குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
3-8.குற்ற உணர்வு!
Written by குருஸ்ரீ பகோராகுற்ற உணர்வு!
செய்த பிழைகளுக்கு, குற்றங்களுக்காக குற்ற உணர்வுகளுடன் வாழ்ந்து துன்பத்தில் இருப்பதைவிட மன்னிப்பு கேட்பது ஒன்றும் தவறல்ல. குற்றத்தில் இருந்து ஒருவர் விடுதலை பெற்றாலும் குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறவேண்டும். இல்லையெணில் அது பிணியாக அவனைக் கொல்லும். அதனால்தன் கிருத்துவ அன்பர்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டுப் பெறுகின்றனர். பொதுவாக கடவுள் செய்த பிழைகளை மன்னிக்கும் உள்ளம் கொண்டவர். எத்தனையோ சரித்திர சான்றுகள் உள.
கடவுள் மன்னிப்பார் என நினைத்து தீய காரியங்களில் ஈடுபடுதலுக்கு மன்னிப்புகள் வழங்கப்பட மாட்டாது. குற்றம் செய்தவன் தன் தவறுகளை உணர்ந்து திருந்த வேண்டும், அந்த உணர்வுகளால் அவன் சித்திரவதை படுவான் என்பதற்காகவே கடவுள் மன்னிப்பார் என்ற நிலை உறுவானது. மன்னிப்பார் என்று குற்றங்கள் செய்வதும், மன்னிக்கமாட்டார் என புலம்புவதும் தவறான நம்பிக்கைகள்.
ஒருவன் செய்த தவறை மன்னிக்கிறவன் தேவனாவான், அவனும் மன்னிக்கப்படுவான். எனவே பிறர் குற்றங்களை மன்னிக்கப்பழகு! நீ தேவனாகு! அவன் குற்றங்களுக்கு கர்மபலன் உண்டு! நீ அவனைபற்றிக் கவலைபடாதே! உன்வாழ்வை நினை! உன் ஆன்மா மேனிலையடையட்டும்!
ஒவ்வொரு ஆன்மாவும் பிறந்தபின் குழந்தை, இளமைப்பருவம், ஆண், பெண், கணவன், மனைவி, அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, முதிர்ந்த பருவம் என அடையாளங்களைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் உடலின் உள்ளே உள்ள ஆன்மாவிற்கு எந்த அடையாளமும் இல்லை. அது எந்த நிலையிலும் ஆன்மாதான். மாயையான உடலுக்கு எத்தனைவித அடையாளங்கள். ஆன்மாவிற்கு ஏதுமில்லை. அந்த ஆன்மா உடல்வழி எப்போதும் சந்தோஷத்தை நாடி அடைய வேண்டும் என்பதே நியதி.
இளமையில் ஏதுமறியாமல் நம் விருப்பத்திற்கு செயல்பட்டு சந்தோஷ மடைகின்றோம். ஆண், பெண் என்ற நிலையில் ஒருவர் ஒருவருக்கு துணையாகி கணவன் மணைவி என சந்தோஷம் கான்கின்றோம். பின் குழைந்தைகள் மூலம் அப்பா, அம்மா என்றாகி தாத்தா, பாட்டி என்றும் ஆகிக் களிப்படைகின்றோம். வாழ்க்கையின் சுழற்சியிது. அந்தந்த காலங்களில் அதுஅது முறைபடி சரியாக நடந்தேறினால் வழ்வில் துன்பம் ஏதும் இல்லை!
ஆனால் உரியகாலத்தில் நடக்காமலும், துணைகிடைக்காவிடினும் மனம் துயரம் காண்கின்றது. அப்படியிருக்கலாம், இப்படிவாழலாம் என்ற கனவுகள் சிதைகின்றன. எப்படியாவது மணம் நடந்தால் போதும் என்ற பலரின் சூழ்நிலையில் மணம் நடந்தால் அப்போதைக்கு அது இனிப்பாக தெரிகின்றது. ஆசையும், மோகமும் தெளிந்த நிலைவரும்போது அங்கே குறைகள் நிறைவாக இருப்பதாக கண்டு மனம் மயங்குகின்றது.
வீன்குழப்பங்கள், பழைய நினைவுகளின் தாக்கத்தால் அதிகமான எதிர்பார்ப்புகள் கொஞ்சம்கூட நிறைவேறவில்லை என்ற ஏமாற்றத்தினால் மனம் சோர்வடைகின்றது. புத்தி பேதலிக்கின்றது. என்ன செய்கின்றோம்! என்ன சொல்கின்றோம்! என அறியாமல் தப்புத் தப்பாக சிந்தித்து செயல்படும் மனப்பாங்கு வந்தடைகின்றது.
குழைந்தைகளின் வளர்ச்சிகூட மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. பொறுப்புகளை வரவைப்பதில்லை. அவர்கள் பிரச்சனையில் அவர்களின் முழுகவனம் சென்று விடுகின்றது. அதிலிருந்து மீளவேண்டும் என்ற நினைவில்லாமல் செயல்படுகின்றனர். வாழ்வு பயணத்தை முடித்துக்கொள்ள நினைப்பவர் சிலர். போராடிப் பார்க்கலாம் எனச்சிலர். மனம் போனபோக்கிலே செல்லலாம் எனச்சிலர்.
ஆனால் யாரும் எதனால் வந்தது இந்தநிலை என்பதைக் கண்டு அதிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முயலுவதில்லை. அடுத்த நிலைக்கு வேகமாகத் தாண்ட நினைப்பதால்தான் தற்கொலைகளும், வேறுமணங்களும் அதிகமாகின்றன. ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்து மணம்புரிந்த ஆன்மாக்கள்கூட இதற்கு விலக்கு இல்லை.
மயங்கும் மனத்தைக் கட்டுப்படுத்துங்கள். குற்றமாக எதையும் கருதாதீர்கள். சின்ன விஷயங்களைப் பெரிது படுத்தாமல், அன்றைய சூழலில் என்னவென்று அறியாதநிலையில் கற்பனைசெய்து பார்த்தவைகளுக்காக இப்போது கிடைத்திருக்கும் இந்த வாழ்வின் பயணத்தை திசைதிருப்பி வெற்றி பெறமுடியுமா என சிந்தியுங்கள். எல்லா ஆன்மாவும் சந்தோஷத்துடன் செயல்பட வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. நீங்கள் சிந்திக்கும் வழி, செல்ல இருக்கும் வழி, உங்களுக்கு இனியாவது நீங்கள் எதிர்பார்த்த சந்தோஷங்களக் கொடுக்கும் என நீங்கள் முழுமையாக நம்பினால் நடைபோடுங்கள் புதிய பாதையில்.
ஒருமுறைக்கு பலமுறை, குறைந்த பட்சம் மூன்று முறையாவது யோசனைசெய்து செயல்படுங்கள். புதிய பாதையின் நல்லவை கெட்டவைகளை சிந்தியுங்கள். இந்த மாற்றம் தேவைதான என உங்களை உங்கள் மனதை ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள். இறைவனை நாடுங்கள். அமைதியுடன் இருந்து மீண்டும் யோசித்து இறுதி முடிவிற்கு வாருங்கள். அமைதியுடன் குற்ற உணர்வின்றி செயல் பட்டு ஆனந்தம் அடைவீர்!
துன்பங்கள் துன்பம் செய்தவரையேச் சாரும், ஆதலால் துன்பம் இல்லாமல் வாழ, பிறருக்குத் துன்பம் செய்வதை நினைக்கமாட்டார். வாழ்வில் துன்பம் என்று நீங்கள் உணர்ந்ததை மற்றவர்களுக்குச் சொல்லி எச்சரிக்கை செய்தால் உங்கள் ஆத்மாவிற்கு குற்ற உணர்வும் ஏற்படாது-குருஸ்ரீ பகோரா.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.