gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

மூலிகை காற்று வனம்

Written by

ஓம் சிவாயநமக!

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்

கடிகணபதி வர அருளினன் மிகு கொடை

வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

                                                               0=0=0=0=0=0

மூலிகைக்காற்றுவனம்

இது அடியேனின் நினைவில், கனவில் தோன்றித் தோன்றி மலர்ந்தது, இவ்வுலக மக்கள்பால் கொண்ட அன்பிற்காக இந்த மூலிகைக் காற்று வனத்தை உறுவாக்கி நிர்மாணித்திடல் வேண்டும் என்ற அவா என்னுள் நீங்காது நிலை பெற்றுள்ளது. மக்களின் ஆன்மா இடம் கொண்ட உடல், ஆன்மாவை நீக்கும் வரை ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கும் இந்த மூலிகைக் காற்று வனத்தை ஏற்படுத்த கனவுகளையும் எண்ணங்களையும் ஏற்படுத்திய எல்லாமாகவும் இருக்கும் இறைவன் அருள் கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கையில் செயல்படும் அடியேன் - குருஸ்ரீ பகோரா.

மனிதகுலத்தினர் நல்லத்தூய இயற்கையான, உடலுக்கு ஒத்த பரிசுத்தமான காற்றினைப் பெற்றிடவேண்டி அதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு அமைய இருப்பதே இந்தக் காற்று வனமாகும். இது எந்தஒரு ஆளுகைக்கும் கட்டுப்படாத அன்பான தன்னாட்சி அமைப்பாகும். இது உடலுக்கும் ஜீவாத்மாவிற்கும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் உன்னதமான முயற்சியின் அடையாளமாகச் செயல்படும்.

மிகவும் பீடித்த நோயாளிகளுக்கு இங்கு இடமில்லை. நோய்களுக்கான மருத்துவமணை அல்ல. மனம் சோர்ந்த ஜீவாத்மாக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க நடக்கும் ஒரு சிறிய முயற்சிக்காண இடம். மீதி இருக்கும் எதிர்காலத்தை ஆனந்த ஆரோக்கியத்துடன் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் செயல்பட உதவும் அமைப்பாகும்.

ஒரு ஆத்மாவின் உடல் அதைப் பெற்றிட தான் உடுத்திய உடையுடன் இங்கு வரவேண்டும். நிர்வாகம் அளிக்கும் உடைகளையே அணிந்து கொள்ளவேண்டும். ஒருவருக்கு இரு ஆடைகள் இந்த வாசத்தில் சேரும் தினம் அளிக்கப்படும். தினமும் காலையில் குளித்தவுடன் உங்கள் அறை அருகில் இருக்கும் பொறுப்பாளரிடம் கொடுத்து விட்டு பதிவு ஏட்டில் கையொப்பம் இடவேண்டும். இரண்டு நாளுக்குமேல் மூன்றாவது நாளில் அடுத்த உடைகள் பொறுப்பாளர் மூலம் தரப்படும்.

வெளியுகத் தொடர்புகளைத் தொடரும் அலைபேசி கருவிகளை கொண்டுவரக்கூடாது. நிர்வாகம் அனுமதிக்காத பொருள்கள் எதேனும் கொண்டுவந்தால் நிர்வாகம் தரும் வைப்பு பெட்டியில் வைத்து பூட்டி சாவியை நிர்வகத்திடம் கொடுத்துவிடவேண்டும். நீங்கள் இங்கிருந்து திரும்பிச் செல்லும்போது அவைகள் உங்கள் வசம் ஒப்படைக்கப்படும்.

இங்கு தரப்படும் இயற்கையோடு ஒன்றிய ஆரோக்கிய சுகாதார உணவுகளையே உண்ணவேண்டும். காலை, முன்பகல், மதியம், பிற்பகல், இரவு என கால உணவு அட்டவணை உங்கள் பொருப்பாளரிடம் இருக்கும். அதைப் பார்த்துக் கொள்ளலாம். நாவின் சுவைக்கு அடிமையானவர்களுக்கு முதல்நாள் கொஞ்சம் சிறமமாக இருக்கும். இரண்டாவது நாளிலிருந்து சரியாகிவிடும்.

இங்கு தங்கவிருக்கும் ஒரு நபருக்கு அதிக பட்சமாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஐந்து நாட்கள்தான் அனுமதி உண்டு. அந்த ஐந்து நாட்களின் செலவிற்குரிய பணத்தை நிர்வாகம் முடிவு செய்தபடி முன்னதாகச் செலுத்தி இரசீது பெற்றுக் கொண்டால்தான் உங்களுக்காக அறைகள் பதிவு செய்து ஒதுக்கமுடியும். அறைகள் காலியாக இருக்கின்றனவா என நிர்வாக பொருப்பாளரிடம் பேசி முடிவு அறிந்தபின் பணம் செலுத்தவும். அறைகள் காலி இல்லா நிலைக்கு நிர்வாகம் பொறுப்பாகி அறை பதிவு செய்வதற்காக எந்த உத்திரவாதமும் நிர்வாகம் தராது. அறை ஒருவருக்கு ஒதுக்கப்பட்டபின் எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒதுக்கப்பட்ட அறையின் தேதியை மாற்றித் தள்ளி வைத்தலோ, ரத்து செய்தலோ கண்டிப்பாய் முடியாது. அறை ஒருவருக்கு ஐந்து நாட்கள் ஒதுக்கப்பட்டால் அந்த குறித்த நாளில் வந்து சேரவேண்டும். அடுத்தநாள் வந்தால் அவருக்கு அடுத்த நான்கு நாட்கள்தான் ஒதுக்க முடியும். ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் அவர் வரவில்லையென்றால் அந்த அறை காலியாக இருக்கும். இது பற்றி உங்களுடன் வீண் வாக்குவாதம் செய்ய நிர்வாகப் பொருப்பாளர் தயாரில்லை. முன் வருபவருக்கு முன் உரிமை என்ற அடிப்படையில் அறைகள் ஒதுக்கப்படும்.

நீங்கள் இருக்கும் அறை மற்றும் உபயோகிக்கும் கழிவு அறைகளை சுத்தமாக வைத்திருங்கள். எங்களுடன் ஒத்துழைப்புத் தாருங்கள்.

ஆண்கள் பகுதி வேறு. பெண்கள் பகுதிவேறு. ஒரு பகுதியிலிருந்து அவர்கள் கணவன் மனைவியாக இருந்தாலும் அடுத்த பகுதிக்குப் போக அனுமதிக்கப் படமாட்டார்கள். அவர்களை சந்திக்க வேண்டும் என்றால் உணவுக் கூடம் அல்லது பிரார்த்தனைக் கூடத்தில் பிரார்த்தனை முடிந்தபின் பார்க்கலாம். அனுமதிக்கப்பட்ட இடங்களிலே அனுமதிக்கப்பட்ட நேரம்தான் சந்திக்கமுடியும்.

உங்களுக்கு உங்கள் சொந்தங்களிடமிருந்து ஏதாவது முக்கிய தகவல் இருந்தால் அவர்கள் நிர்வாகத்திடம்தான் தகவல் கொடுக்க முடியும். அந்த தகவல் முக்கியமானதாக இருந்தால் மட்டும் உங்களுக்குத் தெரியப் படுத்தப்படும்.

அறைகளில் தங்கியிருக்கும்போது உங்கள் நலன் கருதி அட்டவனையில் குறிப்பிட்ட செயல்களைத் தவறாமல் செய்து வாருங்கள். ஒய்வு நேரத்தில் அமைதியாக ஓய்வெடுங்கள். அடுத்த அறை சென்று அந்த அன்பரை தொந்தரவு செய்ய வேண்டாம். அரசியல் பேசவேண்டாம். எந்த ஒரு விசயமானாலும் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். பொறுமை காக்கவும். உங்களை இங்கிருப்பதாலோ சுயமாக சில வேலைகளைச் செய்வதாலோ யாரும் மட்டமாகவோ தரக்குறைவாகவோ நினைக்கவில்லை. உங்களுக்காக உங்கள் தேவைகளுக்காக நீங்கள் செயல் படுகின்றீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவும். நீங்கள் ஓர் உயிரின் ஜீவாத்மா. மனித நேயத்துடன் பழகும் அன்பானவர். உதவியாளர், பொருப்பாளரிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். இங்கு நீங்கள் சந்திக்கும் உங்களின் பிரச்சனைகளுக்கு உங்கள் பொறுப்பளர்களை அனுகவும்.

நீங்கள் எங்களது பாதுகாப்பில் இருக்கும்வரை எங்களின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடந்து கொள்ளவேண்டும். ஒருவர் காலையிலிருந்து என்ன செய்ய வேண்டும் என்பதை நிர்வாகம் பட்டியலிட்டு வைத்துள்ளனர். நீங்கள் தங்கும் அறையின் பொறுப்பாளரிடம் அவை இருக்கும். அவர் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லுவார். அவரிடம் ஒத்துழைப்புடன் செயல் படுங்கள்.

இந்த இரண்டு முதல் ஐந்து நாட்களும் ஒரு ஆத்மா அமைதியுடன் ஆனந்தம் அடைந்து ஆரோக்கியமாக இருக்க நாங்கள் செய்யும் சேவைக்கு ஒத்துழைப்பு அளித்து உங்கள் பங்களிப்பாக உங்கள் ஆத்மாவின் உடல் மேலும் வளம்பெற எங்களின் முறைகளை நீங்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு பூவுலகில் உலவும் வரை ஆரோக்கியமாக வாழ்ந்திட முயலுங்கள்.

எங்களின் குறிக்கோள்களின் அளவுகளைப் புரிந்து நடந்து கொள்ள அன்பு உள்ளங்கள் அனைத்தையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தினமும் அதிகாலை- பிரம்ம நேரம்.

0400-0600— எளிய பயிற்சிகள், யோகாசனம், தியானம், முத்திரைகள் உடல் நலத்திற்குப் பெரிதும் உதவும். அவைகள் காலை நேரத்தில் உடல் நிலையைப் பொருத்து சொல்லித் தரப்படும். – பொதுவாக எல்லோருக்கும் உகந்தது. விரும்புவர்களுக்கு மட்டும் உடல் தகுதிக்கேற்ப சிறப்பு பயிற்சிகள் சொல்லித் தரப்படும்...

0600-0615- மிதமானசூடான பானம்.

0615-0730- நடை பயிற்சி. இது உங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மூலிகை வனத்தின் ஒருபகுதி. இங்கு ஏற்படுத்தப்பட்ட நடைபாதயில் உங்களால் முடிந்த அளவிற்கு செயலாக்கம் கொண்ட நடைதனை நடந்து பயிற்சி மேற்கொள்ளுங்கள். நடக்கும்போது சேர்வு ஏற்பட்டால் அமதியாக காலை நீட்டி அமர்ந்து கொள்ளவும். இங்குள்ள மரங்கள் எல்லாம் உங்களின் இராசிக்கு ஒத்த மரங்கள். இவற்றின் நிழலில் காற்றில் இருப்பது உங்களின் ராசிப்படி உங்களுக்கு ஆரோக்கியமானது. அனைத்து மரங்களுமே உங்களின் நண்பர்கள். மருத்துவர்கள். உங்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உத்தமர்கள். எனவே அன்புடன் நோக்குங்கள். ஏதாவது ஒருவரை உங்களின் உற்ற நண்பராக ஏற்றுக் கொண்டு நடைபயிற்சி வரும்போது அவரை அன்புடன் பார்த்து நலம் விசாரியுங்கள்.

முதன் முதலில் நீங்கள் நண்பராக ஏற்றுக் கொண்டவரை முடிந்தவரை கட்டியனைத்தபடி கீழ்கண்டவற்றை மனதில் சொல்லுங்கள்.

“இயற்கையே! நான் இயற்கையான உன்னின் பிறப்பு. என்னுள் இருப்பதெல்லாம் உன்னுடையது. ஆகவே நாம் சகோதர்கள். உற்ற நண்பர்கள். உன் ஆரோக்கியம் என் ஆரோக்கியம். என்னை வளமாக்க உன்னில் உள்ள சக்திகளை நண்பணாகிய எனக்குக் கொடு. நான் சுவாசிக்க தூய காற்றினைத் தருவாய். நலம் பல தருவாய் நண்பனே” பின் மீண்டும் நடைபயிற்சியைத் தொடரவும். உங்களால் முடிந்த அளவிற்கு சுற்றிவரவும். உங்கள் ராசிக்காரர், பக்கத்து அறைக்காரர் அந்த பகுதில் நடை பயிற்சி மேற்கொள்ளலாம். வீணாக பேசி உங்களின் பிராண சக்தியை குறைத்துக் கொள்ளாதீர்கள். பேச்சைத் தவிர்க்கவும்.

0730-0800- குளியல். குளிர்ந்த நீரே உடலுக்கு நல்லது. இருப்பினும் குளிர்ந்த நீரில் குளித்து பழக்கமில்லாதவர்களுக்கு வெண்ணீர் முன்கூட்டி சொல்லியிருந்தால் உங்கள் பொருப்பாளர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார். எப்படியிருப்பினும் அதிக சூடான நீரில் குளிக்காதீர்கள். தோல் பகுதியிலிருக்கும் ஜீவ அணுக்களை சூடாக்கி அதன் செயல்திறனை குறைக்காதீர்கள். குளித்ததும் ஆடைகளை அணிந்துகொண்டு தயாராகி தியானபூஜைக் கூடத்திற்கு வரவும்.

0800-0900- நீங்கள் இங்கே குருஸ்ரீ பகோராயுடன் சேர்ந்து பூசை காரியங்களில் கலந்து கொண்டு தியானம் செய்யலாம்.

0900-0930- தியானம் பூஜை முடிந்ததும் காலை உணவு. கொடுக்கப்படும் உணவு வகைகளில் உங்களுக்கு தேவையானவற்றை மீண்டும் நீங்கள் கேட்டு வாங்கலாம். ஆனால் ஒருவிசயத்தை நினைவு கொள்ளவேண்டும். உங்கள் உடல் உங்களுக்குப் போதுமானது என்றால் முதலில் ஒரு எண்ணம் தோன்றும் அதற்கு மேல் என்னவாக இருந்தாலும் அருந்தாதீர்கள். நன்றாக இருக்கின்றது என்பதற்காக கொஞ்சம் சாப்பிடலாம் அது என்ன செய்யப்போகின்றது என்று எண்ணவேண்டாம். அடுத்த வேளைக்கு நன்றாக பசியெடுத்துபின் சாப்பிடவேண்டும். அதுதான் ஆரோக்கியத்தின் முதல் படி. எனவே அளவாக உணவருந்தி வளமாக வாழ முயற்சியுங்கள்.

0930-1200- சோம்பலில்லாமல் இருக்க நீங்கள் விரும்பினால் நிர்வாக அலுவலகத்தின் கீழ் உள்ள பணிகளில் உங்களுக்கு தெரிந்த விருப்பமான வேலைகளை அனுமதி பெற்று செய்யலாம் மற்றவர்கள் நிர்வாக நூலகத்தில் சென்று பத்திரிகைகள், நூல்களைப் படிக்கவும்.

1200-1230- காய்கறிகள் / தக்களி சூப்

1230-0130- மதிய பூசை. தியானம்.

0130-1400- உணவு. குருஸ்ரீ பகோரா உங்களுடன் உணவு அருந்துவார்.

1400-1600- ஒய்வு. பொருப்பாளாருடன் கலந்து உரையாடலாம். தொலைக்காட்சி பாருங்கள். புத்தகங்கள் படியுங்கள். தூங்கவேண்டாம். ஓய்வில் இருங்கள்.

1600-1630- மிதமானசூடான பானம்

1630-1730- நடைபயிற்சி. உங்கள் நண்பனை பார்க்கச் செல்லுங்கள். அவரிடம் சிறிது நேரம் மனம்விட்டு மவுனமாக உரையாடுங்கள். கட்டித்தழுவுங்கள். பின் பயிற்சியை தொடங்குங்கள்.

1730-1830- ஒய்வு. சில முத்திரைகள் உடல் நலத்திற்குப் பெரிதும் உதவும். அவைகள் காலை நேரத்தில் சொல்லித்தரப்படும். அவகளை நினைவு கூர்ந்து இப்போது செய்து பார்க்கவும்.

1830-1930- பூசை. தியானம்.

1930-2030- இரவு உணவு.

2100-0400- நிம்மதியான உறக்கம். படுத்த சிறிது நேரத்தில் உறங்க வேண்டும். அப்படி உறக்கம் வராதவர்கள் நிர்வாகத்திடம் தெரிவித்து அதற்கான செய்முறை பயிற்சிகளை தெரிந்து செயல்பட்டால் விரைவில் உறக்கம் வரும். ஆழ்ந்த உறக்கத்திலிருப்பீர்கள்.

ஐந்தாவது நாள் மூலிகை எண்ணெய் தேய்த்து குளியல். அன்று காலை நிகழ்ச்சி சிறிது மாறும். பொதுவாக மாற்றம் இருக்காது. பொருப்பாளர் அட்டவணையில் ஏற்படும் மாற்றங்களை அவ்வப்போது உங்களுக்குத் விபரமாகத் தெரிவிப்பார்.

 

காற்றுவனம் நிர்மானம்: இந்த தூய காற்றுவனம் ஒரு பெரிய பயனுள்ள திட்டம். இதைச் செயலாக்க சுமார் 250-300 ஏக்கர் நிலம் தேவைப்படும். ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மரத்தின் குணவகையைச் சார்ந்தது. அந்தந்த நட்சத்திரக்காரர்களுக்கு அந்தந்த மரத்தின் சூழல் மிகவும் ஒத்துக் கொண்டு நல்ல ஆரோக்கிய பலன்தரும். ஒரு நாளைக்கு 24மணி நேரத்தில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு அவர்களின் ராசிக்குரிய மரத்தின் பாதுகாப்பில் இருப்பது மிகுந்த பயன் தரும். எனவே ஒரு ராசிக்கு 2 ஏக்கர் பரப்பளவில் மரவகைகளும் நடுவில் தங்கியிருக்க வசதிக்காக அறைகள் ஏற்படுத்த ஒரு ராசிக்கு 1/2 ஏக்கர் என ஆண்/பெண்  இருபாலருக்கும் சேர்த்து மொத்தம் 150 ஏக்கர், நடுவில் பூசை, தியானம் நிர்வாக கூடம், குருஸ்ரீ பகோரா மற்றும் நிர்வாக அலுவலர்கள் தங்கும் பகுதி, உணவுக்கூடம், புத்தகச்சாலை, பாதுகாப்பு பெட்டகம், வரவேற்பு கூடம், இவைகளுக்கு 30 ஏக்கர் எனவும், இதைச் சுற்றி மூலிகைவனம் ஏற்படுத்த குறைந்தது 20 ஏக்கர், நந்தவனம், காய்கறிகள் ஏற்படுத்த 50 ஏக்கர் எனவும் தேவைப்படும். ஒலி, ஒளிக்கூடம் ஆன்மீக நிகழ்வுகளை மக்களின் மனதிற்கு இதமூட்டும்வகையில் காண்பித்து உற்சாகமூட்ட, பூசைக்கூடம் ஆகமமுறைப்படியும், தியானக்கூடம் அறுபத்திநாலு கலைகளின் பிரதிபலிப்பாகவும் அங்கே அமர்ந்தால் ஒர் அதிர்வு அலைகள் ஏற்பட்டு தியானம் செய்வோருக்கு பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும். அப்போதுதான் இந்த திட்டம் சிறப்பாக செயலாகும். மனிதர்குல ஆன்மாக்கள் நன்மை பெறமுடியும்.

கோவில் கட்டுவது என்பது பிரபஞ்ச உலகத்தில் மாபெரும் புண்ணியமாகும்.

புனித மூலிகைவன கோவில் நிர்மானம்- முதல்பகுதி- சிவநாராயனார் கோவில்- நான்கு மாடி அமைப்பு.

தரைப்பகுதி:- விநாயகர்சபை, பூமாதேவி +64 யோனிகள், அனுமானிஷ்ய பகுதி, ஆகமமுறைப்படியான பூசைக்கூடம், சிவனின் முடிகாணும் நிகழ்வு பகுதி, சூரியன் சபை

முதல்தளம்:- துர்கா சபை, பிரம்மா-சரஸ்வதி ஆகமமுறைப்படியான பூசைக்கூடம், ஆயகலைகள் 64-ன் கலைக்கூடம், சேத்ரபாலர்-அஷ்டபைரவர் சபை,

இரண்டாம்தளம்:- ஆதிலட்சுமி+ அஷ்டலட்சுமி சபை, நாரயணர், லட்சுமி, ஆகமமுறைப்படியான பூசைக்கூடம், 108 திவ்விய தேசங்கள், பெருமாளின் 24 திருஉருவங்கள், நாரயணர் தியானக்கூடம், சின்ன, பெரிய திருவடிகள்

மூன்றாம்தளம்:- ஆதிபராசக்தி சபை, சிவனின் 64(சிவலீலைகள்) திருமுக உருவங்கள், மூலிகைவனநாதர்- தரைப் பகுதியிலிருந்து மூன்று தளம் வரை எழும்பியிருக்கும் சிறப்பான 64 பட்டைகளுடன் கூடிய சகுசஷ்டி- சிவலீலா சம்த்த லிங்கம், ஆகமமுறைப்படியான பூசைக்கூடம், 64 தத்துவங்கள் நிறைந்த அதிர்வுகளுடன் கூடிய சிவனாரின் தியானக்கூடம், சிவனின் அடிகாணும் நிகழ்வு பகுதி, ஞானபண்டிதன் சபை, அமையப்பெற்ற சிறப்பான கலையம்சமிக்க மார்பிள் கோவில்.

நான்காம் தளம்:- கோவில் நிர்வாக அலுவலகம்- ஒலி, ஒளி, காணொலி அமைப்பு. மற்றும் சோலார் அமைப்பு, மூலவர்- கருவறை மற்றும் தியான பூஜை கூடங்களின் கோபுரங்கள்.

இரண்டாம்பகுதி- கோவிலைச் சுற்றிலும் மூலிகைச் செடிகள் மூலம் காற்றைத் தூய்மையக்கும் பகுதி. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மரத்தின் குணவகையைச் சார்ந்தது. அந்தந்த நட்சத்திரக்காரர்களுக்கு அந்தந்த மரத்தின் சூழல் மிகவும் ஒத்துக் கொண்டு நல்ல ஆரோக்கிய பலன்தரும். ஒரு நாளைக்கு 24மணி நேரத்தில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு அவர்களின் ராசிக்குரிய மரத்தின் பாதுகாப்பில் இருப்பது மிகுந்த பயன் தரும். எனவே அந்தந்த நட்சத்திரத்திற்குரிய மரக்கூட்டத்தின் நடுவில் அந்த நட்சத்திரக்காரர்களை நான்கு நாட்கள் தங்கவைத்து வெளி உலக தொடர்பில்லாமல் முற்றிலும் இயற்கையுடன் இருந்து புத்துணர்வு அளிக்கும் திட்டப்பகுதி. 27நட்சத்திரத்திற்கும் உரிய மரங்கள் அதனிடையே நடைபாதைகள். ஒவ்வொரு பகுதியின் நடுவில் அந்த நட்சத்திரத்திற்குரிய சுமார் 25பேர் தங்கும் வகையில் யோக, தியானம் பயிற்சிகள் கற்றுக்கொடுக்க கூடம் அமைப்புடன் கூடிய குடில்கள், ஆரோக்கியம் தரும் இயற்கையான உணவு வகைகள். நடைப்பயிற்சி, ஹீலிங் முறையில் வைத்தியம், மூலிகை குளியல். அடங்கியது. இதே போன்று பெண்களுக்கென்று 27 நட்சத்திரத்திற்குரிய தனிப் பகுதி.

மூன்றாம்பகுதி- குருஸ்ரீ பகோரா மற்றும் நிர்வாக அலுவலர்கள் தங்கும்பகுதி, சித்த மருத்துவ வசதி, உணவுக்கூடம், புத்தகச்சாலை, பாதுகாப்பு பெட்டகம், வரவேற்பு கூடம், நிர்வாக அலுவலகம் அடங்கியது.

நான்காம்பகுதி- கோவிலைச் சுற்றியும் முன்னும் பின்னும் அழகிய நந்தவனம்(இறைவனுக்கு பூக்கள்), உணவுக்கான காய்கறித்தோட்டங்கள், பூங்காக்கள், ஆன்மீக நிகழ்வுகள் வழங்கும் ஒலி, ஒளிக்கூடங்கள், குழைந்தைகள் விளையாடி மகிழ இடம், நீரூற்றுகள், மீன்களுடன் கூடிய குளம், வாகனங்கள் நிறுத்தும் பகுதி.
சிவநாரயனர், மூலிகைக் காற்றுவனம் நிர்மானம் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பெரிய பயனுள்ள திட்டம். இதைச் செயலாக்க சுமார் 250-300 ஏக்கருக்கு நிலம் மற்றும் பொருளாதாரம் தேவைப்படும்.

இவ்வளவு பெரிய திட்டத்திற்கு இடம் மற்றும் பொருள் வசதிகள் எங்கிருந்து எப்படி யாரால் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பது இறையின் முடிவில். என் ஜீவாத்மா பிரிவதற்குள் இதை ஏற்படுத்தி எதிர்கால மக்களின் பயன் பாட்டிற்கு உதவ அமையவேண்டும் என தினமும் உள்ளார்ந்த நினைவுகளுடன் இறையிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

நீங்களும் இந்த பொது எதிர்கால மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் திட்டத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை நினைவால், எண்ணத்தால், பொருளால், உடலால், பணத்தால் அளிக்க முடிந்த உதவிகளை அளிக்க முன்வாருங்கள். தொடர்பு கொள்ளுங்கள். உறுதுணையான ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை ஆண்மீக நண்பர்களுடன் பகிர்ந்து இப்புனிதச் செயலுக்கு ஆதரவு அளியுங்கள். ஆன்மாவிற்கு புண்ணியம் சேருங்கள்! அன்புடன்-குருஸ்ரீ பகோரா

 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-

குருஸ்ரீ பகோரா கையிலைமணி கோவிந்தராஜன்.

32, டெலிபோன்நகர், மூளப்பாளையம்

ஈரோடு-638 002.

Ph: 0424 228 0142, Cell: 94428 36536

E-Mail: peegora @ gmail.com

Pl.visit.naavaapalanigotrust.com

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880203
All
26880203
Your IP: 52.205.218.160
2024-03-19 13:19

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg