gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
திங்கட்கிழமை, 06 April 2015 00:00

ஆனந்த அன்பு!

Written by
Rate this item
(0 votes)

ஆனந்த அன்பு!

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறானவை. ஜீவாத்மா எல்லா உயிர்களிலும் இருப்பது. பரமாத்மா ஜீவாத்மா உள்பட எங்கும் எதிலும் நிறைந்திருப்பது. இந்த ஆத்மாக்கள் இருக்கும் இடம் ஆத்ம உலகமாகும். அது அன்பும் அமைதியும் நிறைந்தது.

ஜீவன்கள் அங்கிருந்து அவ்வப்போது தங்களின் ஆசையின் விருப்பத்திற்கு ஏற்ப இங்கு வந்து வாழ்க்கையின் இன்ப துன்பங்களை நுகர்ந்து அனுபவிக்க வருகின்றன. உலக வாழ்க்கை ஆரம்பத்தில் உல்லாசமாக இருந்தாலும் அதில் வெற்றி, தோல்வி, சலிப்பு, துக்கம், சந்தோஷம், இன்பம், துன்பம், சாந்தம், கோபம், அழுகை, சிரிப்பு எல்லாம் கலந்த கலவையாகத்தான் இருக்கின்றது. இப்படிப்பட்ட வாழ்க்கைக்காக ஆசைகளை மேற்கொண்டே ஆத்மாக்கள் இப்புவியில் வந்துழன்று மீண்டும் சென்று மீண்டும் பிறப்பெடுத்து சுழன்று சுழன்று மாறும் ஜனன மரண விளையாட்டை நடத்த அந்த ஆன்மாக்களின் கர்ம விணைகளுக் கேற்ப விதி என்ற பெயரில் இறைவன் நிகழ்வுகளைப் புரிகின்றான்.

இந்த பூவுலகில் அன்பும் அமைதியும் மேற்கொண்டு வாழ்வியலின் நுணுக்கங்களுடன் இயந்து வாழ்பவர்கள் வாழ்வில் வெற்றி கண்டு ஆரோக்கியமான ஆனந்த வாழ்வுதனை வாழ்ந்திடமுடியும். ஏனோ கலியுகத்தில் அதற்கான சிந்தனைகள் குறைந்து கொண்டு வருகின்றது. ஜீவாத்மாக்கள் அன்பைப் புறந்தள்ளி அமைதியிழந்து காணப்படுகின்றனர். பொதுவாக நல்ல எண்ணங்களை கொண்டிருக்கும் ஜீவர்கள் எதையும் சாதிக்க முடியும். நல்ல எண்ணங்கள் ஆரோக்கியமான சிந்தனையை தோற்றுவித்து அதை வளப்படுத்தி அந்த ஆத்மா மேநிலையடைய தூண்டுகோலாக இருந்து வெற்றியைப் பரிசளிக்கும். மகிழ்ச்சி என்பது உணர்வில் பூக்கும் பூவாகும். அந்தப் பூ மலர்ந்தால் உடல் உள்ளே நறுமணம் சூழ ஆத்மா மலர்ந்து தன் நிலை உணரும். உண்ணும் உணவிலும் பொருட்கள் வாங்குவதில் இன்னபிற அடைவதிலும் ஏற்படும் மகிழ்வு உண்மையான மகிழ்வு இல்லை. நீர், காற்று, வாயுவினால் ஒன்றான மனம் விரிந்து மகிழ்வு என்ற உனர்வு ஊள்ளேயிருந்து பூத்து அதை உணர்தலே உண்மையான ஆனந்த மகிழ்வாகும்.

சொர்க்கமும் நரகமும் மனித மனத்திலேதான். ஒருவருக்கு சொர்க்கமாகும் வாழ்க்கை மற்றொருவருக்கு நரகமாகத் தோன்றும். அது அந்த ஆத்மாவின் எண்ணப்படி நடக்கின்றது. தெய்வீகமான ஓர் முகத்தை வரைய விரும்பினான் ஓவியன். பல நாட்கள் தேடி ஒரு சிறுவனைக் கண்டான். ஓவியம்வரையப் பட்டு முழுமையடைந்தது. பார்ப்பதற்கு தெய்வாம்சம் மிகப்பெருந்தியிருந்தது அந்த ஒவியம். நிரைய பிரதிகள் எடுக்கப்பட்டு விற்றது.

பலவருடங்கள் கழிந்தது. ஒவியனுக்கு தற்சமயம் சாத்தானைப் போல் ஓர் ஓவியம் வரைய ஆசை பிறந்தது. பல இடங்களில் தேடி கடைசியாக ஒர் சிறையில் இளைஞன் ஒருவனைக் கண்டான். அவனே தன் எண்ணத்திற்கு பொருத்தமானவன் என்று அவன் ஒவியத்தை வரைந்தான். முடிவில் அந்தபடம் ஒவியன் எதிர்பார்த்ததுபோல சிறப்பாக அமைந்தது. அந்தபடத்தைப் பார்த்ததும் மாடலாக நின்றவன் கதறி அழுதான். விசாரித்தபோது நீங்கள் முதலில் தெய்வாம்சம் என வரைந்ததும் என் உருவத்தைதான். காலம் என்னை சீரழித்துவிட்டது எனப் புலம்பினான்.

மனிதனுக்குள் கடவுள், சாத்தான் இரண்டும் உள்ளது என்பது புரியும். அதிலிருந்து சொர்க்கம் அல்லது நரகத்தை கண்டுகொள்வது மனிதனுக்கு சிறப்பு. என்னவாக வேண்டும் என்பதை மனமே நீ தேர்ந்தெடு.
ஒவ்வொரு இடத்திலும் தவாறகப் புரிந்து கொள்ளுதல், தான் சொல்வது செய்வதுதான் சரி என்ற மனப்பான்மை, பொறாமை போன்றவைகளே கர்வம், கோபம் ஏற்படக் காரணமாயிருந்து மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கின்றது.

நாம் ஆத்மா எப்போதும் ஒளிர்ந்து வெளிச்சம் தோன்ற தாயாராய் இருக்கின்றது அதை நாம் சரியான பாதையில் இயக்கி ஆத்மாவின் வாழ்க்கையை சிறப்பானதாக்க முயற்சிக்கவேண்டும். இயற்கை எல்லாம் தரவல்லவை. பெறவேண்டியதை பெறவேண்டிய தருணத்தில் பெற்று வளம் பெறுவீர்.

அன்பு இறையின் ஆணை. அது ஓர் வரப்பிரசாதம். எல்லா உயிரையும் மனித நேயத்துடன் நேசி. ஜாதி, மதம், இனம், தேசம், மொழி எல்லாம் கடந்து அன்பு ஒன்றையே பிரதானமாகக் கொண்டால் வாழ்வு வளம் சேர்க்கும். எல்லோரும் போற்றுவர். இதை உணர்த்தும் விதமாக இராமாவதாரத்தில், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த குகனுடனும், குரங்கு இனத்தில் பிறந்த சுக்ரீவனுடனும், அரக்க குலத்தில் பிறந்த விபீஷணனுடனும் சகோதர உணர்வுடன் பழகியுள்ளார் இராமர். சபரிக்கும், அகலிகைக்கும் தாய்ஸ்தானத்தில் வைத்து போற்றினார். பறவை இனத்தில் பிறந்த ஜடாயுவை தன் பெரியப்பா ஸ்தானத்தில் வைத்து போற்றினான். தூய அன்பு எல்லாவற்றையும் கடந்து நிற்கும்.

பண்பு நிறைந்த ஓர் வீட்டின் கதவு தட்டப்பட்டது. அந்த ஒலி கேட்டதும் வீட்டின் உள்ளே இருந்த கணவன் மனைவி இருவரும் கதவைதிறக்க வந்தனர். திறக்குமுன் வந்திருக்கும் தாங்கள் யார் எனக் கேட்டனர். வந்தவர்கள் நாங்கள் செல்வம், வெற்றி, அன்பு. உங்கள் பண்பு கண்டு வந்துள்ளோம். எங்களில் யார் ஒருவர் உங்கள் வீட்டிற்குள் வர அனுமதி கொடுப்பீர்கள் எனக் கேட்டனர். கணவன் மனைவி இருவரும் சிறிது யோசனை செய்து, உங்களில் யார் அன்போ, அவர் வரலாம் என்றனர். அன்பு நுழைய, தொடர்ந்து வெற்றி, செல்வம் இரண்டும் அன்பு இன்றி நாங்களில்லை எனக்கூறி உள்ளே வந்தது. எனவே எல்லோரிடமும் எல்லாவற்றின் மேலும் அன்பு கொள்ளுங்கள். எல்லா இன்பங்களும் அடைவீர்.

உலகில் அன்பைப் போன்ற சிறந்த ஆயுதம் ஏதுமில்லை என்பதைப் புரிந்துகொண்டு அன்பை எல்லா ஜீவர்களிடமும் உயிர்களிடமும் பகிர்ந்து பாசம் காட்டி நேசத்துடன் வாழ வாழ்த்துகிறேன் - குருஸ்ரீ பகோரா

Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879211
All
26879211
Your IP: 34.237.245.80
2024-03-19 08:26

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg