gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
திங்கட்கிழமை, 16 July 2018 09:31

ராஜலட்சுமி சபை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

#####

ராஜலட்சுமி சபை!

லட்சுமி!

பிரம்மன் ஆலோசனைப்படி தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து மந்தாரமலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிராக்கி பாற்கடலைக்கடைய அதற்கு மகாவிஷ்ணு கூர்ம வடிவெடுத்து உதவி புரிய மற்றபொருட்கள் தோன்றியபோது லட்சுமியும் தோன்றினாள்.

எல்லா உலகங்களில் உள்ளவர்களாலும் பூஜிக்கப்படுபவள் லட்சுமி. சத்யம் தவறாதவர்கள், சூரிய- சந்திர மண்டலங்கள், பால், தானியம், உடைகள், சந்தனம், நகைகள், தூய இல்லங்கள், புஷ்பங்கள், மங்கலக் கலசங்கள் என மங்களகரமான எல்லா இடங்களிலும் அவள் வசிக்கின்றாள்.

இந்திரன் லக்ஷ்மியை தொடர்ந்து பூஜித்து வந்தான்- ஒருசமயம் துர்வாச மகரிஷி திருமகளிடமிருந்து பெற்ற மாலையை தேவேந்திரனிடம் கொடுத்தார். ஆணவம் சேர்ந்திருந்த நிலையில் அந்த மாலையின் பெருமையை அறியாத இந்திரன் யானையின் தலையில் வைத்தான். செருக்குடன் இருந்த வெள்ளையானையும் அந்த மாலையை பிய்த்துப் போட்டது. லட்சுமி தேவியின் மாலைக்குரிய மரியாதை தராத செயல் பிரமஹத்தி தோஷத்திற்குச் சமம். வெகுண்ட துர்வாசர் உன்னிடமிருக்கும் சகல செல்வங்களும் உன்னைவிட்டு விலகட்டும் எனச் சாபமிட்டார்.

ஒன்றை தவறு என தெரிந்தால் செய்ய மாட்டோம். செய்தபின் தெரிந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்திரன் மன்னிப்பு கேட்டாலும் சாபப்படி லட்சுமி இந்திரனுடைய அமராவதி பட்டணத்தை விட்டு அகல சகல செல்வங்களையும் இழந்தான். பிரம்மனிடம் சென்று ஆலோசனை செய்தான். இருவரும் மகாவிஷ்ணுவிடம் செல்ல அவர் அருள் பெற்று லட்சுமி பூஜை செய்து இழந்த லட்சுமி கடாட்சமான செல்வங்களை பெற்றான்.

தன் கணவன் விஷ்ணு பெண் ரூப மெடுத்து சிவனுடன் கூடியதை அறிந்து அதிர்ச்சியும் கோபமும் கொண்டு சிவனிடம் தன் கோபத்தைக் காட்ட சிவனைத் தேடினாள். எங்கும் காணமுடியாததால் பூலோகத்திற்கு வந்தாள். தவமிருக்க ஆரம்பித்தாள். பல யுகங்கள் கடந்தன. வில்வ மர ரூபங்கொண்டு வில்வத்தை ஈசன்மேல் பொழிந்தாள். காலம் கனிய சிவன் காட்சி கொடுத்தார். ஐயப்பன் அவதாரம் நிகழவேண்டியிருந்த காரணத்தையும் அதற்காக நடந்த நிகழ்வுகள் அவை என்பதை விளக்கி லட்சுமியை அமைதிப்படுத்தினார். வில்வம் வர்ஷித்த லட்சுமியை ஐஸ்வர்ய லட்சுமியாய் திகழ வரம் அளித்தார். தன் அருளின் அடையாளமாக ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்கிராமமாக உருவகம் செய்து எப்போதும் விஷ்ணு மார்பில் இருக்கச் செய்தார். மகாலட்சுமியை தன் இதயத்தில் ஏற்று கௌஸ்துப மணியைத் தரித்திருக்கும் மகாவிஷ்ணு ஸ்ரீநிவாஸன் எனப் பெயர் பெற்றார். மகாலட்சுமியால் அவருக்கு மந்திரசக்தி, இச்சாசக்தி, ஞானசக்தி, க்ரியாசக்தி அனைத்தும் கிடைத்தன. சுக்கிரன் யோகத்திற்கு அதிபதி ஆனதும், குபேரன் தனாதிபதி ஆனதும் இங்கு வழிபட்டுதான். இராவணன் சிவனை வழிபட்டு ஈஸ்வரப் பட்டம் பெற்ற தலம். மன்மதனுக்கு அரூப அழகுடலை அளித்ததால்-திருக்காமேஸ்வரர்- மன்மதபாணம் அம்பிகை மீதுபட்டதால்- சிவகாமசுந்தரி, மன்மதனுக்கு வைத்தியம்- வைத்தியநாதர். போகர், பாம்பாட்டிசித்தர், புலிப்பாணிசித்தர் தவம் மேற்கொண்ட தலம். வெள்ளூர்-முசிறி-6,திருச்சி-31

தஞ்சை மன்னன் கோச்செங்கன் பரிவாரங்களுடன் சிதம்பரம் சென்று தரிசனம் செய்து அடுத்தநாள் காலை திரும்பி வந்து விடுவது வழக்கம். ஒரு நாள் நடராஜரின் அர்த்தஜாம பூஜைக்காக அடர்ந்த காடாக இருந்த ஒருஊரைத் தாண்டிச் செல்லும்போது கொண்டுவந்திருந்த தீவட்டிகள் அனைந்து விடவே கூட வந்தர்கள் அடுத்த நாள் அவருடன் வர பயந்தனர். நடராஜர் தரிசனம் முடிந்து கண்ணயர்ந்த கோச்செங்கன் கனவில் மகாலட்சுமி தோன்றி என்னைக் கவனியாமல் நான் இருக்கும் ஊரை நீ தாண்டி சென்றதால் தீவட்டிகள் அணைந்தன என்றார். தீவெட்டியின் திரிகளை நிறுத்திவிட்டதால் திரி நின்றவூர் என்பது திருநின்றவூர் என்றானது. மகாலட்சுமி தினமும் சிவனை வணங்கியதால் காட்சி- பெருமாள் மார்பில் இருக்கும்படி வரம் பெற்றார்- மகாலட்சுமிபுரீஸ்வரர்.

தன்னை எப்போதும் கேலி செய்து கொண்டிருக்கும் திருமாலின் தலை ஒருநாள் கடலில் போய்விழ எனத் திருமகள் சொன்னது சாபமாக மாறியது. திருமால் ஒருசமயம் களைப்பால் தன்னிடமிருந்த வில்லை தன் மேவாய்க்கு முட்டுக் கொடுத்தபடி உறங்கினார். அப்போது குதிரைமுகம் கொண்ட அரக்கன் ஹயக்கிரீவனுடைய தொல்லைகள் தாளாமல் இந்திரன் பெருமாளிடம் முறையிட வந்தான். வந்தவன் திருமால் அயர்ந்து உறங்குவதைப் பார்த்து எழுப்ப மனமில்லாமல் அங்கேயே காத்திருந்தான். அப்போதும் திருமால் கண் திறக்க வில்லையாதலால் என்ன செய்வது என்று புரியாமல் முக்கண்ணனிடம் சென்று சொன்னான். அவர் ஆலோசனைப்படி கரையான் உருவெடுத்து வில்லின் நானை அறுக்க அறுபட்ட நாண் வேகத்துடன் சென்று திருமாலின் கழுத்தை அறுக்க அவர் தலை திருமகள் கொடுத்த சாபத்தினால் கடலில் போய் விழுந்தது.

திருமால் தலையில்லாமல் இருப்பதைப் பார்த்த இந்திரன் முதலான தேவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிரம்மா மற்றும் தேவர்கள் ஆதி சக்தியை வணங்க அன்னை தோன்றி குதிரை முகம் கொண்ட அரக்கன் தன் இனமான ஹயக்கிரீவனே தன்னைக் கொல்ல வேண்டும் என அரிய வரம் பெற்றுள்ளான். அந்த இனத்தில் அவன் ஒருவனே இப்போது உயிருடன் இருக்கின்றான். அதனால் அவனின் அட்டூழியங்கள் அளவிட முடியததாகிவிட்டது. அவன் அழியும் காலம் கூடிவந்துள்ளது. ஓர் அசுவத்தின் தலையை திருமாலுக்குப் பொருத்துங்கள் எனக் கூறினார். பிரம்மா அப்படியே செய்தார்.

ஹயக்கிரிவர் அசுர ஹயக்கிரிவனை வதம் செய்தார். ஆதி மகாலட்சுமி ஹயக்கிரிவருடன் இனைந்து வழிபடும் மக்களுக்கு அனைத்து செல்வத்தையும் வழங்குகின்றார்.

உலகம் உழிக்காலத்தில் அழிந்து எங்கும் நீர் நிலைகளாக இருக்க இரு உயிர்கள் தோன்றின. உயிர்களே இல்லாமல் தாங்கள் மட்டும் எப்படி உயிருடன் இருக்கின்றோம் என அதிசயப்பட்ட மது, கைடபர்கள் தங்களை உருவாக்கிய சக்தியை நோக்கித் தவம் இருந்தனர். சக்தி காட்சிதர தாங்கள் இருவரும் விரும்பினால் மட்டுக் மரணம் என வரம் பெற்றனர். பெற்ற வரத்தால் தங்களது திறமைகளைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. தோள்கள் திணவெடுத்தன.

பிரம்மா அந்தப் பக்கம் வர அவரிடம் சண்டையிட்டு அவரிடமிருந்த நான்கு வேதங்களையும் அபகரித்து பாதாள லோகத்தில் பதுக்கி வைத்தனர். பிரம்மா ஹயக்கிரிவரிடம் தஞ்சமடைந்தார். ஹயக்கிரிவர் அரக்கர்களிடம் போர் புரிந்தார். போர் 5000 ஆண்டுகள் ஆகியும் முடிவிற்கு வரவில்லை. ஹயக்கிரிவர் ஞானதிருஷ்டியில் அவர்கள் பெற்ற வரத்தை அறிந்தார். ஆதிசக்தியை நினைத்தார். ஆதிசக்தி அழகிய பெண்ணாக மோகினியாக அங்கு தோன்ற இரு அரக்கர்களின் கவனமும் சிதறியது. சித்தம் குழம்பியது. அழகியைக் கண்ட மயக்கத்தில் இருந்த இருவரையும் நோக்கி நீங்கள் வேண்டும் வரம் என்ன எனக் கோட்டார் திருமால். நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோல –தவளை தன் இருப்பிடத்தை தன் குரலால் சொல்வதுபோல- செருக்கு கொண்ட அரக்கர்கள் உன் வரம் எங்களுக்குத் தேவையில்லை, நாங்கள் வேண்டுமானால் வரம் தருகின்றோம் நீ வேண்டுவது கேள் என்று தங்கள் அழிவிற்கு தங்கள் வாயாலே வழிதேடினர். திருமால் புன்னகையுடன் உங்களின் இருவரின் உயிர்தான் எனக்கு வரமாக வேண்டும் என்றார். மயக்கத்தில் தாங்கள் செய்த பிழையை உணர்ந்தனர். இருப்பினும் ஹயக்கிரிவருடன் போரிட்ட அரக்கர்கள் இருவரையும் வதம் செய்தார்.

உக்கிரமாக இருந்த ஹயக்ரீவரின் மடியில் லட்சுமி அமர்ந்தால் சாந்தமானார்-லட்சுமி ஹயக்ரீவர் எனப்பட்டார்.

துளசிச் செடி இல்லாத வீடு, சங்கு இல்லாதவீடு, சாளக்கிராமம் பூஜிக்காதவீடு, விஷ்ணு பக்தர்களை பழிக்கும் இல்லம், வேதியர்களுக்கு மரியாதை செய்து உணவளிக்காத இல்லம், விருந்தினரை வரவேற்று உபசரிக்காத இல்லம் ஆகியவற்றிலிருந்து லட்சுமி விலகிவிடுவாள் என்கின்றது வேதம்.

பூஜைக்கு உகந்த நாட்கள்- செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, பௌர்ணமி தினங்கள் சிறப்பு, எந்நாளும் வழிபடலாம்.

உகந்த மலர்கள்- செந்தாமரை, தாழப்பூ, செண்பகம், முல்லை, மல்லி, பவளமல்லி (பாரிஜாதம்) சிறப்பு. தும்பை, அருகம்புல் தவிர மற்ற பூக்களை உபயோகிக்கலாம்.

வரலட்சுமிவிரதம்: வற்றாத செல்வமும், நிலைத்த தாலிபாக்யமும், கீர்த்தியும் பெற அன்னை மகாலட்சுமிக்கு பூஜை- வரலட்சுமிவிரதம் இருந்து பூஜிக்க வேண்டும். ஆடி அல்லது ஆவணி பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை யன்று சுமங்கலிகள் அஷ்ட லட்சுமிகளையும் வணங்கும் பூஜையே வரலட்சுமி விரதம் ஆகும்.

வியாழக்கிழமை மாலையிலிருந்து பூஜைக்கான ஆயத்தங்களைத் துவக்கி வீட்டை நன்றாக சுத்தப்படுத்தி கலசம் தயார் செய்து கொள்ளவும். வெண்கலம் அல்லது வெள்ளிச் செம்பின் உள்ளே பச்சரிசி, காது ஓலை, கருகமணி, காசுகள், எழுமிச்சை பழம் ஆகியவற்றை வைத்து மஞ்சள் தடவிய தேங்காயால் வாயை மூடி நான்கு புறமும் மாவிலையை சொருகிவைக்கவும், சந்தனத்தை தேங்காயில் வைத்து அம்மன் முகத்தை பதிக்கலாம். அப்படி உருவம் இல்லாதோர் சந்தனத்தால் அம்மன் உருவம் செய்துகொள்ள வேண்டும். அல்லது சிலையை கலசத்திற்கு பக்கத்தில் வைக்கலாம். தலைவாழை இலையை சுத்தம் செய்து அதில் பச்சரிசி அல்லது நெல்லைப் பரப்பி அதன்மீது கலசத்தையும் சிலையையும் வைக்கவும். அன்னையை சிறப்பாக அலங்கரிக்கவும். அம்மன் கலசத்தின்முன் ஒன்பது (புகழ், அன்பு, கல்வி, செல்வம், வீரம், ஆரோக்கியம், சந்தான பாக்யம், வெற்றி இவைகளுடன் ஒன்பதாவது இழை மகாவிஷ்ணுவை குறிப்பதாகும்) இழைகள் கொண்ட நோன்புச் சரடுகளை வைக்கவும். அப்பம், பாயசம், கொழுக்கட்டை ஆகிய இனிப்பு வகைகளும், சுண்டல், போன்ற உப்பு பண்டங்களும் அன்னைக்கு படையலில் வைக்க தயாரித்து பாதுகாப்பாக வைக்கவும்.

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை காலை தலைக்கு குளித்து 1030-1200 மணி வரை ராகுகாலத்திற்குமுன் அம்மனை ‘மகாலட்சுமி தாயே! வரங்களைத் தரும் வரலட்சுமி எனப் புகழப்படும் தாயே எங்கள் இல்லத்திற்கு எழுந்தருள்வாய்’ என மெல்லிய குரலில் சொல்லி அழைத்து ஆரத்தி காட்ட வேண்டும். அர்ச்சனைக்குத் தேவையான் பூக்கள், குங்குமம் ஆகியவற்றைத் தயாராக வைக்கவும்.

மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து குங்கும் வைத்து பூஜை நல்லமுறையில் நடக்க வழிபட வேண்டும் வில்வம், துளசி, உதிரிப் பூக்கள் கொண்டு அன்னையை அர்ச்சனை செய்யவும். அம்மனை கிழக்கு நோக்கி வைத்து பூஜை செய்பவர்கள் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்யவும். அம்மனின் நூற்றியெட்டு நாமாவளி- பெயர்களைச் சொல்லி பூக்கள் / குங்குமத்தைப் அன்னையின் பாதத்தில் போடவும் மகாலட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா தோத்திரம் தெரிந்தவர்கள் பாடலாம். இசைத் தட்டுகளை இயக்கியும் கேட்கலாம். நிவேதனங்களை நீர் சுற்றி படைத்து சிறு கண்ணாடியை கொண்டுவந்து அம்மனுக்கு காட்ட வேண்டும். தெரிந்தவர்கள் வரலட்சுமி கதையைப் படிக்கவும். தசாங்கம், ஊதுபத்தி, சாம்பிராணி ஏற்றி கற்பூரம் காட்டி தீப ஆராதனை செய்து பூஜை முடித்து பெரியவர்களிலிருந்து ஆரம்பித்து சரடு கட்டி விட வேண்டும். பின்னர் பிரசாதம் வழங்க வேண்டும். ரவிக்கை போன்ற வஸ்திரங்கள் தானம் செய்யலாம். மதியம் உறங்காமல் இருந்து மாலையில் பாடல்பாடி தீப ஆராதனை செய்ய வேண்டும்.

புனர் பூஜை: மறுநாள் சனிக்கிழமை காலை குளித்து அன்னைக்கு பூவிட்டு வணங்கி கற்பூரம் ஆராதனை காண்பித்து கலசத்தை இடப்புறமாக நகர்த்திவிட்டு பூக்களையும் மஞ்சள் பிள்ளையாரையும் நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். அல்லது கால்படாத இடங்களில் வைக்கவும். கலச அரிசியை பொங்கல் செய்யவும். காசுகள், காதோலை, கருகமணி ஆகியவற்றை சுத்தம் செய்து பாதுகாப்பாக அடுத்த முறை பயன் படுத்த வைக்கவும். தாயே உன் அருளால் விரதத்தை நல்ல படியாக முடித்து விட்டேன். இதே போன்று வருடா வருடம் எந்த தடங்களுமின்றி இப்பூஜை நடைபெற அருள வேண்டும் என வேண்டி அம்மன் சிலை அல்லது முகம், நகைகள் ஆகியவற்றை எடுத்து சுத்தம் செய்து பத்திரமாக வைக்கவும். பிறகு வழக்கம்போல் உணவு உண்ணலாம்.

குறிப்பிட்ட நாளில் பூஜை செய்ய வசதிபடா நிலையில் உள்ள பெண்கள் வீட்டல் உள்ள ஆண்களைக் கொண்டு ஒரு தேங்காயை எடுத்து பத்திரமாக வைக்கச் சொல்லிவிட்டு பின் தொடரும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமைகளில் எடுத்து வைக்கப்பட்ட தேங்காயை கலசத்திற்குப் பயன் படுத்தி விரதம் இருந்து பூஜிக்கலாம்.

மகாலட்சுமியை வணங்கும் முறை!
தேவியின் திருப்பாதங்களை மனதில் வைத்து தியானைத்தாள் மோட்சம்,
தேவியை மடிமீது வைத்து குழந்தையாய் தியானித்தால்- தனபாக்கியம்
தேவியை மனதில் வைத்து தியானித்தால்- குழந்தைச் செல்வம்
தேவியை இதயத்தில் வைத்து தியானித்தால்- காரியசித்தி
தேவியை கழுத்தில் வைத்து தியானித்தால்- ரத்ண ஆபரணங்கள்
தேவியை தலையில் வைத்து தியானித்தால்- உதறித் தள்ளுவாள்

ராஜலட்சுமி சபை!
தொழில் முன்னேற்றம், செல்வச் செழிப்பு, தானிய விருத்தி,சந்தான பாக்யம், மனதில் தைரியம், வெற்றிகள் கிட்டும் இல்லத்திலும் மனதிலும் மங்களங்கள் தங்க இந்த அஷ்டலட்சுமிகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அந்த இடமே ராஜலட்சுமி சபை.
கஜலட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, தான்ய லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி, தைரிய லட்சுமி,

#####

Read 12186 times Last modified on செவ்வாய்க்கிழமை, 21 August 2018 12:37
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880904
All
26880904
Your IP: 54.221.159.188
2024-03-19 17:10

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg