gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60


“அரசமர துதி”:--
பிரம்மா, விஷ்னு, சிவன் ஆகியோரின் அம்சம்- தெளிவும், புத்துணர்ச்சியும், முழுமையான சுவாசத்திற்கும் காலை/ மாலை சுற்றும் போது. பிரமஹத்தியால் பீடிக்கப்பட்டவனும், குருவைக் கொன்ற தோஷமுள்ளவனும், பரம தரித்திரனும், தீராப்பிணி உள்ளவனும், இந்த துதியினை தொடர்ந்து ஜபித்து தோஷம் நீங்கி சகல சுகத்தையும் பெற!
விருட்ச ராஜனே! ஆயுள், பலம், கீர்த்தி, காந்தி, குழந்தைகள், பசுக்கள், பொருட்கள், வேதம், புத்தி, மேதமை ஆகிய அனைத்தையும் நீ எனக்கு தந்தருளவேண்டும்.
வருண பகவான் தங்களை நாலா திசையிலும் ரட்சிக்க வேண்டும். தாங்கள் வளர்ந்துள்ள இடத்தில் எப்போதும் மழையிருக்க வேண்டும், தங்களைச் சுற்றி பசுமையான புற்கள் படர்ந்து இருக்க வேண்டும். தங்களுக்கு சுகமுண்டாகட்டும்.
எங்களின் பார்வைக் குறைபாடு, கை நடுக்கம், கெட்ட கனவு, வீண் கவலை, எதிரி பயம் ஆகியவற்றை தாங்கள் தான் போக்க வேண்டும்.
மிகமிக உயர்வானவனும், எல்லாவிதமான பாக்கியங்களையும் அளிக்கின்றவனும், கெட்ட கனவுகளைத் தடுப்பவனும், நல்ல கனவுகளின் பயனை அளிக்கின்றவனுமான அஸ்வத்தமே, பேரரசே தங்களுக்கு என் நமஸ்காரங்கள்.
அடிபாகம் பிரமனின் அம்சமாகவும், நடுவில் விஷ்னுவின் சொரூபமாகவும், நுனியில் சிவனின் வடிவமாகவும், மரங்களின் அரசனாக உள்ளவனுக்கு என் வணக்கங்கள்.
அரசமரமே! பல நூற்றாண்டுகளில் என்னால் சம்பாதிக்கப்பட்ட பாவமூட்டைகளை நீதான் அழிக்க வேண்டும். மரங்களுக்குள் ராஜாவானதாலேயே அரசமரம் என்றழைக்கப் படுபவரே அஸ்வத்தமே! எல்லாச் செல்வங்களையும் எனக்கு அருள வேண்டும்.
எந்த அரசைப் பார்த்தாலே வியாதிகள் போகுமோ, தொட்டால் பாவங்கள் விலகுமோ, எதை நாடினால் வெகுகாலம் வாழலாமோ, அப்படிப்பட்ட அரச மரத்தை வணங்குகின்றேன்.
நல்ல பாக்யசாலியும் பேரழகும் கொண்ட அரச மரமே! நான் வேண்டிடும் அனைத்து நன்மைகளையும் கொடுத்தருள வேண்டுகிறேன், எதிரிகளை வெல்லும் ஆற்றலையும் அருள வேண்டும்.
ஆயுள், மக்கட்செல்வம், பொருள், தானியம், அழகு, சகல செல்வங்கள் யாவற்றையும் கொடுக்க வேண்டும். தேவ சொருபமான அரச மரமே உம்மைச் சரணடைகின்றேன்.
ருக் யஜுர், சாம, அதர்வன வேதங்களின் மொத்த உருவமாகவும், சர்வரூபியாகவும், வேதத்திற்கு காரணமாயும் உள்ள அரச மரமே- நீ எப்பொழுதும் மகரிஷிகளால் போற்றப்படுகின்றாய். உனக்கு என் நமஸ்காரங்கள்.

“ஆத்ம சுப்ரபாதம்”:-
தடைகள், உடல்நலக் குறை, விபத்து இல்லா நாளாக இருக்க- எல்லா நாட்களிலும்.
பிரம்மா, முராரி என்கிற விஷ்னு, திரிபுராந்தகாரி என்கிற சிவன், பானு என்கிற சூரியன், சசி என்கிற சந்திரன், பூமியின் பிள்ளையான அங்காரகன் என்கிற செவ்வாய், புதன், குருபகவான், சுக்ர பகவான், சனீச்வரர், ராகு, கேது எல்லோரும் சுபமான அதிகாலைப் பொழுதை அமைக்கட்டும்.
வாழ்க்கைப் பாதையை முறையாக அமைத்துத் தந்த மகரிஷிகளான பிருகு, வசிஷ்டர், க்ரது, அங்கீரஸ், மணு, புலஸ்தியர், புலஹரி, கௌதமர், ரைப்யர், மரீசி, ச்யவனர், தஷன் ஆகியோர் எனக்கு நற்காலைப் பொழுது அமைய அருளட்டும்.
பிரம்மாவின் மானச புத்திரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோரும் ஆசூரி, சிம்ஹலர் ஆகியவர்களும் ‘ஸரிகமபதநி’ என்ற ஏழு ஸ்வரங்களும் அதலம், விதலம், நிதலம், சுதலம், தலாதலம், ரஸாதலம், பாதாளம் என்று பூமிக்கு கீழுள்ள ஏழு ரசாதலங்களும் எனக்கு சுபமான காலைப் பொழுதை அளிக்கட்டும்.
லவண என்ற உப்பு, இக்ஷு என்ற கரும்பு, ஸூரா என்ற மது, சர்பி என்ற பாம்பு, ததி என்ற தயிர், துக்த என்ற பால், சுத்த நீர் என்ற ஏழு உலகங்களில் உள்ள கடல்களும், மைனாகம், மந்தாரம், மேரு, கைலாசம், கந்தமாதனம், ஹேமகூடம், ஹிமாசலம் ஆகிய உயர்ந்த ஏழு மலைகளும், அத்ரி, ப்ருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகிய சப்த ரிஷிகளும், ஜம்பு, பாலாசம், சால்மலி, குல, க்ரௌஞ்சம், சாகம், புஷ்கரம், ஆகிய ஏழு தீவுகளும், தண்டகாரண்யம், கண்டகாரண்யம், சம்பகாரண்யம், வேதாரண்யம், நைமிசாரண்யம், ப்ரம்மாரண்யம், தர்மாரண்யம் ஆகிய ஏழு வனங்களும், புவனம் முதல் கூர்ம மண்டலம் வரையான ஏழு உலகங்களும் எனக்கு காலை வேளையை சுபமாக்கித் தரட்டும்.
பூமியிலிருந்து கந்தம் என்கிற வாசனை, நீரிலிருந்து ரசம் என்கிற ருசி. காற்றிலிருந்து ஸ்பர்சம் என்கிற தொடு உணர்ச்சி, அக்னியிலுருந்து ஒளி, ஆகாயத்திலிருந்து வானொலி, பிரக்ருதியிலிருந்து மஹத் ஆகிய தத்துவங்கள் இனைந்து என் விடியற்காலைப் பொழுதை மங்களமாக்கட்டும்.
இவ்விதம் அதிகாலையில் மிகப்புனிதமானதும், விடியற்காலையில் கண்ட கெட்டகனவுகளை பலிக்காமல் போகச் செய்யக் கூடியதுமான இந்த சுபவிடியல் துதிகளைப் படிப்பதாலும், நினைப்பதாலும், கேட்பதாலும் பகவான் அருளால் சர்வ மங்களங்களும் உண்டாகும் என்பது நிச்சயம்.
காலையில் எழுந்து மகாபாரதம் படிப்பதுடன் பூமி, பசு, சரஸ்வதி, உத்தம அந்தணர்கள், கேசவனாகிய மகாவிஷ்னு ஆகியோரை நினைத்துப் போற்ற வேண்டும்.
இந்த துதியைச் சொல்வதோடு நளன், தர்மராஜர், வைதேகி, ஜனார்த்தனர், ஆகியவர்கள் பெயரைச் சொல்வதால் எனக்கு புண்ணியம் கிடைக்கட்டும்.

“கோமாதா துதி”:- 
நோய் தீர்ந்து பாவங்கள் விலக- தினமும்-வெள்ளிக்கிழமை சிறப்பு.
தெய்வப்பிறவியான பசுவை வணங்கி அதனை வலம் வந்து துதித்தால் ஏழு தீவுகளுடன் கூடிய பூமியை வலம் வந்த புண்ணியம் கிட்டுகிறது. நற்குணங்கள் நிரம்பிய, அமுதம் போன்ற பாலை நல்கும் பசுவை வழிபட்டால் நம் விருப்பங்கள் எல்லாம் நிறைவேரும். இந்த வழிபாடு அனைத்து புண்ணிய நதிகளில் நீராடிய பலனைத் தரவல்லது. நம்மை பரிசுத்தம் செய்யக்கூடியவள் இந்தப்பசு. கேட்டதையெல்லாம் அருளும் காமதேனுவாகத் துலங்கும் கோமாதாவே, உன்னை வணங்குகிறேன்.

“கார்த்தவீர்யார்ஜுனர் துதி”:- 
இழந்த பொருட்கள் திரும்பபெற-காணாமல்போனவர் திரும்பிவர-வியாபாரம் பெருக-ஞாயிறு காலை, மாலை இருவேலைகளிலும்.
ஆயிரம் கைகள் கொண்ட கார்த்த வீர்யார்ஜுனரே! என் முறையீட்டைக் கேட்கட்டும். இழந்த பொருட்களை, காணாமல் போனவர்களைப் பற்றி முறையிட்டால் தன் கரங்களை எல்லா திக்கையும் நோக்கி நீட்டி, பிரிந்தவற்றை மீட்டுக் கொண்டுவரும் வல்லமை பெற்ற அவரை வணங்கித் துதிக்கின்றேன். அந்த மன்னரின் பெயரை உளமாற உச்சரித்தலேயே இழந்த பொருட்கள் திருப்பக் கிடைக்கும். காணாமல் போனவர்கள் திரும்பி வருவர் என்று நான் பரிபூரணமாக நம்புகின்றேன். அருள்புரிவீராக!

“மந்திர பீஜாக்ஷரங்கள்”:-
‘அங்க நியாஸம்’ அகத்தியருக்கு ஹயக்கீரீவ பகவான் போதித்தது- நியாஸம்-தேவி ஒலி வடிவத்தில் உடலில் வீற்றிருக்கும் பகுதியை தொட்டு வணங்குதல்-தினமும்.
1. ‘அம்’-காமரூபாயை நம- தலையில் 
2. ‘ஆம்’-வாராணஸ்யை நம- முகவட்டத்தில் 
3. ‘இம்’-நேபாலாயை நம- வலது கண்ணில்
4. ‘ஈம்’-பௌண்ட்ரவர்த்தனயைநம- இடது கண் 
5. ‘உம்’-புரஸ்திரகாஷ்மீராயைநம- வலது காது 
6. ‘ஊம்’-கன்யாகுப்ஜாயை நம- இடது காது 
7. ‘ரூம்’-பூர்ணசைலாயை நம- வலது மூக்கு மடிப்பு
8. ‘ரூம்’-அர்புதாசலாயை நம- இடது மூக்கு மடிப்பு
9. ‘லும்’-ஆம்ராதகேசவராயைநம- வலது கன்னம்
10. ‘லூம்’-ஏகாம்பராயை நம- இடது கன்னம்
11. ‘எம்’-த்ரிஸ்ரோதஸ் நம- மேல் உதடு
12. ‘ஐம்’-காமகோட்யை நம- கீழ் உதட்டில்
13. ‘ஓம்’-கைலாஸாயை நம- மேற்பற்கள்
14. ‘ஒளம்’-ப்ருகுநகராயை நம- கீழ்ப்பற்கள்
15. ‘அம்’-கேதாராயை நம- நாக்கு நுனி
16. ‘அ’-சந்த்ரபுஷ்கரிண்யைநம- கழுத்து
17. ‘க1ம்’-ஸ்ரீபுராயை நம- வலது தோள்
18. ‘க2ம்’-ஓங்காராயை நம- வலது முழங்கை
19. ‘க3ம்’-ஜாலந்தராயை நம- வலது மணிக்கட்டு
20. ‘க4ம்’-மால்வாய் நம- வலது கைவிரல் அடி 
21. ‘த3ம்’-குலாந்தகாயை நம- வலது கைவிரல் நுனி.
22. ‘ச1ம்’-தேவிகோடாயை நம- இடது தோள்.
23. ‘ச2ம்’-கோகர்ணாயை நம- இடது முழங்கை.
24. ‘ஜம்’-மாருதேச்வராயைநம- வலது மணிக்கட்டு.
25. ‘ஜ4ம்’-அட்டஹாஸாயைநம- இடது கைவிரல்.
26. ‘ஞம்’-விராஜாயை நம - இடது கைவிரல் நுனி
27. ‘டம்’-ராஜகோஹாயைநம- வலது தொடை மேற்பகுதி.
28. ‘ட2ம்’-மகாபதாயை நம- வலது முழங்கால்.
29. ‘ட3ம்’-கோலாபுராயை நவ- வலது கணுக்கால்.
30. ‘ட4ம்’-ஏலாபுராயை நம- வலது கால் விரலடி.
31. ‘ணம்’-காலேச்வராயை நம- வலது கால் விரல் நுனி.
32. ‘தம்’-ஜயந்திகாயை நம- இடது தொடைமேல்பகுதி
33. ‘த2ம்’-உஜ்ஜயின்யை நம- இடது முழங்கால்.
34. ‘த3ம்’-சித்ராயை நம- இடது கனுக்கால்.
35. ‘த4ம்’-க்ஷீரிகாயை நம்- இடது கால் விரல் அடி.
36. ‘நம்’-ஹஸ்தினாபுராயைநம- இடது கால் விரல் நுனி.
37. ‘பம்’-உட்டிசாயை நம- வலது விலாப்புறம்.
38. ‘ப2ம்’-ப்ரயாகயை நம- இடது விலாப்புறம்.
39. ‘ப3ம்’-ஷஷ்டி சாயை நம- முதுகு.
40. ‘ப4ம்’-மாயாபூர்யை நம- நாபி.
41. ‘மம்’-ஜலேசாயை நம- வயிறு.
42. ‘யம்’-மலயாயை நம- இதயம்.
43. ‘ரம்’-ஸ்ரீசைலாயை நம- வலது தோள்பட்டை
44. ‘லம்’-மோரவே நம- பிடரி.
45. ‘வம்’-கிரிவராயை நம- இடது தோள்பட்டை.
46. ‘ச1ம்’-மஹேந்திராயை நம- இதயம் முதல் வலது கை நுனிவிரல்வரை.
47. ‘ஷம்’-வாமனாயை நம- இதயம் முதல் இடது கை நுனிவிரல்வரை.
48. ‘ஸம்’-ஹிரண்யபுராயைநம- இதயம் முதல் வலது கால் நுனிவிரல்வரை.
49.‘ஹம்’-மகாலக்ஷ்மிபுராயைநம- இதயம் முதல் இடது கால் நுனிவிரல்வரை.
50. ‘ளம்’-ஓட்யாணாயை நம- இதயம் முதல் இன உறுப்பு வரை.
51. ‘க்ஷம்’- சாயச்சத்ராயை நம- இதயத்திலிருந்து தலை உச்சிவரை.

“கங்காஷ்டகம்”:-
பாவங்களும் துன்பங்களும் நீங்க- தீப ஒளி நாளான்று.
விண்ணுலகிலிருந்து பூமியை நோக்கி பிரவாகிக்கும் தெய்வீக கங்கையின் பிரவாக வேகம்தான் இந்த பிரபஞ்சத்தை, அண்டத்தை அதிர, அஞ்ச வைப்பதாகும். இத்தனையும் சிவன் தன் செஞ்சடையை அசைத்து சிதறவிட்ட துளிகள்தான் இந்த தெய்வீகமான ஆகாய கங்கை. இவள் பொன்மயமான மலைக்குகைகளிலும் முகடுகளிலும் ஓடி காடுகளைப் புனிதமாக்கி பிரவாகிக்கின்றாள். சமவெளியில் தன் விருப்பம்போல் பாய்ந்து வருகின்றாள். தடைகளை தகர்த்து தெறிகிறாள். பாவங்களையும் துன்பங்களையும் விரட்டுகின்றாள். உன்னை வணங்குகின்றேன்.

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:- 
மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.
பிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.
சரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.
மத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.
விஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.
மநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.
கருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.
அந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.
சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.                                                                                                         ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879714
All
26879714
Your IP: 3.235.42.157
2024-03-19 11:07

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg