gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

ஆஞ்சநேயர்

Written by

ஆஞ்சநேயர்- ராமபக்தன் 
பெருமான்- பிரமச்சாரிய சமய நெறிகளின் தலைவன். 
வேறுபெயர்கள்- மாருதி, பவனகுமாரர், ஹனுமான், கேசரிநந்தன், சங்கட்மோசன், சுந்தரன், மகா தேஜஸ்வி.

விழாநாட்கள்- புராணங்கள் அனுமனை சிவனின் ருத்ர அவதாரம் எனச்சொல்கிறது. வானர ரூபம் பெற்ற அப்சரப்பெண் அஞ்சனை வானர வீரர் கேசரியை மணந்து பிள்ளைவரம் வேண்டி தவம். தசரதன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் எழுந்த புனிதபாயாசத்தை பருந்து கொத்திக் கொண்டுபோக அது நழுவி கீழேவிழ வாயுபகவான் அதை அஞ்சனையின் விரிந்த கைகளில் விழச்செய்ய அதை உண்டு பிறந்தவர் அனுமன்.

சிறப்பு- எதிரிகளிடையே பயத்தை உண்டு பன்னக்கூடிய சக்தி, நம்பியவர்கள் பயம் விலகும், பிரம்மாஸ்திரம் ஒன்றும் செய்யாது என்று பிரம்மனும், கடலைக்கடக்கும் சக்தியை சிவனும், வஜ்ராயுதத்தைவிட வலிமையான உடல் என இந்திரனும், தண்ணீரில் எந்த ஆபத்துமில்லை என வருணனும், நெருப்பு ஒன்றும் செய்யாது என அக்னியும், நோயற்ற நீண்ட வாழ்வை எமனும், தன்னால் உருவாக்கப்பட்ட எந்த ஆயுதத்தினாலும் சேதமில்லை என விஷ்வகர்மாவும், திருப்தியான மனத்தையும் மகிழ்ச்சியை குபேரனும், தன்னைவிட வேகமாக செல்லும் வரத்தை வாயுவிடமிருந்தும் பெற்றவர் அஞ்சனை மைந்தன். அனைத்தும் கற்ற சூரியனை தமது குருவாகக் கொண்டவர். அவரிடமிருந்து அணிமா, லஹிமா, கரிமா சித்திகளைக் கற்றார். ராமபிரானின்மேல் கொண்ட அன்பை நம்பாதவருக்கு தன் நெஞ்சைப் பிளந்துகாட்டி அதில் ராமரும் சீதையும் கொலுவிருக்க காட்டினார்.

வணங்கும்முறை- இறைவனுக்கு நெய்வேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத்தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். பெருமாள் கோவில்களிலோ, தனிக் கோவில்களிலோ எழுந்திருந்து அருளாசி வழங்கும் சஞ்சீவராயருக்கு வெண்ணெய்க்காப்பு அல்லது வடைமாலை சார்த்தி வழிபடலாம். நீங்கள் கொண்டு சென்ற அர்ச்சனைப் பொருள்களை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு அர்ச்சனை முடிந்ததும் தீப ஆராதனைக் காண்பிக்கும்போது கண்களை மூடாமல் ஆஞ்சநேயரின் பாதம் பார்த்து முகதரிசனம் செய்யவும். தீப ஆராதனை ஏற்று பிரசாதம் பெற்று வரவும்.

உள்ளே.....

1.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.

2.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை. 

3.‘ஸ்ரீஆஞ்சநேயர் கவசம்-சகல காரியசித்தி, மனோபலன், புத்திபலம், உடல்பலம்- தினமும்- நேரம் கிடைக்கும் போதெல்லாம்.

4.“அனுமன் கவசம்”- வேண்டுவன கிடைக்க, சீரும் சிறப்பும் அடைய, நோய், பகை நீங்க - தினமும்/ நேரம் கிடைக்கும் போது. 

5.ஸ்ரீஅனுமத் புஜங்கம் (பாம்பு போல் பின்னி பினைந்து இருக்கும் வார்த்தைகள்)-தடைகள் தகர்க்க, எதிரி பயம் விலக, சர்வமங்களம் கூட- மனம், வாக்கு, உடல் தூய்மையுடன்-தினப் பிரதோஷ காலம். 

6.“ஸ்ரீஅனுமான்”- குறைகள் தீர, சனியின் பகை விலக.                                                                                                                                                                     7.ஸ்ரீமங்களாஷ்டகம்:--மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

1.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.

அஞ்சிலே ஒன்று (வாயு) பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் (கடல், நீர்) தாவி
அஞ்சிலே ஒன்றாக (ஆகாயத்தில் பறந்து) ஆருயிர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று (பூமி, மண்) பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை (நெருப்பு) வைத்து அவன் நம்மை 
அளித்துக் காப்பான்

2.“அனுமன் துதி”-துயரங்களிலிருந்து காப்பாற்ற- வியாழக் கிழமை.

என் மனக்கவலை, நோய், என் வீட்டின் மீதான தோஷங்களை நீக்குகிற ஆஞ்சநேயரை வணங்குகிறேன். அசுரர்களை எளிதாக வதம் செய்யும் ராமச்சந்திர மூர்த்தியின் உயிருக்கு உயிரான ஆஞ்சநேயரை வணங்குகிறேன். ராமனுக்குப் பிரியமானவரே, கருணை நிறைந்தவரே, பயத்தைப் போக்குகிறவரே, பகைவர்களை நாசம் செய்பவரே, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தருபவரே உமக்கு நமஸ்காரம்.

3.“ஸ்ரீஆஞ்சநேயர் கவசம்”-சகல காரியசித்தி, மனோ பலன், புத்திபலம், உடல்பலம்- தினமும்- நேரம் கிடைக்கும் போதெல்லாம்.

oஅனுமன் என்னை கிழக்கு திக்கில் காக்கட்டும்! தெற்கு திசையில் வாயு புத்திரன் ரட்சிக்கட்டும்! மேற்கு திக்கில் ராட்சதர்களை நாசம் செய்யும் அனுமன் ரட்சிக்கட்டும்! சமுத்திரத்தைத் தாண்டிய ஹனுமான் வடக்கு திக்கில் என்னைக் காத்திடட்டும்!

oகேசரியின் மைந்தன் என்னை ஆகாயத்தில் காக்கட்டும்! விஷ்னு பக்தியுள்ள அனுமன் என்னை கீழ்பாகத்தில் ரட்சிக்கட்டும்! இலங்கையை எரித்தவர் சர்வ ஆபத்துகளிலிருந்தும் என்னை எப்போதும் காக்கட்டும்!

oசுக்ரீவனின் மந்திரியானவர் என் தலையை ரட்சிக்கட்டும்! வாயு புத்திரர் எனது நெற்றியினைக் காத்திடட்டும்! மகாவீரர் எனது புருவங்களின் நடுப் பகுதியைக் காக்கட்டும்!

oசாயாக்ரஹி என்னும் அரக்கியைக் கொன்ற அனுமன், எனது கண்களைக் காக்கட்டும்! வானரங்களின் தலைவர் எனது கன்னங்களைக் காக்கட்டும்! ஸ்ரீராமதூதன் எனது காதுகளின் கீழ்ப்பகுதியைக் காக்கட்டும்!

oஸ்ரீஅஞ்சனாகுமாரர் எனது மூக்கைக் காக்கட்டும்! வானராதிபர் எனது மூக்கைக் காக்கட்டும்! அசுரர்களின் பகைவர் எனது கழுத்தைக் ரட்சிக்கட்டும்! தேவர்களால் பூஜிக்கப்படுபவர் எனது தோள்களை ரட்சிக்க வேண்டும்!

oஒலிபொருந்திய தேகத்தை யுடையவர் எனது தோள்களைக் காக்கட்டும்! நகங்களை ஆயுதமாகக் கொண்டவர் எனது நகங்களைக் காக்கட்டும்! வானரர்களுக்குத் தலைவர் எனது வயிறைக் காக்கட்டும்!

oராமனின் கணையாழி மோதிரத்தை எடுத்துச் சென்றவர் எனது மர்பைக் காக்கட்டும்! பெரும் கைகளையுடையவர் எனது இரு பக்கங்களையும் காக்கட்டும்! சீதையின் துயரத்தை அடியோடு போக்கியவர் எனது ஸ்தனங்களை எப்போழுதும் காக்கட்டும்!

oஇலங்கைக்கு பயத்தை அளித்தவர் எனது பின் பாகத்தைக் காக்கட்டும்! ஸ்ரீராமசந்திர தூதன் எனது தொப்புளைக் காக்கட்டும்! வாயுபுத்திரன் எனது இடுப்பைக் காக்கட்டும்!

oமேதாவியான, சகலவேத ஆகமம் யாவும் கற்ற சகல சாஸ்திர பண்டிதனான அனுமன் எனது மர்ம பிரதேசத்தைக் காக்கட்டும்! சிவபக்தரான ஹனுமன் எனது தொடையின் சக்திகளைக் காக்கட்டும்! எனது தொடைகளையும் முழங்கால்களையும் லங்காபுரியின் உப்பரிகைகளை உடைத்தவர் காக்கட்டும்!

oஎனது ஆடுசதையினை வானர உத்தமர் காக்கட்டும்! மிகுந்த பலசாலி எனது கனுக்கால்களைக் காக்கட்டும்! சூரியனுக்கு ஒப்பானவரும், சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கி வந்தவருமான அனுமன் எனது கால்களைக் காக்கட்டும்!

oஅளவில்லாத பலம் மிக்கவர் எனது அங்கங்களையும், கால்விரல்களையும் எப்பொழுதும் காக்கவேண்டும்! மகாசூரர் எனது எல்ல அங்கங்களையும் காக்கட்டும்! மனதை அடக்கியவர் எனது ரோமங்களைக் காக்கட்டும்!

oஎந்த பக்தன் ஹனுமானின் இந்தக் கவசத்தைத் தரிப்பானோ, அவனே மனிதர்களுள் சிறந்தவன்! போகங்களையும் மோட்சத்தையும் அடைவான்! அவன் சிறந்த அறிவாளியாகத் திகழ்வான்!

oமூன்று மாத காலம் தினம் மூன்று முறையோ அல்லது ஒரு முறையோ ஒரு பக்தன் படிப்பனேயாகில், அவன் எல்லா சத்ருக்களையும் ஒரு கணத்தில் ஜெயித்து லட்சுமிகரமாகிறான்! சகல செல்வங்களும் அவனைத் தேடி வருகிறது!

oநள்ளிரவில் நீரில் அசையாமல் நின்று ஏழு தடவை ஜபித்தால் நோய்கள். தீவினைகள். பாவங்கள், தாபத்ரயங்கள் என யாவும் நீங்கும்!

oஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தடியில் நின்று, இத்துதியைச் சொல்பவன் சகல காரியங்களிலும் ஜெயிப்பான்! எதிரிகளை தோற்கடிப்பான்!

oஸ்ரீ ராமரட்சையுடன் கூடிய ரட்சயை இந்த அனுமன் கவசத்தைச் சொல்லி எவரொருவர் தரித்துக் கொள்வாரோ அவருக்கு வியாதிகள் யாவும் நீங்கும்! எல்லா காரியசித்தியும் ஏற்படும்!

oஎல்லா துக்கமும் அழியும்! எங்கும் எதிலும் வெற்றி! தூய்மையான மனதுடன் சுத்தமாக ஒரு நாள் பகல் தொடங்கி மறுநாள் பகல் வரை விடாமல் இந்தக் கவசத்தைப் படித்தால் சிறவாசம் நிச்சயம் நீங்கும்! இதில் சந்தேகமேயில்லை! மகாபாதகங்கள், உப பாதகங்கள் யாவும் நீங்கும் என்பதில் ஐயமில்லை!

oஎந்த அனுமன் மிகுந்த ஆற்றல் கொண்டு பெரும் கடலையே சின்ன குட்டையைத் தாண்டுவது போல் தாண்டி ஸ்ரீசீதாதேவிக்கு மிகுந்த சோகத்தால் ஏற்பட்ட தாபத்தைப் போக்கினாரோ, ஸ்ரீவைகுண்ட நாதரான ஸ்ரீராமனிடத்தில் பக்தி கொண்டாரோ, அக்ஷயகுமாரனை வதம் செய்தாரோ, யுத்தத்தில் ஜயிக்கப்பட்ட ராட்சசனான ராவணனுடைய அபரிமிதமான கர்வத்தை அடக்கினாரோ, அப்படிப்பட்ட வாயு குமாரனும் வானரசிரேஷ்டருமான ஸ்ரீஹனுமான் எப்பொழுதும் நம்மை காக்கட்டும்!

oபாலசூரியன் மற்றும் தாமரை போல சிவந்த முகத்தைக் கொண்டவரும், ஜல பிரவாகத்தால் நிறைந்த அருட் கண்களை பெற்றவரும், சஞ்சீவி மலையைத்தாங்கி வந்து இலங்கை யுத்தத்தில் இறந்த வானரர்களைக் காத்த வீரரும், ராமபக்தர்களுக்கு மென்மையானவரும், புகழ்மிக்கவரும், பாக்கியவதி அஞ்சனையின் புதல்வருமான அனுமனை வணங்குகின்றேன்!

oஅஞ்சனையின் மகனாக அவதரித்தவரும், தெய்வீக புருஷரும், மார்கழி மாத மூலநட்சத்திரத்தில் பிறந்தவரும், அனந்தன் என்னும் ஆதிசேஷனால் போற்றி வணங்கப் படுபவரும், அற்புதங்கள் பல செய்தவருமான ஆஞ்சநேய மூர்த்தியை போற்றி வணங்குகின்றேன்! மகிழ்வு உண்டாகட்டும்!

4.“அனுமன் கவசம்”- வேண்டுவன கிடைக்க, சீரும் சிறப்பும் அடைய, நோய், பகை நீங்க - தினமும்/ நேரம் கிடைக்கும் போது.

அனுமன் கவச அருமந்திரத்தின்
முனைவன் இராமச்சந்திர மூர்த்தியே
ஆசிரியத்துள் அடங்கும் யாப்பே
மந்திரத்து இலக்கு மாருதி ஆகும்
காற்றின் புதல்வனே காத்திடும் வித்து
அஞ்சனைச் செல்வனே மிஞ்சிடும் ஆற்றல்
நெஞ்சின் ஆவல்கள் நிறைவேறிடவே 
பராவும் வேண்டுதல் பற்றுகள் அனைத்தும்
இராம தூதனே இணைப்பின் பினைப்பு!
எண்ணி எண்ணி இராமன் இசைப்பான்


கீழ்பால் இருந்தெனை அனுமன் காக்க!
மேற்பால் கேசரி மைந்தன் காக்க!
கடலைக் கடந்தவன் வடக்கில் காக்க!
காற்றின் களிமகன் தெற்கில் காக்க!
திருமால் பக்தன் திசைதொறும் காக்க!
என்றும் எல்லா இடர்களிலிருந்தும்
பொன்றும் ஐயம் போக்குவோன் காக்க!
சுக்ரீவன் கொளும் தக்க அமைச்சன்
மிக்குயர் வளிமகன் மேல்தலை காக்க!
அரும்பெறல் மறவன் இருபுருவத்தெழும்
வெற்றி மிகுந்த நெற்றியைக் காக்க!
குறைநிழல் அகற்றும் குரக்கினத் தலைவன்
நிறைவிழி இரண்டையும் நேர்வந்து காக்க!
இராமனின் தொண்டன் என்கவுள், இருசெவி
விராய் எப்போழுதும் வேட்புடன் காக்க!
மூக்கை அஞ்சனை புதல்வன் காக்க!

மாக்குரங்கரசன் மணிமுகம் காக்க!
அரக்கரை வென்றோன் எருத்தம் காக்க!
அருக்கனைத் தொழுவோன் அருந்தோள் காக்க!
ஆழியை நீந்தியோன் அகலம் காக்க!
நீள்நெடுங் கையன் பக்கம் காக்க!
சீதையின் துயரைச் சிதைத்தவன் என்றன்
மார்பகம் இரண்டையும் சீருறக் காக்க!
இலங்கை நடுக்கினோன் இடைப்புறம் காக்க!

இலங்கு கொப்பூழ் எம் மாருதி காக்க!
காற்றின் புதல்வன் இடுப்பைக் காக்க!
அறிவின் சிறந்தவன் செறிவிடம் காக்க!
விடையவன் உகந்தோன் தொடையைக் காக்க!
இலங்கை வாயிலை எரித்தவன் முழந்தாள் 
வலங்கொளக் காக்க! குரங்கிற் கீர்த்தியன் 
மேற்கால் காக்க! ஆற்றல் மிகுந்தவன் 
கணுக் கால்களினைக் கண் எனக் காக்க!

மாமலை நிகர்த்தவன் மணிக்கதிர் நிகர்த்தவன்
கால்கள் இரண்டையும் சால்புறக் காக்க!
கடுவலி மிக்கவன் கால்விரல் காக்க!
ஐந்தவித் தோன் என் மைம்முடி காக்க!
உறுப்புகள் அனைத்தையும் உரவோன் காக்க!
திறமையும் கல்வியும் திகழப் பெற்றோர்
உற்வுடன் அனுமன் கவசம் ஓதுவோர்
மாந்தருள் மாந்தராய் மாண்புடன் விளங்குவர்

ஏந்து நற்பேறும் வீடும் எய்துவர், நாள்தொறும் 
ஒருமுறை இறுமுறை மும்முறை நாள் தொண்ணூறு 
வேட்புடன் ஓதுவோர் பகை ஒழிந்திட்டுத் தகைபெற
நிற்பர், சீரும் சிறப்பும் வேருற ஓங்குவர்
அகநோய் புறநோய் மனநோய் அனைத்தும்
புகவே புகாமல் போற்றும் மருந்திது!
அரசடி இருந்திதை நிரல்பட ஓதுவோர்
குறவிலாச் செல்வம் நிறைவுடன் பெறுவர்!

வெற்றி எம்முனையிலும் பற்றிச் சிறப்பர்! இராமன் 
காப்புடன் இனைந்திதை அணிபவர் உறாஅர் 
எந்நோயும் நீடுவாழ்ந்து உயர்வர்! எல்லாத் 
துறையிலும் வெல்வார் வாழ்வார்! உள்ளும் புறமும் 
வெள்ளத் தூய்மையாய் அல்லும் பகலும் அனுமன் 
கவசம் சொல்லுவார் அச்சம் துடைப்பார்! 
வெல்லுவார்! சிறை விடுபடுவர் சிறுபெருங்குற்றக் 
கெடுதலை அழிப்பர்! விடுதலை பெறுவர்!

5.ஸ்ரீஅனுமத் புஜங்கம் (பாம்பு போல் பின்னி பினைந்து இருக்கும் வார்த்தைகள்)-தடைகள் தகர்க்க, எதிரி பயம் விலக, சர்வமங்களம் கூட- மனம், வாக்கு, உடல் தூய்மையுடன்-தினப்பிரதோஷகாலம்.

oபொன் போன்றமேனியனே! கற்றோன். ராஜசிம்மம் போல தைரியம், கம்பீரம், நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தைக் குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அந்த வாயு புத்திரனாகிய அனுமனே போற்றி!

oபேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சந்திரனை பழமென்று எண்ணிப் பாய்ந்தவன். தீமைகளை அடியோடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன், அந்த ராம தாசனான அனுமனே போற்றி!

oலஷ்மனனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தை தவிர்த்தவன். ஞானி, சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.

oசிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும் அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அழகோ அழகு. அந்த சீதாராம்தாசனே போற்றி!

oஅஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி.சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துனை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைபோல் பறந்தாய். இலங்கையில் அட்டகாசம் செய்தாய். நீயே சத்ய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.

oபோரிலே நீ ருத்ரனாக் எரிப்பாய். மேகநாதனிடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷன் உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடக்க, ஆதர்ஷபூமியைத் தாங்கும் அவன் அப்படி கிடந்தபோது நுண்ணறிவின் உதவியாலே விண்ணிலே பாய்ந்துசென்று பல்லாயிர லட்சயோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்து வந்து உயிர்காத்த அனுமன் பெருமையை அளவிட்டு கூறமுடியாது. அனுமனே போற்றி.

oபொன்முடி தரித்தவா போற்றி. மாண்புமிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம்பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியாக செயல்படுபவன். உயர்ந்த பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை வணங்குகின்றேன்.

oராமனுக்கு இனியவனே. ராக சொரூபனே. நோய் தீர்க்கும் சஞ்சீவியே. உலக ரட்சகனே. பத்ம பாதனே. வானர சிரேஷ்டனே. குமுதனே. உன்னை வணங்குகின்றேன்.

oபேரருளும் பெருமையும் கொண்ட கபீந்த்ரா என்ற வானரத் தலைவனே. நீ தானே தேடிவந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமைமிக்கவனே. உன்னை போற்றி வணங்குகின்றேன்.

oபொன்னாலான இலங்காபுரியை பொடிப்பொடியாக்கியவன் நீ. இலங்கையில் நீ வைத்த தீயிலிருந்து நதி, கடல் என எதுவும் உன் வெஞ்சினத்திற்கு தப்பவில்லை. உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணங்கள் வரும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை உன்னுடையதாக கொண்ட மாருதியே உன்னை வணங்குகின்றேன்.

oராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே. ராம பிரமத்தின் நாதபிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரனே. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பை பெற்ற தவசீலனே. இந்த பெரும் பேற்றை பெற என்ன தவம் செய்தாய். உன்னை வணங்குகின்றேன்.

oகுருவே ஸ்ரீ ஹனுமானே. என இவ்வையகமே மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப் போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன்மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிடமிருந்து பெற்று அவனுக்கே அளிக்க வல்லவனாகிய உன்னை வணங்குகின்றேன்.

oருத்திரனும், பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீ. தத்துவமும் தர்க்கமும் அறிந்தவன் நீ. இசையில் லயிப்பவன். எங்கெல்லாம் சத்யத்திற்குக் கெடுதல் ஏற்படுகின்றதோ அங்கு சென்று சத்யத்தைக் காப்பவன் நீ. உன்னை வணங்குகின்றேன்.

oசத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி. ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாயு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினை பெற்றவனே போற்றி.

oநித்ய பிரம்மசாரியே போற்றி. வாயு மைந்தனே போற்றி. எப்போதும் ராமநாத சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீ. உன்னை வணங்குகின்றேன்.

6.“ஸ்ரீஅனுமான்”- குறைகள் தீர, சனியின் பகை விலக

உள்ளம் உருக, விழிசெருக, உடலம் எங்கும் களிபரவ,
வள்ளல் நாம ஜெபத்தாலே விழியும் கண்ணீர்த் துளிபெருக
மெல்ல இருந்த பெருமாளே! வேண்டித் தினமும் தொழுவேனே!
அள்ளி வழங்கி எனது குறை அனைத்தும் தீராய் அனுமானே!

பொறியும் புலனும் போனபடிப் போகும் விலங்குச் சாதியிலே
தறியா தலையும் காற்றினுக்கே தனயன் ஆனாய் மேருவிலே!
நெறியும் நிலையும் தவறாமல் நின்றாய்! யார்பால் அது கற்றாய்!
அறியேன் உன்போல் ஒருவனையே அருள்வாய் ஐயா அனுமானே!

படிகம் போலும் பால் போலும் பரமா, உனது நிறம் விளங்கும்!
வெடிபோல, கோடை இடிபோல விம்மி உனது குரல் முழங்கும்!
அடிபாதாளம் அதன் கீழே! அணிமா முடியோ விண்மேலே!
வடிவாய்க் காட்சி தருவானே! வணக்கம், வணக்கம் அனுமானே!

ஆயுள் வளரும் உன்னாலே! அழகும் வலிவும் உன்னாலே!
பாயும், நோயும் பல்பகையும் பறந்துபோகும் உன்னாலே!
கோயில் எனது நெஞ்சகமாம்! கூறும்கவிதை மந்திரமாம்!
தேயம் தழுவும் புகழோனே! சித்தம் இரங்காய் அனுமானே!

அன்னை அருளால் அவ்வுலகில் அழியா திருக்கும் பெரியபதம்
மன்னன் அருளால் இவ்வுலகில் மலரோன் நிகராய்ப் பிரம்மபதம்!
தன்னை நம்பும் அடியார்க்குத் தலைமை தருதல் உனது குணம்!
என்னை ஆளும் பகவானே இன்றே அருள்வாய் அனுமானே!

ஜென்மச் சனியால், அட்டத்தில் சீறும் சனியால், கண்டகனாம்
வன்மச் சனியால் நீச்சமுடன் வக்ரச் சனியால் உனையடைந்தோம்
கன்மச் சனியின் பகைவிலக்கு கலங்கும் குடியை நிலைநிறுத்து!
பொன்னைப் பொழியும் கையோனே! போற்றி, போற்றி அனுமானே!

ஸ்ரீ மாருதி துதி- க்ருபை உண்டாக-

ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபதக நவா ரகம்
அபார கருணா மூர்த்திம் 
ஆஞ்சநேயம் நமாம் யஹம்

ஸ்ரீ அனுமன் துதி- துஷ்ட கிரஹங்கள் விலக-
அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும்ஹ சாரிணம்
துஷ்ட க்ரஹ வினாசயா 
ஹனுமந்த முபாஸ் மஹே

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி- காரியங்களில் வெற்றி பெற-
ஸ்ரீராமதூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமுத் பவ
அஞ்சனா கர்ப்ப ஸம்பூத
வாயு புத்ர நமோஸ்துதே
அஸாத் ஸாதக ஸ்வாமிந்!
அஸாத்யம் தவ கிம் வத!
ராமதூத க்ருபா ஸிநதோ!
மத்கார்யம் ஸாதய ப்ரபோ

ஸ்ரீ அனுமன் துதி- தைரியம் உண்டாக-
புத்திர் பலம் யசோ தைர்யம் 
நிர்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்
ச ஹனூமத் ஸம்ரணாத் பவேத்

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--

மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

oபிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

oசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

oமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

oவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

oமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

oகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

oஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

oசகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

o‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’

oகடற்கரையில் உலாவும்போது அப்போது வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுறுவதால், அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழந்து விடுகின்றீர்கள். புதிய சூழலில் இருந்தாலும் மனம் பழையதில் கிடந்து தவிக்கின்றது.

oஎல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின் இரகசியம் அல்லவா! அது அற்புத இலக்கணம்.

oசந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை.

oமனிதனால் முடியாதது அவனது கடந்த இழந்தகாலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.

oஉனது வாழ்நாள் ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் பற்றி சிந்தித்து என்ன பயன்! இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.

o காலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.
“சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879682
All
26879682
Your IP: 54.85.255.74
2024-03-19 10:56

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg