குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
கட்டுரைகள் (20)
ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந்
தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி
இடைப்படுத்தித் தறுகட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை
நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
சமுதாய சீர்திருத்தம்!
தந்தை தன் மகளை மூன்றுவருடமாக கற்பழித்தார்.
ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவி ஒரு கும்பலால் கற்பழிப்பு.
ஆதிவாசிபெண்கள் அதிகாரிகளால் கற்பழிப்பு
பள்ளி மாணவியிடம் ஆசிரியர் முறைதவறி நடந்தார்
சிறுமியை காவவெறியுடன் சிதைத்து கொலை
கல்லூரி மாணவன் காதலிமேல் ஆசிட் வீச்சு
இப்படி நாளும் எங்கோயோ ஓரிடத்தில் ஏதாவது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. பல நிகழ்வுகளில் ஒரிரண்டு மட்டும் செய்திகளாக வருகின்றது. பல தெரியாமல் போய்விடுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் தெரிவிப்பதில்லை. தெரிந்த செய்திகள் சம்பந்தப் பட்டவர்களுக்கு பல சிக்கல்களை உருவாக்குகின்றது. சட்டங்களும் சமுதாயமும் ஒன்றும் செய்யமுடியாமல் திணறுகின்றது. நீதி துறையும், பாதுகாப்பும் கேள்விக் குறியாகிறது. சமுக ஆர்வலர்கள் தங்கள் உணர்வுகளை தங்கள் அனுபவத்திற்கேற்ப கட்டுரைகளாகவும் கருத்துக்களாகவும் தெரிவிக்கின்றனர். பத்திரிக்கைகள் விமர்சனம் செய்கின்றன. மக்கள் சிந்தனை வயப்படுகின்றனர்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து அந்த நிகழ்வுகளை ஒவ்வொருவிதமாக கணித்து நியாப்படுத்தியும், கண்டித்தும் மற்றவர்களிடம் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டு அந்த நிகழ்வை மறந்து விட்டு அடுத்த செய்திக்கு தாவுகின்றனர். மறுபடியும் எங்கேயாவது ஏதாவது நிகழ்ந்தால் அப்போது பழையதை எல்லாம் சொல்லி நினைவு கூறி பட்டி மன்றம் நடத்துபவர்களாக மாறி விடுகிறார்கள். தொலைக்காட்சியில் பார்க்கும் சிலர் அழுத்தம் காரணமாக உடல்சூடேறி உணர்ச்சி வயப்பட்டு கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தி தங்கள் கோபத்தை ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கின்றனர். சற்று மாறுபட்ட வடிவில் நாங்கள் இவர்களுக்கு பாதுகாவலர்கள் எனதன்னை முன்னிலப்படுத்தும் ஆர்வலர்களும் அமைப்புகளும் தொலைக்காட்சி மூலம் விவாதம் நடத்தி தங்கள் பங்கை முடித்துக் கொள்கின்றனர். சிலர் கட்டுரைகள் எழுதிவிட்டு அமைதியாகி விடுகின்றனர். தொடர்ந்து என்ன நடவடிக்கை என்பதற்கு நமது சமுதாய அமைப்பில் உள்ள வழிமுறைகளை அதிகாரத்தில் உள்ளவர்களிடம் எடுத்துச்சென்று வென்றிட முனையுமாறு சமூக அமைப்பில் ஆர்வமாக உள்ள அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
சிறுவயதினில் சிறார்கள் தன் வளரும் அங்கங்களை, இன உறுப்புகளை தொட்டு பார்க்கும் தன் உறவினர்களால், நண்பர்களால் அவர்களின் செயல் புரியாமலும் தடுக்கும் நிலையில் இல்லாமலும் இருக்கும் நிலையில் உள்ளனர் நாளைய சமுதாய அங்கத்தினர்கள். தாய் தந்தை முன்னிலையிலும் இது நடப்பதாலும் அவர்களில்லாதபோது நடப்பதை அவர்களிடம் சொல்ல வேண்டுமென்றுகூட தோன்றுவதில்லை. மீண்டும் மீண்டும் அப்படி தொடும் போது அது தவறல்ல என்ற எண்ணம் ஏற்பட வாய்ப்பாகின்றது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களில் பலர் சிறார்களை கொஞ்சும்போது இனக்குறிகளைத் தொட்டு முத்தமிடல், இது யாருக்கு என சொல்லி கேலி பேசுவதுமான நிகழ்ச்சிகள் இன்றும் பல இடத்தில் நடந்து கொண்டுதானிருக்கின்றது. புரிந்தோ, புரியாமலோ இவைகள் குழைந்தைகளின் மனதில் பதிந்து விடுகின்றது.
வளரும் பருவத்தில் கேட்கும், படிக்கும் கதைகளும், பார்க்கும் சினிமா காட்சிகளும், எதிர்பாரமல் நேரில் பார்க்கும் காட்சிகளும் அவர்களுக்கு புரியாத நிலையில் தன் நட்புகளுடன் பரிமாரிக் கொள்ளும்போதும் இனம்தெரியா மயக்க உணர்வினை அடைகின்றனர். சிலருக்கு அது பிடிப்பதில்லை. தவறு என நினைத்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். சிலர் மேலும் அரிந்துகொள்ள முயன்று முன்னெச்சரிக்கையும் அடைகின்றனர். சிலர் தடம்மாறியும் விடுகின்றனர். தவறு பாவம் என்பவர்கள் மற்றவர்களிடமிருந்து பிரித்து நிற்பதால் இது போன்ற தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
பருவமடைந்து பலவருடங்கள் ஆகியும் திருமணமாகாமல் உணர்வுகளுடன் அடங்கியிருக்கும் ஆண் அல்லது பெண், பருவமடைந்தபின் எதிர்பாராமல் ஆண்,பெண் உறவை தங்கள் வீட்டிலோ வேறு எங்கேயோ பார்த்த ஆண் அல்லது பெண், ஒளிவுமறைவு இல்லாமல் வரும் கதைகள் மற்றும் வண்ணப்படங்கள் பார்த்த ஆண் அல்லது பெண், வாழ்நாள் முழுவது துணை என்று மணந்தபின் ஆசை அறுபது மோகம் முப்பது என்றபடி ஒதுங்கும் ஆண் அல்லது பெண், கணவன் கைவிட்ட மனைவி அல்லது மனைவியால் கைவிடப்பட்ட கணவன், வாழ்வில் பணம் அல்லது வேரொன்று குறிக்கோள் என நினைக்கும் ஆண் அல்லது பெண், திருமணத்திற்கு பின் முற்றிலும் மாறிய ஆண் அல்லது பெண், நாற்பது வயதிற்குமேல் என்ன வேண்டியிருக்கின்றது எனும் ஆண் அல்லது பெண் ஆகிய இவர்களே இந்த சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு காரண கர்த்தாக்கள்.
ஒரு ஆணோ பெண்ணோ தன் மறுபாலினரின் விறுப்பு வெறுப்புகளை மதித்து விட்டுக்கொடுத்து அவர்களின் சின்ன ஆசைகளை நிறைவேற்றினால் ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ வக்ர உணர்வுகள் எப்போதும் ஏற்படாது. தினமும் ஒருவனுக்கு ஒருத்திக்கு அவர்கள் விரும்புவது கிடைத்தால் வேறு மாற்று எண்ணங்கள் தோன்றாது. இதுவே அடிப்படை. அப்படி வேண்டியது கிடைக்காதவர்கள்தான் திருட்டுப்பாலில் சுவைகாண விரும்புவர். அது பூனை குணம். அவர்களின் பார்வையில் ஓர் கள்ளத்தனம் குடியிருக்கும். அது நாளடைவில் வக்ரத் தன்மையுடையதாகிவிடும். பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகள் அமைதி அடைய சமுதாய திட்டமிடல் வேண்டும்.
இந்த ஆண் அல்லது பெண் நமது சமுதாய அமைப்பிற்குப் பயந்து பெறும்பாலும் அமைதியாகவே இருக்கின்றார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த உணர்வுகள் கூடிய உணர்ச்சிகள் அவர்களிடையே நீறு பூத்த நெருப்பாக தனலாக எரிந்து கொண்டுதானிருக்கின்றது சாம்பலின் அடியில் கனல் இருப்பது போன்று. அவர்கள் எல்லோரும் நல்லவர்களே நல்ல சந்தர்ப்பம் வரும்வரை. உணர்வுகள் அமைதியாய் இருக்கும்வரை. ஏதோ ஓர் சூழல் பூத்த சாம்பலில் இருக்கும் கனல் பூத்து அவர்களை தன் நிலை மறைக்க வைக்கும். அதுவே அவர்களின் உடல் செயல்களும் அதைத் தொடர்ந்த திட்டங்களும். செயலாக்கமும். இது அவர்களுக்குள் இருக்கும் யாருக்கும் தெரியாத ஒரு உணர்வு. வேகம் கொண்டு அமைதியாக இருக்கும் வியாதி எனக்கூட கூறலாம். ஓர் செயலைக் கண்டதும் அல்லது கேட்டதும் அழுத்த நோயுள்ளவர்களின் செயல்பாடு எப்படி வீறு கொண்டிருக்குமோ அது போன்ற தன்மையுடையது. பல சூழ்நிலைக் காரணங்களால் அவர்கள் செயல்படுத்தும்போது பலர் தப்பிவிடுகின்றனர். சிலர் மாட்டிக்கொள்கின்றனர்.
உணர்வுகள் என்பது சாதாரணமான விஷயமில்லை. எவ்வளவு காலமானாலும் உள்ளத்திலிருக்கும். எந்த சூழலிலும் மீண்டும் அது தோன்றும். உங்களுக்கு சிறுநீர் பையில் அடைப்பு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் சிரமங்களும் சிக்கல்களும் அதை அனுபவிக்கும்போதுதான் தெரியும். அந்தப் பை முழுவதும் நிரம்பினால் மருத்துவர் உதவியுடன் அதை சரி செய்தவுடன் ஓர் நிம்மதி ஏற்படும். மலம் கழித்தலிலும் சிறுநீர் கழித்தலிலும் வெளியேற்றத்திற்குப்பின் ஏற்படும் ஆனந்தம் அளவிடமுடியாதது. இதைப் போன்றதே உணர்ச்சிகள் நிறைந்த ஆண் / பெண் அதனை நீண்ட நாள் அடக்கி வைத்தலும் ஆரோக்கியமானது அன்று. எனவே அதற்கு இந்த சமுதாயம் ஓர் மாற்றம் காணவேண்டியது அவசியம். உணர்வுகளை அடக்கிவைத்த இருபாலருமே முகம் களையிழந்து கண்கள் ஒளியிழந்து சொற்களில் சுவராசியமில்லாமல் செயல்களில் ஓர் உந்துதல் இல்லா சலிப்பான நிலையில் இருப்பார்கள்.
இதிலிருந்து விடுபட எத்தனையோ வாய்ப்புகளும் வழிமுறைகளும் இருக்கின்றது. ஆனால் அதைஎல்லாம் நமது சமுதாயம் அங்கீகரிக்கின்றதா என்பதைப் பார்க்க வேண்டும். சிலர் மற்றவர்களுக்குத் தெரியாமல் தங்களுடன் பழகும் ஆண் அல்லது பெண் உதவியை நாடுகின்றனர். சிலர் சிலரின் பழக்கத்திற்கு உடன்பட்டு போதை வஸ்துகளை உபயோகிக்கின்றனர். சிலர் ஆன்மீக மார்க்கத்தில் ஈடுபாடு கொள்கின்றனர். எல்லாவற்றையும் மறந்து தொழிலில் கவனம் செலுத்துகின்றனர். எப்படியிருப்பினும் உணர்ச்சிகள் அமைதியடையா நிலையில் இருந்து வரும் ஆண் அல்லது பெண் ஓர் நாள் ஓர் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களின் உணர்வுகளில் கிளர்ச்சி தோன்றி கட்டுக்கடங்கா நிலையில் தவறு செய்ய தூண்டப்படுவர். அந்நிலையில் அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அவர்களின் உணர்ச்சிக்குத் தீர்வு ஒன்றோயாகும். அதுவே அவர்களின் குறிக்கோளாக இருக்கும். தீர்வுகாண முயற்சி செய்து வென்றாலும் தோற்றாலும் நாம் இப்படிச் செய்துவிட்டோமே என வருந்துவர். என்ன செய்ய! காலம் தாழ்ந்த எண்ணம்! இந்த நோயின் தாக்கத்தில் இருக்கும் அந்த சகோதர சகோதரிகளுக்கு நம்மிடையே என்னென்ன வழிமுறை கொண்டு அவர்களை அந்த தாக்கத்திலிருந்து எப்படி காக்க முடியும் என்பதை சமுதாய ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.
இப்படி உணர்ச்சிகளின் அடிப்படையில் நிகழ்வுகள் நடப்பதை, ஏன் நடக்கின்றது என விவாதிக்க வேண்டியதில்லை. ஆனால் அந்த உணர்வுகளின் தாக்கத்தை புரிந்துகொள்ள நாம் அந்த நிகழ்வுகளை ஆராய வேண்டும். அப்படியின்றி ஒரு நிகழ்வைக்கண்டு அது தவறு அவர்களை அடி, உதை, தூக்கிலிடு என்பதாலாயோ அல்லது சட்டதிட்டங்கள் போட்டதாலோ இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமலிருக்கும் என்பதற்கு யார் பொறுப்பு!. உண்மைதனை அலசி ஆராயவேண்டும். எல்லோருக்கும் பொதுவான சட்டங்கள் இந்த சமுதாயத்தில் பாதுகாப்பும் தவறு செய்பவர்களை தண்டிக்கவும் இதுபோன்று இனி நடக்கக்கூடாது என்பதற்காக மட்டுமே.
ஒர் சிறு பெண்ணுக்கு என்னவென்று அறியாத புரியாத நிலையில் நிகழ்வுகள் நடப்பது கொடுமையிலும் கொடுமை. இதுபோன்று சமுதாய கொடுமைகள் நடக்காமலிருக்க ஆரம்ப அடிப்படை உண்மைகளை தெளிந்து வளரும் சமுதாயம் ஆரோக்கியமாக வளர உரிய நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஏதோ சமூக ஆர்வலர்கள் சொல்கின்றார்கள் என்பதற்காக ஏனோதானோவென்று முடிவுகள் இருக்கக்கூடாது. இந்த வேகம் விவாத மேடைகளுடன் நின்றுவிடக்கூடாது.
பாலியல் பலாத்காரம் என்பது இருபாலருக்குமே உரியது, வெளியில் தெரியாத நிலையில் எத்தனை பேர் என்ன நிலையில் இருக்கின்றார்கள் தெரியுமா! சொல்ல முடியா நிலையில் உணர்வுகளை அடக்கிவைத்த நிலையில் பலர். எந்த இனத்தவருக்கும் யாருக்கும் யாரும் ஆமோதிக்க வேண்டியதில்லை. ஆதரவு காட்ட சார்ந்திருக்க வேண்டியதில்லை. ஆணாலும் பெண்ணாலும் அவர்களும் ஓர் ஆத்மா. இவ்வுலகின் வாழ்வியல் இன்பங்களை நுகர்ந்து அனுபவித்து ஆரோக்கியமுடன் சந்தோஷமாக வாழ உரிமையுள்ளவர்கள். இருபாலருக்கும் அந்த ஆனந்த சந்தோஷம் சரியாக குறைபாடியின்றி கிடைக்கின்றதா! என்பதை தெரிந்து சமுதாய சீர்திருத்தம் ஏற்படவேண்டும். இந்த குறைபாடுகளின் வெளிப்பாடே நடக்கும் நிகழ்வுகளுக்கு காரிய காரணம்.
சட்டங்கள் அனைவருக்கும் பொது. சட்டங்கள் நிறைவேற்றினாலும் அது பயனுள்ளதாகவும் மீண்டும் உபயோகமின்றி போகாததாகவும் மாற்றமில்லாத நிலையானதாகவும் இருக்க வேண்டும். சிந்திக்க சிந்தனையாளர்களும் அறிஞர்களும் ஆன்மீகவாதிகளும் நிறைந்த புண்ணிய பூமி இது. எல்லா சமூக அமைப்புகளும் ஆர்வலர்களும் இந்நிலையை ஆய்ந்து நம் வரும்கால சமுதாயத்திற்கு ஓர் நல்ல வழியை தெரிவு செய்து முறைப்படுத்தி வழங்கி அந்த வருங்கால சமுதாயம் நிம்மதிகொண்ட சந்தோஷமுடன் இயங்கிட உதவிடுங்கள் என அன்புடன் அழைக்கும்- குருஸ்ரீ.
ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#*#*#*#*#
ஆக்ரமிப்பு!
நல்ல காற்றோட்டத்துடன் குடியிருப்புகள் அமைய வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி மக்கள் ஆரோக்கியத்தை முன்னிட்டு அரசு சில சட்டங்கள் போட்டால் அதை ஏற்று மதித்து நடந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யா விடில் அதன் பாதிப்புகள் மக்களுக்கே. சட்டதிட்டங்களை மீறுபவர்கள் மட்டுமில்லாமல் மற்றவர்களும் அதனால் பாதிக்கப் படுகின்றனர். என்பதை மக்கள் உணர வேண்டும். யார் எப்படி போனால் என்ன நம் பிரச்சனை தீர்வு கண்டால் போதும் என்ற நிலைப்பாடானது அவர்களுக்கும் ஓர்நாள் தீங்கு விளை விக்கக்கூடும்.
சாலை ஓரங்களில் சாலையை ஒட்டி குடிசைகள் மற்றும் வீடுகள் கட்டிக் கொள்கின்றனர். அங்கு முறைப்படி விட வேண்டிய அளவிற்உ இடம் விட்டுக் கட்டுவதில்லை. சட்ட அமைப்பில் கூறிய இடத்தை விட்டால் இடம் குறுகி விடுகின்றது. மேலும் வளர்ந்த நகரங்கள், கிராமங்களில் அந்த இடத்தின் மதிப்பு அதிகமாவதால் அவ்வளவு இடத்தை விட்டுவிட மனதில் எண்ணம் தோன்றுவதில்லை. ஆனால் எதிர்பாராமல் நடைபெறும் விபத்துக்களைப் பார்க்கும்போது மதிப்பு பெருகிய இடத்தைவிட மனித உயிர்கள் மேலல்வா என்பதை புரிந்து செயலாக்கம் கொள்ள வேண்டும்.
சாலை ஓரத்தில் இருக்கும் வீட்டிற்குள் பேருந்தோ அல்லது கனரக வாகனங்களோ எதிர்பாரத நிலையில் கட்டுப்பாட்டை இழந்து புகுந்தால் வீட்டில் இருப்பவர்களின் நிலை என்ன என்பதை சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதை உணர்ந்து அரசும் இடத்தின் சொந்தக்காரரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூடுமான வரையில் சாலை அருகே நெருங்கிய வண்ணம் குடியிருப்புகள் அமையக்கூடாது என்ற நிலையை அரசு மேற்கொள்ள வேண்டும். அந்த இடத்தை தவிர வேறு இடம் இல்லாதவர்களுக்கு அதற்குப் பதிலியாக மாற்று இடம் தர அரசு முன்வரவேண்டும். இதை அந்த இடத்து சொந்தக்காரரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முக்கிய சாலைகளில் தாங்கள் வளம்பெற வேண்டுமென்று சிலர் வியாபார அமைப்பில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த இடம் வியாபார ஸ்தலமாக மாறும் போது அங்கு வருபவர்களின் வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் அவர்கள் சாலையை பயன் படுத்துவதால் சாலையின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றது. அவ்வாறு வணிக வளாகங்கள் கட்டும்போது வாகனங்கள் நிறுத்த குறைந்த அளவிற்காகவது இடம் ஒதுக்க வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்படுத்தப் படவேண்டும். வாகனங்கள் நிற்க இடம் இல்லா வணிக வளாகங்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும். அல்லது அவர்களது மின் இனைப்பு மற்றும் குடிநீர் இனைப்புகள் மறுக்கப் படவேண்டும்.
வீடாக இருந்த பகுதியை மாற்றி அமைத்து வணிக இடமாக மாற்றுகின்றனர். வீட்டிற்குமுன் காலியாக இருக்க வேண்டிய அளவு இடம் இல்லாமல் கட்டிவிடுகின்றனர். சிலகாலம் கழித்து இப்படி மாற்றுவதால் மேலும் சிக்கல் உருவாகி தாங்கள் இடம் விடாமல் விட்டதோடு அல்லாமல் பொது இடமான சாக்கடைகள் நடைபாதைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். அங்கு வரும் வாகனங்கள் எங்கு நிறுத்தப்படும்!. வேறு வழியின்றி சாலைகளில்தான் நிறுத்தப்படுகின்றன. இந்த முறைதனை மாற்ற வேண்டும். போக்குவரத்திற்கு எத்தனை தடைகள். மேலும் விபத்துக்கள் ஏற்படவும் வாய்பு இங்கு உறுவாகின்றதால் கடுமையான முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். இவர்கள் போட்டு இருக்கின்ற மேற்கூரை தகரங்கள் இவற்றிற்குள் புகுந்துதான் அவ்வழி செல்லும் மக்கள் செல்ல வேண்டியிருக்கின்றது.
பலர் கடைகளுக்கு முன்னால் ஓர் தார்பாய் அல்லது ஒரு ஓலைக்கீற்று கொட்டகை ஆகியவற்றை சாலைகளில் போட்டே தங்கள் கடைகளைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். கடை கட்ட வேண்டுமென்றால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களது இடத்திலேதான் போட வேண்டும் அப்படி போடும் அளவிற்கு இடம் நிலத்திற்கு உள்ளேயே விட்டுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாய நிலை வேண்டும். பொது இடங்கள் ஒரு சிலர் முன்னேறுவதற்காக ஆக்கிரமிப்பு செய்வதற்கல்ல. பொதுவான இடங்கள் அனைவருக்கும் பயன் படவேண்டும் என்ற நிலை ஏற்பட வேண்டும். பொதுவாக இது போன்ற இடங்களுக்கு அரசு நிர்வாகத்தில் அனுமதி பெற்றே வணிகத்திற்கான இடங்களை அமைத்திட வேண்டும்.
அனுமதிபெற்ற கட்டுனர்களையே இனிவரும் காலங்களில் புதிய கட்டிடம் கட்ட அணுமதிக்கப்பட வேண்டும். மின் இனைப்பு பெறுவதற்கு ஓர் அனுமதி பெற்றவரின் கையொப்பம் மற்றும் கட்டிட வரைபடம் அனுமதி பெற்றவரின் ஒப்பத்திற்குப் பிறகே நிர்வாகத்தால் அனுமதிக்கப் படுவதுபோல் கட்டிடம் கட்டுவதற்கும் அனுமதி பெற்றவரால்தான் கட்டப்பட வேண்டும் என்ற நிலையில் விதிமுறைகளை மீறி தவறான அமைப்பில் கட்டிடம் கட்டப்பட்டால் அதற்கு அவர் பொறுப்பாவார். கட்டிடம் கட்டி முடித்தபின் அரசு நிர்வாகத்திலிருந்து ஒரு குழு மேற்பார்வை செய்து சரியாக விதிமுறைக்குட்பட்டு கட்டப்பட்டுள்ளது என்ற சான்றிதழ் அளித்த பின்னரே மின் இனைப்பு மற்றும் குடிநீர் இனைப்புகள் வழங்கப் படவேண்டும். சான்றிதழ் அளிக்கும் குழு தன் பணியைச் சரிவரச் செய்யாமலிருந்தால் அவர்களும் தண்டிக்கப்படலாம். விதி முறைப்படி கட்டப்படாத கட்டிடத்தை கட்டிய அனுமதி பெற்ற என்ஞினியரின் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம். அவர்மேல் விசாரனை நடவடிக்கை எடுத்து பின்னர் நிரந்தரமாக ரத்து செய்யலாம்.
எந்த ஒரு கட்டிடமாயிருந்தாலும் அந்த கட்டிடத்திற்கு மின் இனைப்பு சரியாகச் செய்யப்பட்டுள்ளது என்றும், கழிவு நீர் குழாய்கள் சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கின்றது என்றும் கட்டிடம் விதிமுறைப்படி கட்டப்பட்டுள்ளது என்றும் யாரால் கட்டப்பட்டுள்ளது என்றும் வணிக வளாகத்தின் பார்வையில் படும் பகுதியில் அல்லது மேற்பாற்வையாளர் வரும்போது பார்க்கும் வகையில் புகைப்படத்துடன் கையொப்பமிட்டு பொருத்தப்பட வேண்டும்.
இதுவரை கட்டப்பட்டுள்ள இடங்களை கால அவகாசம் கொடுத்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களே அகற்றாவிட்டால் நிர்வாகம் அகற்றவேண்டும் அதற்குரிய கட்டணத்தை கண்டிப்பாய் தண்டனைக் கட்டணத்துடன் வசூலிக்க வேண்டும்.
சிலர் தங்களின் வீட்டிற்கு முன்னால் பாதுகாப்பிற்காக பொது இடத்தை கோவில் என்ற அமைப்பை ஏற்படுத்தி நாளடைவில் மக்கள் அதைப் பயன்படுத்துவதால் ஓர் ஆக்கிரமிப்பு இடமாகின்றது. இதே போன்று சிலர் கல்லறைகளையும் சமாதிகளையும் கட்டிவிடுகின்றனர். ஏனென்றால் கோவில்கள் மற்றும் இது போன்ற சமாதிகள் அகற்றும் நிலை வந்தால் அந்த இனத்தாரை சேர்த்துக் கொண்டு போராட்டங்கள் ஏற்படுத்தும் சூழல் உருவாக்குகின்றனர். அவர்களுக்கு ஒன்று சொல்வேன். நீங்கள் உண்மையான பக்தராக இருந்தால் கோவிலுக்கு என்று ஓர் இடம் வாங்கி அல்லது உங்கள் சொந்த இடத்தில் கோவிலை கட்டி நீங்களும் மற்றவர்களும் வழிபட செய்யுங்களேன்! ஏன் இந்த ஆக்கிரமிப்பு புத்தி! இது முற்றிலும் சுயநலம்! இதைப் புரியாமல் மற்றவர்களும் இவர்களுடன் சேர்ந்து போராடுவது மிகுந்த வேதனை அளிக்கின்றது.
சாலைகள் ஆக்கிரமிப்பு என்றில்லாமல் கோவில் இடங்களையும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து சுயலாபம் அடைந்து வருகின்றனர் பலர். அருகில் இருக்குமிடம் பலமடங்கு வாடகை வரும் அளவிற்கு உயர்ந்தபோதும் கோவில் இடங்களில் இருப்போர் ஓரளவாவது வாடகையை உயர்த்தி தராமல் சாக்கு போக்கு சொல்லி இருந்து வருகின்றனர். மேலும் வாடகைக்கு எடுத்தவர்கள் சிலர் உள் வாடகைக்கு விட்டு விட்டு அவர்கள் லாபம் சம்பாதிக்கின்றார்கள். இவைகளை கண்டறிந்து யார் பேருக்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கின்றதோ அவர்களே அங்கு இருக்க வேண்டும். மற்றவர்கள் இருந்தால் அவர்களை அகற்றி விட்டு வேறு உரிய நபரை அங்கு இருக்க வைக்க வேண்டும். கோவில் நிலங்களை குத்தைகை எடுத்தவர்கள் பொய்க்காரணங்கள் சொல்லி குத்தகையை சரியாக செலுத்துவதில்லை. மொத்த இடத்தில் எவ்வளவு சொந்தமாக்கிக்கொள்ள முடியுமோ அவ்வளவு செய்து விட்டிருக்கின்றனர். பழைய ஆவனங்களை எடுத்து இவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்படி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அவர்களாகவே திருப்பிக் கொடுத்துவிட்டால் சரி! இல்லை என்றால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை ஓரங்கள், கோவில் நிலங்கள் என்றில்லாமல் நீர் வழிகளையும் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்போது சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், முக்கிய பிரமுகர்களும் இந்த விஷயங்களில் தலையீடு செய்தல் கூடாது. பொது நன்மை கருதி தங்களை நாடி வரும் அன்பர்களுக்கு உபதேசம் செய்து அதுவே தாங்கள் வகிக்கும் பொறுப்பிற்கு உகந்த தகுதி என்பதை நிலை நிறுத்த வேண்டும
தங்களின் இனம், மதம் வளர வேண்டி அரசிடம் வேண்டிப் பெற்ற தொன்னூற்று ஒன்பது வருடத்திற்கான குத்தகை நிலத்தின் மூலமாக பயன் அடைந்து வளர்ந்தபின் அதை தங்கள் சொந்த சொத்தாக சில அமைப்புகள் கருதுகின்றன. இவ்வளவு காலம் ஆண்டு அனுபவித்த காராணத்தால் அவர்கள் உரிமையைக் கேட்கலாம். அதற்காக பொது மக்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய ரோடுகள் அமைக்கும் பணிக்கு கூட இடம் தர மறுப்பது எந்த விதத்திலும் சரியில்லை. அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அந்த இடங்களை கைப்பற்றி பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சாலை வசதிகளை மேம்படுத்தி அமைக்க வேண்டும், குத்தகைக் காலம் முடிவடையாமலிருந்தாலும் பொது உபயோகத்திற்கு வேண்டிய இடத்தை திரும்ப பெறுவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது. வளார்ந்து வரும் நாட்டில் அனைத்து மக்களும் பயன் தரக்கூடிய திட்டங்களுக்கு எல்லா அமைப்புகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
வசதி பெற்ற சிலர் அரசு நடவடிக்கை எடுக்கும்போது ஒரு ரிட் போட்டு விட்டால் பல வருடங்களுக்கு இழுத்துக் கொண்டிருக்கும் நமக்கு கவலையில்லை என்று சட்டத்தில் இருக்கும் சந்து பொந்துகளை தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு சில ஆயிரத்தில் அரசின் நடவடிக்கையை தடுத்து விடுகின்றனர். இது போன்ற ஆக்கிரமிப்புகளுக்கு நீதி நிர்வாகம் எந்த வித ஒத்துழைப்பும் தரக்கூடாது என்பதே சிறப்பு. மேலும் இதுபோன்ற பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நல்லவர்களுக்கு நீதித்துறையைச் சார்ந்த வழக்கறிஞர்கள் ஆதரவு அளித்து அதை நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்ல ஆதரவு அளிக்கக்கூடாது. வழக்கறிகளுக்குத் தெரியும் இது போலி வழக்கு என்று. அப்படிப்பட்ட போலி வழக்குகளை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் தர்மத்தையும் நீதியையும் காக்க செயல் படவேண்டும். இதனால் நீதி மன்றங்களின் பொன்னான நேரம் மிச்சமாகும்.
சுதந்திரம் பெற்ற பின் கடந்த எழுபது ஆண்டிற்குள் வசதி படைத்தோர் மற்றும் அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புகள் அளவில்லாதவை அவற்றை சரி செய்தால் போதும். நீதி நியாயங்கள் காக்கப் படுவதோடு மக்களுக்கு ஆரோக்கியமும் பெருகி விபத்துகள் இல்லா நிலைக்கு நாடு செல்ல வசதியாக வழிவகுக்கும்.
ஆக்கிரமிப்பு செய்துவிட்டு அதைபற்றி கேட்டால் அங்கே பருங்கள். இங்கே பாருங்கள். அவர் இப்படிச் செய்துள்ளார் என்று மற்றொரு நிகழ்வைக் காட்டிக் கொடுத்து அதன் நிழலில் தான் தப்ப நினைப்பது அயோக்கியத் தனம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். யார் செய்தாலும் எப்படிச் செய்திருந்தாலும் தப்பு தப்புதான். பலர் தவறு செய்வதால் அது சரியாகி விடாது. நீங்கள் செய்யும் ஆக்கிரமிப்பு செயல்களால் பொதுவாக என்ன துயரங்கள் ஏற்படுகின்றன் என நினைத்து அந்த பாவங்களைச் செய்யாமலிக்க நினையுங்கள்.
ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஓர் உண்மையை இங்கு சொல்ல விரும்புகின்றேன். நீங்கள் சுயமாக நியாமாக தர்மமான முறையில் சம்பாதித்திருந்தாலும் அதிலிருந்து ஒரு குன்றின் மணி அளவுகூட நீங்கள் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது எடுத்துச் செல்லமுடியாது என்ற நிலையை உணருங்கள். அப்படியிருக்க வீண் ஆசையினால் ஆக்கிரமிப்பு செய்து மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வதால் என்ன பலன் தெரியுமா! நீங்கள் உங்கள் கர்ம பலன்களில் பாவங்களை சேர்த்துக் கொள்வதுதான் மிச்சம். அந்த பாவங்களை நீங்களோ அல்லது உங்கள் சந்ததியினரோ தான் அனுபவிக்க வேண்டியிருக்கும். அது தான் வினை. இதற்காகவா இப்படி ஆக்கிரமிப்புச் செய்கின்றீர்கள். சற்று யோசித்துப் பாருங்கள்! ஆக்கிரமிப்பு ஒர் பெரும் தொற்று நோய்! மனம் தெளிவடைவீர். நல்லது நடக்கட்டும். நாடு வளம் பெறட்டும்! அன்புடன் குருஸ்ரீ பகோரா.
#####
ஓம்நமசிவய!
மூவாச் சாவா முத்தா ஆவா எங்களுக்கு
அருள்வாய் தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய்
அமிழ்தாய் எம் அகத்தானாய் மழவிளங்களிறே மணியே
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!
#*#*#*#*#
அகோரிகள்!
அகோரிகள் என்றாலே நம்மில் பலருக்கு பலவகையான கருத்து உண்டு. புத்தகங்கள் ,ஊடகங்கள் ,இணையம் ,செவிவழி செய்தி என பலவாறாக அவர்களை பற்றி அறிந்திருப்போம். சில நேரங்களில் அவர்களை பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளும் வருவதுண்டு. உண்மையில் அகோரிகள் என்பவர்கள் யார்! ?
உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட முடியுடன். முகத்திலும மார்ப்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள். தலை பகுதிகள் தவிர பிற இடங்களில் இவர்களுக்கு முடிகள் இருக்காது. இவர்கள் உலகை வெறுத்து தனியாக வாழ்பவர்கள் கிடையாது. சிறு சிறு குழுக்களாகவும் தலைமை யோகியின் பின்னால் இவர்கள் இருப்பார்கள். தங்களை விளம்பரப் படுத்திகொள்ளவோ, தங்களுக்கு இருக்கும் அமானுஷ ஆற்றலை வெளிக்காண்பிக்கவோ மாட்டார்கள் .உடல் முழுவதும் சாம்பல் அல்லது மண்கொண்டு பூசியிருப்பார்கள். மத பொருட்கள் எதையும் கைகளில் வைத்திருக்க மாட்டார்கள். அகோரிகள் குழுக்களாக இருக்கும் சூழலில் யார் தலைமை யோகி அல்லது குரு என கண்டறிவது சிரமம். அனைவரும் ஒரே போல இருப்பார்கள். ஆண் மற்றும் பெண் அகோரிகள் இருவரும் இருப்பர்கள். நிர்வாணமாக இருந்தாலும் பெண்யோகிகளை கண்டறிவது கடினம். இவர்களின் தலைமுடி வயதானாலும் வெள்ளை ஆகாது. உடல் பயில்வானை போல இல்லாமல், சீரான நிலையில் இருக்கும். ரிஷிகேசம் அல்லது இமாலய மலையின் வனங்களில் இருப்பார்கள்.
பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளாவிற்கு வந்து கூடுவார்கள். இமாலயவனத்திலிருந்து நடந்தே அலாகாபாத் எனும் இடத்திற்கு வருவார்கள், மீண்டும் நடந்தே சென்றுவிடுவார்கள். வாகனத்தை பயன்படுத்த மாட்டார்கள். வாகனத்தில் சென்றால் குறைந்த பட்சம் பன்னிரெண்டு மணி நேர பயணம். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது கட்டுகோப்பாக வரிசையில் செல்வார்கள். வரிசையின் முன்னாலும் ,பின்னாலும் இருக்கும் அகோரிகள் பாதுகாப்பு அரணாக இருப்பார்கள். நீண்ட முடியும், மண் அல்லது சுடுகாட்டு சாம்பலை பூசி இருந்தாலும் அவர்கள் மேல் எந்த விதமான வாசனையும் இருக்காது. நறுமணமும் இருக்காது, நாற்றமும் இருக்கது. முக்கியமாக இவர்கள் பிறருடன் பேசுவது குறைவு. தங்களுக்குள் பேசிக்கொள்ளவே மாட்டார்கள். குழுவாக வட்டவடிவில் உற்கார்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள். இம்மூலிகை கஞ்சா என பிறர் எண்ணுகிறார்கள். கும்பளாவில் கஞ்சா எல்லாஇடத்திலும் கிடைக்கும், சிலர் இலவசமாக பிறருக்கு வழங்குவார்கள். ஆனால் இவர்களிடம் யாரும் கொடுக்க மாட்டார்கள், இவர்களும் வாங்க மாட்டார்கள். தாங்கள் இருக்கும் வனத்திலிருந்து சில மூலிகைகளை கொண்டு வருவார்கள். வட்டமாக உட்கார்ந்திருக்கும் இவர்கள் வட்டத்தின் மையத்தில் அந்த மூலிகையை வைத்து ப்ரார்த்தனை செய்த பின் புகைப்பார்கள். மூலிகை குழாயில் வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள். பிறகு அடுத்தவருக்கு கொடுப்பார்கள். இப்படியாக வட்டம் முழுவதும் புகைகுழாய் வட்டமடிக்கும்.
ரிஷிகேசத்திலும், கும்ப மேளாவிலும் எத்தனை டிகிரி செண்டிகிரேட் குளிராக இருந்தாலும் நிர்வாணமாக உட்கார்ந்து தியானம் செய்வார்கள். இப்படி பட்ட யோகிகளை புரிந்து கொள்வது கடினம். இமாலய மலை பகுதிகளில் (யமுனோத்தரி, கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின் முக்கிய இடமாக இருக்கிறது. கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வலம் வருவதில்லை. குழுவிலிருந்து தனியே சில பணிகளுக்காக செல்லும் அகோரிகள் தங்கும் இடம் மயானம். எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஹோட்டலை தேடுவது போல இவர்கள் மயானத்தில் இருப்பதை விரும்புவார்கள்.
அகோரிகளுக்கு தங்கள் உடலின் சக்தி நிலை மிகவும் முக்கியமானது. இங்கே உடல் சக்தி என குறிப்பிடுவது பூஸ்ட், காம்ளாண் குடித்து வருவதில்லை. யோக சக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும் இழக்க அவர்கள் தயாரக இருக்க மாட்டார்கள். இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது எனபது இவர்களுக்கு அத்துப்படி. மயானம், ஆறு மற்றும் வனங்களில் தங்கள் உடல்சக்தியை மேம்படுத்துவார்கள். தங்கள் யோக சக்தியை பிறருக்கு அநாவசியமாக காட்ட மாட்டார்கள். சமூகத்தில் தர்மம் தடுமாறும் பொழுது சூட்சமமாக செயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள்.
கும்பமேளா என்பது ஒரு சிறப்பு மிக்க நிகழ்வு. பூமியில் வேறு எந்த பகுதியிலும் நிகழாத வண்ணம் அதிக மக்கள் கூடும் ஒரே விழா கும்பமேளா. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவில் ஒரு கோடிக்கும் மேலாக மக்கள் கலந்து கொண்டார்களாம். அழைப்பிதழ் இல்லை, அமைப்பாளர்கள் இல்லை, தொண்டர்படை ஒருங்கினைப்பில்லை அப்படி இருக்க, இந்த விழா எப்படி சிறப்பாக நடைபெறுகிறது!! ஏதோ ஒரு சூட்சும சக்தி அனைவரையும் வரவழைக்கிறது. பல லட்சம் மக்கள் இணையும் இடத்தில் உணவுக்கோ, தண்ணீருக்கோ பஞ்சம் இல்லை. உயிர்சேதம் இல்லை. யாரோ ஒருவர் பெரிய லாரியில் கம்பளிகளை கொண்டுவந்து அனைவருக்கும் இலவசமாக தானம் செய்கிறார். மற்றொருவரோ அனைவருக்கும் உணவுப் பொட்டலங்களை வினியோகம் செய்கிறார். இவர்களை தூண்டியது எந்த சக்தி! தங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் இவர்கள் செய்யும் தியாகமும், வைராக்கியமும் அலாதியானது. தங்கள் குழுக்களில் பிறரை சுலபமாக சேர்க்க மாட்டார்கள். அகோரிகளின் ராணுவ அமைப்பின் தலைவர் பதவியை ஏற்கும் முறை விசித்திரமானது. புதிய தலைவரை வணங்கிவிட்டு, பழைய தலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்¬…!
காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டர்களின் சரணாலயம். ஊருக்கு ஒரு மயானம் இருப்பது போல உலகிற்கே ஒரு மயானம் என்றால் அது காசி என சொல்லலாம். தினமும் சராசரியாக எழுநூறு முதல் ஆயிரம் பிணங்கள் எரிக்கப்படுகிறது. சன்யாசிகள், யோகிகள், தாந்திரீகர்கள், மாந்திரீகம் செய்பவர்கள் என அங்கே கூட்டம் அதிகம். காக்கி சட்டையில் வரும் ஒருவர் வாட்சுமேனா அல்லது போலீஸா என தெரியாமல் முழிப்பவர்கள் போல, மக்கள் அகோரிகளுக்கும் மாந்திரீகர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அனைவரையும் ஒரே தலைப்பில் அடைத்துவிடுவார்கள்.
மேலைநாட்டுகாரர்களுக்கு இந்தியாவில் நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாகசன்யாசிகள், அகோரிகள் எனக் கூறிவது வருந் ததக்கது. அகோரிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள். உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள். உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம், சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணியமாட்டார்கள். தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும், மார்ப்பிலும் முடி இருக்காது. கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள். உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல. (நிர்வாணத்திற்கான காரணம் ஆசை, பாசம், பொருள் ஆடை என்று எல்லாவற்றையும் கடந்து பிறவிச்சுழற்சியிலிரு¬யந்து விடுதலை அடைந்து முற்றும் துறந்த நிலை என்று கூறலாம்.) சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில் / இடங்களில் பூச மாட்டார்கள்—குருஸ்ரீ பகோரா
#*#*#*#*#
ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து
அகர உகர மகரங்கள் தம்மால் பகருமொரு
முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி
தரித்துக் கொண்டு புகாரில்பொருள் நான்கினையும்
இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக்
கருணை புரிந்தல்லார்க்கு நிகரில்
மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
#*#*#*#*#
வேதம்!
வேதத்தை வெளிப்படையாக பலருக்கும் சொல்லப்படுவதில்லை. அது ஒரு சாராருக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக மறைக்கின்றார்கள். அதனால் அதில் வெளிப்படை இல்லை எனச் சொன்னாலும் வேதத்தில் முன் பின் பகுதி போக நடுப்பகுதி விஷயங்கள் ரகசியம் என்றே சொல்லப்படுகின்றன. அப்படி ரகசியம் என்பதை எப்படி எல்லோருக்கும் சொல்ல முடியும்.
வேதம் முழுவதையும் தமிழில் மறை என்பதுண்டு. அது மிகப் பொருத்தமாக இருக்கும் பெயர். தாவரங்களின் வேர் தெரியாமல் மண்ணுக்குள்தான் இருக்க வேண்டும்.. வேர்போன்ற வேதத்தை தனியாக அமர்ந்து ரகசியமாய்தான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.. ஏன் பகிங்ரங்கமாகச் சொன்னால் என்ன!
தாவரங்களின் பூவைப் பார்க்கலாம்,. காயைப் பார்கலாம், கனியைப் பார்க்கலாம், இலைகளைப் பார்க்கலாம். ஆனால் வேரைப் பார்க்க முடியாது. அப்படி அவ்வேரைப் பார்க்க எண்ணினால் அந்த தாவரமேதன் வழுவை இழந்து விழுந்துவிடும் நிலைக்கு வந்துவிடும். அதனால் வேர் மண்ணுக்குள் மூடித்தான் இருக்க வேண்டும் என்பது நியதி.
வேதத்தை யாரும் மறைத்து வைக்க வில்லை. சொல்லப் போனால் அந்த மந்திரங்களை எழுத சரியான மொழி எழுத்து கிட்டவில்லை. அதனால் அந்த மந்திரங்கள் சப்த உச்சரிப்பினால் தொனியால் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் பாடமாகும். இரகசியத்தைச் சொன்னாலும் யாரும் எழுதிக் காட்டமாட்டார்கள் என்பதே உண்மை. வேதம் என்கிற மறை மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றதாகச் சொல்லப்பட்டாலும் அவை சப்த ஒலி வடிவில் எங்கும் நிறைந்துதான் இருக்கின்றது..
வேதம் என்றால் அது அறியப்படவேண்டிய ஒன்று. அறிவது என்றால் எதை! எவற்றை! என்ற சந்தேகத்திற்கு எதையெல்லாம் அறிந்து கொண்டால் பரிபூரண ஞானம் அதாவது முற்றறிவு பெற முடியுமோ அவற்றையெல்லாம் அறியத் துணையாக நிற்கும் ஒரு தொகுப்பாகும். ஆனால் வேதம் ஒன்றுதான். அதை வியாசர் என்ற மகரிஷி நான்காகப் பகுத்துள்ளார். அவரை வேத வியாசர் என்பர்.
ஒரு வேதத்தை வியாசர் ஏன் நான்காகப் பிரிக்க வேண்டும். கலியுகத்தில் வேதத்தை அறிய வேண்டும் என்றால் அவர்களின் ஆயுட்காலம் மற்ற யுகங்களை விட குறைவு என்பதாலும், கலியில் வேதங்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவு என்பதாலும் கலியுக மக்கள் வேதங்களால் நன்மை பெற வேண்டும் என்பதாலும் ஒன்றாக இருந்த வேதத்தை பிரித்து நான்காக்கி தந்துள்ளார்.
வியாசரால் நான்காக்கப்பட்ட வேதங்கள். ருக்வேதம், யஜூர்வேதம்,. ஸாமவேதம், அதர்வவேதம் எனப்படும். வேதம் ஒரு மரம் என்று கொண்டால் நான்கு பிரிவுகளும் நான்கு கிளைகள். பெரிய கிளைகளிலிருந்து சிறிய கிளைகள் தோன்றுவதுபோல் நான்கு பிரிவுகளிலிருந்தும் பல கிளைகள் உண்டு அவைகள் சாகைகள் எனப்படும். வேதத்தின் உட்பிரிவுகளே மந்திரங்களாகும்.
ஒவ்வொரு வேதத்திலும் ஸம்ஹிதை, பிராமணங்கள், உபநிடதங்கள் என்ற மூன்று பிரிவுகள் உள்ளது. முடிந்தளவிற்கு சுருங்கச் சொல்லியுள்ளது ஒரு மேலோட்டமாக வேதங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக- குருஸ்ரீ பகோரா.
ஸம்ஹிதை
ஸம்ஹிதை என்றால் தொகுதிகள் எனப் பொருள். ஸூக்தங்கள் எனும் மந்திரங்களைக் கொண்ட இவை வேள்விகள் மற்றும் வைதீக கர்மாக்கள் ஆகியவற்றிற்கும். மனித நலத்திற்காகவும் உபயோகிக்கப்படுபவை.
ருக்வேத ஸம்ஹிதை- ருக்வேதத்தில் உள்ள மந்த்ர ஸமூஹம் 1017 ஸூக்தங்களுடன் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை அக்னியில் ஆஹூத் செய்யும்போது ”ஹோதா” க்குரிய மந்திரங்களைக் கொண்டது.
யஜூர்வேத ஸம்ஹிதை- நாற்பது அத்தியாயங்களுடன் 1886 சுலோகங்களைக் கொண்டுள்ளது. இதில் தேவதாவாஹனம், தேவதா ஸ்துதி, வேதிகை செங்கல் தூபஸ்தம்பம் ஆகிய விபரங்கள் உள்ளன. இது வேள்வியை நடத்துகின்ற அத்வாயுக்கான தர்மங்களைக் உள்ளடக்கியவை. யஜுர் வேதம் கிருஷ்ண யஜுர்வேதம், சுக்ல யஜூர்வேதம் என இருவகைப்படும். கிருஷ்ண யஜுர்வேதத்தில் தைத்திரீய ஸம்ஹிதையும், சுக்ல யஜூர்வேதத்தில் வாஜஸனேய ஸம்ஹிதையும் உள்ளன.
ஸாமவேத ஸம்ஹிதை- 32 காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இதில் 460 ருக்குகள்-மந்திரங்கள் உள்ளன. 75 ருக்வேத மந்திரங்களும் அடங்கியுள்ளது. கானம்-இசை பற்றியது. ஸாம வேதம் அறிந்த ஒருவரைத்தான் பண்டிதர் என்று சொல்வது வழக்கம். ஸோம யாகத்தில் ஆஹூகு செய்யும் போது ஸாம வேத கானம் பாடப்படும். இறைவனுக்கு மிகவும் பிடித்த கானம்.
அதர்வ வேதம்- இது 20 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு 731 ருக்குகள்-மந்திரங்கள் கொண்டது. அன்றாட வாழ்வியல் விவசயிகள், வியாபாரிகள் ஆகியோரின் நடைமுறைகளை விளக்குவது. யாகங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பு பிரம்மாவுடையது. அத்வர்யு, உத்காத, ஹோதா இவர்களால் ஏற்படும் தவறுகளை நிவர்த்திக்கும் பொறுப்பு பிரம்மாவுடையது.
பிராமணங்கள்!
யக்ஞ விதிகள், நிந்தை, ஸ்துதி, கதைகள், கதை வசனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை.
ருக்வேத பிராமணங்கள்! முப்பது அத்தியாயங்கள் கொண்ட இது இரண்டு பிரிவுகள் கொண்டது. ஐதரேயம், சங்காயாணம் அல்லது கௌஷிதக ப்ராமணங்கள். ஐதரேய பிராமணத்தில் ஐதரேய உபநிஷத்தும், கௌஷிக பிராமணத்தில் கௌஷிக உபநிஷத்தும் உள்ளது.
யஜூர்வேத பிராமணங்கள்! கிருஷ்ண யஜுர் வேதத்தில் வசன நடையும், ஸம்ஹிதையும் கலந்து கூறப்பட்டுள்ளன. இதில் தைத்தரீய உபநிஷத், கடோபநிஷத், ஸ்வேதாசுவதரம் ஆகிய உபநிடதங்கள் உள்ளன.
சுக்ல யஜுர் வேதத்தில் 100 அத்தியாயங்கள் கொண்ட சதபத பிராமணம் உள்ளது. இதில் பிரஹதாரண்யக உபநிஷத், ஈசோப நிஷத் ஆகியன உள்ளது.
ஸாமவேத பிராமணங்கள்! தலவகாரம், பஞ்சவிம்ச பிராமணம், சாந்தோக்ய பிராமணம் ஆகியவை உள்ளன. இதில் கோனாப நிஷத் உபநிஷத்துக்கள் உள்ளது.
அதர்வவேத பிராமணங்கள்! கோபாத பிராமணம் உள்ளது. இதில் முண்டக, பரச்ன, மாண்டுக்ய ஆகிய உபநிஷத்துக்கள் உள்ளன.
வேதாங்கங்கள்- சிஷா, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், சோதிடம், என்ற ஆறும் வேதத்தின் அங்கங்கள் எனப்படும்.
சிஷா- இது அத்யயனம் பண்ணும் முறையை தெரிவிப்பது. ஸ்வர ஞானம், உத்ஸாரணம், மாத்திரை பற்றிச் சொல்வது. வேத வாக்கியங்கள் மாறுதல் அடையா வண்ணம், பதம், க்ரமம் ஆகியவகைகளில் ஒழுங்கு படுத்தப் பட்டிருக்கின்றது.
பதபாடம் என்பது ஒவ்வொரு வார்த்தையையும் தனித்து அதன் ரூபத்துடன் உச்சரித்தல் ஆகும்.
கிரமபாடம் என்பது இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து உச்சரித்தல் ஆகும்.
கல்பம்: கல்பம் என்பது க்ரியை முறையாகும். மூன்று அக்னி சம்பந்தமான கிரியைகளைச் சொல்கின்ற சிரௌத சூத்திரங்கள் இதைச் சேர்ந்தவை. யாக சாலை நிர்மாணிக்க வேண்டிய க்ஷேத்ர கணித அளாவு, குறைகளைக் கூறும் கல்ப சூத்திரங்களைக் கொண்டது. இதற்கு ஜியோமிதி அல்லது க்ஷேத்ர கணித பிரக்ஞை வேண்டும்.
வியாகரணம்- வியாகரணம் என்பது ஒரு இலக்கண நூல். பாணினி என்பவரால் எழுதப்பட்ட பாணினி சூத்திரம் இதிலடங்கியது.
நிருக்தம்- சொல்லின் உற்பத்தி முதலியவைகளின் இலக்கணம். யாஸ்கர் என்பவர் இதற்கு பாஷ்யம் செய்திருக்கின்றார்.
சந்தஸ்-இது வேத சம்பந்தப்பட்ட முக்கியமான சாஸ்திரம். இதை யாப்பிலக்கணம் என்பர்.
ஜோதிஷம்-இதில் ககோள சாஸ்திரம் மற்றும் பல சாஸ்திரங்களைக் கொண்டது. கிரஹம் பற்றியவைகளின் சஞ்சாரம் கொடுக்கும் பலன்கள் மனிதர்களுக்குச் சொல்கிறது.
#####
ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#*#*#*#*#
சாலைகள்!
சாலை பொதுவாக ஒர் இடத்தையும் மற்றொரு இடத்தையும் இணைக்க ஏற்படுத்தப்பட்டது. ஒற்றையடிப்பாதை, இருசக்ர வாகனங்கள் செல்லும் பாதையாகமாறி பின்னர் மாட்டு வாண்டிகள் கார் பயணிக்க மாற்றம் கொண்டு தற்போது பயணிகள் பேருந்து, சரக்கு வாகனங்கள் பெரிய எந்திரங்கள் ஆகியவற்றிற்காக பயன் படுத்தப்படுகின்றது.
நிறைய போக்குவரத்து உள்ள வழித்தடங்கள், பெரிய ஊர்களை இனைக்கும் சாலைகள் ஆகியன நெரிசல் காராணமாக இரு வழிப் பாதயாக மாறி தற்போது நான்கு வழிச்சாலை மற்றும் எட்டு வழிச்சாலையாக மாற்றம் கண்டு வருகின்றன. இவையெல்லாம் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு தங்கு தடையின்றி விரைந்து செல்லவும் மக்கள் நலன் கருதி ஏற்படுத்தப் பட்டுள்ளன.
அதனால் இந்த பெருவழிச் சாலைகளின் சட்ட திட்டங்களை மக்கள் அவசியம் புரிந்து கொண்டு செயல்படவேண்டும். மீறீனால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் ஏற்படலாம். விபத்துக்கள் தவிர்க்கப் படுவதற்காக ஆங்காங்கே குறியீடுகளும், சாலையை கடக்க வழிமுறைகளையும் எற்படுத்தியுள்ளனர். இதை மீறி செயலாக்கம் கொண்டு விபத்துகளை சந்திக்க நேர்ந்தால் அதற்கு யாரும் பொறுப்பில்லை. வாகனங்களுக்கோ உயிருக்கோ பாதுகாப்பு பாலிசிகள் எடுத்திருந்தாலும் அது உதவாது. எனெனில் நீங்கள் சட்டத்தை மீறி தானாகே விபத்தைத் தேடி ஏற்படுத்திக் கொண்டீர்கள் என்பதால் எந்த பணமும் கிடைக்காது. ஆனால் மருத்துவ உதவி மட்டும் கிடைக்கும்.
சாலைகள் சீராக இருந்தால்தான் பயணம் நன்றாக இருக்கும் உடல் உபாதைகள் குறையும். சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தால் பயணம் செய்யும் மக்களுக்கு உடல் உபாதைகள் அதிகம். ஓர் இடத்தில் சாலை செப்பனிட்டு புதியதாக அமைத்தால் அடுத்த வாரத்திலேயே மின் அல்லது குடிநீர் அல்லது தொலைபேசி இவர்களில் ஏதாவது ஒரு நிர்வாகம் சார்பாக குழிபறித்து விட்டு அவர்கள் வேலை முடிந்ததும் அப்படியே மண்ணை நிரப்பிவிட்டு சென்று விடுகின்றனர்.
ஆனால் அவர்கள் அவ்வாறு குழி பறிப்பதற்கு அந்த சாலைக்குரிய நிர்வாகத்திடம் எழுத்துமூலம் எழுதிகேட்டு அனுமதி பெற்ற பின்னரே குழி தோண்ட வேண்டும் என்பது நியதி. அதன்படி அங்கு தோண்டப்பட்ட குழியை மூடி சமன் செய்து பழைய நிலையான தார் சாலையாக மாற்றுவது உள்பட விரிவான அறிக்கை தயரித்து அதற்காண பணத்தைக் கட்டச் சொல்லிய பின்னரே அனுமதி என்றாலும் ஒரு சில சமயம் அவசரம் காரணமாக சம்பந்தப்பட்ட துறையிடம் சொல்லிவிட்டு வேலை தொடங்குவதும் நடப்பதுண்டு. எப்படியிருப்பினும் அவர்கள் அதற்குரிய தொகையைச் செலுத்தி விடுகின்றனர். ஆனல் அந்த துறை அந்தச் சாலையை மீண்டும் சரியான முறையில் செப்பனிடாமல் அந்த சாலையைப் உபயோகப்படுத்தும் பயணிகளுக்கு தொடர்ந்து துன்பம் விளைவிக்கக்கூடியதாக வைத்து விடுகின்றனர். அவ்வாறு பல குழிகள் சேர்ந்தபின் முழுமையான சாலை அமைக்கும் போதுதான் அந்த மேடு பள்ளம் சரியாகின்றது.
முறைப்படி அனுமதி பெற்று தோண்டுவது ஒருபுறம் என்றால் அனுமதியில்லாமல் மக்கள் தங்கள் சுயநலம் கருதி பல இடங்களில் தோண்டி சாலையை மேடுபள்ளம் ஆக்கி விடுகின்றனர். போதுவாக சாலைகளை யாராயிருந்தாலும் எந்தப் பணிக்காக இருந்தாலும் உரிய உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதிபெற்று வேலை முடிந்த பின்னர் அவர்களே சரியான முறையில் சாலையை செப்பனிட வேண்டும் என்று கட்டாயம் இருக்க வேண்டும். வீட்டிற்குள் ஓரு வேலை செய்து விட்டு அதை சரிசெய்யாமல் அப்படியே விட்டு விடுவார்களா என்ன! அனுமதி பெற்று வேலை முடிந்தபின்னர் மேற்பார்வை செய்து சாலையை செப்பனிடாமல் விடுபவர்களை உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். தண்டனை என்ற பயம் இருந்தால் எல்லாம் சரியாக இயல்பாக நடைபெறும். சாலையில் தோண்டும் ஒவ்வொரு குழிக்கும் கட்டணம் செலுத்தி இரசீது பெற்றபின்னரே குழி தோண்ட வேண்டும். அவசரம் கருதி அவசரகாலப் பணியாகவும் அனுமதி வாங்கலாம்.
எந்த சாலையும் மேடுபள்ளங்களின்றி மக்களின் ஆரோக்கிய பயணத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். அதனால் உடனுக்குடன் செப்பனிடல் நடைபெற வேண்டும். அனுமதியின்றி குழிதோண்டல் விளம்பரங்களுக்காக தோண்டல் கூட்டங்களுக்காக தோண்டல் என்று எதுவாக இருந்தாலும் அனுமதியில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபருக்கு அதற்குரிய தண்டணை வழங்கப்பட வேண்டும்.
சாலைகளை ஆக்ரமித்து கடைகளையும் வீட்டின் பகுதிகளையும் அதிகப் படுத்தி உபயோக்கும் எண்ணங்கள் சரியில்லை. அவ்வாறு செய்பவர்கள் முதலில் எச்சரிக்கை செய்யப் படவேண்டும்,. பின்னும் அவ்வாறு தொடர்ந்தால் அவர்கள் தண்டிக்கப் படவேண்டும். ஒரு வியாபார இடத்திற்கு முன்னால் அங்கு வரும் வாகனங்களுக்கு நிறுத்துவதற்கு அவர்களே ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அவ்வாறின்றி சாலைகளில் தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்ய விடுவது வியாபாரம் செய்பவர் அல்லது அந்த இடத்தினுடைய சொந்தக்கார்களே பொறுப்பு என்பதை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சாலை ஆக்கிரமிப்புகளால் பல உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
பெரிய நகரங்கள் /ஊர்களை இனைக்கும் சாலைகளில் சேரும் குறுக்குச் சாலைகளிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக கவனமுடன் வரவேண்டும். அதை விடுத்து அவர்கள் வேகமாக வந்து திரும்புவார்களாம். அதனால் நெடுஞ்சாலையில் சாலையை உயர்த்தி மேடாக்கி தடுப்பு அல்லது தட்டிகள் வைத்து ஒருசமயம் ஒரு வண்டி செல்வது போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றனர்.
குறுக்குச் சாலையில் எப்பொழுதாவது சில வண்டிகள் வரும். நெடுஞ்சாலையில் அடிக்கடி வண்டிகள் வரும். ஒரு சில வண்டிகளுக்காக நெடுஞ்சாலையைக் கடக்கும் நூற்றுக் கணக்காண வண்டிகள் தங்கள் வேகத்தை குறைத்து மேட்டில் ஏறி இறங்கி மெதுவாக செல்ல வேண்டுமாம். தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக இருக்கின்றது. இது போன்று ஒரு நெடுஞ்சாலையில் பல மேடுகளைக் கட்டி தடுப்பு செய்துள்ளதால் நெடுந்தொலைவு பயணிக்கும் மக்கள் துன்பமடைகின்றனர். பொதுவாக சாலைகள் மேடு பள்ளங்கள் நிறந்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை போதாது எண்பதற்காக இந்த மேடு பள்ளங்கள்வேறு. இதனால் ஒவ்வொரு முறையும் வண்டி ஏறி இறங்கும்போது அதில் பயணம் செய்யும் மக்களின் முதுகுத் தண்டு தேவையில்லாமல் தேய்வடைகின்றது. பலருக்கு கழுத்து சுளுக்கு ஏற்படுகின்றது. நிறைய பயணிகளுக்கு பாதிப்பு என்பதை கவனத்தில் கொண்டு சாலை தடுப்புகளை குறுக்குச் சாலைகளில் மட்டும் அமக்க வேண்டும். இரு பக்கமும் எச்சரிக்கை பலகைகளை முறைப்படி பொறுத்த வேண்டும்.
இது மட்டுமில்லாமல் வாகனங்கள் தங்கள் வேகத்தைக் குறைத்து மெதுவாக அந்த இடத்தை கடக்க கீர்முறையை மாற்றி செயல் படுவதால் நிறைய பெட்ரோல் தேவையின்றி வீணாக்குகின்றோம். இப்படியெல்லம் செய்து விட்டு பெட்ரோலை சிக்கனப்படுத்த நடவடிக்கை என்று விளம்பரங்கள் எதற்கு!
அடுத்து பள்ளிகளுக்காக தடுப்புகளை சாலையில் ஏற்படுத்துகின்றனர். பள்ளியிலிருந்து வெளிவரும் மாணவர்கள் வேகமாக கவனமின்றி சாலையைக் கடப்பதாலேயே பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. நம் குழந்தைகள் அறிவில் சிறந்தவை. புத்திசாலித்தன மிக்கவர்கள். அவர்களுக்கு முறையான விளக்கங்களைச் சொல்லி வழி முறைகளை கற்றுத் தந்தால் அவர்களின் செயல் பாடுகள் நம்மை மிஞ்சி இருக்கும். அவர்களுக்கு சாலைகளின் குறியீடுகள் சாலியை கடக்குமுன் செயல் படும் முறைகளை சரியாக கற்றுத்தாராமல் அவர்களை சரியான இயக்கமில்லாத மண்பொம்மைகளாக்கி விடுகின்றோம்.
எல்லா பள்ளிகளின் வாயிலில் முறையான தடுப்பை ஏற்படுத்தி மாணவ மாணவிகளின் வேகத்தை குறைத்து தாங்கள் ஒரு சாலையை கடக்க இருக்கின்றோம் என்ற விழிப்பு நிலையை ஏற்படுத்தி செயல் படவைத்தால் எந்த பள்ளிக் குழந்தையும் விபத்தில் சிக்காது. இந்த விழிப்புணர்வு மற்ற இடங்களில் அவர்கள் சாலையைக் கடக்கும்போதும் உபயோகமாயிருக்கும். இதற்கு உதவியாக காலை, மதியம் மற்றும் மாலை ஆகிய மூன்று நேரங்களிலும் அந்தப் பள்ளியில் உள்ள உடற்பயிற்சியாளர்கள், பாட்டு மற்றும் கலைத் துறை ஆசிரியர்கள், நூலகப் பெருப்பாளர் ஆகியோரின் உதவியுடன் குழந்தைகள் பள்ளி வாயிலிலுள்ள சாலயைக் கடக்கச் செயல் முறைப்படுத்தலாம்.
பள்ளிக்கூடங்களின் வாயிற் கதவுகள் திறந்திருக்கக் கூடிய காலங்கள் காலை மதியம் மற்றும் மாலை ஆகிய மூன்று வேளைகள் சேர்ந்து மொத்தம் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே. இந்த மூன்று மணி நேரத்திற்காக ஒரு நாளைக்கு மற்ற இருபத்தியோரு மணி நேரமும் அந்த நெடுஞ்சாலையில் செல்வோர் மேடுகளில் ஏறி இறங்கி முதுகு தண்டு வடத்திற்கு அதிர்ச்சி தந்து செல்ல வேண்டுமா! இதுமட்டுமல்லாமல் விடுமுறை தினங்கள் வேறு.! இந்த சிந்தனை கொண்டு சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் சிந்தித்து நம் மக்களின் உடல்நலப் பாதுகாப்பிற்கு உதவ வேண்டுகின்றேன்.
ஒரு இரயில் பாதையை மற்றும் நான்கு வழிச் சாலகளை கடக்கும்போதும் எப்படி கவனுத்துடன் இருபுறம் பார்த்து செல்கின்றோமோ அதே கவனம் எந்த சாலையாயிருப்பினும் கவனமுடன் கடந்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
இப்படி வீணற்ற தடுப்புகளால் பயணம் செய்வோரின் கழுத்து, முதுகுத் தண்டுவடம் பாதிப்பு என்ற நிலை குறைவது மட்டுமல்லாமல் நாட்டில் பெட்ரோல் சிக்கனமும் ஏற்படும்.
அடுத்து சாலை தடுப்புகளை சில கல்லூரி, மருத்துவ நிர்வாகங்கள் தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்கின்றன. இவர்கள் விளம்பரம் செய்வதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள். விளம்பரங்களை உரிய
இடங்களில் சாலை ஓரங்களில் அனுமதி பெற்று வைத்துக் கொள்ள வேண்டும் கண்ட பொது இடங்களில், சாலைகளில் வைக்கக்கூடாது என்று கட்டாய மாக்கப் படவேண்டும்.
பெரிய ஊர்களில் சாலைகளை முறையாகக் கடப்பதற்கும் போக்குவரத்தை சீர்படுத்தவும் மின் விளக்கு (சிமப்பு-ஆரஞ்சு-பச்சை) கம்பங்களைப் பெறுத்தியிருக்கின்றனர். அதிலும் சில நிர்வாகங்கள் விளம்பரங்கள் செய்ய தங்களது தட்டிகளை பெரிய அளவில் வைத்துள்ளனர். எங்கு செல்ல வேண்டும் என்ற குறிப்புகள் மறைக்கப் பட்டோ அல்லது சிறிய அளவிலே வைக்கப்பட்டுள்ளது. அது எப்படி மக்களுக்கு சாலையை முறையாக கடந்து வேண்டிய இடத்திற்கு செல்ல வழிகாட்டியாக உதவும்.
போக்குவரத்து விளக்கு கம்பங்களில் விளம்பரங்கள் செய்வது தடுக்கப் படவேண்டும். இதை யார் அனுமதிக்கின்றனர் என்றே தெரிவதில்லை. சாலைகளில் நேராக விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டு வாகன ஒட்டி வண்டியைச் செலுத்தினால் ஏன் விபத்துக்கள் அதிகமாகாது.
பொதுவாக பெரிய நிர்வாகங்கள் வளர விளம்பரங்கள் வேண்டியதுதான். அதை முறைப்படி மக்களுக்கு பாது காப்பாகவும் அதே சமயம் பயன் படுபவனாகவும் இருக்கும்படி விளம்பரங்கள் செய்ய வேண்டியது அவர்களது சமுதாய கடமை. அதற்கு அரசு நிர்வாகங்கள் தகுந்த மேற்பார்வை முறைகளை ஏற்படுத்தி சாலைகளை முறையாக பயணிப்போர் நலன் கருதி மேம்பாட்டுச் செயல்களைச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்!— குருஸ்ரீ பகோரா
#####
ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#*#*#*#*#
நீதியின் குரல்!
குற்றவாளிகள் அல்லது குற்றத்திற்குச் சம்பந்தப்பட்டவர்கள் என நினைத்து சட்ட பாது காப்பாளர்களில் ஒரு பிரிவினரான காவல்துறை போலீஸார் இன்ன காரணத்திற்காக கைது / அல்லது அழைத்துச் செல்லப் படுகின்றார் என்று எழுத்து மூலமாய் அவர்களை எங்கிருந்து கூட்டிச் சொல்கின்றார்களோ அங்கிருந்து அப்போதே எழுதிக் கொடுத்துவிட்டு, அவர்களின் வீட்டிற்கும் தகவல் கொடுத்து விட்டு, அவர்களை நீதி அரசர்கள் எனப்படும் நீதிபதிகளின் முன்னிருத்தி காரணங்களை எழுத்து மூலமாக விளக்கி எத்தனை நாள் அவர்களை விசாரிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்து நீதிமன்றத்திலிருந்து கூட்டிச் சென்று மனித நேயத்துடன் குற்றத்திற்குத் தகுந்தவாறு விசாரனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இது ஏன் என்றால் எதற்காக ஒருவரை அரசின் சமூக பாதுகாப்பாளர்கள் எனப்படும் காவல்துறை போலீசார் அழைத்துச் செல்கின்றார் என்பது அவர்களுக்கோ அல்லது அவர் உறவுகளுக்கோ தெரிவதில்லை.ஒரு சில சமயம் இன்னாரைக் காணவில்லை என்று புகார் கொடுக்கச் செல்லும்போதுதான் காணமல் போன நபர் புகர்கொடுக்குமிடமான அந்த காவல்துறை நிலையத்திலேயே இருப்பது தெரிய வருகின்ற நிலை.
குற்றங்கள் உறுதி செய்யப் படும்வரை குற்றவாளிகளுக்கு எந்த நிலையிலும் ஆதரவு தெரிவிக்கின்ற நிலை இக்கட்டுரையிலில்லை அவர்கள் யாராயிருந்தாலும் என்ன காரணமாய் இருந்தாலும் சட்டத்தின்முன் சமம் என்ற நிலையை மேற்கொள்வதே காவல்துறைக்கு சிறப்பாகும். ஒருவரின் தனிபட்ட செல்வாக்கு காரணமாக காவல்துறை தன் நிலையை நலிவடையச் செய்து விடக்கூடாது. குற்றங்கள் உறுதி செய்யப் படும்வரை எல்லோருக்கும் ஒரே நடைமுறையை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். பின் அவர்கள் செய்த குற்றங்கள் உறுதியானால் அதற்கேற்ற நிலைகள் என வைத்துக் கொள்வது சிறப்பு.
காவல் நிலையங்களில் இருப்பவர்கள் வெறும் உள்ளாடையுடன் இருப்பதக் காண்கின்றோம். நாகரீகம் வளர்ந்த இந்நாளில் ரோட்டில் செல்லும் ஒருவன் ஆடையின்றியோ அல்லது அரைகுறை ஆடையுடன் இருந்தால் அவனை மனவளர்ச்சி குன்றியவன் என்கிறோம். அவனைப் பார்த்து பரிதாபப்பட்டு என்ன காராணத்தினால் இந்நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளானோ என வருந்துகின்றோம். நீதி மன்றங்களில் குற்றங்கள் நிரூபணம் ஆனபின் குற்றவாளிகள் என அவர்களுக்கு ஓர் சீருடை அளித்து அவர்கள் மனமாற்றம் அடைய அவர்கள் செய்த குற்றத்திற்குரிய தண்டனை அடைய வேண்டும் என்று ஓர் கட்டுகோப்பை ஏற்படுத்தி உள்ளது அரசின் சட்டங்கள்.
அப்படியிருக்கும்போது எதுவும் உறுதி செய்யாமல் ஒருவரை காவல் நிலையத்தில் அரைகுறை ஆடைகளில் வைப்பது எந்த சட்டத்தில் உள்ளது. இது முற்றிலும் மனித நேயத்திற்கு எதிரானது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.
ஓர் உயிர் பறிக்கப்பட்டபின் அந்த உயிர் சமபந்தப்பட்டவர்களின் இழப்பை யாராலும் சரிப்படுத்த முடியாது. சமுதாயத்தில் ஒரு உயிரை மற்ற உயிர் பறித்தல் கூடாது என்தற்காகவே இவ்வகைக் குற்றங்களுக்கு கடுமையான சட்டமுறைகளையும் தண்டனைகளையும் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சட்ட முறைகளையெல்லாம் மீறி தன் பணபலத்தால் தனிப்பட்ட செல்வாக்கால் கடுமையான சட்ட திட்டங்களை மீறி ஒருவரால் செயல் படுத்த முடியும் என்றால் என்ன சமதர்மம். அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்பதெல்லாம் எதற்கு! என்ற எண்ணங்கள் மக்களிடையே தோன்றுவதை அணுமதிப்பது வளரவிடுவது எதிர்கால சமுதாயத்திற்கு சீர்கேடாகும்.
ஓர் உயிரைப் பறித்ததற்காக ஒருவர்மேல் குற்றம் சாட்டப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவரின் உறவுகள் வருந்தி கதறலாம். ஆனால் அவர்கள் கொலை செய்யப்பட்டவரின் உறவுகளின் நிலையை ஒரு நிமிடமாவது நினைக்க வேண்டும். அந்தக் குடும்பத்தில் எத்தனைக் கனவுகள். கற்பனைகள். வாழ்வாதாரம் எல்லாம் வீணாகி அவரின் பிரிவால் அந்தக் குடும்பம் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளதே! அதற்கு காராணமான தங்கள் உறவினன் செய்தது சரியா என நினைக்க வேண்டும். இதே நிலையில் தன் உறவின் குடும்பம் இருந்தால் எப்படி என்பதையும் சிந்திக்க வேண்டும். அது எவ்வளவு துயரம் என்பது அப்போது அவர்களுக்குப் புரியும்.
ஓர் சாதாரண வாழ்வு நிலையிலிருந்து மாறுபட்ட ஒருவர் மற்றொருவரைத் தாக்கி கொலை செய்வது என்றால் அந்த வன்மம் ஏன்! அந்த வன்மத்துடன் இருக்கும் அவரை எந்த உறுவுகளாவது கண்டித்தனவா அல்லது தடுத்தனவா! இப்போது ஏன் தன் உறவு சிக்கலில் சிக்கியதே என்று கண்ணீரும் புலம்பலும்! தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்.
பத்திரிகைகளும், செய்திகளும் தவறு செய்தவரின் உறவுகள் கண்ணீர் விடுவதை, புலம்புவதை, அழுவதை தெரிவித்து மற்றவர்களின் மனதில் ஓர் இரக்க உணர்ச்சியை ஏற்படுத்த முயல்வதை தடுக்க வேண்டும். தவறு, குற்றம் என்றால் எந்த நிலையிலும் யாரும் அந்த நிகழ்வுகளை ஆதரிக்க கூடாது என்ற நிலை ஏற்பட்டால்தான் நாட்டில் அநியாயங்கள் அக்கிரமங்கள் செய்வன குறையும். தெய்வம் நின்று கொல்லும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்ற சொற்றொடர்களுக்கு ஏற்ப பத்திரிகைகளிலும் செய்திகளிலும் தெரிவிக்க வேண்டும். இந்த நிலைதான் சமூகத்தில் மற்ற உயிர்களுக்கு கெடுதல் புரிபவர்களுக்கு ஓர் குற்ற உணர்ச்சியைத் தூண்டி குற்றங்கள் செய்யப்படுவதைக் குறைக்க முடியும். குற்றங்கள் செய்யாமலிருக்க தூண்டுதலாக அமையும்.
ஒருவர் மற்றொருவரின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு தாக்குகின்றார் என்றால், தாக்கப்பட்டவர் செய்தது என்ன! எதனால் தாக்குபவருக்கு இவ்வளவு வன்மம் ஏற்பட்டுள்ளது. இன்ன காராணத்தினால் எனக்கு இவர்மேல் வன்மம் ஏற்பட்டுள்ளது . என்ற முறையீட்டிற்கு தீர்வு காணும் முறை நீதி மன்றங்களில் இருந்தால் இது மோன்ற வன்மங்கள் அதிகமாகி ஒருவர் தன் எதிர்காலம் பற்றி கவலை கொள்லாமல் வன்மம் தலை தூக்கிய நிலையில் ஒரு குற்றத்தினைச் செய்து விட்டு அதனால் தன் உறவுகளுக்கு பாதிப்பையும் பலகஷ்டங்களையும் விரும்பியா உருவாக்குவார்!
சமுதாய சீர்திருத்தத்திற்கு மிகவும் சிந்தித்து செயலாக்கம் வேண்டிய பொது விஷயம் இது! இதற்காண ஓர் அமைப்பு இருந்து அதில் முறையீடு செய்து ஒருவரின் வன்மங்கள் குறையும் நிலை ஏற்பட்டால் இது போன்ற உயிர் போக்கும் அவல நிகழ்வுகள் நடைபெற வாய்பில்லாமல் போகும். மனித நேயம் மேம்பட்டு சமுதாயம் உயர் நிலை அடையும்.
ஓர் விசாரணையை ஆரம்பித்த அமைப்புகள் முடிவுகளை விரைவாக ஒர் கால நிர்ணயத்திற்குள் கட்டாயமாக அறிவிக்கப் படுபனவாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தள்ளிவைக்கக் கூடாது. வாய்தா என்பது பல்லாண்டுகள் வாழ்க என்பதுபோல் வழக்குகளை வாழவைக்கும் சொல்லாகும். வாய்தா வழக்குகள் வாழ்வதற்காகவே! வழக்குகள் விரைவில் முடிக்க வேண்டும் என்ற எல்லோரும் ஒப்புக்கொண்ட நிலையில் ஏன் மந்தமாக முடிவாகமல் இருக்கும் நிலை ஏற்படுகின்றது. அதற்கு ஓர் முக்கியமான காரணம் வாய்தா அளிப்பதே. ஒரு விசாரனைக்கு இத்தனை வாய்தாதான் என்று கட்டாயமாக்கப்படவேண்டும். அதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் வரவில்லை என்றால் அவர்மேல் குற்றம் நிருபணம் ஆவற்கு இதுவும் ஒர் காரணம் என்ற நிலை ஏற்படும் என கட்டயமாக்குதலே,
வாய்தாவினால் காலதாமதம் ஏற்பட்டு அந்தக் காலங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு அது ஒரு பாலருக்கு சாதகமாக அமைய வாய்ப்புண்டு. இந்த வாய்தா நிலையிலிருந்து மக்களையும், நீண்டகாலமாக வழக்குகள் நடந்து கொண்டிருப்பது என்ற நிலைகள் மாற வாய்தாக்களை இத்தனை என்று நிர்ணயிக்கப் படவேண்டும். சிலருக்கு இது நன்மைகள் தராமலிருக்கலாம். சிலருக்காக ஒட்டுமொத்த நாட்டின் நலன் நீதி நிர்வாகம் பாழ்படுவதை எல்லோரும் எல்லா காலமும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதைச் சீர்படுத்தினால் நாட்டில் தேங்கிக் கிடக்கும் பல் ஆயிரக்கணக்காண குற்றங்களை விசாரண நடத்தி விரைவில் தீர்த்து வைக்கப்படலாம்.
மேலும் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதி மன்றங்களை நாடினால் வாய்தா! வாய்தா! என நம் ஆயுளில் முடிக்க மாட்டார்கள், மேலும் அவ்வளவு செலவு செய்ய முடியாமல் நம்மைத் தீர்த்து விடுவார்கள் என்ற நினைவு கொண்டு. விரைவில் தீர்வு வேண்டும் என குறுக்கு வழியில் தகாத சமூக முறைகளை மேற்கொள்ள வழி வகுக்கும்.
வேண்டுமென்று தகராறு செய்துவிட்டு நீதி மனறத்தில் புகார் பதிவு செய்து விட்டால் அது பல ஆண்டுகள் இழுத்துக் கொண்டிருக்கும் என்ற நிலையில் பல சமூக விரோதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற அவல நிலை மாற அனைவரும் முயற்சிக்க வேண்டும். நீதி நேர்மையாக அனைவருக்கும் விரைவில் கிடைக்க வழி வகுக்க வேண்டும்.
ஒரு விசாரணையில் அது முற்றிலும் பொய்யானது. வேறு நோக்கிற்காக வழக்கு புனையப்பட்டது என்று தெரிந்தால் எக்காரணத்திற்காகவும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படக் கூடாது நிச்சயமாக அந்த தவறை உணரும் வகையில், பொய்யான குற்றசாட்டுகள் சுமத்தி ஒருவரை மனஉலைச்சலுக்கு ஆளக்கிய காரணத்திற்காகவும், வக்கீல்கள், நீதிபதி மற்றும் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தினை பொய்யான வழக்கினால் வீணடித்த குறத்திற்காகவும் கடுமையா தண்டனை தர வேண்டும். அப்போதுதான் இது போன்ற போலியான வழக்குகள் நீதி மன்றத்திற்கு உள்ளேயே வராது. நீதி மன்றத்தின் நேரங்களும் வீணடிக்கப் படாது. நன்றாக வெளிப்படையாகத் தெரியும் ஒரு போலி வழக்கை எந்த ஒரு வழக்கறிஞரும் வாதாடக்கூடாது. அப்படி வாதடும் வழக்கறிஞர்மேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வழக்காடும் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
வழக்காடு மன்றத்தில் வழக்காடுபவர்கள் ஒவ்வொரு வழக்கின் தன்மையை உணர்ந்து அதில் தங்கள் பக்கம் நியாயம் இருக்கின்றது என்ற நிலை அறிந்து வழக்குகளை மேற்கொண்டால் ஆரம்பத்திலேயே போலியான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருவது குறைந்து விடும். அப்படி வந்தாலும் அந்த வழக்குகள் இனம் கண்டு கொள்ளப்பட்டு நீதிபதி அவர்கள் தண்டனை தறுவாரென்ற நிலை உறுதியாக இருந்தால் போலியான வழக்குகள் குறைந்து நீதி மன்றத்தின் நேரங்கள் வீணடிக்கப்படாது. ஆண்டுக்கு ஆண்டு போலி வழக்குகள் குறைந்து நாட்டில் நீதித்துறை மேன்மையடைந்து நீதி நியாயம் வழுப்பட்டு மக்கள் நிம்மதியுடன் வாழ வாழ்வியல் முறை அமைந்து நாட்டில் அமைதி பெருகி ஆனந்தமும் நிறையும்.
ஒரு வழக்கறிஞர் தேர்வு எழுதி நீதி அரசருக்குகான தகுதியில் இடம் பெற்றிருந்தாலும் அவரின் முந்தைய காலங்களில் அவர் ஈடுபட்ட வழ்க்குகள் அடிப்படையில் அவரின் முழுத் தகுதி தெரிந்து மற்றவர்களில் சிறந்தவர் என்ற நிலையில் அவர் நீதிஅரசருக்குத் தெரிந்தெடுக்கப் படவேண்டும். அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது செல்வாக்கிற்காகவோ எந்த ஒருவரும் நீதி அரசராகத் தேர்ந்தெடுக்கப் படக்கூடாது. உண்மைகள் மறைக்கப்படாத தெளிவு கொண்ட வாதம், விவாதம், முடிவுகள் முன்னிலைப் படுத்தப்படவேண்டும்.
ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்து விட்டு முன் ஜாமீன் கேட்கிறார் என்றால் எதற்கு அவருக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும். குற்றம் செய்யாத ஒருவர் ஏன் பயப்படவேண்டும். ஒரு குற்றம் தன்மேல் சாத்தப்படவிருக்கின்றது என குறு குறுக்கும் நெஞ்சிற்கு பாதுகாப்பிற்காக ஜாமீன் வழங்குதல் கூடாது. அவருக்கு ஜாமீன் வழங்கி மேலும் அந்த குற்றப் பின்னியை சீர்குலைக்க அவருக்கு உதவுவதற்காகவே அந்த ஜாமீன் அமையும். எந்த குற்றம் செய்தாலும் சட்ட விளக்கங்களைச் சொல்லி முன் ஜாமீன் வாங்கி விடலாம் என்ற அவல நிலையிலிருந்து நீதிமன்றங்களின் நிலை மாற வேண்டும்
ஜனநாயகம் எல்லோருக்கும் பொது. பணம் இருப்பவர்களுடன் அறிவில் சிறந்தவர்கள் சேர்ந்து அதை தங்கள் பக்கம் இழுத்து ஜனநாயகத்தை பணநாயகமாக ஆக்க விடக்கூடாது என்பதற்காகவே நீதி மன்றங்கள். நியாய தர்ம சிந்தனையுடன் வழக்காடுபவர்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். நாட்டில் தர்ம் நியாங்கள் நிலைக்க அவர்களும் உதவ வேண்டும். அதிகாரமும் பணமும்தான் சட்டத்தின் கண்கள் என நினைத்து தர்மத்தினை விட்டு வேறு செயலுக்கு துணை போகக்கூடாது. இதிகாசங்களும் புராணங்களும் முக்கியத்துவம் கொடுக்கும் இப்புண்ணியபூமியில் நியாயம் தர்மத்தை உறுதிப்படுத்தவே போர்கள் நடந்து அவற்றை நிலைப்படுத்தியுள்ளதை அறிஞர்கள் புரிந்து தங்களின் நிலைகளை மாற்றிக்கொண்டு நியாயம் தர்மத்திற்காக போராடும் நிலையை மேற்கொள்ள வேண்டும்.
சட்டம் என்றால் அது தன் கடமையைச் செய்யும் என்ற நிலை, உணர்வு, ஓர் பயம் கலந்த மரியாதை அனைவருக்கும் வேண்டும். பணம் மற்றும் அதிகாரம் கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என சொல்லும் நிலையை நாட்ட நீதி மன்றங்கள்தான் முற்றிலும் உதவி செய்ய வேண்டும்.
ஒரு குற்றத்தைச் செய்தவன் எந்த நிலையிலிருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. பாரபட்சமின்றி நீதி சொல்லி நியாமான தண்டணைகளை அடைய வேண்டும் என்பதே தர்மத்தின் குரலாக நீதி மன்றங்களில் ஒலிக்க வேண்டும். ஒரு விசரணையில் ஒரு நீதி மன்றத்தில் தண்டனை மறு நீதி மன்றத்தில் விடுதலை. எப்படி ஒரு நீதியானது இரு நீதிமன்றங்களிலும் மாறு பட்டு நிற்கின்றது. விசாரணை ஒன்றே. நியாமும் தர்மமும் ஒன்றே. அப்படியானால் ஏன் இரு வேறு வகையான தீர்ப்புகள். அப்படி நீதிக்கு முரணான தீர்ப்புகளை வெளியிட்ட நீதி அரசர்களுக்கும் தண்டனை என்ற நிலை ஏற்பட்டால் இது போன்ற ஒரே வழக்காட்டில் இரு வேறு தீர்ப்புகள் வெளிவராதல்லவா!. நீதிமன்றத்தின் நேரங்களும் வீணடிக்கப் படாது அல்லவா.
ஒரு நீதி அரசர் அளித்த தீர்ப்பு எங்கு சென்றாலும் அது நீதிக்கு உகந்தது. அதுவே சரி என்ற நிலை வேண்டும். அதுவே நீதி. நீதி என்பதில் ஒன்றுக்கு மேற்பட்டது எல்லாம் நீதியென்றாகாது. அது நீதியின் ஆட்சி! அதுவே நீதியின் குரல்!.--குருஸ்ரீபகோரா
#####
ஓம்நமசிவய!
பெருச்சாளியூரும் பிரானே நரிச்செயலார் பால்
நண்ணாய் செந்தாமரைத்தாள் தேவா நந்தா
மணியே நாயக இருள்சேர் இருவினை எறிவாய்
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!
#*#*#*#*#
நிழல்!
எது பிறந்ததோ அந்த வேளையில்தான் நானும் பிறந்தேன். நித்திய தத்துவம் ஒன்றின் விளக்கமாக ஆண்டவன் என்னை அதனுடன் படைத்தனன். நான் பிறந்தது அதற்குத் தெரியாது. எப்போதாவது என்னை காண வேண்டி வரும் .அப்போது அது என்னைக் கண்டு ஆச்சரியப்படலாம். சில சமயம் அதன் பார்வைக்கு நான் தென் படமாடேன். அதனால் என்மீது அதற்கு நம்பிக்கையில்லாமல் போகலாம். ஆனால் நான் அதனுள்தான் ஒளிந்தும் ஒளியாமலும் இருந்து வருகின்றேன்.
அது பிறந்ததிலிருந்து தனக்கு வாழ்க்கை கிடைத்து விட்டது என மகிழ்ந்து கொண்டிருப்பதை நான் அறிவேன். உண்மை என்ன வென்றால் சாவை நோக்கிச் செல்லும் பயணம் தான் வாழ்க்கை என்பதை அது புரிந்து கொள்ளவில்லை. பிறப்பு என்பது சாவில் நுழைவு வாயில். எனவே காலத்தின் கையில் வாழ்க்கை. எனவே காலச்சக்கரத்தின் மணித்துளிகளை இனியனவாக்கிக் கொள்ள முயற்சிசெய் என்ற தத்துவத்தை அது தெரிந்ததாகத் தெரியவில்லை. எப்படியிருப்பினும் நான் அதன் நண்பன். அதன் துணைவன். அது எங்கு சென்றாலும் எது செய்தாலும் அதைக் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன். அதுவே இறைவன் எனக்கு இட்ட கட்டளை.
ஆண்டவன் என்கிற ஒளியுடன் அது கலக்கும்போது அதுவும் நானும் ஒன்றாகி விடுவோம். சம்சார சாகரங்களைக் கடந்த நித்ய நிலையும் அதுவே! அந்த ஒளியிடமிருந்து அது விலகி ஓடினால் அதன் கோரச்சாவு எனக்கு புரிகின்றது. அதை எச்சரிக்கும் முறயை நான் அறிந்ததில்லை. இருந்தாலும் உண்மையை ஒர் நாள் அது உணர்ந்து திருந்தும் என்ற நம்பிக்கையில் அதனுடன் பயணிக்கின்றேன் அது அந்த இறை ஒளியை நாடி முன்னேறும்போது அதுகலக்கும்போது நானும் கலந்துவிடலாம் என்ற நப்பாசையில் அதனுடன் இனைந்து வர அதன் அடியொற்றி நடக்கின்றேன். இதுவே நான் அதைச் சுற்றி சுற்றி அதனுடன் அலைவதன் உள்ள சிறிய தத்துவம். -குருஸ்ரீ பகோரா
#####
ஓம்நமசிவய!
புகர்முகக் களிற்றுப் புண்ணிய அகலிடம் நிறைய
அமர்ந்தோய் செல்வம் அருள்க தேவா நல்லன
எமக்கருள் நாயக ஆக்கமும் ஊக்கமும்
அருள்வாய் காக்க எங்களை உன் கழலிணை போற்றி! !
#*#*#*#*#
ஒதுக்கீடு!
பிறப்பால் ஒதுக்கீடு அளிப்பது முற்றிலும் சரியில்லை. மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வாய்ப்புக்கள் கிட்ட தாம் இந்தக் குலத்தில் பிறந்திருக்க மாட்டோமா! அந்தக் குலத்தில் பிறந்திருக்க மாட்டோமா! என ஏங்கும் நிலை. இதற்காக பொய் கூறி பிறப்பை மாற்றி சான்றிதழ் பெறும் அவல நிலை
சமுதாயத்தில் சமமான நிலைக்காக தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள அனைவரும் மேம்பாடு அடைய ஓர் ஊக்கம் தர வேண்டியது அவசியம் அனைவரின் கடமை. அதன் முகத்தான் அரசும் மற்றையோரும் படிப்பிற்கும், முதல் வேலை வாய்ப்புக்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் செயல்பட சட்டங்களைத் திருத்துவதில் தவறில்லை.
இதையே எல்லா நிலைகளிலும் பயன்படுத்துவது ஓர் போட்டி, பொறாமை உணர்வுகளை மற்ற்வர்களிடையே தோற்றுவிக்க வழி வகுக்கும். வேலை வாய்பிற்குப்பின் ஊக்குவிப்பு என்றபெயரில் அடுத்த நிலை தருவது சரியில்லை. அந்நிலை அடைந்தோர் எந்தவிதத் திறமையையும் வெளிபடுத்தா நிலையில் பிறப்பால் தனக்கு வேலை மட்டுமல்ல ஊக்குவிப்பும் என்பது என்றென்றும் ஓர் மெத்தனமான போக்கையே உருவாக்கி கொண்டிருக்கின்றது..
இதே நிலையில் இணையாகப் பணி புரிந்தோருக்கு எல்ல திறமைகளிருந்தும் பிறப்பு ஜாதி இல்லை. அதனால் ஊக்குவிப்பு இல்லை அதனால் இங்கேயும் மெத்தனப் போக்கு உருவாக சாதகமான மனநிலை ஏற்படுகின்றது. இப்படிப் பட்ட நிலை உருவானால் நிர்வாகம் எப்படி சீரும் சிறப்புமாக இருக்க முடியும். விரைவில் நலிவடையும் நிர்வாகம் சீர் கெடும்— -குருஸ்ரீ பகோரா
#####
ஓம்நமசிவய!
ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வனவ பகர்முன்னவாம் பரமே போற்றி!
#*#*#*#*#
அன்பளிப்பு!
ஒருவருக்கு ஒருவர் கொடுகும் லஞ்சத்தை கீழ்கண்ட பெயர்களில் கூறினாலும் பொதுவாக மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டத்தில் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு! குற்றம்!. தண்டனைக்குரியது. என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை,
அன்பளிப்பு,
நல்லெண்ணம் பரிமாறல்,
வாழ்த்துக்கள்
வெற்றிபெறுவதற்காக
பழிவாங்க
ஜென்ம கடனை திரும்ப செலுத்துதல்
இயற்கை சமன் (நாம் வாங்கிய லஞ்சத்திற்கு)
ஒருவருக்கு ஒருவர் பணம் கொடுத்தால் அது ஒன்று வட்டியில்லா கடனாக அல்லது வட்டியுடன் கூடிய கடன் அல்லது லஞ்சமாகத்தான் இருக்க முடியும்.
மனிதனுக்கு மனிதன் பொருளோ அல்லது பணமோ கொடுத்தால், உறவாயிருந்தாலும் சரி, நண்பர்களாயிருந்தாலும் சரி, மூன்றாவது நபராக இருந்தாலும் சரி அவரவர் சூழ்நிலை, எதிர்பார்ப்பு இவைகளைக் கணக்கில் கொண்டுதான் அன்பின் மிகுதியால் கொடுக்கப் படுகின்றதா அல்லது மறைமுக எதிர்பார்ப்புடன் கொடுக்கப் படுகின்றதா என தீர்மானிக்க முடியும்,
அன்பு என்ற ஓர் காரணத்திற்காக கொடுக்கப்பட்டாலும், அதே காரணத்திற்காக பெறப்பட்டாலும் காலங்கள் மாறும்போது சூழ்நிலை உறுவாகும்போது ஒருவன் செயலை மற்றவன் நினைத்துப் பார்த்து அவன் இப்படிப்பட்டவன், இவ்வளவு அன்பு காட்டியுள்ளான், இதுகாறும் ஏதும் செய்ய வில்லை. இனியாவது அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும், இப்போதைக்கு அவன் கேட்காமலேயே இந்த உதவியாவது செய்யலாம் என்ற ஓர் எண்ணத்தை தோற்றுவிக்கின்றது. என்றோ எதற்கோ பெறப்பட்டதிற்கு பிரதி பலன் வேறு முறையில் திருப்பி செலுத்தப் படுகின்றது- இது ஒருவகை.
ஒரு சின்ன குழப்பத்தில் ஆழ்த்தி அவனுக்கு பணம் கொடுத்து விவகாரத்தில் மாட்டி வைப்பது ஒரு வகை பழி வாங்குதல்.
ஒருவனை சந்தோஷத்தில் பணம் கொடுத்து வாழ்த்துவது ஒருவகை
ஒருவனை வேதனையில் வேறு வழியில்லாமல் கொடுத்துவிட்டு சபிப்பது ஒரு வகை.
இவையெல்லாம் ஏன்! எதற்காக!`
லஞ்சம் ஏன் கொடுக்க வேண்டும்! எதற்காக கொடுக்க வேண்டும்!
ஒருவனுக்கு ஓரிடத்தில் ஓர் செயல் நடக்க வேண்டும் என்றால் நடக்க இருக்கும் காரியத்தின் தன்மை, அதனால் கிடைக்கும் பலன் இவைகளைக் கருத்தில் கொண்டு கணிக்கப்பட்டு பிரதியாகப் பணம், பொருள், மது, பெண்ணாகக் கேட்கப் படுகின்றது. இவனால் அந்தக் காரியத்தை செய்து முடிக்க அவனுக்கு என்ன லாபம் என்று வரையறுக்கப் பட்டு ஏதாவது ஒன்றாக கொடுக்கப் படுகின்றது.
முதலில் தொடர்பு கொண்டு இந்த பரிவர்த்தனையை நட்புடன் ஆரம்பிக்க, வாங்க காபி அல்லது தேநீர் அருந்திக் கொண்டே பேசலாம் என்ற அழைப்பு. பின் ஷேம நலன்கள், ஊர் முறையில் அல்லது ஜாதி முறையில் ஏதாவது ஓர் முறையில் ஒருவரை ஒருவர் நெருங்க முயற்சி. நெருங்கிய வட்டத்திற்குள்தான் எல்லாம் விரிவாக பேச முடியும் என்பதால் எல்லா விபரங்களையும் கேட்டு எப்படியாவது இரு பாலரும் அந்த குறுய வட்டத்திற்குள் நுழைய பிடிவாதம் பிடிக்கின்றனர். அவர் சொன்னார். இவர் சொன்னார் என்று புகழ் பாடி ஏதாவது ஓர் தொடர்பை ஏற்படுத்தி அரசியல் நிலை, காலப் போக்கு, சூழ்நிலை இவைகளை பேச்சுத் திண்ணைபோல் பரிமாறி.. இன்றைய சூழலில் செலவின்றி ஏதும் செய்ய முடியாது. அவருக்கு இவருக்கு என்று கணக்குச் சொல்லி ஒருமித்த கருத்தடைவர்.
இருவரும் சமரசம் ஆகி ஓர் நிலையில் இந்த வேலை செய்து முடிக்க என்ன தருவாய்! என்ற கேள்வி வரும்.. அவர் அந்த வேலையைச் செய்வதற்கு நிர்வாகம் ஊதியம் தந்தாலும் அவருடைய ஆசைக்கு பேராசைக்கு பணம் பற்றாக் குறையாக இருப்பதால் அல்லது அவன் ஆடம்பரச் செலவு செய்வதற்கு தேவையாக இருப்பதால் இந்தக் கேள்வி. இது மற்றயவருக்கும் தெரியும், இந்த வேலையைச் செய்வதற்குத்தான் அவன் சம்பளம் பெறுகின்றான் என்று. இருந்தாலும் தனக்கு வேறு வேலை இருப்பதாலும் மீண்டும் மீண்டும் அலைய முடியாது என்பதாலும் கேட்பதை கொடுத்து தொலைத்து விடலாம். நமக்கு காரியம் ஆனால் சரி. இல்லையென்றால் ஏதாவது கேள்விகேட்டு இழுத்தடிப்பான் என்று நினைத்துக் கொண்டு, ஒன்றும் தெரியாதவரைப் போல நான் என்ன செய்ய வேண்டும் என்பார்.
சரியாக நம் வழிக்கு வந்து விட்டார் என கணக்கிட்டு எல்லோருக்கும் தரவேண்டும் மீதிதான் எனக்கு என்று கிம்பளம் வாங்காத ஆட்களையெல்லம் சொல்லி கணக்கிட்டு ஒரு தொகையைச் சொல்வார். அந்தத் தொகையைக் கேட்டதும் பகீர் என்றிருக்கும் கேட்டவருக்கு. இவ்வளவா! என்பார். அதற்கு இதே போன்ற ஒரு கேஸிற்கு முன்பு இவ்வளவு வாங்கினோம். நீங்கள் மிகவும் பழகி விட்டீர்கள். முன்பு பேசியதில் ஏதாவது உறவு ஒன்றைச் சொல்லி, அதனால் உங்களுக்காக நான் பெரும் தொகையை குறைத்துக் கொண்டுதான் சொல்லியுள்ளேன் என்று ஒரு அற்புதமான விளக்கமான பதிலை தருவார்.
வேறு வழியில்லாமல் சில்லரையாக உள்ள ஐம்பது அல்லது நூறைக் குறைத்துக் கொண்டு தருகின்றேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துவிட்டு கொஞ்சம் முன் பணமாக கொடுத்துவிடுவார். பின் இரண்டு நாட்கள் கழித்து மீதி பணத்தையும் கொடுத்து விட்டு அவனிடமிருந்து காரியம் முடிந்து பெறும்வரை நடப்பார். அவனும் இதே முடிந்துவிட்டது. அங்கு பைல் இருக்கின்றது. அவரிடம் கையெழுத்து வாங்க வெண்டும் என்று எதையாவதைச் சொல்லி இழுத்தடித்து மிகவும் கஷ்டப்பட்டு காரியத்தை முடிப்பது போல பாவலா செய்து விட்டு உங்களுக்காகத்தான் இவ்வளவு சிரமப்பட்டு சீக்கிரம் முடித்து தந்துள்ளேன் என்று கூறுவான். நபர் மிகவும் நம்பிவிட்டால் எனக்கு கொஞ்சம் சேர்த்து தாருங்கள் என்று மேலும் ஒரு சிறியதிற்கு ஆசைப்பட்டு பேசுவான். அவனின் அந்த ஆசை தீருவது இவரின் ஏமந்த நிலையைப் பெறுத்தது.
அப்பாடா ஒருவழியாய் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டார்கள் இதில் ஏது லஞ்சம் எனக் கேட்போர் கேட்கலாம். அவர்கள் இருவரும், கொடுக்க வேண்டியதைக் கொடுத்து பெறவேண்டியதை பெற்றுக் கொண்டேன் என்றும், பெறவேண்டியதைப் பெற்றுக்கொண்டு தரவேண்டியதை தந்துவிட்டேன் என்று சொல்வார்களா! எப்படிச் சொன்னல் என்ன! காரியம் சிக்கலின்றி இனிது முடிந்தது.
என்ன தருவாய்! என்ன வேண்டும் என்ற பேரத்தில் ஆரம்பித்து இன்ன இன்ன பிரச்சனைகள் யார் யாருக்கு பங்கு என அலசப்பட்டு நாளொரு தேதியும் ஒவ்வொரு செயலுக்கும் விலை நிர்ணயிக்கப் படுகின்றது. காரியங்கள் ஒழுங்கு முறையின்றி வரிசை ஒழுங்கு முறையின்றி மாறி நடத்தப்பட்டு விரைவாக முடிக்க அதைப் பெற்று முடித்து வைக்கப் படுகின்றது.
இந்த முறையில்லையேல் இந்தக் காரியம் நடந்திருக்க முடியாது. இவ்வளவு நாள் ஆனாலும் செலவானாலும் பரவாயிலை காரியம் நடந்தேறியதே என்ற மகிழ்வு ஓர்புறம். சம்பளம் பெற்றுக் கொண்டு முறைப்படி செய்ய வேண்டிய வேலையை முறையின்றி பெற வேண்டியதை பெற்று ஒழுங்கு முறை தவறி செய்து கொடுத்ததால் அடைந்த பணப்பயன் புற சந்தோஷங்களுக்கு பயன் படுகிறது என்கிற அளவிலா ஆனந்த சந்தோஷம் மறுபுறம்.
இவைகள் உண்மையான சந்தோஷங்களா. இது நீடித்து நிலைக்குமா! என்று தெளியும் இந்த சந்தோஷ மோகம்! யார் அறிவார்! இறைவனன்றி!---குருஸ்ரீபகோரா.
#####
ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#*#*#*#*#
முதன் முதல் வேலை!
ஒரு வேலைக்குச் செல்வதற்கு முன்பும், இந்த வேலைக்குப்பின் இருக்கும் நிலைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு.
வேலை கிடைப்பதற்கு ஒருவரது திறமை அல்லது படித்த படிப்போ அல்லது இராண்டுமோ காரணமாயிருக்கலாம். முதன் முதலில் வேலைக்குச் செல்லும்போது நரம்புகளில் ஓர் உணர்ச்சி, ஆர்வம் எதிர்பார்ப்பு எல்லாம் தோன்றி என்ன வென்று தெரியாத ஒருவித பயம் கலந்த நிலை உருவாகும்.
மரியாதையுடன் கூடிய பொறுப்பு, வேலை பளு ஆகியவை முன்பு இருந்த நிலையிலிருந்து விடுபட்டு உங்களை ஒரு மாற்று நிலைக்கு பொறுப்புள்ள புதிய சூழ்நிலைக்குத் தள்ளும்.
சின்ன சின்ன கஷ்டங்கள் தவிர்க்க முடியாவிட்டாலும் ஒரு வேலையை முதன் முதலில் ஆரம்பிக்க சிறிதளவாவது சிரமப்பட வேண்டியிருக்கும். அதற்காக உணர்ச்சி வசப்படாதீர்கள். உடனடியாக எங்கும் எதுவும் நடந்து விடாது. சாதாரணமாக முயற்சி செய்யுங்கள். ஒரு சிறந்த வழியைக் கண்டு தேர்ந்து எடுங்கள்.
உங்களைப் பற்றி நல்ல நினைவுகள் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் தோன்றும் வண்ணம் உங்கள் நடையுடை பாவணைகளை மாற்றிக் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் வந்து பழகுங்கள். ஆடம்பரமில்லா ஆடையுடன் வந்து எல்லோர் மனதையும் எல்லா நேரத்தில் கவரும் வண்ணம் புன்னகை முகத்துடன் பேசிப் பழகுங்கள். மேலே சொன்ன சிறந்த சரியான பழக்கங்களுடன் உங்களது கடந்தகால நினைவுகள், பழக்கங்கள் எல்லாம் மூட்டை கட்டிவைத்து விட்டு எதையும் திறம்பட செய்து முடிக்க வேண்டும் என்ற உயரிய நினைவுகளுடன் பணியைத் தொடருங்கள்.
சாதகமான எதிர்கால நோக்குதலும், சரியான வேலைத் தத்துவமும் இருக்கும் ஒருவரை யாரும் குறைகூற முடியாது. அவர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள வேலைதனை திறம்பட முடித்து நல்ல பெயர் எடுப்பர். அந்த நிர்வாகமும் அவர்களால் நல்ல பயன் பெறும். ஒருவரின் இந்த முறையானது முன்னேற்ற பாதைக்கு சரியான எந்த ஒரு நிர்பந்தத்திற்கும் கட்டுப் படாத வழியாக அமையும்.
நீங்களும் உங்கள் செயல்பாடுகளும் யாராவது ஒருவரால் கவனிக்கப் படலாம். உங்கள் கவனக் குறைவு நீங்கள் சார்ந்த நிர்வாகத்திற்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தலாம். எனவே எச்சரிக்கையுடன் செயல் படுங்கள். கடுமையாக உழையுங்கள். உங்கள் முழுத் திறமையையும் வெளிபடுத்தும் வண்ணம் செயல் படுங்கள்.
உங்களைச் சுற்றி ஓர் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதற்குமுன் நீங்கள் தவறு செய்தால் அது உங்களை மட்டும் பாதிக்கும். ஆனால் தற்போது நீங்கள் செய்யும் தவறுகள் உங்கள் நிறுவனத்தைப் பாதிக்கும். ஆகவே எதையும் நன்றாகக் கவனியுங்கள். குறைவாக பேசுங்கள். யோசித்து முடிவு எடுங்கள்.
நீங்கள் தற்போதுதான் உள்ளே சென்றிருக்கின்றீர்கள். அந்த நிர்வாகத்தின் நடை முறைகளை நன்றாக கேட்டு, கவனித்து, கற்றுக் கொள்ளவும். உடனே எல்லாவற்றையும் யாராலும் அறிந்து கொள்வது என்பது முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக சக தோழர்களை திரும்ப திரும்ப கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள். வழி முறைகளையும் உதவியையும் கேட்பதற்கு எந்த வித தயக்கமும் கொள்ள வேண்டாம்.
உங்களுக்கு நன்றாகப் புரியும் வரைக்கும் விளக்கமாகக் கேளுங்கள். ஒரு வேலையைத் தவறாகச் செய்துவிட்டு திரும்ப மீண்டும் அதே வேலையை செய்வதைவிட திரும்பவும் ஒருமுறைக்கு இருமுறை விளக்கம் கேட்பதில் தவறொன்றுமில்லை.
உங்களுக்குமேல் உள்ள மேற்பார்வையாளர் அல்லது நிர்வாகி ஆகியோருடன் கலந்து ஆலோசிப்பது உங்கள் வேலையை நீங்கள் நன்றாக அடித்தளம் வரை புரிந்து கொள்ள உதவும். நீங்கள் சாதனை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து உங்கள் அதிகாரியுடன் உங்கள் வேலை செயல் முறைகளை கலந்து ஆலோசிக்கவும். எல்லா விஷயங்களையும் சந்தேகங்களையும் பரிமாறிக் கொள்வது என்பது உங்களுக்கு எப்போதும் உதவி புரியும்.
உங்களுடன் பணி புரியும் சகதோழர்களுடன் அன்புடனும் நேசமாகவும் பழகுங்கள். உங்களின் பழகும் உறவுமுறை வேலையில் ஒரு புதிய அனுபவங்களை ஏற்படுத்தும். நல்ல நட்பு முறைகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கூட்டுமுயற்சி, ஒட்டுமொத்த செயல்பாடுகள், நன்றி கலந்த வேலை ஆகியவை உங்களை குறிப்பிட்ட காலங்களில் உயர்ந்த இடத்தில் உங்களைச் சேர்க்க வழிவகுக்கும்.
முதல் கோணல் முற்றும் கோணல் என்ற ஓர் அபிப்ராயம் மற்றவர்களுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வேலையில் வாழ்க்கைக்கு ஓர் புதிய திறவு கோல். திறம்பட செயல்பட்டு வெற்றிகரமாக முடித்தபின் ஓர் மகிழ்வு உங்களுக்குள் தோன்றி உங்கள் முகத்தை பிரகாசிக்கச் செய்யும். முதன் முதலில் தொடங்கிய வேலை வெற்றிகரமாக முடிந்ததால் அது நம்மாலும் முடியும் என்ற ஒரு தன்னம்பிக்கையை உங்களுக்குள் ஏற்படுத்தும். அது தொடர் சங்கிலியாகி உங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர் வெற்றியாகி வாழ்க்கை வளமுடன் இருக்க உதவும். எனவே அதுபோன்ற ஓர் உன்னத செயல் முறைக்கு உங்களைத் தயார் எய்து கொள்ளுங்கள்.
எதிர்ப்புகள் எத்திசையிலிருந்து வந்தாலும் அதை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு அதை முதன்மை படுத்திவிட்டு அதிலிருந்து விடுபட்டு சுமூகமாக தீர்வு காணுங்கள். எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் சரி செய்ய வெண்டும் என்ற உத்வேகத்துடன் செயலிறங்குங்கள். உங்கள்மேல் தன்னம்பிக்கை கொண்டு உங்கள் திறமைகளை நிரூபிக்க காலத்தை விரயம் செய்யாமல் உங்களது சக்தியை உபயோகித்து உங்கள் செயலை சிறப்பாக உங்களுக்கு சாதகமாக முடிக்க முயற்சி செய்யுங்கள்
உங்களிமிருந்து வெளிப்படும் செயல் எல்லாம் திறமையுடன் கூடியதாக இருக்கும் பட்சத்தில் உங்களது பணியில் உங்களை மிஞ்ச யாராலும் முடியாது. மேலும் மேலும் நல்ல உயர் நிலையை அடைவீர்!.. வாழ்த்துக்களுடன்! --குருஸ்ரீ பகோரா.
More...
ஓம்நமசிவய!
இயங்கிய ஞானக் குன்றே அரவக் கிண்கிணி ஆர்ப்பாய்
இலகக் கொம்பொன்றேந்தினோய் வஞ்சனை பலவும் தீர்ப்பாய்
அழகிய ஆனைக்கன்றே இளமத யாணை முகத்தாய்
இரகுபதி விக்கின விநாயகா அனந்தலோடாதியில் அடிதொழ அருளே
$$$$$
கடவுளை ஏன் வணங்க வேண்டும்!
நம்புவதற்காண காரணங்கள்!
புவியில் உலக உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நிறைய தேவைப்படுகின்றது. ஆனால் அவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டிருக்க வேண்டும். பூமி ஒரு நிரந்தர வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றது. இதை விடுத்து அதன் வேகத்தை கூட்டினாலும் குறைத்தாலும் புவியின் நிலையில் நிறைய மாற்றங்கள் எழும். இரவும் பகலும் நீண்டு அல்லது குறைந்து போய்விடும். மரம் செடி கொடிகள் எல்லாம் உஷ்ணத்தால் எரிந்தோ அல்லது குளிரால் உறைந்தோ போய்விடக்கூடும்.
சூரியனிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் புவியிருப்பதால் சூரியன் வெப்பத்தை அளவாக பூமிக்கு கொடுக்கின்றது. இப்போது புவிக்கு கிடைக்கும் உஷ்ணத்தில் பாதியளவிற்கு குறைந்தால் உயிர்கள் குளிரில் உறைந்துவிடும். இரண்டு மடங்கானால் எரிந்து சாம்பலாகிவிடும் புமியின் சாய்நிலையில் மாற்றம் கண்டால் கடல் நீராவி வேறு திசையில் பயணித்து கண்டங்களை பணிப் பிரதேசமாக மாற்றிவிடும்.. சந்திரனின் தூரம் இப்போது இருப்பதைவிட குறைந்தால் பிரமாண்ட அலை எழுச்சி ஏற்பட்டு அடிக்கடி கண்டங்கள் நீரில் மூழ்கி எழும். பூமியின் மேற்படலம் பருமன் குறைந்தால் உயிர்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காது. கடல் ஆழமானால் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் ஆக்ஸிஜனை கடல் இழுத்துக் கொள்ளும். ஆகாயம் மெலிந்து இருந்தால் விண்கற்கள் பூமியின்மீது மோதி தீ விபத்துக்களை உண்டாக்கும்
இந்த நிகழ்வுகள் நடக்காமல் அவை அவைகள் ஓர் நியதிக்குள் இயங்க வைக்கும் பெரியோனை அடியேன் நம்புகின்றேன்
உயிர் என்பது என்ன! அது எங்கே இருக்கின்றது. அதைக் கண்டு பிடித்தவர் யார்! அதற்கு எடையோ, பரிமாணமோ இருக்கின்றதா இல்லையே. ஆனால் அது ஐம்பூதங்களையும் வெல்லும் இயக்கும் சக்தி கொண்டுள்ளது. சிலை வடிக்கும் சிற்பியைப் போல் அனைத்து உயிரினங்களுக்கும் உடலை வெவ்வேறு வகையாகத் தருகின்றது. மரத்திற்கு மரம் இலையை விதவிதமாக வடிவமைக்கின்றது. மலர்களை வித வித வண்ணங்களாக தோன்றுவித்து பூமியை அழகு படுத்துகின்றது. பறவைகளுக்கு பலவித ஸ்வரங்களுடன் கூடிய குரலை அளித்து இன்னிசையை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு இனமும் அதன் பிரத்தியோக சைகை சமிக்ஞை ஒலிகளைப் பெற்றுள்ளது. உயிர்களுக்காக உற்பத்தியாகும் பொருள்களுக்கு சுவையை சேர்த்து விடுகின்றது. உயிர்கள் இயங்க ஆக்ஸிஜனை தாவரங்களிலிருந்து வெளிப்படுத்துகின்றது. இப்படி ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தனித் தன்மையுடன் விளங்கக் காரணம் கண்ணுக்குப் புலனாகாத நுண்ணிய செல்-அணு தன்னுள்ளே கொண்டுள்ள ஜெர்ம் என்பதே ஆகும். சகல ஜீவன்களுக்கும் உயிர் கொடுக்கும் இந்த செல் அணு எப்படி தோன்றியது. இயற்கை உயிரைப் படைக்க வில்லை. மலைகளும் மரம் செடி கொடிகளும் நீரும் கடலும் உயிரை தோற்றுவிக்க ஏதுவானதாயில்லாமல் இருக்க சிறந்த உயிரை புவியில் தோற்றுவித்த அந்த படைப்பாளி யார்!
பிராணிகளுக்கும் விலங்குகளுக்கும் ஒரு வித ஞானத்தை இயற்கைத் தூண்டுதலை புகட்டினவன் யார்.
சால்மன் என்ற ஒருவகை மீன் பலவருடங்கள் கடலில் வாழ்ந்துவிட்டு ஆற்றுக்கு திரும்பி வருகின்றது. கிளை நதி பிரியும் ஓர் இடந்தில் பிறந்த அது பல வருடங்களுக்குப்பின் அந்த இடத்திற்கு வந்து சேரும் ஞானம் அதற்கு கொடுத்தவன் யார்.
ஈல் என்ற நீர் பிராணிகள் வளர்ந்து முதிர்ச்சியடைந்ததும் கடலுக்குச் சென்று முட்டையிட்டு தன் இனம் வளர குஞ்சு பொறித்து இனவிருத்தி செய்து இறந்துவிடும். நீரைத் தவிர வேறொன்றும் அறியாத குஞ்சுகள் புறப்பட்டு பயணம் செய்து தன் பெற்றோர் வசித்த நீர் நிலைகளுக்கு வந்து சேரும் ஞானத்தை அளித்தவன் யார்! அவைகளுக்கு வழிகாட்டி யார்!
ஒரு வகை குளவிகள் முட்டையிட்டு அந்த இடத்தில் ஓர் வெட்டுக்கிளியை மூர்ச்சையடையும் அளவிற்கு கொட்டி வைத்துவிடும். வெட்டுக்கிளி சாகாது. ஆனால் மயக்க நிலையிலேயே இருக்கும். குளவியின் குஞ்சுகள் செத்த உயிரின் மாமிசம் ஒத்துக்கொள்ளாது என்பதால் உயிரோடு அவைகளுக்கு உண்ண மயக்க நிலையில் உள்ள வெட்டுக்கிளி. இந்த ஏற்பாடுகளை செய்த குளவி மீண்டும் தன் குஞ்சுகளைப் பார்க்க வருவதேயில்லை. எங்கோ சென்று அது இறந்து விடுகின்றது. இந்த ஞான அறிவை குளவிக்கு கொடுத்தவன் யார்!
கூட்டமாக பறக்கும் பறவைகள் அம்பின் முனைபோன்ற அமைப்பில் பறப்பது தான் மற்றொன்றுடன் மோதிவிடக்கூடாது என்பதற்காக! குருவிகள் கூடு கட்டியிருப்பதை நேர்த்தியான அந்தபின்னலை அவைகளுக்குச் சொல்லிக் கொடுத்தவர் யார்!
பிராணிகளுக்கு இருக்கும் இயற்கைத் தூண்டுதலைவிட மேலான திறம் கொண்ட சக்தி ஒன்று மனிதனுக்கு இருக்கிறது என்றால் அது காரண காரியங்களை ஆய்வு செய்யும் பகுத்தறிவாகும். வேறு எந்த பிராணிக்கும் இல்லாத இது எதனால்! இது எப்படி! என சிந்திக்கும் ஆற்றல் அளித்த அந்த பரம ஞான சக்தி யார்!
உயிர்களுக்கு ஆதாரனமானது ஜீன். சொல்லால் அளவிடமுடியாத அளவில் சிறியவையான இந்த ஜீன்கள் உயிர்களின் தனித் தன்மையை நிர்ணயிப்பது எப்படி! இதை இயக்கும் அந்த வல்லவன் யார்! உலக உயிர்களின் அனைத்து ஜீன்களையும் ஒன்று சேர்த்தால் ஓர் கட்டைவிரல் அளவிற்குத்தான் இருக்கும் என்கிறது விஞ்ஞானம். இவ்வளவு சிறிய ஜீன்களும் அதன் துணைகளான குரோமஸோம் செல்களும் ஒவ்வோர் உயிர் மூலத்துணுக்கில் இருந்து கொண்டு அந்தந்த உயிர்களின் அதாவது அனைத்து மனித, விலங்கு, பறவை, தாவரங்களின் குணாம்சங்களுக்கு மூல திறவுகோளாய் செயல்பட வைக்கும் அந்த அற்புதன் யார்.
இயற்கையில் சிக்கனத்தை பார்க்க முடியுமா! முடியும். நிர்வாக சிக்கனம் காணமுடியும். அவற்றை உருவாக்கியவன் யார்!
வேலியாக ஒரு வகைக் கள்ளிச் செடியை நட்டார்கள். இந்த கள்ளியை அழிக்கக்கூடிய பூச்சி வகைகளே அவ்விடத்தில் இல்லாததால் கள்ளி வளர்ந்து பரவி விட்டது. மக்கள் அப்பகுதியில் வாழமுடியா நிலைக்கு கள்ளி வளர்ந்தது. ஆராய்ச்சியாளர்கள் முயன்று அந்தக் கள்ளிச் செடிக்கு ஒரு மாற்றாக ஒரு பூச்சியைக் கண்டு பிடித்தனர். நாளடைவில் அந்தக் கள்ளியினம் அழிந்தது, கள்ளி இல்லாததால் அந்த பூச்சினமும் அழிந்தது. இது போன்ற தடைகளும் அதை சமன் செய்ய மாற்றுகளும் புவி எங்கும் நிறைந்துள்ளன.
அதி வேகமாக இனவிருத்தி செய்யும் பூச்சிகள் பெரிய அளவிற்கு வளர்வதில்லை. அவற்றிற்கு மனிதனைப் போல சுவாசப்பைகள் கிடையாது. குழாய் வழியே மூச்சை விடும். அவை வளரும் அளவிற்கு குழாய்கள் வளர்வதில்லை. இந்த வரம்பு அவற்றின் பெரிய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடுகின்றது. இல்லாவிடின் யானையைப் போல் ஒரு குளவி வளர்ந்தால் என்ன ஆவது! இந்த வரைமுறையை நிர்ணயித்த வலியவன் யார்!
மனிதனுக்குத்தான் கற்பனை வளம் உண்டு. இந்த கற்பனைச் சக்தியால் மனித உயிர்கள் கண்ணுக்குப் புலனாகாத பொருள்களுக்கெல்லாம் சான்று தேடி அந்த எல்லையற்ற காட்சியை காண்கின்றன. அதே சக்தி பக்குவமடைய அடைய பிரபஞ்சப் பொருள்கள் எல்லாவற்றிலும் ஓர் திட்டத்தையும் நோக்கத்தையும் காண்கின்றான். அப்போது ஓர் ஆன்மீக உண்மை அவனுக்கு புலப்படுகின்றது.
உயிர்கள் உண்ட உணவு எப்படி ஜீரணமாகின்றது. உணவிலிருந்து சக்திகள் எப்படி உடல் இயங்க உடலுக்கு கிடைக்கின்றது. மழை காற்று வெய்யில் குளிர் இதெல்லாம் எப்படி நடக்கின்றது என்பது கண்ணுக்குத் தெரியா உண்மைகள் என்றாலும் கண்ணுக்குத் தெரிந்த உடலே அந்த உயிரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை. நடந்த .நடக்கின்ற நடக்கப்போகின்ற எல்லாவற்றையும் கண்காணித்து அவ்வப்போது அந்தந்த சூழ்நிலைக்கேற்ப இயக்கங்களைச் செய்யும் அந்த அற்புத சக்தி எது!
மாகா சூட்சுமமான தந்திரமும் சிருஷ்டித் திறன் வாய்ந்த பரம் ஞானம் பெற்ற ஒன்றிலிருந்தே எல்லாம் தோன்றியிருக்க வேண்டும் இந்த அதிசய சிருஷ்டி சித்தாந்தத்தை வேறு எந்த விதமாக நினைக்க முடியும்.! அந்த சித்தாந்தபதி யார்!
பிரபஞ்சத்தை ஓர் நியதிக்குள் இயங்க வைக்கும் பெரியோனை, சித்தாந்தபதியை, அவற்றிற்கு வரைமுறையை நிர்ணயித்த வலியவனை, சிறந்த உயிரை புவியில் தோற்றுவித்த அந்த படைப்பாளியை. உயிர்களின் குணாம்சங்களுக்கு மூல திறவுகோளாய் செயல்பட வைக்கும் அந்த அற்புதனை, நிர்வாக சிக்கனத்தை உருவாக்கியவனை, உயிர்களுக்கு ஒரு வித ஞானத்தை இயற்கைத் தூண்டுதலை புகட்டினவனை, சிந்திக்கும் ஆற்றல் அளித்த அந்த பரம ஞான சக்தியான அவனை வணங்கி வழிபடுவதில் என்ன தவறு!
காரணங்களைச் சொல்லிவிட்டோம்! நம்புங்கள்! வழிபடுங்கள் இறைவனை-குருஸ்ரீ பகோரா
&&&&&
ஓம்நமசிவய!
ஓம் நாற்றிசை போற்றும் தலைவா போற்றி!
ஓம் நானற்றவிடமே நிற்பாய் போற்றி!
ஓம் அல்லல் களையும் அருளே போற்றி!
ஓம் எல்லாம் வல்ல இறைவா போற்றி!
&&&&&
கட்டுரைகள்!
கட்டுரை என்றால் ஒரு தலைப்பில் அந்த தலைப்பின் சிறப்புகள், அதைப் பற்றிய விளக்கங்களை உதாரணங்களுடன் மேற்கோள்களைக் காட்டி அந்த தலைப்பை படிப்பவர்கள் அந்த உரையை புரிந்துகொள்ளுமாறு அமைத்தல் கட்டுரை ஆகும். மேற்கோள்கள் அந்த தலைப்பை ஒட்டியவையாக இருக்க வேண்டும். இயற்கையாக நடந்த நிகழ்வுகளாகவும் இருக்கலாம். அதில் எடுத்துச் சொல்லும் வாதத்தின் திறமை தெரிய வேண்டும். புரியும் படியாகவும் அமைய வேண்டும். கட்டுரை என்றால் எடுத்த தலைப்பிற்கு ஏற்ற சொற்களாக இருத்தல் சிறப்பு- இங்கு எடுத்தாளப்பட்டிருக்கும் தலைப்புகள் ஆன்மீகம் மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்டவை. குருஸ்ரீ
அகோரிகள்!
அன்பளிப்பு!
ஆக்ரமிப்பு!
ஆனந்தபூக்கள்
இயற்கையின்நிகழ்வு
ஒதுக்கீடு
ஓம் (எ) பிராணவம்
கடவுள் உண்டா! எங்கே!
கடவுளை ஏன் வணங்க வேண்டும்!
கருவறை அதிசயம்!
சதுரகிரி அதிசயம்!
சமுதாய சீர்திருத்தம்!
சாலைகள்!
நிழல்!
நீதியின்குரல்!
நீயே நவரத்தினம்!
பெரிய கோவில்-அதிசயம்!
முதன் முதல் வேலை!
வேதம்!
$$$$$
ஓம்நமசிவய!
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
$$$$$
கடவுள் உண்டா! எங்கே!
கடவுள் உண்டா! எங்கே! பார்க்க முடியவில்லையே காட்டு பார்க்கலாம்! என்று வாதம் செய்வோரை என்ன வென்று சொல்வது. இந்த வாதம் அவர்களது அறியாமையை சொல்கின்றதாகும். ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்று தொல்காப்பியம் பகர்கின்றது. உலகம் அறிவு நிறைந்த ஆன்றோரைக் குறிப்பதாகும். அந்த ஆன்றோர்கள் உண்டு உண்டு என்பதை இல்லை என சொல்பவனை என்னவென்று அழைப்பது! மனநிலை சரியில்லாதவன் என ஒதுக்கவேண்டும் என்று வள்ளுவம் கூருகின்றது.
கடவுள்-கடவுகின்றவன், கடவுதல்-செலுத்துதல். உடம்பை உயிர் செலுத்துகின்றது. உயிரை கடவுள் செலுத்துகின்றார். உடம்பிற்குள்ளே உயிர். உயிருக்குள்ளே கடவுள், உயிருக்கு உயிராய் உள் நின்று உயிர்களைச் செலுத்துபவன் கடவுள். ’நீராயுருக்கி என் ஆருயிரய் நின்றானே’ என்றார் மாணிக்கவாசகர்.
ஒரு கார் ஓட்டுபவனின்றி எப்படிக் கார்த் தானே ஓடும். உலகம் ஓர் நியதிக்குள் வட்டமிட்டு இயங்குகின்றது. காலம் தவறாது சூரியனும் சந்திரனும் தோன்றி தோன்றி மறைகின்றது. நட்சத்திரங்கள் வானில் உலவுகின்றன. மழை பொழிந்து அருவியாகி நீர்வீழ்ச்சியாகி ஆறாகி கடலில் சங்கமிக்கின்றது. மரம் செடி கொடிகள் இலையுதிர்த்து மீண்டும் மீண்டும் தளிர்த்து பூத்துக் குலுங்குகின்றன. எல்லா உயிர்களும் காற்றை சுவாசித்து இயங்குகின்றன. உலகில் உலவும் ஜீவராசிகளின் உயிர் யார் கண்ணுக்காவது தெரிகின்றதா. எந்தவித குழப்பமும் இன்றி இயற்கை தன் விதிகளுக்கேற்ப செயல்களைச் செய்து கொண்டே இருக்கின்றது. இந்த விதிகளை நியமங்களை யார் உருவாக்கிக் கொடுதார்கள்.
ஓர் இயந்திரத்தை தயரித்தவன் அது இயங்கும் விதத்தை நிர்ணயிக்கின்றான். ஆனால் அது பழுதடைய வாய்புள்ளதாக இருக்கின்றது. ஒரு சின்ன இயந்திரத்தின் நிலை இப்படி என்றால் இவ்வளவு பெரிய அண்டங்களை உடைய பிரபஞ்சத்திற்கு நியமங்கள் செய்து கொடுத்தவன் மிகப் பெரிய சமர்த்தியசாலியாகவும். தேவர்களுக்குத் தேவனாகவும். எல்லையில்லா சர்வ வல்லமை கொண்டவனாகத்தான் இருக்க முடியும். அவன் எல்லா உயிர்க்கும் தெய்வம். யார் கண்ணுக்கும் தெரிய வில்லையாயினும் உலக உயிர்கள் இயக்கத்திற்கு தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருப்பவன். ஒப்பில்லா உயர்வான அவனை கடவுள் எனச் சொல்வதில் என்ன தவறு.
பிரமாண்டமான பிரபஞ்சத்தின் இயக்கத்தை நடத்துபவன் யார்! அந்த ஒருவன் அற்புதங்கள் செய்யும் கடவுளன்றி வேறு யாராக இருக்க முடியும். இந்த சாதாரண உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியாத ஒருவன் எப்படி சுயநினைவுகளுடன் இருக்கின்றான் எனச் சொல்வது!
தியானம்-தூக்கம்!
பக்திமான் ஒருவர் அரசமரத்தடியில் தியானத்தில் இருந்தார். அப்பக்கம் வந்த ஒரு படித்த இளைஞன் பெரியவரே ஏன் உட்கார்ந்து கொண்டு தூங்குகின்றீர். அரசமரத்து காற்றுதான் நன்கு வீசுகின்றதே நன்றாக நீட்டி படுத்து உறங்கலாம் அல்லவா என்றான். தம்பி நான் உறங்கவில்லை. கடவுளை தியானித்துக் கொண்டிருக்கின்றேன் என்றார். கடவுளை நீர் பார்த்திருக்கின்றீரா, கையால் தீண்டியிருக்கின்றீரா, அவர் குரலைக் காதால் கேட்டுள்ளீரா இப்படி எதற்கும் இல்லை என்று சொல்லும் அறிவற்ற மூட நம்பிக்கையுள்ளவரே! இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு அரிய நேரத்தை வீணடிக்கின்றீரே என்றான்.
கறுப்பா! சிவப்பா!
அப்போது அவன் கையில் ஒரு பாட்டில் இருக்கக் கண்டவர் தம்பி உன் கையில் இருப்பது என்ன என்றார்! தேன் என்றான். அது இனிக்குமா! கசக்குமா1 என்றார். கோபங்கொண்ட அவன் உமக்கு தேன் தித்திக்கும் என்பது கூடதெரியாதா என்றான். தம்பி அது இருக்கட்டும் நீ தித்திக்கும் எனக் கூறியது கறுப்பா சிவப்பா என்றார். அவன் திகைத்தான். தித்திப்பு என்பதை என்ன நிறமென்று சொல்வது. குழம்பினான். தேனின் இனிமையை கண்டவனுக்குத் தெரியாது. அதை உண்டவனுக்குத்தான் தெரியும் என்றான்.
பௌதிகப் பொருளான தேனின் இனிமையை உண்டவனுக்குத்தான் தெரியும் என்று புரிந்த நீ ஞானப் பொருளை அனுபவத்தால்தான் உணரமுடியும் என்பதை நீ புரிந்து கொள்ள வில்லையே என்று அன்புடன் கூறினார். இதையே திருமூலர்,
தேனுக்குள் இன்பம் கறுப்போ! சிவப்போ!
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருத்தாற்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே! என்றார்.
இதைக் கேட்ட இளைஞன் எனக்கு பசிக்கின்றது சாப்பிட்டுவிட்டு வந்து உங்களுடன் பேசுகின்றேன் என்றான். பெரியவர் தம்பி பசி என்று சொன்னாயே அதைக் கண்ணால் கண்டிருக்கின்றாயா! காதால் கேட்டிருக்கின்றாயா! அல்லது அதைத் தொட்டுத்தான் உணர்ந்திருக்கின்றாயா! இப்படி ஏதுமில்லை என்றபோது நீ பசி பசி என்று சொல்லி எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றாய் என்று ஏன் சொல்லக் கூடாது. இப்போது புரிகின்றதா தம்பி. பசி என்பது ஓர் அனுபவப் பொருள் அதை உணரத்தான் முடியும். அதுபோன்றே இறையையும் அவரது செயலையும் அனுபவத்தால்தான் உணரமுடியும் என்றார். அடியேன் தவம் செய்து அதை அந்த அநுபவப் பொருளை உணர முயல்கின்றேன் என்றார்.
சிவம் இல்லையேல் சவம்!
இளைஞனுக்கு பெரியவர் கூறுவதில் ஏதோ இருப்பதாக நினைத்தான் ஆனால் அதன் உண்மை புரியவில்லை. ஐயா, என்னைப் பொருத்தவரையில் நீங்கள் சொல்லும் கடவுளைக் கண்ணால் கண்டால்தான் ஒப்புக் கொள்வேன் என்றான். அப்போது அடியவர் தம்பி, 64 அடி நீளமுள்ள இரு பக்க சுவரில் பக்கத்திற்கு நான்கு ஜன்னல்கள். அதன் மேல் கூரை வேய்ந்தால் அதனைக் கூடமென்றோ அல்லது உபயோகத்திற்கு ஏற்றவாறு பெயர் பெரும். அப்படி மேற்கூரை இல்லாமலிருந்தால் அது குட்டிச் சுவர் எனப்படும். 64 அடி நீளமுள்ள ஓர் இடம் சிறுமை பெற்று குட்டிச் சுவர் என பழியடைந்தது. இதனால் அந்த இடத்திற்கு சுவர்களால் பெறுமை இல்லை. மேயே வேயப்பட்ட கூரையினால்தான் பெறுமை என்பது புரிகின்றதா என்றார்,
சிவம் என்றால் பெருமை அடையும் இச்சொல் சிவத்திலுள்ள சி-ன் கொம்பு எழுத்தை அழித்துவிட்டுப் பார்த்தால் சவம் என்றாகும். ஒரு கோடே இங்கே பெருமையாகின்றது. அக்கோடில்லாமல் அச்சொல் சவமாகி சிறுமை அடைகின்றது. உயிர்களின் உடம்பில் சிவம் இருந்தால் அது உடல் ஆன்மா எல்லாம். அஃதில்லையெனில் அது உயிரற்ற ஆன்மா இல்லாத சவம்.
குருவருள்! திருவருள்!
இளைஞனே! நீ படித்தவன். அறிவாளி. நீ உன் உடலை முழுமையாகப் பார்த்திருக்கின்றாயா என்றார். பார்த்திருக்கின்றேன் என்றான். தம்பி நீ சொல்வது தவறு! உன் கண்ணால் உன்னை முழுவதும் பார்க்க முடியாது. நீ உன் முகத்தைப் பார்த்திருக்கின்றாயா! உன் முதுகைப் பார்த்திருக்கின்றாயா! உன் ஸ்தூல உடலின் உருப்புக்களைப் பார்த்திருக்கின்றாயா. இரத்த நாளங்களைப் பார்த்திருக்கின்றாயா! இல்லையே! அப்படியென்றால் நீ சொன்னது சரியில்லைதானே! என்றார். குழம்பி நின்ற இளைஞனை நோக்கிய அடியவர், தம்பி! நீ உன் உருவை முழுவதும் பார்க்க முன்னும் பின்னும் இரு நிலைக் கண்ணாடிகள் தேவை அப்போதுதான் உன் உருவத்தை முழுமையாக கண்ணாடிமூலம் நீ பார்த்துக் களிக்கலாம் என்றார் அன்புடன். இதை ஒப்புக் கொண்டான் இளைஞன்.
உடலைப் பார்க்க இரு கண்ணாடிகளின் உதவி தேவை போன்றே கடவுளைக் காண வேதாகமத்தில் விளைந்த குருவருள் மற்றும் திருவருள் என்ற இரண்டும் வேண்டும். இவைகள் கடைகளில் கிடைப்பதன்று. இறைவனின் திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதைக் குருவருள் கொண்டுதான் அடைய முயல வேண்டும். பருத்தி பஞ்சு அக்னியில் எரிவது. அதை அக்னி நட்சத்திர வெய்யிலில் வைத்தால் தீ பற்றாது. அங்கு தீ உண்டாக சூரிய ஒளியைக் குவிக்கும் சக்தியாக ஒரு கண்ணாடி தேவைப்படும். அதுபோன்றே இறையருளை குவித்து உயிர்களுக்கு வழங்க ஒரு குரு கண்டிப்பாகத் தேவை. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் இறைவன் எனப் பெயர் பெற்றது. அந்தக் கடவுளை காணும் வழியைக் காண்பதுதான் அறிவுடமை. அதை விடுத்து நான் என்ற அகந்தையில் முரட்டுப் பிடிவாதமாகப் பேசுவது நீ கற்ற கல்விக்கு உகந்தது அல்ல. அது அறிவுடைமயும் ஆகாதது.
மெய்ப்பொருள் காண்பதறிவு!
எப்பொருளை எப்படி அறிய வேண்டுமோ அப்படித்தான் அறிய வேண்டும். நறுமணத்தை நாசியினாலும் இனிய ஒலியை செவியாலும் உணர்தல் வேண்டும். அதை விடுத்து மணத்தை செவியாலும் ஒலியை நாசியாலும் அறிய முற்படுதல் முட்டாள் தனத்தின் எல்லை! சுவையை-நாவினாலும், ஒளியை-கண்ணாலும், ஊறு என்பதை உடலாலும், ஓசை என்பதை செவியாலும், நாற்றம் என்பதை நாசியாலும் உணர்தலே ஐம்புலன்களின் இயற்கை நியதி. பிரபஞ்சத்தின் அதிபதி கடவுள் என்றாலும் இந்த ஐம்புலன்களால் அவரை அறிய முற்படுவது அறிவன்று.
மனத்தாலும், நூலறிவாலும் ஆண்டவனை அறிய முடியாது. அனுபவத்தால் உண்டான மெய்யுணர்வு என்ற அறிவாலேயே அறியப்படுதல் சிறப்பு. இதைத்தான் ‘வாசித்து காணாது’ ‘அறிவாலறிந்துன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவேனே” என்றார் அருணகிரியார்.
தொலைவில் இருக்கும் பொருள் கண்ணுக்குத் தெரியாது. தொட்டபெட்டா சிகரத்தின் மேலிருந்து பார்த்தால் மேட்டுப்பாளையம் தெரியும். கோயமுத்தூர் தெரியாது. அதற்காக கோயமுத்தூர் தெரியவில்லை. கோயமுத்தூர் என்று ஒன்று இல்லை என்று சொல்லிவிட முடியுமா! ஒரு பொருளை கண்ணுக்கருகில் வைத்தாலும் தெரியாது. தொலைவில் இருந்தாலும் தெரியாது. திரைக்கு அப்பால் உள்ளதும் தெரியாது. பெரிய பொருளின் அருகில் சிறிய பொருள் தெரியாது. அதிக ஒளியில் சிறிய ஒளி வெளிச்சம் பெறாது. பாலில் கரைந்த சக்கரையும், நீரில் கலந்த உப்பும் மறைந்துவிடும். சுவைத்தால் தான் உணரமுடியும். மிக நுட்பமான பொருள்கள் புலப்படாது, உயிர்களிடமுள்ள அன்பும் அறிவும் செயல்படும் போதுமட்டுமே உணரமுடியும்.
இவைகளைப் போன்றே இறைவன் மெய்யுணர்வுக்கு மட்டுமே புலனாவார். அப்படி உணர்ந்தவர்கள் இந்த உணர்வு தன்மையால் சொல்லமுடியா நிலையில் இருப்பர். ‘உலகெலாமுணர்ந் தோதற் கரியவன்’ என்கிறார் சேக்கிழார் பெருமான். ’முகத்தில் கண்கொண்டு காணும் மூடர்காள் அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்’, ஒருவன் அறிவாளி என்றால் அவர் முன்னோர்களும் அறிவாளியாகத்தான் இருந்திருப்பர். ஒரு மூடர் பரம்பரையில் அறிவாளி ஜெனிக்க முடியாது. நன் முன்னோர்கள் பேரறிவு கொண்டவர்கள். அவர்கள் சொன்னதை நம்ப வேண்டும். ’கண்டேன் அவர் திருபாதம், கண்டறியாதன கண்டேன்’ என்றார் அப்பர் சுவாமிகள்.
இந்த விளக்கங்களைக் கேட்ட இளைஞன், ஐயனே நான் இதுகாறும் இறையறிவை பெற்றேனில்லை. என் அறியாமையால் தங்களிடம் பலவாறாகப் பேசிவிட்டேன். என்னை மன்னித்து என் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அருளுமாறு வேண்டினான்.
கடவுள் அறிவு வடிவமானவர் என்றால் அவரை கோவில்களில் கல்லாலும் உலோகங்களாலும் ஆன சிலைகளாக வைத்து வணங்குவது ஏன்! கல்லும் செம்பும் கடவுளாகுமா! பலர் வீடின்றி தவிக்க ஊரில் பாதி இடத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது இது சரியா! சிலைகளுக்கு விலை மதிக்க முடியாத அணிகலன்கள் எதற்கு! ஆடம்பரத் தேர்த் திருவிழாக்கள் எதற்கு!
பரந்த நோக்கம்!
தம்பி, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் யாதிரிகர்களுக்கு உபயோகம் ஆகுமிடத்தை வீட்டு மனைகளாகப் பிரித்துக் கொடுத்தால் ஒரு சிலரே அதன் உரிமையாளர் ஆகி விடுவர். தினமும் ஆயிரக்கணக்காணவர்களுக்கு பயன் படுதல் எப்படி, ஒரு சிலருக்குச் சொந்தம் என்பது எப்படி! இதில் எது சிறந்தது நீயே முடிவு கொள்! ஒரு சிலருக்கு என்பது பறந்த நோக்கமாகாது என்பதாலேயே அக்கலத்தில் மன்னர்கள் பலரும் பயனடைய வேண்டும் என்ற பொது நோக்கில் விரிவாக ஆலயங்களைக் கட்டியுள்ளனர்.
மன்னர்களும் செல்வந்தர்களும் தனவான்களும் தங்களிடமிருந்த ஆடை ஆபரணங்களை தங்கள் உறவுக்கு அணிவித்து அழகு பார்த்தனர். அவ்வாறு அவர்கள் பார்த்த அழகை மற்றவர்கள் பார்ப்பது முறையன்று. ஆனால் அழகை எல்லோரும் ரசித்து பயனடைய வேண்டும் என்பதால் மன்னர்கள் தங்களிடமிருந்த விலையுயர்ந்த ஆடை அணிகலன்களை இறை உருவங்களுக்கு சார்த்தி அனைத்து உயிர்களும் அதைக் கண்டு களித்து ஆனந்தப்பட விரும்பி விலைமதிக்கமுடியாத அணிகலன்களை அர்ப்பணித்தார்கள்.
படித்தவன் எழுத்து என்பதை படிக்காதவன் கோடு என்பான். எழுத்தை உச்சரித்து அதன் ஒலியை கேட்கின்றான் படித்தவன். கல்லாலும் செம்பாலும் செய்த இறை உருவங்களின் மூலம் அடியார்களும், தவசிகளும் ஞானியர்களும் பக்திமான்களும் பரம்பொருளான இறைவனைக் காண்கின்றார்கள் மற்றவர்கள் கல்லாதவன் கோடு என்பதுபோல் அவற்றைக் கற்சிலை, உலோகச் சிலை என்பர்..
ஒரு விழா என்றால் அதில் பல்வகைத் தொழிலாளர்களின் உழைப்பு இருக்கும் அதற்கு கூலியாக அவர்களுக்கு கிடைக்கும் பணம் அவர்கள் இல்லறத்திற்கு சிறிதளவேனும் பயன்படும். அந்த ஊர் மக்களும் சுற்றுப்புற ஊர் மக்களும் அந்த திருவிழாவில் கலந்துகொண்டு களித்து இன்பமடைகின்றனர். முன்னோர்கள் அன்பு கொண்டு இதுபோன்ற திருவிழாக்களை ஏற்படுத்தியுள்ளது ஒரு பயனுள்ள திட்டமே.
நம்பித்தான் ஆகவேண்டும்!
ஒருவன் மாலை நேரத்தில் ஆற்றங்கரையில் ஒய்விற்காக நடந்து சென்று இயற்கையை ரசித்தான். ஆற்றில் நீரில்லை. வரண்டிருந்த்து. அடுத்த நாளும் இயற்கையை ரசிக்கச் சென்றவன் ஆச்சரியப்பட்டான். ஆற்றில் நீர் நொப்பும் நுரையுமாக ஓடிக்கொண்டிருந்தது. மேற்கே மழை. அதனால் ஆற்றில் வெள்ளம் என அவனைக் கடந்தசென்ற ஒருவர் சொல்லிச் சென்றார், இவன் கண்டது வெள்ளம். காணாதது மழை. நம்பித்தான் ஆக வேண்டும். கண்ட வெள்ளத்தைக் கொண்டு காணாத மழையை நம்ப வேண்டும்.. உலகில் காணும் இயற்கையின் செயல்களிலிருந்து நாம் இதுகாறும் காணத இறையை அளவிடத்தான் வேண்டும்.
காலத்தில் இலைகள் உதிர்ந்து மீண்டும் தளிர்கின்றன. பூ பூத்துக் காய்கின்றன. பனி கொட்டுகின்றது. குளிர் வந்து போகின்றது. வெய்யில் வெம்மை காட்டுகின்றது. மழை பெய்கின்றது. தென்றல் வீசுகின்றது. இயற்கையின் இந்த விலையாட்டுகளுக்குச் சொந்தக்காரன் யார். யார் இந்த விளையாட்டை புவியில் நிகழ்த்துபவன். காணும் ஒன்றிலிருந்து ஓர் அளவைக் கொண்டு காண ஒன்றை நிர்ணயித்து உணர்ந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பௌர்ணமி நாளில் ஒருவன் கோவிலுக்குப் போகின்றான். ஒருவன் ஒருவனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றான். ஒருவன் தன் வாழ்வில் முன்னேற வழி என்ன என்று யோசனையிலிருக்கின்றான். இது போன்ற பல்லாயிரக்கணக்காண நிகழ்வுகள் செயல்கள் அந்த பௌர்ணமி நாளில் நடந்து கொண்டிருப்பதால் அந்த செயல்களின் நன்மை தீமைகளுக்கு அந்த நாள் எப்படி பொறுப்பாகும். ஒவ்வொரு நிகழ் செயலும் அந்தந்த உயிர்களின் ஆன்மாக்களையே சாரும் என்பதை உணர்வாய்! என ஆசீர்வதித்தார்.!
வாழ்க்கையில் உயிர்கள் நம்பிக்கையுடன் பயணம் செய்ய வேண்டும். அந்த ஜீவ யாத்திரைக்கு ஆன்றோர்கள் எழுதிய அறிவு நூல்கள், உயிர்களுக்கு வழி காட்டுகின்றன.. எங்குமாய், எல்லாமுமாய் அறிவு வடிவாய் கருணையுடன் விளங்கும் இறைவனை சித்தித்து ஆன்ம லாபம் பெற்று அனைத்து உயிர்களும் ஆனந்தத்துடன் வாழ்வாங்கு வாழ ஆசீர்வாதிக்கும் அடியேன்.-குருஸ்ரீ பகோரா
$$$$$
ஓம்நமசிவய!
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
&&&&&
சதுரகிரி அதிசயம்!
நோய் தீர்க்கும் மலை:
சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
சதுரகிரி தல வரலாறு :
சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.
சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.
தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை சஞ்சீவி மலை' என்பர்.
சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்
பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பணசாமி' கோயில் உள்ளது.
சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
இருப்பிடம்
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம். அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள். திறக்கும் நேரம்: காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.
மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.
சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.
கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.
இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
இரட்டை லிங்கம்
ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.
"சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும், 'என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
பிலாவடி கருப்பு
வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.
வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பண்ணசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.
பெரிய மகாலிங்கம்
நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
தவசிப்பாறை
மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது. தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக்கிரககல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.
சுந்தரமூர்த்தி
கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.
பார்வதி பூஜித்த லிங்கம்
சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.
லிங்க வடிவ அம்பிகை
சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.
சந்திர தீர்த்தம்
சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.
கெளண்டின்னிய தீர்த்தம்.
சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம். கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.
சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.
இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும். இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.
’திருமஞ்சனப் பொய்கை'
இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.
பிரம்மதீர்த்தம்'
காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது.
இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.
பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.
அபூர்வ மூலிகைகள் :
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும். பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
உதகநீர்
தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்களின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும். சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில்
சுணங்க விருட்சம்
என்னும் மரம் உள்ளது.இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
'ஏர் அழிஞ்ச மரம்
'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.
கனையெருமை விருட்சம்
சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.
மதி மயக்கி வனம்.
எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.
இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும். உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருக்கின்றனர். சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது.
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணித்தால் தாணிப்பாறை என்ற மலையடிவாரப்பகுதி உள்ளது. இதுதான் சதுரகிரியின் நுழைவாசல். இங்கிருந்து 5 மைல்கள் தூரம் அடர்ந்த காட்டுப்பாதையில்(சாலை வசதி கிடையாது. பாதை கரடு முரடானது) பயணித்தால் சதுரகிரியை அடையலாம்.
சதுரகிரி உச்சிக்கு செல்ல மூன்று பாதைகள் இருந்தாலும் தாணிப்பாறை பாதையே பக்தர்களுக்கு உகந்தது. எனினும் இவ்வழியே பயணப்படுவோர் பருவகாலச் சூழ்நிலையை அறிந்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது. மலைப்பாதையின் குறுக்கே சில ஆறுகளில் மழைக் காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே மிகவும் கவனமாக செல்ல வேண்டும். கோடை காலம் தவிர மற்ற சூழ்நிலைகளில் மலைப்பகுதியில் குடிநீருக்கு அதிகம் சிரமம் இருக்காது எனினும் குடிநீர் கொண்டு செல்வது நல்லது. நான்கு அல்லது ஐந்து மலைகளை கடந்தே சதுரகிரியை அடையமுடியும். எனவே பாதையில் ஏற்ற இறக்கம் இருக்கும். நாவல் மரம், பலா மரம், நெல்லி மரம், ஒரு யானையே ஒளிந்துகொள்ளலாம் போன்ற உடல் பருத்த பெருமரங்கள், வகைவகையான மூலிகைச் செடிகொடிகள், சித்தர்கள் வசித்த குகைகள், ஆங்காங்கே சலசலத்து ஓடும் ஓடைகள் இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்கள் நிறைந்த இடம். சதுரகிரியில் எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை அமைதியாக்கலாம்
$$$$$
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.