23. காரைக்கால் அம்மையார்
புதுவை மாநிலத்தில் காரைக்காலில் வணிகர் குடியின் தலைவர் தனதத்தரின் மகளாக புனிதவதியார் பிறந்தார். குழைந்தையாய் வீடு கட்டி விளையாடும்போது இறைவன் திருநாமத்தைச் சொல்வார். வளர்ந்து திருமணப்பருவம் அடைந்ததும் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நீதிபதி என்பவரின் மகன் பரமதத்தனுக்கு திருமணம் செய்வித்தார். தனது மகளுக்குத் தன் வீட்டறுகே வீடு ஒன்று தந்தார். இல்லறம் சிறப்பாக நடந்தது. புனிதவதியார் வீடுதேடிவரும் அடியார்க்கு புத்தாடைகள் கொடுத்து வழிபட்டு வந்தார். இறைவன் நம் நெஞ்சில் இருக்கின்றான் என்ற கருத்துக் கொண்டவர்.
பரமதத்தனுக்கு வணிகர் ஒருவர் இரண்டு மாங்கனியைக் கொடுக்க அதை அவர் வீட்டிற்கு அனுப்பினான். வீட்டிற்கு மாம்பழம் வந்த சிறிது நேரத்திலேயே அடியவர் ஒருவர் பசியுடன்வர அம்மையார் சாதமும் தயிருடன் மாம்பழம் ஒன்றையும் தந்துவிட்டார். அடியவர் வாழ்த்தி சென்றார்.
சிறிது நேரத்தில் பரமதத்தன் வந்தார். உணவு பரிமாரப்பட்டது, மாம்பழமும் வைக்கப்பட்டது. மாம்பழம் மிகவும் ருசியாக இருக்க கண்டவர் இன்னொரு மாம்பழத்தையும் கேட்டார், உள்ளே சென்ற புனிதவதியாருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அடியவர்க்கு கொடுத்தேன் என்றால் கணவர் கோபிப்பார் என்றும் உண்மை சொல்லாமல் இறைவனிடம் விண்ணப்பிக்க அவர் கருணைகொண்டு இன்னொரு மாம்பழம் தற புனிதவதியார் அதைக் கணவரிடம் கொடுக்கின்றார். அதைச் சாப்பிட்ட பரமதத்தன் அந்தப்பழம் முன் சாப்பிட்டதைவிட அதீத சுவையுடன் இருப்பது அறிந்து இம்மாங்கனி நான் அனுப்பியது அல்ல. இதுபோன்று எங்கும் கிடையாது. இதன் ருசியோ சிறப்பு என்றான். இது ஏது என்றான்
புனிதவதியார் பொய் உரைக்காமல் உண்மை சொன்னார். கடவுள் அருளால் கிடைத்தது என்றால் இன்னொரு கனியை வரவழை பார்க்கலாம் என்றார். அம்மையார் கண்ணீர்விட்டு, ‘ஈங்கிது அருளீரேல் என்னுரை பொய்யாம்’’ என வேண்டியபொழுது அவள் கரங்களில் ஒர் மாங்கனி வந்தது. அதை அவர் பரமதத்தனிடம் தந்தார். அக்கனி சப்பிட அல்ல, சந்தேகத்தை தீர்க்க வந்தது. வந்தபின் மறைந்தது. அதுகண்ட பரமதத்தன் புனிதவதி சாதாரணப்பெண் அல்ல தெய்வப்பெண் அவளுடன் இனி வாழமுடியாது எனத் தீர்மானித்தான்.
பொருள் ஈட்டி வருகிறேன் என சென்று பாண்டிநாட்டின் தூத்துக்குடியில் வேறொரு பெண்னை மணம் புரிந்து பெண் குழந்தை ஒன்றையும் பெற்று அதற்கு புனிதவதி என்றும் பெயரிட்டு வாழ்ந்து வந்தான், இதை அறிந்த தனதத்தன் புனிதவதியை அங்கு அனுப்பி வைத்தான். உறவினர்களுடன் பொது இடத்தில் இருந்து கொண்டு பரமதத்தனை வரச் சொன்னார்கள். அங்கு மனைவி குழைந்தையுடன் வந்தவன் மூவரும் புனிதவதி காலில் விழுந்து இவள் தெய்வம் .அவளின் அருளைப்பெற வணங்குகிறேன். என்றான்.
இதைக்கேட்ட புனிதவதியார் இறைவா என் கணவருக்காக இவ்வுடலை தாங்கியிருந்தேன், அவரே என்னை தெய்வமாக்கியபடியால் என் உடம்பிலுள்ள சதைகள் நீக்கி பூதவடிவான சிவகணங்களுள் பேய் வடிவினை தர வேண்டினார். ஈசன் அருள் புரிந்தார். இப்பூதவடிவுடன் கயிலைசென்று கயிலை நாதனைக் கண்டு வழிபட தலையினாலே நடந்து சென்றார். அங்கு ஈசனைக் கண்டு ‘பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்‘ எனப் பாடினார். ஈசன் அம்மையே என அருள்புரிந்தார். சமயக் குரவர்கள் சம்பந்தர், அப்பரடிகள், சுந்தரர் ஆகியோருக்கு முன் பதிகம் என்பதால் அம்மையார் பாடியது ‘மூத்த திருப்பதிகம்’ எனப்படும்.
******
அறுபத்துமூவர்
1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்/ 9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்/ 56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்
******