gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வெள்ளிக்கிழமை, 18 May 2018 11:36

கடவுளை ஏன் வணங்க வேண்டும்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

இயங்கிய ஞானக் குன்றே அரவக் கிண்கிணி ஆர்ப்பாய்
இலகக் கொம்பொன்றேந்தினோய் வஞ்சனை பலவும் தீர்ப்பாய்
அழகிய ஆனைக்கன்றே இளமத யாணை முகத்தாய்
இரகுபதி விக்கின விநாயகா அனந்தலோடாதியில் அடிதொழ அருளே

$$$$$

கடவுளை ஏன் வணங்க வேண்டும்!

நம்புவதற்காண காரணங்கள்!
புவியில் உலக உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நிறைய தேவைப்படுகின்றது. ஆனால் அவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருக்க வேண்டும். பூமி ஒரு நிரந்தர வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றது. இதை விடுத்து அதன் வேகத்தை கூட்டினாலும் குறைத்தாலும் புவியின் நிலையில் நிறைய மாற்றங்கள் எழும். இரவும் பகலும் நீண்டு அல்லது குறைந்து போய்விடும். மரம் செடி கொடிகள் எல்லாம் உஷ்ணத்தால் எரிந்தோ அல்லது குளிரால் உறைந்தோ போய்விடக்கூடும்.

சூரியனிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் புவியிருப்பதால் சூரியன் வெப்பத்தை அளவாக பூமிக்கு கொடுக்கின்றது. இப்போது புவிக்கு கிடைக்கும் உஷ்ணத்தில் பாதியளவிற்கு குறைந்தால் உயிர்கள் குளிரில் உறைந்துவிடும். இரண்டு மடங்கானால் எரிந்து சாம்பலாகிவிடும் புமியின் சாய்நிலையில் மாற்றம் கண்டால் கடல் நீராவி வேறு திசையில் பயணித்து கண்டங்களை பணிப் பிரதேசமாக மாற்றிவிடும்.. சந்திரனின் தூரம் இப்போது இருப்பதைவிட குறைந்தால் பிரமாண்ட அலை எழுச்சி ஏற்பட்டு அடிக்கடி கண்டங்கள் நீரில் மூழ்கி எழும். பூமியின் மேற்படலம் பருமன் குறைந்தால் உயிர்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காது. கடல் ஆழமானால் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் ஆக்ஸிஜனை கடல் இழுத்துக் கொள்ளும். ஆகாயம் மெலிந்து இருந்தால் விண்கற்கள் பூமியின்மீது மோதி தீ விபத்துக்களை உண்டாக்கும்

இந்த நிகழ்வுகள் நடக்காமல் அவை அவைகள் ஓர் நியதிக்குள் இயங்க வைக்கும் பெரியோனை அடியேன் நம்புகின்றேன்

உயிர் என்பது என்ன! அது எங்கே இருக்கின்றது. அதைக் கண்டு பிடித்தவர் யார்! அதற்கு எடையோ, பரிமாணமோ இருக்கின்றதா இல்லையே. ஆனால் அது ஐம்பூதங்களையும் வெல்லும் இயக்கும் சக்தி கொண்டுள்ளது. சிலை வடிக்கும் சிற்பியைப் போல் அனைத்து உயிரினங்களுக்கும் உடலை வெவ்வேறு வகையாகத் தருகின்றது. மரத்திற்கு மரம் இலையை விதவிதமாக வடிவமைக்கின்றது. மலர்களை வித வித வண்ணங்களாக தோன்றுவித்து பூமியை அழகு படுத்துகின்றது. பறவைகளுக்கு பலவித ஸ்வரங்களுடன் கூடிய குரலை அளித்து இன்னிசையை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு இனமும் அதன் பிரத்தியோக சைகை சமிக்ஞை ஒலிகளைப் பெற்றுள்ளது. உயிர்களுக்காக உற்பத்தியாகும் பொருள்களுக்கு சுவையை சேர்த்து விடுகின்றது. உயிர்கள் இயங்க ஆக்ஸிஜனை தாவரங்களிலிருந்து வெளிப்படுத்துகின்றது. இப்படி ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தனித் தன்மையுடன் விளங்கக் காரணம் கண்ணுக்குப் புலனாகாத நுண்ணிய செல்-அணு தன்னுள்ளே கொண்டுள்ள ஜெர்ம் என்பதே ஆகும். சகல ஜீவன்களுக்கும் உயிர் கொடுக்கும் இந்த செல் அணு எப்படி தோன்றியது. இயற்கை உயிரைப் படைக்க வில்லை. மலைகளும் மரம் செடி கொடிகளும் நீரும் கடலும் உயிரை தோற்றுவிக்க ஏதுவானதாயில்லாமல் இருக்க சிறந்த உயிரை புவியில் தோற்றுவித்த அந்த படைப்பாளி யார்!

பிராணிகளுக்கும் விலங்குகளுக்கும் ஒரு வித ஞானத்தை இயற்கைத் தூண்டுதலை புகட்டினவன் யார்.
சால்மன் என்ற ஒருவகை மீன் பலவருடங்கள் கடலில் வாழ்ந்துவிட்டு ஆற்றுக்கு திரும்பி வருகின்றது. கிளை நதி பிரியும் ஓர் இடந்தில் பிறந்த அது பல வருடங்களுக்குப்பின் அந்த இடத்திற்கு வந்து சேரும் ஞானம் அதற்கு கொடுத்தவன் யார்.
ஈல் என்ற நீர் பிராணிகள் வளர்ந்து முதிர்ச்சியடைந்ததும் கடலுக்குச் சென்று முட்டையிட்டு தன் இனம் வளர குஞ்சு பொறித்து இனவிருத்தி செய்து இறந்துவிடும். நீரைத் தவிர வேறொன்றும் அறியாத குஞ்சுகள் புறப்பட்டு பயணம் செய்து தன் பெற்றோர் வசித்த நீர் நிலைகளுக்கு வந்து சேரும் ஞானத்தை அளித்தவன் யார்! அவைகளுக்கு வழிகாட்டி யார்!
ஒரு வகை குளவிகள் முட்டையிட்டு அந்த இடத்தில் ஓர் வெட்டுக்கிளியை மூர்ச்சையடையும் அளவிற்கு கொட்டி வைத்துவிடும். வெட்டுக்கிளி சாகாது. ஆனால் மயக்க நிலையிலேயே இருக்கும். குளவியின் குஞ்சுகள் செத்த உயிரின் மாமிசம் ஒத்துக்கொள்ளாது என்பதால் உயிரோடு அவைகளுக்கு உண்ண மயக்க நிலையில் உள்ள வெட்டுக்கிளி. இந்த ஏற்பாடுகளை செய்த குளவி மீண்டும் தன் குஞ்சுகளைப் பார்க்க வருவதேயில்லை. எங்கோ சென்று அது இறந்து விடுகின்றது. இந்த ஞான அறிவை குளவிக்கு கொடுத்தவன் யார்!
கூட்டமாக பறக்கும் பறவைகள் அம்பின் முனைபோன்ற அமைப்பில் பறப்பது தான் மற்றொன்றுடன் மோதிவிடக்கூடாது என்பதற்காக! குருவிகள் கூடு கட்டியிருப்பதை நேர்த்தியான அந்தபின்னலை அவைகளுக்குச் சொல்லிக் கொடுத்தவர் யார்!

பிராணிகளுக்கு இருக்கும் இயற்கைத் தூண்டுதலைவிட மேலான திறம் கொண்ட சக்தி ஒன்று மனிதனுக்கு இருக்கிறது என்றால் அது காரண காரியங்களை ஆய்வு செய்யும் பகுத்தறிவாகும். வேறு எந்த பிராணிக்கும் இல்லாத இது எதனால்! இது எப்படி! என சிந்திக்கும் ஆற்றல் அளித்த அந்த பரம ஞான சக்தி யார்!

உயிர்களுக்கு ஆதாரனமானது ஜீன். சொல்லால் அளவிடமுடியாத அளவில் சிறியவையான இந்த ஜீன்கள் உயிர்களின் தனித் தன்மையை நிர்ணயிப்பது எப்படி! இதை இயக்கும் அந்த வல்லவன் யார்! உலக உயிர்களின் அனைத்து ஜீன்களையும் ஒன்று சேர்த்தால் ஓர் கட்டைவிரல் அளவிற்குத்தான் இருக்கும் என்கிறது விஞ்ஞானம். இவ்வளவு சிறிய ஜீன்களும் அதன் துணைகளான குரோமஸோம் செல்களும் ஒவ்வோர் உயிர் மூலத்துணுக்கில் இருந்து கொண்டு அந்தந்த உயிர்களின் அதாவது அனைத்து மனித, விலங்கு, பறவை, தாவரங்களின் குணாம்சங்களுக்கு மூல திறவுகோளாய் செயல்பட வைக்கும் அந்த அற்புதன் யார்.

இயற்கையில் சிக்கனத்தை பார்க்க முடியுமா! முடியும். நிர்வாக சிக்கனம் காணமுடியும். அவற்றை உருவாக்கியவன் யார்!
வேலியாக ஒரு வகைக் கள்ளிச் செடியை நட்டார்கள். இந்த கள்ளியை அழிக்கக்கூடிய பூச்சி வகைகளே அவ்விடத்தில் இல்லாததால் கள்ளி வளர்ந்து பரவி விட்டது. மக்கள் அப்பகுதியில் வாழமுடியா நிலைக்கு கள்ளி வளர்ந்தது. ஆராய்ச்சியாளர்கள் முயன்று அந்தக் கள்ளிச் செடிக்கு ஒரு மாற்றாக ஒரு பூச்சியைக் கண்டு பிடித்தனர். நாளடைவில் அந்தக் கள்ளியினம் அழிந்தது, கள்ளி இல்லாததால் அந்த பூச்சினமும் அழிந்தது. இது போன்ற தடைகளும் அதை சமன் செய்ய மாற்றுகளும் புவி எங்கும் நிறைந்துள்ளன.
அதி வேகமாக இனவிருத்தி செய்யும் பூச்சிகள் பெரிய அளவிற்கு வளர்வதில்லை. அவற்றிற்கு மனிதனைப் போல சுவாசப்பைகள் கிடையாது. குழாய் வழியே மூச்சை விடும். அவை வளரும் அளவிற்கு குழாய்கள் வளர்வதில்லை. இந்த வரம்பு அவற்றின் பெரிய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடுகின்றது. இல்லாவிடின் யானையைப் போல் ஒரு குளவி வளர்ந்தால் என்ன ஆவது! இந்த வரைமுறையை நிர்ணயித்த வலியவன் யார்!

மனிதனுக்குத்தான் கற்பனை வளம் உண்டு. இந்த கற்பனைச் சக்தியால் மனித உயிர்கள் கண்ணுக்குப் புலனாகாத பொருள்களுக்கெல்லாம் சான்று தேடி அந்த எல்லையற்ற காட்சியை காண்கின்றன. அதே சக்தி பக்குவமடைய அடைய பிரபஞ்சப் பொருள்கள் எல்லாவற்றிலும் ஓர் திட்டத்தையும் நோக்கத்தையும் காண்கின்றான். அப்போது ஓர் ஆன்மீக உண்மை அவனுக்கு புலப்படுகின்றது.

உயிர்கள் உண்ட உணவு எப்படி ஜீரணமாகின்றது. உணவிலிருந்து சக்திகள் எப்படி உடல் இயங்க உடலுக்கு கிடைக்கின்றது. மழை காற்று வெய்யில் குளிர் இதெல்லாம் எப்படி நடக்கின்றது என்பது கண்ணுக்குத் தெரியா உண்மைகள் என்றாலும் கண்ணுக்குத் தெரிந்த உடலே அந்த உயிரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை. நடந்த .நடக்கின்ற நடக்கப்போகின்ற எல்லாவற்றையும் கண்காணித்து அவ்வப்போது அந்தந்த சூழ்நிலைக்கேற்ப இயக்கங்களைச் செய்யும் அந்த அற்புத சக்தி எது!

மாகா சூட்சுமமான தந்திரமும் சிருஷ்டித் திறன் வாய்ந்த பரம் ஞானம் பெற்ற ஒன்றிலிருந்தே எல்லாம் தோன்றியிருக்க வேண்டும் இந்த அதிசய சிருஷ்டி சித்தாந்தத்தை வேறு எந்த விதமாக நினைக்க முடியும்.! அந்த சித்தாந்தபதி யார்!

பிரபஞ்சத்தை ஓர் நியதிக்குள் இயங்க வைக்கும் பெரியோனை, சித்தாந்தபதியை, அவற்றிற்கு வரைமுறையை நிர்ணயித்த வலியவனை, சிறந்த உயிரை புவியில் தோற்றுவித்த அந்த படைப்பாளியை. உயிர்களின் குணாம்சங்களுக்கு மூல திறவுகோளாய் செயல்பட வைக்கும் அந்த அற்புதனை, நிர்வாக சிக்கனத்தை உருவாக்கியவனை, உயிர்களுக்கு ஒரு வித ஞானத்தை இயற்கைத் தூண்டுதலை புகட்டினவனை, சிந்திக்கும் ஆற்றல் அளித்த அந்த பரம ஞான சக்தியான அவனை வணங்கி வழிபடுவதில் என்ன தவறு!
காரணங்களைச் சொல்லிவிட்டோம்! நம்புங்கள்! வழிபடுங்கள் இறைவனை-குருஸ்ரீ பகோரா

&&&&&

Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879493
All
26879493
Your IP: 35.168.113.41
2024-03-19 09:54

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg