gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வெள்ளிக்கிழமை, 12 April 2019 17:03

ஸ்தூல, சூக்ம உறுப்புகள் !

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#*#*#*#*#

ஸ்தூல, சூக்ம உறுப்புகள் !

பஞ்ச பூத உலகில் எந்தப் பொருளாயிருந்தாலும் அதன் காலம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதன்படி மனிதனின் உடல் உறுப்புக்களுக்கும் காலம் நிர்ணயிக்கப் பட்டுள்ளபடியாலும் அதை உபயோகப்படுத்தும் முறையையும் கொண்டு அதன் வாழ்நாள் அப்படியே இருக்கலாம். அல்லது குறையலாம். எப்படியிருப்பினும் ஒரு பொதுவான வாழ்நாள் ஒவ்வொரு உறுப்பின் இயக்கத்திற்கும் நிர்ணயிக்கப் பட்டுள்ளதை அறிவோம். -குருஸ்ரீபகோரா


இருதயம்:

இரத்தத்தை உள்வாங்கி மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி படைத்தது இதய பம்ப். இரத்தத்தை விரைவாக அனுப்பும் திறன் கொண்டது. நாற்பது வயதிற்குமேல் இது பலவீனமடைந்து விடுவதால் மற்ற உறுப்புகளுக்கு இரத்தம் பாயும் வேகமும் குறையும்.

எலும்புகள்:

எலும்புகள் இருபத்தைந்து வயதுவரை வலுவாக இருக்கும். முப்பத்தைந்தாவது வயதிலிருந்து பலவீனமடையும்.

கல்லீரல்:

உடலின் உள் உறுப்புகளிலேயே சிறந்த இயக்கத்தைக் கொண்டுள்ள உறுப்பு கல்லீரல்தான். மனிதனின் எழுபது வயதுவரை இது நன்றாக இயங்கும். மது போன்றவை இல்லாமலிருந்தால் மிகவும் நன்றாகச் செயல்படும் திறன் கொண்டது.

கண்:

மனிதனின் நாற்பது வயது முதல் இதன் இயக்கம் குறைய ஆரம்பிக்கும். அதனால் தான் மனிதன் நாற்பது வய்திற்குமேல் பொருள்களைப் பார்க்கும்போது, படிக்கும்போது கண்களைச் சுறுக்கிக் கொண்டு பார்க்க வேண்டி வரும்.

குடல்:

ஒரு மனிதனின் குடல் சுமார் ஐபத்தைந்து வயது வரை நன்றாகச் செயல்படும். அதன் பிறகு ஜீரணத்திற்கான நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிப்பதால் வயிற்றில் பிரச்சனைகள் தோன்றும்.

குரல்:

தொண்டையில் உள்ள மெல்லிய திசுக்களுக்கு லாரினக்ஸ் எனப் பெயர். இது நீடிக்கும்வரைதான் குரலில் இனிமை இருக்கும். அறுபத்தைதிற்கு மேல் முற்றிலும் குரல் மாறிவிடும்.

சிறுநீரகம்:

சிறுநீரகத்தில் உள்ள நெப்ரான்ஸ் என்ற திசுக்கள் அங்கு வரும் அசுத்த ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலையைச் செய்கின்றன. ஐம்பது வயது வரை வலுவுடன் இயங்கி அதற்குமேல் வலுவிழக்கும்.

சிறுநீர்ப்பை:

உணவில் சேர்க்கும் நீர் பிரித்து இங்கு வரும்போது முப்பத்தைந்து வயது வரை இரு கப் அளவிற்கு தேக்கி வைக்கும் ஆற்றல் உண்டு. நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சம் சுறுங்கி வயது அறுபத்தைந்தில் ஒரு கப் அளவிற்குத்தான் நீரை தேக்கி வைக்க முடியும்.

தசைகள்:
மனிதனின் முப்பது வயதுவரை ஆரோக்கியமாக இருக்கும் இது அதன்பிறகு 0.5 முதல் 2.0 சதவீதம்வரை ஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். இதை வலுவுடன் இருக்கச் செய்ய தினசரி உடற்பயிற்சி, மற்றும் உடல் உழைப்பு அவசியம்.

தலைமுடி:

சராசரியாக முப்பது வயதிலிருந்து ஒரு மனிதனுக்கு முடி கொட்ட ஆரம்பிக்கும். பின்னர். அங்கொன்றும் இங்கொன்றுமாக நரை முடியாக மாறிக் கொண்டு வரும்.


தோல்:

மனித உடலின் தோல் இருபத்தைந்து வயதிலிருந்தே பலவீனமடைய ஆரம்பிக்கும்.

நுறையீரல்:

மனிதனின் இருபது வயது வரை நன்றாக இயங்கும். அதன்பின் இடுப்பு எழும்பு பகுதி நெருக்கிக்கொள்ள நுரையீரல் சக்தி குறைந்து மூச்சை உள்ளே இழுத்து வெளியேவிடும் அளவு குறையும். இதனால் தான் சிலருக்கு நாற்பது வயதிற்குமேல் கொஞ்ச தூரம் நடந்தால் கூட மூச்சு வாங்கும். படியேறினால் மூச்சு வாங்கும்.

பற்கள்;

வாயில் எச்சில் உற்றும் வரைதான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களை விரட்டியடிக்கும். நாற்பது வய்தில் எச்சில் ஊறுவது குறைய ஆரம்பிக்கும்.

மார்பகம்:

சுமார் முப்பத்தைந்து வயது வரை ஆரோக்கியமாக இருக்கும் மார்பகம் அதற்குமேல் சுருங்க ஆரம்பிக்கும். அதன் தசைகளில் கொழுப்புத் தன்மை குறைய ஆரம்பிக்கும். பருத்த மார்பகங்கள் சுருங்க ஆரம்பிக்கும்.

மூளை:

சராசரியாக ஒரு மனித மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை பத்தாயிரம் கோடி. மனிதனின் எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகளே காரணம். இதன் செயல்பாடுகள் இருபது வயது வரை சுறு சுறுப்பாக இருக்கும். இருபது வயதிலிருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். நாற்பது வயதில் இருந்து ஒரு நாளைக்கு பத்தாயிரம் வீதம் குறைந்து கொண்டு வரும். இந்தச் சரிவினால்தான் மனிதனுக்கு நினைவாற்றல் உட்பட பல செயல்கள் செயலிழக்கும்.

#####

Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879470
All
26879470
Your IP: 3.236.18.23
2024-03-19 09:47

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg