gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சரஸ்வதி

Written by

உள்ளே.....

1.“ஸ்ரீ சரஸ்வதி”-சரஸ்வதி கடாட்சம்பெற-தினமும் / வேண்டும் போது.

2.“கலைமகள் துதி”- அறிவு, கலைகளில் தேர்ச்சி பெற- தினமும் / வேண்டும் போது. 

3.“சரஸ்வதி கவசம்”-தினமும்/நேரம் கிடைக்கும்போது 

4.“ஸ்ரீ சரஸ்வதிதுதி”- சரஸ்வதி கடாட்சம் பெற-வாக்கு வன்மை பெற-தேர்வுகளில் வெற்றிபெற-அகத்தியர் பாடியது- தினமும் / வேண்டும் போது. 

5.“சரஸ்வதிதுதி”-புண்ணியத்தலபுராணம்/ வரலாறு எழுதும் போது பாடியது- பள்ளி/ கல்லூரி படிப்பவர்கள் தினமும் முடிந்த வரை 

6.“பத்மபுராண சரஸ்வதி துதி”-கல்விசிறக்க-தினமும் 

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட-தினமும். 

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
சங்கத் தமிழ் மூன்றும் தா!

1.“ஸ்ரீ சரஸ்வதி”- சரஸ்வதி கடாட்சம் பெற- தினமும் / வேண்டும் போது.

வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப்போல அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாக காண்பதெல்லாம் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிறபாள் மலரடி சூழ்வோமே!

வெள்ளைத்தாமரைப் பூவினிலே
வீற்றிருக்கும் கலைவாணி!
விண்ணவர் போற்றும் சுகபாணி
வந்தருள்வாயே கலைவாணி!

உள்ளம் எல்லாம் உன் புகழ்பாடி
உயர்ந்திட அருள்வாய் கலைவாணி!
உயர்கலையோடு நலம்பெறவும்
நீ அருள்வாய் கலைவாணியே!

அண்ட புவனங்களினை ஆக்குமயன் தேவியுனை
மண்டலத்தில் போற்றி வரம் பெற்ற தொண்டருக்கு
ஆதரவாய் நின்று அருளினாய் முத்தமிழும்
போதமளி வாணி உன்தாள் போற்றி.

வெண்மலரும் வெண்பணியும் வெண்கலையும்
வெண்மணியும் வேய்ந்து வாச
வெண்கமலம் வீற்றிருந்து பழங்கருணை
பூத்துவண்டு விளரி பாடக்
கண்மலர் ஆயிரந்தோட விழ்ந்து முகை
நெகிழ்ந்த கமலத்தில் வாழ என்
கண்மலருந் சதுர்முகத்தோனா வில்வளர்
வாணி பதங் கருத்துள் வைப்பாள்.

வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளப்பணி பூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்
வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னைச்
சரியாசனம் வைப்பாய் தாயே!

அம்மா கலைவாணி எனக்கு அருளவாய் மகாராணி
சிம்மாசனமாய் எந்நாவிலே தேவி நீ வருவாய்!
பிரமன் வித்தை தொழில் ஆனான்
வேதமுதல் ஆனான் அவன்!

காதல் இளங்களியே என்றும் 
கைதொழுவேன் உன்னையே!
வெள்ளை மலர்மேலே அன்னம்
வீற்றிருந்தால் போலே மெள்ள

எழுந்தருள்வாய்! அம்மா வேண்டும்
வரம் அருள்வாய்! ஏது படித்து விட்டேன்!
பெரியதாய் என்ன முடித்து விட்டேன்!
உன் காலைப் பிடித்தேன்! அதனால்

கவிதை வடித்தேன்! பூவும்
உனக்காக! தேடும் பொன்னும் 
உனக்காக! கூடும் எனக்காக
அருள்வாய் கோடிக் கணக்காக!

2.“கலைமகள் துதி”- அறிவு, கலைகளில் தேர்ச்சி பெற- தினமும் / வேண்டும் போது.

பிரம்மனின் வடிவம் கொண்டாய் பரமனின் ஜோதி கொண்டாய்!
கர்மத்தை அளிக்க வல்ல காரணி கலையும் நீயே!
மர்மமாய் இயற்றுகின்ற மங்கையே! வெண்மை நேர்ந்த
சொர்ணமே வித்தை நல்கும் சொர்க்கமே போற்றி! போற்றி!

ஆரெனக் கருணை கொண்ட அன்னையே உண்மை நீயே!
கூறென முக்குணத்தைக் கொண்டவள் நீயே தாயே! 
வீறென வந்தவர்க்கு விளைந்த வோர் தோழியேனும் 
ஆறுதல் அறிவை நல்கும் அணங்குணை வணங்கு கின்றேன்!

வாக்கதின் ரூபமான சாரதை நீயே அம்மா!
வாக்கினில் நன்மை சேர்க்கும் வாணியும் நீயே தாயே!
வாக்கினைப் பிரயோகிக்கும் வல்லவர் வாக்கும் நீயே!
வாக்கதன் பொருளும் நீயே! வல்லபி போற்றி! போற்றி!

காலங்கள் முடிவு கூறும் கமலைநீ கருதினாயேல்
மூலங்கள் எல்லாம் உன்றன் முகிழ்ப்பினில் வருதல் உண்மை
ஆலங்கொள் அண்ணனார்க்கு அமைந்ததோர் தங்கையன்றோ!
நீலங்கொள் விழியாய் பிரம்ம சித்தாந்தம் நீயே அன்றோ!

மறைகளின் சக்தி நீயே! மறைஞான சக்தி நீயே!
மறப்பொருள் ஆன புத்தி மாபொரும் சக்தித் தாயே!
பரையெனில் உனையே சாரும் பராசக்தி வடிவம் கொள்ளும்
நிறைகுணப் பெண்மை நீயே! நிமலையே வணங்குகின்றோம்!

அருளதே உருவாய்க் கொண்ட அன்னையே உன்னை 
என்றும் அருமையாய்க் கொண்டோன் தன்னை 
அன்னையே என்றும் காக்கும்! அலங்கலைத் தொழுதேன் நானே! 
அருளொடு ஞானம் கேள்வி அனைத்தையும் அளித்து நீ காக்க!

கருவமே கொண்ட என்னைக் கனிந்துடன் 
காக்கக் காக்க! உருவமொன்றில்லா அன்னை 
உனையினித் தொழுவ தெவ்வாறு! இறுவென நீயும் 
சொன்னால் எனக்கெனப் பணியொன்றேது!

உருவமும் அருவுமான ஒருவளே! 
அறிவே என்றன் ஒருதனி உன்னையே 
நான் பணிந்தனம் கருவமே கொண்டாய் 
என்றால் கலந்தவன் நானே என்று இருவரும்

பொருதல் தீது என்னை நீ காக்க தாயே!
மருமமே மருமத்துள்ளும் மருமமாய் 
இயங்கும் தேவீ உருவிலி நீயே!
உண்மை உன்வலி தெரிதல் உண்மை!

துருவமும் நீயே ஆனாய் துரந்தரி அறிவே உன்னைச்
செறிவுடன் நினைக்கும் மாந்தர் செம்பொருள் அடைவதுண்மை
அருவமாய் உருவமான அமலையே உன்றன் பாட்டை 
அறிவுடன் அறிந்தோர் என்றும் அறிகுவர் மேதை தானே!

3.“சரஸ்வதி கவசம்”-தினமும்/நேரம் கிடைக்கும்போது

சரஸ்வதி என் தலையைக் காக்க! வாக்கின்
தலைவியாம் வாக்தேவி நுதலைக் காக்க!
விரசு பகவதி கண்ணைக் காக்க! 
நாசி விமலை வாக்வாதினியாள் காக்க!

வித்தைக்கு உரிய தனித் தேவதை என் உதடு காக்க!
உயர் புகழ்ப் பிராம்மி பல் வரிசை காக்க!
மருவும், ஐம், என்றிடுமனு கண்டம் காக்க!
வாழ் ஹ்ரீமாம் எழுத்து என்றன் பிடரியைக் காக்க!

எழுத்தான ஸ்ரீம் எந்தோள் காக்க! வித்யா திருஷ்டாத்மா
என் மார்பில் இருந்து காக்க! எழுத்து வித்யா ரூபிணி 
என் நாபி காக்க! வாணி கரம் காக்க! எல்லா எழுத்தின் 
தேவி விழுத்தக என் அடி காக்க!

வாக்கிற் சென்று மேய அதிட்டான தேவதைதான் 
என்றான் மழுத்த உறுப்பு எவற்றினையும் காக்க! காக்க!
முன் கிழக்கில் சர்வகண்ட நாசி காக்க!
அங்கியெனும் திசைக்கண்ணே நின்று பீஜாட்சரி காக்க!

மந்திரராஜத்தின் தேவி பொங்கு தெற்கிலேயிருந்து காக்க! 
காக்க! புகல்மூன் அக்கரவிருவாள் நிருதி திக்கில் 
தங்கியெனைப் புரந்து அருள்க! மேற்குத் திக்கில் 
சாற்று நாநுனியுறையும் அன்னை காக்க!

துங்கமிகு சர்வாம்பிகைதான் வாயு துன்னு திசையில் 
என்னைக் காக்க! சத்யவாகினி வடக்கில் காக்க! எல்லா
கலையினிலும் உறைவாள் ஈசானம் காக்க! நத்து சர்வ 
பூசிதையாள் ஊர்த்துவத்தில் நயந்திருந்து காத்தருள்க!

அதோமுகத்தில் புத்தகவாசினியாகும் தேவி காக்க!
புகழ் கிரந்த பீஜத்தின் உருவாய் நின்றாள்
எத் திசைகளிலும் இருந்து காக்க! காக்க!
எளியேனைக் கலைமகள் தான் என்றும் காக்க! காக்க!

4.“ஸ்ரீ சரஸ்வதிதுதி”- சரஸ்வதி கடாட்சம் பெற-வாக்கு வன்மை பெற-தேர்வுகளில் வெற்றிபெற-அகத்தியர் பாடியது- தினமும் / வேண்டும் போது.

குந்தமலர் என்கிற வெள்ளொளுத்திபூ, சந்திரன், பனிநீர் போன்ற வெண்மையான மாலையை உடையவள, வெண்ணிற ஆடை அணிந்திருப்பவள், கையில் வீணையேந்தி வெண்தாமரை மலர்மேல் அமர்ந்திருப்பவள், பிரம்மா, விஷ்ணு, சிவன் உள்ளிட்ட முக்ய தேவர்களால் போற்றப்படுபவள். அஞ்ஞானத்தைப் போக்கும் சரஸ்வதிதேவி என்னைக் காப்பாற்றட்டும். உன்னை வணங்குகின்றேன்.

வாக்தேவி சரஸ்வதிக்கு நான்கு கரங்கள். ஒரு கரத்தில் ஸ்படிக மணியாலான அட்சமாலை. ஒரு கரத்தில் வெண்தாமரை. மற்ற இரு கரங்களில் கிளியையும் புத்தகத்தையும் வைத்துக் கொண்டிருக்கின்றாள். இவள் குந்தமலர், சந்திரன், சங்கு போன்று வெண்மையானவள். அவள் எப்போதும் என்னுள் தங்கட்டும். அவளை வணங்குகின்றேன்.

குந்தமலர், சந்திரன், சங்கு, படிகமணி, ஆகியவைகளைப்போல் வெண்ணொளியில் ஒளிர்பவளும், எப்போதும் பிரஸன்னமாயிருப்பவளும் என் முகத்தில் தங்கட்டும். அவளை நான் வணங்குகின்றேன்.

பனி, கர்ப்பூரம், சந்திரன் இவைபோன்ற வெண் நிறமுடையவளும், பொன்மாலை, சம்பகமாலை அணிந்திருப்பவளும், நிமிர்ந்த பருத்த கும்பம் போன்ற தனங்களுடன் எழிலுற விளங்குபவளுமான சரஸ்வதி தேவியை வாக்குவன்மை அளிக்க வேண்டி வணங்குகின்றேன்.

நீரின்மீது தாமரையாசனத்தில் அமர்ந்திருப்பவளும், வகுள புஷ்பத்தில் சோபிப்பவளும், தபஸ்விநியாக காட்சியளிப்பவளும், கமலாசனத்தில் அமர்ந்திருப்பதில் பிரியமுள்ளவளும், அழகிய தனங்களையுடையவளும்மான சரஸ்வதி என் மனதில் நிறைந்திருக்கட்டும். என்னை அறிவு நிரம்பியவன் ஆக்கட்டும். நான் அவளை வணங்குகின்றேன்.

தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் பாத கமலங்களை உடையவளும், கையில் அழகான புத்தகத்தை வைத்திருப்பவளும், பிரும்மாவின் மனைவியும் கமலாசனத்தில் அமர்ந்திருப்பவளுமான சரஸ்வதி என் நாவில் நடமாடட்டும். வாக்கு வன்மைதரட்டும்.

நினைத்த ரூபம் எடுக்கக்கூடியவளும், வரம் அளிப்பவளுமான சரஸ்வதியே, கல்வியைத் தொடங்கப் போகிறேன் எனக்கு எப்போதும் எல்லா கலைகளும் சித்தியடைய வரம் அளி.

எங்கும் நிறைந்திருக்கும் தேவியான தேவி சரஸ்வதியே. உன்னை வணங்குகின்றேன். சாந்த வடிவினளும், சந்திர கலையைத் தரித்தவளும் யோகீஸ்வரியுமான உன்னை போற்றி வணங்குகின்றேன்.

எப்போதும் மகிழ்ச்சியினைத் தருபவள். அனைத்துக்கும் ஆதாரமானவள். களங்கம் அற்றவள். கலைகளின் அன்னை விசாலமான கண்களைஉடைய பூரண ஞானியான உனக்கு என் வணக்கங்கள்.

சுத்தமான ஸ்படிகக் கல்போன்றவளும் சூட்சும வடிவானவளும் பரபிரம்மஸ்வரூபியும், நான்கு கரங்களையுடையவளும், அனைத்து சித்திகளுக்கும் அதிபதியானவளுமான சரஸ்வதிக்கு எனது வணக்கங்கள்.

உடல் முழுவதும் முத்துக்களால் அலங்கரிக்கப் பட்டிருப்பவளும், மூலாதாரமானவளும், மூலமந்த்ர வடிவினளும், மூல சக்தியுமானவளுக்கு எனது வணக்கங்கள்.

மனோன்மணி மற்றும் மகாயோகினிக்கு நமஸ்காரம், வாக்கினில் வரமளிக்கும்படி வரதஹஸ்தம் உடையவளிடம் வணங்கிக் கேட்டுக்கொள்கின்றேன்.

வேதத்துக்கும், வேதரூபிணிக்கும், வேதாந்தத்திற்கும் வணக்கங்கள். குற்றங்களுக்கு அப்பாற்பட்ட நிறைவான குணங்களினால் ஒளிர்பவளுக்கு எனது வந்தனம்.

சர்வ ஞானியும் சதானந்தரும், சர்வ ரூபியுமானவளுக்கு வணக்கம். சம்பந்தரும் இளைஞியும் அதே சமயம் சர்வக்ஞசொரூபியுமானவளுக்கு வணக்கம்,

யோகநாரியானவளும், உமா தேவியானவளும், யோகானந்த வடிவினளும், திவ்யஞான சொரூபியும் முக்கண்ணியும் திவ்ய மூர்த்தியுமானவளுக்கு வணக்கம்.

பிறைச் சந்திரனை தலையிலணிந்தவளும், சந்திரனைப் போன்ற முகமுள்ளவளுமான சரஸ்வதிக்கு வணக்கம். சந்திர சூரியனை சிரசில் தரித்தவளும் சந்திரனைபோன்ற குளிர்வான ஒளியுள்ளவளுமான கலைவாணிக்கு வணக்கம்.

அணுவுக்கு அணுவாகவும், பரமாணுரூபியாகவும், விஸ்வ ரூபமெடுப்பவளும், அணிமாதி அஷ்டசித்திகளுக்கு அதிபதியும் ஆனந்த சொரூபியுமான தேவிக்கு வணக்கம்.

ஞானம். விஞ்ஞானம் என்ற இரண்டுமானவாளும் ஞான மூர்த்தியாக விளங்குபவளும் ஆகிய சரஸ்வதிக்கு வணக்கம். பல்வகையான சாஸ்திரரூபியும் பல்வேறு உருவமுள்ளவளுமான தேவிக்கு வணக்கம்.

தாமரையில் பிறந்தவளும், தாமரையின் வம்சத்தவளும் தாமரை சொரூபியுமானவளுமாகியவளுக்கு வணக்கம். பரமேஷ்டிக்கும் மேலான மூர்த்திக்கும் பாபநாசினிக்கும் வணக்கம்.

மகாதேவியும், மகாகாளியும், மகாலக்ஷ்மியுமாக திகழ்பவளுக்கு வணக்கம். பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் பரப்பிரம்ம வடிவாக விளங்குபவளுக்கு வணக்கம்.

தாமரை பூந்தோட்டமாக விளங்குபவளும் நினைத்த உருவமெடுப்பவளுமாகிய தேவிக்கு வணக்கம். கபாலியானவளும் செயல்வீரம் மிக்கவளும் அதேசமயம் செயலாகமிருப்பவளுக்கு வணக்கம். செயலும் அவளே. செய்பவளும் அவளே.

நாள்தோறும் காலை மாலை என்று இந்த துதியை ஆறு மாதகாலத்திற்கு தினமும் படித்துக், கோரிய எல்ல பயனும் எனக்கு நிச்சயம் கிடைக்க அருள் புரிவாய்.

அகஸ்திய மகரிஷியால் சொல்லப்பட்ட இந்ததுதி எனக்கு சகல சித்திகளையும் அளிக்கவல்லது. எனது பாவங்களிலிருந்து விடுவிக்க வல்லது.

5.“சரஸ்வதிதுதி”- புண்ணியத் தலபுராணம்/ வரலாறு எழுதும் போது பாடியது- பள்ளி/ கல்லூரி படிப்பவர்கள் தினமும் முடிந்த வரை

புத்தகத்துள்ளுறை மாதே! 
பூவில் அமர்ந்துறை வாழ்வே!
வித்தகப் பெண்பிள்ளை நங்காய்! 
வேதப் பொருளுக்கிறைவி!
முத்தின் குடையுடையாளே! 
மூவுலகுந்தொழும் தேவி!
செப்புக்கவித் தனமுலையாய்! 
செவ்வரி ஓடிய கண்ணாய்!
முத்து நிறந்த வெண் பல்லாய்! 
முருக்கம்பூ மேனி நிறத்தாளே!
தக்கோலந் தின்ற துவர் வாயாய்! 
சரசுவதி என்னுந் திருவே!
எக்காலுமுன்னைத்தொழுவோம்! 
எழுத்தறிபுத்தி பண்ணுவிப்பாய்!

ஆக்கா எம்பெருமாட்டி! 
அழகிய பூ அனை மீதாய்!
நோக்கா என்மிடி தீர நொடிக்கும் 
பிராமணத்தி நோக்காயே!
சாலி நெல்லரி கொண்டு 
சரசுவதி பூஜை பண்ணி 
பாலொடு பழத்தை நிரப்பிப் 
பராவித் தொழுவோம் நங்காய்!
நங்காய்!நங்காய்!நமோஸ்துதே 
ஞானக்கொழுந்தே! நமோஸ்துதே
கல்விக் கரசே! நமோஸ்துதே 
கணக்கறிதேவி! நமோஸ்துதே
சொல்லும்பொருளே! நமோஸ்துதே 
சூட்சும ரூபி! நமோஸ்துதே!

எழுத்து அசை சொற் பொருள் 
உதவும் அணிகள் இரு
வகைபெறு பாவினங்கள் 
கொண்டு மழுத் தடக்கைக் 
கடவுளிடை மருதவன வட
சொல்உறு மான்மியத்தை
வழுத்திடத் தென் தமிழதில் 
நாம் இனிது புரிந்திடுக 
என மகிழ்ந்து வண்டின்
குழுத்தமைப் போற்றிடும் 
தவள பங்கயத்தின்
உறைந்திடு பூங்கோதை தானே.

உரைதமிழ் மூவர்நாவில் 
நீற்றெழும் அமுதைச் சங்கத்து
இருக்கும் வெண்முத்தை 
சுற்றோரென்னும் கூட்டுந்தேனை
வரைதமிழ் முனிவன் நெஞ்ச 
மலர்க் கமலப்பூஞ் சேக்கைத்
திருத்தகும் அரச வன்னப் 
பேட்டினைச் சிந்தை செய்வாம்.

சாற்று நற்றமிழ்ப் 
பேற்றுக்கு என்குறை
நோற்று வாணி தாள் 
போற்று நெஞ்சமே.

நான்முகன் நாவின் மேவி 
நான்மறை வடிவாய் இன்னந்
தானரும் பொருள்கள் ஏடரத் 
தடக்கையின் முறையுந் தாங்கித்
தேனலர் கமலப் போதிற் 
செழித்து வீற்றிருக்கும் அம்மை
கான்மலர் போற்றி நாளும் 
கருத்துற வணக்கம் செய்வாம்.
பொருப்பிலே பிறந்து தன்னன் 
புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலேயிருந்து வைகை
ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் 
நினைவிலே நடந்தோரேன 
மருப்பிலே பயின்ற பாவை 
மருங்கிலே வளருகின்றாள்.

ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை- தூய 
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பாள் இங்கு வாராது இடர்.

பழுதகன்ற நால்வகைச் சொல் 
மலரெடுத்துப் பத்திபடப் 
பரப்பித் திக்கு முழுதகன்று 
மணந்து சுவையொழுகி 
அணிபெற முக்கண்மூர்த்தி 
தாளில் தொழுதகன்ற 
அன்பெனும் நார் 
தொடுத்த அலங்கள் சூட்ட 
வரிச்சுரும்புந் தேனும் 
கொழுதகன்ற வெண்டோட்டு 
முண்டகத் தாளடி 
முடிமேற் கொண்டு வாழ்வாம்.

அகரமாதி அக்கரத்தால் 
அறுபானான்கு கலைகளெல்லாம்
பகரும் வாணி தனைப்போற்றி 
பதத்தால் மயிடன் தலை மிதித்தாள் 
உகள மலரைப் போற்றி செய்தே 
ஓதுமறை நான்முகத்தோனை 
அகமே மகிழ்ந்து போற்றி அமு
தளித்தோன் பதம் போற்றிடுவாம்.

கருமழைத் தண்டுளிபொழியும் 
காலமதி ஒளியும் ஒளிகாலு 
முத்தின் பருமணி மலையும் 
அபயவரதமும் புத்தகமும்வடப் 
பளிங்குந் தாங்கி முருகு உயிர்க்கு 
நறுந்தவள முளரியாலயத்திலிருந்து 
அமுது பிராட்டி இருபதமு கடிபிடித்தே 
எப்பதம் வாராத பதம் எனக்கு மன்னோ.

புத்தகம் ஜெபவடம்- புனித ஞான மா 
முத்திரை குண்டிகை முழுதும் ஏந்து எழிற் 
கைத்தலத்து அமிர்தனைக் கலைமடந்தையை 
முத்தமிழ்க் கிழத்தியை முடிவணங்குவாம்.

ஞானமுத்திரை நற்குண்டிகை அறி
வான புத்தக் மங்கைச் செவபடம்
தான் அமைத்து வெண்தாமரை மேவிய
பானிறத்தவள் பாதம் பணிகுவாம்

விரைப் போதன் முகப்போது பியாத தனி
வண்டு வெண்பால் வேலைத் திரைப்போதும் அமுத 
நிறத் தேனடைந்தோர் பவக்கடலைத் தீர்த்து முத்திக்

கரைப்போதும் படியெடுக்கும் திருஞானத் தனிப்புணை வெண்கமலை செந்தாள்

மரைப் போது மனப்போது வைத்தினிது முப்போதும் வாழ்த்தல் செய்வாம்.

எண்கமலக் கரம் சலிப்ப ஒரு கமலத்து அயன் 
பிறப்பில் எழுதா வண்ணம் தண் கமலப் பதம்சிரமேல் வைத்தருள்வார் குற்றாலத் தமிழ்நூல் வாய்ப்பக் 
கண்களெனும் கருங்கமலம் கரங்களெனும் பசுங்கமலம் 
கவினப் பூத்து வெண்கமலத்து இருந்தாளைச் செங்கமலத்திருந்து தாளை வேண்டல் செய்வாம்.

கவள மதகரி உரிவைப் போர்வை மூடுங் கண்ணுதலோன்
புகழ் விரிக்குங் கலைகள் யாவும் பவள இதழ்ப்

பசுங்குதலை மொழியிற் காட்டும் பைந் தொடியை

அந்தணன்றோய் பரும வல்குற் துவளும் அணி மருங்கும்

இளநிலவெண்மூரற் சுந்தரியை வெண்கமலத் தோட்டு

வட்டத் தவளமதி நடுவமர் வாலெகினம் போலும்

தையலை மையலை அகற்றித் தாளில் தாழ்வாம்.

ஆரணம் நான்கும் ஓராறு அங்கமும் அலகிலாத 
காரணம் காட்டும் ஞானக் கலைகளும் தானாய்

நின்ற ஓரணங்கினைப் பூமேலோன் தனது நாவுறையும்

தெய்வ ஆரணங்கு இளமென் கொங்கை மயிலினை வணக்கஞ் செய்வாம்.

பாணியிற் கொள் படித வடத்தினள்
ஆணி முத்தின் அழகிய மேனியள்
சேண் இருக்குமத் தேவரெலாம் புகழ்
வாணி பொற்பத மாமலர் போற்றுவாம்.

வெண்ணில தருங்கமல மலரில்
உறை நாமகளில் வெளியே 
நாயேன் உண்ணிறைந்து 
பரிதீசர் தலமகிமை செந்தமிழால் 
உரைக்க நாளும் கண்ணருள் 
செய்து ஆள்கின்றாள் 
உண்மையிது ஆதலினாற் 
கார்யென்று பண்ணமைந்த 
பாமகள்மேல் பாவிசைக்கும் 
செயலுளதோ பகருங்காலே.

திருவருள் உருக்கொண்டு உலகு உயிர்

யாவும் திருவுயிர்த்து அருளும் மாதேவி பொருளும் 
மெய்ப் பொருளும் ஞானமும் தருமப் 
புனிதமும் நயன நோக்கெய்தி வருபெருஞ் 
செல்வி வாணி மெய்ஞ்ஞான மாதெனும்
மூவர் பொன்மலர்த்தாள் ஒருமை இருமை, 
மும்மையின் இறைஞ்சி உறத்துதித்து 
உன்னி வாழ்வுறுவாம்.

வெண் கமலத்திருப்பவளைச் 
செந்தமிழின் தெய்வத்தை 
விளங்குபாரில் கண்ணுதல் 
தன் பெருங்கருணை பாடிடவே
அருள் புரியும் கடைக் 
கண்ணாளைத் தண்கவிதை 
பொழிகின்ற புலவரும் 
விட்டகலாத் தையல் தன்னை உள்
நினைத்தே அடிவணங்கி உலாத 
பேரின்பம் உற்று வாழ்வாம்.

வெல்லும் வெவ்வினைகள் 
வீட்டி வீட்டினை விளைக்குஞ் 
செய்கை வல்லவாம் கலைகளுக்கு 
வயங்கொரு வடிவமாகிப்
பல்லுயிர் நாவு தோறும் 
பயின்று நின்றருளா நின்ற
சொல்லின் இறைவி பாதம் 
தொழுது சொற்பொருள்கள் தேர்வாம்.

கரும் பங்கயம் போல் 
கண்மலரும் செம்பங்கயம் போல் 
கதிர்முகமும் இரும்பங்கயத் 
தினரும் பேய்க்கும் இளமா
முலையும் ஏந்தி வெள்ளை 
அரும்பங் கயத்தின் அனகத்
துறையும் மனத்தை யம்மா 
திருவுந்தி தரும் பங்கயத்தோன் 
ஆவாளைத் தமியேன் உளப் 
பங்கயத்தில் வைப்பேன்.

தளர்ந்து உதவி அழிவுறாக் 
கல்வித் தனத்தினை 
ஏற்றவர்க்கு ஈந்தே இளங்களியளி
சூழ்தவள முண்டகத்தில் 
இனிது வீற்றிருப்பது போல 
வளந்தறியாத வான்ம 
கோடியினாய் அகந்தொறும் 
அமர்ந்து நான்முகற்குத் 
துளங்கலில் சுகஞ்செய் சுந்தரி 
பாதத் துணைமலர் தருமே.

தெள்ளோதப் பயக்கடலில் 
அரவணையில் துயில்கூருந் 
திருமால் உந்தி உள்ளோ
என் நாவுகைமீக் கொள
வந்தவன் வதனமொரு 
நான்கிற்குங் கள்ளோதிக் 
கயல்விழிச் செவ்வாயினொரு 
முகங்காட்டிக் காதலுட்டும் 
வெள்ளோதி மத்தினை நம் உள்ளம் 
எனும் கமலமதின் மேவச் செய்வாம்.

கறைத் திருமிடற்றினானைக் 
கண்ணுதலுடைய கோவை
பிறைச் சடையவனை நல்லூர்ப் 
பெருமண் நம்பன் தன்னை 
மறைப்பெரும் பொருளினானை 
வாழ்த்து சொற் பொருள்கள் 
நல்கு நறைத்தனி சரோருகத்தோன் 
நாமகள் கமலத் தாளே.

ஆதி நாளின் அருமறை சொற்றிட
வேதம் நாவினும் வெண்மரைப் பூவினும்
போதர் நெஞ்சினும் பொற்பின் அமர்பவள்
பாதம் தாழ்ந்து நற்பா தந்தருளவே. 

சேவிலிருந்த பரன் சரிதம் 
சிறிது பகரத் திசைமுகத்தோன்
நாவிலிருந்து சுருதி மறை 
நான்கிலிருந்து வெண்கமலப்
பூவிலிருந்து வாகனமாம் 
பூததிருந்து கவிஞர் இயற்பாவிலிருந்து 
இவ்வுலகுநிறைந்து இருந்தாள் 
இருதாள் பரவுதுமால்.

ஆவிய கமண்டலத் தோன்றாலுவின் 
அமர்ந்திட்டு அன்பர்
சாவிய கமல வேணித் 
தற்பரனருள் பெற்றுய்வான்
கோலியாகமமெய்ந் நூல்கள் 
குறித்து உணரறிவு கூட்டும்
வாலிய கமலத்து அன்னை 
மலரடி மனத்துள் வைப்பாம்.

எண்மை உற்றனன் புலமையில் 
என்னினும் இனமாம்
பெண்மை உற்றனள் 
ஆதலிற் பிழைபல நீங்க
வெண்மை உற்ற பங்கயமயில் 
விருப்பொடும் அருளும்
உண்மை உற்ற செந்தமிழினை 
எனது நாவோங்க.

மலைமிசை உதிக்குந் தண்ணார் 
மாமதியெனவே செய்ய
நிலமிசை மாக்கட் கெல்லாம் 
நீடிய விருப்பு நல்கும்
மலைமகளுக்கு இனியதாதை 
வண்மைசேர் புகழைச் சொல்லக் 
கலைமகளுபய பொற்பூங்
கழலிணைக் கூப்புவாமால்.

புண்ணியச் சுருதியாதிப் 
புனிதநூல் தொகுதியாவும்
வெண்ணிறக் கமலப் போதில் 
வீற்றிருந்து அருள்வாள் தன்னைத் 
திண்ணிய உணர்வால் நாடிச் 
செழுந்தமிழ்ப் புலவர் காதை 
மண்ணில் பலரும் தேறி 
மகிழ்வுற வகுக்கின்றேனே.

விண்ணவரயன் மால் போற்றும் 
விடைவலான் வேளை வென்ற
கண்ணுதல் அமலன் முன்னோன் 
கதிதரு புராணம் பாடப்
பெண்ணமுது அனையாள் 
கோலபிறைநுதல் வாணி நாவிற்
பண்ணமை பனுவாலாள் 
பொற்பதமலர் பணிதல் செய்வாம். 

காரதிருங் கயிலைமலைக் 
கண்ணுதன் முப்புரம் எரிக்கக் 
கருதும் அந்நாள் நீரதிகந் 
தருந்தரங்கத் தடங்கடல் 
சூழ்ந்திடும் புடவி நெடுந்தேர் 
ஊர்ந்த சாரதிதன் திருநாவில் 
அடியார் உள்ளத்தினில் 
இருக்கும் தவளமேனிப் 
பாரதி செம்பதப்பதுமத் துணைப்
போது முப்போதும் பரவல் செய்வாம்.


தேவுறை தன்மலை முளைத்துச் 
சங்கப் பாத்தியில் வளர்ந்து
திசை முகத்தோன் நாவெனும் 
நாற்கொழு கொம்பில் தழைந்து 
கற்றோரிடம் படர்ந்து நானாக்
கேள்வி மூவுலகுங் கிளைத்து 
மணந்தது அன்பரும்பித் தவமலர்ந்து 
முதிர்ந்த போகப் பாவின 
நற்கனியையருள் கொடியின் எழில் 
அடியை முடி படிய வாழ்வாம்.

கூந்தல் நிகர் இயற்றமிழும், 
குமுதவாய் நிகரிசையும், 
கோலம் போல்வது ஆந்தகைய 
நாடகமும், அறிந்துவக்கும் 
புலவர் சிலர் அகிலத்துள்ளார் 
காந்தழுக்காற்று இளங்கஞர் 
பலருளரால் எனைக் கருணைக் 
கடலிற்றோய்த்தாள்! மாந்தர் 
சிலர் நாவில் நின்றும் அரிபிரமர் 
தொழில்செய் கலைவாணித் தாயே!

முற்றும் ஆவியம் மூகத்துவம் ஓரீஇச் 
செற்றும் ஆவியல் இன்பரு ணூறெரீஇ 
உற்று மாவியனுதனொண் பாதமே
பற்று மாவியக் கன்னையைப் பாடுவோம்.

நிலமுதற் படைத்தவன் நேய நாவில் நின்று
உலகுதன் துணைவியாம் எழில்கொள் பாரதி
உலவுவெண் கமலமேல் உறையும் வாணிதன்
மலரடி முடிமிசை வணக்கஞ் செய்குவாம்.

முதிர்பொறுமைக் கரைசிறந்து கருணை
நறும் புனல் பருகி முழுமெய்ஞ் ஞானப் 
புதியமலர் விரிந்தடக்கம் எனுங்கமடங்
குடியிருந்து புகழ்கொண்டோங்கு 
மதிவலவர் தமது இதய வாவி
தோறும் விளையாடி வளர் பேரின்
பத்து அதிமதுர குணநய வெள் அன்னப்
பேடு தனைப்பாடி அருள் பெற்றுய்வாம்.

உலகுயிர் அனைத்தும் ஈன்ற 
சதுர்முகத் தொருவன் மேவும்
தலைவியை மதுபசாலஞ் 
சாலமொய்த்து இசைகள்பாடும்
இலகுவெண் கமலப்பூவில் 
இனிதுவீற்றிருக்கும் செஞ்சொற்
கலைமடந்தையை எம் உள்ளக் 
கமல மாமலரில் வைப்பாம்.

வெண்டாமரை உறையும் வேதாந்த நாயகியைத் 
தண்டாமரையோன் தலைவிதனைக் கண்ணடு 
வழுத்தித் துதிக்க வருமே மதுரம்
பழுத்த கவிபாடும் பண்பு.

வெள்ளைநிறத்து அஞ்சுகத்தை 
வெண்டாளப் பூண்மயிலை 
விரிஞ்சன் நாவின் உள்ளிருந்த 
ரத்தினத்தை உம்பரெலாம் 
தொழற்கரிய ஒருத்திதன்னை 
கள்ளமிலா அடியருளக் 
கமல்மதை அகலாத 
கலையினாளைத் தெள்ளுதமிழ் 
உதவுமெந்தன் திருத்தாயை 
அனுதினமும் சிந்தை செய்வாம்.

பன்னரும் உலகெலாம் படைத்த பங்கயன்
இன்னுயிர்த் தேவியாய் இயைந்து பல்லுயிர்
துன்னு நாமிசை தொறும் துலங்கு வாணிதன்
மன்னிய சேவடி வணங்கி வாழ்த்துவாம்.

எம்பெருமான் திருக்கோவல் இறைசீர்த்தி 
இயற்றமிழால் இம்பரினாம் உரைப்பதனுக்கு 
அணிமதுரம் இனிதளிப்பாள் தம்பெருமான் 
சரிதமெனத் தனிமகிழ்ந்து வணங்காமுன்
உம்பரெலாம் தொழுதேத்தும் 
உயர் ஞானக் கலைமகளே.

எச்சமயத்தரேனும் இணங்கி 
வணங்கினர்க்கும் அதியிரங்கி 
யாரும் மெச்சமையத் தாரணியிற் 
புகழ்கொடுத்துக் கவிநான்கும் 
விளங்கச் செய்தே அச்சமையத் 
தானடுங்காது அவையிடத்துச் 
செல நல்கும் அருளினாளைக் 
கச்சமைய தார் புனையுங் 
கொங்கையுடை வாணியை 
நன்கருத்துள் வைப்பாம்.

ஆக்கு சொற்சுவை மணமனைத்தும் வீசவும்
தேக்குநற் பொருட்சுவைத் தேன் துளிக்கவும்
பாக்கியப் பாரதி பாதத் தாமரை
வாக்கினும் மனத்தினும் மலர்ந்தது என்றுமே.

சாற்று நற்றமிழ்ப் பேற்றுக் கென்குறை
நொற்று வாணிதாள் போற்று நெஞ்சமே

இலக்கண இலக்கியங்கள் 
இமைப்பொழுதேனும் கல்லா
தலக்கணார் புலைகுறும்பன் 
அமுதமே இலிங்கமாகும்
தலத்து உயர் மான்மியத்தைச் 
சற்குரு அருளால் ஓதக் 
கலைக்குயர் வாணிபாதங் 
கருத்தினில் இருத்திவாழ்வாம்.


வேதன் நாவிலும் வெண் தாமரைச்செழும்
போதலர்ந்த பொகுட்டினும் மேவிய
காதல் கூருங் கலைமகள் மென்மலர்ப்
பாதம் நாளும் பணிந்து வாழ்த்துவாம்.

தேவரும் முனிவரும் சேர்ந்த பல்லுயிர்
யாவையும் உளக்கருத்து உணர நாவினின்
மேவி நன்கு அருள்புரி விமலை வெண்மலர்த்
தேவிதன் சேவடி சிரத்திற் சேர்த்துவாம்.

வெள்ளைக் கமலத் தவிசில் உறை 
வித்தகியைப் பிள்ளையெனவே தன் 
அருளைப் பேணிடும்- தள்ளை
தனை என்னுளத்திலே இருத்தி 
ஏத்தி அறியாமைதனைத்
தன்னிடத்திலே குவித்தேன் நான்.

பூமடந்தையும் பொன்மலர்க் கற்பகக்
காமடந்தையுங் காமுறு கற்பினெண்
கோமடந்தை வெண் கோகனத்து வாழ் 
நாமடந்தையை நாமறவாமரோ.

தவளமலர்க் கமலமிசை வீற்றிருக்கும் 
அம்மனையைச் சாந்தம் பூத்த குவளை 
மலர்க் கண்ணாளைப் பெண்ணாளும் 
பெண்ணமுதைக்கோதிலாத பவளஇதழ்ப் 
பசுங்கொடியை நான்முகனார் நாஒங்கும் 
பாவை தன்னைக் கவளமத சுயக்கொம்பின் 
முலையாளைக் கமலமாதைக் கருதுவோமே.

சங்க வளர்ந்திட வளர்ந்த 
தமிழ்க்கொடியைச் சரசுவதி 
தன்னை அன்பர் துங்கமுறக் 
கலைபயிற்றி உணர்வளிக்கும்
கலைஞானத் தோகை தன்னைத் 
திங்கள் நுதல் திருவை அருட் 
குருவை மலர்- ஓங்கிய பெண் 
தெய்வந் தன்னைத் தங்கமலை 
முலையாளைக் கலையாளைத் 
தொழுது புகழ் சாற்று கிற்பாம்.

கலைபயின்ற உளத்தினுக்குங் கரும்பினை 
முக்கனியை அருட்களை ஓங்கும்

நிலைபயின்ற முனிவரரும் தொழுதேத்த

நான்முகனார் நீண்டநாவின் தலைபயின்ற

மறைபயின்று மூவுலகும் காக்கின்ற 
தாயை வாகைச் சிலைபயின்ற நுதலானைக் 
கலைவாணி அம்மையை நாம் சிந்திப்போமே.
அலைகடல் சூழ் உலகமெல்லாம் ஒரு
பிரம நாவிலிருந்து அறிந்தே யாரும்
நலமையுற மறைதல் எக்கலையும்
சொல்லியருள் ஞான மூர்த்தி

ஆகம் வேதம் நான்கும் அருங்கலை
பலவும் இங்கே வாகையாய்த்
தழைக்க தந்து மால் மருமகளாய்
வந்தே தாகமாய் உலகளித்த
சதுர் முகன் நாவில் வாழும் மாகனவாணி.

கதிர் வெண்கலையும் துடியிடையும்
கமலப் பதமும் சசி ஒளிர் சேர்
கருணைக் கடலாம் திருவுருவாய்த்
தவளக் கமலந்தனில் மிக 
வீற்றிருக்கும் வடிவு.
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்- வெள்ளை
அரியாசனத்தில் அரசரோடு என்னை
சரியாசனம் வைத்த தாய்.

வானி கலைத்தெய்வம்- மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
கானுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மானுயர்ந்து நிறபாள் மலரடியே சூழ்வோமே.

சரஸ்வதி தேவியே! உன் கரங்கள் தாமரை மலர் போன்றவை. அந்த அழகிய கரங்களில் ஞானத்தின் சாரமாகிய புத்தகமும், ஸ்படிகமணி ஜபமாலையும், தூண்டுகோலும், பாசக்கயிறும் தரித்தவளே! உண்னை வணங்குகின்றேன்! உன்னை தியானிப்போரின் நாவின் மூலம் உரை, நடை மற்றும் செய்யுள் வடிவமான வாக்கு சாதுர்யம் உன்னருளால் தானாகவே வெளிப்படுவதை நான் உணர்கின்றேன்! அன்னையே உனக்கு நமஸ்காரம்!

6.“பத்மபுராண சரஸ்வதி துதி”-கல்வி சிறக்க-தினமும்

பக்தர்களின் இதயத்தில் வசிப்பவளே! பிரம்மாவின் கழுத்தில் வாசம் செய்பவளே! எப்போதும் சந்திரனுக்குப் பிரியமாய் உள்ளவளே! என்றென்றும் மங்காத பிரகாசமாக விளங்கும் அன்னையே! சரஸ்வதிதேவியே உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன், நல்லறிவு, எல்லாவற்றிலும் உயர்ந்தவை, பரிசுத்தம் போன்றவற்றை அருள்பவளே! கையில் வீணையைத் தாங்கியிருப்பவளே! ஐம், ஹ்ரீம், ஹ்ராம் போன்ற மந்திர ஒலிகளில் பிரதிபலிப்பவளே! எங்களுக்கு உன் பேரருள் கிட்ட வேண்டும் அம்மா!

கல்விச் செல்வம் கைகூட:

சகலகலாவல்லியே! சரஸ்வதி தேவியே! வேதத்தால் போற்றப்படுபவளே! பஞ்சபூதங்களிலும் பரவி நிறைந்திருப்பவளே! அன்பர்களின் கண்ணிலும் கருத்திலும் நிறைந்து இருப்பவள் நீயே! நான் எண்ணும் போது கல்விச் செல்வம் எளிதாக எனக்குக் கைகூடும்படியாக அருள்வாயாக!

பொருள் உணர்ந்து படிக்க:

சகலகலாவல்லியே! வெண்மையான அன்னத்தைப் போன்றவளே! கல்வியும் அதன் பொருளும், அந்தக் கல்வியால் உண்டாகும் பயனும் எனக்கு கிடைக்க வேண்டும். உன் கடைக்கண்ணால் எனக்கு அருள் புரிவாய்!

தேர்வில் நன்கு தேர்ச்சி பெற:

சகலகலாவல்லியே! அழியாத செல்வமான கல்விச் செல்வத்தை அருள்பவளே! நா வன்மையும், கலைகள் பலவற்றில் தேர்ச்சியும்பெற்று அறிந்த கல்வியைத் தெளிவுற வெளிப்படுத்தும் ஆற்றலும் எனக்கு அருள்வாய்.

சரஸ்வதிகாயத்திரி- 64கலைகள்பெற தினமும் 108 முறை

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை ச திமஹி 
தந்நோ வாணி ப்பிரசோதயாத்

ஸ்ரீபிரம்மாகாயத்திரி- ஆயுள்விருத்திபெற தினமும் 

ஓம் வேதாத் மனாஹாய வித்மஹே
ஹிரண்யகர்ப் பாய திமஹி 
தந்நோ ப்ரம்ம ப்பிரசோதயாத்

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--

மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

பிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

சரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

மத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

விஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

மநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

கருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

அந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

o“மனதின் வினைகளான பிறர்பொருளை அபகரித்தல், பிறருக்கு தீங்கு செய்ய நினைத்தல், பிறர் உயர்வு கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகியவைகளின்றி புண்ணியமான பிறர் பொருள் வேண்டாம் என எண்ணுதல், அனைவரும் நலமாக வாழ நினைத்தல், அவர்தம் நல் வாழ்வு கண்டு மகிழ்வு அடைதல்” ஆகியவை உங்களின் மேலான வாழ்வுக்கு சிறப்பானதாகும்.

o‘அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்’ என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.

o மீண்டும் மீண்டும் ஆசைகொண்டு, நீங்கள் நினைத்த அளவுக்கதிகமான ஆசைகள் நிறைவேறுவது என்பது, “கடல் நீரைப்பருகி உங்கள் தாகத்தைப் போக்கிக்கொள்வது நினைப்பது போலாகும்.”

oஒர் மலர் மலர்ந்து, இந்த உலகின் அழகை, அது எடுத்த பிறவியின் இடம் இவற்றை ஆவலாக கண்டு மகிழ்வு கொள்கின்றது. அதைச் சுற்றியுள்ள இடத்தை தன் வண்ணத்தால் மலரவைத்து ஆனந்தமயமான சூழலை உருவாக்குகின்றது. இது நமக்கு அதன் பாடம். நாமும் பிறவியில் மலர்ந்து நம்மை சுற்றியுள்ள அனைத்துக்கும் பெருமை சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்

oபழம் விழுங்கிய வாய், ஆன்மா உயிர் நீங்கியபின் மண்ணையும் விழுங்கும்! மறக்கலாமா!
“சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880912
All
26880912
Your IP: 3.95.233.107
2024-03-19 17:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg