கலி தோஷம்!
மனிதர்கள் அன்பு, கருணை, பரிவு என்ற நல்ல குணங்களோடும் நல்ல எண்ணங்களோடும் இறைவன்மீது மாறாத நம்பிக்கையுடன் கிருதயுகம், துவாபர யுகம், திரேதாயுகம் ஆகிய மூன்று யுகங்களிலும் வாழ்ந்து வந்ததால் சிக்கலில்லா சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருந்தனர். கலி பிறப்பதற்குச் சில ஆண்டுகளிலிருந்து அவர்களின் போக்கில் மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்தன. துவாபர யுகம் முடியும் தருவாயில் ஒரு ஊரில் இரண்டு விவசாயிகள் நட்புடன் வாழ்ந்து வந்தனர்.
அவர்களில் ஒருவன் தன்னிடமிருந்த நிலத்தை மற்றவனுக்கு விற்று விட்டான். நிலத்தை வாங்கிய விவசாயி நிலத்தை உழுது பயிர் செய்ய நினைத்து உழ ஆரம்பித்தான். அப்போது நிலத்திலிருந்து ஒரு கலசம் கிடைக்க அதை எடுத்துக் கொண்டு தன் நணபனிடம் ஓடினான். நிலத்தை உழும்போது இந்தக் கலசம் கிடைத்தது. நீ வைத்துக் கொள் என்றான். நிலத்தை விற்றவன் நிலத்தை எப்போது உனக்கு விற்று விட்டேனோ அப்போதே அதுவும் அதில் உள்ள பொருள்களும் உனக்கே சொந்தம் என்றான். நிலத்தை வாங்கியவன் நிலத்தை உழுது பயிர் செய்து அதில் வரும் பலன்தான் எனக்கு. அதற்கு முன்பே நிலத்தில் இருந்த கலசம் உனக்குத்தான் சேர வேண்டும் என இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு முடிவுக்கு வராத நிலையில் இருவரும் படுத்துறங்கச் செல்வோம் இறைவன் கனவில் யாருக்குச் சொந்தம் எனக் கூறுகின்றாறோ அதன்படியே செய்வோம் என முடிவு கொண்டு படுத்துறங்கச் சென்றனர்.
அந்த இரவுடன் துவாபரயுகம் முடிந்து நள்ளிரவில் கலி பிறந்தது. காலையில் இருவரும் சந்தித்தபோது எந்தெந்தக் காரணங்களால் நேற்று தனக்குச் சொந்தமில்லை என்று சொன்னார்களோ அதே காரணங்களைக் கூறி அந்தக் கலசம் தனக்கே சொந்தம் என வாதாடி முடிவு வராமல் கோபம் தலைக்கேறி இருவரும் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்தனர். அந்தச் செல்வம் மீண்டும் புதையுண்டது.
கலி காலம் பொல்லாதது. கலி புருஷனின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால் மக்களின் குணநலங்கள் மாறும். நல்லவர்கள் எதையும் சிந்தித்து செயல் ஆற்றவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். இல்லையேல் துன்பம் துயரம்தான்!-குருஸ்ரீ
#####