gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
புதன்கிழமை, 06 June 2018 11:43

விநாயகர் சபை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம் 
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

$$$$$

விநாயகர் சபை!

விநாயகர் தோற்றம்! கிருதயுகத்தில் மனிதர்கள் சத்யம், தர்மம் அடிப்படையில் வாழ்ந்ததால் தங்களின் முயற்சியாலே வெற்றிக்கனியைப் பறிப்பதால், அவர்களுக்குத் தேவையான எல்லாம் கிடைப்பதால், இறையருள் என்ற எண்ணம் தோன்றவில்லை. காலப்போக்கில் நம்பிக்கை மாறி அகம்பாவமாகவும், ஆணவம்மாறி வெறியாக மாறி மமதை உண்டாகி தெய்வ நம்பிக்கை குறைந்தது. மக்களின் மனோபாவம் மாறியதால் பிரம்மா வருந்தி சிவனிடம் சொன்னார். அவர் கணேசரை உருவாக்க திட்டமிட்டார்.

நான்கு யுகத்திலும் பிள்ளையார்!

 கிருதயுகத்தில் காஸ்யப முனிவருக்கும் அதீதிக்கும் மகோத்சுடர் என்ற மகனாகப் பிறந்து பிள்ளையார் தர்மத்தை நிலை நாட்டினார். அன்னை பார்வதிதேவி அளித்த சிம்ம வாகனத்தின் மீது ஆரோகணித்தே அசுரர்களை அழித்தார். ஹேரம்பகணபதி எனும் திருநாமத்தில் ஐந்து முகங்களுடன் பல தலங்களில் இன்றும் சிம்மத்தின் மீது அமர்ந்தே காட்சி அளிகின்றார். இதே கிருதயுகத்தில் கமலாசுரன் என்ற அசுரனை அழிக்க மல்லானர் என்ற பெயருடன் போருக்குப் புறப்படும்போது யாகம் வளர்க்க அதில் தோன்றிய மயிலை வாகனமாக கொண்டார். காட்சி- திருவானைக்கா- அகிலாண்டேஸ்வரி ஆலயம், புதுச்சேரி –மணக்குள விநாயகர் ஆலயம். சிவபெருமானும் தன் காளை வாகனத்தை தந்தருளியுள்ளார். காட்சி-நெல்லை காந்திமதியம்மன் ஆலய விநாயர் சன்னதி, சுசீந்திரம் தனுமாலயன் விநாயகர் சன்னதியில் காணலாம்.

திரேதயுகத்தில் சிவன் -பார்வதியின் மகனாகப் பிறந்து மயூரர் எனப்பட்டார்.

பிள்ளையார் அபூர்வமாக யானை வாகனத்துடன் திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரை அரசாள்வார் விநாயகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி ஆலய கல்யாண விநாயகர் ஆகிய தலங்களில் காட்சி அளிக்கின்றார்- நண்டு வாகன விநாயகராக கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோவிலில் காட்சி அளிக்கின்றார்.

துவாபரயுகத்தில் பராசர மகரிஷி-வத்ஸ்லாவுக்கு மகனாகப் பிறந்து கஜானான் எனப்பட்டார், கிரௌஞ்சன் என்ற அசுரன் சௌபரி முனிவரின் மனைவி மீது ஆசை கொண்டு பார்க்க இதை அறிந்த முனிவர் அவனை மூஞ்சுறுவாக சபித்தார். அப்போதும் அவன் அனைவரையும் துன்புறுத்த மூஞ்சுறுவை அடக்கி தன் வாகனமாக்கிக் கொண்டார்

கலியுகத்தில் சிவன் பர்வதியிக்கு மகனாகப் பிறந்து விநாயகர் என்று அழைக்கப்பட்டார். வாகனம்-குதிரை என்றிருந்தாலும் அரிதாகவே சென்னப்ப நாயக்கன்பாளையம் (கடலூர்வட்டம்), மலையாண்டவர் விநாயகர் ஆலயம், கோவை குருபதேசிகவுண்டார் விநாயகர் ஆலயம் ஆகியவற்றில் குதிரை வாகனத்துடன் காட்சி அளிக்கின்றார். மற்றபடி கலியில் மூஞ்சுறு வாகனத்துடன்தான் காணப்படுகின்றார். சென்னை தியாகநாய நகரில் உள்ள அகத்தியர் கோவிலின் தூணில் பிள்ளையார், சிம்மம், மயில், குதிரை, மூஷிகம் ஆகிய வாகனங்களுடன் காட்சி.

பர்வதராஜனும் அவன் மனைவி மேனையும் உமையே தங்களுக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று வேண்ட ஈசன் அருள் புரிய இமவானின் புதல்வியாக உமை அவதாரம் செய்ய பார்வத குமாரி எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஈசனை மணாளனாக நினைத்து தவமிருக்க இமயமலைச் சாரலில் பர்ணசாலை அமைத்து தவம் புரிந்து வந்தார்.

சிவபெருமான் மூப்பு முதிர்ந்த முதியவராகத் தோற்றம் கொண்டு திருவெண்ணீர் பூசி ருத்திராஷமாலை அணிந்து கையில் தண்டமும் கமண்டலமும் ஏந்தி பர்வதகுமாரி தவச்சாலைமுன் நின்றார். அந்தணரின் முகப் பொலிவைக் கண்ட பர்வதகுமாரி வந்திருப்பது யார் என அறிந்து நிலத்தில் விழுந்து வணங்கி பர்ணசாலைக்குள் அழைத்து உபசரித்தாள். பர்வத ராஜனின் பெண்ணே உன் தவம் பவித்திரமானது. நீ உன் திரு மாளிகைக்குச் செல். யாம் அங்கு வந்து உன்னை பாணிக்கிரஹணம் செய்து கொள்வோம் என்றார்.

சிவன் காசியில் சப்த ரிஷிகளை நினைக்க தோன்றியவர்களிடம் ரிஷிகளே யாம் பர்வத ராஜனின் குமாரியை திருமணம் முடிக்க விருப்பம் கொண்டபடியால் எனக்காக தாங்கள் பெண்கேட்டு முகூர்த்த நாளை குறித்துவர அனுப்பினார். ரிஷிகள் நாள் குறித்து வந்ததும் பிரம்மன், விஷ்ணு, யஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், சித்தர்கள், குபேரன், காலன், சூரியன், சந்திரன், சாரணர், கிம்புருடர், அசுரர், கருடர், கின்னரர், சாக்கியர், மருத்துவர், சப்த மாதர்கள் அனைவருக்கும் நாரத மகரிஷி அழைப்பு விடுக்க அனைவரும் திருமணத்தைக் காண திரண்டனர்.

திருமணத்தன்று அனைவரும் ஈசனின் வருகையை எதிர்பார்த்திருக்கும்போது பர்வத குமாரியின் மடியில் ஓர் குழந்தை தோன்ற அனைவரும் மருகினர். தேவேந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அந்த மாயக் குழந்தையை வெட்டச் சென்றான். அதைப் பார்த்து குழந்தை சிரிக்க இந்திரன் கை அப்படியே நின்றது. எல்லோரும் சிலையாக நின்றனர். சூழ்நிலையை சட்டென்று புரிந்த நான்முகன் குழந்தையின் அருகில் சென்று அதன் பிஞ்சுக் கால்களை தன் தலையில் தாங்கி ஈசனே உன் உருவத்தை அனைவரும் கண்டிட காட்சிதரும்படி வேண்ட சிவனார் தன் உருவத்துடன் வெளிப்பட்டார். திருமால் ஈசனுக்கு கங்கா ஜலத்தை அபிஷேகித்து பாத பூஜை செய்து பர்வத ராஜனின் பர்வதகுமாரியான எனது சகோதரி பார்வதியை உமக்கு பணிக்கிரஹணம் செய்து தருகின்றேன் என்றார். மாங்கல்ய தாரணம் ஆனது. அக்னி ஹோமகுண்டத்தில் தோன்றி வணங்க அனைவரும் வணங்கி அருள் பெற்றனர்.

தேவேந்திரன் சிவனாரை வணங்கி அசுரர்கள் இந்திரப்பதவியை அடைய வேள்விகளைத் தொடங்க இருப்பதாகவும் அவர்களால் தமக்கும் தேவர்களுக்கும் தொடர்ந்து இன்னல் ஏற்படுவதால் அவர்கள் செயலை தடைசெய்ய ஓர் புத்திரன் அருள வேண்டும் என விண்ணப்பித்தான்..

திருக்கயிலையில் உள்ள பூஞ்சோலையின் சித்திரமண்டபத்தில் ஓம் எனும் பிரணவ மந்திரம் எழுதப்பட்டிருக்கின்றது. அங்கு வந்த சிவனுக்கு பிரம்மனின் வேண்டுகோள் நினைவுக்குவர அத்துடன் அசுரர்களை சம்ஹாரிக்க ஒர் புதல்வனைத் தோற்றுவிக்கும் எண்ணம் இருக்க தானும் பார்வதியும் யாணை வடிவமெடுத்து ஒங்கார பிரணவ மந்திரத்தை பார்க்க பிரணவ வடிவு கொண்ட பிள்ளையார் தோற்றம் உண்டானது என்கின்றது வேதம். அந்த நாளே ஆவணிமாத வளர்பிறை சதுர்த்திஇந்த நாளை நாம் விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடுகிறோம்.

இன்னொரு நிகழ்வு சொல்லப்படுகின்றது. ஒரு சமயம் பார்வதி தன்னிடம் இருந்த மணம் மிகுந்த குளியல் பொடிகளை தன் வியர்வையுடன் கலந்து விளயாட்டாக ஒர் பொம்மை செய்ய அதன் அழகில் கவர்ந்து அதை அப்படியே மார்போடு அணைத்துக் கொண்டபோது அவருக்கு ஓர் குழந்தையை நினைவூட்டி மார்பில் பால் சுரந்தது. அதனால் அந்தப் பொம்மைக்கு உயிரூட்டி அக்குழந்தையை சிவனிடம் தர நினைத்தாள். அப்போது தான் குளித்துவிட்டு வரும் வரை வாயிலில் காவல் காக்கவும் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்றும் அச்சிறுவனுக்கு கட்டளை யிட்டாள். அப்போது அங்கு வந்த சிவனை யாரென்று அறியாமல் அச்சிறுவன் தடுக்க கோபம் கொண்ட சிவன் அச்சிறுவனின் தலையை வெட்டினார். நீராடிவந்த பார்வதி சிறுவனின் நிலைதனைக் கண்டு மிகுந்த துயரம் கொள்ளவே சிவன் பிரம்மனிடம் வடபுலம் நோக்கிச் சென்று முதலில் அகப்படும் ஓர் தலையைக் கொண்டுவர பணித்தார். பிரம்மா ஐராவதத்தின் மகனைக் கண்டு அவன் தலையை வெட்ட அவன் முரண்டு பண்ண ஓர்கொம்பு ஒடிந்த நிலையில் யானைத் தலையைக் கொண்டுவந்து கொடுக்க சிவன் அந்தச் சிறுவன் உடலில் பொருத்தி உயிர் கொடுத்தார். அந்த நாள் ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தி.

யானை முகத்தைப் பெற்றதானால் கஜானனன் எனப்பெயர் பெற்றார். நாயகன் இன்றி இவன் தோன்றியதால் வி+நாயகன் எனப் பெயர் பெற்றார். வி-இல்லை, நாயகன் இல்லாமல் பிறந்தவர். கணங்களுக்கு தலைவன் கணபதி. இதில் -ஞானத்தையும், -மோட்சத்தையும், பதி-ஞான மார்க்கத்தையும் குறிப்பதாகும்.

விக்னங்களைத் தீர்க்கும் கணேசர் தலை வெட்டப்பட்டதற்கு ஓர் சாபம் உண்டு. மாலி, கமலி இருவரும் சிவ பக்தர்கள். இவர்கள் தவறு செய்ததால் சூரியன் அவர்களை தாக்க வரும்போது சிவன் தன் பக்தர்களைக் காக்க சூலத்தல் சூரியனை தலையில் அடிக்க உலகம் இருண்டது. சூரியனின் தந்தை கோபம் கொண்டு தன் மகன் சூரியனை சூலத்தால் தாக்கியதுபோல் சிவபாலன் தலை சூலத்தால் தாக்கப்படட்டும் என சாபமிட்டார். அதன் பலாபலனே சிவனே தன் சூலாயுதத்தால் விநாயகர் தலையை வெட்டியது.

இந்த நிகழ்வின் பின்னனி என்னவென்றால் முன்பு சிவன் அசுரன் ஒருவனுக்கு ஓர் வரம் அளித்துள்ளார். அதன்படி அந்த அசுரனை வதைக்க தாயின் கருவில் பிறக்காத மனித உருவம் இல்லாதவனால் மரணம் என்றபடி அப்படி ஓர் ஜனனம் தோன்ற ஏற்பட்ட நிகழ்வே வி+நாயகர் ஜனனம். மேலும் பிரம்மாவின் வேண்டுகோளின்படி மக்களிடம் இறை நம்பிக்கையை வளர்க்க ஒருவர் தேவைப்பட்டது. அதுவே விநாயகர் ஜனனத்திற்கான காரணம்.

விக்னங்களை களைபவர் விநாயகர்! கணேசரை ஒதுக்கிவிட்டு செய்யும் எந்த காரியமும் வெற்றியை நெருங்கும் தருணத்தில் தடைகள் ஏற்பட்டு முற்றிலும் எதிர்பார விளைவுகளைக் கொடுக்கும்.

வாழ்க்கையில் ஆண் பெண் இணைப்பு அவசியம் ஆணின்றி பெண்ணில்லை. பெண் இன்றி ஆண் இல்லை. இதனை உணர்த்தும் விநாயகர் மூர்த்தத்தில் தந்தமுள்ள பகுதி ஆண் கூறு தந்தமில்லாத பகுதி பெண் கூறு.

அஃறினை உயர்தினை ஒருமைப்பாட்டை சொல்லும் விதமாக உயிர்களிடம் அன்பு காட்டப்படவேண்டும் என்பதை உணர்த்தும் யானைமுகம், மனித உடல்.

புலால் மறுத்தலின் அவசியத்துடன் சைவத்தின் மேன்மையை யானை முகம் குறிப்பால் உணர்த்தும். சக்தி மிகக்கொண்ட யானை உண்பது தாவர உணவு மட்டுமே.

கணபதியின் ஐங்கரங்கள் சிருஷ்டி-பற்றுள்ளதை பிறப்பித்து பிணைத்து நிற்பது- படைத்தலைக் குறிக்கும் பாசம் தாங்கிய கை,
ஸ்திதி-காத்தல்- விணை சூழ்ந்து மாறி மாறி வரும் பிறவியின் இன்ப துன்பங்களிருந்து விடுபட அஞ்சேல் எனப் பாதுகாப்பு அளிக்கும் கை,
சம்காரம்-அழித்தலைக் குறிக்கும் அங்குசம் தாங்கிய கை,
திரோதானம்-மறைத்தலைச் செய்யும் கை தும்பிக்கை,
அருளல்-அபயம் அளித்த உயிர்கட்கு அருளல் மேதகம் ஏந்திய கை
ஆகிய ஐந்தும் சிவனின் ஐந்தொழில்களும் உலக மக்கள் நலன்கருதி குறைவின்றி நடைபெறவேண்டும் என்பதைக் குறிக்கும்.

கணபதியின் ஸ்வரூபம் ஞானமயமானது. எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய பிரணவ மூர்த்தம். ஒடிந்த கொம்பு அபர ஞானத்தையும், ஒடியாத கொம்பு பரஞானத்தையும் குறிப்பதாகும்.

விலங்கு, மனிதர், பூதர், தேவர் ஆகிய இவர்கள் இணைந்த திருவுருத்தைக் கொண்டவர் பிள்ளையார். மேனியில் சிவ தத்துவங்களே அடங்கியுள்ளது.

வயிறு தன்னிடம் வரும் உணவைச் செரிக்க வைத்து அதில் உள்ள சத்துக்களை தன்னிடமே வைத்துக் கொள்ளாமல் ரத்தத்தில் கலக்க வைத்து உடல் முழுவதற்கும் பயன்பட வைக்கின்றது. விநாயகரின் வயிற்றை பேழை வயிறு என்பர். அண்டப் பொருள்கள் அனைத்தும் அதில் அடக்கம். அது பக்தர்களின் பாவங்கள் அனைத்தையும் ஜீரணிக்கும் பெருவயிறு ஆகும். மனிதர்கள் எல்லோரும் இதைப்போலவே தன்னுடையது என்ற சுயமில்லாமல் எதையும் பிறருக்கு தந்து உதவ வேண்டும் என்பதை உணர்த்துவதாகும்.

அவரின் காதுகள் பெரியது. அது நிறைய கேட்க வேண்டும். கேள்வி அறிவு நிறைய வேண்டும் என்பதையும், வாயை மறைக்கும் துதிக்கை குறைவாக பேச வேண்டும், பெரியோரிடம் பேசும்போது கையால் வாயைப் பொத்தி பணிவுடன் கேட்க வேண்டும், பேசுவதில் கவனம் கொள்ளல் வேண்டும் என்பதையும் உணர்த்தும். அவரின் சிறிய கண்கள் எதையும் கூர்ந்து நோக்க வேண்டும் என்பதைக் குறிக்கும்.

விநாயகருக்கு சுமுகன் என இன்னொரு பெயரும் உண்டு. சுமுகன் என்றால் நல்ல முகத்தை உடையவன் என்பதாகும். அதாவது விருப்பு, வெறுப்பு இல்லாத சமதத்துவத்தில் நிலைபெற்று பேரருள் ததும்பும் ஆனந்தமயமான முகத்தைக் கொண்டவர் விநாயகப் பெருமான்.

விநாயகருக்கு நைவேத்தியமாக நாம் படைப்பது அப்பம் அவல், பொரி கனிகள் ஆகியவையாகும். இது நம் நம்பிக்கை. இறைவனுக்குத் தேவை என எதுவுமில்லை. இவைகள் நாம் எவ்வாறு பக்குவப்படவேண்டும் என்பதையே குறிக்கும்.

ஒரு ஆன்மாவின் ஞான நிலையை சரியை, கிரியை, யோகம், ஞானம் என சைவ சித்தாந்தம் வரிசைப் படுத்தும். இதை எளிதில் புரிந்துகொள்ள ஒருவர் பூ, பிஞ்சு, காய், கனி என்ற நிலைகளைப் புரிந்துகொண்டால் போதும். பக்தி செய்வதில் பூவாகவும், பிஞ்சாகவும் சிலரும், பலர் காய் நிலையிலும், நின்று விடுகின்றனர். கனியாக எல்லோரும் ஆவதில்லை, அதனால் கனிவு இல்லை. வார்த்தையில் இனிமையில்லை. வார்த்தைகளும் செயலும் காயாகவே இருக்கின்றது. உயிர்கள் கனியாக முதிர்ச்சி அடைய வேண்டும் என்பதற்கு அடையாளமாகவே கனிகளைப் படைக்கும் முறையை பெரியோர்கள் உருவாக்கினர். மனித பிறப்பின் நோக்கம் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருப்பதே அல்ல. ஏதாவது ஒரு பிறவியில் இந்த உலக பந்தத்தை விட்டு இறைவனை அடைய வேண்டும். கனியால்தான் காம்பிலிருந்து விடுபடமுடியும். உயிர்களே நீங்களும் கனியாக மாற முயற்சியுங்கள்!

அப்ப மாவை கொதிக்கும் எண்ணெய்யில் இட்டால் அது சட சட சள சள என்று சப்தம் போட்டு ஆடி அடங்கும்-அதை அப்பம் என படைகின்றோம். வேகாத மாவுபோன்று பக்குவமடையாத நிலையில் உயிர்கள் நான், நீ எனது உனது என்ற பேதங்களுடன் இயங்குகின்றன. பக்குவமடைந்துவிட்டால் எல்லாம் ஒன்றே என்ற அமைதி நிலவும். இதை உணர்ந்து கொள்ளவே அப்பம் படைகின்றோம்.

அவலை இடிக்க இடிக்க மென்மையாகி மிருதுவாகி சுவை கொடுக்கும். அதுபோலவே வாழ்வில் எந்த அளவிற்கு சோதனைக்கு ஆளாக்கப்பட்டு அவைகளைச் சந்தித்து இறை அருளால் அதைச் சமாளிக்கின்றோமோ அந்த அளவிற்கு எல்ல சூழலிலும் எதையும் சமாளிக்க பக்குவப்படவேண்டும் என்பதை உணர்த்தவே அவலை படைக்கின்றோம்.

படைத்தலில் நெல்லாக இருக்கும் வரை நெல் முளைத்துக் கொண்டே மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கும். அதை உமி நீக்கி பொரியாக மாற்றிவிட்டால் முளைத்தல் என்ற நிலை கிடையவே கிடையாது. விநாயகரின் அருளால் இந்த உண்மையை பொறியாக அறிந்த உயிர்க்கு பிறவியே கிடையாது என்பதை உணர்த்தவே பொரியை படைக்கின்றோம்.

ஒலிகளில் அகரமும், உகரமும் சேர்ந்து ஓங்காரமாகி உயர்வுதரும் ஒலியாக மாறுவதுபோல் புள்ளியும் கோடுகளும் சேர்ந்த வரிவடிவமே எழுத்துக்களின் அடிப்படை. புள்ளியை முதலில் வைத்து அதனுடன் சேர்ந்து கோடு நீட்டி எழுதத் தொடங்குவதே வழக்கமாக இருந்து வருகின்றது. இந்தத் தொடக்க வரிவடிவமே பிள்ளையார் சுழி. பிந்து புள்ளி சக்தி வடிவம். நாதம் கோடு சிவ வடிவம். சக்தியும் சிவமும் இணைந்த வடிவமே பிள்ளையார் சுழி. மேலும் புள்ளி ஆதார உயிர். கோடு இறைவன். உயிரும் இறையும் கலந்தால் பேரின்பம். அதலால் புள்ளியும் கோடும் இணைந்த பிள்ளையார் சுழி பேரின்ப பெருவாழ்வின் அடையாளச் சின்னம். நம்மை நல்வழிப் படுத்தும் வழிபாட்டிற்குரிய வரிவடிங்களே புள்ளியும் கோடும். அகரமான உயிர் உகரமான இறைவனுடன் கலந்து உகரமாகவே நின்று புலப்படுவதுபோல் புள்ளியானது கோட்டுடன் இணைந்து உகரமாக பிள்ளயார் சுழியில் இருப்பதால் வினை நீக்கி, வருமுன் காத்து இருக்க, எல்லம் நல்லவையாக நடந்து நிறைவாக அமைய தொடக்கமாக சுழி போடுகின்றோம். அதுவே பிள்ளையார் சுழி. எனவே பிள்ளையாரை வழிபட்டே எந்தச் செயலையும் தொடங்க வேண்டும்.

வாழ்க்கையில் உயிரானது ஒருபுறம் இறைவனது தொடர்பை நாடி திருவடிகளை சரணடைந்து பேரின்ப பெருவாழ்வை அடைய முயற்சிக்கும். மறு புறத்தில் உயிரினை ஈர்த்து மலங்கள் உலக வாழ்வியலில் ஈடுபடுத்துவதால் துன்பங்கள் ஏற்பட்டு குற்றங்கள் தொடர்ந்து வினைக்கு உரியதாகின்றது உயிர். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் அறிவை மயக்கி புத்தியைக் கலக்கி புலன் வழி செயல்பட வைக்கின்றது. இந்த மயக்கத்திலிருந்து விடுபட மாயையையிலிருந்து விலக அறிவு தெளிவாக இருக்க இறை சிந்தனை வேண்டும். எனவே துன்பங்கள் வருமுன் காக்க, செய்யும் செயல் அறிவுத் தெளிவுடன், சிந்தனைக் கூர்மையுடன் மலங்களாலும் அதன்வழிப் புலன்களாலும் மயக்கப்படாமல் இருக்க பிள்ளையாரை வணங்கி வழிபடுதல் சிறப்பு.

அருகு ஓரிடத்தில் முளைத்து ஆறு இடங்களில் வேரோடிக் கிளைக்கும் தன்மையுடையது. ‘அருகு போல் தழைத்து ஆல் போல் வளர்ந்து’ என்பது பழமொழி. இந்த அருகு மூலம் விநாயகரை அர்ச்சித்தால் மூலாதாரத்தின் அதிபதியாக இருக்கும் விநாயகர் மற்ற ஆறு ஆதாரங்களிலும் அருகுபோல் நம்மைப் பொருந்தச் செய்து அருள் புரிவார்.

விநாயகரின் சக்திகள்- சித்தி, புத்தி, வல்லபை. பிள்ளையாரின் பத்தினிகளாகக் கருதப்படும் இவர்கள் உண்மையில் பெண்களல்ல. பிள்ளையாரின் ஆற்றலே சக்தி, புத்தி, வல்லபை என உருவகப் படுதப்பட்டுள்ளது.

பிள்ளையாரின் பிள்ளைகளாகக் கருதப்படுபவர்கள், சுபன், லாபன் மற்றும் சந்தோஷி. விநாய்கரை வணங்கி அறிவும் ஆற்றலும் ஒருவன் பெற்றால் அதனால் சுபமும் லாபமும் ஏற்பட்டு சதோஷமடைவது இயல்புதானே!

பெருவயிறும் யானை முகமும் கொண்ட விநாயகருக்கு சிறிய மூஞ்சுறு எப்படி வாகனமாக இருக்க முடியும். எளிமையாக இருந்தால் எத்தகைய பெரும் பிரச்சனைகளையும் சமாளிக்கலாம் என்பதே இதன் தத்துவம்.

சௌபரி என்ற முனிவரின் மனைவி மனோமயை கிரௌஞ்சன் என்ற அசுரன் பலாத்காரம் செய்ய முயல அதைக் கண்ட முனிவர் சபிக்க முஞ்சுறு ஆனான். தொடர்ந்து அடாத செயல்கள் செய்த அந்த அசுரனை-முஞ்சுறுவை அடக்கி தன் வாகனமாக்கினார் விநாயகர். மூஞ்சுறு காமத்தின் குறியீடு. விநாயகர் ஞானத்தின் வடிவம். அதாவது ஞானத்தால் காமத்தை அடக்கமுடியும் என்ற தத்துவத்தை உணர்த்துகின்றது. விநாயகர் சிறிய மூஞ்சுறுவின்மேல் அமர்ந்திருப்பதின் உட்கருத்து இதுவேயாகும்.

விநாயகர் திருமணம்! பிரமச்சர்யம் என்னவாயிற்று! பிரிந்த சக்தி!
பிரம்மாவின் படைப்புத் தொழில் நலிவுபெற நாரதர் ஆலோசனைப்படி அவர் விநாயகரைத் தொழ அவர் தன் இரு சக்திகளை பிரமனுக்கு வழங்கி படைப்புத் தொழில் சிறக்கவும் செய்தார்.

மேலும், அந்த சக்திகள் அவருக்கு மகளாக சித்தி, புத்தி என இரட்டையராகவும் பிறந்து வளர்ந்தது. மணப்பருவத்தில் மாப்பிள்ளை தேடினார் பிரம்மா. நாரதர் ஆலோசனையைக் கேட்க அவர் தன் பங்கினை செயல் படுத்த நினைத்து இரட்டைப் பிறவிகளான இவர்களுக்கு ஒரே மாப்பிள்ளை சிறந்தது என அறிவுறுத்த பிரம்மா ஏற்றார். நாரதர் கயிலை சென்று விநாயகரை சந்தித்து சித்தி, புத்தியை மணக்க சம்மதம் கேட்க விநாயகர் தன் பிரமச்சார்யம் நீக்க ஒத்துக் கொண்டார். பிரம்மச்சாரி கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டது எப்படி! என்று நாரதர் மனங்குழம்பினார். சித்தி புத்தி இருவரிடமும் சென்று நீங்கள் இருவரும் ஒருவரைத்தான் மணக்க வேண்டும் என்று விதி இருக்கின்றது எனக்கூறியதும் இருவரும் சம்மதிக்க திருமணம் நடைபெற்றது.

பிரமனுக்கு சித்தி புத்தி சம்மதத்தில் சந்தேகமும், நாரதருக்கு விநாயகர் பிரமச்சாரியம் நீக்க ஒத்துக் கொண்டதில் குழப்பமும் நீடித்தது. இது பற்றி விநாயகரிடம் கேட்க என்னிடமிருந்த இரு சக்திகளே பிரமனின் படைப்புத் தொழிலுக்கு உதவியது. அதுவே மீண்டும் அவருக்கு மகளாய் பிறந்தது. என்னிடம் இருந்த இரு சக்திகள் மீண்டும் என்னையே வந்தடைந்து விட்டது. இதில் என்ன கல்யாணம்! என்ன பிரமச்சார்யம் நீக்கம்! என்றார் –வெய்யுலுகந்த விநாயகர்.உப்பூர் 

எந்த வேலையைத் துவக்கினாலும் கணேசரின் அனுமதி- சாமுத்திர்கா லட்சணம் யார் உருவாக்கியது! கார்த்திகேயன் ஆண், பெண் லட்சணங்களை சீரமைத்துக் கொண்டிருக்கும்போது தம்மை மதிக்காமல் செய்கின்றாறே என்பதால் அவர் செயலுக்கு இடையூறு விளைவித்தார் விநாயகர். சினமுற்ற கார்த்திகேயன் கணேசரை வீழ்த்த எண்ணி அவரின் பல் ஒன்றை பிடுங்கி விட்டார். பரமசிவன் அங்கு வந்து பிள்ளைகளின் சச்சரவிற்கு காரணம் கேட்க. கார்த்திகேயன் தான் ஆண், பெண் லட்சணங்களை சீரமைக்கும் பணியில் இருக்க அதைக் கெடுத்துவிட்டார் என்றார், அப்போது ஆண், பெண் லட்சணங்கள் என்று கூறுகின்றாயே என்னிடம் எத்தகைய புருஷ லட்சணம் எனக்கேட்டார். கபாலி எனப் பெயர் பெற்ற தங்களிடம் எப்படி புருஷ லட்சணம் காணமுடியும் என்பதைக் கேட்ட சிவன் கோபமுற்று ஆண்களின் லட்சணங்கள் பற்றிய சுவடிகளைக் கடலில் தூக்கி எறிந்துவிட்டு அந்தர் தியானமானார்.

சமுத்திரராஜனை அழைத்து நீ பெண் லட்சணங்களைப் பற்றிப் பகுத்து ஆராய்ந்து உருவாக்கு. கார்த்திகேயன் சொன்ன புருஷ லட்சணங்கள் அப்படியே இருக்கட்டும் என்றார். அப்போது சமுத்திர ராஜன் இவை என்வசமிருந்து வருவதால் இவற்றிற்கு சாமுத்திரிகா லட்சணம் என்ற பெயரில் விளங்க அணுக்கிரகம் வேண்டினார்.

கார்த்திகேயன் முன் தோன்றி, தேவலோக நியதிப்படி யார் எந்த வேலையைத் துவக்கினாலும் கணேசரின் அனுமதியோடு துவக்கினால் தான் விக்னமின்றி நிறைவேறும். நீ சகோதரின் பல்லை திருப்பிக் கொடுத்துவிடு. உன் விருப்பப்படி லட்சண ஏடுகளை சமுத்ர ராஜனிடமிருந்து பெற்றுக்கொள். ஆனால் அது சமுத்ர ராஜன் விருப்பப்படி சாமுத்ரிகா சாஸ்திரம் என்றே அழைக்கப்படும். என்றார்.

கார்த்திகேயன் தான் அண்ணனின் பல்லைக் கொடுத்து விடுகின்றேன். ஆனால் அவர் அதைக் கையிலேயே வைத்திருக்க வேண்டும் கீழே கண்ட இடத்தில் வைத்தால் அந்த பஸ்பம் அவரை எரித்துவிடும் என்றார்.

ஒருதந்தம்! ஜமத்கனி முனிவரின் மகனான பரசுராமர் தன் தந்தையைக் கொன்ற கார்த்தவீரிய மன்னரின் வாரிசுகள் அனைவரையும் கொன்றபின் தன் குருநாதரான சிவபிரானைப் பார்க்க வர அவரை விநயாகர் தடுக்க இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெறுகிறது. என்ன வாயிருந்தாலும் உடனடியாக சிவபிரானைப் பார்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த பரசுராமர் விநாயகர் வழியை தன் தந்தத்தால் தடுக்க அதைத் தன் கோடாரியால் வெட்டினார். அதனால் விநாயகருக்கு ஒரு தந்தம் முறிந்த நிலை.

பிள்ளையாருக்கு ஏன் சிதறு தேங்காய்!
கஸ்யப முனிவர் தவத்தினை காலநேமி என்ற அசுரன் அழித்து தொந்தரவு செய்து வந்தான். அவர் விநாயகரை வேண்ட யாகத்தின்போது விநாயகரும் அவர்களில் ஒருவராக அமர்ந்திருந்தார். அங்கு வந்த காலநேமி யாகத்தை தடுத்து நிறுத்த ஆரம்பிக்க கலசத்தின்மேல் இருந்த தேங்காயை எடுத்த விநாயகர் அவன் மேல் வீச அது அசுரனின் தலையை சிதறடித்தது. தேங்காய் சிதறியதுபோல் அசுரனின் தலையும் சிதறி முனிவர்களை பாதுகாத்தது. எனவே விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்தால் அவர்களது துன்பங்கள் சிதறி விடும் என்று ஐதீகம்

கணேசரின் பூஜைக்கு துளசி சேர்ப்பதில்லை ஏன்! கங்கைக் கரையில் கணேசரைக் கண்டாள் துளசி. கணேசரின் அதிசயத் தோற்றம் அவளைக் கவர தர்மத்வஜனின் மகளான தான் அவரை மணக்க ஆசைப் படுவதாகக் கூறினாள். கணேசர் தனக்கு மணம் புரிய விருப்பமில்லை. விவாக பந்தத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை. திருமணம் துயரத்தைத் தரும் எனக் கூறி மறுத்துவிட்டார். இதைக் கேட்ட துளசி திருமணம் இன்றியே இருக்கக் கடவீர் எனச் சாபமிட்டாள். கணேசரும் நீ ஓர் அரக்கன் கையில் சிக்கி பின் புதராக மண்டிக் கிடப்பாய் என்றார். வருத்தப்பட்ட துளசி மன்னிக்க வேண்ட, பூக்களுக்கொல்லாம் தலை சிறந்ததாக வைக்கப்படுவாய். கிருஷ்ணரின் பூஜையில் சேர்க்கப்படுவாய். ஆனால் என பூஜையில் சேர்க்கப்படமாட்டாய் என அருள் புரிந்தார் விநாயகர்.

உகந்த மலர்கள்: செம்பருத்தி, ரோஜா, தும்பை, மந்தாரை, அருகம்புல்.

வளர்பிறை சதுர்த்தி. ஆவணி வளர்பிறை சதுர்த்தி சாலச் சிறந்தது. இது பிள்ளையார் சதுர்த்தி ஆகும். அன்று விரதம் இருந்து துதிகளைப் படித்து வந்தால் நல்ல பலன்கள் கிட்டும். அன்று இரவு சந்திரனை தரிசித்தால் வழிபாட்டின் பூரண பலன் கிட்டும், நினைத்த நல்ல காரியங்கள் ஜெயம்.

ஒவ்வொரு நாளும் அந்தந்த திதிகளின்படி வெவ்வேறு விநாயகர் வடிவினை வணங்குவது கூடுதல் பலனைத் தரும்.

ஒவ்வொரு உயிரின் உடலும் தான் பிறந்த திதியில் அந்த விநாயகருக்கு பூஜை செய்து வழிபடின் சிறந்த பலன்களை அடைவர்.

தேவர்களுக்கு வேள்விகள் மூலம் யாகம் செய்ய முடிய வில்லை என்றால் அந்தந்த திதிகளுக்குரிய உணவை உண்டு விரதமிருந்தால் அந்தந்த திதிக்குரிய தேவதைகள் திருப்தி அடைவர். எந்த விரதமாக இருந்தாலும் விரதம் முடிந்தபின் தான தர்மங்கள் முடிந்த அளவிற்குச் செய்தல் சிறப்பான பலன்களைத் தரும்.

கணபதியின் உருவங்கள் வேண்டிய வடிவில் இல்லையென்றால் அந்த பெயரை ஒன்பதுமுறை இருக்கும் கணபதிமுன் சொல்லி வேண்டவும். எந்த நாளும் எந்த நிலையிலும் வணங்கலாம்.

ராஜகணபதி சபை
பிங்கள கணபதி, வல்லப கணபதி,

ஸப்த ஆவரணத்தில் (ஏழு பிரிவு) 56 கணபதி மூர்த்தங்கள். மூர்த்தங்களின் பெயர்களைச் சொல்லி பூஜை- நன்மைகள் ஏற்படும்.

முதல் ஆவரணம்(6மூர்த்தங்கள்):- துண்டி கணபதி, துர்க்கை கணபதி, அர்க்க கணபதி, பிரஸன்ன கணபதி, பீம கணபதி, சுந்தர கணபதி,

இரண்டாம் ஆவரணம்(14 மூர்த்தங்கள்):- சித்ரூப கணபதி, லம்போதர கணபதி, கூப தந்த கணபதி, சலாடக கணபதி, குலப்பிரிய கணபதி, சதுர்த்தி கணபதி, பஞ்சமி கணபதி,, முண்ட கணபதி, சசிமுக கணபதி, விடங்க கணபதி, நிஜ கணபதி, ராஜபுத்ர கணபதி, பிரணவ கணபதி, உபதாப கணபதி,

மூன்றாம் ஆவரணம்(8 மூர்த்தங்கள்):- வக்ர துண்ட கணபதி, ஏக தந்த கணபதி, த்விமுக கணபதி, பஞ்சமுக கணபதி, ஏரம்ப கணபதி, விக்னராஜ கணபதி, வரத கணபதி, மோதகப்ரிய கணபதி,

நான்காம் ஆவரணம்(8 மூர்த்தங்கள்):- ஏகோபயப்ரத கணபதி, சிங்கமுக கணபதி, கூர்ணிதாஷ கணபதி, க்ஷிப்ரப்பிரஸாத கணபதி, சிந்தாமணி கணபதி, தந்த வக்த்ர கணபதி, அயிசண்டி கணபதி, ஊர்த்திவாண்டமுண்ட கணபதி,

ஐந்தாம் ஆவரணம்(6 மூர்த்தங்கள்):- மணிகர்ண கணபதி, ஆசார சிருஷ்டி கணபதி, கஜகர்ண கணபதி, கண்டா கணபதி, சுமங்கல கணபதி, மந்த்ர கணபதி,

ஆறாம் ஆவரணம்(8 மூர்த்தங்கள்):- மோதக கணபதி, ஸுமுக கணபதி, துர்முக கணபதி, கண கணபதி, அமர கணபதி, ஆக்கினை கணபதி, துவார கணபதி, அவிமுக்த கணபதி,

ஏழாம் ஆவரணம்(6 மூர்த்தங்கள்):- ஆமோத கணபதி, பாகீரத கணபதி, ஹரிச்சந்ர கணபதி, கபர்த்தி கணபதி, பந்து கணபதி, கனக கணபதி,


பௌர்ணமி திதி-நித்யகணபதி / அமாவாசை திதி -நிருத்தகணபதி

பிரதிபத (எ) பிரதமை திதி -பாலகணபதி
த்விதீய / துவிதையை திதி!-தருணகணபதி
த்ரிதியை / திருதியை திதி! -பக்திகணபதி
சதுர்த்தி திதி -வீரகணபதி
பஞ்சமி திதி -சக்திகணபதி
சஷ்டி திதி -துவிஜகணபதி
சப்தமி திதி -சித்திகணபதி
அஷ்டமி திதி -உச்சிஷ்ட கணபதி
நவமி திதி -விக்ன கணபதி
தசமி திதி -க்ஷிப்ர கணபதி
ஏகாதசி திதி -ஹேரம்ப கணபதி
துவாதசி திதி -லக்ஷ்மி கணபதி,
த்ரையோதசி திதி -மகா கணபதி
சதுர்த்தசி திதி -விஜய கணபதி

$$$$$

Read 14453 times Last modified on திங்கட்கிழமை, 17 September 2018 10:03
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880179
All
26880179
Your IP: 44.213.99.37
2024-03-19 13:08

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg