும் வாக்கிறைந்த புரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்துதானே சொல்லாமல் 
சொன்னவனோ நினையாமல் நினைந்துபவ தொடக்கை வெல்வோம்

குருப்பிரம்ஹா குரு விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர
குரு சாக்ஷாது பரப்ரம்ஹா
தஸ்மை ஸ்ரீ குருவே நம!

மந்த்ர மூலம் குரோர் வாக்யம்
பூஜா மூலம் குரோர் பதம்
த்யான மூலம் குரோர் மூர்த்தி
மோஷமூலம் குரோர் க்ருபா

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துஸ்ச சகா த்வமேவ
த்வமேவ வித்யாம் த்ரபிணம் த்வமேவ
த்வமேவ சர்வம் மம தேவதேவ

23.“ஸ்ரீகும்பேஸ்வரர் துதி”-கிரக தோஷங்கள் நீங்கி வேண்டிய வளம்பெற- மாசி மகத்தன்று. 
எல்லா லக்னங்களுக்கும் அதிபதிகளான நவகிரகங்களுக்குத் தலைவராக இருப்பவரே, கும்பேஸ்வரா உன்னை வணங்குகின்றேன். நவகிரகங்களால் பூஜிக்கப்படுபவரே, எண்ணிய தெல்லாம்தரும் காமதேனு மற்றும் அனைத்து தேவர்களாலும் வணங்கப்படுபவரே, கும்பேஸ்வரனே உனக்கு எனது வணக்கங்கள். ஐந்து முகங்களையுடைவரே, பிரளய காலத்தில் மிதந்து வந்த அமிர்த கலயத்தை உடைத்து எல்லோருக்கும் எல்லா வளமும் வழங்கிய கும்பேஸ்வரா உன்னை வணங்குகின்றேன். எனக்கு அருள் புரிவாய்!
24.“காலபைரவ அஷ்டகம்” -மனப்பயங்கள் விலக, ஆரோக்கிய வாழ்வுக்கு- தினமும்-நேரம் கிடைக்கும் போதெல்லாம்-ஆதிசங்கரர் அருளியது.

போகம், முக்தி இவைகளை அளிப்பவரும், பிரசித்திபெற்ற அழகிய வடிவினரும், அடியார்களிடம் அன்பு கொண்டவரும், காத்தல் கடவுளாக இருப்பவரும், எல்லா உலகையும் தன் வடிவில் கொண்டவரும், நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவரே, காசியம்பதியின் தலவரே உங்களுக்கு நமஸ்காரம். எனக்கு அருள் புரிவாய் ஐயனே!

25.“பைரவ அஷ்டகம்” -செல்வசேமிப்பு, தடைகள் தகர்க்க, ஆரோக்கிய வாழ்வுக்கு- தினமும்- நேரம் கிடைக்கும் போது.

க்ஷேத்ரபாலர்:- செந்நிறமான ஜ்வாலைகளையுடைய ஜடாமகுடம் தரித்திருப்பவரும், சிவப்பு நிறமுடையவரும், வெண்ணிலவை முடியில் அணிந்திருப்பவரும், தேஜோமயமானவரும் உடுக்கை, சூலம், கபாலம், பாசக்கயிறு ஆகியவற்றைக் கைகளில் வைத்திருப்பவரும், உலகத்தைக் காவல் காப்பவரும், பாதகர்களுக்கு பயங்கரமானவரும், நிர்வாணமேனியரும், நாயை வாகனமாக உடையவரும், முக்கண்ணரும், எப்போதும் குதூகலமாக இருப்பவரும், பூத கணங்கள் பேய் பிசாசுக்களுக்குத் தலைவரும், க்ஷேத்ர பாலர் என்ற பெயரை உடையவருமான பைரவரை வணங்குகிறேன்...

அஸிதாங்க பைரவர்:- முக்கண்ணரும், கோரிய வரங்களைத் தானே முன் வந்து அளிப்பவரும், சாந்த சொரூபியும், கபாலமாலை தரித்தவரும், கதை, கபாலம், பாணபாத்ரம், கட்கம், ஜபமாலை, கமண்டலம் ஆகியவற்றைத் தாங்கியவரும் திகம்பரனாகவும், இளமையாகவும் இருப்பவரும், நாகத்தைப் பூனூலாக அணிந்தவரும், அலங்கார சொரூபரும், ப்ராஹ்மணி என்ற சக்தியை அருகே வைத்திருப்பவரும், அன்னப் பட்சியை வாகனமாக உடையவரும், அழகுள்ளவரும், சுந்தரரும், கேட்டதைக் கொடுக்க வல்லவருமான அஸிதாங்க பைரவரை வணங்கி தியானிக்கிறேன்..

க்ரோத பைரவர்:- முக்கண்ணரும் கதை, சங்கு, சக்கரம், பாசம், பாத்ரம் இவற்றை கைகளில் ஏந்திக் கொண்டிருப்பவரும், வேண்டிய வரங்களைக் கொடுப்பவரும், இளைஞராகவும் திகம்பரராகவும் இருப்பவரும், அமைதியான சுபாவமுடையவராக இருப்பவரும், இடது பக்கத்தில் திருவான சக்தியை கருடவானத்தில் அமர்த்திக் கொண்டிருப்பவரும், நீல நிறமான மேனியைக் கொண்டவருமான க்ரோத பைரவரை வணங்கி தியானிக்கிறேன்...

உன்மத்த பைரவர்:- முக்கண்ணரும், சாந்த ஸ்வரூபியும், இளைஞராகவும், திகம்பரராகவும் திகழ்பவரும், பொன் வண்ணரும், அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவரும், கத்தி, கபாலம், உலக்கை, கேடயம் ஆகியவற்றைக் கைகளில் தாங்கி இருப்பவரும், வாராஹி என்ற சக்தியுடன் காட்சியளிப் பவருமான உன்மத்த பைரவரை வணங்குகிறேன்..

குரு பைரவர்:- மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், டங்கம், புள்ளிமான் என்ற கிருஷ்ணம்ருகம் ஆகியவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், பான பாத்திரம், கத்தி இவற்றை வைத்துக் கொண்டிருப்பவரும், காளை வாகனத்தைக் கொண்டவரும், புன் சிரிப்பான முகமுடையவரும், வெண்மையான சுத்த ஸ்படிகம் போன்ற மேனியைக் கொண்டவருமான குரு பைரவ ஸ்வாமியை வணங்கி தியானம் செய்கிறேன்..

கபால பைரவர்:- மூன்று கண்களையுடையவராகவும், பக்தர்கள் வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் பாசக்கயிறு, வஜ்ராயுதம், கத்தி, பானபத்திரம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், இந்திராணி என்ற தேவியுடன் காட்சியளிப்பவரும், பத்ராகம் போன்ற ஒளிமயமான மேனியுடையவருமான கபால பைரவரை வணங்கி தியானம் செய்கிறேன்..
சண்ட பைரவர்:- மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் வில், கத்தி, பானபத்திரம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், கௌரி என்ற தேவியை சக்தியாகக் கொண்டிருப்பவரும், மயிலை வாகனமாகக் கொண்டு வெண்மையான நிறத்தை உடையவருமான சண்ட பைரவரை தியானிக்கிறேன்..

பீஷ்ண பைரவர்:- மூன்று கண்களையுடையவராகவும், வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவராகவும், சாந்த ஸ்வரூபம், இளமையானத் தோற்றத்தை உடையவராகவும், திகம்பரராகத் திகழ்பவரும், கையில் கத்தி, சூலம், கபாலம், உலக்கை ஆகியவற்றை ஏந்திக் கொண்டிருப்பவரும், சாமுண்டி தேவியுடன் இனைந்து காட்சி தருபவரும், பிரேத வாஹனம் எனப்படும் இறந்த பூத உடல் மீது அமர்ந்திருப்பவரும், சிவந்த நிறத்தையுடையவருமான பீஷணபைரவரை துதித்து வணங்குகிறேன்..

சம்ஹார பைரவர்:- பத்துக் கைகளோடு முக்கண்ணனாக இருப்பவர், சர்ப்பத்தை பூனூலாக அணிந்தவர், கோரைப் பற்களுடன் பயங்கர முகத்தோற்றத்தை உடையவர், பக்தர்களுக்கு எட்டு விதமான ஐஸ்வர்யங்களைக் கொடுப்பவர், இளமையான தோற்றம் கொண்ட இவர், திகம்பரராகவும் இருப்பவர். ஸிம்ஹத்தை வாகனமாகக் கொண்டவர். தம் கைகளில் சூலம், கட்கம், டமருகம், சங்கு, சக்ரம், கதை, பானபத்திரம், கட்வாங்கம், பாசம், அங்குசம் ஆகியவற்றைக் கொண்டவர், அசுரர்களின் மண்டையோடுகளைக் கோத்து பெரிய மாலையாக அணிந்திருப்பவர், பருமனான் உடலையும், மத்தமான பயங்கர உருத்தோற்றத்தையும் கொண்டவரான, சம்ஹார பைரவரை,எப்போதும் எனக்காகவேண்டி தியானிக்கிறேன்..

ஓம் ஏம் க்லாம் கிலிம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரும்
சகவம் ஆப துத்தாரணாய அஜாமல பக்தாய
லோகேஸ்வராய சுவர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்ரிய வித்வேஷ்ணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ.

26.“ஸ்வர்ணாகர்ஷண பைரவர்” அஷ்டகம்- துர்கைச் சித்தர்- தினமும்
தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்திடும்
மனந்திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்திடும்

சினந்தவிர்த தன்னையின் சின்மயப் புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.
வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்

காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்

தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

முழுநில வதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்ந்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைந்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணங்கள் நான் என்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

பொழில்கள் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகாய் இருந்திடுவான்
நிழல்தருன் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான் சத்தொடு சித்தனானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
புதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுசென்றான்
தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

ஜெய ஜெய வருக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய க்ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம்புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

27.“மகா சாஸ்தா துதி”- பகை, பயம் நீங்க, பிணிகள், கவலைவிலக, செல்வங்கள் கைகூடும்- சிவ+ விஷ்னு- ப்ருஹதீச்வரர்- கார்த்திகை மாதம் காலை/மாலை.

நீல வண்ணக் குதிரையை வாகனமாகக் கொண்டு பயணிப்பவரும், தன்னை அடைக்கலமடையும் அடியவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுபவரும், சாதுக்களுக்கு எப்போழுதும் நன்மை செய்கின்றவரும், மகாஞானம் உள்ளவரும் ஈஸ்வரனுக்குத் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!

சிவவிஷ்னு மைந்தனும், பரிபூரணமானவரும், தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்கள் போன்றோர்களால் வணங்கப்படுபவரும், சிறந்ததும், வெண்மையானதும் மதங் கொண்டதுமான யானையை வாகனமாகக் கொண்டவரும், ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!

கொடிய வணவிலங்குகளை, எப்பொழுதும் வேட்டை ஆடுகின்றவரும், அசுரக் கூட்டங்களின் அழிவுக்கு காரணமானவரும், குந்தம் என்ற ஆயுதத்தை உயர தூக்கி வைத்துக் கொண்டிருப்பவரும், ஸவர்ணம் ரத்னம் இவைகளாலான பலவித ஆபரணங்களை உடையவரும், பிரசித்தவரும், ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஸ்ரீ ஐயப்பனைச் சரணமடைகிறேன்!

குளிர்கால நிலவினைப் போல குளுமையான முகத்தையுடையவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகியோரை மூன்று கண்களாக உடையவரும், பாரிஜாத மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேகத்தை உடையவரும், ஈசுவரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!

வனத்தில் தவம் புரிந்த சனகாதி முனிவர்களால் துதிக்கப்படுபவரும், உயர்வான குணமுடைய மனிதர்களால் எப்போதும் பூஜிக்கப்படுபவரும், ஜனன, மரண, பயத்தை போக்குகின்றவரும் ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!

ப்ரணவ மந்திரத்தின் வடிவான மரத்தில் பறவை போல் விளங்கும் முக்கியத் தெய்வமாய் இருப்பவரும், பிறப்பு இறப்புகளாகிய இருண்ட காட்டினை அழிக்கும் பெரிய அக்னியாக இருப்பவரும், கணபதியாலும் முருகனாலும் துதிக்கப்பட்ட மகிமையை உடையவரும், ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!

மும்மூர்த்திகளாலும் தேவாதி தேவர்களாலும் தேவர்களின் தலைவனான இந்திரனாலும் வணங்கப்படும் பாத கமலத்தை உடையவரும், நல்ல ஞானிகளுக்கும், குருவுக்கொல்லாம் குருவாகா இருப்பவரும், சுத்தமான மனமுள்ளவரும், பக்தர்களின் மனமாகிய குகை எனப்படும் சபரிமலையிலுள்ள குகையில் அமர்ந்திருப்பவரும், ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்!

சிவ, விஷ்னு குமரருடைய இந்த துதியை அவருடைய உருவத்தை நன்மனத்திலிருத்தி எவர் படிக்கின்றாரோ. அவர் ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பன் அருளால் பசுக்கள், புத்திரகள், ஐஸ்வர்யங்கள் என யாவும் பெற்று ஆனந்த வாழ்வு வாழ்வார் என்பது நிச்சயம்! ஐயப்பா உன்னைச் சரணமடைகிறேன்!

28.“மகாசாஸ்தா அஷ்டகம்”- அருள், பொருள், ஆரோக்யம் பெற -கார்த்திகை மாதம் காலை/ மாலை.

நீலவர்ணமான குதிரையின் மேல் அமர்ந்து பவனி வருபவரும், அடியார்களின் குறைகளைத் தீர்ப்பதிலேயே கருத்துள்ளவரும் சாதுக்களுக்கு எப்போதும் நன்மை செய்கின்றவரும், மகானும், ஈஸ்வரினின் மகனுமான ஐயப்பனை நான் சரணடைகின்றேன்.

ஹரிஹர சுதனும் தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மனிதர்கள் ஆகியவர்களால் வணங்கப்படுபவரும், சிறந்த கம்பீரமான வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவரும், ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனை வணங்குகின்றேன்

அநீதி நிறைந்த காட்டில் எப்பொழுதும் வேட்டையாடுகின்றவரும், அசுர குலத்துக்கே முடிவு கட்டுபவரும், உயரத்தூக்கிய கையில் குந்தம் என்ற ஆயுதத்தை உடையவரும், பொன் மற்றும் ரத்னங்களாலான ஆபரணங்களை அணிந்தவரும், பிரசித்தவரும், ஈஸ்வரர்களுக்கெல்லாம் பெரியவருமான ஐயப்பனை துதிக்கிறேன்.

அந்திப் பொழுதில் தோன்றும் பூரண நிலவைப் பொன்ற முகத்தை உடையவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகியோரைத் தன் கண்களாக உடையவரும், பாரிஜாத மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சரீரத்தை உடையவரும், ஈஸ்வரர்களுக்கெல்லாம் தலைவருமான ஐயப்பனை சரணடைந்து வணங்குகின்றேன்.

காட்டில் சனகர் முதலிய யோகிளால் நமஸ்கரிக்கப்படுபவரும், உத்தமமான மனிதர்களால் எப்பொதும் பூஜிக்கப்படுபவரும், பிறப்பு இறப்பு ஆகிய பயங்களைப் போக்குகின்றவரும் ஈஸ்வரர்களுக்குத் தலைவருமான ஐயப்பனைப் பணிகின்றேன்.

ப்ரணவமாகிய மரத்தில் பறவை போல்விளங்கும் முக்யதேவனாய் இருப்பவரும், முக்குணங்களால் உண்டான பிறப்பு, இறப்பு என்ற காட்டை அழிக்கக்கூடிய அக்கினியாக இருப்பவரும், கணபதி மற்றும் முருகனால் துதிக்கப்படுபவரும், சிறந்த மகிமை உடையவரும், ஈஸ்வரர்களுக்குகெல்லாம் பெரியவருமான ஐயப்பனைப் பணிகின்றேன்.

தேவாதி தேவர்களால் நமஸ்கரிக்கப்பட்ட பாத கமலங்களை உடையவரும், எல்லா ஞானிகளுக்கும் குருவாக இருப்பவரும், சுத்த மனமுள்ளவரும், சபரிமலையின் குகையில் அமர்ந்திருப்பவரும் ஈஸ்வரர்களின் தலைவருமான பிரகதீஸ்வரரை வணங்குகின்றேன்.

கர்ப்பவாசமில்லாதவரும், தேவநாயகனும், மிகச் சிறந்தவரும், சிங்கத்தின் வடிவிலான ரத்ன மயமான ஆசனத்தில் அமர்ந்துள்ளவரும், மன்மதனையே தன்னழகால் வென்றவரும், உத்தமானவரும், ஈஸ்வரர்களுக்கு எல்லாம் தலைவருமான ஐயப்பனைச் சரணமடைகிறேன்.

நிகரற்ற சிவகுமாரனாகிய ஐயப்பனின் இந்த துதியை, யாரொருவர் முழுமனதாக ஐயப்பனை நினைத்துக் கொண்டு சொல்கின்றாரோ, அவர் ஐயப்பனுடைய கருணையால் பசுக்கள், புத்ரர்கள், அஷ்ட ஐஸ்வர்யங்களௌம் பெற்று ஆரோக்யமான ஆனந்த வாழ்வு பெறுவர், அவர்தம் இல்லத்தில் என்றும் நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிறையும்.
29. “சரபாஷ்டகம்” - துக்கங்கள், தோஷங்கள், நோய் நீங்க -ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில்.

துக்கங்களைப் போக்குகின்றவரும், தீயவர்களுக்கு பயங்கரமானவரும், திருமாலிடம் அன்பு பூண்டவரும், மங்களமான வடிவம் கொண்டவரும், சுகங்களை தருபவரும், மூன்று கண்களை உடையவருமான சரபமூர்த்தியே, தங்களை வனங்குகின்றேன். என் இன்னல்களை நீக்கி நிம்மதிப் பெருவாழ்வு அருளுங்கள்.

30.சிவபுராணம்-தினமும்/வேண்டும்பொழுது   

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க!
ஆகமாகி நின்ற அன்னிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

 

வேகம் கொடுத்தாண்ட வேந்தனடி வெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பொய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க!
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சிரோன் கழல்வெல்க!

 

ஈசனடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசனடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி!
சீரார் பெருந்துறை நம்தேவன் அடிபோற்றி!

 

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி!
சிவன் அவன் சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினைமுழுவதும் ஓய உரைப்பன்யான்.

 

கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறைந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா என்றறியேன்

 

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்ச்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்

 

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன்பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

 

வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா
பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே!

 

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய்! காப்பாய்! அழிப்பாய்! அருள் தருவாய்!
போக்குவாய்! என்னைப் புகுவிப்பாய்! நின் தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நாணியனே
மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே

 

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தைனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை

 

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழுஅழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

 

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியோர்க்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

 

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே!
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே தேனார் அமுதே சிவபுரானே!
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே!
நேச அருள் புரிந்து நெஞ்சிள் வஞ்சங்கெடப்

 

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே!
ஆரா அமுதே! அளவிலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

 

அன்பருக்கு அன்பனே! யாவையுமாய் எல்லையுமாய்
சோதியனே! துன்னிருளே! தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம் நடுவாகி அல்லானே!
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்த மெய்ஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்

 

நோக்கரிய நோக்கே! நுணுக்கரிய நுண்ணுணர்வே!
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே!
காக்கும் எம் காவலனே! காண்பரிய பேரொளியே!
ஆற்றின்ப வெள்ளமே! அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய் சொல்லாத நுண்ணுணர்வாய்

 

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தையுள்
உற்றான் உண்ணார் அமுதே! உடையானே!
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனே ஐயா என்றென்று

 

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்குவந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே!
நள்ளிருளில் நட்டம் பயின்றிடும் நாதனே!
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே!

 

அல்லல் பிறவி அறுப்பானே ஓவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து!

திருச்சிற்றம்பலம்!

 

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--

 

மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

 

பிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

 

சரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

 

மத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

 

விஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

 

மநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

 

கருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

 

அந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

 

சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

 

                                          ஓம்சிவாயநமக!

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

oமறைத்த உண்மையும், தெரிந்த உண்மையும் எப்போதும் சுடும். அதை சொல்லியே தீருவேன் எனச் சொல்லி அனைவரையும் காயப்படுத்தக் கூடாது.

oஎந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்ததில்லை. வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றிகொண்டதே அவர்களை வாழ்வில் பெரிய மனிதனாக்கியதாகும்.

oகாலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.

oஎதிரி என்று எவருமில்லை! அனைவரும் இவ்வுலக உயிர்களே! உலகில் வாழ தகுதி உள்ளவர்கள்! உரிமையுள்ளவர்கள்! அவர்கள் வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலால் வேறுபடுகின்றனர். வாழ எடுக்கும் முறைகளை நெறிப்படுத்தினால் அனைவரும் பேரன்பு உள்ளவர்கள் ஆவார். மனிதநேயம் மிக்கவர்களாகி விடுவார்கள்.

o‘உன் நாவிலிருந்து எழும் சொற்களின் மீது கட்டுப்பாடு வைத்துக் கொண்டால் போதும், அது உன் வெற்றிக்கு வழிவகுக்கும்’

o“இல்லறத்தின் கடமைதனைச் செய், மனதை இறைவனிடம் வை. தண்ணீரில் இருக்கும் ஆமை கரையில் இருக்கும் மணல்மீது மனத்தை வைத்திருப்பது போல்.”
              “சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880353
All
26880353
Your IP: 34.204.181.19
2024-03-19 14:27

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg