gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
திங்கட்கிழமை, 06 April 2015 00:00

தனிமை நாடல்!

Written by
Rate this item
(0 votes)

தனிமை நாடுதல்! Alone Lonely in the breeze!

அமைதியை நாடும் ஆத்மாக்கள் தனிமையை விரும்பும். தனி இடத்தில் போய் அமர்ந்து விட்டால் மட்டும் மனம் அமைதியுறுமா! மனம் பக்குவப்பட்டுவிடுமா! நடந்த நிகழ்வில் தனிமையான இடத்தில் மனநிறைவைக் காணும் மனோபாவம் வேண்டும். தனிமையும் அமைதியையும் நாடும் மனம் தன்னுடன் தன் மனோபாவம் இருப்பதில் மகிழ்வு கொள்ளும். இது ஓர் அழகிய உணர்வாகும்.

ஜீவஆத்மாக்களில் பல இதைப் புரிந்து கொள்வதில்லை. தன் மனோபாவம் தன்னிடம் இருப்பதை பலர் விரும்புவதில்லை. அதிலிருந்து தப்பிவிட நினைக்கின்றனர். அதற்காக முயற்சிக்கின்றனர். தன்னிடம் தன் செயல்களில் திருப்தி இருப்பதில்லை. நாம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்றோமோ அப்படி நாம் இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு வாய் நிறைய பலவற்றை அனுபவித்த அனுபவசாலிபோல் எடுத்துச் சொல்கின்றோம். நம்மை நாம் சந்திக்கப் பயந்து எந்தெந்த வகையில் திசை திருப்பிவிட முடியுமோ அவ்வாறு செயலாற்றுகின்றோம். இதனால் நாம் நம் மனதைச் சந்திக்க வேண்டிய நேரமோ, காலமோ, தனிமையோ கிடைப்பதில்லை. கிடைக்காதவாறு சூழ்நிலைகளை ஏற்படுத்திச் சுய சந்தோஷம் காண்கின்றோம்.

ஒருவரை எதிர்பார்த்து காத்திருக்கும்போது கூட நம் எண்ணங்களை சிந்தனைகளைச் சந்திக்க முடியாமல் ஓர் பேப்பரில் ஏதாவது கிறுக்கிக் கொண்டிருக்கின்றோம். அதே போன்று நம்மை நாமே சந்திப்பதைத் தவிர்க்க தொலைக்காட்சி,, ஒலிச்சித்திரங்கள், பத்திரிகைகள், பூங்கா, உல்லாசப் பயணங்கள் ஆகியன ஆத்மாக்களுக்கு பெரிதும் உதவி புரிகின்றன. சில ஆத்மாக்கள் போதை, லாஹிரி வாஸ்துக்களை உபயோகித்து தன்னைத் தானே சந்திப்பதை தவிர்த்துக் கொள்கின்றன.

நம்மை நாமே சந்திக்க தவிர்க்க உதவும் இந்த சாதனங்கள் இல்லை எனில் நமக்குள் ஓர் சலிப்பு, ஓர் உணர்வு, ஏதோ இல்லா குறை உணர்வு தோன்றுவதை அறியமுடிந்தால் அப்போது தன்னைத்தானே சந்தித்துக் கொள்வதை தவிற்கவே அவற்றை நாடுகின்றோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.

தனிமையை விரும்புகிற ஆத்மா உலக நிகழ்வுகளைக் கண்டு பயந்து ஒதுங்குவது என்றாகாது. சோகத்தன்மை கொண்டதுமல்ல. எதிலும் திருப்தி காண்பவன். எப்போதும் அமைதியானவன். ஆழ்ந்த சிந்தனை கொண்டவன். தன்னைத்தானே சந்தித்துக் கொள்வதில் எவ்வித பயமற்றவன். அதைத் தவிற்க அந்த ஆத்மா எந்தவித பொழுது போக்கு மற்றும் சுற்றிலும் ஆத்மாக்களின் இறைச்சல் நிகழ்வுகள் வேண்டி நாடுவதில்லை. 

எந்த ஆத்மா தன்னைத்தானே சந்திக்க பயம் கொள்கின்றதோ அந்த ஆத்மாவிற்குத்தான் பலவித பொழுது போக்குகளும் இரைச்சலும் வேண்டியதாயிருக்கும். அப்போதுதான் மனம் அவற்றில் ஈடுபட்டு தன் எண்ணவெழுச்சிகளை சந்திப்பதிலிருந்து தப்பிக்க முடியும். அவைகளை ஒத்திவைக்க முடியும். 

நீங்கள் தனிமையை விரும்புவரா! அப்படி இருப்பவராயிருந்தால்தான் தன் மன எண்ண ஓட்டங்களிடையே பயணித்து உங்களைப் புரிந்து வெற்றி ஆனந்தத்தை அனுபவிக்க முடியும் - குருஸ்ரீ பகோரா.

Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880726
All
26880726
Your IP: 18.205.114.205
2024-03-19 16:10

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg