gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

4-5.அமைதிப் பூக்கள்!

Written by

அமைதிப் பூக்கள்!                                                                                                      

வெளியே தேடி அலைந்து பெறக்கூடிய பொருள் இல்லை. மனதின் செயல் பாட்டை பொறுத்தே அமைதி கிட்டும். எண்ணங்களில் ஆசை பிறக்கின்றது. பல விஷயங்களை நினைக்கின்றது மனம். அதனால் நமக்கு சில நிகழ்வுகள், கஷ்டங்கள் ஏற்படுகின்றன. நம் மனம் நாம் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்றோமோ அப்படியே ஒரு போதும் இருப்பதில்லை. அவ்வாரு இருக்க விட்டுவிடக்கூடாது. எண்ணங்கள் நம் விருப்பப்படி, நம் ஆன்மாவிற்கு நல்ல பலன் தரும் வகையில் இருக்கவேண்டும். மனம் நம் வசப்படவேண்டும். அப்போதுதான் அமைதி கிட்டும்.
நாம் மனத்தின் வசப்பட்டு விடக்கூடாது. உலக விவகாரங்களில் மாட்டிக் கொண்டு மனம், சிந்திக்க, சிந்திக்க ஆசைப்பட்டு, கோபப்பட்டு, நிகழ்வுகளைத் தேடி வெற்றி காணாமல் அடித்த பந்து திரும்பி வருவதுபோல நம்மிடம் திரும்பும். அது அமைதி தராது.
முதன்முதலாக நம்மை நாமே கட்டுப்படுத்தத் தெரிய வேண்டும். மனதை கட்டுப் படுத்த பழகிக் கொள்ள வேண்டும். ஓர் செயலின் தன்மைகளை உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால் ஏற்படும் சாதக பலன்களை ஆலோசிக்கும் திறன் கொள்ள வேண்டும். உண்மையின் அடிப்படியில் ஆலோசனை  செய்ய வேண்டும். நமக்கு சாதகமாக மட்டும் நினைத்து சிந்திக்க கூடாது. எல்லாச் சூழலிலும் எல்லா வழி வகைகளையும் சிந்திக்கப் பழகவேண்டும். அப்போதுதான் ஓர் செயலின் செயல்பாடு எல்லா நிலைகளிலும் தெளிவாக விரிவாக நம்மால் புரிந்து கொள்ளமுடியும்.
அதற்கு நாம் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். நம்மால் முடியும், இது முடியும் என உறுதி கொள்ள வேண்டும். உறுதியுடன், மனக்கட்டுப்பாடு கொண்டு, திறமை சேர்த்து, எல்லா வழி வகைகளையும் சிந்தித்தால் நம் மனக்கண் முன்னே தெளிவான செயல்பாடுகளின் வழிகள் தெரியும். அது நாம் நம் செயலை புலன்கள், உறுப்புகள் மூலம் திறம்பட செய்து நம் உடலுக்கும் உயிரின்வழி ஆன்மாவிற்கும் நல்ல கர்ம பலன்களைத் தர வாய்ப்பாகும்.
ஒருவன் அமைதி வேண்டும் எனில் என்ன செய்யவேண்டும். அவனிடமிருந்த அமைதி எங்கே போயிற்று? என்னவானது! வீனான மனக்குழப்பங்களை மேலும்மேலும் உருவாக்கி தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி, அமைதியைவிட்டு தனியே தூரத்தில் சென்றுவிடுவதுதான், அமைதியின்றி ஒருவன் இருக்கக் காரணம். அனுபவிக்க ஆயிரம் சந்தோஷங்கள் இருந்தபோதும், அதை அனுபவிக்காமல்விட்டு, இல்லாத கிடைக்கத் தவறிய ஒன்றிற்காக ஏங்கும் மனநிலையை கொள்ளக்கூடாது. அது உன்னிடம் இருக்கும் அமைதியை போக்கும்.
காற்றில்லா ஒன்றை பலூன் என நாம் சொல்வதில்லை. ஆனால் உலகில் பரவியுள்ள காற்றை அதனுள் நாம்தான் செலுத்துகிறோம். அதன்பின் அதை பலூன் என்கின்றோம். நம்மைச்சுற்றியுள்ள பிரச்சனைகளையும், நாம்தான் காற்றை பலுனில் செலுத்துவது போல் நம்முள் செலுத்திவிட்டு, நம்மை குழப்பிக் கொள்கின்றோம். அந்தப் பிரச்சனைகளை வெளியே விட்டுவிட்டு சம்பந்தம் இல்லாதவர்களாய் இருந்து பாருங்கள், அந்த பிரச்சனையால் உங்களுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது. அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு நீங்கள் தீர்வு எளிமையாகக் கண்டு கொள்வீர்.
நிற்கும் ரயிலில் இருப்பவர்களுக்கு அடுத்த தண்டவாளத்தில் இருக்கும் ரயில் நகரும் போது அவர்கள் அமர்ந்திருக்கும் ரயில் நகருவதுபோல் தோன்றும். அதேபோன்றுதான் பிரச்சனைகளுடன் உள்ளத்தை நிறைத்தவர்களுக்கு உலகில் எல்லாம் பிரச்சனையாகத் தோன்றும்.
எந்த பிரச்சனையாயிருந்தாலும் முதலில் அதன் தன்மைதனைக் காணவேண்டும். எதுவும் புரியவில்லை எனில் அதைச்சிறிது ஒதுக்கி விட்டு, முற்றிலும் வேறுசெயலில் கவனம் செலுத்தி விட்டு பிறகு இந்த பிரச்சனையை நிதானமாக நோக்குங்கள். அதன் செயல் வழி உங்களுக்குப் புரியும். எந்த பிரச்சனையாயிருந்தாலும் உங்களால் தீர்க்க முடியும். பிரச்சனைகள் தீர்ந்து விட்டால் அங்கே நிலவுவது அமைதி, பின் ஆனந்தம், முடிவில் சந்தோஷம்.                                                                  
நாம் அமைதியை நாடுவதில்லை. நம்மில் பலருக்கு அமைதியில்லை. அது ஓர் இயற்கை நிலை. அமைதியை விட்டு நாம் எங்கு செல்கின்றோம். நம் செயல்கள், புலன்வழியில் நம்மை தள்ளிக் கொண்டு செல்லச் செல்ல அமைதியின்மைதான் ஏற்படும். “மனம் போன போக்கிலே போகலாமா?” அவ்வழியில் நம்மை விறுப்பு, வெறுப்பு, கோபம், தாபம், துக்கம், ஏமாற்றம், துயரம் சூழ்ந்து கொள்ளும். நான் என்ற எண்ணம் தலைதூக்கி நம்மை குழியில் தள்ளிவிடும். அமைதியான மனமே கோயிலாகும். அந்த கர்ப்பகிரகத்தில் அருள் நிறைந்திருக்கும்.
கோவில்கட்டும் பாக்கியம் முற்பிறப்பு புண்ணியத்தைப் பொறுத்தது. ஆலயம் எழுப்பும் ஒருவனுக்கு முற்பிறவியின் பாவங்கள் நீங்குகின்றது. கோவில் கட்ட நினைத்தாலே பாப விமோசனம் உண்டு, புண்ணியங்கள் அவர் கணக்கில் சேரும் என்கிறது அக்னிபுராணம்.
புராணகாலத்தில் காடவர்கோன் என்ற மன்னன் சிவ ஆலயம் அமைக்க ஆசைப்பட்டு ஏற்பாடுகள் செய்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய நாள் குறிக்கப்பட்டது.  அதே ஊரில் வசதியில்லா பூசலர் என்ற ஏழை, தனக்கு வசதியில்லையே கோவில் கட்ட என நினைத்து, நிதியிருந்தால் எப்படி கட்டலாம் என மனதிலேயே கோவிலை படிப்படியாகக் கட்டிமுடித்து அந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யவும் நினைத்தான்.
அரசன் கனவில் வந்த ஈசன், பூசலர் கட்டிய கோவிலுக்கு தான் செல்வதாகவும், அரசன் கட்டிய கோவிலுக்கு வெறொருநாள் கும்பாபிஷேகம் வைத்துக் கொள்ளவும் கூறினார். திடுக்கிட்ட அரசன் காலை ஊர் முழுவதும் தேடியும் கோவில் கானாமல், கடைசியில் பூசலரைக்கண்டு அவர் கட்டிய கோவில் எங்குள்ளது என வியப்புடன் வினவ, பூசலர் தான் கோவில் கட்டியதும் அதற்கு குடமுழுக்கு செய்ய நினைத்ததும் தன் மனதில் என்றுரைத்தார். அரசன் பூசலரின் அருள் நிறைந்த ஆரவாரமில்லா அன்பைக் கண்டுகொண்டான்.
ஜெகத்தில் தெரியும் கோவில்தான் சிறந்தது, எல்லோரும் அதைக் கட்ட முடியாது. ஆனால் அகத்திலே கோவில் கட்டி கும்பாவிஷேகம் நடத்தி பூஜை செய்த கோவிலுக்குத்தான் முதல் மரியாதை அருள் கிடைத்துள்ளது. மனம் அமைதியாக இருந்து அருள் நிறைந்ததால்தான் நிகழ்வுகள் வாழ்வு சிறப்படையும்.
எவ்வளவு சப்தங்களிருந்தாலும் அதனிடையே உங்களால் எதையும் நினைக்க முடியும், சிந்தனை செய்யமுடியும் என்ற நிலை இருந்தால்தான் நீங்கள் அமைதியாய் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். அமைதி தேடி மலை உயரத்திற்கோ, ஆற்றங்கரைக்கோ, ஆளில்லா இடத்திற்கோ செல்லவேண்டும் என்பதில்லை.
நீங்கள் இருக்குமிடத்தில் அமைதி வேண்டும். அந்த அமைதியை நம் மனோதிடம்தான் உருவாக்க வேண்டும். உங்கள் உள்ளத்தின்மேல் நம்பிக்கை வைத்து செயல்பட்டு உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டால் உங்கள் மனம், உள்ளம் அமைதிபெறும்.
அங்கே அடுத்து சந்தோஷ நிகழ்வுகள் நடைபெற ஆனந்தம் உருவாகும். முழு அமைதி என்பது எதனாலும் கெட்டுவிடக்கூடியது அல்ல! எதனாலாவது கெட்டுவிடக்கூடிய நிலையில் இருந்தால் அது அமைதியே இல்லை!
தற்பெருமை, தன் மதிப்பு, பட்டங்கள், பெயர், புகழ், பதவி, அதிகாரம், கௌரவம், பணம் எல்லாம் வெறுத்து ஒதுக்குங்கள். ஒரு வளர்ச்சிக்குப்பின் இவை அர்த்தமற்றவை ஆகிவிடும். எல்லாம் இருந்தும் என்ன பயன் நிம்மதியில்லையே! அமைதியில்லையே! என வருத்தத்தில் உழன்று கொண்டிருப்பீர்கள்.
இவைகள் மனதிற்கு போதை யூட்டுபவை. ஓர்கால கட்டத்தில் துன்பத்தையும், தடுமாற்றத்தையும்தான் ஏற்படுத்தும். இவைகளை விட்டொழித்து மன அமைதிக்கு என்ன வழி என ஆராய்ந்து சந்தோஷ நிம்மதியடைய வழிகானுங்கள். சந்தோஷமடையுங்கள் சந்தோஷமான மன அமைதியுடன்.
மனம் அமைதியாக இருக்கும்போது அது உள்வாங்கும் நிகழ்வுகள் அபரிமிதமானவை. அதன் செயல்பாடுகள் அளவிட முடியாதவை. சிவபிரான் தட்சிணாமூர்த்தியாக சனகர், சனந்தர், சனத்குமாரர், சனத்சுஜாதர் ஆகிய நான்கு சனாகதி முனிவர்களின் சந்தேகங்களை நான் எப்படி சொல்கிறேன் என்று பாராமல், எப்படி என்ன சொல்கிறேன் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என ‘சின்முத்திரை காட்டி அமர அவர் கீழே அந்த நால்வரும் மௌனமாக அமர்ந்தனர்.
சிவன் மனதால் நினைத்தார் அம்முனிவர்களுக்கு அது வேண்டுமென்று. அந்த முனிவர்களும் அதை எதிர்பார்த்து இருந்தனர். அது அந்த அலைகள், காந்தசக்தி அலைகள், அலை அலையாக முனிவர்களின் மனதே சென்றடைந்தது. இதுவே தத்துவமாகும். இதை புரிந்து கொண்டு செயல்படவே தட்சிணாமூர்த்தி- ஞானகுரு சிலைகள் கோவில் வளாகத்தில்.
நம் மனதில் ஓர் உறுதியை, எண்ணத்தை உருவாக்கிக் கொண்டால், படிப்படியாக செயல் சக்திகளால் அதை வலுப்பெறச் செய்து, முடிவில் அது உண்மையாக நிகழச் செய்ய முடியும். அந்த சக்திதனை பெரும்பாலான மனிதர்கள் இழந்து தவிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் மனம் அமைதியிழந்து தத்தளிக்கின்றது. மனம் அமைதியாக இருக்க நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.
நம் காலில் முள் குத்தினால் அதன் பாதிப்பு, வலி நம்மை உணரவைக்கின்றது. முள்ளை எடுத்துவிட்டு அப்படியே நடக்கின்றோம். தேவையானால் வீட்டிற்குச் சென்று மருந்திடுகின்றோம். நம் முன்னால் நடக்கும் நிகழ்வுகள், பிரச்சனைகளை வெளியில் விட்டுவிட வேண்டும் குத்திய முட்களை தூக்கி எறிவது போல்.
அதைவிடுத்து நிகழ்வுகளின் தாக்கங்களை சுமந்து கொண்டிருந்தோமானால் மனம் அமைதியடையாது. மனம் அமைதிபடும்வரை அடுத்த நிகழ்வுகளில் நம் இயலாமை, கோபம் எல்லாம் வெளிப்படும். அது நம் வளமான வாழ்வின் அடுத்த செயல்களுக்கு எதிரி. எனவே பாதிப்புகளை நிகழ்வுகளை அங்கேயே களைந்து விட்டு விடுங்கள். மிகமிகத்தேவை என்றால் மட்டும் அதற்கு தீர்வு கானும்வரை நினைவில் கொண்டிருங்கள்.
துன்பங்களும் துயரங்களும் யாருக்குத்தானில்லை! பகவான் கிருஷ்ணர்கூட பிறந்ததிலிருந்து துன்பங்களை அனுபவித்துதான் இருந்திருக்கின்றார்.
அவர் கருவில் உதித்ததும், மாமன் கம்சனால் தாயார் சிறையில், பிறந்ததும் கமசனுக்கு பயந்து இடமாற்றம், மன்னராக போர் என ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்வை போராடி வென்றுள்ளார்.
பிரச்சனைகளிலிருந்து வெற்றிபெற அமைதிகாக்க வேண்டும். அப்போதுதான் சிந்தனை வளமாகும். வெற்றி பெற வாய்ப்புகள் உருவாகும்-அமைதியாய் இருக்கப் பழகி வெற்றியடையுங்கள் ஆசிகளுடன்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879207
All
26879207
Your IP: 54.160.244.62
2024-03-19 08:25

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg

சந்தோஷப்பூக்கள்