gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

ஞானமாலை யோகம்

Written by

      ஓம் நமசிவாய!

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்

பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை

அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை

வருத்த எண்ணுகின்ற மலம்!

                       ******

ஞானமாலை யோகம்

ஓம் எனும் பிரணவ மந்திரம் ஒலியால் அசைவுகளை உண்டாக்கி, சக்தியை உண்டாக்கி அண்டத்திலும் பிண்டத்திலும் பரவியுள்ளது. அது காந்த அலைகளுக்கும் மின் அலைகளுக்கும் தொடர்பு உடையது. பிரபஞ்சத்தில் உள்ள காந்த அலைகளும் மின் அலைகளும் சேர்ந்து மின்காந்த சக்தியை உண்டு பண்ணுகின்றன. ஓம் எனும் ஓங்காரத்தை காலம் இடம் காரண காரியங்களால் பிரபஞ்சத்திலும் நம்முள்ளும் உருவாக்குவது ஞான யோகம் ஆகும். ஓங்காரத்தைப் பகுதியாகப் பிரித்தால் அந்த பிரிவுகள் கலைகள் எனப்படும். இயற்கையான ஓசை நாதத்தை ஒருங்கிணைத்தாலே ஓம் எனும் பிரணவ ஓங்காரமாகும். அதை வரையறை செய்து உணர்ந்தால் ஓங்காரம் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பதை உணரலாம்.எனவே தத்துவங்கள் எல்லாம் கலைகளுடன் ஞான மாலையாக இணைந்துள்ளது. ஓம், பிரணவம், குண்டலினி எல்லாம் ஒரே தன்மையுடையது. அட்டாங்க யோக முறைகள், தெரிந்து பழகியபின் ஞானமாலை யோகம் பயின்றால் நலமாகும். அரிய பெரிய ஞானத்தை வழங்கி. தொடர்ச்சியாக சிவ ஞானம் பெறும் வழியைத் தருவது மாலை. இதன் மூலம் சிவாகமத்தில் கூறியுள்ள 16 கலைகளைப் பற்றி  மேலும் புரிந்து கொள்ள முயல்வோம்.

ஞானமாலை யோகம்

பதினாறு ஞான யோகக் கலைகளின் பெயர்கள்.

மேதை, அருக்கீசம், விடகலை, மேல்விந்து

விரவும் அர்த்தசந்திரன், மேல் நிரோதி, நாதம்,

ஓதிய நாதாந்தமொடு, சக்தி வியாபினியே,

உயர்சமனை, உன்மனை, பன்னிருகலையாய் ஓங்கும்

மீதிலகும் சமனைக்கும் வியாபினிக்கும் நடுவே

வியோமரூபிணி, அனந்தை, அனாதை, அனாசிருதை,

ஏதமறவே பொருந்திக் கலைபதினாறாகும்

ஈசன் அணி அம்பலத்தான் இணையடிக்கீழ் இவையே.

நமது உச்சந்தலையிலிருந்து ஒருசாண் உயரத்தில் இருப்பது துவாத சாந்தம் ஆகும். அவரவர் கையில் ஒருசாண் என்பது அவர் கையில் 12 விரல் உயரம் என கொள்ளவும். கலைகள் 16- 1. மேதை கலை, 2.அருக்கீசக் கலை, 3.விட கலை, 4.மேல்விந்துக் கலை, 5. அர்த்தசந்திரன் கலை, 6.நிரோதினிக் கலை, 7.நாதக் கலை, 8.நாதாந்தக் கலை, 9.சக்திக் கலை, 10.வியாபினிக் கலை, 11.சமனைக் கலை, 12.உன்மனைக் கலை என இந்த 12 கலைகளையும் எண்ணிய பின் சமனைக்கும் வியாபினிக்கும் நடுவே உள்ள 13.வியோமரூபிணிக் கலை, 14.அனந்தைக் கலை, 15.அனாதைக் கலை, 16.அனாசிருதைக் கலை, என எண்ணவேண்டும். சமனைக்கும் வியாபினிக்கும் நடுவே உள்ள கலைகள் கீழ்கண்டவாறு சதுரமாக பிரியும் 

13.வியோமரூபிணிக்கலை, 14.அனந்தைக்கலை, 16.அனாசிருதைக்கலை, 15.அனாதைக்கலை,

இப்படி 1 முதல் 16 வரை தியானம் செய்யும் முறை வடக்கில் துவாதசாந்தகலா ஞான யோகம் ஆகும். சோடசம்- பதினாறு. நடராசப் பெருமான் திருவடிக்கீழ் இருக்கும் இது பதினாறுகலா ஞான யோகம் எனப்படும். சிவசக்தியின் பெயர்களைக் கொண்ட இந்தக் கலைகள் யோகம் செய்பவரின் பாவனைதோறும் வந்து திரு அருளைப் பதிய வைப்பது சிவசக்தி ஆகும் முதல் மூன்று கலைகள் அகர. உகர. மகரக் கலைகள் எனப்படும். யோகம் 1.ஆதாராயோகம், 2.நிராதாரயோகம் என இரு வகைப்படும். ஆதாரமற்ற வெளியில் இறைவன் திருவடியாக கொண்டு துவாதசாந்தம் 12 விரல் அளவிடப்படும். இது சிவசக்தியுடன் தொடர்பு கொண்டது. சாக்த மரபினர் புருவ மத்திக்குமேல் 12 விரல் அளவு தலைக்குள்ளிருந்து உயரப் போவதாக அளவிடுவர்.

கலைகளின் நேர அளவு-மாத்திரை / படரும் காலம்.

முன்னுரைத்த பன்னிரண்டும் மாத்திரைகள் பெறுங்கால்

மூன்றாகும் மேதை; இரண்டு அருக்கீசம்; முறையே

பன்னும் விடகலை ஒன்றாம் விந்துவின்பால் அரையாம்

பகரும் அர்த்த சந்திரன்கால் நிரோதிபடும் அரைக்கால்

உன்னியமா காணிபெறும் நாதம்; நாதாந்தம்

ஒருபது முத்திரை; ஐந்துசக்தி; வியாபினியாம்

மன்னும் இரண்டரை; சமனை ஒன்றே காலால்; உன்

மனைமன மாத்திரை இவைகள் வரும் கோட கலைக்கே.

1. மேதை கலை- மூன்றுமாத்திரை-3, 2.அருக்கீசக் கலை- இரண்டு மாத்திரை-2, 3.விட கலை-ஒன்று மாத்திரை-1, 4.மேல்விந்துக் கலை- அரை மாத்திரை-0.5(1/2), 5. அர்த்தசந்திரன் கலை- கால் மாத்திரை-0.25(1/4), 6.நிரோதினிக் கலை- அரக்கால் மாத்திரை-0.125(1/8), 7.நாதக் கலை-மாகாணி(வீசம் மாத்திரை-0.0625(1/16), 8.நாதாந்தக் கலை- அரைமா-அரைக்காணி மாத்திரை-0.03125(1/32), 9.சக்திக் கலை- காணியே-முந்திரிகை மாத்திரை-0.015625(1/64), 10.வியாபினிக் கலை-அரைக்காணியே-கீழரை-0.0078125(1/128), 11.சமனைக் கலை- முந்திரிகையே-கீழ்க்கால் மாத்திரை-0.00390625(1/256), 12.உன்மனைக் கலை-மனத்தளவு மாத்திரை என இந்த 12 கலைகளையும் எண்ணிய பின் சமனை மாத்திரையில் பதி பாதியாக கொள்க. 13.வியோமரூபிணிக் கலை-மாத்திரை0.001953125(1/512), 14.அனந்தைக் கலை-மாத்திரை-0.0009765625(1/1024), 15.அனாதைக் கலை-மாத்திரை-0.00048828125(1/2048), 16.அனாசிருதைக் கலை-மாத்திரை-0.000244140625(1/4096). கோட கலை என்பது குண்டலினி கலையை குறிக்கும்.

கலைகள் வெளிப்படும் இடம்.

மூலமுதல் நாபிஅந்தம் கோடகலை; நாபி

முதல் இதய அந்தம் மேதை; இதயம்முதல் கண்டத்து

ஏலும் அருக்கீசம்; விடம் கண்ட முதல் தாலு;

இரந்தரத்துள் புருவநடு விந்து; நடுமுதலாச்

சால்பிரம ரந்திரமட்டு அர்த்த சந்திரன்; நிரோதி

தகுநாதம்; நாதாந்தம் தானாகும்; இவைமேல்

கோலமுதல் துவாதசாந் தத்து அளவும் சக்தி;

குலவு வியாபினி; சமனை; உன்மனையும் குறிப்பாம்.

கோடகலையான குண்டலினிக்கலை மூலாதாரம் முதல் நாபி-தொப்புள் வரை இருக்கும்; மேதைக்கலை நாபி-தொப்புள் முதல் மார்பு நடு-இதயம் வரை இருக்கும்; அருக்கீசக்கலை இதயம் முதல் தொண்டைக்குழிவரை இருக்கும்; விடக்கலை தொண்டை முதல் நாக்கின் அடிவரை இருக்கும்; விந்துக்கலை நாக்கினடி முதல் புருவ நடுவரை இருக்கும்; அர்த்தசந்திரக்கலை புருவநடு முதல் உச்சித்துளைவரை இருக்கும்; நிரோதினிக்கலை, நாதக்கலை, நாதாந்தகலை ஆகியன சம அளவில் பரவியிருக்கும்; சக்திக்கலை, வியாபினிக்கலை, சமனைக்கலை, உன்மனைக்கலை ஆகியன 12 விரல் அளவில் பரவியிருக்கும்.

1.புருவ மத்தியிலிருந்து உயரே 12 விரல் அளவு, 2.தலை உச்சித் துளைக்குமேல் 12 விரல் அளவு என எண்ணும் வழக்கம் இருவகைப்படும். குண்டலினி சக்தி மூலாதாரம் முதல் நாபிவரை உள்ளது. அதிலிருந்து 12 கலைகள் தோன்றி மேலே வருவதாக கணக்கிடுக. ரந்திரம்- துளை, பிரம்மரந்திரம்- பிரம்ம துளை, பிறக்கும்போது அமைந்த துளை. யோகி பிரம்ம உலகிற்குச் செல்ல பயன்படும் துளை. மூலாதாரத்திலிருந்து முதுகுத் தண்டின் வழியே நுண்ணியதாகப் புறப்பட்டு மூளை நடுவிலும் தொடர்ந்து தலைஉச்சிக்குப் போகும் துளை- இது சுழுமுனை நாடியாகும். நாக்கு அடிக்குமேல் உள்ள உள்நாக்கு இந்திரயோனி ஆகும் இதன் நடுவில் உள்ளதுளை பிரம்மரந்திரத்துளையில் இணைகின்றது.

நாபியிலிருந்து ‘அ’ தொடங்கி ‘உ’ ஆக வளர்ந்து ‘ம்’ ஆக முடியும் அவை மேதை, அருக்கீசம், விடம் என்ற கலைகள் ஆகும். இவைகள் அகரக்கலை, உகரக்கலை, மகரக்கலை எனப்படும். ஓம் என்று சொல்லும்போது இக்கலைகளின் இயக்கத்தை உணரலாம்.

கலைகளுக்குரிய தானம்-இடங்களின் அளவுகள்

பண்புறு மூலாதாரம் முதல் நாபி அந்தம்

பயில்கோட கலைத்தானம் பன்னிரண்டு அங்குலமே

நண்புதரு நாபிகுதல் இதய அந்தம் மேதை (இதயாந்தம்)

நவிலும் விரல் பன்னிரண்டாம்; நல் இதயம் முதலாக

கண்டாந்தம் அருக்கீசம் அங்குலம் ஏழ்காட்டும்;

கண்டம் முதல் தாலு இரந்திர அந்தம் காணில்

கொண்டவிட கலைத்தானம் அங்குலம் நாலாகும்

கொடும்புருவ நடுவிந்துத்தானம் ஓரங்குலமே.

மூலாதாரம் முதல் தொப்புள் வரை 12 அங்குலம்,

நாபி முதல் இதயம் வரை 12 அங்குலம்

இதயம் முதல் கண்டம்- தொண்டைக்குழி வரை 7 அங்குலம்.

கண்டம் முதல் நாக்கின் அடிவரை 4 அங்குலம்.

நாக்கின் அடி முதல் புருவ நடு வரை 4 அங்குலம்.

புருவ நடுவில் விந்து கலை 1 அங்குலம் வியாபித்துள்ளது. ஒளிக்குரிய பரப்பளவு ஆகும். கீழிருந்து புருவம் வரை உடம்பின் உட்பக்கமாக பிரம்மரந்திரம் வரை அளத்தல் என்பது நினைவால் என்க. இதனால் சுழுமுனை நாடியை உணர்வதால் ஆத்மாவையும் உணரலாம். மூலாதாரம் முதல் புருவமத்திவரை ஆறு ஆதாரங்களில் சுழுமுனை நாடியின் நீளம் 40 (12+12+7+4+4+1) +புருவமத்திக்குமேல் 12 விரல் = ஆக மொத்தம் 52 விரல் அளவு ஆகும். இது வட மொழியின் எழுத்துகள் 52-ஐ ஒத்திருக்கின்றன.

புருவநடு முதல்பிரம ரந்திரம் மட்டாகப்

பொருந்தும் அர்த்தசந்திரனே முதல்புகல் நாலினுக்கும்

பெருகிடும் ஒவ்வொன்றுக்கும் மும்மூன்றாய் மருவப்

பேசும் விரல் பன்னிரண்டாம் பிரமரந்திரத்துக்கு

உரியசக்தி யங்குலமொன்று, உயர்ந்த வியாபினிக்காம் ஒரு

மூன்று; சமனைக்கும் ஒருநான்கு உன்மனைக்கே

வருநான்கு அங்குலம்; ஆகத்தானம் இவை ஒன்பான்

மதித்திடும் அங்குலம் அறுபானாம் வழுத்துங்காலே.

புருவ நடு முதல் பிரம்மரந்திரமாகிய தலை உச்சித்துளை வரையில் அர்த்தசந்திரன், நிரோதினி, நாதம், நாதாந்தம் ஆகிய கலைகள் ஒவ்வொன்றும் 3விரல். மொத்தம்- 12 விரல் ஆகும். இந்த 12 -க்குமேல் புருவநடு சக்தி கலையின் பரப்பு 1, வியாபினியின் பரப்பு 3, சமனக் கலையின் பரப்பு 4, உன்மனைக்கலையின் பரப்பு 4 மொத்தம் 12 (1+3+4+4) விரல்அங்குலம் ஆகும். புருவமுதல் 4 கலைகள் மும்மூன்றாய் 12 விரல், அதற்குமேல் சக்தி, வியாபினி, சமனை, உன்மனை ஆகிய கலைகளுக்குத் தனித்தனி அளவாக 12 பிரிக்கப்பட்டுள்ளது.

மூலம் முதல் நாபி வரை -12.விரல், நாபி முதல் இதயம் வரை -12.விரல், இதயம் முதல் கண்டம் வரை -7.விரல், கண்டம் முதல் நாக்கின் அடி வரை -4.விரல், நாக்கின் அடி முதல் புருவ மத்திக்குக் கீழ் வரை -4.விரல், புருவ மத்தி அளவு – 1விரல், புருவ மத்தி முதல் துவாதசாந்தம் வரை -12.விரல், ஆகமொத்தம் = 52 விரல் அளவாகும்.

வேறு ஒருவகை அளவில் இது 60 என வரும். ஒரு உடம்பு அவரின் கையால் 8 சாண் அளவாகும். ஒருசாண் என்பது 12 விரல். அதாவது 8 x 12 = 96 ஆகும். இதில் முழங்கால் வரை 2 சாண், மூலாதாரம் வரை 2 சாண் என்றால் இடுப்பிற்கு கீழ் 4 சாண், 4 x 12 = 48 விரல் கழித்தால் மீதி 96 – 48 = 48 விரல் ஆகும். இது மூலாதாரம் முதல் புருவ மத்திவரை. அதன்பிறகுள்ள துவாதசாந்தத்தை 12 விரல் அளவு கூட்டினால் 48 + 12 = 60 விரல் ஆகும்.

சூன்யம்- இடைவெளி. இவை வெற்றிடங்களாகும், இந்த சூன்ய வெற்றிடங்களில் மேலே ஏற முடியாமல் யோகிகள் திகைக்கக் கூடும். அதையும் தாண்டி போவது நன்மை பயக்கும்.

ஆறு சூன்யப் பகுதிகள்

மேதமுதல் மூன்று கலைமுடிவினில் ஒன்றாகும்

விந்துகலை முதன் மூன்றிம் முடிவினில் ஒன்றாகும்

நாதம்முதல் மூன்றுகலை முடிவினில் ஒன்றாகும்

நண்ணு வியாபினிக்கும் ஒன்று நான்காவததுவே

ஓதுச மனைக்குச் சூனியம் ஒன்றே ஆகும்

உரைப்பதும் ஐந்தாவதுஎனும்; உன்மனைக்கும் ஒன்றாம்

பேதமறு சூனியம் ஆறாகும். அதன்மீதே

பெரியபரம் இருக்குமெனப் பேசுவர் நல்லோரே.

நாபிக்கு அடுத்துள்ள மேதைக்கலை (அ), அருக்கீசக்கலை (உ), விடக்கலை (ம்) ஆகிய மூன்றின் முடிவில் முதல் சூன்யம்; விந்துக்கலை, அர்த்தசந்திரன்கலை, நிரோதினிக்கலை ஆகியமூன்றின் முடிவில் இரண்டாம் சூன்யம்: நாதக் கலை, நாதாந்தக் கலை, சக்திக் கலை ஆகியமூன்றின் முடிவில் மூன்றாம் சூன்யம்; வியாபினி கலைக்கு மேல் நான்காம் சூன்யம்; சமனைக் கலைக்கு மேல் ஐந்தாம் சூன்யம்; உன்மனைக் கலைக்கு மேல் ஆறாம் சூன்யம்.

இந்த ஆறு சூன்யத்திற்குமேல் பரம் பொருள் இருக்கின்றது, முதல் மூன்றும் உடல் பற்றி இருக்கும் ஆதாரத்தில் உள்ளது, மற்ற மூன்றும் நிராதாரத்தில் உள்ளன. இதைக் கடப்பதை முப்பாழ் என்பர். மனத்தால்கருதி இந்த ஆறுபாழ்களையும் உணர்வது யோகத்தின் வெற்றியாகும்.

கலைகளின் வடிவங்கள்

மிகும் அகரத்தோடு உகரம்; மகரம்; வட்டம்

வெண்மதியின் ஒருபாதி; திரிகோணம்; இவைமேல்

பகரும் இருமருங்கு சுழிநடுக்கலப்பை ஒன்று

பயில்வலத்து விந்து ஒருகலப்பைப் பால் ஒன்றாம்

நிகரில் விந்து இடம்படைத்தநல் அலமும் ஒன்றே;

நிலையில் வலம்படைத்த விந்து திரிசூலம் நிகழும்

திகழும் இருவிந்து நடுஇரண்டு படுரேகை

செறிகுடிலம் கலைவடிவம் தெரிபனி ரெண்டினுக்கே.

1.அகர, 2.உகர, 3.மகர கலைக்கு அந்த எழுத்துக்களின் வரிவடிவமே முறையே அ, உ, ம் வடிவமாகும்.4.விந்து கலைக்கு வட்டமும், 5.அர்த்தசந்திர கலைக்கு பிறைவடிவமும், 6.நிரோதினி கலைக்கு முக்கோணமும் வடிவமாகும். 7.நாதக் கலைக்கு நடுவில் ஒரு கலப்பையும் இருபக்கமும் இருசிறு வட்டங்களும் வடிவமாகும். 8.நாதாந்த கலைக்கு வலப்பக்கம் ஒருவட்டமும் கலப்பையும் வடிவமாகும். 9.சக்திக் கலைக்கு இடப்பக்கம் ஒருவட்டமும் கலப்பையும் வடிவமாகும். 10.வியாபினிக் கலைக்கு ஒரு வட்டத்துடன் கூடிய திரிசூலம் வடிவமாகும். 11.சமனைக் கலைக்கு வலம் இடமாக ஒவ்வொரு வட்டமும் நடுவில் இரு செங்குத்து நேர் கோடுகள் வடிவமாகும். 12.உன்மனைக் கலைக்கு தனி வட்டமே வடிவம். குடிலம்- ‘’ஒம்’. இந்தக் கலைகள் ஓம் எனும் ஓங்கார உச்சரிப்பிலிருந்து பிரிந்து வளரும். இங்கு இடம்வலம் நம் உடல் இடவலமாக கொள்ளவும்.

கலைகளுக்குரிய அதிதேவர்கள்

செங்கமலத்து அயன்மேதைக்கு அருக்கீசக் கலைக்குத்

திருமாலாம்; விடகலைக்குத் தெய்வம் உருத்திரனாம்

பங்கமிலா விந்துவுக்கு மகேசுவரனே ஆகும்;

பரவும் அர்த்த சந்திரனே முதல்புகல் நாலினுக்கும்

தங்கு சதா சிவன் தெய்வம், சக்திமுதலாத்

தருங்கலைக்குச் சிவன் எனவே சாற்றுவர் நல் அறிஞர்

மங்குல்படி பொன்முகட்டு மணிமாடம் செறியும்

மன்றுடையான் நின்றதிரு மலரடிக்கீழ் இவையே.

1.அகரக்கலை (மேதை)- அயன்-பிரம்மா, 2.உகரக்கலை (அருக்கீசம்)- திருமால், 3.மகரக்கலை (விடக்கலை)- உருத்திரன், 4.விந்துக்கலை- மகேசுவரன், 5.அர்த்தசந்திரக்கலை, 6.நிரோதினிக்கலை, 7.நாதக்கலை, 8.நாதாந்தக்கலை ஆகிய 5முதல்8வரை சதாசிவன், 9.சக்திக்கலை, 10.வியாபிக்கலை, 11. சமனைக்கலை, 12.உன்மனைக்கலை ஆகிய 9முதல் 12வரை சிவன். இவர்களே அதிதேவர்கள். எல்லப் பொருள்களுக்கும் அதிதேவதைகள் இருப்பதால் அதை அறிந்து வழிபட்டால் சிக்கல்கள் தீரும். அ – உ – ம் எனும் பிரணவத்தில் அ- தோன்றுவதால் அதற்கு படைப்புக் கடவுளும், உ- வளருவதற்கு துணை செய்வதால் காவல் கடவுளும், ம்- முடித்து வைப்பதால் அழித்தல் கடவுளுக்கும் பிறகு ஒவ்வொரு நிலைக்கும் மும்மூர்த்திக்கும் மேலான கடவுள் பெயர் சொல்லப்பட்டுள்ளது.

கலைகளில் நிற்கும் தத்துவங்கள் வரிசை

மண்முதலாப் பிரகிருதி பரியந்தம் மேதை

வரும் அருக்கீசம் படரும் மாயை தவிர் ஆறு

எண்ணும் விட கலைமாயை பொருந்தியிடும் விந்து

இலகுசுத்த வித்தைமுதல் ஈசுரமும் இருக்கும்

நண்ணும் அர்த்தசந்திரனே முதல் ஒரு நான்கினுக்கும்

நாட்டுசதாசிவம் சக்தி; சக்திமுதல் நான்காம்

கண்ணுகலை நாலினுக்கும் சிவநிறம் தத்துவமாம்

கனகமணி அம்பலத்தான் சுழல் இணைக் கீழ் இவையே.

மேதைக்கலை-அகரக்கலை- நிலமாகிய பூதம்முதலாக மூலப்பிரகிருதி வரை-ஆன்ம தத்துவம். அருக்கீசக்கலை-உகரக்கலை- ஏழு வித்யா தத்துவங்களில் மாயை நீக்கி மற்ற ஆறுக்குள் நிற்கும்.

விடக்கலை-மகரக்கலை- சிவதத்துவம் ஐந்தில் சுத்த வித்தை மற்றும் ஈச்வரம் எனும் இரண்டில் நிற்கும். விந்துக்கலை- மாயையில் நிற்கும். அர்த்தசந்திரக்கலை, நிரோதினிக்கலை இரண்டும் சதாசிவ தத்துவத்தில் நிற்கும். நாதக்கலை, நாதாந்தக்கலை இரண்டும் சக்தி தத்துவத்தில் நிறகும். சக்திக்கலை, வியாபினிக்கலை, சமனைக்கலை, உன்மனைக்கலை ஆகியன சிவ தத்துவத்தில் நிற்கும்.

சிவாகமங்களில் கடவுளிலிருந்து பூவுலக உயிர்கள் வரை உள்ள தத்துவங்கள் 36 வகையாகும். ஐந்து சிவதத்துவங்கள்- 1.சிவம், 2.சக்தி, 3.சதாசிவம், 4.மகேச்வரன், 5.சுத்தவித்தை. ஏழு வித்யாதத்துவங்கள்-1.காலம், 2.நியதி, 3.கலை, 4.வித்தை, 5.ராகம்-அன்பு, 6.புருடன், 7.மாயை. இருபத்தினான்கு ஆன்மதத்துவங்கள்- 1.தன்மாத்திரை-5, 2.பஞ்சபூதங்கள்-5, 3.பஞ்ச இந்திரியங்கள்-5, 4.கர்ம இந்திரியங்கள்-5, 5.அந்தக்கரணம்-4

சிவ கடவுள் தத்துவத்திற்குப்பின் வித்யா, ஆன்ம தத்துவங்கள் இரண்டும் விரிவடைய காரணமாக ஒரு மூலப்பொருள் தோன்றும் அது மூலப்பிரகிருதி எனப்படும்.

கலைகளின் ஒளியும் நிறமும்

சொரிதழல் ஒன்று; இந்துஇரவி கூடும் ஒளி ஒன்று;

தோன்றிய மின் ஒளி ஒன்று; சுடர்தீபம் ஒன்று;

பரவிய வாள் ஒளி ஒன்று; புகைநிறம் ஒன்றாகும்

படர்நாதம் மாணிக்க ஒளி ஒன்று; பார்க்கில்

வரும் இரண்டு மின் ஒளியாம் நாதாந்தம் ஒன்று;

வரும் இரவி நூறுசக்தி; வியாபினி ஆயிரமாம்;

அருள்சமனை ஒருகோடி ஆதவர்பால் எறிக்கும்

அனந்தசூரியர் ஒளிபோல் அணிதரும் உன்மனையே.

மேதை-அகரக் கலை-நிறம் எரியும் நெருப்பு போன்றது, அருக்கீசம்-உகரக் கலை-நிறம் சூரிய சந்திரர் ஒன்றாய் இருப்பது போன்றது. விடம்-மகரக் கலை-நிறம் மின்னல் ஒளி போன்றது. விந்துக் கலையின் நிறம் விளக்குச் சுடர் போன்றது. அர்த்தச்சந்திரக் கலையின் நிறம் வாளின் கூரிய பகுதி போன்றது. நிரோதினிக் கலையின் நிறம் புகை போன்றது. நாதக் கலையின் நிறம் மாணிக்கத்தின் ஒளி போன்றது. நாதாந்தக் கலையின் நிறம் இரண்டு மின்னல்கள் சேர்ந்தது போன்றது. சக்திக் கலையின் நிறம் நூறு சூரியன் ஒளி போன்றது. வியாபினிக் கலையின் நிறம் ஆயிரம் சூரியன் ஒளி போன்றது. சமனக் கலையின் நிறம் கோடி சூரியன் ஒளி போன்றது. உன்மனைக் கலையின் நிறம் அளவில்ல சூரிய ஒளி போன்றது.

பொதுவாக இருளில் பொருள்கள் தெரியாது. உன்மனையின் நிறம் இருளாக இருக்கும் ஏனெனில் மிகுந்த ஒளியிலும் பிற பொருள்கள் தெரியாதிருக்கும். வான் வெளியும் இருளாகவே இருக்கும். கலைகளின் பெயர்கள், நேரம், இடங்கள், தத்துவப் பகுதிகள், ஒளி நிறங்கள், அதிதேவர்கள் ஆகியவற்றுடன் கலைகளை தியானித்தால் அது ஞானயோகத்தின் பலனாகும். மனத்தில் கூறப்படும் ஓம் மந்திரத்தின் மூலம் இந்தக் கலைகள் உணர்வும் உயிர்ப்பும் பெற்று நன்மை பயக்கும்.

வியோம ரூபிணி முதலிய நான்கு கலைகளின் நிறம்

விளங்கு கலைக் காரியங்கள் அனைத்தும் இன்றாம்

வியோமரூபிணி, அனந்தை, அனாதை, அனாசிருதை,

வளங்குலவு வடிவிந்து நான்கினுக்கும் ஒக்கும்;

வழுத்திய ஞானாகாயம், வளர்ஞானவாரி.

துளங்கிய சின்மய ஆடி, தூயமதி கோடி

சோதியிவை தியானம் எனச் சொல்லுவர் நல்லறிஞர்

களங்கமனா சமனாந்தம் துவாதசாந்தத்து அளவும்

கருதுநிராதாரமாம் உன்மனையும் கடந்தே.

வியாபினிக் கலைக்கும் சமனக் கலைக்கும் இடையே மிகவும் சூக்குமமாய் நான்கு கலைகள் 1.வியோம ரூபிணி, 2.அனந்தை, 3.அனாதை, 4. அனாசிருதை உள்ளன. இவைகளுக்கு விந்துவாகிய வட்டப்புள்ளியே வடிவமாகும். ஞான ஆகாயம், ஞானக்கடல், ஞானக்கண்ணாடி, கோடி சந்திரர் ஒளி என இந்தக் கலைகளைக் கருதி தியானம் செய்க.

சமனை மற்றும் உன்மனை வரை நிராதாரமாகச் சொல்லப்பட்ட கலைகளைக் கடந்து தியானம் செய்தால் மாயையான உலகப் பாசங்கள் விலகும். கடவுளை எளிதில் அடையலாம். பத்துக்கும் பதினொன்றுக்கும் நடுவில் இருக்கும் நான்கு கலைகளும் சமமாக சதுர அளவில் பிரிவதில்லை. வியோமரூபிணி- கீழ், அனந்தை- இடப்பக்கம், அனாதை வலப்பக்கம், அனாசிருதை –மேல் என வைத்து தியானிக்கவும். பல ஆயிர அண்டங்களின் தொகுப்பகிய பிரபஞ்சமும் நம் உடலும் ஒன்றாகும். சிவ தத்துவம் தவிர பிற எல்லாம் நம் உடம்பில் இடம் பெற்றுள்ளன. அது மனத்தால் உடம்பில் கற்பிக்கப்படும், எனவே 36 தத்துவங்களும் நம் உடம்பில் உள்ளது, இவை முழுவதும் இந்தக் கலைகளை அறிந்து தியானிப்பதால் தத்துவங்களை உணர்ந்து அவற்றை விட்டு விலகி நின்றும் தியானம் செய்யலாம்.                                                             &&&&&&

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880593
All
26880593
Your IP: 54.160.244.62
2024-03-19 15:23

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg