gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

திருமந்திர யோகம்

Written by

  ஓம் நமசிவாய!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை.

           0=0=0=0=0=0

திருமந்திர யோகம்

 

யோகம் பற்றிய பல கருத்துக்களை திருமூலரின் திருமந்திரத்தில் காணலாம். இது ஓர் ஆகமத் தந்திர நூல் ஆகும். மொத்தம் 3047 பாடல்கள். அதில் யோகம் சம்பந்தப்பட்ட பாடல்கள் மட்டும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அடிப்படையான யோகம் பயிலத் தெரிந்தவர்களுக்கு விளக்கங்கள் தகவல்கள் தருகின்றது.

 

அதோமுகத்தரிசனம்-

எம்பெருமான் இறைவா முறையோ என்று வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல

அம்பவளமேனி அறுமுகன் போயவர் தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம் கண்டங் கறுத்தறிவார் இல்லை

உண்டது நஞ்சென்று உரைப்பார் உணர்விலோர் வெண்டலை மாலை விரிசடையோற்கே

செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்

மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன் மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய செந்தீக் கலந்துள் சிவனென நிற்கும்

முந்திக் கலந்தங்கு உலகம் வலம்வரும் அந்தி இறைவன் அதோமுகம் ஆகுமே.

அதோமுகம் கீழண்டமான புராணன் அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும்

அதோமுகம் ஒண்மலர்க் கண்ணிப் பிரானும் அதோமுகன் ஊழித் தலைவனும் ஆமே.

அதோமுகம் மாமலை ராயது கேளும் அதோமுகத் தால் ஒரு நூறாய் விரிந்து

அதோமுகம் ஆகிய அந்தமில் சத்தி அதோமுகம் ஆகி அமர்ந்திருந்தானே.

சூரபத்மனைக் கொல்ல தம் ஐந்து முகத்தோடு அதோமுகம் சேர்த்து சிவன் ஆறுமுகனைத் தந்துள்ளார். மூளையும் தண்டுவடமும் பிரியும் இடமே அதோமுகம். அண்டம்-மூளையும் தண்டுவடமும். எண்திசை- எண் சாண் உடல். குரு அருளினால் எழுந்த குண்டலினி நடுவில் உள்ள சுழுமுனை நாடியில் சிவப்பு நெருப்பைப்போல் ஒளிர்ந்து ஓங்கி உயரும். சிவன் போலவே உயர்ந்து நாபியிலிருந்து உடல் முழுவதும் செல்லும். அந்திச் சூரியன் போல் நிறமுள்ள அதோமுகச் சிவன் இதுவே.

மூளைக்குகீழ் உள்ள முகுளமே –அண்டம்- அதேமுகமாகும். அங்கு வந்த பிராணன் உடல் முழுவதும் சென்று எல்லாச் செயல்களுக்கும் துணைச் செய்யும்.108 முறை ஓம் ஓதினால் பிராணசக்தி அதோமுகம் வழியாக மூளைக்குப் போகும். ஓம் பிராணவ மலர்களையுடைய சிவனும் அதோமுகத்தையுடைய தலைவனாவான். அதோமுகமாகிய முகுளப்பகுதி 1000 தாமரை இதழ்களையுடைய மூளைப் பகுதியோடு இணைந்ததை அறிவீர். பிராணசக்தி அதோமுகத்தால் நூறு விதமாய் பிரிந்து எல்லையற்ற அதோமுகச் சக்தியாய் சிவனாக அமர்ந்திருந்தான்.

ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி தாங்கி நின்றாலும் அத்தாரணி தானே

இறைவன் யோக நெறியினால்-சைதன்யத்தால் இவ்வுலகைத் தாங்குகிறான்.

கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி அண்டத்துள் ஊறி இருந்து எண்திசை ஆகி

ஒண்திண் பதம் செய்த ஓம் என்ற அப்புறக் குண்டத்தின்மேல் அங்கு கோலிக்கொண்டாளே.

இமயமலையில் தோன்றிய பார்வதியே மூலாதாரத்தில் காமாக்னியாக இருந்து, அவளே ஒம் எனும் மந்திரம் எழும்பும் இடமாகவும் ஆகி எண்திசையாகிய உடலில் உள்ள நாடிகளில் பரவும் ஓம குண்டமும் அவளே ஆகிணாள்

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை

விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சும் அவனே அமைக்க வல்லானே.

தலை உச்சியில் ஓங்கி நாதமாகவும் ஒளியாகவும் விளங்குவதை விரும்பி இன்பம் அடைந்தவர்க்கு யமபயம் இல்லை. ஆக்வநீயம், காருக பத்தியம், தட்சிணாக்னி ஆகிய அக்னிகள் சூரிய சந்திர அக்னி என்ற மூன்று நெருப்புகளுடன் உடம்பில் அமையச் செய்பவன் இறைவன்.

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதங்கள், ஆதி படைத்தனன் ஆயபல் ஊழிகள்

ஆதி படைத்தனன் எண் இலிதேவரை, ஆதி படைத்தவை ஆகி நின்றானே.

பூதங்கள், ஊழிக்காலங்கள், தேவர்கள் ஆகியோரைப் படைத்த ஆதி கடவுள் தான் படைத்த பொருள்களிலும் இருக்கின்றான்.

உள்ளத்து ஒருவனை உள் உறு சோதியை உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை

உள்ளமும் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருஅறி யாதே.

உள்ளத்தில் இருப்பவன், உள்சோதியை விட்டு நீங்காதவன், உள்ளத்தினுள்ளே தானும் இருந்தபோதும் உள்ளம் அவனின் அருவை அறியவில்லை.

உள் நின்ற சோதி உறநின்ற ஓர் உடல் விண் நின்ற அமரர் விரும்பும் விழுப்பொருள்

மண்நின்ற வானோர் புகழ் திருமேனியன் கண்நின்ற மாமணி மாபோதகமே.

யோகமுயற்சியால் உடம்பினுள் உள்ள சோதியை யார் காண்கிறாறோ அவரை தேவரும் விரும்புவர், மண்ணில் அவர் தெய்வமாவார், புகழ் பெறும் அழகிய உடலை பெறும் அவரை கண்மணிபோல் காக்கவேண்டும். அவர் ஞானியாவார்.

உடல் வைத்த வாறும் உயிர்வைத்த வாறும் மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்

திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்குக் கடைவைத்த ஈசனைக் கைகலந்தேனே.

உடல் அமைப்பு வைத்து, அதில் உயிரை வைத்ததும், யோகம் செய்ய வழிவைத்தும், ஒன்பது துவாரங்களால் உணர்வு கொள்ளவைத்தும் உடம்பில் உள்ள தாமரைகளில் அக்னியை வைத்ததும் ஆன ஈசனை யோக சாதனையால் கலந்து நின்றேன்.

உள்ளத்தின் உள்ளே பல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின்று ஆடார் வினைகெடப்

பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ளமனம் உடைக் கல்வியிலோரே.

பல இடங்களில் தீர்த்தம் ஆடுவதற்கு யாத்திரைகள் செய்து பயனில்லை. உள்ளத்தின் உணர்வால் உடம்பில் உள்ள அமுதமாகிய தீர்த்தமதை ஆடுவதே வினைகள் தீரும் வழியாகும்.

தளி அறிவாளர்க்குத் தண்ணியதாய்த் தோன்றும் குளிஅறி வாளர்க்குக்கூடவும் ஒண்ணான்

வளிஅறிவாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும் தெளிஅறிவாளர்தம் சிந்தையுளே.

உடலைக் கோயிலாகக் உணர்ந்தால் (தளி) கடவுள் குளிர்ச்சியாக இருப்பான். வெளியில் தீர்த்தம் தேடிக் குளிக்கும் அவர்களுக்கு கிடைக்கமாட்டன். மூச்சு(வளி) பயிற்சியாளருக்கு முயன்றால் கிடைப்பான். தெளிந்த அறிவுடையாளர் சிந்தையுள் கடவுள் இருப்பான்.

தலை உள்ள அமுதம் ஆடுபவரே கங்கை யாடும் புண்ணியர் ஆவார்

தலையில் ஊறும் அமுதத்தில் ஆடுபவரே புண்ணிய கங்கை தீர்த்தம் ஆடுபவர்.

கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல் உடல் உற்றுத் தேடுவார் தம்மை ஒப்பார் இல்

திடம் உற்றநந்தி திருவருளால் சென்று உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே.

பிரபஞ்சத்தில் கடல்போல் பரவிய கடவுளை குரு அருளால் தலையின் தாமரைக் குளத்தில் யோக முயற்சியால் சாதிப்பவரை ஒப்பாரில்லை. பிறரால் அதை அறிய முடியாது.

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கு ஒருவாய் உறை

யாவர்க்குமாம் உண்ணும் போது ஒருகைப்பிடி யாவர்க்குமாம் பிறஎக்கு இன்னுரை தானே.

கடவுளுக்கு ஒரு பச்சிலை, பசுவுக்கு ஒரு கைப்புடிப் புல், தாங்கள் உண்ணும்போது ஒரு கைப்பிடி பிறரிடம் பேசும்போது பேச்சில் இனிய உரை இவைகளை யோகம் முயல்வோர் செய்க.

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

அன்பு வேறு சிவம் வேறு என பிரித்து அறியாமல் இரண்டும் ஒன்றே என உணர்ந்தாரின் அன்பே சிவமாகும்.

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்

அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி என்பொன் மணியினை எய்த ஒண்ணாதே.

எலும்பும் சதையும் அறுத்தும் நெருப்பில் பொரிய வறுத்தாலும் கடவுள்மேல் அன்பு கொண்டோர் அவனைக் காணலாம்.

அறம்கேட்டு அந்தணர் வாய்மொழி கேட்டும் மறம்கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும்

புறம்கேட்டும் பொனுரை மேனிஎன் ஈசன் திறம்கேட்டும் பெற்ற சிவகதி ஈசனே.

அறவழியில் நடப்பதாலும், அந்தனர் உரையினால் பக்தி கொள்வதாலும், கடவுள் பெருமைகளை அறிவதாலும், வானிலே இருக்கும் தெய்வங்களின் மந்திரங்களை உச்சாடானம் செய்வதாலும், இறவனடி அடைந்தார் செய்தி கேட்பதாலும் சிவகதி அடையலாம்.

 

அட்டமாசித்திகள்

தெரிதரு சாம்பவி கேசரி சேரப் பெரிய சிவகதி பேறு எட்டாகும் சித்தியே.

சாம்பவி முத்திரை கேசரி முத்திரை இரண்டும் சாதிக்கும் யோகியர் சிவகதியடைந்து அட்டமாசித்தி பெறுவர்.

காய ஆதிபூதம் கலை காலம் மாயையில் ஆயாது அகல அறிவு ஒன்று அநாதியே

ஓயாப் பதி அதன் உண்மையைக் கூடினால் வீயாப் பரகாயம் மேவலும் ஆமே.

உடம்பின் 24 ஆன்ம தத்துவங்களும் கலை காலம் முதலிய வித்யா தத்துவங்கள் ஏழும் சிவதத்துவங்கள் ஐந்தும் ஆக 36 தத்துவங்கள் விரிந்து அநாதியாக இருக்கும் பரம்பொருளை அடைய யோகமுயற்சியால் பரகாய சித்தி அடையலாம்.

மதிதனில் ஈராறாம் மன்னும் கலையில் உதயம் அதுநால் ஒழிய ஓர் எட்டுப்

பதியும் ஈராறு ஆண்டு பற்றி அறப் பார்க்கில் திதமான் ஈராறு சித்திகள் ஆமே.  

பிராசாத யோக கலைகள் பிரம்மரந்திரத்திலிருந்து 12 விரல் அளவு. முதல் நான்கு போக மீதி எட்டையும் 12 ஆண்டு பற்றற்று பார்த்தால் 12 வகைச் சித்திகள் கிட்டும்.

ஏழானதில் சண்டவாயு வின்வேசியாம் தாழா நடைபல யோசனை சார்ந்திடும்

சூழான ஓர் எடில் தோன்றா நரைதிரை தாழான ஒன்பதில் தான் பரகாயமே.

ஈரைந்தில் பூரித்துத் தியான உருத்திரன் ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி

சீர் ஒன்று மேலேழ் கீழேழ் புவிச் சென்று ஏரொன்று வியாபியாய் நிற்றல் ஈராறே.

காற்றை உள் அடக்கும் கும்பகப் பிராணாயாமத்தை 7 ஆண்டுகள் செய்தால் காற்று வேகத்தில் நடக்கலாம், 8 ஆண்டுகள் செய்தால் நரை திரை தோன்றாது. 9 ஆண்டுகள் செய்தால் பரகாய சித்தியடையலாம். 10 ஆண்டுகள் செய்தால் உருத்திரன் புருவ மத்தியில் தோன்றுவான். 11ஆண்டில் ஈசத்துவம் சித்தி வரும். 12 ஆண்டில் எல்லா உலகங்களையும் வசம் செய்யும் வசத்துவ சித்தி கிட்டும்.

சித்திகள் எட்டு. 1. அணிமா- அணு நிலையடைதல், 2. மகிமா- மிகப்பெரிய வடிவு கொளல், 3. கரிமா- தடியற்றவன் ஆதல், 4. லகிமா- சுமையற்று இருக்கும் உடல் பெறல், 5. பிராப்தி- வேண்டுவன அடைதல். 6. பிராகாமியம்- நிறைவுள்ளவனாதல், 7. ஈசத்துவம்- இறைபோல் ஆட்சி செய்ய அருள், 8. வசித்துவம்- உலகைத் தன்வசம் செய்தல். ஓம் எனும் சக்தி அட்டமா சித்தியில் அடங்கினால் வீடுபேறு கிடைக்காது. எனவே சித்திகளில் ஈடுபடவேண்டாம்.

முந்தியமுந்நூற்று அறுபது காலமும் வந்தது நாழிகை வான்முதல் ஆயிடச்

சிந்தை செயமண்முதல் சேர்ந்து அறிவாய்வலம் உந்தியுள் நின்று உதித்து எழுமாறே.

ஒருநாளுக்கு 60 நாழிகை என்றால் 360 ஐ 60 ஆல் வகுத்தால் 6 நாழிகை. இதை பஞ்ச பூதங்களுக்கு பகிர்ந்தளித்தால் 6x5= 30. பகலுக்கு 30 இரவுக்கு 30 நாழிகை. உதயம் முதல் பகல் காலத்தில் ஆகாயம் 0-6, காற்று 6-12, நெருப்பு 12-18, நீர் 18-24 நிலம் 24-30 நாழிகைகள் என்றும், அத்தமனம் முதல் இரவுக் காலம் நிலம் 30-36, நீர் 36-42, நெருப்பு 42-48, காற்று 48-54, ஆகாயம் 54-60 நாழிகைகள் என கணக்கிடவும். இரவில் ஆகாயப்பகுதியில் வரும் 54-60 = 6 நாழிகைகள் என்பது 1 நாழிகை = 24 நிமிடங்கள் என்றால் 6x24= 2மணி 24 நிமிடங்களாகும். அதாவது சூரிய உதயத்திற்குமுன் 2மணி 24 நிமிடங்களே பிரம்ம மூர்த்த காலமாகும். வைகறைப் பொழுதாகிய இந்த காலமே யோகம் செய்வதற்கு உரிய பலனைத் தரும். மணிப்பூரமாகிய உந்தியிலிருந்து உதயம் தொடங்கும். நாபியிலிருந்து தொண்டைக்குழி வரை காலை 6மணி முதல் மாலை 6 மணி என்றும் முதுகுப்பக்கம் மாலைப்பகுதியும் இரவுப் பகுதியும் அளக்கப்பட்டு மூலாதாரம் வரை வரும்.

சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே முத்தம் தெரிந்து உற்ற மோனர் சிவமுத்தர்

சுத்தம் பெறலாகும் ஐந்தில் தொடக்கு அற்றோர் சித்தம் பரத்தில் திருநடத்தோரே.

உலக இயலில் ஈடுபடுவதை நிறுத்தினால் சிவமயமாகவே ஆவர். முத்தி நெறியை உணர்ந்து மவுனம் சாதித்தால் ஜீவன்முத்தியாகும். உடலின் பற்றை விட்டால் 36 தத்துவங்களும் சுத்தமாகும். அவர்கள் சிதாகாசம்- சிதம்பரம் ஆகிய உடலின் பொன்னம்பலத்தில் இறைவன் திருநடனம் காண்பர்,

ஒத்து அவி ஒன்பது வாயுவும் ஒத்தபின் ஒத்து அவி ஒன்பதின் மிக்க தனஞ்சயன்

ஒத்து அவி ஒன்பதில் ஒக்க இருந்திட ஒத்த உடலும் உயிரும் இருந்ததே

உடலில் உள்ள பத்து வாயுக்களில் ஒன்பது இறந்ததும் வெளியேறுவதாகும். தனஞ்சயன் என்ற வாயு இறந்தபின்னும் இருப்பதாகும். தம் தொழிலால் இவைகள் உயர்வு தாழ்வு உடையது. அப்படியின்றி எல்லாம் ஒற்றுமையாக நடந்தால் நீண்ட நாள் உடலுடன் உயிர் இருக்கும். பத்து வாயுக்கள். 1. பிராணன்- உடலில் தோன்றி உடலை இயக்குவது. 2. அபானன்- மூச்சு வழியாக உடலில் புகுந்து மூலாதாரம்வரை செல்வது., 3. சமானன்- உணவைச் சீரணிக்கச் செய்வது, 4. உதானன்- உந்தியிலிருந்து மேல் நோக்கிப் போவது. 5. வியானன்- உடல் முழுவதும் வியாபித்து இரத்தம் செல்ல உதவுவது. 6. நாகன்- நீட்டி முடக்கவும், பேசவும், விக்கலுக்கும் உதவுவது. 7. கூர்மன்- விழித்தல், இமைத்தல், மயிர் சிலித்தல் செய்வது. 8. கிரிகரன்- தும்மல், இருமல், வெம்மை, சினம் இவற்றை உண்டாக்குவது. 9. தேவதத்தன்- ஓட்டம், இளைப்பு, வியர்வை, கொட்டாவி ஆகியன செயலபடுத்துவது. 10. தனஞ்சயன்- உடல் இறந்தபின் உடலில் இருந்து அதை மண்ணோடு கலக்கச் செய்வது,

இருக்கும் தனஞ்சயன் ஒன்பது காலில் இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்

இருக்கும் உடல் அது இருந்தில் ஆகில் இருக்கும் உடலது வீங்கி வெடித்தே.

ஒன்பது காற்றுகள் இருந்தது போகத் தனஞ்சயன் எனும் காற்று அனந்தை எனும் சிவகலையில் உள்ள இருநூற்று இருபத்து மூன்றாம் புவனமாக உள்ளது. உடலில் உயிர் இல்லாது போனால் இது உடலை வீங்கச் செய்து வெடிக்கவும் செய்யும்.

கண்ணில் வியாதி உரோகம் தனஞ்சயன் கண்ணிலிவ் ஆணிகள் காசம் அவனல்லன்

கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால் கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே.

கண்ணில் பிணிகள் வரக்காரணம் தனஞ்சயன் அல்ல. கூர்மன் அவ்விடம் கலக்காமையே.

ஒன்பதுவாசல் உடையதோர் பிண்டத்துள் ஒன்பது நாடி யுடையதோர் ஓரிடம்

ஒன்பது நாடி ஒடுங்க வல்லார்கட்கு ஒன்பது காட்சி இலை பலவாமே.

ஒன்பது நாடிகளும் பத்தான சுழுமுனையில் ஒடுங்க வல்லவருக்குப் பல காட்சிகளாக இல்லாமல் எல்லாம் ஒரே காட்சியாக விளங்கும். பத்து நாடிகள்- 1. புருஷன், 2. காந்தாரி, 3. அக்னி, 4. அலம்புலி, 5. சிங்குவை, 6. சங்கிணி, 7. குணா, 8. இடைகலை, 9. பிங்கலை, 10. சுழுமுனை.

ஓங்கிய அங்கிக்கீழ் ஓண்சுழுமுனைச்செல்ல வாங்கி இரவி மதிவழிஓடிடத்

தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட ஆங்கது சொன்னோம் அருவழி யோர்க்கே.

கீழுள்ள மூலாதார அக்னி சுழுமுனை நாடியில் புகுந்து ஏழு புவனங்கள்- ஆதாரக் கமலங்களை தாங்கி உச்சி செல்லும்.

தலைப்பட்டவாறு அண்ணல் தையலைநாடி வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்

துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால் விலைக்கு உண்ணான் வித்து அது ஆமே.

வேடர்கள் தம் குடிலில் பார்வை-பெண் மானை நிற்க வைத்தால் வனத்திலுள்ள பிற ஆண்மான்கள் அதனுடன் சேர வரும்போது அதைப் பிடிப்பர். இது போன்று குண்டலினி சக்தியாகிய பராசக்தியை சுழுமுனை நாடியில் அனுப்பினால் சிவன் காட்சி தானே கிடைக்கும் என்பதாகும்.

ஓடிச்சென்று அங்கே ஒருபொருள் கண்டவர் நாடியின் உள்ளாக நாதம் எழுப்புவர்

தேடிச்சென்று அங்கே தேனை முகந்துண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே

கட்டிட்ட தாமரை ஞாளத்தின் ஒன்பது மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்

கட்டிட்டு நின்ற களங்கனி யூடுபோய் பொட்டிட்டு நின்று பூரணமானதே.

சுழுமுனை நாடியை அறிந்து அதில் நாதம் எழுப்பும் யோகியர் சுகானந்தம் பெறுவர். தமது உட்பகை எல்லாம் நீக்குவர்.  சுழுமுனை நாடியில் ஒன்பது சக்தி மாதர்களும் அடங்கியபின் அவர்கள் பராசக்தியுடன் இணைந்தவர் ஆவர். அவர்கள் விசுத்தி வழியாகப் போய் புருவ மத்தியில் பொட்டு வைத்தது போல் பூரணமாய் பொலிவடைவர்.

விரிந்து குவிந்து விளைந்த இம்மங்கை கரந்துள் எழுந்து கரந்து அங்கு இருக்கில்

பரந்து குவிந்து பார்முதல் பூதம் இரைந்தெழு வாயு இடத்தினில் ஒடுங்கே

படையொடு பிங்கலை என்னும் இரண்டும் அடைபடும் வாயுவும் ஆதியே நிற்கும்

தடையவை ஆறேழும் தண்சுடர் உள்ளே மிடைவளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே

ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருகில் அடங்கி அடங்கிடும் வாயு அதனுள்

மடங்கி மடங்கிடும் மன்னுயிர் உள்ளே நடங்கொண்ட கூத்தனும் நாடுகின்றானே.

நாடியின் உள்ளே நாதத் தொனியுடன் தேடி உடன் சென்றத் திருவினைக் கைக் கொண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு மாடி ஒருகை மணிவிளக்கு ஆனதே.

பராசக்தியில் இருந்து பலசக்தியர் பிரிந்து விரிந்து மீண்டும் ஒடுங்குவர். பராசக்தியும் சிவத்தில் ஒடுங்கும். பிரபஞ்சம் தோன்றி ஒடுங்கும் என்பதை மூச்சு இழுத்து விடும்போது பாவிக்கவும். இடை பிங்கலை என்பவை தமக்குள் இடம் வலமாகப் மாறிப் பின்னி ஆறு ஆதாரங்களிலும் செல்லும். நாடியுள் மூச்சை அடக்கும் முறைக்கு ஏற்ப அதுவும் அடங்கும். அடங்கிய மூச்சின்போது உயிரில் சிவம் தெரியும். மூச்சைக் கும்பகம் செய்வதால் நாதம் எழுந்து குணக்குறீகள் நீங்கும். சக்தி அருள் பெறலாம். இது மனத்தைக் காட்டும் கண்ணாடி போலவும் ஒளிகாட்டும் கை விலக்குப் போலவும் பயன் தரும்.

எட்டுஇவை தன்னோடு எழிற்பரம் கைகூடப் பட்டவர் சித்தர் பரலோகம் சேர்தலால்

இட்டமது உள்ளே இறுக்கல்பர காட்சி எட்டு வரப்பும் இடத்தான் நின்று எட்டுமே

மந்தரம் ஏறும் மதிபானுவை மாற்றிக் கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்

தந்தின்றி நற்காமிய லோகம் சார்வாகும் அந்த உலகம் அணிமாதி யாமே

முடிந்து இட்டு வைத்து முயங்கில் ஓராண்டில் அணிந்த அணிமாகை தானாம் இவனும்

தணிந்த அப்பஞ்சினும் தான்னொய்ய தாகி மெலிந்து அங்கு இருந்திடும் செல்ல ஓண்ணாதே.

இடை பிங்கலை நாடி மூச்சுகளை மாறிவிடும் போது சுழுமுனை தளராது கம்பம் போல் நிற்கும். இதனால் குறைகள் நீக்கப் பெற்று அணிமா சித்தியும் பெறுவர். அணுமா என்பதே அணிமா (நுண்மை) என்றானது. பன்னிரண்டாண்டுகள் யோக சாதனையைத் தவறாது செய்பவர் இந்த அணிமா சித்தியைப் பெறுவர். உடலைப் பஞ்சுபோலாக்கும், யாராலும் இவரை வெல்ல முடியாது.

ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன் போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்

சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின் மாய்கின்ற தையாண்டின் மாலகுவாகுமே

மாலகுவாகிய மாயனைக் கண்டபின் தான் ஒளியாகித் தழைத்திங்கு இருந்திடும்

பாலொளியாகிப் பரந்து எங்கும் நின்றது மேல் ஒளியாகிய மெய்ப்பொருள் காணுமே.

ஐந்து ஆண்டுகள் யோகம் தவறாது செய்தால் இலகிமா (மென்மை) சித்தியை அடையலாம்.

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லியலாளுடன் தத்பொருளாகிய தத்துவம் கூடிடக்

கைப்பொருளாகக் கலந்திடும் ஓராண்டின் மையப் பொருளாகும் மகிமா வதாகுமே.     

ஆகின்றகாலொளியாவது கண்டபின் போகின்ற காலங்கள் போவதும் இல்லையாம்

மேல்நின்ற காலம் வெளியுற நின்றபின் தான் நின்ற காலங்கள் தன் வழி யாகுமே.

தன்வழியாகத் தழைத்திடும் ஞானமும் தன்வழியாகத் தழைத்திடு வையகம்

தன்வழியாகத் தழைத்த பொருளெல்லாம் தன்வழி தன்னருள் ஆகி நின்றானே.

யோகம் தவறாது செய்பவர்கள் ஓர் ஆண்டிலேயே மகிமா (பருமை) சித்தியை பெற்றால் அவரால் உலகமே நன்மை பெறும்.

நின்றன தத்துவ நாயகி தன்னுடன் கண்டன் பூதப்படையவை எல்லாம்

கொண்டவை ஓராண்டு கூட இருந்திடில் விண்டது வேநல்ல பிராத்தியது ஆகுமே.

எல்லாப் பொருளையும் சக்தியின் அருள்மயமாகப் பார்க்கும் பாவனை கைவரப்பெற்றவர் ஓராண்டில் எண்ணிய எல்லாம் எய்தும் பிராத்தி (விரும்பியதுஎய்தல்) சித்தி அடைவர்.

ஆகின்ற முன்னொளியாவது கண்டபின் பாகின்ற பூவில் பரப்பவை காணலாம்

மேகின்ற காலம் வெளியுற நின்றது போகின்ற காலங்கள் போவதும் இல்லையே.

போவது ஒன்று இல்லை வருவது தானில்லை சாவது ஒன்று இல்லை தழைப்பது தானில்லை

தாமதம் இல்லை தமரகத்தின் ஒளி யாவதும் இல்லை அறிந்து கொள்வார்க்கே.

அறிந்த பராசக்தியுள்ளே அமரில் பறிந்தது பூதப்படையவை எல்லாம்

குவிந்தவை ஓராண்டு கூட இருக்கில் விரிந்த பரகாயம் மேவலும் ஆமே.

சுழுமுனை நாடிவழியே சிவஒளி கண்டவர் இருந்த இடத்திலிருந்தே பிரபஞ்சம் முழுவதையும் பார்க்கும் சக்தி பெறுவர். கரிமா (விண் தன்மை) பெறுவர்

ஆனவிளக்கொளியாவது அறிகிலர் மூலவிளக்கொளி முன்னே உடையவர்

கான விளக்கொளி கண்டு கொள்வார்கட்கு மேலை விளக்கொளி வீடுஎளிதாகி நின்றே.

தனக்குள் பராசக்தி இருப்பதை அறிந்து அவள் அருள் பெற்றோர் ஓர் ஆண்டில் வேறு ஓர் உடலில் புகும் பரகாயம் சித்தியடைவர். புருவ மத்தியில் ஒளி காணப் பெற்றவர் பிராகாமிய (நிறைவுண்மை) சித்தி அடைவர்.

நின்ற சதாசிவம் நாயகி தன்னுடன் கண்டன பூதப்படையவை எல்லாம்

கொண்டவை ஓராண்டு கூடி இருந்திடில் பண்டைய ஈசன் தத்துவம் ஆகுமே

ஆகின்ற சந்திரன் தன்னொளியாய் அவன் ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும்

ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில் ஆகின்ற சந்திரன் தானவன் ஆமே.

நானே படைத்திட வல்லவன் ஆயிடும் நானே அளித்திட வல்லவன் ஆயிடும்

நானே சங்காரத் தலைவனும் ஆயிடும் நானே இவன் என்னும் தன்மையன் ஆமே.

தன்மையதாகத் தழைத்த கலையினுள் தன்மையதாகப் பரந்த ஐம்பூதத்தை

தன்மையதாக மறித்திடில் ஓராண்டின் தன்மையதாகிய மெய்ப்பொருள் காணுமே.

சதாசிவத்தையும் அவர் துணைவியையும் உடம்பில் கண்டு சந்திரகலை பதினாறையும் கூடப்பெற்றவர்-துரியம், ஈசனைப் போலத் தொழில் செய்யும் தகுதி பெறுவர். ஈசத்துவ சித்தியே இதுவாகும். படைத்தல் முதலிய 3 தொழிலும் செய்வர், ஐம்பூதங்களையும் வலிந்து நிறுத்தும் உணர்வு பெற்ற ஓர் ஆண்டில் பரம்பொருள் காட்சியையே உடலில் காணுவர்.

மெய்ப்பொருளாக விளைந்தது ஏது எனின் நற்பொருளாகிய நல்ல வசித்துவம்

கைப்பொருளாகக் கலந்த உயிர்க்கு எல்லாம் நற்பொருளாகிய தன்மையன் ஆகுமே.

தன்மையதாகத் தழைத்த பகலவன் மென்மையதாகிய மெய்ப்பொருள் கண்டிடின்

பொன்மையதாகப் புலன்களும் போயிட நன்மையதாகிய நற்கொடி காணுமே

நற்கொடியாகிய நாயகி தன்னுடன் அக்கொடியாதும் அறிந்திடில் ஓராண்டு

பொற்கொடியாகிய புவனங்கள் போய்வரும் கற்கொடியாகிய காமுகனாமே.

காமரு தத்துவமானது வந்தபின் பூமரு கந்தம் புவனமது ஆயிடும்

மாமரு உன்னிடை மெய்த்திடு மான் அனாய் நாமருவும் ஒளி நாயகம் ஆனதே.

நாயகமாகிய நல்லொளி கண்டபின் தாயகமாகத் தழைத்திங்கு இருந்திடும்

போயகமான புவனங்கள் கண்டபின் பேயகமாகிய பேரொளி காணுமே.

பேரொளியாகிய பெரிய அவ் எட்டையும் பாரொளியாகப் பதைப்பறக் கண்டவன்

தாரொளியாகத் தரணி முழுதுமாம் ஓரொளியாகிய காலொளிகாணுமே.

காலோடு உயிரும் கலக்கும் வகைசொல்லின் காலது அக்கொடி நாயகி தன்னுடன்

காலது ஐஞ்ஞூற்று ஒருபத்து மூன்றையும் காலது வேண்டிக் கொண்ட இவ்வாறே.

ஆறதுவாகும் அமிர்தத் தலையினுள் ஆறது ஆயிரம் முந்நூற்றொடு ஐஞ்சுள

ஆறது ஆயிரம் ஆகும் அருவழி ஆறதுவாக வளர்ப்பது இரண்டே.

இரண்டினில் மேலே சதாசிவநாயகி இரண்டது கால்கொண்டு எழுவகை சொல்லில்

இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய் திரண்டத காலம் எடுத்ததும் அஞ்சே.

அஞ்சுடன் அஞ்சுமுக முளநாயகி அஞ்சுடன் அஞ்சது ஆயுதமாவது

அஞ்சது அன்றி இரண்டது ஆயிரம் அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே.

மெய்ப்பொருள் காட்சியைக்கண்டால் அவர்களின் புலன்கள் நல்லனவாக ஆகும். எல்லாப் புவனங்களும் போய்வருவர். புவனம் எல்லாம் அகண்ட சோதியாகக் காணும். நாதம் கேட்பர், சக்தி புவனம் எட்டும் காணுவர், அருள் அணுபவம் பெறுவர், தலையில் உள்ள நாடிகள் பலவும் தோன்றும், நாதம் விந்து என்பதை உணர்வர், மனோன்மணியையும் காண்பர், கவிழ்ந்த தாமரைகள் நிமிரக் காணலாம் 72000 நாடி விவரம் உணரலாம். 50 வடமொழி எழுத்தும் இருபது முறை கூற நாத விந்து தோன்றும்.

 

சரீர சித்தி

உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்மை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

உடம்பினை முன்னம்இழுக்கு என்று இருந்தேன் உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யான்இருந்து ஓம்புகின்றேனே.

உயிர்போகாமல், காக்கும் வழி உடம்பு அழியாமல் காக்கும் வழியே, அதனால் உடம்பில் யோகசாதனை செய்தேன். உடம்பு மாயை அன்று. அது இறைவன் இருக்கும் கோவில் என அறிந்து உடம்பை பாதுகாக்கின்றேன்.

கழற்றிக் கொடுக்கவே கத்தி கழியும் கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து

உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு அழற்றித் தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே.

அஞ்சனம் போன்றுடல் ஐஅறும் அந்தியில் வஞ்சகவாதம் அறும்பத்தியானத்தில்

செஞ்சிறுகாலையில் செய்திடில் பித்தறும் நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.

மூலாதாரத்தில் எப்போதும் மனம் வைத்திருந்தால் சிவன் லிங்கத்திலிருப்பதைக் காணலாம். குரு உபதேசமும் கிடைத்ததாகும். நீலநிறமான பைரவியை மனத்தில் பதித்து அதுவே சதம் என்று வேறு நினையாதிருப்பவர்க்கு உலகம் அறிய நரையும் திரையும் மாறிவிடும். இளமையும் பெறுவர். என் குருநாதர் நந்தியின் மேல் ஆணை.

மூன்று மடக்குடைப் பாம்புஇரண்டு எட்டுள ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்

நான்ற இம்முட்டை இரண்டையும் கட்டியிட்டு ஊன்றியிருக்க உடம்பு அழியாதே.

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர நூறும் அறுபதும் ஆறும் இடம்வர

நூறும் அறுபதும் ஆறும் எதிரிட நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.

பிரம்ம விஷ்ணு ருத்திர கிரந்தி முடிச்சுகள் உள்ளன. அவற்றில் 2+8 நாடிகள் உள்ளன, இதை உணரும் துரியம் 12 விரல் பாவனை. விழிகளாகிய இரு முட்டைகளும் பார்த்தும் பாராது இருக்கக்கண்டு உள்முகமாக ஊன்றி இருப்பவர்க்கு உடம்பு அழியாது. கண் திறந்திருக்கும் ஆனால் பார்க்கும் புலனுடன் ஒன்றாது பார்வை இழந்ததால் விழிகளை இருமுட்டை எனலாம். நாள்தோறும் மூன்று வேளையும் சந்தியா காலங்களில் வலமாகவும் இடமாகவும் இவை தமக்குள் மாறி மாறியும் 166+166+166 என பிராணாயாமம் செய்தல்166 ஆண்டுகள் திடத்துடன் வாழலாம்.

சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால் மத்தியானத்திலே வாத்தியம் கேட்கலாம்

தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே.

திறத்திறம் விந்துத் திகழும் அகாரம் உறப்பெறவே நினைந்து ஓதும் சகாரம்

மறிப்பது மந்திரம் மன்னிய நாதம் அறப்பெற யோகிக்கு ஆறநெறியாமே

சக்தி வடிவக் கோயிலாகிய இந்த உடம்பில் இடம் வலம் மாறி மாறி இப்படிச் சாதித்தால் மதியப் பொழுதில்- மார்புப் பகுதியில் நாதம் கேட்கலாம். திருக்கூத்தும் சிவனும் காணலாம். ஹம்+ஸம் எனும் மந்திரத்தை மூச்சை இழுக்கும்போதும் விடும் போதும் சொல்வது நாதத்தை எழுப்பும். இதை உணர்ந்து காண்பது யோகியின் தவப்பயன்.

உந்திச்சுழியின் உடனோர் பிராணனைச் சிந்தித்து எழுப்பிச் சிவமந்திரத்தினால்

முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் சிந்தித்து எழுப்பச் சிவன் அவன் ஆமே.

மாறா மலக்குதம் தன்மேல் இருவிரல் கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்

ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன் கூறா உபதேசம் கொண்டது காணுமே.

சிவமந்திரமாகிய ஹம், ஸம் இரண்டையும் சுவாசத்திற்குப் பயன் படுத்தி உந்தியிலிருந்து பிராணன் எழுவதாகக் கருதவும். மூச்சை உள்ளே இழுக்கும்போது உந்தியுள் நிறைந்து அது பிராணவாயுவாக தோன்றும். மண்ணீரல் சென்று தசவாயுவாகப்பிரியும். அதுவரை கும்பகமாக இருந்த உள்வந்த அபானவாயுவை வெளிவிடுவதாக கருதுக. மூச்சு இழுப்பதால் வருவதும் போவதும் அபானனே. மூலாதாரத்தில் எப்போதும் மனம் வைத்திருந்தால் சிவன் லிங்கத்திலிருப்பதைக் காணலாம்.

நீல நிறனுடை நேரிழையாளொடும் சாலவும் புல்லிச் சதமென்று இருப்பார்க்கு

ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனும் ஆவர் பராநந்தி ஆணையே.

அண்டம் கருங்கில் அதற்கோர் அழிவில்லை பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்

உண்டி சுருங்கில் உபாயம் பலவுள கண்டம் கறுத்த கபாலியும் ஆமே.

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை அண்டத்துள் உற்று அடுத்து அடுத்துஏகிடில்

வண்டுஇச்சிக்கும் மலர்க்குழல் மாதரார் கண்டு இச்சிக்கும் காயமும் ஆமே.

சுழலும் பெரும் கூற்றுத் தொல்லைமுன் சீறி அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்

கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே நிழலுளும் தெற்றுளும் நிற்றலும் ஆமே.

நான் கண்ட வன்னியும் நாலுகலைஏழும் நான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்

ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக மான்கன்று நின்று வளர்கின்ற வாறே.

ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற நீர்கொள நெல்லில் வளர்கின்ற நேர்மையைப்

பாகுபடுத்திப் பலகோடி களத்தினால் ஊழ்கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே.

நீலநிறமான பைரவியை மனத்தில் பதித்து அதுவே சதம் என்று வேறு நினையாதிருப்பவர்க்கு உலகம் அறிய நரையும் திரையும் மாறிவிடும். இளமையும் பெறுவர். என் குருநாதர் நந்தியின் மேல் ஆணை.  குண்டலினி சக்தியுடன் சூரிய சந்திர அக்னி ஆகிய கலையுமாகிய நான்கையும் ஆறு ஆகவும் சகஸ்ராரம் ஆகிய ஏழையும் உடல் முழுவதுமான தச வாயும் இவைகளை அறிந்து இயக்கும் உணர்வினில் அகங்காரம் கொண்ட என் உடலும் உயிரும் வளர்கின்றன. பிறந்த நட்சத்திரம் அதற்கு அடுத்த நட்சத்திரம் அதற்கு எட்டாம் நட்சத்திரம் இவை மூன்றும் இவையோடு ஜன்ம, அனுஜன்ம, ஜன்மானுஜன்ம எனும் திடர் நட்சத்திரங்களும் ஆகியவற்றை நீக்கி மிச்சம் உள்ள நாளில் திருந்திய நாள் கண்டு அதில் யோகம் தொடங்குக.

எடுத்துக்காட்டு:- ஒருவர் அசுவதி என்ற நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் ஜன்மநட்சத்திரம்- அசுவினி, அடுத்த நட்சத்திரம்- பரணி, எட்டாம் நட்சத்திரம்- பூசம் இந்த மூன்றுடன் அனுஜன்ம- மகம் ஜன்மானுஜன்ம மூலம் நட்சத்திரம் ஆகிய ஐந்து நாளும் விட்டு பிறகு ஒரு நல்ல நாளில் யோகம் பயிலலாம்.

நட்சத்திரங்கள் வகைகள் மூன்று 1.ஜன்மநட்சத்திரம்- அசுவதி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை புனர்பூசம், பூசம், ஆயில்யம், 2.அனுஜன்ம நட்சத்திரம்- மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, 3.ஜன்மானுஜன்ம நட்சத்திரம். மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், அதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.

நட்சத்திரம் உடம்பில் நிற்கும் பகுதி

1.ஜன்மநட்சத்திரம்-  

அசுவதி-

இந்திரயோனி-

உள்நாக்கு

2.அடுத்தநட்சத்திரம்- 

பரணி

பிரம்மநாளம் 

உச்சித்தலைத்துவாரம்

3.மூன்றாம்நட்சத்திரம்

கார்த்திகை   

சகஸ்ராரம்

நெற்றிஉச்சி

4.நான்காம்நட்சத்திரம்

ரோகிணி     

ஆக்ஞை     

புருவநடு

5.ஐந்தாம்நட்சத்திரம் 

மிருகசீரிடம் 

விசுத்தி

தொண்டைக்குழி

6.ஆறாம்நட்சத்திரம்  

திருவாதிரை 

அநாதகம்

மார்புநடு

7.ஏழாம்நட்சத்திரம்  

புனர்பூசம்    

தொப்புள்

உந்தி 

8.எட்டாம்நட்சத்திரம் 

பூசம் 

சுவாதிட்டானம்

சிறுநீர்த்துளை

9.ஒன்பதாம்நட்சத்திரம்

ஆயில்யம்   

மூலாதாரம்

 

நாடவல்லார்க்கு நமன் இல்லை கேடுஇல்லை நாடவல்லார்கள் நரபதியாய் நிற்பர்

தேட வல்லார்கள் தெரிந்த பொருள் இது கூட வல்லார்கட்கும் கூறலும் ஆமே.

கூரும் பொருள் இது, அகார உகாரங்கள் தேறும் பொருளிது, சிந்தையுள் நின்றிடக்

கூறும் மகாரம் குழல்வழி ஓடிட ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே.

யோகசாதனையாகிய நாடுதல் செய்ய வல்லார்க்கு யமனும் இல்லை. உடல் கேடும் இல்லை. மனிதர்களில் தலைமை எய்தியவர். தேட நினைப்பவர்கள் ஆய்ந்த பொருள் இதுவே. சாதிக்க இயலாருக்கு இதைச் சொல்ல முடியாது. பிரணவமாகிய ஓம் சுழுமுனையில் நாதமாக ஓடிட அண்ணல் கடவுள் ஆறு ஆதாரங்களிலும் அமர்ந்து அவற்றைமலரச் செய்வார். மூலாதாரத்திலிருந்து கனலும், நெருப்பும், ஓம் எனும் மந்திரமும் சுழுமுனை நாடியில் செல்லும்போது அது விந்து-ஒளியாகவும் நாதம்-ஓசையாகவும் உச்சியில் மலரும். மூலாதாரத்தில் தியானித்து ஓம் என்று சொல்லும் பிரணவம்- ஒலியும் நாதமாக மேலே போவது யோகமுறையில் சிறந்தது. ஓ என்பதை மூலாதாரத்தில் சொல்லி 6 வினாடிக்குள் ம் என்பதை புருவ மத்தியை நினைத்து சொல்ல வேண்டும்.

அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு

அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலைக் காணில் அவன் இவன் ஆமே.

கடவுள் உடலில் இருக்கும் இடம் எது என யாரும் அறியவில்லை, ஆய்ந்து தெரிந்தவர்களுக்கு கடவுள் உள்ளே இருப்பதைக் காணலாம். அவர் கடவுள் தன்மை பெற்றவர் ஆவர்.

அவனிவன் ஆகும் பரிசு அறிவாரில்லை அவனிவன் ஆகும் பரிசது கேள்நீ

அவனிவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும் அவனிவன் வட்ட மாதாகி நின்றானே.

வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர்

ஒட்டி இருந்துள் உபாயம் உணர்திடக் கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே

காணலும் ஆகும் பிரமன் அரியென்று காணலும் ஆகும் கறைக்கண்டன் ஈசனைக்

காணலும் ஆகும் சதாசிவ அக்தியும் காணலும் ஆகும் கலந்துடன் வைத்தே.

ஒரேகடவுள் ஐந்து வடிவாய் உடலில் பிரிந்து நிற்பதையும் யோகத்தால் காணலாம். மும்மூர்த்திகள், மகேஸ்வரன், சதாசிவம் என்ற ஐவர். யோக சாதனையால் தச நாதங்கள் ஓசை கேட்கப் பெற்றோர் கடவுளை உடலில் உணர்வர்.

 

கேசரி யோகம்

கேசரி- சிங்கம், கேசரர்- ஆகாயத்தில் திரிபவர். கேசரி என்பது ஆகாயத்தைக் காண்பது என்பது பொருளாகும்.

கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல் அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி

விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து நட்டம் இருக்க நமனில்லை தானே.

வண்ணான் ஒலிக்கும் சதுரப் பலகைமேல் கண்ணாறு மோழை படாமல் கரைகட்டி

விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால் அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.

உயிர் உணர்வை ஆகாயத்தில் நிறுத்தி துரியதானத்தைப் போக்குவது போல் புருவ மத்தியை நோக்கி கும்பகத்தில் மூச்சு கீழே போகாதபடி வச்சிராசனத்தில் அமர்ந்து உண்ணாக்கை நாக்கு நுனியால் அடைக்க முயன்று சூன்யத்தில் இறைவனைக் காண்க.துணிவெளுப்பவர் கல்லில் துணியை மோதி அழுக்கை நீக்குவது போல நெற்றியாகிய சதுரப் பாறையில் நாதத்தை மோதவிட்டு சந்திரமண்டலத்தில் அமுது துளிர்க்கவைத்து அண்ணாந்து பார்க்கும் பார்வையுடன் வெளியைப் போக்க ஆணவ மல அழுக்கு நீங்கும்.

ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல் வானூறல் பாயும் வகையறிவார் இல்லை

வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத் தேனூறல் உண்டு தெளிதலும் ஆமே.

மேலை அண்ணாவின் விரைந்து இரு காலிடில் காலனும் இல்லை கதவும் திறந்திடும்

ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனும் ஆவான் பாராநந்தி ஆணையே.

ஆயிரம் இதழ் தாமரை- சகஸ்ராரம் அறிந்து யோக அனுபவம் செய்பவருக்கு பிரப்ஞ்ச அறிவு கிடைக்கும். உண்ணாக்கு வழியே உணர்வு செல்லத் தொடங்கினால் நரைதிரை இல்லை. இளமை பெறலாம். இது குருநாதர் ஆணை.

நாவின் நுனியை நடுவே விசிறிடில் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்

மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர் சாவதும் இல்லை சதகோடி ஊனே

நாவை நடுவில் பின்புறம் செல்லுமாறு மடித்து அதன் நுனியை மேல் அண்ணத்தில் விசிறி நிற்குமாறு செய்து உண்ணாக்கை நெருங்க வைப்பது- இது முத்திரையாகும். சீவாத்மா, சிவன், மும்மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோரைக் காணலாம்.சதகோடி- எண்ணற்ற ஆயுள் காலமாதலால் உடல் அழியாது.

ஊனீர் வழியாக உண்ணாவை ஏறிட்டுத் தேனீர் பருகிச் சிவாய நமவென்று

கானீர் வரும்வழி கங்கை தெருவிக்கும் வானீர் வரும்வழி வாய்ந்தறிவீரே.

உண்ணாக்கை- இந்திரயோனி நோக்கி நாவை மடித்துச் சிவாயநம என்று ஜபம் செய்தால் அமுதகங்கை ஊறும், தேவர் போகும் வழியாகிய இந்திரயோனியிலிருந்து உணர்வைச் உச்சித்தலையில் உள்ள பிரம்ம நாடிக்குச் செலுத்துதல்.

இருந்த அப்பிராணனும் உள்ளே எழுமாம் பரிந்த அத்தண்டுடன் அண்டம் பரிய

இருந்த அப்பூவுடன் மேல் எழ வைக்கின் மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே.

உடம்பின் உள்ளிருந்து புறப்படும் பிராணவாயுவைச் சுழுமுனையாகிய தண்டுடன் செலுத்தித் தலையாகிய அண்டத்தில் செல்லுமாறு அனுப்பினால் ஆயிரம் இதழ்த் தாமரையாகிய சகஸ்ராரம் மலர்ந்து நிமிரும் உடம்பு ஒளி பெறும். உயிர் பிரியாது நிற்கும்.

சொல்லலும் ஆயிடும் மாகத்து வாயுவும் சொல்லலும் ஆகும் அனல்நீர்க் கடினமும்

சொல்லலும் ஆகும் இவை அஞ்சும் கூடிடில் சொல்லலும் ஆம் தூர தெரிசனந்தானே.

ஐம்பூத ஆதாரங்கள் ஐந்தையும் நெருக்கிக் கும்பகம் செய்தால் தூரத்தில் நடப்பதை அறியும் சக்தி உண்டாகும்.

முன் எழு நாபிக்கு முந்நால் விரல்கீழ் பன் எழு வேதம் பகல் ஒளி உண்டு என்னும்

நன் எழு நாதத்து நல்தீபம் வைத்திட தன் எழு கோயில் தலைவனும் ஆமே.

தொப்புளுக்கு கீழே பன்னிரண்டு விரல் அளவில் பல வெதங்களூம் கூறும் ஞானமும் பகல் போல் ஒளியும் கொண்ட மூலாதாரம் உள்ளது. அங்கே எழுப்பப்படும் நல்ல ஓசை ஒளியுடையதாக மாறிச் சுழுமுனையில் செல்லும் ஏழு ஆதாரங்களிலும் அதற்குரிய தலைவர்கள் தோன்ற அவை நிமிரும்.

பரியங்க யோகம்

பரியங்கம்- காட்டில் கட்டிலில் மனைவியுடன் கணவன் கொள்ளும் புணர்ச்சி இன்பத்தையே யோகமாக ஆக்குவது.

பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய வாச நறுங்குழல் மாலையும் சாத்திக்

காயக் குழலி கலவியோடுங் கலந்து ஊசித் துளையுறத் தூங்காது போகமே.

போதத்தை யுன்னவே போகாது வாயுவும் மோகத்தை வெள்ளியும் மீளும் வியாழத்தில்

சூது ஒத்த மென்முலையாலும் நற்சூதனும் தாதிற் குழைந்து தலை கண்டவாறே.

தம்மை ஒப்பனை செய்து கொண்டு மனைவியுடன் புணர்வோர் தம் கருத்தைச் சுழுமுனையாகிய முலாதாரத்தில் உள்ள ஊசித் துளையிலோ தலையில் உள்ள துளையிலோ வைத்திருந்தால் போகம் தளராது. புணர்ச்சியில் ஈடுபடும் இருவரும் புணர்ச்சியின் பயனாயச் சிவனும் சக்தியும் தம் சிரசில் இணைவதாகக் கருதினால் விந்து வெளியாகாது. கருமுட்டையும் வராது. போகம் நீளும்.

கண்டனும் கண்டியும் காதல்செய் யோகத்து மண்டலம் கொண்டு இருபாலும் வெளி நிற்கும்

வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத் தண்டொரு காலும் தளராது அங்கமே.

அங்கு அப்புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம் அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்

பங்கப் படாமல் பரிகரித்துத் தம்மைத் தங்கிக் கொடுக்கத் தலைவனும் ஆமே.

போகம் செய்யும் போது இடை, பிங்கலை இரண்டிலும் காற்று மிகுந்து செல்லும். இதை உச்சியில் வண்டு போல் கொண்டு செல்ல சந்திர மண்டல நீர் புறப்படும். அப்போது ஆண்குறி தளராது. விந்து வரும் போல் உணர்வு வந்தால் உடனே தாமதித்து உணர்வும் பிராணாயமும் செய்தால் விந்து வெளியாகும் உணர்வு மாறும். தலைவனும் ஆகலாம். பெண்களுக்கு உச்ச கட்டம் நாள்தோறும் மூன்று முறை. ஆண்களூக்கு விந்து வெளிப்படும் ஒரு முறை மட்டுமே ஆகும். ஆகையால் புணர்ச்சியை வேகப்படுத்தாமல் நிறுத்தித் தாமதித்துக் கொடுக்க வேண்டும்.

தலைவனும் ஆயிடும் தன்வழி ஞானம் தலைவனும் ஆயிடும் தன்வழி போகம்

தலைவனும் ஆயிடும் தன்வழி யுள்ளே தலைவனும் ஆயிடும் தன்வழி அஞ்சே.

அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில் துஞ்சுவது ஒன்றத் துணைவி துணைவன்பால்

நெஞ்சு நிறைந்தது வாய்கொளாது என்றது பஞ்ச கடிகை பரியங்க யோகமே.

ஐந்து விநாடி ஆண் மகன் விந்து விடாது செயற்பட முடியும். ஆறாம் விநாடியில் பெண் உறக்கம் கொள்ளுமளவு தளர்வாள். ஆனால் இருவரும் இக்கலவியில் இன்பம் அடைந்திருப்பர்.

ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும் வாய்ந்த குழலிக்கும் மன்னர்க்கும் ஆனந்தம்

வாய்ந்த குழலியோடு ஐந்து மலர்ந்திடச் சோர்ந்தன சித்தமும் சோர்வில்லை வெள்ளிக்கே,

வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே கள்ளத்தட்டானார் கரியிட்டு மூடினார்

கொள்ளி பறியக் குழல்வழியே சென்று வள்ளியுண்ணாவில் அடக்கிவைத்தாரே.

கணவனுக்கு முப்பதும், மனைவிக்கு இருபதும் ஆகிய வயது இதற்குப் பொருந்தலாம். இதனால் சிவானந்தம் பெறுவர். வெள்ளி- யாகிய சுக்கிரன், விந்து- சுக்கிலம் உருகி, வியாழன்- பொன் ஆகிய கருமுட்டைக்குள் ஓடியே கள்ளத்தனமான பொற்கொல்லர் கரியை இட்டு மூடினார். சூழுமுனையில் விந்து நாதம் புறப்படுவதையோ, உண்ணாக்கை நோக்கி நாவை மடித்து விசிறுவதனாலேயோ இது நடக்கும்.

வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்துடன் சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம்

பத்துவகைக்கும் பதினெண் கணத்துக்கும் வித்தகனாய் நிற்கும் வெங்கதிரோனே.

வெங்கதிருக்கும் சனிக்கும் இடைநின்ற நங்கையைப் புல்லிய நம்பிக்கோர் ஆனந்தம்

தங்களிற் பொன்னிடை வெள்ளிதாழாமுனம் திங்களிற் செவ்வாய் புதைந்திருந்தாரே.

வியாழனாகிய பொன் பெண் கருவில், விந்தாகிய- வெள்ளி ஆணின் சாரம் விழாமல், திங்களில் சந்திர மண்டலத்தில் தலைக்குள் செவ்வாயில் ஒலிப்பது போலும் நாதத்தைச் சுழுமுனை மூலம் அனுப்பினால் காக்கலாம்.

எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால் மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே

உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின் விழுகின்ற தில்லை வெளியறிவார்க்கே.

வெளியை அறிந்து வெளியின் நடுவே ஒளியை அறியின் உளிமுறியாமே

தெளிவை அறிந்து செழுநந்தியாலே வெளியை அறிந்தனன் மேலறியேனே.

உள் ஒளியையும் வெளியையும் அறிபவர்க்கு கலவி இன்பம் மட்டும் நீளூம். விந்து வீழாது.

மின்னிடையாளும் மின்னாளனும் கூட்டத்துப் பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப் பெய்து தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லாரேல் மண்ணிடைப் பல்லூழி வாழலும் ஆமே.

வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய வீங்க வலிக்கும் விரகு அறிவார் இல்லை

வீங்க வலிக்கும் விரகறிவாளரும் ஓங்கிய தன்னை உதம்பண்ணினாரே.

புணர்ச்சி வேகத்தை இடையில் குறைத்தால் தளர்ச்சி உறுமே என அறியார் கூறுவர். தளராது வீங்க வைக்கும் திறம் அறிந்தவர் இதைச் செய்வர். விந்துவை வெளிவிடாமல் சுழுமுனை நாடியில் ஒளியும் ஒலியும் ஏற்றினால் அது ஊர்த்துவ ரேதசாக மாறும். ஊர்த்துவம் – மேல் ஏறுதல். ஒலியை ஒளியாக மாற்றுவது ரேதஸ் ஆகும். ஆண்குறியில் சுழுமுனை நாடி தொடர்பு கொண்டிருப்பதால் ஊர்த்துவமாக்கும்போது குறி தண்டு தளராது. ரேதஸும் உண்டாகும்.

 

அமுரி தாரணை

பிராணசக்தி, காந்த சக்தி முதலியவை சிறிது நேரம் சிறுநீரில் உள்ளது. தொழுநோய் உட்பட பலநோயினர் சிறுநீர் மருத்துவம் செய்து கொள்கின்றனர். மாடுகளின் கால் நடுவே உண்டாகும் கோமாரி நோய்க்கு மாட்டுச் சிறுநீர் மருந்தாகும். தாய் குழந்தை பெற்றதும் பத்தியம் கருதி குழந்தையின் சிறுநீர் குடிப்பது வழக்கம். பெற்றோரின் பால்வினை நோயால் குழந்தைக்கு தோன்றும் செங்கிரந்தி, கருங்கிரந்தி எனும் படை நோய்க்கு குழந்தையின் சிறுநீரால் கழுவினால் ஒருவாரத்தில் குணம். தேமல் முகப்பரு ஆகியவற்றிற்கு சிறுநீர் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளித்தலே மருந்து.

உடலில் கிடந்த உறுதிக் குடிநீர் கடலில் சிறுகிணறு ஏற்றம் இடல் ஒக்கும்

முடிவில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கின் நடலைப் படாது உயிர் நாடலும் ஆமே.

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில் ஒளிதரும் ஓராண்டில் ஊனம் ஒன்று இல்லை

வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும் களிதரும் காயம் கனகமது ஆமே.

உடலில் இருக்கும் இது உறுதி தரும் குடிநீராகும். கடலில் கிணறு தோண்டினால் உப்புக் கரிப்பதுபோல் இதுவும் கரிக்கும். முடிவான மருந்தாகையால் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளும் தரும் நீர் சிறுநீராகும்.

நூறு மிளகு நுகரும் சிவத்தின் நீர் மாறும் இதற்கு மருந்து இல்லை மாந்தர்காள்

தேறில் இதனைக் தெளி உச்சிக்கு அப்பிடின் மாறும் இதற்கு மறுமயிர் ஆமே.

கரையருகே நின்ற கானல் உவரி வரைவரை என்பர் மதியிலா மாந்தர்

நுரைதிரை நீக்கி நுகரவல்லார்க்கு நரைதிரை மாறும் நமனும் அங்கில்லையே.

சிறுநீரே சிவநீர். இதை உண்ணும் அளவு 100 மிளகை உள்ளங்கையில் நிறைக்கும் அளவு ஆகும். இதற்கு நிகரான மருந்து இல்லை. இதைத் தெரிவு செய்து உச்சித் தலையில் அப்பினால் புதிய மயிர் முளைக்கும் நரை மாறும். குளிப்பதற்கு முன் தலையில் தடவிச் சிறீது நேரம் கழித்துக் குளிக்கவும். விந்துவை ருத்ர பிந்து என்று வேதம் குறிக்கின்றது. சிறுநீர் சிவநீர் எனப்பட்டது.

கடல்போலும் உடல் அருகே நின்று அதில் கிடைக்கும் உப்பு நீரைக் கை விடுக கை விடுக என அறிவில்லா மனிதர்கள் தடுப்பர். நுரையும் அழுக்கும் நீக்கிக் குடிக்க வல்லார்க்கு நரைத்தல், உடல் தோல் சுருங்குதல், யமன் வருதல் இல்லை. நுரை திரை நீக்குவது என்பது வெளிவரும் சிறுநீரை முன்வருவதையும் பின்வருவதையும் விடுத்து நடுவில் உள்ளதைப் பிடித்து அதில் 100 மிளகு அளவு எனக்கொள்க.

அளக நன்னுதலாய் ஓர் அதிசயம் களவு காயம் கலந்த இந்நீரிலே

மிளகும் நெல்லியும் மஞ்சளும் வேம்பும் இடில் இளகும் மேனி இருளும் கபாலமே

வீர மருந்து என்றும் விண்னோர் மருந்து என்றும் நாரி மருந்து என்றும் நந்தி அருள்செய்தான்

நாரிமருந்து என்று அறிவார் அகலிடம் சேரா மருந்து இது சொல்ல ஒண்ணாதே.

உடம்பில் உள்ள சில தாதுக்களைக் கரைத்து கலந்துவரும் இந்நீரில் மிளகு, நெல்லிக்காய், மஞ்சள், வேப்பிலை ஆகிய பொடியையும் கலந்து குடித்தால் உடம்பு பளபளக்கும். தலைமயிர் கருக்கும். வீரியம் மிகுந்த மருந்து என்றும், விண்ணில் உள்ளசக்திகளால் உருவான மருந்து என்றும், மாயா சக்தியால் விளைந்த மருந்து என்றும், உலகில் வேறு எங்கும் கிடைக்காத மருந்து என்றும், இதன் பெருமையை சொல்லவும் இயலாது என நந்தியாகிய குருநாதர் கூறினார்.

 

சந்திரயோகம்

எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே எய்துவ தூலம், இருவகைப் பத்துக்கள்

எய்தும் கலையேபோல் ஏறி இறங்குமாம் துய்யது சூக்கத்துக் காலத்தே காயமே.

ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள் ஆகின்ற ஈரெட்டொடு ஆறு இராண்டு ஈரைந்துள்

ஏகின்ற அக்கலை எல்லாம் இடைவழி ஆகின்ற யோகி அறிந்த அறிவே.

ஆறாற தங்கலை ஆதித்தன் சந்திரன் நாறா நலங்கினார் ஞாலம் கவர்கொளப்

பேறாங் கலை முற்றும் பெருங்கால் ஈரெட்டு மாறாக் கதிர் கொள்ளும் மற்றங்கிகூடவே.

சந்திரக்கலை சூக்கும உடம்பில் ஏறி தூல உடம்பை அடையும். இரு பட்சங்களிலும் உள்ளது போல் கலையின் அளவு குறைந்தும் மிகுந்தும் காணப்படும். சூக்கும உடம்பில் எய்தும் காலமே சிறந்தது. சந்திர நாடியில் இடா ஓடுவது சந்திரகலை. சூரிய நாடியில் பிங்களா ஓடுவது சூரியகலை. சுழுமுனை அக்னி நாடியில் ஓடுவது அக்னிக் கலை.

பெண்மையும் குளிர்ச்சியும் வெள்ளையும் ஆகிய இயல்புகள் கொண்டு இடது மூக்கால் இழுப்பது இடாநாடி சந்திரநாடி எனப்பட்டது. வெப்பமும், ஆண்மையும் ஆகிய இயல்புகள் கொண்டு வலது மூக்கால் இழுப்பது பிங்களா நாடி சூரிய நாடி எனப்பட்டது. அக்னியாகிய குண்டலினி ஏறுவதால் சுழுமுனை நாடி அக்னி நாடி எனப்பட்டது. நாடிகளில் காற்றுப் போவது தூலம். அதன் இயக்கம் சூக்குமம். இடாநாடி. பிங்களா நாடி என உடலால் அறியப்படுவதால் தூலமாகும். எல்லா ஆதாரங்களிலும் வளைந்து பின்னி உச்சியில் ஏறுவதை உடலால் அறிய முடியாது. உணர்வால் மட்டும் அறிய முடியும். எனவே இது சூக்குமம்.

சந்திரக்கலை 16, சூரியகலை 12, அக்னிக்கலை 10. நாடி தொடங்கும் இடம் முதலாக முடியும் இடம் வரை உள்ள இடைவழியில் அக்கலைகள் செல்வது யோகியால் உணர்வினால் அறியக்கூடிய அறிவாக இருக்கும். கலை என்பது ஓர் கால அளவு. ஒலியை இக்காலத்தில் துடிப்புகள் மூலம் அளந்து அலை வரிசை காண்பது போல் காண்க. மூவகை நாடிகளிலும் செல்லும் நாத விந்துக்களின் கால அளவே இது. தொடங்கி முடிவதற்குள் ஓவ்வொரு நாடிக்கும் வேகங்கள் வேறுபடுவதை காட்டும்.

பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை பத்தினொடு ஆறும் உயர்கலை பான்மதி

ஒத்தநல் அங்கியது எட்டெட்டு உயர்கலை அத்திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே.

எட்டு எட்டு அனலின் கலையாகும் ஈராறுள் சுட்டுப் படும் கதி ரோனுக்கும் சூழ்கலை

கட்டப்படும் ஈர் எட்டாம் மதிக்கலை ஒட்டப்படா இவை ஒன்றோடு ஒன்று ஆவே.

சூரியனுக்குப் பன்னிரண்டும், சந்திரனுக்குப் பதினாறும், அல்லாமல் அக்னிக்கு அறுபத்து நான்கும் சொல்லப்படும் கலைகள். தனியே சொன்னால் 10 கலைகளும், குண்டலினியோடு சொல்லும்போது 64 கலைகளும் அக்னி நாடிக்கு உரியவை ஆகும். இவை யவும் தனிக் கலைகள். ஒன்றோடு ஒன்று ஒட்டமாட்டாது.

எட்டு எட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர் கட்டிட்ட சோமனில் தோன்றும் கலை என்ப

கட்டப்படும் தாரகைக் கதிர் நூல் நால் உள கட்டிட்ட தொண்ணூற்றொரு ஆறும் கலாதியே.

எல்லா கலையும் இடைபிங்கலை நடு சொல்லா நடுநாடி ஊடே தொடர் மூலம்

சொல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால் நல்லார் திருவடி நண்ணி நிற்பரே.

சூரியகலை12+ சந்திரகலை 16+ அக்னிக்கலை 64+ நட்சத்திரக்கலை 4=96 கலைகள் என்க. துரிய நிலையில் பிரணவம் முதலியன ஒலிக்கப்படாமல் இருந்து பாவிக்கும்போது நான்கு கலைகள் உண்டாகையால் அது தாரகை நட்சத்திரக்கலை எனப்படும். மூலாதாரத்தில் மூன்று நாடிகளிலும் செல்லும்படி எழுப்பி தலைவரையில் செல்லுமாறு சேர்த்தலால் ஆயிரம் இதழ் தாமரையில் நல்லோர் (குருபாதமாகிய சகஸ்ராரம்-க்கும் ஆக்ஞாவிற்கும் நடுவில் இருக்கும் குருவின்) திருவடியை அடைவர்.

அங்கியில் சின்னக் கதிர் இரண்டு ஆட்டத்துத் தங்கிய தாரகை யாகும் சசிபானு

வங்கிய தாரகை யாகும் பரையொளி தங்கு நவசக்ரம் ஆகும் தரணிக்கே.

தரணி சலங்கனல் கால்தக்க வானம் அரணிய பானு அருந்திங்கள் அங்கி

முரணிய தாரகை மின்னிய ஒன்பான் பிரணவ மாகும் பெருநெறி தானே.

அக்னி கலையிலிருந்து இரண்டும், சூர்ய, சந்திர கலைகளில் இருந்து ஒவ்வொன்றும் ஆக நான்கும் செல்வதே தாரகைக் கலை. நான்கு நட்சத்திரக் கலைகள் துரியத்தில் தோன்றுவது இதுவே. இதனால் ஐம்பூத மண்டலம் ஐந்தும், சூரிய, சந்திர, அக்னி, நட்சத்திர மண்டலம் நான்கும் நவக்கிரக மண்டலம் ஆகும்.

தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத் தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்

தாரகை பூவிற் சகலத்து யோனிகள் தாரகை தாரகை தானாம் சொரூபமே.

முற்பதின் ஐஞ்சில் முளைத்துப் பெருத்திடும் பிற்பதின் ஐஞ்சில்பெருத்துச் சிறுத்திடும்

அப்பதின் ஐஞ்சும் அறிய வல்லார்கட்குச் செப்பரியான் கழல் சேர்தலும் ஆமே.

அங்கி எழுப்பி அருங்கதிர் ஊட்டத்துத் தங்கும் சசியால்தாமம் ஐந்து ஐந்தாகிப்

பொங்கிய தாரகையாம் புலன் போக்கறத் திங்கள் கதிர் அங்கி சேர்கின்ற யோகமே.

தேய்பிறையில் தாரகைக் கலைகள் மிகவும் ஒளிரும். வளர்பிறையில் அவை ஓளிர்வது குறையும். இவ்வுலகிலிருக்கும் தாரகை ஒளிரும் போது தம் ஆத்ம சொரூபம் தெரியும். வளர் பிறையில் அப்பிறை முளைத்துப் பருப்பது போலவும், தேய்பிறையில் பெரியதாயிருப்பது தேய்ந்து சிறியதாவது போலவும் சந்திரக்கலைகளில் ஒளியும் கூடிக் குறையும். இதனை அறிந்தவர் இறைவன் திருவடியை சேர்வது உறுதி. இந்நாடிகளில் இக்கலைகள் கூடும்போது புலன்கள் பொறிகளுக்குத் துணையாக நில்லாது தனித்து நிற்கும். இம்மூன்று ஒளியும் சேர்வதே இந்தச் சந்திரயோகம் ஆகும்.

அங்கி மதிகூட ஆகும் கதிர் ஒளி அங்கி கதிர்கூட ஆகும் மதிஒளி

அங்கி சசிகதிர்கூட அத்தாரகை தங்கியதுவே சகலமும் ஆமே.

ஈராறு பெண்கலை எண்ணிரண்டு ஆண்கலை பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து

நேராகத் தோன்றும் நெருப்புறவே பெய்யில் ஆராத ஆனந்தம் ஆனதே.

நெருப்புக் கலையுடன் சந்திரன் கூடும் போது சூரியக் கலை மிகவும் ஒளிரும். அதுபோல் நெருப்புடன் சூரியன் கூடும்போது சந்திரக்கலை மிகவும் ஒளிரும். நெருப்புடன் இரு கலையும் கூடத் தாரகைக் கலை மிக ஒளிரும். அதுவே எல்லாம் உணர்த்தும். ஆணாகிய சூரியக்கலையும், பெண்ணாகிய சந்திரக்கலையும், அக்னிக் கலையில் பெருந்தச் செய்தால் வாராத ஆனந்தம் வரும்.

காணும் பரிதியின் காலை இடத்திட்டு மாணும் மதியதன் காலை வலத்திட்டு

பேணியே இவ்வாறு பிழையாமல் செய்விரேல் ஆணி கலங்காது அவ்வாயிரத்து ஆண்டே

பாலிக்கும் நெஞ்சம் பறைஓசை ஒன்பதில் ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்

மேலைக்கு முன்னே விளக்கொளியாய் நிற்கும் காலைக்குச் சங்கு கதிரவன் தானே.

கதிரவன் சந்திரன் காலம் அளக்கும் பொதிரவன் உள்ளே பொழிமழை நிற்கும்

அதிரவன் அண்டப் புறஞ்சென்று அடர்ப்ப எதிரவன் ஈசன் இடமது தானே.

இடது மூக்கில் சுவாசம் செய்தால் சந்திரக்கலையும், வலது மூக்கில் சுவாசம் செய்தால் சூரியக்கலையும் மூலாக்னியைத் தியானிக்கும்பாது அக்னிக்கலையும் ஏறும். இடது மூக்கில் இழுத்து வலது மூக்கில் விடல், வலது மூக்கில் இழுத்து இடது மூக்கில் விடல் ஆகிய எதிர் எதிர் செய்கை செய்து தவறாமல் பயிற்சி செய்தால் நீண்ட ஆயுட்காலம் வாழலாம். ஒன்பது துவாரங்களிலும் பறை ஓசை துல்லியமாகக் கேட்கும். அங்கே தேவர் தலைவனாகிய பரம்பொருள் நம்மைத் தழுவுவதற்குக் காத்து நிற்பான். தலைமேல் விளக்கு ஒளி காண்பதற்கு முன்பே நாடிகளில் அது தெரியும். காலை நேரத்தில் சங்கு ஒலியும் கேட்கும். ஈசன் இடம் அதுவே.

உந்திக் கமலத்து உதித்தெழும் சோதியை அந்திக்கு மந்திரம் ஆரும் அறிகிலார்

அந்திக்கு மந்திரம் ஆரும் அறிந்தபின் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே.

ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும் ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்

ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லரேல் வேதியன் அங்கே வெளிப்படும் தானே.

மணிபூரகத்தில் இருந்து மேல் எழும்பும் ஒலியைத் தரிசிக்கும் மந்திரத்தைப் பலர் அறியவில்லை. அது மகனாகிய ஆத்மா தந்தையாகிய கடவுள் தன்மையுடன் விளங்கும். ஓம் எனும் மந்திரத்தை மூலாதாரத்திலிருந்து சொல்வதற்குப் பதிலாக தொப்புளிலிருந்து சொல்வதாகும். வாழ்வின் ஊதியமாகிய உறுதிப்பொருளை அறியாதவர் சொன்னாலும் பிறர் ஓதியவற்றை உணரும் ஆற்றல் இல்லாத ஊமர்கள் இதைச் சொன்னாலும் தொடக்கம் முடிவு அறிந்து சொல்ல வல்லவர் ஆயின் வேத முதலான கடவுள் அங்கே வெளிப்படுவான்.

பாம்பு மதியைத்தினல் உறும், பாம்பினைத் தீங்கு கதிரையும் சேரத்தினல் உறும்

பாம்பும் மதியும் பகைதீர்த்து உடன்கொளின் நீங்கல் கொடான் எம்நெடும் தகையானே.

அயின்றது வீழ்வளவும் துயில் இன்றிப் பயின்ற சகிவீழ் பொழுதில் துயின்று

நயந்தரு பூரணை உள்ள நடத்தி வியந்தரு பூரணை மேவும் சசியே.

குண்டலினியும் மேல் ஏறத் தயாராய் இருக்கும்போது இடை பிங்கலை நாடிகள் குண்டலினிக்கு கட்டுப்பட்டு நாதம் எழப்பாமல் போகலாம். எனவே மணிபூரகத்தில் பிரணவம் செய்க. குண்டலினியை நிறுத்திய பிறகே மூலாதாரத்தில் பிரணவம் சொல்ல வேண்டும், அல்லது பிரணவத்தை நிறுத்திக் குண்டலினியை மட்டும் ஏறச் செய்ய வேண்டும். உணவு செரிக்கும் வரையில் உறங்காது இருந்து சந்திரன் அடங்கியதும் உறங்கவும். பவுர்ணமியில் முழுவதும் யோகம் செய்யவும்,

சசி உதிக்கும் அளவும் துயிலின்றிச் சசி உதித்தானேல் தனது ஊண் அருந்திச்

சசி சரிக்கின்றளவும் துயிலாமல் சசி சரிப்பின் கட்டன் கண்துயில் கொண்டதே

ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள் நாழிகையாக் நமனை அளப்பார்கள்

ஊழி முதலாய் உயர்வார் உலகினில் தாழ வல்லார் இச்சசி வன்னராமே.

இது சந்திரக்கலையை வளரச் செய்யும். உடம்பில் சந்திரோதயம், அத்தமனம் அறிந்து இப்படி நடக்க வெண்டுமென்று கூறுகிறது. ஊழிகள் பலவற்றிலும் பிரியாது உயிருடன் வாழும் யோகிகள் ஒவ்வொரு நாழியிலும் நமன் வர முடியாதபடி அவன் ஆற்றலைத் தம் வலிமையால் அளந்து தடுப்பர், ஊழி முதலாகிய கடவுள் உயர்வர். உலகில் யார்க்கும் தாழ்வாக மாட்டார்கள். இவரே சைவர் என சிவத்தோடு இணைத்து பேசப்படுவார்.

அமுதப் புனல்வரும் ஆற்றங்கரைமேல் குமிழில் கலைச்சுடர் ஐந்தையும் கூட்டி சமை

அத்தண்டு ஒட்டித் தரிக்க வல்லார்க்கு நமன் இல்லை நரகு இல்லை நாள் இல்லைதானே,

சூரிய சந்திர அக்னி கலைகளுடன் சிவகலை, சக்திகலை ஆகிய ஐந்து கலைகளும் தலை உச்சியில் அமுதம் ஊறி அது வரும் ஆற்றங்கரையாகிய சுழுமுனை நாடி வழியாக முதுகு தண்டின் வழியே ஒழுகச் செய்து உடல் முழுவதும் அதைப் பரவச் செய்யும் யோகிக்கு யமன் இல்லை. நரகம் இல்லை. நாள் வரயரையும் இல்லை.

ஓர் எழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி ஈர் எழுத்தாலே இசைந்து அங்கு இருவர் ஆய்

மூ எழுத்தாலே முளைக்கின்ற சோதியை மா எழுத்தாலே மயக்கமே உற்றதே.

முயற்சி இன்றி தானே வாயைத் திறந்தால் தோன்றும் ஓர் எழுத்து- அ, இதழ்களை குவிக்கும் முயற்சியால் தோன்றுவது ஈர் எழுத்து- உ, இதழ்களை மூடிவிடும் முயற்சியால் தோன்றுவது மூ எழுத்து- ம், இது மூன்றும் சேர்ந்து ஓம். இது தோன்றுதல், வளர்தல், முடிதல் ஆகிய தொழில்களையும் அவற்றுக்குரிய மும்மூர்த்திகளையும் பிரணவம் சொல்லுகிறது. அ-சிவம்- தானே உலகெங்கும் ப்ரபஞ்சம்- பிரம்மம் நிறைந்துள்ளது, உ-சக்தி- அதிலிருந்தே செயல் பொருளாக சக்தி உண்டாகிறது, ம்- மந்திரம்- ஓம் சொல்லச் சொல்ல புருவ நடுவில் நாத விந்து சோதி தோன்றுகிறது. மாயை ஆகிய ஆணவ மல எழுச்சியில் மயங்கி பிறர் இதை அறியாமல் உள்ளனர்.

 

திருஅம்பலம்

தேவர் உறைகின்ற சிற்றம்பலம் என்றும் தேவர் உறைகின்ற சிதம்பரமே என்று

தேவர் உறைகின்ற திருவம்பலம் என்றும் தேவர் உறைகின்ற தென்பொதுவாமே

ஆமேபொன்னம்பலம் அற்புதம் ஆனந்தம் ஆமே திருக்கூத்து அனவரத தாண்டவம்

ஆமே பிரளயம் ஆகும் அத்தாண்டவம் ஆமே சங்காரத்து அரும் தாண்டவங்களே.

இறைவன் சிறிய அம்பலம் எனவும், சித்தமாகிய அம்பலம் எனவும், தெய்வீகமான அம்பலம் எனவும் பிரபஞ்சம் முழுவதற்கும் இது பொதுவானது. தலைப் பகுதியும் புருவ நடுவும் அம்பலம் எனலாம். அதிலிருந்து மார்பு நடுவகிய அம்பலம் என்பதயே தென்பொது எனப்பட்டது. தலை வடக்கு என்றால் அதன் கீழ் பகுதி தெற்கு என கொள்க. சித்மாகிய ஆகாசம் சித்காசம், நுண்ணிய பரகாயம், தகர ஆகாயம், தகராலாயம் இது பொன் நிறமாதலால் பொன்னம்பலம் எனவும் நடராசர் நடன மூர்த்தியாக கொள்க. உடம்பில் இப்பொன்னம்பலத்தை தியானித்து அற்புதக் காட்சி கண்டு ஆனந்தம் அடைவீர். படைப்பின் அற்புதம் நிகழ்ந்து அது நிலைப்பதால் உயிர்களிடம் ஆனந்தம் பெருகிவரச் செய்து என்றும் ஓயாத அனவரதம் அந்த திரு நடனத்தினாலேயே ஆகும். தாண்டவம்-கூத்து, நடனம். ஊழிக்காலப் பேரழிவு- பிரளயம், உலகில் அழிந்து அழிந்து தோன்றும் மாற்றங்கள்- சங்காரம்

 

திருஅம்பலச் சக்கரம்

திருவம்பலம் ஆகச் சீர்சக்கரத்தைத் திருவம்பலமாக ஈராறு கீறித்

திருவம்பலமா இருபதஞ்சு ஆக்கித் திருவம்பலமாச் செபிக்கின்றவாறே

வாறே சிவாயநம சிவாயந வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பு இல்லை

வாறே அருளால் வளார்கூத்துக் காணலாம் வாறே செபிக்கில் வரும் செம்பு பொன்னே

ஆறு கோடுகள் நெடுக்காகவும் ஆறு கோடுகள் குறுக்காகவும் வரைந்தால் 25 அறைகள் உண்டாகும். அது திருவம்பலச்சக்கரமாகும்.

சி

வா

சி

வா

சி

வா

சி

வா

வா

சி

ஒவ்வொரு முறையும் முடிவாக வரும் கடைசி எழுத்தை அடுத்த முறை முதலாம் எழுத்தாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஏட்டில் எழுதி பின் மனத்திரையில், மார்பில், புருவ மத்தியில், தலைமேல் என எல்லா இடங்களிலும் அமைத்து சொல்லிப் பழகுக. அதனால் இறைவன் திருக்கூத்தைக் காணலாம். செம்பு பொன்னாவது போன்று இந்த பிறப்பு முக்தியடையும். உடம்பு பொன்னிறமாகும். மக்கள் பேறு உண்டாகும்.

இருந்த இவ்வட்டங்கள் ஈராறு இரேகை இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி

இருந்த மனைகளும் ஈராறுபத்து ஒன்று இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே.

சி

வா

சி

வா

சி

வா

வா

வா

வா

வா

சி

வா

சி

வா

சி

வா

வா

வா

சி

வா

சி

வா

சி

வா

சி

சிவாயநம என்பது எட்டுமுறை வெளிவட்டமாக வளைய வந்திருக்கின்றது.

அ. நடுவில் சி –இல் இருந்து மேல் நோக்கி ஒன்றும் மேல்கீழாக ஒன்றும் இடம் வலமாக ஒன்றும் சுழல்வது ஒரு வட்டம்.

ஆ. நடுவில் உள்ள சி- இல் இருந்து இடம் வலமாக ஒன்றும், வலம் இடமாக ஒன்றும், மேல் கீழாகவும் சுழல்வது மற்றொரு வட்டம்.

இ. நடுவில் உள்ள சி- இல் இருந்து மேல் கீழாகவும், வலம் இடமாகவும், கீழ் மேஎலாகவும் வெறு ஓர் வட்டம்

ஈ. நடுவில் உள்ள சி- இல் இருந்து வலம் இடமாகவும் கீழ்மேலாகவும் இடம் வலமாகவும் இறுதியாக ஓர் வட்டம்.

நான்கு உள்வட்டங்களும் எட்டு வெளிவட்டங்களும் சுழற்றிச் செல்லும்போது முறையே வா, ய, ந, ம என்ற எழுத்துக்கள் நடுவில் உள்ள சி எழுத்தை நான்கு பக்கமும் வளைய வந்திருக்கின்றது. வெளிவட்டம் எட்டையும் உள் வட்டம் நான்கையும் உச்சரித்தபின் நடுவில் உள்ள சி எழுத்தை எட்டு வா எழுத்துக்கள் வளைய வந்திருப்பதைக் காண்க. அதற்கு அடுத்த வட்டத்தில் ய என்ற எழுத்து பதினாறு முறையும், அடுத்த வட்டத்தில் ந எழுத்து இருபத்து நான்கு முறையும், அடுத்த வட்டத்தில் ம எழுத்து முப்பதிரண்டு முறையும் வளைய வந்திருப்பதை காண்க.

முதலில் உள்வட்டமாக நான்கு முறையில் (4x3=12) சிவாயநம கூறவும். பின் வெளிவட்டமாக எட்டு சிவாயநம கூறவும். இப்படி இருமுறை கூறியபின் நடுவில் உள்ள சியை ஒரு வட்டம் எனக்கொண்டு பிற நான்கு எழுத்தும் வளைந்து வரும்போது ஆக ஐந்து வட்டம் உண்டாகும்.

1. நடுவில் உள்ள சி எழுத்தை மனத்தால் வளையம் இடுக. 2. சி- க்கும் வலமாக உள்ள வா எழுத்து முதல் எட்டு வா எழுத்துக்களை வலம் வந்து கூறுக. 3. சி- க்கும் வலமாக உள்ள வா எழுத்து அதற்கு வலமாக உள்ள ய எழுத்து முதல் 16 எழுத்துக்களை வலம் வந்து கூறுக. 4. . சி- க்கும் வலமாக உள்ள வா எழுத்து அதற்கு வலமாக உள்ள ய எழுத்து அதற்கு வலமாக உள்ள ந எழுத்து முதல் 24 எழுத்துக்களை வலம் வந்து கூறுக. 5. சி- க்கும் வலமாக உள்ள வா எழுத்து அதற்கு வலமாக உள்ள ய எழுத்து அதற்கு வலமாக உள்ள ந எழுத்து அதற்கு வலமாக உள்ள ம எழுத்து முதல் 32 எழுத்துக்களை வலம் வந்து கூறுக.

மொத்த எழுத்துக்கள் எண்ணிக்கை. சி- 9, வா- 16, ய- 24, ந- 32, ம- 40 = 121 எழுத்துக்கள்,121 அறைகள். பலமுறை சொல்லும்போது இந்த ஒலிகள் உடம்பில் பிராணசக்தி காந்த சக்தி ஆகியவற்றை ஒளியாலும் நிறத்தாலும் உண்டு பண்ணும்.

எட்டுநிலை உள எங்கோன் இருப்பிடம் எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்

எட்டி ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப் பட்டது மந்திரம் பால்மொழி பாலே.

முன் கூறிய 121 சிவ திருவம்பலசக்கரத்தில் நான்கு திசைகளிலும் திசைக்கு இரண்டாக எட்டு முறை சிவாயநம கூறப்பட்டுள்ளது.. அந்த எட்டு நிலையே இதில் கூறப்பட்டுள்ளது. எங்கோன்- சிவன், பால்மொழி- சக்தி. வெளிவட்டத்தின் எட்டு சிவாயநம போல் உள்ளேயும் நான்கு சிவாயநம இருகின்றது, ஆக 12- முறை சிவாயநம ஆகும்.

உள்ளிருக்கும் சி எழுத்தை நடுவில் கொண்டு வா ய ந ம என்ற நான்கு எழுத்துக்களும் வட்டமாக நான்கு முறை சுற்றி வருவது சக்தியின் அமைப்பாகும். ஆகவே இச்சக்கரம் சிவசக்தி சக்கர அமைப்பாகும். சிவாயநம எனும் சிவமந்திரத்தை சக்தி எழுத்துக்களால் உச்சரித்தால் சிவசக்திசக்ர பலன் கிட்டும்.

ஒன்று- ஓம். இருமூன்று- ஊ (ஹூம்), ஈரேழு- ஒள (ஸௌ), விந்து- ஹம், நாதம்- ஹ என்பன சக்தி எழுத்துக்கள். ஓம் எல்லாவற்றிற்கும் பொது. மற்ற நான்கும் ஓம் ஹூம், ஓம் ஸௌ, ஓம் ஹம், ஓம் ஹ எனப்படும். இதை எட்டுமுறை எட்டு சிவாயநம என்பதோடு சொல்லவும். உள்ளே உள்ள நான்கு சிவாயநம மந்திரத்தினோடும் கூறவும்.

மட்டுஅவிழ் தாமரி மாது நல்லாளுடன் ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்

விட்ட எழுத்தை விடாத எழுத்துடன் கட்ட வல்லார் உயிர்காக்க வல்லாரே.

ஆலயம் ஆக அமர்ந்த பஞ்சாக்கரம் ஆலயம் ஆக அமர்ந்த அத்தூலம் போய்

ஆலயம் ஆக அறிகின்ற சூக்குமம் ஆலயம் ஆக அமர்ந்து இருந்தானே.

விட்ட எழுத்து- ஐந்தெழுத்து, சக்தியில்லாத ஐந்து எழுத்துக்கள் சக்தியை விட்டுவிட்ட எழுத்தாகும். விடாத எழுத்து- சக்தியின் பீஜங்கள். ஐந்தெழுத்தை என்றும் விட்டுப் பிரியா தன்மையினால் விடாத எழுத்தாகும். சக்தி எழுத்துடன் சிவமந்திரம் ஒட்டி இருப்பதை பலர் அறியவில்லை. சக்தி எழுத்துடன் சிவ மந்திரத்தை இணைத்துக் கூற அதோடு மூச்சையும் நிறுத்திக்கூற வல்லவர் தம் உயிர் அழியாமல் காக்க வல்லவர் ஆவர்,

பஞ்சாக்ரம்- பஞ்ச அக்ரம்- ஐந்து எழுத்து. இந்த எழுத்துகளின் ஓசைகள் என்றும் அழியாதவை. 1. திருஐந்தெழுத்தே சிவன், அதுவே அவன் ஆலயம் ஆகும். 2. நமசிவாய என்பது தூல மந்திரம். உடல் ஆதாரமாக இருப்பதால் இது உடம்பை ஆலயம் ஆக்கும். 3. சிவாயநம என்பது சூக்கும மந்திரம். உடம்பின் மேல் தலை உச்சியில் தோன்றுவது. சூக்கும பஞ்சாட்சரம். 4. இப்படிக்கூறும் யோகியே சிவ ஆலயமாக இருப்பான்.

 

மூலமந்திரம்

மூலாதாரம்= ஓம்

சுவாதிட்டானம்= ந

மணிபூரகம்= ம

அநாதகம்= சி

விசுத்தி= வா

ஆக்ஞா= ய

கீழிருந்து மேலே ஏறுமுகமாக கூறவும். புருவ மத்தியில் ஒளி தோன்றும். கீழே ஆறு விதமாக ஐந்தெழுத்தை உச்சரிக்கும் பட்டியல் காண்க.

ஆதரங்களின்இடம்

பெயர்

1முறை

2

3

4

5

6

புருவநடு

ஆக்ஞா

வா

சி

ஓம்

தொண்டைக்குழி

விசுத்தி

வா

சி

ஓம்

மார்புநடு

அநாகதம்

சி

ஓம்

வா

தொப்புள்

மணிபூரகம்

ஓம்

வா

சி

சிறுநீர்த்துளை

சுவாதிட்டானம்

ஓம்

வா

சி

முதுகுத்தண்டினடி

மூலாதாரம்

ஓம்

வா

சி

இது ஸதாரம் எனும் தூல பஞ்சாட்சரம் கூறும் வகை. ஆறுமுறை இடம் மாற்றி மாற்றி 108 முறை சொல்ல வேண்டும்.

சூக்குமப் பஞ்சாட்சரம் நிராதாரமாகக் கூறும்வகையானது  

1.காதின் கீழ்ப் பகுதியின் உள்ளே உள்ள உள்நாக்கு இந்திரயோனி – இது தேவர் உலகிற்குப் போகும் வழியாகும். இந்திரயோனியிலிருந்து புருவ நடுவரை உடம்பிற்குள் ஒரு நுண் துளை உள்ளதை மனத்தில் பதித்து ஓம் சொல்லவும். இந்த ஒலிக்கு ஐந்து விரல் உயரம்- ஐந்து மாத்திரை நேரம். ஐந்து நொடி அளவு ஓம் என்பதைக் கீழிருந்து மேல் செல்வதாக ஐந்து விரல் உயரத்தில் அந்த நாதம் சென்றதாக நினைத்து பழகவும். நாதம் ஒளியுடன் செல்லும் என்பதையும் உணரவும்.

2.காதின் மேல் உயரம் புருவ நடுவுக்கு நேர் உள்ள பகுதியாகும். புருவ நடுவில் இருந்து 3விரல் உயரம் செல்லுமாறு மண்டைக்குள்ளேயே உயர்ந்து செல்லும் நாதமாக நினைக்க வேண்டிய எழுத்து சி என்பதாகும். இதை 4நொடி அளவு மாத்திரையாக நீட்டி ஒலிக்கவும்.

3.இதிலிருந்து 4விரல் உயரத்தில் பிரம்ம நாளம் உள்ளது. பிரம்மரந்திரத்தின் நடுவில், தலை உச்சியில் கீழிருந்து மேலாக ஒரு துளை உள்ளது. இதன் வழியே சி ஒலி நாதமும் ஒளியாக வந்து நிற்கும். இதன் பிறகு 8விரல் உயரம் துரியத்தானம் உள்ளாதாகக் கொள்க.

4.அதற்குமேல் 8விரல் உயரத்தில் துரிய உச்சியாகிய மனோன்மணி உள்ளது. மந்திரத்தில் மீதி உள்ள நான்கு எழுத்துக்களும் 8விரல் என அளவு கொள்க.

வா- க்கு 2விரல்கள், ய- க்கு 2விரல்கள், ந- க்கு 2விரல்கள், ம- க்கு 2விரல்கள். ஆக மொத்தம் ஓம்- 5, சி-4, வா-2, ய-2, ந-2, ம-2 == 17 விரல் அளவு. ஓம் என்பதோடு பஞ்சாட்சரத்தையும் சேர்த்து எண்ணிய விரல்கள். இது சூக்கும முறை.

 

பெரிய திருவம்பலச்சக்கரம்

இருந்த இவ்வட்டம் இம்மூன்று இரேகை இருந்த அதனுள் இரேகை ஐந்தாக

இருந்த அறைகள் இருபத்தைஞ்சு ஆக இருந்த அறை ஒன்றில் எய்தும் மகாரமே.

முதலில் வரைந்த சக்கரத்தில் நடுவே சி வரும். இதில் ஓம் வரவேண்டும். இருபத்தைந்து அறைகள் வருமாறு குறுக்கு நெடுக்காக 6x6 கோடுகள் வரைந்து நடுவே மகாரம் ஓம் வரவேண்டும். இருபத்தைந்து அறைகளிலும் கீழ் கண்டவகையில் பஞ்சாட்சரத்தை வரிசைப்படுத்தி 25 கட்டங்களையும் நிரப்பு. மூன்றாம் வரிசையில் வரும் சி க்குப்பதில் ஓம் என கருதவும்.

மகாரம் நடுவே வளைந்திடும் சத்தி ஓகாரம் வளைத்திட்டு ‘ம்’ பிளந்து ஏற்றி

யகாரம் தலையாய் இருகண் சிகாரமாய் நகார வகாரம் நாற்காலும் நாடுமே.

நாடும் பிரணவம் நடு இரு பக்கமும் ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றது

நாடும் நடுவுள் முகம் நமசிவாய ஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே.

மிகப் பெரிய திருவம்பலச்சக்கரம் பற்றியது. நடுவே உள்ள ஐந்து வரிசைப் பஞ்சாட்சரத்தை மனித உடலாக கொள்க. நடுவில் உள்ள ம என்பது தொப்புள். சி என்பது கண்கள். ய என்பது தலை. ந வும் வா வும் கால்கள் எனக் கருது.

ஆயும் சிவாயநம மசிவாயந ஆயும் நமசிவாய யநமசிவாயந

வாயுமே வாய நமசியெனும் மந்திரம் ஆயும் சிகாரம் தொட்டந் தத்து அடைவிலே

அடைவில் ஐம்பது ஐயைந்து அறையின் அடையு, அறை ஒன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி

அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும் அடைவின் எழுத்து ஐம்பத்தொன்றும் அமர்ந்தே.

பஞ்சாட்சரங்களை இந்த வரிசையிலும் அமைக்கலாம். மகரம் நடுவில் என்ற முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பெரு வட்டத்துக்குள்ளே உள்ள 25 அறைகள் கொண்ட சதுரத்தில் வடமொழி எழுத்துக்கள் இரண்டிரண்டாக ஓர் அறையில் அமைத்து இறுதியை நடு அறையில் அடைக்கவும்.

1.சி வா ய ந ம

2.ம சி வா ய ந

3.ந ம சி வா ய

4.ய ந ம சி வா

5.வா ய ந ம சி

அகர வரிசையில் ஓர் அறைக்கு 2எழுத்தாக உயிர் 16ம் உயிர்மெய் 35ம் வரிசையாக நிரப்பவும். 16 + 35 = 51 / 2 = 25 அறை போக மீதி ஒரு எழுத்து ‘க்ஷ’ என்ற கடைசி எழுத்து. அதை மூன்றாம் வரிசையின் நடுவில் ஓம் எழுத்துள்ள அறையில் சேர்க்க. அந்த அறையில் ஓம் என்பதுடன் 3 உயிர் மெய் எழுத்துக்கள் கூடியிருக்கும்.

அமர்ந்த அரகர ஆம் புறவட்டம் அமர்ந்த அரிகரி ஆம்ஆன உள்வட்டம்

அமர்ந்த அசைவை ஆமதனுள் வட்டம் அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே

சூலத் தலையினில் தோற்றிடும் சக்தியும் சூலத் தலையினில் சூழும் ஓங்காரத்தால்

சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து ஆலப் பதிக்கும் அடைவதும் ஆமே.

அதுவாம் அகார இகார உகாரம் அதுவாம் எகாரம் ஓகாரமது ஐந்தாம்

அதுவாகும் சக்ர வட்டமேல் வட்டம் பொதுவாம் இடைவெளி பொங்கு நம்பேரே.

பேர் பெற்றது மூலமந்திரம் பின்னது சோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின்

நேர்பெற்றிருந்திட நின்றது சக்கரம் எர் பெற்றிருந்த இயல்பிது வாமே

இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின் செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்

புயலும் புனலும் பொருத்து அங்கி மண்விண் முயலும் எழுத்துக்கு முன்னா இருந்தே.

குறுக்கு நெடுக்கு எல்லாவற்றின் இறுதியிலும் ஒரு சூலம் வரைக. சூலத்தின் மேல் ஒவ்வோர் இடத்திலும் 24 முறை வரும்படி ஓம் எழுதுக. இரண்டு சூலங்களுக்கு நடுவில் நான்கு பக்கத்திலும் அ, இ, உ, எ, ஒ என்ற ஐந்து எழுத்துக்களால் நிரப்பு. நான்கு பக்கங்களிலும் நமசிவாயா என்பதை ஓம் ஒலிகளுக்கு மேலாக எழுது. நான்கு மூலைகளிலும் ஒளம்ஸௌ என்று நான்கு முறை எழுது. இச்சதுர அறைகளைச் சுற்றி ஐந்து இடங்களில் சிவபெருமானின் ஐந்து முகத் துதிகளை வளையமாக எழுது. 1. ஓம் தத் புருஷாய நம: 2. ஓம் ஈசானாய நம: 3. ஓம் அகோராய நம: 4. ஓம் வாமதேவாய நம: 5. ஓம் சத்யோஜாதாய நம: இவைகளுக்கு மேலாக ஐந்து இடங்களிலும் ஒவ்வோர் இடத்திலும் இருமுறையாக மொத்தம் பத்து முறை அ, இ, உ, எ, ஒ என எழுது. இதுவும் வட்டமாக வளந்திருக்க வேண்டும். இதுவே பெரு வட்டங்களுக்குள்ளே உள்ளவை ஆகும்.

பெருவட்டங்களில் முதல்வட்டம்- ஆ, ஈ, ஊ, எ, ஓ என்ற எழுத்துக்களை (ஐம்பூதத்தானங்களைக்குறிக்கும்) ஐந்து இடங்களில் வட்டமாக வளைத்து எழுது. அம், ஹ்ரீம், அம், க்ஷம், ஆம் என்ற (அஜபா- அசைவை) எழுத்துக்களையும் ஐந்து இடங்களில் வளையமாக எழுது.

இரண்டாம் நடுவட்டம்- ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி என்ற ஐந்தையும் பத்து முறை வட்டமாக வளைத்து எழுது.

மூன்றாம் மேல்வட்டம்- ஹர, ஹர, ஹர, ஹர, ஹர, என்ற ஐந்தையும் பத்து முறை வட்டமாக வளைத்து எழுது.

இப்பெருவட்டங்கள் மூன்றிற்கும் பூபுரம் எனப்படும் கோட்டை மதில்கள் 4 வாசல்களுடன் அமைக்கப்படவேண்டும். பூபுரத்தின் வாசல்களிலும், கோட்டை கோணங்களிலுமாக (4+4=8) எட்டு மந்திர ஒலிகளை நிறுவ வேண்டும். மூன்று கோட்டை மதில்கள் சதுரமாகவும் நான்குவாசல் உடையவனவாகவும் கருதுக.

 

ஐம்பூதத்தானங்களின் நிறைவு எல்லை

ஆகாயம்- புருவ நடு முதல் உச்சந்தலைவரை

காற்று- மார்பு நடு முதல் புருவ நடு வரை

நெருப்பு- ஆசனவாய் முதல் மார்பு நடு வரை

நீர்- முழங்கால் முதல் ஆசனவாய் வரை

நிலம்- பாதம் முதல் முழங்கால் வரை

 

ஐம்பூத உணர்வுத் தானங்கள்

மூலாதாரம்- நிலம்

சுவாதிட்டானம்- நீர்

மணிபூரகம்- நெருப்பு

அநாகதம்- காற்று

விசுத்தி- ஆகாயம்

ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும் ஏறெட்டு அதன்மேலே விந்துவும் நாதமும்

சீறிட்டு நின்று சிவாயநம என்னக் கூறு இட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே

இருப்பது அண்ணல் அவள் அக்கரத்துளே பெண்ணின் நல்லாளும் பிரான் அக்கரத்துளே

எண்ணி இருவர் இருந்தங்கு இருந்திடம் புண்ணியவாளார் பொருள் அறிவாரே

சமஸ்கிருத அகரவரிசை 48 ம் எழுத்து ஸ வுடன் ஆறாம் எழுத்தாகிய ஊ சேர்த்தால் ஸூ ஆகும். இதனுடன் அனுஸ்வரம் எனும் விந்துக்குரிய எழுத்து ம் சேர்த்தால் ஹூம் ஆகும். பதினான்காம் எழுத்தாகிய ஒள என்பதை ஸ உடன் செர்த்தால் ஸௌ ஆகும். அதனுடன் நாதத்திற்குரிய அடையாளமாகிய : விசர்க்க எழுத்தைச் சேர்த்தால்  ஸௌ: (ஸௌஹ்) என ஆகும். இவற்றுடன் ‘சிவாயநம’ மந்திரத்தை முன்னும் பின்னுமாகச் சேர்த்தால் ஓம் ஸூம் ஸௌ: சிவாயநம என வரும் இதை தினமும் 108 முறை உச்சரித்தால் மும்மலங்களும் தனித்தனியே பிரிந்து அழியும். சிவன் இருப்பது சக்தி எழுத்தில். சக்தி இருப்பது சிவன் எழுத்தில். இப்படி இருவரும் இருக்கும் வித்து எழுத்துடன் பஞ்சாட்சரம் சொல்க. ஓம் ஹ்ரீம் ஓளம் ஸௌ:

 

சிவாயநம

‘அ” வ் இட்டு வைத்து அங்கு ’அர’ இட்டு மேல்வைத்து

’இ’ இட்டுப் பார்க்கில் இலிங்கம் அதாய் நிற்கும்

‘ம்’ விட்டு மேலே வளி உறக்கண்டபின்

‘தொம்’ இட்டு நின்ற சுடர்க் கொழுந்து ஆமே

உடம்பில் சிவாக்னியைத் தூண்டுவது ஹர மந்திரம். சக்தி எழுத்தாகிய இ சேர்த்தால் ஹ்ரீம் ஆகும். இதை ம என்ற தொப்புள் பகுதியில் தொடங்கி மேலே ஓசையை ஏற்றிப் பார்த்தால் அரு உருவமாகிய இலிங்கமான பாணலிங்கத்தின் ஒளியைக் காணலாம். இது தொம் பதம் ஆகிய நீ அதுவே ஆனாய் என்பதன் படி சிவநிலையை அடைவாய். ஓம் ஹ்ரீம் ஸௌ: என தொப்புளிலிருந்து உச்சிவரை ஓசை எழுபுவதாகப் பாவித்து இந்தமந்திரம் கூறினால் சோதி உடலில் பணலிங்கம்போல் தோன்றும். இதுமட்டுமல்லாமல் பீஜ மந்திரங்களைச் சொல்லும் போது பிராணாயாமத்தில் கும்பகம் செய்து அவைகளைச் சொல்வது சிறப்பு.

அவ்-உண்டு சவ்-உண்டு அனைத்தும் அங்கு உள்ளது

கவ்வுண்டு நிற்கும் கருத்து அறிவார் இல்லை

கவ்வுண்டு நிற்கும் கருத்து அறிவாளர்க்கு

சவ்-உண்ட சத்தி சதா சிவன் தானே

ஒள, ஸௌ மூலம் சகஸ்ராரம் ஆகிய தலையில் சதாசிவனைச் சக்தியோடு காணலாம். ஓம் ஹ்ரீம் ஓளம் ஸௌ:  என்றபின் சிவாயநம சொல்வதால் சதாசிவன் தோன்றுவான். பிரம்ம கிரந்தி- மூலம், சுவதிட்டானம் இரண்டையும் பற்றி பிரம்ம முடிச்சாய் நிற்பது பிரமன் என்றும், விஷ்ணு கிரந்தி- மணிப்பூரகம், அநாதகம் இரண்டையும் பற்றி விஷ்ணு முடிச்சாய் நிற்பது திருமால் என்றும், ருத்திரக் கிரந்தி- விசுத்தி, ஆக்ஞா இரண்டையும் பற்றி ருத்திர முடிச்சாய் நிற்பது ருத்திரன் என்றும், மார்பு நடுவில் உள்ளார்ந்து விளங்குவது மகேச்சுவரன் என்றும், புருவ மத்திகுமேல் விளங்குவது சதாசிவன் என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே பிரம்மரந்திரமாகிய ஆயிரம் இதழ் தாமரையில் பிரபஞ்சக் கூறுகள் அனைத்தும் உண்டு. ஸ + ஒள = (சிவம் + சத்தி) = ஸௌ ஆகும். சவ்வுண்டு என்றால் ஒட்டிக்கொண்டு நிற்பது என ஆகும்.

அஞ்செழுத்தாலே அமர்ந்தனன் நந்தியும் அஞ்செழுத்தாலே அமர்ந்த பஞ்சாக்கரம்

அஞ்செழுத்து ஆகிய அக்கர சக்கரம் அஞ்செழுத்துள்ளே அமர்ந்திருந்தானே.

ஐந்தெழுத்தாகச் சிவன் இருக்கின்றான். அதைச் சொன்னால் சிவன் மனத்தில் அமர்வான். அதைச் சக்கரத்தில் உள்வைத்து சொல்வது சிறப்பு. பலவகை ஐந்து எழுத்துக்களானவை.

1.ந ம சி வா ய- தூல பஞ்சாக்கரம்

2.சிவாயநம- சூக்கும பஞ்சாட்சரம்

3.அம்,ஹ்ரீம்,ஹம்,க்ஷம்,ஹாம்- சக்தி எழுத்துடன் கூடிய பஞ்சாட்சரம், அசைபை மந்திரம்

4.அ இ உ எ ஒ- ஐம்பூதங்களை உடம்பில் சுட்டும் பஞ்சாட்சரம்

5.ய ந ம சி வ - மகரம் நடுவாகிய பஞ்சாட்சரம்

6.ய சி ம ந வ - ய-தலை, சி-கண், ம-தொப்புள், ந+வ-கால்கள் என விளக்கும் பஞ்சாட்சரம்

என பலவகை இருந்தாலும் தூல, சூக்கும பஞ்சாட்சரங்களே சிறப்பு.

கூத்தனைக் காணும் குறிபல பேசிடில் கூத்தன் எழுத்தின் முதல் எழுத்து ஓதினால்

கூத்தனோடு ஒன்றிய கொள்கையரய் நிற்பர் கூத்தனைக் காணும் குறி அதுவாமே.

சிவபெருமானைக் காணும் பலவழிகளில் ஒன்று சிவாயநம எனும் சூக்கும பஞ்சாட்சரத்தில் சி எனும் முதல் எழுத்தையும் நாதம் தர உதவும் அனுஸ்வரம் எழுத்தாகிய ம் என்பதையும் இனைத்துச் சிம் என கூறினால் கூத்தனை உள்ளே காணலாம். பிராணாயாமம் செய்து கும்பிடும்போது முடிந்த அளவு சிம் சொல்லி 108கும்பகம் செய்யும்போது மனத்தளவில் சொல்க.

அத்திசைக்கு உள்நின்ற அனலை எழுப்பியே அத்திசைக்கு உள்நின்ற ந எழுத்து ஓதினால்

அத்திசைக்கு உள்நின்ற அந்த மறையனை அத்திசைக்கு உள்உறவு ஆக்கினன் தானே.

தானே அளித்திடும் தையலை நோக்கினால் தானே அளித்திட்டுமேலுற வைத்திடும்

தானே அளித்த மகாரத்தை ஓதிட தானே அளித்ததோர் கல் ஒளியாமே.

மூலாதாரத்தில் உள்ள குண்டலி நெருப்பை பிராணாயாமத்தின் மூலம் எழுப்பி நமசிவாய மந்திரத்தின் முதல் எழுத்தையும் நாதத் துணையும் இனைத்து நம் என கும்பகத்தில் மூலாதாரம் முதல் புருவ மத்திவரை கூறினால் சிவனை உறவாக்கலாம்.பஞ்சாட்சரத்தில் சக்தி எழுத்தாகிய வா என்பதை மனத்தில் தியானம் செய்தால் தலையில் உணர்வு திரள உதவுவாள். ம எனும் எழுத்தை ஓதினால் தலையில் ஒளி உண்டாகும்.

ஆகின்ற பாதமும் அந்-ந-ஆய் நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்

ஆகின்ற சி இருதோள் வ்-வாய் கண்டபின் ஆகின்ற அச்சுடர் அவ்வியல்பு ஆமே

அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும் செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்

ஓ- இயல்பாக, ஒளி உற ஓங்கிடின் ப- இயல்பாகப் பரந்து நின்றானே.

ஐந்தழுத்துக்கும் கூத்தப் பெருமான் திருவடியைப் பிரித்துக் கூறும் வழி- பாதத்தில்- ந- எழுத்தும், நாபியில்- ம- எழுத்தும், தோள் இரண்டிலும்- சி- எழுத்தும், வாய்ப் பகுதியில்- வ- எழுத்தும்- சோதியிடமாகிய புருவநடுவே- ய- எழுத்தும் நிற்பதாக நினை. புருவ நடுவில் அச்சுடர் யோகியின் உடலிலும் பாவிக்கப்படும்.இரு மூன்று எழுத்து என்பது ஓம் நமசிவாய அல்லது ஓம் சிவாயநம என்பது. யோக ஆதாரங்களிலோ துரிய வெளியில் நிராதாரமாகவோ சொல்வது செவ்வியல்பாகிய முறையாம். அப்படிக் கூறும்போது சிவ (நந்தி-குரு. குருவே கடவுள்) னின் ஒளியையும் ஓம் எனும் பிராணவ ஒளியையும் இணைத்து ஓங்கச் செய்தால் அது உடல் எங்கும் பரவி நாதப் பிரம்மாக நாத விந்துவாக வெளிப்படும். ஓம் ஒளியானது சிகப்பு. சிவத்தின் ஒளியானது தங்க நிறம். இராண்டும் சேரும்போது உதய்மாகும் சூரியச் சிவப்பும் அல்லது மாலைச் சூரியனின் மாணிக்க ஒளியும் தோன்றும். இம்மந்திரம் கூறும்போது நினைக்க. இம்மந்திர ஓசையால் உண்டாகும் ஒளியாகையால் நாதப் பிரம்மம், நாத விந்து எனக் கூறலாம்.

 

ஓங்காரச் சிறப்பு

பரந்தது மந்திரம் பல்லுயிர்க்கு எல்லாம் வரம் தரும் மந்திரம், மாய்த்திட வாங்கி

துரந்திடு மந்திரம் சூழ்பகை போக, உரம்தரு மந்திரம், ஓம் என்று எழுப்பே.

ஆகாயத்தில் மந்திரம் எப்போதும் சூக்கும வடிவில் பரந்து சூழ்ந்துள்ளது. பல உயிர்கள் ஒரு நேரத்தில் உச்சரித்து வரம் பெறலாம். பிற எண்ணங்கள் மாய்ந்து கீழாகப் போகுமாறு வாங்கி உச்சரிக்கப்பெறும்(துரந்திடும்) மந்திரமானது சொல்பவருக்கு வலிமை தந்து சூழ்ந்துள்ள பகை நீக்கும். மூலாதாரத்தில் உள்ள நெருப்பை ஒம் என தியானித்து எழுப்ப வேண்டும். மூலாதாரம் முதல் ஆக்ஞா வரை உள்ள கீழ்மேலாக உயர்ந்த சுழுமுனைநாடியில் செவ்வொளி படருமாறு பாவித்து ஓங்காரத்தை சொல்ல வேண்டும். மிக நுண்ணிய அணுக்களும் பல அணுக்கள் திரண்ட அணுக் கொத்தும் இவை செறிந்துள்ள செல்களும் ஒவ்வொரு நொடியிலும் ஒளியையும் ஒசையையும் எழுப்பி பலவித அலைகளை உண்டாக்கும். இந்த அலைகள் பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்து பரந்துள்ளன. இது சப்த பிரபஞ்சம், அர்த்த பிரபஞ்சம் எனப்படும். இவற்றில் யோகம் தியானம் செய்பவர்களின் மன நினைவுகளைப் பதியவைக்கும் ஆற்றல் ஓம் என்ற ஓசைக்கு உள்ளது. ஆகவே மூலநெருப்பை பிரபஞ்சத்துடன் இனைத்தால் யோகி பிரபஞ்சத்துடன் ஈடுபாடுக் கொண்டிருக்கலாம்.

 

திருவம்பலம்

ஓம் என்று எழுப்பிய உத்தம நந்தியை நாம் என்று நழுப்ப நடுஎழு தீபத்தை

ஆம் என்று எழுப்பி அவ்வாறு அறிவார்கள் மாமன்று கண்டு மகிழ்ந்து இருந்தோரே.

ஓம் நமசிவாய என்றும், ஓம் சிவாயநம என்றும் ‘ஹம்ஸம்’ என்றும் மந்திர ஒலிகளை மூலாதாரத்தியானத்தின் மூலம் பிராணாயாம முறையில் எழுப்பினால் சுழுமுனைநாடியில் ஒளி தோன்றும். அது மண்டையில் உள்ல ஆயிரம் இதழ்த் தாமரையில் ஒளிச்சுடராகத் தெரியும். இது திருவம்பலம் என்க.

 

கடவுள் ஞானம்

நீரில் எழுத்து இவ் உலகர் அறிவது வானில் எழுத்து ஒன்றுகண்டு அறிவார் இல்லை

யார் இவ் எழுத்தை அறிவார், அறிவார்கள் ஊனில் எழுத்தை உணர்கிலர் ஆமே.

காலை நடுவுறக் காயத்தில் அக்கரம் மாலை நடுவுற ஐம்பதும் ஆவன

மேலை நடுவுற வேதம் விளம்பிய மூலம் நடுவுற முத்திதந்தானே

உடம்பில் தியானிக்கப்படும் ஐந்தெழுத்து முதலிய எழுத்து வடிவுகளை யாரும் அறியவில்லை. அதை அறியாமல் பிற எழுத்து மந்திரத்தை அறிபவர்கள் நீரில் எழுதிய எழுத்தை அறிந்தவர்கள் ஆவார். ஆகாயத்தில் உள்ள எழுத்துக்களை அறிய முற்படுபவர் அறிந்தோர் கடவுளை அறியும் ஞானம் பெற்றவராவார். உடம்பில் எழுத்துக்கலைத் தியானிப்பது வானில் உள்ள ஓசைகளின் அலைகளை அறிவதாகும். காலை-காற்றை, மாலை-வரிசை, மூலம்- மூலமந்திரம், அக்கரம்- எழுத்து. பிராணாயாமத்தால் மூச்சுக்காற்றைச் சுழுமுனையில் ஓடவிடவும், உடம்பில் எழுதப்பட்ட 51 எழுத்து வரிசைகளையும் சுழுமுனைவழி உச்சரித்து அதிர்வு செய்க. மூலமந்திரமாகிய சிவாயநம அல்லது நமசிவாய எனும் மந்திரத்தை சுழுமுனைநாடியில் செலுத்தினால் இறைவன் முக்தியைத் தருவான். வலப்பக்கம் இடப்பக்கம் பிராணாயாமம் செய்யும் போதும் மூலாதாரத்தைத் தியானிப்பதன் மூலம் காற்று சுழுமுனை நாடியில் பரவும். உடம்பில் 51 எழுத்து என்பது ஆறு ஆதாரங்களிலும் ஒவ்வொரு தாமரை இதழையும் பாவித்து எழுத்துக்களைக் கூறுவது என்க.

விசுத்தியில் 16 இதழிலும் இடப்பக்கம் தொடங்கி வடமொழி 16 உயிர் எழுத்துக்களும்,

அநாகத்தில் 12 இதழிலும் இடப்பக்கம் தொடங்கி க1 முதல் ட2 வரை 12 எழுத்துக்களும்,

மணிப்பூரகத்தில் 10 இதழிலும் இடப்பக்கம் தொடங்கி ட3 முதல் ப2 வரை 10 எழுத்துக்களும்,

சுவாதிட்டானத்தில் 6 இதழிலும் இடப்பக்கம் தொடங்கி ப3 முதல் ல வரை 6 எழுத்துக்களும்,

மூலாதாரத்தில் 4 இதழிலும் இடப்பக்கம் தொடங்கி வ, ச1, ஷ, ஸ ஆகிய 4 எழுத்துக்களும்,

ஆக்ஞாவில் ஹ, ள, க்ஷ என்ற மூன்று எழுத்தும் இடம், நடு, வலம் என உச்சரிக்கப்படும்.

இந்த 51 எழுத்து ஓசைகளும் திருஐந்தெழுத்துக்களுக்கு துணையாகும். ஐந்தெழுத்து ஓங்காரத்திற்கு துணையாகும்.

 

அசபை

நாவின் கீழது நல்ல எழுத்தொன்று பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை

ஓவியராலும் அறியவொண்னாதது தேவியும் தானும் திகழ்ந்திருந்தானே.

அவ்வொடு சவ்வென்ற தரணுற்ற மந்திரம் அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிகிலர்

அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிந்தபின் அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே.

ஹம் என்பது சிவன் எழுத்தாகும். ஸம் என்பது சக்தி தேவியின் எழுத்து. பிராணாயாமத்தின் போது உந்தியில் சொல்லப்படும்.

மந்திரம் ஒன்று உள்மலராள் உவப்பது உந்தியின் உள்ளே உதயம் பண்ணாநிற்கும்

சந்திசெய்யா நிற்பர் தாம்அது அறிந்திலர் அந்தி தொழுதுபோய் ஆர்த்து அகன்றார்களே

சேவிக்கும் மந்திரம் செல்லும் திசைபெற ஆவிக்குள் மந்திரம் ஆதாரம் ஆவன

பூவிக்குள் மந்திரம் போக்கற போக்கிடில் ஆவிக்குள் மந்திரம் ஆங்குசம் ஆமே.

அசைபையை அறிவது சிறப்பு. சந்தியாவந்தனம் முதலியன செய்வதைவிட உயரியது. உள்மலரால் என்பது குண்டலினியை குறிப்பதாகும். அசைபையே சேவிக்கும்- வழிபடும் மந்திரம். எல்லா திசைகளிலும் அது பரவும். ஆன்மாவிற்குள் ஈடுபடும் மந்திரமும் அது. ஆதார கமலங்களில் நுழைந்து செல்லுமாறு பாவித்தால் ஆன்மாவில் படியும் மாசுகளை நீக்கும் அங்குசமாகும். மூச்சை இழுக்கும்போது ஹம் என்றும் விடும்போது ஸம் என்றும் உச்சரிக்க வேண்டும். ஓம், நமசிவாய, அம், ஹரீம், ஹம், க்ஷம், ஹாம் ஆகியவையும் அசைபைகளே. அசபா மந்திரத்தை உந்திச் சுழி மணிப்பூரகத்திலிருந்து ஆக்ஞாவரை பாவித்து கூறவும்.

ஐம்பதெழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பதெழுத்தே அனைத்து ஆகமங்களும்

ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின் ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே.

அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன் அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன்

அஞ்செழுத்தால் இவ் அகலிடம் தாங்கினன் அஞ்செழுத்தாலே அமர்ந்து நின்றானே.

வேத மந்திரங்களின் ஒலியாவும் 51 எழுத்துக்களை உள் அடக்கியது. ஆகமங்களில் உள்ள ஓசைச் சிறப்பு யாவும் 51 எழுத்துக்களைக் கொண்டது. எல்லா ஒளிகளும் இந்த 51 எழுத்துக்களில் அடங்கும். இவை யாவும் ஐந்தெழுத்து மந்திரத்தில் அமைந்தன. எல்லா ஒலிகளும் ஐந்து விதமான நிறங்களை உள்ளடக்கியே தத்தம் வண்ணங்களைப் பெற்றுள்ளன.

பொன்னிறம், சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என்ற ஐந்து நிறங்களின் சேர்க்கை அல்லது பிரிவு கொண்டு எல்லா நிறங்களும் தீர்மாணிக்கப்படுவதால் ஐந்து எழுத்தே எல்லா நிறமும் ஒளியும் என்பதாகும். கருப்பு நிறமற்ற இருள். வெள்ளை ஏழு நிறங்களின் கலவை. சூரியனின் ஏழு நிறங்களும் இந்த ஐந்தின் விரிவாகும். நவரத்தின ஒளிகளும் இவ்வாறே. ஐம்பூதங்களையும் எல்லா உயிர் வர்க்கங்களையும் படைத்து உலகை அவை கொண்டே தாங்கி நிறுத்தி தானும் அந்த ஐந்தெழுத்தாகவே அமர்ந்தான்.

வீழ்ந்தெழலாம் விகிர்தன் திருநாமத்தைச் சோர்ந்தொழியால் தொடங்கும் ஒருவருக்குச்

சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும் போந்திடும் என்னும் புரிசடை யோனே.

உண்னும் மருந்தும் உலப்பிலி காலமும் பண் உறு கேள்வியும் பாடலுமாய் நிற்கும்

விண் நின்று அமரர் விரும்பி அடிதொழ எண்நின்று எழுத்து அஞ்சும் ஆகி நின்றானே.

ஐந்தெழுத்தே உணவும் மருந்துமாகும். எல்லையற்ற காலம் உயிர் வழச் செய்யும். கற்றல், கேட்டல் ஆதிய திறம் தந்து பண்னும் பாடலுமாய் நிற்கும். தேவர்கள் அடி தொழ ஐந்து எழுத்தாகிய இறைவன் நெஞ்சில் அமர்வான்.

ஐந்தின் பெருமை அகலிடமாவது ஐந்தின் பெருமையே ஆலயமாவது

ஐந்தின் பெருமை அறவோன் வழக்கமும் ஐந்தின் வகை செயப் பாலனும் ஆமே.

ஐந்து நிற ஒளிகளின் பெருமையால் இப்பெரிய உலகம் வாழ்கிறது. அவையே இறைவன் ஆலயமாகவும் உள்ளது. அது இறைவன் தொழில் ஐந்தும் ஆகும். அதைச் சொல்லிப் பழகுவோர் இளமை பெறுவர்.

வேர் எழுத்து ஆய், விண் ஆய், அப்புறமாய்

நீர் எழுத்து ஆய், நிலம் தாங்கியும், நிற்கும் அங்கு உளன்

சீர் எழுத்து ஆய், அங்கி ஆய், உயிராம் எழுத்து

ஓர் எழுத்து ஈசனும் ஒண்சுடர் ஆமே.

விண்-ஆகாயம், நீர், நிலம், தாங்கி- தீ ஆகிய 4 பூதங்களைக் கூறியதால் காற்றும் உடன் கொள்ளப்பட்டு ஐந்து பூதங்களுக்குரிய உடல் யோக ஆதாரங்களையும் அவற்றின் பூத எழுத்து ஐந்தையும் ஓர் எழுத்தாகிய ஓங்காரமும் சேர்த்து ஆறாம் ஆதாரமாகிய ஆக்ஞை என்க. பிராணவத்திற்கு வேர் எழுத்தாகிய அ கரமும் அதை வானுற எடுத்துச் செல்லும் விண் எழுத்தாகிய உ கரமும் அப்புறம் செலுத்தும் ம் எனும் ம கர எழுத்தும் ஈசனின் ஒளிச் பொருந்திடச் சுடராகவே உடலில் பதிந்துள்ளன.

 

சக்தி எழுத்து

நாலாம் எழுத்து ஓசைஞாலம் உருஅது நாலாம் எழுத்தினுள் அடங்கிற்று

நாலாம் எழுத்தே நவில வல்லார்கட்கு நாலாம் எழுத்து அதுநன்னெறிதானே.

நமசிவாய என்ற மந்திரத்தில் நான்காம் எழுத்தானது வா. இது சக்தி எழுத்தாகும். இது பிரபஞ்சம் முழுவதும் அடக்கியது அல்லது விரிந்தது ஆகும். இதைத் தியானித்து சிவசக்தியாகப் பாவித்து ஓதினால் சிவஞானம் பெறுவர்.

அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் சிவமாய் வரும் முப்பதத்தில்

சிகாரம் சிவமாய் வகாரம் பரமாய் யகாரம் உயிர் என்று அறையலும் ஆமே.

ஓங்காரத்தின் மூன்று ஓசை அ, உ, ம் ஐந்தெழுத்தின் மூன்று ஓசையும் சிவாய ஒத்திருக்கும்.

‘அ’ கரம் என்பது ஆத்மா

‘உ’ கரம் என்பது எங்கும் பரவிய பரம்

‘அ’ கரம் என்பது சிவத்தன்மையது. இதுபோல்

‘சிகரம்’ என்பது சிவமாகும்

‘வகரம்’ என்பது சக்தியாகிய பரமாய் எங்கும் பரவியது.

‘யகரம்’ என்பது உயிராகிய சீவன்

 

வேறுவகை திருவம்பலச்சக்கரம்

எட்டு வரையின்மேல் எட்டுவரை கீறி இட்ட நடுவுள் இறைவன் எழுத்து ஒன்றில்

வட்டத்திலே அறை நாற்பத்தெட்டும் இடச் சிட்ட அஞ்செழுத்தும் செவ்விதிற்கு ஆமே.

தான்வர், சிட்டர், சதிரர், இருவர்கள் ஆன இம்மூவரொடு ஆற்றவர் ஆதிகள்

ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும் சேனையும் செய்யச் சிவாக்கரம் தானே.

எட்டு நெடுக்காகவும் எடு குறுக்காகவும் கோடுகள் வரைந்தால் 49 அறைகள் கிடைக்கும் அவற்றின் நடுவே 25 அறைகள் நீங்கலாக சுற்ரு வரிசையில் 24 அறைகள் கிடைக்கும். 25 அறைகளில் சிவாயநம் என்ற அடுக்கு மந்திரத்தில் நடுவே ம எனும் எழுத்து வருமாறும் ஓம் என்று ஒலிக்குமாறு செய்து ஜெபம் செய்ய வேண்டும். கோடுகள் வரைந்து எழுத்துகள் அமைத்து மனத்தால் ஜெபம் செய்வது உத்தமம். வரிசையைக் குறிக்க வீதியில் தொடக்கம் முதல் 24 அறைகளின் மேல் எண்கள் இடப்பட்டுள்ளன.

 

1

2

3

4

5

6

7

 
 

ஹ்யம்

ஸம்

ப்3ரும்

ஹ்வம்

ஹ்லம்

க4ம்

ஈம்

 

24

வம்

சி

வா

ஹ்விம்

8

23

ச1ம்

சி

வா

ஹ்ரும்

9

22

ர்ரும்

ஓம்

சி

வா

ஹ்யைம்

10

21

நம்

வா

சி

ஹஹ்

11

20

க3ம்

சி

வா

ளம்

12

 

ந்ரும்

யம்

ப4ம்

ச1ம்

அஹ்

அம்

ரம்

 
 

19

18

17

16

15

14

13

 

பீஜ எழுத்துக்களின் தெய்வங்கள்

1.ஹ்யம்- வாயு, 2. ஸம்- மகாகாளன், 3. ப்3ரும்- பிருங்கி, 4. ஹ்வம்- வீரபத்ரன், 5. ஹ்லம்- பிரமன், 6. க4ம்- குபேரன், 7. ஈம்- ஈசானன், 8.ஹ்விம்- திருமால், 9.ஹ்ரும்- உருத்திரன், 10. ஹ்யைம்- மகேச்வரன், 11.ஹஹ்- சதாசிவன், 12. ளம்- இந்திரன், 13. ரம்- அக்னி, 14. அம்- விந்து, 15. அஹ்- நாதம், 16. ச1ம்- சண்டன், 17. ப4ம்- பைரவன், 18. யம்- இயமன், 19. ந்ரும்- நிருதி, 20. க3ம்- கணபதி, 21. நம்- நந்தி, 22. ர்ரும்-இயமன், 23. ச1ம்- முருகன், 24. வம்- வருணன்.

 

திருவம்பலச்சக்கரத்திற்குத் துணை திரிமண்டலச்சக்கரம்

வித்துஆம் சகமயம் ஆகவர கீறி ஆர்கலைகள் பதினாறு நாட்டிப்பின்

உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலைதொகும் பத்தாம் பிரமசடங்கு பார்த்து ஓதிடே.

 

சந்திரமண்டலம்

சந்திரகலை 16 க்கும் இடப்பக்கம் மூன்றாம் அடுக்கு முதல் 6 ஆறாம் அடுக்குவரை அடுக்கிற்கு நான்கு அறையாக 16 அறை அமையும். க்ஷ முதல் ட1 வரை உரிய எழுத்துக்கள் அடைக்கப்பெறும். சந்திரக் கலைகள் அமாவாசை முதல் பவுர்ணமி வரை உள்ள கலைகள் பதினாறு. இவை திதிகள் தோறும் உலகில் பயிர் முதல் அனைத்து உயிர்களிலும் ரசாயன மாற்றங்கள் தரவல்லவை. இடதுகால் பெருவிரல் தொடங்கி 6 ஆதாரங்களிலும் கத்தரிப் பின்னல் போல் இடம் வலம் மாறி வந்து புருவ மத்தியில் இணைவது இடா எனும் சந்திர நாடியாகும். உணர்வால் எழுப்பி பாவனையால் தியானித்தால் 16 சந்திர கலையும் தலையில் அடங்கும். கால் பெருவிரல், சுவாதிட்டானம், அநாகதம், இடது மூக்கு ஆகியவற்றில் இடது பக்கமாகவும் பிற ஆதாரங்களில் வலப் பக்கமாகவும் சந்திரநாடி உணரப்படும்.

 

சூரிய மண்டலம்.

வலப்பக்கம் முதல் அடுக்கு முதல் மேலிருந்து கீழாக ஆறு அடுக்கிலும் அடுக்கிற்கு இராண்டு அறைகளாக 12 அறைகளிலும் சூரியனுக்கு உரிய 12 கலைகளின் எழுத்துக்களும் எழுதவும். ஞ முதல் எ வரை ஓதிவர வேண்டும். சூரிய கலைகள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் சூரியன் கதிர்கள் 12 வகை வெப்பம் தந்து பயிர் முதலிய உயிர்களுக்கு வளர்சிதை மாற்றங்கள் தருவனவாகும். வலக்கால் பெருவிரல் தொடங்கி 6 ஆதாரங்களிலும் இடம் வலமாகப் பாம்புப் பிணையல் போல் பின்னி வலமூக்கு துவாரத்தில் உணர்வுக்கு வந்து புருவ மத்தியில் கூடும் பிங்கள நாடிதான் சூரிய சக்தி நாடி. உணர்வால் எழுப்பி பாவனையால் தியானித்தால் 12 ராசிகளின் சூரிய கலையும் தலையில் அடங்கும். கால் பெருவிரல், சுவாதிட்டானம், அநாகதம், இடது மூக்கு ஆகியவற்றில் வலது பக்கமாகவும் பிற ஆதாரங்களில் இடப் பக்கமாகவும் பிங்களநாடி உணரப்படும்.

 

அக்னி மண்டலம்.

அக்னிக்குரிய 10 கலைகளும் ஓம் முதல் உ முடிய செல்லவும். அக்னிக்குரிய பத்துக்கலைகள் சக்தி வடிவமானவை. விழித்தல், உறங்கல், கனவு முதலிய பத்துவித அவத்தைகளும் தரவல்லவை. மூலாதாரத்தில் தொடங்கி ஒன்றில் ஒன்றாக மூன்றடுக்கில் நடுவில் இருக்கும் சுழுமுனை நாடி மணிப்பூரகத்தில் உணர்வுக்கு வரும். அதனினும் தனித்து மார்பு நடுவிலும் தியானிக்கப்படும். ஓம் என்ற பிராணவத்தைக்கூறி உணர்வு மயமாக்க வேண்டும். சூரிய சந்திர அக்னி நடிகளை பிராணாயாமத்துடன் இணைந்து அறீயும் போதே அனுபவத்திற்குவரும். அப்போது புருவ நடுவில் ஒளி உணரப்படும். இடம் வலது இல்லாது உணரப்படுவது நடுநாடியாகிய அக்னி சுழுமுனைநாடியேயாகும்.

 

திரிமண்டலச் சக்கரம்

     

+

+

     

1

+

+

+

+

0

0

1

2

ரு

+

ரூ

+

லு

+

லூ

+

0

0

2

3

க்ஷ

*

0

0

3

4

ச1

0

ஒள

0

4

5

ப1

த3

0

அம்

0

5

6

த1

ட1

க1

0

அஹ்

0

6

               

 

சந்திர மண்டலம்

இடப்பக்கம் 3ம் அடுக்குமுதல் நான்கு நான்கு அறைகளாக 6ம் அடுக்குமுடிய உள்ளது.  *என்ற பிறைக்குறி சந்திரமண்டலத்தைக் குறிக்கும். இடமிருந்து வலமாக ஒவ்வோர் அடுக்கிலும் நன்கு அறைகளை வரிசையாக உச்சரிக்க வேண்டும். தொடக்க எழுத்து க்ஷ ஆகும் முடிவு ட ஆகும்.

 

சூரிய மண்டலம்

வலப்பக்கம் முதல் அடுக்கு தொடங்கி கீழுள்ள ஆறாம் அடுக்கு வரை அடுக்கிற்கு இரண்டு அறைகளாகப் பன்னிரு அறைகள் கொண்டது. எ, ஐ, ஒ, ஓ, ஒள, அம் அஹ், க, த, ச, ஞ, எ என்ற வரிசையில் இடவலம் இணைந்து மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் உச்சரிக்கவும். அடையாளமாக 0 என்ற குறி குறிக்கப்பட்டுள்ளது.

 

அக்னி மண்டலம்

மேலே உள்ள இரண்டும் நடுவில் முதல் இரு அடுக்குகளில் நான்கும் இடப்பக்கம் 2, 1 ஆகிய அடுக்குகளில் நான்கும் ஆகப் பத்து அறைகள். தொடக்க எழுத்து லூ, ள, ஆ, அ, ஈ. லு, ரூ, ரு ஊ, உ என்று வரிசையாக உச்சரிக்க வேண்டும். அக்னியைக் குறிக்க + குறிக்கப்படுள்ளது.

மூன்று அடுக்குகளிலும் சொல்லும் உச்சரிக்கும் முறையானது சந்திரமண்டலம் எனவும், சூரிய மண்டலம் எனவும், அக்னி மண்டலம் எனவும் வடிவங்கள் உருவாவதையும் மனதில் நினைக்க. உடல் முழுவதுமான சூரிய சந்திர அக்னி சக்திகளை தலையில் சந்திரனையும், மார்புநடுவே சூரியனையும், மூலாதாரம் அல்லது தொப்புளாகிய மணி பூரகத்தில் அக்னியையும் தியானிப்பதுண்டு.

நவகுண்டம் ஆனவை நான் உரை செய்யின் நவகுண்டத்து உள்ளெழும் நற்றீபம் தானும்

நவகுண்டத்து உள்ளெழும் நன்மைகல் எல்லாம் நவகுண்டம் ஆனவை நான் உறைப்பேனே

உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும் நகைத்தெழு நாள்கோணம் நன்மைகள் ஐந்தும்

பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே மிகைத்த்ழு கண்டங்கள் மெலறியோமே.

யாககுண்டங்கள்போல உடம்பிலும் ஒன்பது இடங்கள் யோகத்தால் யாகம் செய்வதற்கு ஒப்பனவை. இது நவகுண்டங்கள் எனப்படும். அவை ஆதாரங்கள் ஆறும், இந்திரயோனி (உள்நாக்கு) ஒன்றும், பிரம்ம நாளம் (உச்சித் துளை) ஒன்றும், நிராதாரமாகிய துவாதசாந்தத்து எல்லை (மணோன்மணி) ஒன்றும் ஆகிய ஒன்பது.

மேலறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள் கால் அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர்

பார் அறிந்து அண்டம் சிறகற நின்றது நான் அறிந்து உள்ளே நாடிக்கொண்டேனே.

கொண்ட இக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய் அண்டங்கள் ஈரெழும் ஆக்கி அழிக்கலாம்

பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம் இன்று சொல்நூலாய் எடுத்துரைத்தேனே.

மூலாதாரத்தில் ஓம் ஒலி எழுப்பவும் சுழுமுனை நாடியில் காற்று உட்புகவும் இடாபிங்களா இருநாடிகளும் ஒளி பெறவும் தியானம் பழகுவோரின் உடல் ஒளியாகி உயரும்.

மாட்டிய குண்டத்தின் உள்எழு வேகத்துள் ஆட்டிய கால் ஒன்றும் இரண்டும் அலர்ந்திடும்

வாட்டிய கை இரண்டும் ஒன்று பதைத்து எழ நாட்டும்- சுரர்- இவர் நல் ஒளி தானே.

நல் ஒளியாக நடந்தது உலகு எங்கும் கல் ஒளியாக கல்ந்து உள் இருந்திடும்

சொல் ஒளியாகத் தொடர்ந்த உயிர்க்கு எலாம் கல் ஒளி கண்ணுளும் ஆகி நின்றானே.

குண்டம்- மூலாதாரம். வாதம்- பிரணவமாகிய ஓம், கால்- காற்று, ஒன்று- சுழுமுனை நாடி, இரண்டு- பிங்களா நாடி, அலர்ந்திடும்- விரியும், பதைத்து எழ- ஒளி பெறும். பிரபஞ்சம் முழுவதும் நலம் தரும் ஒளியாகப் பரவி நடந்துவரும் ஒளியானது சாணைக் கல்லில் படும் ஒளிபோல் பிரணவத்தைச் சொல்வதன் மூலம் என் உள்ளே தோன்றுகிறது. கண்ணில் ஒளியாக இருந்து காணச் செய்வதும் அதுவே. பிரபஞ்சம் முழுவதும் பரவிய அணுக்களிலிருந்து கண்னுக்குப் புலப்படா ஒளிகள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருப்பதால் நட்சத்திரம் சூரியன் பிறகோள்களின் ஒளியாகவும் செயல்படுகின்றது. ஓம் முதலிய மந்திர ஒலிகளை உச்சரிக்கும் போது நமக்குள் மந்திர ஓசையின் ஒளிகள் வெளிப்படும். அண்ட வெளியில் உள்ள ஒளிகளை மந்திர ஓசைகள்தான் வாங்கி நமக்குள் அந்த ஒளிகளை உற்பத்தி செய்கின்றன. பிரபஞ்சம் முழுவதையும் ஓசையும் ஒளியுமாக நிறைந்திருப்பது கடவுளின் சிவதாண்டவம். நின்ற இக்குண்டம் நிலை ஆறு கோணமாய் பண்டையில் வட்டம் பதைத்து எழும், ஆறாறும்

கொண்ட இத்தத்துவம் உள்ளே கலந்து எழ விண்ணுளும் என்ன எடுக்கலும் ஆமே. வட்டம்-பிரணவம், இத்தத்துவம்- நாத தத்துவம், மூலாக்கினி உள்ள மூலாதாரத்தில் ஓம் எனும் ஒலியை யாக குண்டம்போல் ஒலிக்க அறுகோணம் உடைய மார்பு நடுவே அது வரும்- அங்குள்ள ஆகவநீயத் தீயால் மேலும் உய்ரே சென்று காருகபத்திய நெருப்பில் கலந்து நிற்கும். 36 தத்துவங்களால் ஆன உடம்பை அந்த நாதம் தன் வயமாக்கிக் கொள்ளும். உடம்பு ஆகாய்த்தில் பறக்கும் அளவிற்கு இலேசாகி நிற்கும்.

 

உடலில் ஒளித்தானங்கள் நான்கு

1.தட்சிணாக்கினி ஜோதிர்லிங்கம்- மூலாதாரம்

2.பஞ்ச பூத நெருப்புத்தானம்- மணிப்பூரகம்

3.ஆக்வநீய ஜோதிர்லிங்கம்- அநாகதம்

4.காருகபத்திய ஜோதிர்லிங்கம்- ஆக்ஞை

பிரபஞ்ச ஒளிகளையும், சூரிய சந்திர நட்சத்திரக் கோள் ஒளிகளையும் அணுக்கள் வெளியிடும் ஒளியையும் இந்த நான்கு பகுதிகளும் தன்வயம் செய்து கொள்கின்றன. புற ஒளியால் மின்சக்தியும், பூமி சுழற்சியால் வரும் காந்தசக்தி கால் விரல்கள் வழியாகவும் உடலில் செறிந்து உள்ளன. கைவிரல் வழியாக புறஒளிகள் செல்லும். மூச்சுக்காற்றாலும் பிராணன் எனும் சக்தியாலும் இவை தூண்டப்படும். உடலுக்கு வெளியில் பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஒளியை நிர்விகார (பிரிவுபடாத) குண்டலினி எனவும், உடம்பில் பல இடங்கலில் பல முயற்சிகளால் உண்டாகும் ஒளியை விகார (பிரிவுபட்ட) குண்டலினி எனவும் கூறுவர். மூச்சுக் காற்றாலும் பிராண சக்தியாலும் இந்தக் குண்டலினி சக்தியாலும் உடம்பில் நான்கு வகை வாக்குகள் உண்டாகும்.

மூலாதாரத்தில்- சூக்கும வாக்கு

மணிபூரகத்தில்- பச்யந்தி வாக்கு

அநாகதம்- மத்யமா வாக்கு

விசுத்தியில்- வைகரி வாக்கு

சூக்கும வாக்கு என்பது பிரபஞ்சத்தில் உள்ள நாதமாகும். பிரபஞ்ச ஒலியே பிரபஞ்ச ஒளியாய் உடம்பில் உள்ளவற்றை அடைந்து பெருகுகின்றன. இதை மனம் பெருக வைக்கின்றது. நான்கு வகை வாக்குகள் உண்டாக மனமே காரணம். கற்பனையில் உண்டாவதால் ஸங்கற்பம் எனப்படும். பேச்சாக வரும் வாக்கே வைகரி வாக்காகும். மனத்தின் அழுத்தமும் தவ வலிமையும் வைகரியில் தம் ஆதிக்கத்தைச் செலுத்தும்போது அப்பேச்சு எதையும் சாதிக்கும். சாபமும், வரமும், ஆசியும் அதனால் விளையும் காரணம் இதுவாகும். சொல்லையே சக்தியுடையதாக்கும்போது நினைப்பை மட்டும் மவுன ஒலியாக்கி இந்தமாதிரி நால்வகை வாக்குத்தானங்களில் உயரச் செய்யும்போது தவலிமை, யோகவலிமை, யாக வலிமை ஆகிய யாவும் ஆகும்.

எடுக்கின்ற பாதங்கள் மூன்று எழுகையும் கடுக்கின்ற முகம் இரண்டு, ஆறுகண் ஆகப்

படித்து எண்னும் நாஏழு, கொம்பு ஒரு நாலு, மடுத்து எழுகண் ஆனது அந்தம் இலாற்கே.

மூன்று கால் ஏழு கை இரண்டு முகம் ஆறுகண், ஏழுநாக்கு, நான்கு கொம்பு என அக்னிக்கு புராண வடிவு உண்டு. இதுவே உடலில் தோன்றும் அக்னி இடச் சிறப்பாகும். நம் உடல் காருகபத்தியம் முதலிய மூன்று ஜோதிர்லிங்க நெருப்புகள். கொம்புகள் நான்கு வாக்குத் தானங்கள். முகம் இரண்டு என்பன அடி முடியாகிய இரு தானங்கள், ஆறு கண்கள் என்பன ஆறு ஆதாரங்கள். ஏழுகை என்பன நெருப்பு வெளிப்படும் ஆதார மையங்களும் சகஸ்ராரம் ஆகும்.

பத்து எட்டு அங்கு எட்டு இட்டு நால்கிட்டு மூன்று அதன்

மட்டு இட்ட குண்டம் மலர்ந்துஎழு தாமரைக்

கட்டு இட்டு நின்று கலந்த மெய் ஆகமம்

பட்டு இட்டு நின்றது பார்வதி பதியாலே.

பத்து இதழ் தாமரையான மணிப்பூரகம். எட்டு இதழ் தாமரையான அநாகதத்தின் உட்பகுதித்தாமரை, நான்கு இதழ்கொண்ட மூலாதாரம். இந்த மூன்றிடங்களிலும் வளர்க்கப்படும் யாக குண்டம் சகஸ்ராரம் உட்பட் ஏழு ஆதாரங்களிலும் விரிந்து ஆகமத்தில் கூறியதுபோல் சிவாக்னியாய் சிவனுடன் இணைந்தது.

அஞ்சிட்ட கோலம் அளப்பன் ஐஐந்தும் மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங்குஇருத்தலால்

பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர் கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.

யாக நெருப்பை வளர்த்து அனுபவப்பட்டவர் முத்தி அடைவார்.

சேர்ந்த கலை அஞ்சும், சேரும்மின் குண்டமும் ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்

பாய்ந்த ஐம்பூதமும் பார்க்கின்ற வன்னியைக் காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.

மாயையால் பிரபஞ்சம் முழுவதும் பரவிய ஒளிக்கூறுகள் ஐந்தும் எல்லாத் திசைகளிலும் உள்ள குண்ட மின் ஒளிகளும், காரணமான பூதங்களும், இவைகளால் உடலில் உள்ள யாக நெருப்பும் (வன்னி) என அதில் ஈடுபட்டவர் சிவத்தோடு கலந்தவர் ஆவார். நிவர்த்தி, பிரதிஷ்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதம் ஆகிய ஐந்தும் ஒளிக் கூறுகள் எனப்படும்.

பார்த்த இடம் எங்கும் பரந்து எழுசோதொயை ஆத்தம் அதுஆக்வே ஆய்ந்து அறிவார் இல்லை

காத்து உடல் உள்ளே கருதி இருந்தவர் மூத்து உடல் கோடி உலம்கண்டவாறே.

பிரபஞ்சம் முழுவதுமாகப் பரந்துள்ள சோதியைச் ஆப்தமாக நம்பி உடம்பில் யோகத்தால் சோதியை எழச்செய்து கோடியுகம்வரை மரணமிலாது வாழ்வர்

 

நவ குண்ட வடிவங்கள்

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்

பயங்கண்டு கொண்ட இப்பாய் கரு ஒப்பச் சகங்கண்டு கொண்டது சாதனமாமே.

சாதனம் நாலு தழல் மூன்று வில்வயம் வேதனை வட்டம் வினை ஆறு பூநிலை

போதனை போது ஐஞ்சு பொற்கய வாரணம் நாதனை நாடு நவகொடி தானே.

சிவனை அடைய உடம்பில் உள்ள நவகுண்டங்கள் யாகசாலைகளிலும் கூறப்பட்டு அமைக்கப்படும். 1. நாற்கோண சதுர குண்டம், 2.ஆகவநீயம் முதலிய முக்கோண குண்டம், 3. வில் போல் வளர்பிறைக் குண்டம் 4. ஆகாயம்போல வட்ட வடிவக் குண்டம், 5. அறுகோணக் குண்டம், 6. எண்கோணக் குண்டம், 7. அரசிலை போன்ற யோனி குண்டம், 8. தாமரை போன்ற பதும குண்டம், 9. ஐந்து மீன் போன்ற பஞ்ச கோணக் குண்டம்.

யோக நற்சத்தி ஒளிபீடம் தானாகும் யோக நற்சத்தி ஒளிமுகம் தெற்காகும்

யோக நற்சத்தி உதரம் நடுவாகும் யோக நற்சத்திதாள் உத்த்ரம் தேரே.

யோகமாகிய நல்ல சக்தியைத் தரும் பராசக்தி புருவ நடுவாகிய ஒளி மண்டலத்தில் இருக்கின்றாள். அவளின் முகம் மூலாதாரமாகிய தென் திசை. திருவடிகள் வடதிசையாகிய சகஸ்ராரம். உடலின் நடுப்பகுதி நம் வயிற்றில் தொடரும். கீழிருந்து தலை உச்சிக்கு செல்வதால் கீழ்பகுதி முகமாகவும், முடிப்பகுதி திருவடி எனப்பட்டது. பராசக்தியின் வயிற்றில் எல்லாப் பகுதியும் அடங்கும்.

அரே திருவின் திருவடி காண்பர்கள் நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்குக்

கார் ஏய் குழலி கமலமலர் அன்ன சீர் ஏயும் சேவடி சிந்தை வைத்தாளே.

யோக சக்தியாகிய பராசக்தியின் திருவடியை யாரும் காணமுடியாது. மனத்தால் நினைத்து வாயால் ஓதி தியானித்தால் திருவடி சிந்தையுள் வந்து சேரும்.

மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலியார்க்கும் அறியா அரியாள் அவள் ஆகும்

வாக்கும் மனமும் மருவி ஒன்றாய்விட நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே.

பலவித வழிகளை உலகில் உருவாக்கிய மனோண்மணி யாராலும் அறியமுடியாதவள். நம் வாக்கும் மனமும் ஒரு சேர இனைந்து தியானிக்கும்போது அவள் நுண்ணறிவில் தோன்றுவாள். மனம். மொழி, மெய் எனும் மூன்றில் இரண்டு இனையும்போதே செயல் வகையால் உடலும் ஒன்றுவதால் வாக்கும் மனமும் கூடினால் போதும். வாக்கு தனியாகவும் மனம் தனியாகவும் இருந்தால் தியானம் வலிமை பெறாது.

சத்தியும் நானும் சயம்புவும் அல்லது முத்தியை யாரும் முதல் அறி வாரில்லை

அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால் மத்தியில் ஏற வழியது வாமே.

அத்தி- யானை. வித்துஇட-பீஜம் விதயாகிய ஓம் பிரணவத்தைச் சொல்ல, மத்தியில்- நடுவில் உள்ள சுழுமுனைநாடி.  மூலாதாரத்தில் யானை அடையாளம் உள்ளது. அங்கே மூலாக்கினி முக்கோணம் உள்ளது. நடுவே சுயம்பு ஜோதிர்லிங்கம் உள்லது. அதில் குண்டலினி யாகம் மூன்றரை வட்டம் சுற்றித் தன் வாயைச் சுழுமுனை நாடியில் வைத்துள்ளது. யானை அருகே ஓங்காரம் உச்சரித்தால் ஜோதிர்லிங்க ஒளியில் ஓங்கார ஓசை மேலும் விரிந்து குண்டலினி சக்தியால் சுழுமுனை நாடியில் நாதம் விந்து ஆகிய வடிவில் செலுத்தப்படுவதே யோகம் செய்யும் வழி.

ஓர் ஐம் பதின்மருள் தோன்றியே நின்றது பாரம் பரியத்து வந்த பரம் இது

மாரர் குழலாளும் அப்பதி தானும் முன் சாரும் பதம் இது சத்தியும் ஆமே.

ஓதப்படும் 51 எழுத்துக்களில் பராசக்தியே தெய்வம். சிவனும் சக்தியும் இந்த சொற்களில் இணைவர். இது சக்தி ஆகும்.

 

வயிரவர் சக்கர அமைப்பு

அறிந்த பிரதமையோடு ஆறும் அணைஞ்சு அறிந்த இச்சத்தமி மேவி வைகுற்ற

மறிந்து அவை ஒன்றுவிட்டு ஒன்று பத்தாக அறிந்து வலம் அதுவாக நடவே.

நடந்த வயிரவன் சூல கபாலி கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்

தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது படர்ந்த உடல்கொடு பந்தாடலாமே

ஏழு நெடுக் கோடுகளும் ஏழு குறுக்குக் கோடுகளும் வரைய 36 அறைகள் கிடைக்கும். வடமொழி உயிர் எழுத்துக்கள் அ + அஹ தவிர மற்ற எழுத்துக்கள் இருமுறை இரண்டு அறைகளில் எழுதிவர 2+14+14 30 அறைகள் கிடைக்கும். ஓம் ப4ம் பை4ரவாய நமஹ என்ற பைரவர் மூலமந்திரத்தை ஆறு அறைகளில் எழுத வேண்டும். ஒம் என்பதும் ப4 என்பதும் தவிர பை-ர-வா-ய-ந-ம: என ஆறாகப் பிரிந்து மூலமந்திரத்தை எழுது. ஒம் என்பதற்குள் ப4ம் அடங்கி அறைக்குள் ஒடுங்காமல் அருவமாக விரிந்து நிற்கும். அ என்பது அமாவாசைக்குரிய எழுத்து. எனவே அதுமுதல் அம் வரை வளர்பிறையில் ஓதவேண்டும். அ: அஹ இது பௌர்ணாமிக்குரிய எழுத்து. இது முதல் தலைகீழாக ஆ வரை திருப்பிச் சொல்ல வேண்டும். ஒவ்வொருமுறையும் 10 முறை ஓத வேண்டும். வளர்பிறை பிரதமை என்றால் ஆஆ என்று தொடங்குக. அகரத்தை விட்டு விட்டு. இது போல் ஒவ்வொரு திதிக்கும் உரிய எழுத்து மட்டும் தொடங்கி 10 முறை சொல்க. தேய்பிறையாகிய சதுர்த்தசியாகிய 14ம் திதியில் ஆஆ என்று தொடங்கி 10 முறை கூறுக. மற்றதை விடுக.

பைரவர் சக்கரத்தை மார்பில் பதியுமாறு மனத்தால் கோடிட்டு தன்னையே வயிரவராகப் பாவித்து வயிரவர் மூலமந்திரத்தை சொல்லவும். தன் பகைவரின் அறிவை மாற்றி அவர் உயிரை உண்டு உடலை பந்தாடும் வல்லமை வரும்.

 

வயிரவர் (பைரவர்) சக்கரம்

 

1

2

3

4

5

6

 
 

 

20

21

22

23

24

7

19

லூ

32

33

வா

ஓம்

34

25

8

18

லூ

31

பை

36

ம:

35

26

ஒள

9

17

லு

30

அஹ

29

அம்

28

அம்

27

ஒள

10

 

லு

ரூ

ரூ

ரு

ரு

 
 

16

15

14

13

12

11

 

1ம் இடத்தில் அ மட்டும் 30ஆம் இடத்தில் அஹ மட்டும் தனியாகவும் பிற இடங்களில் ஓர் எழுத்து இராண்டு முறையாகவும் இருப்பதை 2முதல் 29 அறை முடிய உணர்க. பைரவர் நாமம் எண் வரிசைப்படி உச்சரிக்கும் முறையாகும். ஓம் ப4ம் பை4ரவாய நமஹ. 31ம் அறைமுதல் 36 வரை நாமம் உள்ளது. முதலில் சொல்ல வேண்டிய ஓம் நடுவில் 33 அறையில் உள்ளது.

 

சாம்பவி மண்டல சக்கரம்

சாம்பவி மண்டலச்சக்கரம் சொல்லிடில் ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேலதாம்

காண்பதம் தத்துவ நாலுள் நயனமும் நாம் பதம் கண்டபின் நாடறிந்தோமே

நாடறி மண்டலம் நல்ல இக்குண்டத்துக் கோடறி வீதியும் தொடர்ந்துள் இரண்டழி

பாடறி பத்தடன் ஆறுநடுவீதி எடற நால் ஐந்து இடவகை யாமே.

நாலைந்து இடவகை உள்ளதோர் மண்டலம் நாலு நல் வீதியுள் நல்ல இலிங்கமாய்

நாலுநற் கோணமும் நந்நால் இலின்ஹ்கமாய் நாலுநற் பூநடு அண்ணல் அவ்வாறே.

ஆறிது பத்துநால் அஞ்செழுத்து அஞ்சையும் வேறுருவாக விளைந்து கிடந்தது

தேறி நிருமல சிவாய நமவென்று கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.

1

லி

2

லி

3

4

லி

5

லி

6

7

லி

8

லி

28

லி

1

2

3

4

5

6

9

லி

27

20

1

2

3

4

7

10

26

லி

19

12

லி

லி

லி

5

8

11

லி

25

லி

18

11

லி

லி

6

9

12

லி

24

17

10

9

8

7

10

13

23

லி

16

15

14

13

12

11

14

லி

22

லி

21

லி

20

19

லி

18

லி

17

16

லி

15

லி

ஒன்பது கோடுகள் குறுக்கு நெடுக்காய் அமைத்து 64 அறைகள் செய்க. நடுவே நான்கு அறைகளில் 4+1 லிங்கம் இடவும். அதை சுற்றீய 12 அறைகள் உள் வீதியும் அதை சுற்றிய 20 அறைகள் கொண்ட நடு வீதியையும் அதை சுற்றிய 28 அறைகள் கொண்ட வெளி வீதியையும் காண்க, ஆக 28+20+12+4=64 அறைகள் இருக்கும். வெளி வீதியில் மையத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு இரண்டு லிங்கங்களும் நான்கு மூ;லைகளிலும் மூன்று மூன்று லிங்கங்கலும் ஆக 25 லிங்கங்களும் பிற இடங்கலில் எழுத்துமாய் அமையும். லி என்று எழுதிய அறாஇகலில் 25 லிங்கங்கள் இடுக. வெளிவீதி 28ம், நடுவீதி 29ம், உள்வீதி 12ம், நடு அறைகள் நான்கு. மொத்தம் 28+20+12+4= 64 அறைகள். எண் வரிசைப்படி 28, 20. 12 என சுற்றிவருக. நடுவே 5 லிங்கம் இருக்கும்.

 

சாம்பவி மண்டலச் சக்கரம் வேறு

1

2

3

4

5

6

7

8

28

1

2

ட1

3

ட2

4

ட3

5

ட4

6

9

27

20

ஜ2

1

க்ஷ

2

ஓம்

3

சி

4

வா

7

த1

10

ச*

26

19

ஜ1

12

லி

லி

லி

5

8

த2

11

25

18

ச2

11

க4

லி

லி

6

9

த3

12

24

17

ச1

10

க3

9

க2

8

க1

7

10

த4

13

23

16

15

ப4

14

ப3

13

ப2

12

ப1

11

14

22

21

20

19

18

17

16

15

லிங்கம் உள்ள இடம் முறையே வெளிவட்டத்தில் 1.2.4.5.7.8.9.11.12.14.15.16.18.19.21.22.23.25.26 ஆகும். உச்சரிக்கும் முறை.

1. உள் வீதியில் 2 முதல் 7 வரை உள்ள ஓம் சிவாயநம என்பதை மூன்று முறை உச்சரிக்கவும்.

2. உள் வீதியில் 8 ஆம் அறை முதல் 12 ஆம் அறை முடிய உள்ள க1, க2, க3, க4, ங எழுத்துக்களை ஓம் சேர்த்து கூறு.

3. நடுவீதியில் 17 ஆம் அறை முதல் 20 வரை ச1, ச2, ஜ1, ஜ2 என்பவற்றைக் கூறிப் பிறகு 1 ஆம் அறை முதல் 16 ஆம் அறை முடிய முறையே ஞ, ட1, ட2, ட3, ட4, ண, த1, த2, த3, ந, ப1, ப2, ப3, ப4, ம வரை ஓம் சேர்த்து சொல்லி நடு வீதியை முடிக்கவும்.

4. வெளிவீதியில் 24, 27, 3, 6, 10, 13, 17, 20, ஆகிய எட்டு அறைகளிலும் முறையே ய, ர, ல, வ, ச, ஷ, ஸ, ஹ ஓம் சேர்த்து சொல்லுக. மீதி உள்ல க்ஷ எனும் எழுத்தை உள் வீதி 1 ஆம் அறையில் வைத்து ஓம் சேர்த்து முடிக்கவும். ச என்பது சிவ என்பதற்கு ஆனது.

 

புவனாபதி சக்கரம்

ககார ஆதி ஓரைந்தும் காணிய பொன்மை அகார ஆதி ஓர் ஆறு அரத்தமே போலும்

சகார ஆதி ஓர்நான்கும் தான் சுத்த வெண்மை ககார ஆதி மூவித்தை காமிய முத்தியே.

க எனும் எழுத்தை முதலாகக் கொண்ட க், ஏ, ஈ, ல, ஹ்ரீம் என்ற ஐந்தெழுத்தும் பொன்னிறமாகும். அகரத்தை முதலாகக் கொண்ட ஹ, ஸ, க, ஹ, ல, ஹ்ரீம் என்ற ஆறு எழுத்துக்கலும் இரத்தம்போல் சிவந்த நிறம். சகரத்தை முதலாகக் கொண்ட ஸ, ஹ, ல, ஹ்ரீம் என்ற நான்கும் வெள்ளை நிறம். இந்த 5+6+4=15 எழுத்துக்களால் ஆன மந்திரம் ‘பஞ்ச தசாட்சரி வித்தை’ எனப்படும். வித்தை- மந்திரம்- ஸ்ரீவித்தை- ஸ்ரீவித்யா எனலாம்.

உருச்செய்து ஓதிப் பக்குவமானபின் ஐம், க்லீம், ஸௌம் என்ற மூன்றையும் அந்த மூன்றின் முன்னர் சேர்த்துக் கூறுவது பாலா மந்திரம் ஆகும். பதினெட்டாண்டுக் காலம் நவாவரண பூசை செய்து பக்குவம் பெற்றபின் காயத்ரி மந்திரத்தையும் இதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். சாக்த சமயத்தின் உயிர் நாடியான் மந்திரம் தேவியாகிய முழுமுதல் தெய்வத்தினுடையது.

உலக வாழ்விற்கு தேவையான முத்தியை (காமிய முத்தி) தருவதால் புவனத்திற்கு அதிபதியானவள் மந்திரம் புவனாபதி சக்கரம் ஆகும்.

வை ஆதியாகக் கொண்ட முதல் ஐந்து எழுத்தும் காதிவித்தை என்றும் ‘வாக்பவகூடம்’ என்றும் கூறலாம்.

வை ஆதியாகக் கொண்ட ஆறு எழுத்துக்களும் ஸாதி வித்தை என்றும் காமகூடம் என்றும் கூறலாம்.

வை ஆதியாகக் கொண்ட நான்கு எழுத்துக்களும் ஹாதி வித்தை என்றும் சக்தி கூடம் என்றும் கூறலாம்.

இராஜேஸ்வரி, காமாட்சி, அபிராமி, லலிதாம்பிகை, லலிதா மஹா த்ரிபுர சுந்தரி என்றும் பலவாறாக அழைக்கப்படும் தேவியின் இடுப்பும், திருவடிகளும் கொண்ட பகுதியை தியானித்துக் கூறுவது ஆகும். இம்மந்திரத்திற்கு முன் ‘ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்’ என்ற சர்வ மங்கள பீஜங்களை இணைக்கவும்.

சர்வமங்கல பீஜங்களும் / பாலாமந்திரமும் / பஞ்ச தசாட்சரியும் இனைந்தது.

ஓம், ஐம், ஹ்ரீம், ஸ்ரீம்-சர்வ மங்கள பீஜம்

ஐம், க, ஏ, ஈ, ல, ஹ்ரீம்-பாலாவுடன் வாக்பவகூடம்

க்லீம், ஹ, ஸ, க, ஹ, ல, ஹ்ரீம்-பாலாவுடன் காமகூடம்

ஸௌ, ஹ, ல, ஹ்ரீம்-பாலாவுடன் சக்தி கூடம்

இந்த முழுமையான மந்திரத்தை தேவியின் மேனியில் பதித்து பதிய வைக்கும் முறை.

ஓம்- இரு திருவடிகளும் இணைந்தது

ஐம்- இடுப்பு அல்லது யோனி

ஹ்ரீம் - நடுமார்பு

ஸ்ரீம்- நெற்றி

ஐம்- வலது கண்

க- இடது கண்

ஏ- வலக்காது

ஈ- இடக்காது

ல- மூக்கு

ஹ்ரீம்- வாய்

க்லீம்- வலது வெளித்தோள்

ஹ- இடது வெளித்தோள்

ஸ- வலது உள்தோள்

க- இடது உள்தோள்

ஹ- வலது முலை

ல- இடது முலை

ஹ்ரீம்- தொப்புள்

ஸௌ- யோனி

ஸ- வலது தொடை

ஹ- இடது தொடை

ல- வலது திருவடி

ஹ்ரீம்- இடது திருவடி

ஆலயத்திருமேனியிலோ, விக்ரஹங்களிலோ, படத்திலோ ஓதி பழகி பிறகு தம் உடல் உறுப்புகளை தேவியின் உறுப்புகளாக பாவித்து ஓதவும். மந்திர தீட்சையாக இதைப் பெற்று ஓதவும். இதை தெரிந்தவர் பிறர் ஒருவருக்கு தெரிவிக்காமல் இறக்கக் கூடாது.

 

தீட்சைபெற வழி.

1.நவாவாரண பூசையை படித்து உணருதல்.

2.அந்தப்பூசையை வீட்டில் செய்து வணங்குதல்

3.மூன்று பவுர்ணமிகளில் ஸ்ரீ லலிதாம்பிகை பூசையை தொடர்ந்து காணுதல்

4.அர்த்தமேரு, மகாமேரு எனும் ஸ்ரீ சக்ர வடிவத்தை உணர்ந்து மனதில் பதியவைத்தல்.

5.தட்சிணாமூர்த்தி, அகத்தியர், துர்வாஸர், லோபமுத்ரா முதலிய தெய்வ சன்னதிகளில் மூன்று தொடர் வெள்ளிக்கிழமை தியானம் அர்ச்சனை பிரார்த்தனை செய்தல்.

6.அகத்தியரால் பிரதிஷ்டை செய்த திருக்குற்றாலநாதர் கோவில் ஆதிபராசக்தி பீடமாகிய மகாமேருவின் முன் தியானம் அர்ச்சனை யாகம் யோகம் பிரார்த்தனை செய்தல்.

7.காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, புதுக்கோட்டை புவனேஸ்வரி, திருக்கடவூர் அபிராமி, காசி விசாலாட்சி, இராஜராஜேஸ்வரி, லலிதாம்பிகை, திரிபுர சுந்தரி, நீலாயதாட்சி- நாகை, வேல் நெடுங்கண்ணி- சிக்கல், முதலிய திருமேனிகளை நாள்தோறும் பூசை செய்யும் அர்ச்சகர் மூலம் இம்மந்திரம் சொல்லக் கேட்டல்.

8.இவைகளைச் செய்யும்போது கனவில் இதை நாம் செய்வதாகவோ, வெறுப்பதாகவோ, பார்ப்பதாகவோ காட்சியைக் கண்டால் தீட்சை பெற்றதாக கருதி மந்திரம் ஓதலாம்.

ஓர்இல் இதுவே உரையும் அத்தெய்வத்தைத்தேரின் பிறிது இல்லை யான் ஒன்று செப்பக்கேள்

வாரித் திரிகோண்மனம் இன்ப முத்தியும் தேரில் அறியும் சிவகாயம் தானே.

ஏகம் பராசக்தி ஈசற்கு ஆம் அங்கமே ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே

ஏகம் பராசக்தி ஆக சிவகுரு யோகம் பராசக்தி உண்மை எட்டு ஆமே.

எட்டு ஆகிய சக்தி எட்டு ஆகும் யோகத்துக் கட்டு ஆகி நாதாந்தத்து எட்டும் கலப்பித்தது

ஒட்டாத விந்துவும்தான் அற்று ஒழிந்தது கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே.

ஏதும் பலம் ஆம் இயந்திராசன் அடி ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு

நீதங்கும் அங்கநியாஸம் தனைப்பண்ணி சாதம் கெடச் செம்பில் சட்கோணம்தான் இடே.

புவனாபதிக்குரிய சக்கரம் முக்கோணமாகிய ஓர் இல்லமே. இத்தெய்வத்துக்கு நிகர் எதுமில்லை. இவ்வுலக இன்பமும் முத்தியும் தரும் சிவன் திருமேனியே முக்கோணம் எனக் கருது.எட்டுவித சக்திகளாக பராசக்தி விளங்குகின்றாள். சிவனுக்குரிய உறுப்பாக இருப்பதுவே பராசக்தியாவாள். அவள் வடிவம் என்பது பஞ்சதசாட்சரி மந்திரமே. இதற்கு சிவனே குரு. இதைப் பாவிக்க சித்தியும் முத்தியும் யோகமும் கிட்டும்.எட்டுப் பிரிவாகிய பராசக்தியே அட்டாங்கயோகத்திலும் அடங்குபவள். அவள் நாதாந்தம் வரை கலந்து நிற்பாள். நாதத்தில் ஒட்டாமல் பிரிந்து விந்துவாகிய ஒளி யோகியின் தான் என்ற அகங்காரப் பற்று விட்டுபோகும். நாதாந்தம் புருவ மத்தியின்மேல் 13 விரல் அளவு, எட்டாவது நிலையாகும்.எல்லாப் பயனும் தரவல்ல யந்திரங்களுக்குள் அரசராய் விளங்கும் இப்புவனாபதி சக்கரத்தை குருவின் உப்தேசம் பெற்று அங்க நியாசம் செய்து செம்புத் தகட்டில் செய்த இச்சக்கரத்தை பாவித்தல் வேண்டும். வெள்ளி, தங்கத்திலும் சக்கரம் பதிக்கலாம். அங்க நியாசம் என்பது மந்திர ஒலி எழுத்துக்களால் பூசை செய்யும்போது உடல் உறுப்புக்களை தொட்டு தடவி புனிதமாக்கிக்கொள்ளல் ஆகும்.

சட்கோணம் தன்னில் சிறீஇறீதான் இட்டு அக்கோணம் ஆறின் தலையில் இரீங்காரம் இட்டு

எக்கோணமும் சூழெழில் வட்டமிட்டுப்பின் மிக்க ஈரெட்டு அக்கரம் அம்முதல் மேல் இடே.

இட்ட இதழ்கள் இடை அந்தரத்திலே அட்ட ஹ இட்டு அதன்மேலே உ இட்டு

இட்ட இதழ்களின் மேலே கிரோம் சிரோம் விட்டு அவ்வாமத்து ஆம்கிரோம் என்று மேலிடே.

மேவிய சக்கரம் மீது வல்த்திலே கோவை அடைவே குரோம்சிரோம் என்று இட்டு

தாவில் ரீங்காரத்தால் சக்கரம் சூழ்ந்து பூவைப் புவனா பதியைப் பின் பூசியே

அறுகோணம் இட்டு அதில் ஆறு முக்கோண்ங்களிலும் ஸ்ரீம் ஹ்ரீம் என்ற ஒலிகளாஇ எழுது. அந்த ஆறு கோணங்களின் உச்சித் தலையிலும் ஹ்ரீம் இடுக, இதைச் சுற்றி இரு வட்டங்கள் இட்டு அதை எட்டு அறைகளாக்கு. பதினாறு உயிர் எழுத்துக்களையும் ஓர் அறைக்கு இரண்டு இரண்டாக அம் ஆம் என் மகரத்துடன் இணைத்து நிரப்பு. வட்டத்தின்மேல் எட்டு தாமரை இதழ்கள் வட்டத்தைத் தாங்கி நிற்பது போல் இடுக. அந்த இதழ்கள் சந்திக்கும் இடைவெளிகளில் ஹூம் என்ற மந்திரம் இடுக, இதழ்கள் எட்டின் உள்ளும் க்ரோம் ஸ்ரோம் என்ற ஒலிகளை இடுக. இதழ்களின் இடப்பக்கங்களில் ஆம், க்ரோம் என்ற ஒலிகளை இடுக. எட்டு இதழ்கலின் வலப் பக்கத்திலும் க்ரோம் ஸ்ரோம் என இடுக. இவற்றின் பின் சக்ர வட்டமாக இதழ்கள் ஒவ்வொன்றின் மேலும் ஹ்ரீம் என்பதை நான்கு முறை வளைய வரும்படி எழுது. இந்தச் சக்கரம் பூசிப்பவர் தம் மனத்தில் தேவியை ஆவாஹனம் எழுந்தருளச் செய்து யந்திரத்திற்கு பிராணப்பிரதிட்டை எனும் சடங்கு செய்து தேவிக்கு செம்பட்டு உடை உடுத்தவும். அங்குசம், பர்சம், கரும்பு, வில். மலரம்பு, அபயகர வரத கரங்களை நினைக்கவும். பால் அன்னம் படைக்கவும். பூசைக்குரிய நமவஷட், வௌஷட், ஸ்வதா, ஸ்வாஹா, ஹூம்பட் எனும் ஆறுவகை மந்திரங்களும் செய்து பூசிக்கவும்.

 

நவாக்கரி சக்கரம்

நவாக்கரி சக்கரம் நான் உரை செய்யின் நவாக்கரி ஒன்று நவாக்கரி ஆக

நவாக்கரி எண்பத்து ஒருவகையாக நவாக்கரி அக் கிலீ சௌ முதல் ஈறே.

சௌமுதல் அவ்வொடு ஹௌஉடன் அம் க்ரீம் கௌவுகளும் ஐயுளும் கலந்து ஹ்ரீம் ஸ்ரீம்

என்று ஒவ்வில் எழும் க்லீம் மந்திர பாதமாச் செவ்வுள் எழுந்து சிவாயநம என்னே.

நவ அட்சரிம் என்பது தமிழில் மருவி நவாக்கரி ஆனது. ஒன்பது சக்திகளின் அட்சர மந்திரம். ஒவ்வொன்றையும் முதலாக்கிக்கூற 81 அட்சரங்கள் ஆகும். முதல் வரிசையில் க்லீம் முதல் சௌம் வரை. அட்சரங்கள் இடம் மாறும்போது ஒளியும் நிறமும் மாறும்.

ஒன்பது வரிசையில் ஒவ்வொரு வரிசையும் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் கூறியபின் ஓம் சிவாயநம என முடிக்கவும்.

மேலிருந்து கீழாக கூறுதல்

க்லீம்

ஸ்ரீம்

ஹ்ரீம்

ஐம்

கௌம்        

க்ரீம்

ஹௌம்

ஔம்

சௌம்

கீழிருந்து மேலாக கூறுதல் முடிக்கும்போது ஓம் சிவாய நம என முடிக்கவும்.

நவாக்கரியாவது நானறிவித்தை நவாக்கரி உளெழு நன்மைகள் எல்லாம்

நவாக்கரி மந்திர நாவுளே ஓத நவாக்கரி சக்தி நலம்தரும் தானே.

நலந்தரு கல்வியும் ஞானமும் எல்லாம் உரம்தரும்வல்வினை உம்மை விட்டோடிச்

சிரம் தரு தீவினை செய்வது அகற்றி வரம்தரு சோதியும் வந்திடும் காணே.

நான் அனுபவித்த மந்திரம் வித்தை இது.நாவுக்குள் மௌனமாக இதை ஓதினால் நன்மைகள் தரும். நவாக்கரி என்பது உள் எழு நன்மை என்பதால் உடம்பிற்குள் சார்த்தி சொல்லல் ஆகும். இந்திரயோனி- உள்நாக்கு, பிரம்மநாளம்- தலைஉச்சி. நவாக்கரி சக்கரம் ஓதுவதால் கல்வி ஞானம் முதலிய செல்வமும் வலிய வினை நீக்கமும் தீவினைகள் வராமல் செய்வதும் ஆகிய வரம் தரும் உள் ஒளி உண்டாகும்.

 

நவாக்கரி அட்சரம் உடல் உள்ளே சார்த்துமிடம்.

க்லீம்- மூலாதாரம்

ஸ்ரீம்- சுவாதிட்டானம்

ஹ்ரீம் - மணிப்பூரகம்

ஐம்- அநாகதம்

கௌம் - விசுத்தி

க்ரீம்- இந்திரயோனி

ஹௌம்- ஆக்ஞா

ஔம்- நெற்றி உச்சி

சௌம்- பிரம்ம நாளம்

மேலிருந்து சொல்லி கீழிருந்து மேல்வரை சொல்லுவது ஒரு முறையாகும்

நினைந்திடும் அச்சிறீம் அக்கிலீம் ஈறா நினைந்திடும் சக்கரம் ஆதியும் ஈறும்

நினைந்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே நினைந்திடும் அர்ச்சனை நேர்தருவாளே

ஸ்ரீம் என்பதை முதலாகவும் க்லீம் என்பதை இறுதியாகவும் இச்சக்கரம் ஓதி நெல்லும் அருகம்புல்லும் தூவி அர்ச்சனை செய்க பராசக்தி அருள் புரிவாள். முதலில் இருந்த க்லீம் இதில் இறுதியானது. இரண்டாவதாக இருந்த ஸ்ரீம் முதலாவதானது. இதுபோல் ஒன்பது ஒலிகளும் முதலும் ஈறும் ஆகும்.

ஹ்ரீம் முதலாகவும் ஸ்ரீம் இறுதியாகவும் சொல்வதால் நாடாளும் அரசரும் வசமாவர்.

ஐம் முதலாகவும் ஹ்ரீம் இறுதியாகவும் சொல்வதால் நால்வகை வாக்கைன் சக்தியை அடியலாம். மேலும் வேதம் ஆகமம் ஆகியன பயிலாம்.

கௌம் முதலாகவும் ஐம் இறுதியாகவும் சொல்வதால் பகையை வெல்லலாம் ஓதிய்வர்களை பல உயிர்களும் வணங்கும்.

க்ரீம் முதலாகவும் கௌம் இறுதியாகவும் சொல்வதால் தெய்வ உறவாகி மழையும் செல்வமும் தரும்.

ஹௌம் முதலாகவும் க்ரீம் இறுதியாகவும் சொல்வதால் திருஐந்து எழுத்து ஓதி பயன் பெறுவர். மனோன்மணியின் அருள் கிடைக்கும்.

ஔம் முதலாகவும் ஹௌம் இறுதியாகவும் சொல்வதால் சுழுமுனை நாடியை வசம் செய்யும் அமுதேச்வரியின் அருள் கிடைக்கும்.

சௌம் முதலாகவும் ஔம் இறுதியாகவும் சொல்வதால் தலையில் சோதி விளக்காக பராசக்தி தெரிவாள்.

ஏய்ந்த மர உரி தன்னில் எழுதிநீ வாய்ந்த இப்பெண் எண்பத்தொன்றில் நிறைந்தபின்

காய்ந்த அவிநெய் எள்கலந்து உடன் ஓமமும் ஆம்தலத்து ஆம் உயிர் ஆகுதி பண்ணே

மர உரியில் ஒன்பது பீஜங்களையும் ஒன்பது வகையாக எழுதி ஓமத் தீயில் நெய்யும் எள்ளும் வார்த்து உயிரையே நெய்யாகத் தருவதாய் எண்ணி ஆகுதி செய்க. காய்ந்த வாழை மரப்பட்டையில் நெய்யில் குங்குமம் கரைத்து நவாக்கரிச் சக்கரம் 9வகை 81 வருமாறு வரிசையில் தனித்தனியே எழுது. தீ வளர்த்து ஓமகுண்டத்தில் ஒன்பதுவகை சமித்துக்களும் எரிய விட்டு நெய்யும் எள்ளும் தெளித்து எரியச் செய்து ஒவ்வொரு வகைச் சக்கரமாகத் தீயில் இடு. செம்பு, வெள்ளி தங்கத்தில் எழுதினால் குங்குமம் சந்தனம் கஸ்தூரி சவ்வாது புனுகு நெய் ஆகிய திருமஞ்சனம் அர்ச்சனை செய்க. யாகம் செய்த பலன் தரும். சிவன் போல் மேனி உண்டாகும்.

1

2

3

4

5

6

7

8

9

க்லீம்

ஸ்ரீம்

ஹ்ரீம்

ஐம்

கௌம்

க்ரீம்

ஹௌம்

ஔம்

சௌம்

ஸ்ரீம்

ஹ்ரீம்

ஐம்

கௌம்

க்ரீம்

ஹௌம்

ஔம்

சௌம்

க்லீம்

ஹ்ரீம்

ஐம்

கௌம்

க்ரீம்

ஹௌம்

ஔம்

சௌம்

க்லீம்

ஸ்ரீம்

ஐம்

கௌம்

க்ரீம்

ஹௌம்

ஔம்

சௌம்

க்லீம்

ஸ்ரீம்

ஹ்ரீம்

கௌம்

க்ரீம்

ஹௌம்

ஔம்

சௌம்

க்லீம்

ஸ்ரீம்

ஹ்ரீம்

ஐம்

க்ரீம்

ஹௌம்

ஔம்

சௌம்

க்லீம்

ஸ்ரீம்

ஹ்ரீம்

ஐம்

கௌம்

ஹௌம்

ஔம்

சௌம்

க்லீம்

ஸ்ரீம்

ஹ்ரீம்

ஐம்

கௌம்

க்ரீம்

ஔம்

சௌம்

க்லீம்

ஸ்ரீம்

ஹ்ரீம்

ஐம்

கௌம்

க்ரீம்

ஹௌம்

சௌம்

க்லீம்

ஸ்ரீம்

ஹ்ரீம்

ஐம்

கௌம்

க்ரீம்

ஹௌம்

ஔம்

யாகத்தில் இதை ஆஹுதி செய்யும்போது ஒன்பது உடல் உள் உருப்புக்களிலும் இந்த ஒலிகலைச் சொல்லி செய்யவும். ஒன்பது வரிசைகள் ஒவ்வொன்றையும் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் ஓதி ஓமம் செய்க.

 

யோகம் செய்யும் முறை

நெறிவழியே சென்று நேர்மையுள் ஒன்றி தறி இருந்தாற் போலத் தம்மை இருத்திச்

சொறியினும் தாக்கினும் தூண் என்று உணராக் குறிஅறிவாளர்க்கு கூடலும் ஆமே.

கம்பம்போல் உடல் ஆடாமல் அசையாமல் மூலாதாரம் முதல் தலை உச்சியாகிய சகஸ்ராரம் வரை மேல்நோக்கி உள் உணர்வைச் செலுத்த வேண்டும். உடலைப் பிறர் கீறினாலும் தாக்கினாலும் திடுக்கிட்டு உணர்வு கலையாமல் குறிக்கோளாகிய சிவத்தையே அடையும் முயற்சிய விடாதவர்க்கு யோகம் கைகூடும்.

பேணிற் பிறவா உலகருள் செய்திடும் காணில் தனது கல்வியுளே நிற்கும்

நாணில் நரகநெறிக்கே வழிசெயும் ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே.

இயற்கையிலேயே எல்லா உடலிலும் மயிர்க்காம்பு தோறும், அணுக்கள், திசுக்கள் தோறும் நெருப்பு மேல் நோக்கிப் போகிறது. மூச்சுக்காற்று இரத்தத்தின் மூலம் எல்லா அணுக்களிலும் சென்று அங்கே எரிகிறது, உண்ட உணவு செரிமானத்திற்காக எரிகிறது, இதற்கு மூலமான ஒளியே குண்டலினிதான். அவ்வப்போது மின் காந்த அலைகள் உடம்பிற்குள் புகுவதாலும் நிறைய ஒளித்துகள்கள் நம் உடல் முழுவதும் உள்ளன. இதனால் நம் உடம்பு சுடுகிறது. எனவே உடலில் உள்ள தீயும் பிரபஞ்சத்தில் உள்ள தீயும் ஒன்றே ஆகும். இதனால் உடம்பு தீயை வைச்வாநரன் எனலாம். விசுவமாகிய பிரபஞ்சம் முழுவதும் நரன் உடம்பிலும் உள்ள அக்னி என்பதாகும். தீயின் இயல்பு மேல் நோக்கிப் போவது. யோகமும் மேல்நோக்கி போகும்போது நெருப்பின் வேகம் கூடும். ஓரிடத்தில் திரண்டு செல்லும். இப்படி திரட்டி ஒரே ஒழுங்காக அக்னியை எழுப்பினால் யோகம் சித்தியாகும். நினைவினால் உண்டாகும் தீயும் மந்திர ஒலிமூலம் உண்டாகும் தீயும் முன்பே உடலில் மேல் நோக்கிப்போகும் தீயும் ஆகிய முத்தீ தட்சிணாக்னி, ஆகவநீயம், காருகபத்தியம் ஆகும். இதுவே சந்திர சூரிய அக்னி மண்டலங்களாகும். உடம்பைச் சுடும் அந்த நெருப்பு சிவமாகிய நெருப்பே. உலகின் எல்லா ஒளிக்கும் சிவமே காரணம்.

யோகச் சமாதியின் உள்ளே அகலிடம் யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி

யோகச் சமாதியின் உள்ளே உளசக்தி யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.

சமாதி யோகம் செய்பவர் உள்ளே பிரபஞ்சம் முழுவதும் அடக்கம். சிவ ஒளியைக் காண்பர். பராசக்தியை உணர்வர். யோகச் சமாதியை மகிழ்ந்து ஏற்பவர் சித்தர்களே.

தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன் பூங்கமழ் கோதைப் புரிகுழலாளொடும்

ஆங்கது சேரும் அறிவுடையார்கட்குத் தூங்கொளி நீலம் தொடர்தலும் ஆமே.

எந்த ஆதாரத்திலும் நிற்காமல் தனித்து தொங்குவது போல் நீல ஒளி தொடர்ந்து உயர்ந்து யோகியர்க்கு சகஸ்ராரத்தில் நீலச் சுடர் ஒளியாய் பராசக்தி காட்சி தருவாள்

நாகமும் ஒன்று படர் ஐந்து நால்-அது போகமும், புற்றில் பொருந்தி நிறைந்தது

ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து ஏகபடம் செய்து உடம்பு இடல் ஆமே.

தூல உடல் சூக்கும உடல் என்ற இருவகை உடலாக செயல்படும். தூல உடலில் குண்டலினி சக்தி ஐந்து விதமான பொறிகள், புலன்கள், அனுபவங்கள் ஆகியவற்றைப் படம்போல் விரித்து ஆடிப்பாடிச் செய்வது சராசரியான வாழ்வு. சூக்கும உடலில் அதே குண்டலினி படம் எடுத்து புலன் அனுபவம் எதுவும் கொள்ளாமல் தூல உடம்பையே மறந்து யோகம் செய்து வாழ்வது இன்னொருவகை. நான்கு என்பது அந்தக்கரணங்கள். ஐந்தலைப்பாம்பு என்பது குண்டலினியையும் புலன் நுகர்ச்சி அனுபவம் ஆகியவையாம். அவை சுருங்கும்போது யோக சித்தி கிட்டும்.

ஆறு அந்தமும் கூடி ஆடும் உடம்பினில் கூறிய ஆதாரம் ஆறும் குறிக்கொள்மின்

ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலாக ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்தாமே.

ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல் போகும் உடம்பும் பொருந்தியவாறுதான்

ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம் ஆகும் உடம்புக்கும் ஆறந்தமாமே.

ஆறு அத்துவாக்களால் உடம்பில் செறிந்துள்ள ஆறு ஆதாரங்களையும் குறித்து அவற்றில் 51 அட்சரங்களையும் சொல்லவும். அது ஓம் எனும் மந்திரப் பொருளை அதிகமாக்கும். மந்திரம் பதம் வன்னம் முதலிய அத்துவாக்கள் ஆறு. அத்துவா என்பது வழி எனப்படும். இந்தவழி மூலம் நாம் செய்யும் யோகம் வெற்றி அடையும். 51 அட்சரங்களின் தனி ஒளி நிறம் ஆகியவை ஓம் எனும் மந்திரத்தில் பதிந்து வலுப்பெறும்.

ஆயும் மலரின் அணிமலர் மேலதும் ஆய இதழும் பதினாறும் அங்கு உள

தூய அறிவு சிவானந்தமாகிப்போய் மேய அறிவாய் விளைந்தது தானே

இலிங்கம் அது ஆகுவது ஆரும் அறியார் இலிங்கம் அது ஆகுவ எண்திசை எல்லாம்

இலிங்கம் அது ஆகுவ எணெண் கலையும் இலிங்கம் அது ஆகஎடுத்து உலகே

ஆய் செய்யும் மலர் அநாகதம் ஆகிய இதயத்திற்கும் மேலுள்ள 16 இதழ்த் தாமரை என்பது விசுத்தி-இந்த இடத்தில் ஐம்பெருங்கலைகளில் நான்காம் கலையாகிய சாந்திகலை இங்கு தொடங்குகிறது. எளிய அறிவு சிவானந்தம் உண்ரும் சிவஞானமாகிப்போய் சிவமே ஆக்கும் சாந்தியாதீத கலையாக மாறும். அண்ட லிங்கம் என்பது எது. எட்டு திசைகளும் 64 கலைகளும் வழங்கும் உலகமே ஒரு லிங்கம். அதில் உள்ள எல்லாவற்றையும் சக்தி, சக்தியற்றபொருள், உயிர் உடம்புகள், நடப்பன, இருப்பன முதலிய எல்லாவற்றையும் ஒன்று திரட்டி உணர்வதே அண்ட லிங்கம்.

தரையுற்ற சக்தி தனிலிங்கம் விண்ணாம் திரைபொரு நீரது மஞ்சன சாலை

வரைதவழ் மஞ்சுநீர், வான்உடு மாலை கறையற்ற நந்தி கலையுந்திக்கு ஆமே.

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்

மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே

தரையாகிய நிலமே ஆவுடையாராகிய சக்தி, பாணலிங்கம் ஆகாயம், கடல் திருமஞ்சனசாலை, மேகநீர் மஞ்சனநீர். வானின் நட்சத்திரங்கள் மாலைகள் திக்குகள் எட்டும் ஆடையாகும் என அண்டலிங்கத்தை பாவிக்கும் முறையாகும். மனித உடலின் அமைப்பே லிங்க வடிவாகும். சிதம்பரமாகிய சிதாகாசம் மார்பு நடுவில் உள்ளது. சக்தியும் சிவமும் ஆகிய சதாசிவம் புருவ நடுவில் தலையில் உள்ளது. இறைவன் திருக்கூத்தாகிய ஒளிச்சுடரையும் மனித உடலியே காணலாம். எனவே சிவலிங்கம் எனப்பட்டது. பத்மாசனம் இட்டு அமர்ந்திருந்தால் உடல் வடிவம் லிங்க வடிவாவது தெரியும்.

உலந்திலர் பின்னும் உளர் என் நிற்பர் நிலம்தரு நீர்தெளி உள்ளவை செய்யப்

புலம்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக வலம்தரு தேவரை வந்தி செய்யீரே.

மரணமிலாப் பெருவாழ்வுக்குரிய ஒரு வழி. உடலில் உள்ள ஐந்து பூதங்களின் பகுதிகள் புலனுக்கும் அறிவுக்கும் தொடர்புடையவை. அவற்றை உடம்பில் உணர்ந்து இவைகளுக்குக் காரணமான ஒரு பொருளையும் உணர்ந்து அப்பொருள் தெய்வமென வந்தனை செய்தால் பயன் கிடைக்கும்.

கோயில் கொண்ட அன்றே குடிகொண்டது ஐவரும்

வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர்

தாய் இல்கொண்டாற்போல் தலைவன் என்னுள்புக

வாயில் கொண்டு ஈசனும் ஆளவந்தானே.

ஆன்மா உடலாகிய கோவிலுக்குள் வரும்போது அந்த ஐந்து பூதங்களும் இவ்வுடம்பில் மரணமில்லா இடம் பெற்று இருக்கின்றனர். ஐந்து பொறிபுலன்களை உருவாக்கி ஆன்மாவிற்கு இவ்வுலக் வாழ்வுக்கான அறிவைத் தந்து வருகின்றன். தாய் சேய்க்கு பால் தருவதுபோல் இறைவன் இந்த உடம்பாகிய வீட்டிற்கு வந்து ஞானமாகிய பாலை வழங்குவான்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்

தெள்ளத்தெளிந்தார்க்குச் சிவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே

மானுடர் உடல் சிவலிங்கம், யோகியார் உள்ளமே கருவறை. உடம்பே திருக்கோயில்கள் பகுதியாம். திருநாமத்தை ஓதும் அவர் வாய் கோபுர வாசல். நுணுகி அறிந்தோர்க்கு உயிரே சிவலிங்கம். மயங்கி நின்ற புலன்கள் ஐந்து மாணிக்க ஒளிவிளக்காகும். காளம் என்றால் நஞ்சு. அது உறைந்து நாகரத்தினம் ஆவதுபோல் ஐந்தலைநாகமாக ஐந்து புலன்களும் குண்டலினியை மேம்படுத்தும்.

படமடக் கோவில் பரமற்கு ஒன்று ஈயின் நடமாடு அக்கோயில் நம்பற்கு ஒன்று ஆகா

நடமாடு அக்கோயில் நம்பற்கு ஒன்று ஈயின் படமாடு அக்கோயில் பரமற்கு அது ஆமே.

தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது

கொண்டது மூன்று புவனமும் கொண்டதுதென்று எண்திசை நந்தி எடுத்துரைத் தானே.

கோயிலில் அமர்ந்த இறைவனுக்கு ஒன்றைச் செய்வார்களே அல்லாமல் இறைவனை நெஞ்சில் நிறுத்திய அடியார்க்கு எதையும் செய்யார்கள். அடியார்களுக்கு ஒன்று செய்தால் அதுவே இறைவனுக்கும் செய்வது ஆகும். இறைவன் விரும்பி இருக்கும் இடமடியர் மனமே. தவம் செய்வோர் தாம் மனம் மகிழ்ந்து ஒன்றை உண்டால் அது மூன்று உலகங்களும் மகிழ்ந்து உண்டதற்குச் சமம். அதுபோல் அவர்களுக்கு ஒன்று கொடுக்க அவர்கள் அதை ஏற்றுக் கொண்டால் அதுவும் மூன்று உலகமும் ஏற்றுக்கொண்டதேயாகும்.

வித்தகமாகிய வேடத்தர் உண்ட ஊன் அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்

சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே

சித்தம் சிவமாகத் தெளிந்தஞானியர் உண்டது போக எஞ்சியதைப் பருகினால் மூத்தியடைந்ததேயாகும். எல்லாவற்றிற்கும் மூலகாரணமான கடவுள்.

என்தாயோடு என் அப்பன் ஏழ் ஏழ் பிறவியும் அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்

ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில்வண்ணாண் நேர் எழுத்தாயே.

ஏதோ ஒரு பிறவியில் என்தாய் தந்தை இருவரும் ஏழ் பிறவியிலும் சிவனுக்கு நான் அடிமை என்று அன்றே ஆவணம் எழுதி விட்டனர். பிரம்மா ஆவணம் தயாரித்தவன் திருமால் சாட்சிக் கையெழுத்திட்டவன் ஆவர்.

வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம் வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்

வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே ஆக்கும் அச்சுத்தத்தை யார் அறிவார்களே.

மவுன விரதம் என்பது வாக்கும் மனமும் அடங்குவதே. மவுனத்தில் பேசுவதால் ஊமையானது. சிலர் மவுனத்தின்போது பார்வையாலும் சைகையாலும் எழுதிக் காட்டுவதாலும் சில குறிப்புக்கலைப் புலப்படுத்துவர். அது மவுனமாகாது. குறைந்த ஒளியுள்ள தனி அறையில் கண்கலையும் மூடியபடி இறைவன் நாமத்தை மட்டும் நினைத்தவராய் இருப்பதே மவுனத்தில் சிறந்தது.

சீவன் எனச் சிவனார் என்ன வேறு இல்லை சீவனார் சிவனாரை அறிகிலர்

சீவனார் சிவனாரை அறிந்தபின் சீவனார் சிவன் ஆயிட்டு இருப்பாரே.

ஆன்மாவும் சிவனும் வேறல்ல. சிவனைச் சீவன் அறியும் போது சீவனே சிவனாகிவிடும்.

அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை

அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.

புலன்கள் ஐந்தும் அடக்கு அடக்கு என்பர். தேவர்கள் கூட ஐந்தும் அடக்கி இருப்பதில்லை. ஐந்து புலன்களையும் அடக்கினால் உயிருக்கு அறிவு வரும் வாயில்கள் அடைபட்டு அறியாமை உண்டாகும் என்பதால் ஐந்தையும் அடக்கிப் பழகாமல் அறிவை அறிந்தேன். மனம் அடக்க அடக்க வலிமையாகி நம்மை மீறும். நம் சக்தி வீணாகும். எனவே எப்போதும் பரந்து விரிவதை இயற்கையாகக் கொண்ட மனத்தை பிரபஞ்சம் அளவுக்கு விரியச் செய்து கொண்டே போனால் நமக்கு நல்ல அறிவு வரும்.

முழக்கி எழுவன மும்மத வேழம் அடக்க அறிவென்னும் கோட்டையை வைத்தேன்

பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக் கொழுத்தன வேழம் குலைக்கின்றவாறே.

ஐந்து புலன்களை ஒடுக்க அறிவு எனும் கோட்டையைக் கட்டினேன். அந்தக் கோட்டையையே மும்மதம் கொண்ட களிறுகள் கடந்து வந்து கரும்புக் காட்டை நாசமாக்கின. மூன்று மதங்கல், மும்மலம், மூன்று மாயை இவைகளுக்கு கட்டுப்பட்டது மனம்.

ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அரும்தவம் ஆவது

ஐந்தில் ஒடுங்கில் அவன்பதம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே.

ஐந்து புலன்களை அடக்குவதற்குப் பதில் ஒடுக்கினால் அதாவது நம் வழியே அதை நடக்கச் செய்தால் அது பிரபஞ்சம் முழுவதும் கருதியது ஆகும். அதுவே தவம், திருவடி ஆகும் அது செய்வோர் இறையருள் பெறுவர்.

பெருக்கப் பிதற்றின் என் பேய்த்தேர் நினைந்து என்

விரித்த பொருட்கு எலாம் வித்து ஆவது உள்ளம்

பெருக்கின் பெருக்கும், சுருக்கின் சுருக்கும்

அருத்தமும் அத்தனை, ஆய்ந்து கொள்வார்க்கே.

கானல்நீர் போல் மாயையாகிய உலகக் காட்சிகளை நினைத்து ஒரு பயனும் இல்லை. பிரபஞ்சம் முழுவதும் விரிந்த பொருள்கள் எல்லாவற்றையும் நம் உள்ளம் உற்று அறிவது ஆகும். உள்ளத்தைப் பிரபஞ்சம் அளவு பெருகச் செய்தால் பெருகும். சுருங்கச் செய்தால் சுருங்கும். மனதில் கற்பித்துக் கூறிய ஒருசொல் நினைவு பிரபஞ்சத்தில் எங்கேயோ உள்ள ஒரு பொருளைச் சென்று அடையும். அப்பொருளுக்கு மனமே விதையாகும்.

நடக்கின்ற நந்தியை நாடோறுமுன்னிப் படர்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்

குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கு மனக் கோயிலாமே.

எல்லா உயிர்களிலும் இயங்கும் சக்தியாக உள்ள இறைவனை நாள்தோறும் நினைத்துப் பழகவேண்டும். அப்போது மனம் பல இடங்களிலும் பரந்து செல்லும். அதை மெலிதாக ஒடுக்கி ஆறு ஆதாரம் சுழுமுனைநாடி ஆகிய குறிக்கோள் தானங்களில் செலுத்துமாறு நினைத்தால் தெற்காகிய மூலாதாரமும் வடக்காகிய சகஸ்ராரமும் ஒன்றுபட்டு மனத்தால் அமைந்த கோயிலாகும். ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றில் இருந்து நெருப்பும், நெருப்பில் இருந்து நீரும், நீரில் இருந்து நிலமும் உண்டாகின. கீழ் இருந்து மேல் நோக்க பிரிந்தது தன் கரணத்தில் ஒடுங்கும். ஆறு ஆதாரங்களின் இடமறிந்து கீழிருந்து மேலாக பெயர் மந்திர எழுத்துடன் சொல்லி நினைத்தால் உணர்வு அசைவது தெரியும்.

போற்றிசைத்தும் புனிதன் திருமேனியே போற்றிசெய் மீண்டே புலனைந்தும் புத்தி ஆம்

நால்திசைக்கும் பின்னை ஆற்றுக்கும் நாதனை ஊற்றுகை உள்ளத்து ஒடுங்கலும் ஆமே

இறைவன் திருமேனியை நினைத்து அவன் திருமேனியாக நாம மந்திரத்தை அடிக்கடி சொல்லி வந்தால் புலன்கள் ஒடுங்கி புத்தியாக மாறும். திரு ஐந்தெழுத்து முதலான மந்திரங்களே இறைவன் திருமேனி மந்திரங்கல் ஆகும். எட்டெழுத்து திருமாலுக்கும் ஆறு எழுத்து முருகனுக்கும் பதினைந்து எழுத்து பராசக்திக்கும் உரியது. உடலின் நான்கு புறமும் உள்ள நாடிகளுக்கும் நடுவே உள்ள ஆறு போன்ற சுழுமுனை நாடிக்கும் இறைவனே தலைவன். அவன் பெயரை உள்ளத்தில் ஊற்று எடுக்க வைத்தால் உள்ளம் அவனுடன் ஒடுங்கி நிற்கும். எல்லா நாடிகளுக்கும் ஆறுபோல் இணைப்பானது. அது அமுதம் வரும் வழியாகும்.

கைவிடல் ஆவது ஒன்று இல்லை கருத்தினுள் எய்தியவனை இயல்பினால் ஏத்துமின் ஐவருடைய அவாவினில் தோன்றிய பொய்வருடு ஐய புலன்களும் ஐந்தே.

புலன் ஒடுக்கத்திற்காக எதையும் கைவிட்டு ஓட வேண்டாம். கருத்தில் வந்துள்ள இறைவனின் இயல்புகளைப் புகழ்ந்துரைப்பீராக. ஐந்து பொறிகளின் விருப்பத்தால் பொய்யான மாய புலன்கள் ஐந்து உள்ளன. பொய்யானவற்றை நீக்கி மெய்யான இறைவனை துதித்தால் மனம் ஒடுங்கும்.

நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே

ஆயத்தவர் தத்துவம் உணர்ந்தாங்கு அற்ற நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே

பரிசன வேதி பரிசித்தது எல்லாம் வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்

குருபரி சித்த குவலயம் எல்லாம் திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே

அன்பில் நிறைந்து நிற்பவன் இறைவன் மலமில்லாத அன்பை அவன் அருள்வான். தத்துவம் 36ம் உணர்ந்து அவற்றின் மாயையில் சிக்காது நீங்கி வாழ்பவர்க்கு வீடுபேறு அளிக்கும் குருவாக இறைவனே வருவான். அவன் சுத்தனாகவும் நித்தனாகவும் இருப்பதால் அவன் மீது கொண்ட அன்பும் அந்த இயல்பு உடையதாகும்.

உலோகங்கள் எல்லாவற்றையும் பரிசத்தால் பொன்னாக்கும் ஒரு மருந்து பரிசனவேதி எனும் ரசாயனம். இது எல்லாவற்றையும் பொன் ஆக்குவதுபோல் குருவின் பரிசம் பட்ட உலகம் சிவனாக இருக்கும்.

உள்ளிடும் ஐம்மலம் பாச உணர்வினால் பற்ரு அற நாதன் அடியில் பணிதலால்

சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டி தற்பரம் மேவுவோன் சாதகனாமே.

ஐந்து மலம் பந்தபாசம் ஆகியவற்றை உணர்வினால் நீக்கி இறைவன் திருவடியில் பணியும்போது மூன்று விதத்துரியம் காட்டி பிறகு சிவமாகவே நிற்பவே சாதகன். ஐந்து மலமான ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதயி.என்பன.

உயிர் அது வேறா உணர்வு எங்கும் ஆகும். உயிரை அறிவியல் உணர்வு அறிவு ஆகும்,

உயிர் அன்று, உடலை விழுங்கும் உணர்வை அயரும் பெரும் பொருள் ஆங்கு அறியாரே

உயிரும் உயிருக்குக் காரண்மானவைக்கு வேறாக உணர்வு என்பதும் உடல் முழுவதும் பரவி உள்ளது. உயிரையும் அதற்கு காரணமானவற்றையும் பிரித்து அறியும்போது உணர்வு என்பது உடலில் தனித்து இயங்குவதையும் உணரலாம்.உயிருக்கு அப்பால் உடலை முழுவதும் உணர்ச்சிவயமாக்கும் ஒரு பெரிய பொருளைப் பலர் அறிவதில்லை. பெரிய பொருள் கடவுள்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே

சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந் துய்மினே.

உயிர்குலம் யாவும் ஒன்றே. கடவுள் எல்லா உயிர்க்கும் ஒருவனே என உணர்ந்து பேதமில்லா அன்பில் ஊன்றி நின்றவர்கலுக்கு யம பயமில்லை. மரணமில்லாது வாழலாம். பேதங்களால் வெறுப்பு, பகை முதலிய தீய உணர்வுகள் தோன்றும். மேற்கண்டவாறு நினைத்தால் நல்ல உணர்வே தோன்றும் என்பதால் நன்றே நினையுங்கள்.

காயப்பை ஒன்று சரக்குப் பலவுள மாயப்பை ஒன்று உண்டு மற்றுமோர் பையுண்டு

காயப்பைக்கு உள்நின்ற கள்ளன் புறப்பட்டால் மாயப்பை மண்ணாய் மயங்கியவாறே.

சென்ற பிறவியில் செய்த விணைகள் இப்பிறவியின் உடலுக்குக் காராணமாகி நம் வடிவமைப்பு வாழ்வு முதலியவற்றைத் தீர்மானிக்கும் காரண உடல், கண்ணுக்குத் தெரியாப் பல உறுப்புகளுடன் இருக்கும் சூக்கும உடல், கண்ணுக்குத் தெரியும் தூல உடல் என்ற மூன்று உடல்கள் பைகளுக்குள் பை இட்டது போல் செறிந்து நமக்குள் உள்ளன. யாவற்றுக்கும் காரணமான இறைவன் இவ்வுடலாகிய பையிலிருந்து வெளியேறிவிட்டால் மற்ற பைகளும் உடலும் மண்ணாகி அழியும். காயப்பை- தூல உடல், மாயப்பை- நுண் உடல், மற்றுமோர்பை- காரண உடல். திசுக்களில் உள்ள குரோமோசோம் (43) ஒவ்வொன்றும் உடலின் செயலையும் வாழ்வையும் வடிவையும் தீர்மானிக்கும். அது காரண உடம்பின் பிரதிநிதி. உடலுக்கு அடிப்படையான தாதுக்களும் அவற்றின் செய்கைகளும் நுண் உடலைச் சர்ந்தவை.

 

புரியட்டகம்

அத்தன் அமைத்த உடல் இரு கூறினில் சுத்தம்- அது ஆகிய சூக்குமம் சொல்லுங்கால்

சத்த பரிச ரூபரச கந்தம் புத்திமன ஆங்காரம் புரியட்டகமே.

எட்டினில் ஐந்தாகும் இந்திருயங்களும் கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்

ஒட்டிய பாசம் உணர்வு அதுவாகவே கட்டி அவிழ்ந்திடும் கண்ணுதல் காணுமே.

நம் உடல் தூலம், சூக்குமம் என இராண்டு பகுதியாகும். சூக்குமம்- சுத்தமாகும். அவை ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்ற ஐந்துடன் புத்தி மனம் அகங்காரம் ஆகிய மூன்றும் சேர்ந்து செய்த எட்டுப் பகுதியாவதால் அது புரியட்டகம் ஆகும். உலகின் மாசுக்கள் படியாததால் சுத்தமாகும். முதல் ஐந்தும் தன்மாத்திரையாகும். இவை புலன் உணர்ச்சியால் அறியத் தக்கவையாம். புல உணர்ச்சியால் அறியத்தக்கவை. தூல உடல் அசுத்தமாகும். நாக்கு சுவையை அறிகிறது. நாக்கு அசுத்தமானாலும் சுவையை உணரும் செயலுக்கு காரணமான நுண் உணர்வு சுத்தமானது. ஐந்து புலன் உணர்வும் ஆகாய அமைப்பால் நமக்குள் தூண்டப்படுகின்றன. எனவே அவைகள் தூயன ஆகும். நம் புலன்கள் வானில் உள்ள செய்கைகளை ஈர்த்திட தூண்டப்படுவனவாகும். இதுப்போல் மனம் புத்தி அகங்காரம் என்ற உள் அமைப்புகளும் வான அமைப்பால் இயங்கப்படுகின்றது. மனம், புத்தி, அகங்காரம் மூன்றும் இருக்கும் இடத்தில் சித்தம் கண்டிப்பாய் இருக்கும் என கொள்க.

தாது ஏழு, புரியட்டகம் எட்டு, கழிவாய் ஒன்பது என்பதாகும்.

இரதம் உதிரம் இறைச்சி தோல்மேதை மருவிய அத்தி வழும்பொடு மச்சை

பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி உருவம் அலால் உடல் ஒன்று எனல் ஆமோ.

ஆரே அறிவார் அடியின் பெருமையை யாரே அறிவார் அங்கவர் நின்றது

யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே.

உணவுமூலம் கிடைத்த சாரம், இரத்தம், தசை, தோல், நிணநீர், எலும்பு, கொழுப்பு, மச்சை, சுக்கிலம் யாவும் அழியத்தக்கன. ஆனால் உடலின் பகுதியாகும். இவற்றுக்கு உருவம் இருந்தாலும் உடல் என்று கூறமுடியாதனவாகும். இவைகள் உபாதியாகும். உபாதி என்பது ஆதியில் தோன்றிய சுத்தமானதிலிருந்து பிரிந்து அசுத்தமாகி வந்தது. அது மாயையிலிருந்து வந்த காரிய உடம்பு ஆகும்.

எண்சாண் அளவாய் எடுத்த உடம்புக்குக் கண்கால் உடம்பில் சுரக்கின்ற கைகளில்

புண்கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற நண்பால் உடம்புதாம் நல் உடம்பு ஆகுமே.

உடம்பு நாலுக்கும் உயிராகிய சீவன் ஒடுங்கும் பரனோடு ஒழியாப் பிரமம்

கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி அடங்கி அவற்றது யார் அறிவாரே.

அவாரவர் விரல்களில் எட்டுச் சாண் உயரம் நம் உடம்பு. இதில் 68 தத்துவங்கள் சேர்கின்றன. 36 தத்துவங்கள் விரிந்தால் தொன்னூற்று ஆறாகும். அவற்றில் தெய்வப்பகுதிகள், அண்டப்பகுதிகள் 28 நீக்கினால் எஞ்சிய 68 பகுதிகள் நம் உடம்பு இங்கு வாழ்வதற்கு தேவைப்படுகின்றன. நான்குவகை உடல் என்பது நனவு, உறக்கம், கனவு, பேருறக்கம் என்ற நான்கு அவத்தைகளின்போது செயல்படும் உடல் பகுதிகளையே நான்கு உடல் என்பர். நால்வகை உடம்புக்கும் உயிராக இருப்பது சிவசக்தி. அச்சக்தி பரம்பெருளுடன் உயிர் நீங்கும் போது ஒடுங்கும். அழியாத பிரம்மம் என்ற பரம்பொருள் எல்லா உடம்பிலும் சூரியன் பரவலாகத் தோன்றுவதுபோல் காட்சியளிக்கும். ஒரு சூரியன் ஒவ்வொரு குளத்திலும் காட்சியளித்தாலும் சூரியன் ஒன்றே. அதுபோல் எல்லா உடம்புகளிலும் பிரம்மம் வியாபித்திருந்தாலும் அது ஒன்றுதான். பிரமத்திலிருந்து வெளியாகும் ஓசை ஒளி முதலிய சக்திகளே எல்லா உயிர்களுக்கும் உயிர் வாழ்வதற்கும் அடிப்படை.

ஆறு அந்தம் ஆகி நடுவுடன்கூடினால் தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்

கூறும் கலைகள் பதினெட்டும் கூடியே ஊறும் உடம்பை உயிர் உடம்பு என்னுமே.

யோக ஆதாராங்களாகிய ஆறுகுள்ளும் நடுவே செல்லும் சுழுமுனை நாடியில் கருத்தைச் செலுத்தி யோகம் முயன்றால் பதினெட்டு உறுப்புகளும் அதன் கலைகளும் சிறப்பாக செயல்படும். பத்துவாயுக்களும் எட்டு நுண் உடம்பு உறுப்புக்களான புரியட்டகம் ஆக 18 உறுப்புகள். 18 கலைகள். பிரசாதக்கலை 12ல் முதல் 8ம் + சிவகலைகள் 10ம் சேர்ந்தனவை.

ஞானிக்கு காயம் சிவமாம் அஞ்ஞானிக்கு ஊன்நிற்கும் காயம் உடம்பு ஆகும் யோகிக்கு

மேல்நிற்கும் காயமே விந்து நாதாந்தமாம் மோனிக்குக் காயம் முப்பாழ் கெட்டழுத்தியே.

ஞானிகள் தம் உடம்பை சிவமாகக் கருதுவர். அஞ்ஞானிகள் ஊன் நிற்பதையே உடம்பு என்பர். யோகிகு தலை உச்சியில் நிற்கும் விந்து நாதம் முடிவாகும். மவுனியாய் இருப்போர்க்கு மும்மலம் நீங்கிய முத்தியானந்தமே உடலாகும்.  

முப்பதோடு ஆறில் முதல்நனா ஐயைந்தாய் செப்பு அதின் நான்காய்த் திகழ்ந்து இரண்டு ஒன்றாகி அப்பகுதி யாகும் நியதி முதலாகச் செப்பும் சிவம் ஈறாய்த் தேர்ந்து கொள்வீரே.

இந்திரியம் ஈர் ஐந்து இசைந்தன மாத்திரை யந்திரம் ஆதிகள் ஐயைந்து ஆன்மாவுடன்

உந்து கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும் வந்த அச்சக்கரப் பாலது ஆகுமே.

நனவு அவத்தையில் இருபத்து ஐந்து தத்துவங்களும், கனவில் நான்கு தத்துவங்களும் உறக்கத்தில் இரண்டும், துரியத்தில் ஒன்றுமாக செயல்படும். தன் மாத்திரைகள் ஐந்து, பூதங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, கன்மேந்திரியங்கள் ஐந்து, அந்தக்காரணங்கள் நான்கு, சீவாத்மாவுடன் புருஷன் ஒன்று ஆக 25 தத்துவங்கள். கனவில் அந்தக்கரணமாகிய தத்துவங்கள் நான்கு. உறக்கத்தில் சித்தமும் சீவாத்மாவும் இரண்டு, பேருறக்க- துரிய நிலை சீவாத்மா ஒன்று. விரிவு நிலை தத்துவங்கள் 35. ஞானேந்திரியங்கள்-5, கன்மேந்திரியங்கள்-5, தன்மாத்திரைகள்-5, வாயுக்கள்-10, அந்தக்காராணங்கள்-4, சீவாத்மா-1. நாக்கு, கைகள், கால்கள், நீர்வாய், மலவாய் ஐந்தும் கன்மேந்திரியங்கள். பேச்சு, கொடுத்தல், செல்லுதல், கழித்தல், ஆனந்தம் ஐந்தும் அவற்றின் செய்கைகள்.

இடவகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை படுபர சேனையும் பாய்பரி ஐந்தும்

உடையவன் மத்திமை உள்ளுறும் நால்வர் அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே

மண்ணில் ஒன்றும் மலர்நீரும் அங்கு ஆகும் பொன்னினில் அங்கி, புகல்வளி, ஆகாசம்

மன்னும் மனோபுத்தி ஆகாசம் ஓர் ஒன்றாய் உன்னி முடிந்தது பூதசெயமே.

கீழால் அவத்தை என்பது மேலிருந்து கீழ்வரை ஒவ்வொன்றாக கருதி முடித்தல். மேலால் அவத்தை என்பது கீழிருந்து மேல்வரை ஒவ்வொன்றாக கருதி முடித்தல் அகும். சிவத்திலிருந்து சிவதத்துவம் ஐந்தும் ஒவ்வொன்றாக பிரிந்து வருவதைக் காண்க.பின் வித்தியா தத்துவம் ஏழும் ஒன்றிலிருந்து அடுத்தது பிரிவதாக கருது. மூலப் பிரகிருதியிலிருந்து மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கும் பிரிவதாக கருது. தன் மாத்திரைகள் ஐந்தும் பூதங்கள் ஐந்தும் ஒன்றில் ஒன்றகப் பிரிந்து வருவதாகக் கருது. ஓசையிலிருந்து ஆகாயமும், தொடு உணர்விலிருந்து காற்றும், ஒளியிலிருந்து நெருப்பும், சுவையிலிருந்து நீரும், மணத்திலிருந்து நிலமும் ஒன்றில் ஒன்று பிரிவதாக கருது. பின் அவைகளால் தூல உடல் உண்டாகியது எனக் கருது. தலயில் இருந்து உடல் வடிவை கருதி இறுதியாக ஒன்பது துவாரங்களை நினைத்து முடிவு செய்வது எண்ணுவது கீழால் அவத்தை.

முதுகுத்தண்டுகீழ்- மூலாதாரத்தில்- நிலம்

சிறுநீர்த்துளை - சுவாதிட்டானத்தில்- நீர்

தொப்புள்- மணிபூரகத்தில்- நெருப்பு

மார்புநடு- அநாகதத்தில்- காற்று

தொண்டைக்குழி- விசுத்தியில்- ஆகாயம்

புருவநடு- ஆக்ஞையில்- நாதவிந்து

அதன்மேல் சதாசிவம், சக்திசிவம் என கருதுக. இது மேலால் அவத்தை. இதனால் ஐம்பூத சித்தியடையலாம்.

முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர் வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்

கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்முன்நாள் இல்லை கன்னியைக் கன்னியே காதலித்தாளே.

முன்னதாக உள் ஆகாயத்தின் தன் மாத்திரை ஒலி இது ஒன்றே, காற்றிற்கு ஒலியும் தொடு உணர்வும் ஆகிய இரண்டும், நெருப்புக்கு ஒலி, ஊறு, ஒளி என மூன்றும், நீருக்கு ஒலி, ஒளி, ஊறு, சுவை என நான்கும், நிலத்துக்கு ஒலி, ஊறு, ஒளி, சிவை, மணம் எனும் ஐந்தும் என கருதி பழகினால் தன்மாத்திரைகளில் வெற்றி அடையலாம். நிலமும் நீரும் பெண்ணாகப் பேசப்படுவதால் வதுவை அன்றும் கன்னி என்றும் சொல்லப்பட்டது. மாயையாகிய கன்னியிலிருந்து வந்ததால் கன்னியைக் கன்னி காதலித்தாள் என்பதானது.

 

தத்துவ சித்தி.

கண்டன ஐந்தும் கலந்தன் தான் ஐந்தும் உண்டனநான்கும் ஒருங்கி உணர்ந்தபின்

பண்டையது ஆகிப் பரந்த வியாக்கிரத்து அண்டமும் தானாய் அமர்ந்து நின்றானே.

ஆதிபரம்சிவம் சக்தி சதாசிவம் ஏதமில் ஈசன்நல் வித்யா தத்துவம்

போதம் கலைகால நியதி மாமாயை நீதியீறாக நிறுத்தினன் என்னே.

தேசு திகழ்சிவம் சக்தி சதாசிவம் ஈசன் அனல்வித்தை இராகம் கலைகாலம்

மாசகல் வித்தை நியதி மகாமாயை ஆசில் புருடாதி ஆன்மா ஈறாறே

கண்ணால் காணத் தகும் ஐந்து பூதங்களும் அவற்றில் கலந்துள்ள ஐந்து தன்மாத்திரைக்ளும் நம் உடலில் உள்ள ஐந்து ஆதாரங்களைக் கொண்டு அவற்றில் மனம் முதலிய நான்கு கருவிகளையும் செலுத்தினால் சொல் பிரபஞ்சத்தில் உள்ள அண்டங்கள் உணரும் தத்துவ சித்தி ஏற்படும். வியாக்கிரம்- சொல் பிரபஞ்சம். ஆன்மாவைத் தனிப்பட உணர்ந்து பஞ்சபூதங்களாகிய தத்துவ உலகத்தைத் தனியாக உணர்வதால் இந்தச் சித்தி ஏர்படும். பிண்டமாகிய உடலே அண்டமாக உள்ளது என உணரலாம். சிவதத்துவம் விதயா தத்துவம் இரண்டும் உடலில் கலந்ததாக கருதுக. சிவன், சக்தி, சதாசிவம், மகேஸ்வரன், சுத்தவித்தை ஐந்தும் சிவதத்துவமாம். அராகம், கலை, காலம், வித்தை, நியதி, மாயை, புருடன் ஏழும் வித்யா தத்துவம் ஆகும். ஆதிபரம்- பிரம்மம். அதுவே சிவம்.

ஆணவமும் மாயையும் கன்மமும் ஆம்மலம் காணும் முளைக்குத் தவிடு உமி ஆன்மாவும்

தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும் பேணும் அவற்றுநின் பாசம் பிரித்தே.

ஆண்வம், மாயை, கன்மம் மூன்றும் ஆன்மா இவ்வுலகில் வாழ உதவி செய்வன.முளைப்பதற்கு உதவி செய்யும் தவிடு உமிபோல் இவை மலமாக இருந்தாலும் ஆன்மா உயரவே வழி செய்யும். ஆன்மா தாணுவாகிய சிவத்தை இறைவனைச் சாராத நிலையில் சொல்லப்படும்.

ஆறு ஆறுக்கு அப்பால் அறிவுஆர் அறிபவர் ஆறு ஆறுக்கு அப்பால் அருள் ஆர் பெறுபவர்

ஆறு ஆறுக்கு அப்பால் அறிவும் ஆம் அவர்கட்கே ஆறு ஆறுக்கு அப்பால் அரன் இனிது ஆமே.

ஆறு ஆதாரங்களைக் கடந்து செல்லும் வழிக்கு மேலே உள்ள அறிவையும் அருளையும் யாரும் அறிவதோ பெறுவதோ இல்லை. அவ்விடத்தில் உள்ள அறிவை அறிந்தவர் இறைவன் சிவன் காட்சியைக் காணும் அருள் பெறுவர். ஆறு ஆறு என்பது 36 தத்துவங்களாகும்.

பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன் அணி பூடணம்

தனனி மறைத்தது தன் கரணங்களாம் தன்னின் மறைந்தது தன் கரணங்களே.

மரத்தை மறைத்தது மாமதயானை மரத்தில் மறைந்தது மாமதயானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே.

தங்கத்தால் செய்த நகையின் அழகு அது தங்கத்தால் செய்யப்பட்டது என்ற உண்மையையே மறைத்து விட்டது. அழகு மெலோங்கியது. தங்கத்தால் செய்யப்பட்டது என்று மட்டும் நோக்கும்போது அழகு மறைந்து தங்கச் சிறப்பு மேலோங்கியது. நம் பொறிபுலன்களை மட்டும் நினைத்தபோது ஆன்மா மறைக்கப்பட்டது. ஆன்மாவை உணரும்போது உடலும் அதன் கருவிகளும் மறைந்து விடும். இவ்விரண்டும் மிக ஐக்கியமாய் இருப்பதே இதன் காரணம். மரத்தால் செய்த யானையின் வடிவமைப்பு அது மரம் என்பதை மறைத்துவிட்டது. மரத்தின் சிறப்பை நோக்கும்போது யானை என்பதே மறைந்து விட்டது. பரம்பொருளே இவ்வுலகமும் பஞ்சபூதங்களுமாக ஆகியது என்பதி பூதங்களை பார்க்கும்போது அதில் பரம்பொருள் மறைந்து விடும். பரம்பொருளை உணர்ந்து பார்க்கும்போது பூதம் முதலிய பொருள்கள் அதற்குள் மறைந்து விடுகின்றன. இதில் வெளிப்படையாகத் தெரிவது காரணங்கள் அல்ல. அவைகளால் வெளிப்படும் காரியங்களே. காரணத்தை நன்கு உணர்ந்தால் காரியத்தில் வந்த குழப்பமும் மயக்கமும் நீங்கித் தளிவு ஏற்படும்.

ஆறாறு அகன்று நமவிட்டு அறிவாகி வேறானதானே யகாரமாய் மிக்கு ஓங்கி

ஈறுஆர் பரையின் இருளற்ற தற்பரன் பேறு ஆர் சிவாய அடங்கும் பின் முத்தியே

முப்பத்தாறு தத்துவங்களையும் மேலால் அவத்தை மூலம் கடந்து ஆன்ம உணர்வு மட்டுமே அறிவுக்கு வருவதாகச் செய்து சிவாயநம என்ற திருஐந்தெழுத்தில் பின் உள்ள நம என்ற எழுத்துகள் இரண்டும் நீங்கிட, பராசக்தி எழுத்தாகிய வ கரமும், மலமில்லாத சிவத்தைக்குறிக்கும் சி என்ற எழுத்தை முன்பு நிற்பதுபோல் இணைத்து சிவாய சிவ என்றாக்கி ஓதினால் முத்தி உறுதி.

பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம் எறிகடல் ஏழின் மணல் அளவாகப்

பொறி ஒளி பொன் அணி என்ன விளங்கிச் செறியும் அண்ட ஆசனத் தேவர் பிராற்கே.

எல்லா அண்டங்களையும் தாங்கி நிற்கும் பகிரண்டமும், அதற்குள் பலவகையாக விளங்கும் பிற அண்டங்களும் ஏழு கடல்களிலும் உள்ள மணல்களின் அளவாக விரிந்து உள்ளன. கண்னும் ஒளியும் பிரியாதது போலவும் பொன்னும் அதில் செய்த நகையும் பிரியாதது போலவும் தேவர் தலைவனாகிய சிவன் அண்டங்களையே இருக்கையாகக் கொண்டவன்.

வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை

அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளியானதே.

இமயம் நியமங்களுக்கு அடிப்படையானது சாந்தம். அதைச் சிதைக்கும் கோபத்தை விடுக. நினைவை அது செல்லும் இடம் வரையில் நீண்டு செல்லுமாறு அனுப்பு. இரவு பகல் எல்லா உயிர்க்கும் அருள் கொண்டு இறையருளில் தன்னை அழுந்தச் செய்து எப்போதும் ஒருமுக நினைவுடன் இருந்தால் மலையும் பிளக்கப்படும். ஆகாயவெளி அங்கு தெரியும். மலை-ஆணவத்தை. கடும்வெளி- தடையற்ற வெட்டவெளி.

கால் அங்கி நீர்பூ கலந்த ஆகாயமே மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன்

மேல் அஞ்சும் ஓடி விரவ வல்லார்கட்குக் காலமும் இல்லை கருத்தும் இல்லைதானே.

மரணமில்லாப் பெருவாழ்வுக்கு வழி. ஐந்து பூதங்களும் ஐந்து பூத அதிதேவதைகளும் ஒரே நேரத்தில் ஓங்கார மந்திரம் கூறிக் கடந்து உச்சியில் சதாசிவத்துடன் கலப்பவர்க்கு வரையறைக்குரிய ஆயுளும் மனிதக் கருத்துக்களும் இல்லை.

நிலம்- மூலாதாரம்- பிரம்மன்

நீர்- சுவாதிட்டானம்- திருமால்

நெருப்பு- மணிபூரகம்- ருத்திரன்

காற்று- அநாகதம்- மகேச்சுவரன்

ஆகாயம்- விசுத்தி- சதாசிவன்

பொது- ஆக்ஞை- சத்தி

இந்த ஆதாரங்கள் இத்தேவதைகள் தொடங்கும் இடமாகும். சுத்தசிவம் ஆக்ஞாவுக்கு மேல் உள்ளதாகும். இவற்றைக் காக்கின்றேன் என்ற உணர்வுடன் மூலாதரம் தொடங்கி ஆக்ஞை வரை மேலால் அவத்தையாகச் சுழுமுனை நாடியில் தொடந்து ஓம் எனும் மந்திரம் கூறினால் சித்தி கிட்டும்.

நானே சிவம் ஆன தன்மை தலைப்பட ஆன மலமும் பசுபாச் பெத்தமும்

ஆன குணமும் பரான்மா உபாதியும் பானுவின் முற்றம் மதிபோல் படராவே.

தலை உச்சியில் அகண்டமாகிய சுத்த சிவத்தோடு ஒன்றுபடும் போது உடலுக்குள்ள மலங்களும் பசு அறிவும் பாசப்பிணைப்பும் அவற்றால் வந்த முக்குணங்களும் ஆன்மா பிரிந்திருந்த உணர்வும் சூரியன் முன்பு நிலவு ஒளி படர முடியாததுபோல் நீங்கும்.

செயல் அற்றிருக்கச் சிவானந்தம் ஆகும் செயல் அற்று இருப்பார் சிவயோகம் தேடார்

செயல் அற்று இருப்பார் செகத்தோடும் கூடார் செயல் அற்று இருப்பார்க்கே செய்தி உண்டாமே.

செயல் ஏதுமின்றி சும்மா இருப்பதே சிவானந்தம் பெறும் வழி. அப்படி இருப்போர்க்கு அதுவே சிவயோகம், வேறு யோகம் தேடவேண்டாம். சும்மா இருப்பவர்கள் உலகத்தோடும் உலகியலோடும் ஒன்றியிருக்கமாட்டார்கள். அப்படி இருப்போர் சிவானுபவம் பெற்றவர் ஆவார். செய்தி – சிவானுபவம். வேறு நினைவு ஏதுமின்றி ஓம் சிவாய நம என்பதையே துரியத் தானத்தில் மேலோங்கியிருப்பதாக நினைத்திருப்பதுவே சும்மா இருத்தலாம். 

தான் அவனாகும் சமாதி கூடினால் ஆன மலம் அறும், அப்பசுத்தன்மைபோம்

ஈனமில்காயம் இருக்கும் இருநிலத்து ஊனங்கள் எட்டும் ஒழித்து ஒன்று வோர்க்கே.

சமாதி நிலையில் சிவனுடன் கூடிய நம் ஆன்மா சிவமே ஆகும் அப்போது மலங்களும் எட்டு விதக்குணங்களும் நீங்கும். எட்டு குணங்கள் தெய்வ குணத்திற்கு எதிரானவை. காம, குரோத (கோபம்), லோப (கடும்பற்று உள்ளம்), மோக, மத, மாச்சரியம் (பகைக்குணம்) பசுஞானம், பாசஞானம்

தன்னை அறியத் தனக்கு ஒருகேடு இல்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தனனை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத்தான் இருந்தானே

தன் ஆன்மாவின் இயல்பை அறிந்து கொண்டால் மரணம் முதலிய கேடு இல்லை. அப்படி அறியாமலே பலர் கெடுகின்றனர். தன்னை அறியும் பதி அறிவைப் பெற்று அறிந்து விட்டால் அவனே கடவுளாகி அவனைப் பிறரும் அர்ச்சிக்குமாறு அவன் இருப்பான். உலகியல் அறிவால் ஆன்ம இயல்பை அறியமுடியாது.

அறிவு அறிவாக அறிந்து அன்பு செய்ம்மின் அறிவு அறிவாக அறியும் இவ்வண்ணம்

அறிவு அறிவாக அணிமா ஆதிசித்தி அறிவு அறிவாக அறைந்தனன் நந்தியே.

தன் அறிவைச் சிவன் அறிவாக மாற்றித் தன்னுடைய இயல்பை அறிந்து சிவனிடத்து அன்பு செய்யுங்கள். அப்போது சிவ அறிவு முழுதும் நம்மில் படர்ந்து அணிமா முதலிய எட்டு சித்திகள் தாமாக வரும்.

அறிவுடையார் நெஞ்சு அகலிடம் ஆவது அறிவுடையார் நெஞ்சு அருந்தவம் ஆவது

அறிவுடையார் நெஞ்சொடு ஆதிப்பிரானும் அறிவுடையார் நெஞ்சத்து அங்கு நின்றானே.

சிவத்துமான அறிவுடையார் நெஞ்சம் முழுவதும் அகன்ற பிரபஞ்சமே வீற்றிருக்கும். அதுவே பெரிய தவமும் ஆகும். நெஞ்சில் கடவுள் நிற்பார்.

என்னை அறிந்திலேன் இத்தனைக் காலமும் என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்

என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது என்னை இட்டு என்னை உசாவுகின்றேனே.

இத்தனைக் காலமும் என்னை அறியும் முயற்சியில் ஈடுபடாதிருந்தேன். இப்போது என்னை அறிந்தபின் இதுவரையில் என்னைச் சூழ்ந்துள்ள எதையும் என்னால் அறியமுடியவில்லை. இந்த நிலையைக் கைவிடாது இருந்து என்னையே ஆராய்ந்து என்னையே நான் விசாரித்து உணர்ந்தேன்.

 

மூன்றுபாழ்கள்

காரியம் ஏழ்கண்டு அறும் மாயப்பாழ், விடக் காரணம் ஏழ்கண்டு அறும் போதப்பாழ், விடக்

காரிய காரண வாதனை கண்டு அறும் சீர் உப சாந்தம் முப்பாழ், விடத்தீருமே.

மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன் சேயமுப்பாழெனச் சிவசத்தியில் சீவன்

ஆயவியாப்தம் எனும் முப்பாழாம் அந்தத் தூய சொரூபத்தில் சொல்முடிவாகுமே.

செற்றிடும் சீவ உபாதித் திறன் ஏழும் பற்றும் பரோபதி ஏழும் பகருரை

உற்றிடும் காரிய காரணத் தோடற அற்றிட அச்சிவமாகும் அணுவனே.

காரியாமாகிய ஏழும், காரணமாகிய ஏழும், காரிய காரண வாதனைகள் தீர்ந்த உபசாந்த நிலை ஆகிய மூன்று பாழ். காரணங்கள் வித்யா தத்துவமாகிய ஏழாகும். அவை காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், அசுத்தமாயை ஆகிய மாயப் பாழாகும். காரியங்கள் அக்காரணங்களால் வந்தவையாகும். அவை ஏழாவன. தன்மாத்திரைகள்-5, ஞானேந்திரியங்கள்-5, கன்மேந்திரியங்கள்-5, அந்தக்கரணங்கள்-4, பிராணவாயு- பிரகிருதி மாயை என்பன் போதப் பாழகும். போதம்- அறிவு. இவை இரண்டும் பாழும் ஆன்மாவிற்கு அந்நியம் என உணர்ந்தால் காரிய காரண வாதனைகள் நீங்கத்தொடங்கும். அப்போது தலைக்குமேல் 12விரல் உயரம் நிராதாரமான யோக நிலைதோன்றும். அது உபசாந்தம் ஆகும். இவை மூன்று பாழ் விடத்தக்கவை ஆகும். காரண காரியப்பாழ்கள் சீவப்பாழ் என்றும், உபசாந்தம் வியோமப்பாழ் என்றும் கூறுவர். சீவ உபாதிகள் ஏழ்- காரியப்பாழ், பர உபாதி- காரணப்பாழ் என்பர்.

வாய்ந்த உபசாந்த வாசனை உள்ளப்போய் ஏய்த்த சிவமாதல் இன்சிவானந்தத்துத்

தோய்ந்து அறல் மோன சுஅகானு பவத்தோடே ஆய்ந்து அதின் தீர்கை ஆந்து ஈரைந்துமே.

உப சாந்தம் 10. அவை. சீவாத்ம இயல்பு, காரிய காரண வாதனை, அவற்றுக்கு வேறாகத் தன்னை உணர்ந்து நீங்குதல், சிவமாதல், சிவானந்தம் பெறுதல், அதன் அனுபவம், அதில் நன்கு அழுந்துதல், மௌனமாகி அனுபவித்தல், அதையே ஆய்தல், அதையே நீங்கிச் சிவவியாபகத்தில் ஒன்றாய் இனைதல் ஆகியனவாம்.

மொட்டு அலர் தாமரை மூன்று உள மூன்றினும் விட்டு அலர்கின்றன சோதி விரிசுடர்

எட்டு அலருள்ளே இரண்டு அவர் உள்ளூறின் பட்டு அலர்கின்றது ஓர் பண்டு அங்கன் ஆமே.

மூன்று தாமரை மொட்டு உள்ளன. அவற்றில் சோதிகள் இனைந்து எட்டு இதழ்களாக உள்ள தலை உச்சியில் பெரும் சோதியாக மலரும். அது சகஸ்ராரம். சந்திர ஒளியாகிய இடது கண்ணும் சூரிய ஒளியாகிய வலது கண்ணும் அக்னி அல்லது நட்சத்திர ஒளியாகிய புருவ மத்தியும் மூன்றுதாமரையாகும். ஆயிரத்தெட்டு இதழ் தாமரை நடுவே குருபாதமாக உள்ளது எட்டுத் தாமரை இதழ் ஆகும்.

நாசி நுனியில் நால்மூ விரல் இடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்

பேசி இருக்கும் பெருமறை அம்மறை கூசி இருக்கும் குணம் அது ஆமே.

மூக்கு நுனியாக 12 விரல் உள்பக்கமாக அளந்தால் வரும் இடம் தான் இறைவன் உடலில் இருக்கும் இடம் என வேதம் கூறியுள்ளது. யாரும் இதை அறியவில்லை. வேதம் இதை வெளிப்படையாக கூறவில்லை.

 

மாயையை நீக்கும் முறை

மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்

மாயை மறைய மறைய வல்லார்கட்குக் காயமும் இல்லை கருத்தில்லை தானே.

முப்பத்தாறு தத்துவங்களும் மாயையால் உருவாக்கப் பெற்றவை. அவை வேதப் பொருளை அரியாதபடி மறைத்துள்ளன. அம்மாயை மறையுமாறு நாம் விலகினால் நமக்கு உடலும் இல்லை, உலகியல் அறிவும் ஒழியும். உடம்பிலிருந்தும் உடம்பின் வாதனை  இருக்காது என உணர்க.

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்

பின்னை வினையைப் பிடித்து பிசைவார்கள் சென்னியில் வைத்த சிவன் அருளாலே.

தன்னை மாயைக்கு வேறான சிவ சம்பந்தமான பொருள் என்று உணரும் ஞானிகள் இன்னும் அனுபவத்துக்கு வராத முன்பிறவி முடிச்சுகளை அவிழ்ப்பர். பின்வரும் வினைகளை நீக்குவர். காரணம் தலையில் சிவன் இருப்பதை யோகத்தால் உணர்ந்தமையால்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடு அயினும் ஆசை அறுமின்கள்

ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தமாமே

ஈசனுடன் இனைந்த நிலையில் இருப்பவர் ஆசைப்பட்டாலும் அதனால் துன்பமே உண்டாகும். துன்பம் தீர ஆசையை ஒழியுங்கள். ஆனந்தம் அடையலாம்.

உறுதுணை நந்தியை உம்பர் பிரானைப் பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்ம்மின்

செறுதுணை செய்து சிவனடி சிந்தித்து உறுதுணையாய் அங்கி ஆகி நின்றானே.

புருவ மத்தியில் முக்கோணப் பகுதியில் நட்சத்திரத் தீயாய் இருப்பது சிவன். யோகம் செய்வோருக்கு உறுதுணையாகத் தீயாக உள்ளான். சிவ மந்திரங்கள் கூறி வளர்த்ததால் யாக குண்டத்து நெருப்பையும் சிவாக்னி என்பர். சிவன் அடியை சிந்தித்து எழுப்பிய மூலக்கனலும் சிவக்கனலே ஆகும். மூலாதார அக்னியை சிதக்குண்ட ஸம்பூதா என்பர். அக்னியாவும் சிவ சம்பந்தமானது. உடலும் அதி தூயதாய் வரும். அவன் அருளால் வருவதால் அவனே என்க.

 

சிவமயத்தின் சிறப்பு

நீ அது ஆனாய் என நின்ற பேருரை ஆயது நான் ஆனேன் என்னைச் சமைந்து அறச்

சேய சிவமாக்கும் சீர் நந்தி பேரருள் ஆயதுவாய் ஆனந்தானந்தம் ஆமே

நீ அதுவானாய் என ஆசிரியன் மாணவனுக்குக் கூறிய உபதேசம் அவன் அனுபவத்தில் நான் அது ஆனேன் எனமாறும். இப்படி மாறவைப்பது சிவமே. அருள்மயமாகிப் பின் சிவமயமாகும் ஆனந்தமே அனுபவம் ஆகும். 36 தத்துவங்களும் மாயை. மாயையால் இயற்கையின் அறிவை இழந்தேன். தத்துவங்களாகிய மாயையை உணர்ந்து அது எனக்கு அந்நியம் என்று தெளிந்ததும் அதன் பலனாய் நானே என்னை உணர்ந்து சிவமானேன். பிரபஞ்சப் பொருளகளெல்லாம் அணுக்களாகிச் சிவத்தை அடைந்தன. ஆன்ம கோடிகள் யாவும் அணுக்களாகி என்னை அடைந்தன. நான் சிவமானேன். அது அஹம்பிரஹ்மாஸ்மி என்பதாகும்.

வாய்நாசியே புருவ மத்தகம் உச்சியில் ஆய்நாசி உச்சி முதல் அவையாய் நிற்கும்

தாய்நாடி ஆதி வாக்கு ஆதி சகலாதி சேய்நாடு ஒளியோன் சிவகதி ஐந்துமே.

சுழுமுனை நாடியில் ஓம் சொல்வதை அடுத்து மேலும் நாதம் உயருமாறு சொல்லும் முறை சிவகதி- சிவன் வரும் வழி யாகும். வாய் உள் உள்ள உள்நாக்கில் (இந்திரயோனி நடுத்துளை), உட்புறமாக மூக்கிற்கு நேர் பின்புறத்தில், புருவமத்தியின் பின்புறத்தில், நெற்றி உச்சியின் பின்புறத்தில், தலை உச்சியின் உட்புறத்தில் என்ற ஐந்து இடத்திலும் ஓம் கூறுக. தலை உச்சிக்கு மேல் உள்ள உபசாந்தத்தை ஒளிபெற உணர்வு பெறச் செய்யலாம்.

ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உரு அரு

ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பலபேதம் ஓம் எனும் ஓங்காரத்து ஒண்முத்தி சித்தியே.

ஓங்காரத்தின் உள்ளே உள்ள ஒலியே எதையும் படைக்கவல்லது. அதன் உள் ஒளியே உருவங்களையும் அருவ உருவங்களையும் தருவது. அவ்வோசையில் பலவித எழுத்து ஓசைகள் யாவும் அடக்கமாகும். அதை ஓதி முத்தியைப் பெறலாம்.

ஓங்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள் ஓங்காரத்து உள்ளேஉதித்த சர அசரம்

ஓங்கார அதீதத்து உயிர் மூன்றும் உற்றன ஓங்கார சீவன் பரசிவன் ஆமே.

ஐம்பூதங்களும், அசைவன, அசையாதன ஆகிய பொருள்களும், சகலர், பிரளயாகர், விஞ்ஞானகலர் என்ற மூவகை உயிரினரும் ஓங்காரத்தின் உள்ளே உதிப்பவை. இந்தத் தியானம் செய்து ஓங்காரமயமாகவே ஆனவர்கள் விஞ்ஞானேசுவர் ஆவர். இறுதியில் சிவம் ஆவார்.

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவசிவ வாய்வும் சேர்ந்து உள் அடங்க

சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள் சிவசிவ ஆகும் திருஅருள் ஆமே.

சிவமந்திரம் கூற வாயிருந்தும் கூறாதவர் ஊமர்களே. வாயு சுழுமுனையில் உள் அடங்கும்போது சிவசிவ என்று கூறி எல்லாமே சிவமே என தெளிபவர்களுக்கு சிவமே ஆகுமாறு திருவருள் கிடைக்கும்.

காரண பஞ்சாக்கரம்-

1.தூல பஞ்சாக்கரம்– நமசிவாய,

2.சூக்கும பஞ்சாக்கரம் – சிவாயநம

3.அதிசூக்கும பஞ்சாக்கரம்– சிவாய சிவ

4.காரண பஞ்சாக்கரம்- சிவசிவ

5.மகாகாரண பஞ்சாக்கரம்- சி

சிவசிவ என்கிலர் தீவினையாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்றிடச் சிவகதி தானே

தீவினை அழிக்கும் காரண பஞ்சாக்கரத்தைச் சொல்லாதவர் தீவினை உள்ளவரே, அதைச் சொல்லுபவர் தேவராக வருவர். சிவகதியாகிய வீடுபேரும் பெறுவர்.

அங்கமும் ஆகம வேதமும் ஓதினும் எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது

சங்கை கெட்டு அவ்வெழுத்து ஒன்றையும் சாதித்தால் அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.

மகா காரண பஞ்சாட்சரம் சி எனும் ஓர் எழுத்தே. வேதம் ஆகமம் முதலிய ஞான நூல்கள் பல ஓதினாலும் தியானித்துச் சிவத்தை உணரவைக்கும் சி எழுத்தை ஐயங்கொள்ளாமல் ஓதினால் இப்பிறவிக்குப்பின் பிறவி இல்லாத வீடுபேறாகிய அக்கரையில் சேர்ப்பிக்கும்.

எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்

எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவன் அருள் தன்விளையாட்டே.

நம்மைச் சூழ்ந்த வெளிகள் யாவும் சிவனின் திருமேனியே. அதுபோல் எல்லாச்சக்தியும் உடன் உள்ளாள். எங்கும் சிதம்பரம் எங்கும் இறைவன் திருநடனம். எங்கும் சிவமாக இருப்பதால் தன் விளையாட்டாகிய திருவருளை எல்லா இடங்களிலும் பரப்பி உள்ளான். சிவனைச் சிந்திக்கும் சித்தர்கள் சித்தமே எங்கும் இருப்பதால் சிதம்பரம் சித்+அம்பரம் (ஆகாயம்) என்க. எல்லா இடத்திலும் அணுக்கள் தோறும் ஒளியும் ஒலியும் எப்போதும் வெளிவந்து கொண்டே இருப்பதால் எல்லாம் திருநடனமே.

நீடும் சிரத்திடைப் பன்னிரண்டு அங்குலம் ஓடும் உயிர் எழுத்து ஓங்கி உதித்திட

நாடுமின் நாதாந்த நம்பெருமான் உகந்து ஆடும் இடம் திருவம்பலம்தானே.

புருவ நடுவுக்குமேல் நாதாந்தத்தை நாடி உணர்வீராக. சிரசின்மேல் 12 விரல் உயரம் பரப்பு வெளி திருவம்பலம். அதில் சிவன் திருக்கூத்தை ஆடுகிறான். அது உபசாந்தம் துவாதசாந்தம் எனப்படும். நெற்றிக்கு நேரே புருவத்துக்கு இடைவெளி உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம் பற்றுக்குப் பற்றாய் பரமன் இருந்திடம் சிற்றம்பலம் என்று சேர்ந்து கொண்டேனே. இரு புருவங்களுக்கு நடுவான் வெளியில் உற்று உற்றுப் பார்த்துச் சிவ மந்திரமோ பிரணவமோ கூற அங்கு ஒளி தோன்றும். அது சிற்றம்பலம் ஆகும். இறைவன் இருக்கும் இடங்களில் ஒன்றான இதை நான் தெரிந்து கொண்டேன்.

அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம் தண்டினில் சாத்த விசாம்ப வியாதனம்

தொண்டினில் ஏழும் சிவாசனமாகவே கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே.

உடல் தத்துவங்கள் யாவும் ஒவ்வோர் அண்டமாகவும் சுழுமுனையில் குண்டலினியும் மனோன்மணியும் சதாசிவத்தோடு விளங்கவும் ஏழு ஆதாரங்களுமே சிவனுக்குரிய இருக்கையாக கொண்டு பரம்பொருளாகிய சோதி நடம் செய்யும். ஒவ்வோர் அண்டத்திலிருந்தும் நம் உடலுக்குரிய இரு துணை கணந்தோறும் வந்தபடியே உள்ளது. உடல் இயங்குவதற்கு துணை நிற்பன 96 தத்துவங்கள். கடவுளிடம் இருந்து நம்மை வந்து அடைய கோடிக்கணகான அண்டங்களை கடந்து வருவதால் தத்துவம் யாவும் அண்டங்கள் ஆகும். ஆறு ஆதாரங்களுடம் சகஸ்ராரம் சேர்த்து ஏழும் ஒரு தண்டில் இருப்பது போலிருப்பதால் அதை இனைப்பது சுழுமுனை நாடியே. தண்டு – சுழுமுனை நாடி. சாத்தவி- சுழுமுனை நாடியின் அடியில் உள்ள குண்டலினி சக்தி. சாம்பவி- சுழுமுனை உச்சியில் இருக்கும் மனோன்மணி. தங்க நிறத்தில் இருக்கும். சதாசிவம் – தலையில் உணரும் சிவமூர்த்தம். சிவாக்னி-ஏழு ஆதரங்களிலும் வெளிப்படுவதால் பரஞ்சோதி. கூத்தை ஒத்து மகிழ்ந்தார்- உலகை இயக்கும் ஒலிகளும் யோகியர் உணரும் ஒலிகளும் ஒத்து இசைவது. கூத்து மரபு- அணுக்களில் உள்ள அசைவு இறைவன் செய்வது. உடலாகிய பிண்டம்- பேரண்டங்களின் சிறிய வடிவம்.

மன்று நிறைந்த விளக்கொளி மாமலர் நன்று இதுதான் இதழ் நாலொடு நூறு அவை

சென்றது தான் ஒரு பத்தி நூறு உள நின்றது தான் நெடு மண்டலம் ஆமே.

உலகப் பொதுவாக உள்ள இவ்வுடல் பரஞ்சோதியாகிய விளக்குக்கு இடமளித்துள்ளது. ஆதாரத் தாமரைகள் நான்கு இதழ் முதல் நூற்றுக்கணக்கான இதழ்கள் கொண்டவை இருக்கின்றன. அவை யாவும் 210 புவனங்களைக் கொண்ட இப்பிரபஞ்சமாகிய பேரம்பலம் என உடலே கருதும். நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை என்ற ஐந்து கலைகளிலும் 224 புவனங்கள். பல நூறு அண்டங்கள் சேர்ந்து ஒரு புவனம். தூலமாகிய 4 சத்தி கலைகளும், 10 சிவ கலைகளும் நீங்க 224-14=210 புவனங்கள்.

இறைவனின் திருக்கூத்து

அண்டம் ஏழுகோடி பிண்டம் ஏழுகோடி தெண்திரை சூழ்ந்த திசைகள் ஏழுகோடி

எண்திசை சூழ்ந்த இலிங்கம் ஏழுகோடி அண்டன் நடம்செய்யும் ஆலயம் தானே

ஆகாசமாம் உடல் அம்கார் முயலகன் ஏகாசமாம் திசை எட்டும் திருக்கைகள்

மோகார் முக்கண்கள் மூன்று ஒளிதான்ஆகும் மாகாய மன்றுள் நடம்செய்கின்றானே.

அம்பலமாவது அகிலசராசரம் அம்பலமாவதுஆதிப் பிரான் அடி

அம்பலமாவது அப்புத்தீ மண்டலம் அம்பலமாவது அஞ்செழுத்தாமே.

அண்டத்திலும் பிணத்திலும் பிற திசைகளிலும் உள்ளவை யாவும் லிங்கத்திலும் உண்டு. எல்லாம் இறைவன் நடம் செய்யும் ஆலயங்களே ஆகும். ஆகாயம்- உடல், மேகங்கள்- சிவன் பாதத்தில் உள்ள முயலகன். எண் திசைகள்- சிவனின் எண்தோள்கள் மற்றும் கைகள். மூன்று ஒளி- மூன்று கண்கள்.காயம்- உடல். மாகாயமன்று- பெரிய மன்றம் பேரம்பலம். சூரிய சந்திர அக்னி ஆகிய மூன்று ஒளிகள். நிற்பன. நடப்பன (சரம்+அசரம்= சராசரம்) யாவும் இறைவன் திருவடி. நீர் நிலம் முதலிய் பஞ்ச பூதங்களும் திரு ஐந்தெழுத்தும் இறைவன் நடனமிடும் அம்பலங்கள். அஞ்செழுத்து ஓதினால் எல்லா அம்பலங்களிலும் இறைவனை சென்றடையும். புளிகண்டவர்க்குப் புனல் ஊறுமாப்போல் களிக்கும் திருகூத்துக்கண்டவர்க்கொல்லாம் துளிக்கும் அருட் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும் ஒளிக்குள் ஆனந்தத்து அமுதூறும் உள்ளத்தே. முன்பு உண்ட அனுபவத்தால் புளியைக் கண்ணால் பார்த்த அளவிலேயே நாவில் நீர் ஊறும். சிவன் திருக்கூத்தை உணர்திடு பவருக்கு அதைக் கண்டதுமெ அருட் கண்ணீரும் உள்ளம் உருகும் உணர்வும் உண்டாகும். உள் ஒளி தோன்றி உச்சியில் அமுதம் ஊறும்.

திண்டாடி வீழ்கை சிவானந்தமாவது உண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும்

கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக் கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.

திருக்கோயிலில் இருக்கும் நடராச மூர்த்தி வடிவைக் கண்டாலும் அவர் நடமாடும் சிறப்பை உள்ளத்து உணர்ந்து மனக்கண்ணில் கண்டாலும் இந்த உணர்வுகள் வரும்.

ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக் கூடிய பாதஞ் சிலம்புகைக் கொள்துடி

நீடிய நாதம் பராற்பரநேயத்தே ஆடிய நந்தி புறம் அகத்தானே.

ஒன்பதும் ஆட ஒருபதினாறு ஆட அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட

இன்புறும் ஏழின்னும் ஏழ் ஐம்பத்தாறு ஆட அன்பு அதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

திருவடியிலுள்ள சிலம்பு ஒலியும் கையில் உள்ள உடுக்கை ஓசையும் யோகியர் நெஞ்சில் ஒலித்துப் பரவெளியில் பரவும் நீண்ட நாதமும் ஒத்து இசைக்கும் இசையாகக் கொண்டு 11 ஆடல்களை உடம்பின்அக வெளியிலும் அண்ட வெளியிலும் சிவன் ஆடுகின்றான்.

அவ்வியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல், துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை ஆகிய 11ம் சிவ தாண்டவமாகும். அகத்தில் இதைப் பார்த்தவர்கள் அண்டத்திலும் பார்ப்பார்கள். நவம் தருபேதம் எனும் ஒன்பதுவகை தெய்வ நிலைகளும், பதினாறு பிரசாதக்கலைகளும், ஆறு சமயங்களும்,இன்புறச்செய்யும் ஏழிசையும் ஏழு ஆதாரங்களிலும் உள்ள 51 எழுத்துகளும் திரு ஐந்தெழுத்துகளும் பத்தியுடையார் அன்பும் என எல்லாம் ஆடுமாறு இறைவன் ஆடும் ஆனந்தக் கூத்து உள்ளது. எல்லாம் அணுக்களால் ஆனவை. அதலால் அசைகிறது.

ஆதிநடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள் ஆதிநடம் செய்கை ஆரும் அறிந்திலர்

ஆதிநடமாடல் ஆரும் அறிந்தபின் ஆதிநடமாடல் ஆம் அருட்சத்தியே

ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து அன்புறுகோணம் அசிபத்து ஆடிட

துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே அன்புறும் எந்தை நின்று ஆடல் உற்றானே.

ஆதியில் பிரம்மம் தனித்திருந்தது. அதனுடைய சங்கற்பம் காரண்மாக ஓர் வெப்பம் அசைவு தோன்றியது. அது சிவம், சத்தி, சதாசிவம், மகேச்வரன், திருமால், பிரம்மன் என பல தெய்வ சக்திகளாக மலர்ந்தது. அந்த முதல் அசைவை ஆதி நடம் என்பர். இதை யாரும் அறிந்ததில்லை. பிரபஞ்சம் முழுவதும் கடவுளின் அருளாட்சி நடனமாடலாகவே உள்ளது. அதை அறிந்தவர்கள் ஆதியில் பிரம்மத்திலிருந்து சங்கற்பத்தால் தோன்றியது சக்தியாகிய அருளே என அறிவர். தெய்வத்துக்கு ஒன்பது ஆன்மாவுக்கு ஒன்பது என்பவை தத்துவமாசி என்பதால் குறிக்கப்பட்டது. தெய்வம் ஆன்மவின் மீது கொண்ட அன்பினை மாசி எனலாம். இதை உணராமல் பிறந்து இறந்து துன்புறுவது மாயாசக்தியால் ஆன்மா கூடிய உடலுக்கு இயற்கையானது. அதை நீக்கவே ஆனந்த நடனத்தை பக்தி மூலமாக ஆடுதல் ஆகும். தத்- (அது) கடவுள், த்வம் (நீ) ஆன்மா, அசி- (ஆனாய்) நம் பக்தியும் + இறைவன் அருளும். தத்துவமசி –அது நீ ஆனாய். கடவுள் நிலை ஒன்பது வகை நிலை –நவந்தருபேதம். அஹம் ப்ரஹ்மாஸ்மி (அஹம் + ப்ரஹம் + அஸ்மி) அஹம்- பிரபஞ்சம் முழுவதுமாகிய ஆன்மாக்கள் எல்லாம் ஒன்றாகத்தழுவிய உணர்வுடன் ஒருவர் நினைபதாம். ப்ரஹம்- ஆன்மாக்களைத் தவிர பிரபஞ்சத்தில் உள்ள தெய்வமும் பிறபொருள்கள் யாவும் ஒன்றாகத் திரண்ட உணர்வுடன் ஒருவர் நினைப்பதாம். அஸ்மி- ஆனேன் என்ற பாவனை

தத்துவம் ஆடச் சதாசிவம் தான் ஆடச் சித்தமும் ஆடச் சிவசக்தி தான் ஆட

வைத்த சராசரம் ஆட மறையாட அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

இருவரும் காண எழில் அம்பலத்தே உருவோடு அருவோடு உரு அரு ரூபமாய்த்

திருவருள் சக்திக்குள் சித்தன் ஆனந்தன் அருள் உரு ஆகநின்று ஆடல் உற்றானே.

தொண்ணூற்றியாறு தத்துவங்களும் சதாசிவமும் பாவிப்பர் சித்தமும் சிவ சக்தியும் அண்ட சராசரமாகிய உயிர்களும் உயிரற்ற பொருள்களும் வேதமும் ஆகிய யாவும் அஹம் ப்ரஹமாஸ்மி என பாவித்தால் அசையும். அது இறைவனின் ஆனந்தக் கூத்தாகும். இந்தப்பாவனை பிரபஞ்சம் முழுவதும் தன்னோடு அசைவதை உணரலாம். ஒரு நினைவே செய்கையை அசைவை உண்டாக்கும் என்பதை உணர பிரபஞ்சம் முழுவதும் உடம்பிலும் உள்ள ஓம் என்பதை உரைப்பதாகக் கருதி மார்பின் நடுவிலிருந்தோ தொப்புளிலிருந்தோ ஓம் என்பதை மனத்தால் சொல்லிக் காதுத்துளைகளை உற்று நோக்கும் போது அசைவதை உணரலாம். எல்லா மவுன மந்திர உச்சாடனங்களும் நினைவுகளும் ஓசைபோல் அசைவை உண்டாக்குவதை உணரலாம். தில்லை அம்பலத்தில் நடனமாடும் திருக்கூத்தைப் பதஞ்சலி முனிவரும், புலிக்கால் முனிவரும் கண்டார்கள். இந்த நடனம் உருவம், அருவம், அரு உருவம் ஆகிய மூன்று வடிவங்களிலும் சிவன் ஆனந்தமாகவும் அருள் உருவமாகவும் ஆடல் புரிவான். உருவம்- நடராசர், அருவம்- மனத்தால் உணரத்தக்கது, அரு உருவம்- லிங்கத்திருமேனி.

ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவலர் ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்

ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின் தான் அந்தம் அற்ற இடம் ஆனந்தம் ஆமே.

ஆனந்த நடனத்தை உணர்ந்து அணுபவிக்காமல் ஆனந்தம் ஆன்ந்தம் என வாயல் குறுபவர் அறிவலார். தவயோக முறையில் அந்நடனத்தை அறியக் கூடுமானால் தான் எனற உணர்வு கெட்ட இடமே ஆனந்தமாகிய நடனம். தான் என்ற உணர்வு இல்லா நிலையில் மவுன சுகம் உண்டாவதால் ஆனந்த பெருங்கூத்தை அறியலாம்.

உள்ளத்துள் ஓம் என ஈசன் ஒருவனை உள்ளத்துளே அங்கு ஆய ஒருவனை

உள்ளத்துளே நீதி ஆய ஒருவனை உள்ளத்துளே உடல் ஆகாசம் ஆமே

பெருநிலமாய் அண்டமாய் அண்டத்து அப்பால் குருநிலமாய் நின்ற கொள்கையன் ஈசன்

பெருநிலமாய் நின்று தாங்கிய தாளோன் அருநிலையாய் நின்ற ஆதிப் பிரானே.

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியாய்ப் பிதற்றும் பெருமையை

உண்டு அவ்வொளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியைக் குலைத்தது தானே.

பயன் உறு கன்னியர் போகத்தின் உள்ளே பயன் உறும் ஆதிப் பரஞ்சுடர்ச் சோதி

அயனோடு மால் அறியாவகை நின்றிட்டு உயர்நெறியாய் அயல் ஒன்றது ஆமே.

உள்ளத்தில் ஒம் என நினைத்து மவுனமாக ஓத வெளிப்படும் ஈசனை, உள்ளத்தில் எப்போதும் ஒளியாக இருப்பவனை, உள்ளத்திற்குத் தேவையான நீதியை நினைக்கச் செய்பவனை, உள்ளத்தின் உள்ளே நினைத்த நம் உடலே ஆகாய வெளியாகும். இதனால் மனம் திருச்சிற்றம்பலம் ஆகும். சித்தத்தில் சூக்குமமாக எழுந்து எங்கும் உள்ள தெய்வ சக்தியுடன் இணையும். உடம்பின் எல்லைக்கு வெளியே 1விரல் முதல் 12விரல் அளவிற்கு சூக்கும உடம்பு பரவியுள்ளது. இதை ஆகாசம் எனலாம். யோக முயற்சியாலும் அஹம் ப்ரஹமாஸ்மி என பாவிப்பதாலும் இந்த சூக்கும பகுதி விரிந்து விரிந்து பிரபஞ்சமே நம்முடன் இணையும். இது ஆகாசப்பேறாகும். குருவாய் வரும் சிவனின் உணர்வுப் பகுதி பெரிய பூமியாகவும், பிற அண்டங்களாகவும், அவைகளுக்கு அப்பாலும் பரவி உள்ளது, அவனும் அவன் அருட்சக்தியும் விரிந்து யாவற்றையும் தாங்கிய திருவடியாய் இருப்பதால் இரண்டும் ஆதியாகிய பிரம்மப் பொருளாவர். அண்டங்களில் உள்ள சூரிய சந்திர அக்னி ஆகிய மூன்று ஒளிகளும் இவற்றுக்கு ஒளி தரும் பேரொளியாகிய சிவத்தினொளியும் நாம் பெருமையாய் பேசிக் கொள்ளும் நம் உடல் ஒளியாம். அவ்வொளிகள் நம் உள் ஒளியாக யோகத்தால் உருவாகும்போது ஒளிக்குள் ஒளியாய் ஒளிந்திருப்பவன் இறைவன். திருமாலும் பிரம்மனும் அடிமுடிகளை அறிய முடியாதபடி ஒளித்தூணாக நின்ற சிவன் நமக்கு அந்நியம் போல் இருந்தாலும் பக்தியாகிய உய்ர் நெறிமுறையில் நம்முடன் கூடி இன்பம் தருவான். ஆணும் பெண்னும் அயலாக இருக்கும்போது இல்லாத இன்பம் சேரும்போது தோன்றுவதை போன்றது.

 

சமாதிநிலை

அறிவுக்கு அறிவாம் அகண்ட வெளியும் பிறியா வலத்தினன் பேரொளி மூன்றும்

அறியாது அடங்கிடில் அத்தன் அடிக்குள் பிறியாது இருக்கின் பெருங்காலம் போமே.

சமாதி நிலையில் நெடுங்காலம் உயிர்வாழும் யோக நிலையை அறிவீர். அது ஆகாசப்பேறு பெறுவதாகும். நம் அறிவுக்கு அறிவைத்தரும் விரிந்த பிரபஞ்சப் பெருவெளியுடன் என்றும் பிரியாது வெற்றியுடன் ஒளிரும் மூவகைப் பிண்ட ஒளிகளும் வேறு உணர்வுகளை அறியாது அடங்கும்போது இறைவன் திரு அடியையும் பிரியாது இருபோர் நீண்ட காலம் வாழ்வர். பிரபஞ்சம் முழுவதும் பரந்துள்ள ஓர் இயற்கை அறிவே நம் அறிவைத்தூண்டுகிறது. அறிவுக்கு அறிவாம் அகண்டவெளி என்றும் சுத்தவித்தை என்றும் கூறாலாம். பிறியாவலத்தினன்- பிரபஞ்ச அறிவுடன் பயிற்சியால் இணைவது. பேரொளி மூன்றும் – சூரிய சந்திர அக்னி நாடி ஒளிகள். இது மூன்றும் பிரபஞ்ச ஒளியுடன் தொடர்புடையவை. நம் உடல் அசைவாலும் உணர்வு மாற்றங்களாலும் அடிக்கடி சுருங்கி விரிந்து தொழில் படும். அறியாது அடங்கிடில்- ஏதும் சிந்தை, செயல் செய்யாதிருக்கும்போது ஒளிகள் ஒரே நிலையில் இருப்பது. சமாதி தொடங்கும் போதிருந்து இறைவன் திருவருளையே பற்றிக்கொண்டு வேறுபுறம் நினையாமல் இருப்பதாகும்.

புறத்துள் ஆகாசம் புவனம் உலகம் அகத்துள் ஆகாசம் எம் ஆதி அறிவு

சிவத்துள் ஆகாசம் செழுஞ்சுடர்ச் சோதி சகத்துள் ஆகாசம் தான் ஆம் சமாதியே.

வெளியில் தெரியும் ஆகாசம் புவனம் என்றும் உலகம் என்றும் நம்மால் காணவும் கருதவும் இடம் தருவதாகும். மனத்தளவில் ஆகாசம் என்பது இறைவனைப் பற்றிய அறிவு ஆகும். சிவத்திற்குள் ஆகாசமாக இருப்பது சிவப்பும் தங்கமாக இருக்கும் சுடரும் சோதியும் ஆகும். உலகில் உள்ள இன்னுமொரு ஆகாயம் சமாதி நிலையாகும். சமாதி நிலையில் இருப்போர் பிரபஞ்சம் முழுவதையும் தமக்குள் முடித்து வைத்திருப்பதால் அவர்கள் ஆகாசம் என்பர்,

நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும் நான் என்று தான் என்று இரண்டு இல்லை என்பது நான் என்ற ஞானம் முதல்வனே நல்கினான் நன் என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே.

ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி ஞானத்தின் நன்னெறி நான் என்ற அறிவு ஓர்தல்

ஞானத்தின் நல்யோகம் நன்னிலையே நிற்றல் ஞானத்தின் நல்மோனம் நாதாந்த வேதமே.

ஆன்மவாதியாகிய நானும் சிவமாக அவனும் வேறு என்ற எண்ணத்தில் யோகத்தின் மூலம் நாடினேன். நானும் தானும் வேறு வேறு அல்ல என்பதை உணர்ந்தேன். நான்யார் என்ற ஞானத்தை இறைவனே எனக்கு அருளினான். அது முதல் நானும் நான் வேறு என்ற நினைப்பை விட்டு விலகினேன். ஞானமார்க்கத்தின் தலைசிறந்த நெறி எது என்றால் நாதாந்தத்தை உணர்தல் ஆகும். பின் நல்வழி எது என்றால் நான் யார் என்று நாடி உணர்தலே ஆகும். யோகம் இரு நெறிகளையும் கைவிடாது நிற்கும். மோனம் என்பது எந்த நாதமும் எழுப்பாமலும் காதில் உணராமலும் ஒன்றித்து நிற்பது ஆகும். மூலாதாரத்தில் ஒம் எழுப்பிய நாதம் சுழுமுனை வழியாகச் சென்று புருவ மத்திக்கு மேல் போய் அதிர்வு அற்றுப்போகும் இடம் நாதாந்தம். சிவம் தன் ஆன்மாவில் படரக் கண்டு தான் சிவத்தன்மை உடைய பொருள் என அறிக. நாதாந்தத்தில் புற ஒலிகள் யோகியின் காதில் விழாது.

உய்ய வல்லார்கட்கு உயிர்சிவஞானமே உய்ய வல்லார்கட்கு உயிர்சிவ தெய்வமே

உய்ய வல்லார்கட்கு ஒடுக்கம் பிரணவமே உய்ய வல்லார் அறிவு உள் அறிவு ஆமே

உய்யவல்லார் என்பது பிறப்பு இறப்பு எனும் சூழலில் இருந்து விடுபட்டு முத்தியடைவோர் என்பதாம். அவர்கள் உயிர் வாழ்வது சிவமாகிய தெய்வம் சார்ந்து வாழ்வது ஆகும். புலன் ஒடுங்கியிருப்பது ஒம் எனும் மந்திரத்துடன் கலந்து ஒலித்து நிற்கும். அவர்களுக்கு புக அறிவு இல்லை. அக அறிவே அறிவாகும்.

துரியநிலை

பாலொடு தானும் பழத்துள் இரதமும் வாலிய பேரமுது ஆகும் மதுரமும்

போலும் துரியம் பொடிபட உள்புக சீலம் மயிர்க்கால் தொறும் தேக்கிடுமே.

பாலும் தேனும் பழரசமும் சிறந்த அமுதம் துரியத்தைச் சிறிது நேரம் சாதித்த அளவில் மயிர்க்கால் முழுதும் தேக்கி வைக்கப்பட்ட இன்பமாக உணரலாம்.

மத்திமம் ஆறாறும் மாற்றி மலம்நீக்கிச் சுத்தம் அதுஆகும் துரியத் துரிசுவு அற்று

பெத்தம் அறச்சிவமாகிப் பிறழ்வுற்றுச் சத்திய ஞான அந்தம் சார்ந்தனன் ஞானியே.

சிவமாய் அவமான மும்மலம் தீரப் பவமான முப்பாழைப் பற்று அறப்பற்றத்

தவமான சத்திய ஞானாந்தத்தே துவமார் துரியம் சொரூபம் அது ஆமே.

கடவுளுக்கும் நமக்கும் நடுவே உள்ள 36 தத்துவங்களின் ஆளுகையை மாற்றி நீங்கி இருக்கும் நிலை ஆத்மாவிற்குச் சுத்தமான நிலை எனப்படும். அதில் உணரப்படுவது துரிய நிலை. துரியத்தில் நெடுநேரம் ஈடுபடாமல் சிறிது அளவில் நீங்குவது துரிய நிலை செய்வோருக்கு குற்றமாம். அது இல்லாதபோது மனக்கிலேசமாகப் பரவிய தன்மையும் அற்றுப் போய்விடும். அது சிவமாகும் நிலை. எல்லாவற்றையும் நீங்கிச் சிவத்தை மட்டும் நீங்காது இருப்பது சத்திய ஞானத்தில் முழுமையாகும்.  துரிய நிலையில் நீடித்தலே சிவமாகும் தன்மை ஆகும். சிவத்தன்மை அடைந்து அதற்கு எதிரான மும்மலமும் தீரப்பெற்று பிறப்பைத்தரும் முப்பாழையும் பற்று நீங்கி சிவன் திருவடியைப் பற்றியது நீங்காமல் இருப்பது தவமாகிய ஞானானந்தம் ஆகும் அந்த நிலையே நீயே அது ஆனாய் என்ற துரிய நிலையாகும். ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்கள். மாயப்பாழ், போகப்பாழ், உபசாந்தப்பாழ் என்பன முப்பாழ். உபசாந்தமாகிய துவாத சாந்தத்தையும் பாழ் என்பது வெளி என்ற கருத்தில் அதையும் நீக்குதல் வெளியைச் சிவமாக அறிதல் ஆகும். துரியம் மூன்று என்பர். சுத்த துரியம், பரதுரியம், சிவதுரியம் எனப்படும். யோகத்தால் உபசாந்தத்தை உணர்வது சுத்த துரியம், அது எங்கும் பரவியுள்ளதாக உணர்வது பரதுரியம். சிவம் அல்லாது வேறு பொருள் அல்ல என உணர்வது சிவதுரியம்.

உருவம் நினைப்பவர்க்கு உள்உறு சோதி உருவம் நினைப்பவர் ஊழியம் காண்பர்

உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர் உருவம் நினைப்பவர் உலகத்துள் யாரே.

சிவனை மனதில் தியானித்தால் மனதில் உள் ஒளி தோன்றும். ஊழி கழியும் வரை வாழ்வர். தேவர்கள் போல் இறவாநிலை எய்துவர். அப்படி தியானிக்கும் வல்லமை உள்ளவர் அரிது.

ஆறு இட்ட நுண்மணல் ஆறே சுமவாதே கூறு இட்டுக் கொண்டு சுமந்தறிவார் இல்லை

நீறு இட்ட மேனி நிமிர்சடை நந்தியைப் பேறு இட்டு என் உள்ளம் பிரியகிலாவே.

ஆற்றில் இடப்பட்ட மணலை ஆறு சுமப்பதில்லை. சிவத்தை எனக்குள் எது சுமக்கிறது என்று தெரியவில்லை. ஆனாலுமவனை நான் பிரியாமல் இருக்கின்றேன். மணலின் கணம் தானாக தரையில் இறங்கும். இது இயற்கை. சிவமும் ஆதமாவில் இயற்கையாக ஒன்றுபடும். சிவத்தின் செயல்கள் யாவும் இயற்கையாகவே நடக்கின்றது. வினையும் இப்படியே உயிரை அடைகிறது.

கூடு கெடின் மற்றோர் கூடுசெய் வான் உளன் நாடு கெடினும் நமர்கெடுவார் இல்லை

வீடுகெடின் மற்றோர் வீடுபுக்கால் ஒக்கும் பாடது நந்தி பரிசு அரிவார்க்கே

ஒரு கூடு அழிந்தாலும் மற்றொரு கூடு தருவான் இறைவன். நாடு கெட்டால் அடுத்த நாட்டில் நம்மவர் தம்மை ஆதரியாது விடுவதில்லை. வீடு அழிந்தால் வேறு வீடு புகுவதை ஒக்கும். இப்படியே சிவன் ஒன்று போனால் மற்றதை நமக்கு அருளவான்.

சிந்தையது என்னச்சிவன் என்ன வேறு இல்லை சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்

சிந்தை தெளியத் தெளிய வல்லார்கட்குச் சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.

நமக்குள் சிந்தை இருப்பதால் அதுவேறு சிவம் வேறு எனக்கருத இடமில்லை. நமக்குள் உள்ள சிந்தைக்குள்ளே தான் சிவம் இருக்கிறது. மேலும் அங்கேதான் அது வெளிப்படும். யாருக்குச் சிந்தை மேலும் மேலும் தெளிவடைகிறதோ அவர்கள் சிந்தையில் சிவன் இருப்பதை அறிவார்கள்.

வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள் நோக்குமின் நோக்கப் படும் பொருள் நுண்ணிது

போக்கொன்றும் இல்லைவரவில்லைகேடில்லையாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள்வார்க்கே.

வாக்காலும் மேல் மனத்தாலும் அறிய முடியாத கடவுளை ஆழ்ந்து தியானித்தால் நுணுக்கமான அப்பொருளை உணரலாம்.

முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள் அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமாறு எங்ஙனே

முகத்தில் உள்ள கண்களால் கடவுளை வெளியில் பார்ப்பவர்கள் அறிவற்றவர்கள். அகக் கண்ணால் பார்ப்பதே ஆனந்தம் தருவதாகும். தன் கணவனுடன் அனுபவித்த இன்பத்தை ஒருதாய் தன் மகளுக்கு எப்படிச் சொல்லமுடியும். மகளுக்கு தாய் உறவைக் கூற முடியாதது போல் அவரவர் சிவமாகும் தன்மையை பிறர் மற்றவர்க்குக் கூற முடியாது.

 

தியானத்தின் சிறப்பு.

நான் அறிந்து அப்பொருள் நாட இடமில்லை வான் அரிந்து அங்கே வழியுற விம்மிடும்

ஊன் அறிந்து உள்ளே ஒளி உற ஓங்கினால் தான் அறிந்து அங்கே தலைப்படலாமே.

எங்கும் பரவிய பரம் பொருளை நாம் அறிந்து நாடிப் பார்க்க வழி இல்லை. வானளவு அறிந்து ஒரு வழியில் நாடிப் பார்த்தால் அப்பொருள் நாம் அறிந்த அளவைவிட மிகுதியாகத் தோன்றும். ஊன் உடம்பில் உள்ளே தியானத்தின் மூலம் உள் ஒளி எழும்பி நோக்கினால் நாமும் பரவி அப்பொருளை அடையலாம். உடலில் உள்ள செல்களில் உள்ள 43 குரோமோசோம்களில் 4வது குரோமோசோம் நம் உணர்வை தூண்டும் பணிக்காக உடலில் உள்ளது. தியானத்தின்போது அது துணை செய்யும் என உணர்ந்து நுணுக்கமாக் அறிந்து தியானம் செய்தால் வெற்றி கிட்டும்.

பெருஞ்சுடர் மூன்றிலும் உள் ஒளி ஆகித் தெரிந்த உடலா நிற்கும் தேவர் பிரானும்

இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம் பரிந்து உடன் போகின்ற பல்கு ஓரை ஆமே.

அகத்திலும் புறத்திலும் உள்ள சூரிய சந்திர அக்னி ஆகிய மூன்று ஒளிகளுக்கு ஆதாரமாகிய உள்ளொளியாக இருக்கும் இறைவனே. அப்போது உருவம் தெரியாது. கடவுளுக்கு மூன்று ஒளிகளும் தெரிந்த உடலாக இருக்கும் உருவம். அந்தச்சுடர்கள் மூலம் உலகில் பரவி எல்லப் பொருள்களிலும் பலவித சக்திகளாக கடவுள் உள்ளார். ஓரை- சக்தி. சூரியனுக்கு ஒளிதருவது கடவுள். அதிலிருந்துதான் எல்லாப் பொருளகளும் உருவாயின. உணவாகிய தானியத்திலும் அதை உண்டு செரிக்கின்ற உடம்பிற்குள்ளும் சூரிய ஒளியே நுழைந்துள்ளது. உணவின் சாரம் வழியாகவும் காற்றின் மூலமாகவும் அவ்வொளி உள் ஒளியாய் உள்ளது. அதுவேசிவ ஒளியாம்.

பற்றி நின்று உள்ளே பரமாய், பரஞ்சுடர் முற்றினும் முற்றி முளைக்கின்று மூன்று ஒளி

நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரும் மற்று அவனாய் நின்றமாதவன் தானே.

தேவனும் ஆகும் திசை திசை பத்தையும் மேவனும் ஆம்விரிநீர் உலகு ஏழையும்

ஆவனும் ஆம் அமர்ந்து எங்கும் உலகினும் நாவனும் ஆகி நவிற்று கின்றானே. தேவர்களில் பெருந்தேவன். பத்து உலகத் திசைகளிலும் உடலில் உள்ள நாடிகளாகிய பத்து திசைகளிலும் ஏழு யோக ஆதாரங்களிலும் மேவி இருப்பவனும்புற உலகில் பரவி இருப்பவனும் நாவில் வாக்காக இருந்து அருள்பவனும் இறைவனே. உலகத்தின் திசையும் உடலின் பகுதிகளும் இருதிசை ஆகும். நாடிகள் பத்து.

 

இறைவனின் பெருமை.

உணர்வது உபாயமே உத்தமாயும் உணர்வது நுண்ணறிவு எம்பெருமானை

புணர்வது வாயும் முன்புல்லிய தாயும் உணர்வு உடல் அண்டமும் ஆகி நின்றானே.

தன்வலியால் உலகு ஏழும் தரித்தவன் தன்வலியால் அணுவினும் தான் நொய்யன்

தன்வலியால் மலை எட்டினும் தான் சாரான் தன்வலியாலே தடங்கடலாமே.

அண்ட வெளியிலிருந்து வரும் பல கதிர்கள் சக்திகள் மூலம் தெய்வத் தொடர்பு நம் உடம்புகளில் முன்பே வந்து பொருந்தியிருக்கும். உணர்வதற்குரிய கருவிகள் உடம்பு, இவை வாழும்படி இடம் கொடுத்த அண்டம் அகிய மூன்றிலும் கடவுள் தொடர்பு கொண்டிருப்பதால்தான் உத்தமமாகிய முறையில் கடவுளை உணர்வது கடைபிடிக்கத் தக்கது. கடவுளை நம் நுண்ணறிவே இப்படி உணரும். கடவுளைக் காற்று, ஒளி, நெருப்பு, நீர், நிலம் முதலிய பூதங்களாலும் கண்ணுக்குத் தெரியாத அண்டவெளிச் சக்திகளாலும் நம் உடல் கடவுளை உணர்கிறது. வெளி அண்டங்களாகிய ஏழுவகையும் நம் உடலில் உள்ள ஆதாரங்கள் ஏழும் ஆகிய இரண்டில் எங்கும் பரவியுள்ளான் கடவுள். ஒரே நேரத்தில் எல்லாப் பொருள்களிலும் இருக்கக்கூடிய கடவுள் சக்தியே இதற்குக் காரணம். அணுக்களாக உள்ளவற்றிலும் கடவுள் அணுவிலும் நுட்பமாகமாறி அவற்றுள் பரவி உள்ளார். அது அவர் சக்தியால் நடப்பதாகும்.

புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை நலமையின் ஞான வழக்கமும் ஆகும்

விலமையில் வைத்துள் வேதியர் கூறும் பலமையில் எங்கும் பரந்து நின்றானே.

மதிப்புக்குரியதாய் உள்ள வேதமந்திரங்கள் வேதியர்கள் ஓதுவதால் பலவிதமாக பரந்து எங்கும் நிறைகின்றன. அவ்வோசையுள் இறைவன் இருக்கின்றான். மனத்தில் நினைத்து அதை பக்தியுடன் கூறப்படும் ஒலிகள் இறைவனைத் தமக்குள் அடக்கிக் கொள்ளும். தவம் செய்த முனிவர்கள் ஆகாயத்தில் இருந்த மந்திரக் கூறுகளை உணர்ந்து ஓசைப்படுத்தியதுவே வேதமந்திரங்கள். அதில் இறைவன் இருப்பது இயற்கை. அம்மந்திரங்களும் சந்தமும் ஓசையும் தவறாது பக்தியோடு சொல்லப்படும்போதே பயன் தரும்.

புவனாபதிமிகு புண்ணியன் எந்தை அவனே உலகின் அடல்பெரும் பாகன்

அவனே அரும்பல் சீவனும் ஆகும் அவனே இறைஎன மால் உற்றவாறே

உள்நின்ற ஒளியை உலகர் பிராணனை விண்நின்று இயங்கும் விரிகதிராய்ச் செல்லும்

மண்நின்று இயங்கியும் வாயுமாய் நிற்கும் கண்நின்று இலங்கும் கருத்தவன் ஆமே.

எல்லா உலகங்களுக்கும் தலைவன். சிவ புண்ணியத்தால் அடையப்படுபவன். எல்லோருக்கும் தந்தை. உலகு முழுவதும் வெற்றியுடன் நடத்திச் செல்லும் பெரிய பாகனும் அவனே. பலவாக விரிந்த உயிர்கள் யாவும் அவனாக உள்ளான். எல்லாவற்றிலும் ஐக்கியமாய்ச் சேர்ந்து இருக்கும் அவனைத் தனியாகப் பிரித்துக் கடவுள் என மயங்கி கூறுகிறோம். பிரபஞ்சமாகவும் அதில் உள்ள எல்லாப் பொருள்களாகவும் உடம்பின் உள் ஒளியாகவும், உலகத்தார்க்குப் பிராணனாகவும், வானில் இயங்கும் ஒளியாகவும், மண்னுலகமாக இருந்து இயங்குவதாகவும், வாயுவாகத் திரிவதாகவும், கண்ணில் தெரியும் காட்சியாகவும் நெஞ்சில் தோன்றும் கருத்தாகவும் உள்ளன யாவும் கடவுள் இயக்கமே ஆகும். ஐந்துளி மருந்தைப் நிறைய நீரில் முறைப்படி கலந்தாலும் அம்மருந்து அணுவுக்கும் அணுவாகக் குறைந்தபின்னும் தன் ஆற்றால் குறையாமல் இருப்பதைப்போல் கடவுள் எல்லாப் பொருளிலும் பெருகுவதும் நிறைவதும் எளியது என்பதை நாம் உணருகின்றோம்.

******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879304
All
26879304
Your IP: 3.235.42.157
2024-03-19 08:53

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg