gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

2-9.ஆசை! பேராசைப் பூக்கள்!

Written by

ஆசை! பேராசைப் பூக்கள்!    
                                                                     

செல்வம் இருந்தாலும், இழந்தாலும், சுகத்தில் திளைத்தாலும், துன்பத்தில் உழன்றாலும், மனித ஆத்மா மண்ணுலகில் வாழத்தான் விரும்புகின்றது. இதற்கு ஆசைதான் காரணம். நெருப்பை புகை மறைக்கும், துசிப்படலம் படிந்து கண்ணாடி மறையும், வளரும் சிசு கருப்பையில் மறைந்திருக்கும். ஆசைப் படலம் அறிவை மறைக்கும்.
விதைகள், கொட்டைகளில் எண்ணெய் இருப்பதால்தான் அவைகளை அரைத்து பிழிகின்றோம். மனதில் அளவற்ற ஆசைகள் இருந்தால் அவைகளால் பிசையப்பட்டு, எண்ணெய் வருதுபோன்ற துன்பங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி, பயம், வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளே எண்ணற்ற ஆசைகளை, எண்ணத்தின் கருத்துகளாக மனதில் தோன்றுவிப்பதாக பதஞ்சலி முனிவர் சொல்கிறார்.
ஒரு கணவனும் மனைவியும் ஆசைகளைத் துறந்து துறவறம் மேற்கொண்டு யாத்திரை புறப்பட்டனர். முன்னால் சென்று கொண்டிருந்த கணவன் ஒரு வைரக்கல் கிடப்பதைப் பார்த்து மனைவி காணநேர்ந்தால் அவளுக்கு ஆசை வந்திடும் என்றென்னி அதை புதைக்க குழி தோண்டினான். அதை புதைக்கும் போது அங்கு வந்த மனைவி என்ன புதைக்கிறீர்கள் எனக் கேட்டு மன்னைத் தோண்டி வைரத்தைக் கண்டாள்.
தான் பார்த்தால் ஆசைகள் திருப்பி வந்து விடும் என்று கணவன் நினைத்தது புரிந்தது. உடனே சமாளித்துக் கொண்டு அன்பரே, வைரத்துக்கும் சாதாரண கல்லுக்கும் வித்தியாசம் தெரிவதாய் இருந்தால் ஏன் உலகத்தை துறந்து வந்தீர்கள் என்றார். தன்னைவிட தன் மனைவி ஆசைகளை துறந்துவிட்டாள் என்பது கண்டார்.
உங்களால் இயலாத ஆயிரக்கனக்கான விஷயங்களை எல்லாம் செய்ய முடிந்தால் பேரானந்தம். அந்த ஆசை எல்லோருக்கும் உண்டு. ஆனால் ஆசைகளை நிறைவேற்ற வழியின்றி போகும்போது துன்பம் என்ற வித்தியாசமான ஆனால் கட்டாயமான செயல் நடைபெறுகின்றது. அதற்கு நீங்கள்தான் காரணம். உங்களின் பேராசையான அளவை மிஞ்சும் ஆசைகளே காரணம் எனப்புரிந்து கொள்ளல் நலம் பயக்கும்.
புலனடக்கம் இல்லா ஆசை, பேராசையாகி எப்படியும் வெற்றியடைய வேண்டும் என்ற ஓர் நிலையில் பிறர் பொருளை நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அடைய முயற்சிப்பதாகும். இந்த கவர்தல் ஒருவகை திருட்டாகும். தார்மீக எண்ணம் உடையவர்களுக்கு அது தவறு என்பது தெரியும். அவ்வாறு தவறு என நினைத்து, பிறர் பொருளை களவாடாமல் இருத்தலை ‘அஸ்தேயா’ எனக் கூறுகின்றது மனுதர்ம சாஸ்திரம். நற்செயல்களின்று சட்டவிரோதமான வகையில் பொருள்களை அடைவதும் ஓர்வகைத் திருட்டே!
உங்கள் தேவைக்கு அதிகமாக நீங்கள் சேர்த்து வைத்தால், அந்தச் செயல் தார்மீகமாக பிறருக்கு  இவ்வுலகில் கிடைக்கக் கூடிய முன்னேற்றங்களுக்கு நீங்கள் தடையாக இருக்கின்றீர்கள் எனப்பொருள்படும். உலகின் மற்ற ஆன்மாக்களின் அளவிடமுடியாத சந்தர்ப்பங்களை நீங்கள் ஒவ்வொன்றாக அபகரித்துக் கொள்கின்றீர்கள் என்று அர்த்தம். எனவே புலன்கள் பேராசை கொள்ளாமல் இருக்க பழக்க வேண்டும், உங்களின் பேராசை ஆசைகளைத் தீர்க்காது. ஆனால் ஆசைகளை வளர்த்துக் கொண்டுதான் இருக்கும்.
ஆசைப்பட்டதை அடைய முயற்சிக்கின்றான். திட்டம் தீட்டுகிறான். செயல் வடிவாக்கி செயல்படுகின்றான். செயல்படும்போது தோன்றும் இடையூறுகளை கடக்க முயற்சிக்கும்போது தான் அடைய நினைத்து ஆசைப்பட்டது சரியா! என்று நினைக்கத் தோன்றும். அப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. மீண்டும் ஒருமுறை சிந்தித்து ஆசைப்பட்டது உண்மை. நியாமானதுதான். சரியானதுதான் என முடிவுகொண்டு மீண்டும் சலனமின்றி உறுதியுடன் செயல்படுங்கள். சரியானது இல்லை என உங்கள் மனம் நினைத்தால் அந்த செயலை விட்டு விடுங்கள்.
இடர்பாடு களையும்போது நீங்கள் சரியான வழியில் நேர்மையான முறையில் செயல்படுகின்றீர்களா? என உறுதி செய்துகொள்ளுங்கள். மற்றவர்களுக்கு கேடு விளைவிக்காமல், துயரங்கள் ஏற்படாத முறையில் செயல்படுங்கள். நீங்கள் செய்யும் செயலுக்குள் ஓர் நியாயம் இருப்பதை உறுதிசெய்து செயல்படுங்கள். யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் நேர்மையுடன் வெற்றி பெறும்போது கிடைக்கும் மகிழ்வு தரமானது, நிரந்தரமானது.
ஆசையின் செயல்முடிவில் வெற்றியின் மகிழ்ச்சி சந்தோஷமாகும்போது அந்த அளவுடன் விட்டு விடுங்கள். மேலும் மேலும் ஆசைவளர்த்து, செயல்கள் செய்து, வெற்றியடைய நினைக்கும்போது, நல்வழிகளைத்தாண்டி நேர்மையற்ற முறையில், எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்ற வெறியாக மாறக்கூடாது. அடைந்த வெற்றியின் மகிழ்வு நினைவுவெறி உங்களை மாற்றிவிடக்கூடாது. மனிதத்தன்மை இழந்துவிடுவீர்கள்.
மீண்டும் மீண்டும் ஆசைகொண்டு, நீங்கள் நினைத்த அளவுக்கதிகமான ஆசைகள் நிறைவேறுவது என்பது, “கடல் நீரைப்பருகி உங்கள் தாகத்தைப் போக்கிக்கொள்வது நினைப்பது போலாகும்.” கடல் நீர் பருகப்பருக தாகம் அதிகமாகுமே தவிர தாகம் குறையாது. அடங்கவும் அடங்காது. உங்கள் துன்பமும் துயரமும் அதிகமாகும்.
எல்லா உயிர்களுக்கும் ஆசை உண்டு. ஆசை இனிமையானது. அது தேங்காயின் உள்ளே உள்ள இளநீர் போன்று சுவையானது. உலகின் ஆசைகளின் அடையாளம் இளநீர். அந்த நீர் தேங்காயின் மேல் உள்ள ஓடு உடையாது என நம்பிக் கொண்டிருக்கின்றது. ஆனால் காலப்போக்கில் அந்த ஓடு உடைபடும். காலம் அதிகமானால் நீர் வற்றி தேங்காய் கொப்பரையாக மாறி முதிர்ந்த நிலையை அடைந்துவிடும். அன்புள்ள ஆன்மாக்களே! இளநீர் போன்ற ஆசைகளால் நம் உடல் கொப்பரைத் தேங்காயைப்போல் உறுதியாகும் நிலையானதாகும் என எண்ணி மேலும் மேலும் ஆசைகளை வளர்த்துக் கொள்கின்றோம்!
இந்த உடல் மாயையானது, என்றும் சாசுவதமானது அல்ல. கொப்பரை போலாகாது. உண்மையை உணர்ந்துகொள். அனுபவமும் ஞானமும் கைகோர்த்து எண்ணங்கள் முதிற்சியுற்று உலக ஆசைகள் குறைந்து அந்த ஆசைகளை விட்டுவிலகி வாழப் பழகிக் கொள்ளவேண்டும். இளநீர் வற்றிய முற்றிய தேங்காயை இறைவனுக்கு படைப்பதுபோல எண்ணங்களால் முதிர்வுற்று பக்குவமான உள்ளத்தை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்
நேர்மையான வழியில், செயலினால் கிடைக்கும் ஆனந்தத்தை அடைந்து அதிகம் ஆசைப்படாமல் மகிழ்வுடன் வாழப் பழகுங்கள். “ஸ்ரீ கிருஷ்ணனின் நண்பன் மாலகன். கிருஷ்ணனிடம் அனைத்து வித்தைகளையும் கற்றவன். கண்ணனிடம் அனைத்தும் கற்றதனால் அகந்தையும், மமதையும் அடைந்து மதியிழந்து இருந்ததன் காரணமாக அவனுள் ஓர் பேராசை புகுந்து கண்ணனிடமிருந்த சக்ராயுதத்தை பிரயோகிக்க ஆசைப்பட்டான்.
கண்ணன் எவ்வளவு தடுத்தும் கேளாமல் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி அந்தக் கலையைக் கற்றான். கற்றுத்தேர்ந்தவன் அதை விண்ணில் பிரயோகித்தான். அப்போது அவன் மனதில் தானும் கண்ணனைப்போல் சமபலம் உள்ளவன் என நினைத்தான். அந்த அபரிதமான எண்ணத்தினால் கைவிரலை கன்னத்தில் வைத்து மகிழ்ந்திருந்தான். அவன் பிரயோகித்த சக்ராயுதம் திரும்ப அவன் விரல்களுக்கு வரும்போது கழுத்து அறுபட்டு இறந்தான்,” என்று புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மாலகனின் அளவில்லாமல்போன ஆசையின், பேராசையின் அளவு. அதுவே அவனின் முடிவு. எனவே ஆசை கொள்ளுங்கள். ஆசையின் பலனை அளவான வெற்றியாக காணுங்கள். பேராசை கொள்ளாதீர்கள்! பேராசை இல்லா மனம் ராஜயோகத்துடன் எல்லா செல்வங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்வில் பயணிக்கும்.
தனக்கு என சொத்து, நிலம் வாங்க ஆசைப்பட்டான் ஒருவன். நாளுக்குநாள் ஆசை மிகுதியாயிற்று. போராசை கொண்டான். அவனால் ஆசைதான் கொள்ள முடிந்தது அன்றி எவ்வளவு முயற்சித்தும் கொஞ்சம் கூட நிலம் தனக்கு என சொந்தமாக்கி கொள்ள முடியவில்லை. அவ்வூரின் பெரிய தனவந்தரை சந்தித்து தன் விருப்பையும், இயலாமையும் கூறினான். அவர் இவ்வளவு நாளில் உனக்கென்று நிலம் பெறவில்லையா! சரி! இங்கிருந்து ஓடு. எவ்வளவு தூரம் ஓடுகிறாயோ அதுவரை உள்ள நிலத்தை நான் உனக்கு அளிக்கின்றேன் என்றார்.
மனிதனின் ஆசைத் துரத்த கால்கள் ஓடியது, ஓடினான், ஓடிக்கொண்டேயிருந்தான். உடல்நிலை காரணமாக அவனால் ஓடமுடியவில்லை. திருப்பிப் பார்த்தான். இவ்வளவுதான? என நினைத்து இன்னும் கொஞ்சம், கொஞ்சம் என ஓடினான். ஓர் நிலையில் அவனால் ஓடமுடியவில்லை. மயக்கமடைந்தான். திடீர் வேகம் என ஓடியதால் களைப்பு எல்லாம் ஒன்றுசேர்ந்து மூச்சு முட்டி மாரடைப்பால் இறந்தான். அந்த தனவந்தர் அவனுக்கு அவன் ஓடிய நிலத்தில் ஆறு அடி நிலம் ஒதுக்கினார். அது அவன் உடலுக்கு போதுமானதாயிருந்தது. ஆசை அளவுடன் இருந்திருந்தால் வளமுடன் இறுதிவரை சந்தோஷத்துடன் வாழலாம். இனி அவன் அதை புரிந்து என்ன பயன்?
கிருஷ்ணன் என்றதும் அவரின் லீலைகள் அனைவருக்கும் ஞாபகம் வரும். கிருஷ்ணலீலை, கோபிர்களிடம் கண்ணன் லீலை என்று சொன்னாலும் “மாயாதீதன்” என கிருஷ்ணனை சொல்கின்றோம். அவர் அவதாரம். அது ரசிக்கப்படுகின்றது. ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பரந்தாமன்கூட ஆசை மோகத்தில் தன்னையிழந்து பித்து கொண்டிருந்ததாக புராணங்கள் பகர்கின்றது. நாம் மனிதர்கள். நாமும் அதுபோல் மோகம், கவர்ச்சி என்ற மாயைக்கு உட்பட்டு பேராசையினால் ‘மாயாதீதன்’ ஆகி சோகத்தில் உழலாமல் சந்தோஷத்தின் வாயிலில் நுழைவோம்.
உலகத்தில் உள்ளவனவற்றிற்கு ஆசைப்படு! அதன்மீது அளவற்ற பற்று வைக்காதே! அது ஆபத்து! நீ ஆசைபட்டது உன்னை வந்தடையவில்லை என வருந்துகின்றதா! இல்லையே! ஆனால் நீ மட்டும் அதற்காக மனதை கஷ்டப்படுத்தி, உடலை வருத்தி எத்தனை துன்பம் அடைகின்றாய்! அந்த நிலை உன் முகத்தில் வேதனையுடன் தெரிய ஆரம்பிக்கும்.
முகம் பார்க்கும் கண்ணாடியில் உன்னைப் பார்! அப்போது தெரியும் உன் நிலை! ஒரு கண்ணாடியைப்போல் இரு! நீ பார்க்கும் போது மட்டும் உன் உருவைக் காட்டும் அது உன்னுருவை எப்போதும் நினைப்பதில்லை! நீ மீண்டும் காட்டும் வரை! அது துன்பமில்லா நிலை! பற்றுதலில்லா நிலை! ஆசைபடு! பற்று கொண்டு பேராசை கொள்ளாதே!
அரசராயிருந்தபோது எதிரியை வென்று திரும்பிய விசுவாமித்திரர், குல குரு வசிஷ்டரை வணங்க ஆசிரம் சென்றார். அங்கு அவரது படைகளுக்கும் சேர்ந்து விருந்து படைக்கப்பட்டது. அந்தக்காட்டில் அப்படிஒரு விருந்தை எதிர்பார்க்காதவர் அதன் காரணத்தை கேட்டார். வசிஷ்டர் காமதேனுவின் சிறப்பு அது என்றார். அதை தனக்கு அளித்தால் அன்றாடம் அதைப் பயன்படுத்தலாம் எனக்கருதி குருவிடம் வேண்டுகோள் விடுத்தார். குரு காமதேனு விரும்பினால் அழைத்துப்போ என்றார்.
காமதேனு மறுக்கவே, குருவிற்கு மனமில்லை எனக்கருதி அவரிடம் போர் தொடுத்தார். போரில் தோற்ற விசுவாமித்திரர் அவரை தவபலத்தினால் வெல்ல வேண்டும் என முடிவெடுத்தார். விசுவாமித்திரர் வாழ்க்கை திசைமாறக் காரணமாயிருந்தது அவரின் பேராசையே! அரசு துறந்து தவம் இருந்து முனிவரானார். ஆசைகளை எல்லையுனுள் வைத்துக் கொள்ள வேண்டும். விளைவுகளை ஆராயாமல் செய்யும் செயலின் முடிவுகள் வாழ்வின் போக்கை மாற்றும். இன்னொன்று ஆசையை வளர்த்தால் பிறவிகள் வளரும். ஆசையை ஒழித்தால் முக்தி நெருங்கும்.
ஆசை பூர்த்தியாவதர்க்காக நம் செயல்கள் நம்மை ஆட்டிவைக்கின்றது. ஆனந்தம் வேண்டும் என்பதற்காக நம் செயல்கள் இருந்தாலும், அது ஒரு துக்கமில்லா சந்தோஷமாக இருத்தல் வேண்டும். அந்த சந்தோஷங்களும் தற்காலிகமாக மறைந்துவிடக்கூடியதாக இருக்கக் கூடாது.
மகாபாரத நிகழ்வில் யாயாதி மன்னன், சுக்ராச்சார்யாரின் மகள் தேவயாணையை மணந்தான். இல்வாழ்வில் தேவயாணையின் தோழியுடன் கலந்தான். இதை அறிந்த சுக்ராச்சாரியார் இளமையில் கிழட்டுத்தன்மை என சாபமிட்டார். கிழட்டுத்தன்மையை இளைஞர் ஒருவருக்கு அளித்து இளமை பெறலாம் என்ற விமோசனத்தின் பேரில் தன் மகன் பூருவிடமிருந்து இளமை பெற்றான்.
இன்பத்தின் வகைதேடி, எல்லைதேடி வகை வகையாக அனுபவித்தும் அவனின் ஆசை அடங்கவில்லை. விரும்பியதைத் தேடித் தேடி அனுபவித்தும்  ஆசை அடங்காமல் மேலும் மேலும் ஆசை அதிகமாக ஆவதை உணர்ந்தான் மன்னன் யாயாதி. அனுபவித்து ஆசையை தீர்ப்பது என்பது முடிவில்லாதது, அது நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்கும் செயல் என புரிந்து, தன் மகன் புருவை அழைத்து அவனிடம் பெற்ற இளமையை மீண்டும் அவனுக்கு அளித்ததாக சொல்லப்பட்டுள்ளது.
துன்பத்திற்கு தீர்வு ஆசையை அனுபவிப்பது இல்லை, அதை அடியோடு ஒழித்து மறந்துவிடுவதுதான் சிறப்பு. எல்லா துக்கங்களுக்கும் ஆசையே காரணம். ஆனால் ஆசை இல்லாமல் போனால் மனித வாழ்வு அர்த்தமற்றதாகிவிடும். ஆசைகள் இயல்புதன்மையுடன் அடங்கவேண்டும். அடக்கலாகாது. அடக்குதலின் விளைவு பேராசையே!. வாழ்வில் உனக்கு தேவையானவற்றின் மீது ஆசை வை. பேராசை கொள்ளாதே!.
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. அதனால்தான் குரங்கின் செயல்கள் நம் மனத்தின் எண்ணங்களோடு ஒப்பிடப்படுகின்றன. ஒரு குரங்கு தான் அமர்ந்திருக்கும் மரத்தின் கீழே ஓர் பழம் இருக்க கண்டது. அருகில் வந்து பார்த்த போது ஓர் கண்ணாடி குடுவையில் அது தேடிய பழம் இருக்கவே அதை எடுக்க முயற்சி செய்து கையை உள்ளே விட்டு பழத்தை எடுத்தது.
ஆனால் பழத்துடன் கை வெளியே எடுக்க முடியவில்லை. கையில் கிடைத்த ஓருபழத்தையே அனுபவிக்கா இயலா, இந்நிலையில் அருகில் அது போன்றே இன்னொரு பழம் குடுவையில் இருக்க அதன் மேலும் ஆசைகொண்டு அதனுள் கையைவிட்டு பழத்தை பிடித்துவிட்டது. ஆனால் இரண்டு கைகளையும் பழத்துடன் வெளியே எடுக்க முடியவில்லை. பழத்தை விட்டு கையை எடுத்தால் கை வந்துவிடும். பழத்தை விட மனமில்லை. அது புரியவும் இல்லை. இதைத்தான் குரங்குப்பிடி என்பர்.
குரங்கை பிடிக்க வேடன் செய்த தந்திரத்தில் மாட்டிய குரங்கு, கைகளில் குடுவை இருந்ததால் ஓடவும், தாவவும் முடியாததால் வேடனிடம் பிடிபட்டது. சிறைபிடித்த வேடன் குரங்கின் தலையில் ஓர் தட்டு தட்டியவுடன் சிலிர்த்து கையை விட்டது. கையில் இருந்த பழம் நழுவியதால் கைகளை வெளியே எடுக்க முடிந்தது. ஆனால் சிறைபட்டுவிட்டதே! வேண்டாத ஆசைகளில் சிக்கல்களிருப்பது தெரிந்தே விலங்குபோல மாட்டிக் கொள்கிறது மனித ஆத்மாக்கள்.
இறை நம்பிக்கை இல்லாதவர்கள், தற்பெருமை, ஆணவம், கர்வம் கொண்டவர்கள், வாழ்வில் எந்த நோக்கமின்றி வாழ்பவர் ஆகியோரின் மனம், ஆசையின் தாக்கங்களுக்கு விரைவில் ஆட்பட்டு, அதை விடமுடியாததால், அதனால் சிறை பிடிக்கப்பட்டு, துன்பத்தினை அடைவர்.
ஒரு சேரிப் பகுதில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாடும்போது இருவர் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்துவிட்டனர். அவர்களை எட்டிப்பார்த்த மற்றக் குழந்தைகளும் சாக்கடையில் வீழ்ந்தன, எல்லா குழந்தைகள் மேலும் சாக்கடையின் சகதிகள். சப்தம் கேட்டு வந்த பெண் ஒவ்வொரு குழந்தையாகக் அருகில் இருந்த குழாயின் நீரினால் கழிவி விட்டாள்.
அதற்குள் மற்ற குழந்தைகளின் தாய்மார்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அனைவரின் குழந்தைகளும் நீரில் கழுவியிருப்பதைப் பார்த்து, அந்த பெண்ணுக்கு நன்றி சொன்னார்கள். அதற்கு அந்தப் பெண் எல்ல குழந்தைகளும் சகதியினால் அடையாளம் தெரியாமல் இருந்தனர். எது என் குழந்தை எனத் தெரிந்து கொள்ளவே நான் நீரில் கழுவி விட்டேன் என்றாள்.
தன் குழந்தை எது எனக் கண்டுபிடிக்க எல்லா குழந்தையின் முக அழுக்கையும் நீக்கினாள் தாய். அதுபோன்றே நாம் யார் எனத்தெரிந்து கொள்ள, நம் உண்மையான முகத்தின் அடையாளம் காண அதை மூடியுள்ள ஆணவம், கர்வம், பொறாமை, பேராசை போன்ற திரைகளை நீக்கவேண்டும்.
ஏழை ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் நண்பன் ஒருவர் தெய்வ வரம் பெற்று விட்டதாகவும், எல்லோர் கஷ்டங்களையும் தீர்த்து வைப்பதாக் கேள்விப்பட்டு அவரிடம் சென்றான். இவன் நிலை அறிந்த நண்பர் அருகில் கிடந்த செங்கல் கட்டியை எடுத்து அதை நோக்கி தன் சுட்டு விரலை நீட்ட அது தங்கமாக மாறியது.
அந்த தங்க கட்டியை வைத்து உன் துயரங்களையும் கஷ்டங்களையும் போக்கிக் கொள் என்றார். இப்போது திருப்தியா என்றவருக்கு, ஏழையின் முகத்தில் சந்தோஷத்திற்குப் பதில் முகச்சுழிப்பைக் கண்டார். அவன் திருப்தியடையவில்லை என உணர்ந்தார்
வேறு என்ன வேண்டும் என அன்புடன் கேட்டார். ஏழை, உங்களின் சுட்டு விரல் வேண்டும் என்று தன் பேராசையை வெளிப்படுத்தினான். கிடைத்த தங்கத்தைக் கொண்டு தன் வாழ்வை சீர்படுத்தத் தெரியாதவனுக்கு, அந்த தங்கமும் நல்ல பயனைத்தராது என்று மௌனமாக சென்றுவிட்டார் நண்பர். தினமும் பொன்முட்டையிடும் வாத்தின் வயிற்றில் நிறைய பொன்முட்டைகள் ஒரே நாளில் கிடைக்கும் என்ற பேராசையில் வாத்தின் வயிற்றை அறுத்தவன் நிலையிது.
ஆன்மாக்கள் அதனதன் தாயின் அருகில் இருக்கும்போது மனதில் தீய எண்ணங்களான ஆசை, கோபம் உண்டாவதில்லை. கரு சுமந்த தாய்மைக்கு இவ்வளவு சக்தி என்றால் அகில உலகை அரவணைக்கும் அம்பிகையின் சக்தி அளவிடமுடியாதது.
வாழ்வில் ஏற்படும் ஆசைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். மக்கள் பிரதி நிதிகள் என்று, சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் இருக்கும் அனைவரும் தகுதியுடையவர்களாக இருந்தாலும், இல்லாவிடிலும் அவர்கள் சேர்ந்து முடிவு எடுக்கும் சட்டங்களை நாம் மதிக்கின்றோம். இந்த சட்டங்கள் நீதிமன்றங்களின் முடிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும் நாம் நீதிமன்றங்களை புறக்கணிப்பதில்லை. நீதி கேட்டு மன்றம் செல்கின்றோம்.
கட்டுப்பாடுகள் நம் சமுதாயத்திற்கு பயனளிக்க ஏற்படுத்தப் பட்டவை. அவைகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880537
All
26880537
Your IP: 34.229.223.223
2024-03-19 15:04

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg

சந்தோஷப்பூக்கள்