gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

5-7,பிரார்த்தணை!

Written by

பிரார்த்தணை                                                                                                           

பிரார்த்தனை மூலம் எதையும் கேட்டுப்பெறுவது அன்று, சுற்றுச்சூழலால் குழம்பியுள்ள மனம் அமைதி தேடுவதாகும். குழப்பத்திலிருந்து விடுபட மன உளைச்சலற்ற உறுதியான எண்ணங்கள், செயல்களுக்கு பிரார்த்தனையானது நம்பிக்கைதனை, வலிமைதனை தரும், அதிர்வுகள் எல்லா இடங்களிலும் பரவியுள்ளன.
கடந்த, நிகழ், எதிர்காலம் என அதிர்வுகள் நிறைந்துள்ள மண்டலத்தில் நம் மனம் ஓர் நிலைப்பட்டால்தான் நமக்கு தேவையான நம் பிரச்சனைக்குரிய சரியான அதிர்வுகள் முறையான செய்திகளாக நமக்கு கிடைக்கும். நம்மனம் சிந்திக்க செயல் வடிவம் பிடிக்கும்.
பொதுவாக கோவில்களை அதிர்வுகள் அதிகமுள்ள இடங்களாக நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர். கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வதால் மனம் அமைதி பெறும். அப்போது நமக்கு வேண்டிய அதிர்வுகள் நம்மை வந்தடையும்.
நாம் செயல் பட நிம்மதியும் அதனால் சந்தோஷமும் கிடைக்கும். மனிதகுலத்திற்கு தேவையான இந்தப்பணி கோவில்களில் சிறப்பாக நடைபெறுவதால்தான் “கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என பகன்றுள்ளனர்.
முன்செய்தவினைகளின் தீயகர்மபலன்களை, நானே அனுபவிக்க வேண்டும், அந்த பலன்கள் என் சந்ததியினருக்கு செல்ல வேண்டாம், அதன் தாக்கங்களின் வேதனையை குறைத்து, அதை தாங்கும் சக்தியை அளிக்கவேண்டும் என உளமொன்றி பிரார்த்தனை செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும்.
ஒரு விவசாயி விநாயகப் பெருமானிடம் வந்து 'பகவானே, மழையை நம்பி பயிர் விதைத்திருக்கின்றேன். மழை பெய்யச் செய்யுங்கள். மழை பெய்தால் தேங்காய் உடைக்கின்றேன்' என வேண்டினார்.
சிறிது நேரத்தில் இன்னெருவர் வந்து 'பகவானே செங்கல் சூளை போட்டிருக்கின்றேன், மழைபெய்தால் என் வியாபாரம் கெட்டு விடும், ஒரு வாரத்திற்கு மழை பெய்யக்கூடாது, மழை பெய்யாவிடில் உங்களுக்கு தேங்காய் உடைக்கின்றேன்' என வேண்டினான்.
இருவிதமான வேண்டுகோள்கள். பிள்ளையார் யாருக்கு சாதகமாகச் செய்வார். அவர் மனைவி சித்தி, புத்தி இருவருக்கும் கருத்துவேறுபாடு. ஆளுக்கு ஒருவரை சார்ந்து பேசினர். பிள்ளையார் மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் எனக்கு எப்படியும் தேங்காய் கிடைத்து விடும் எனச் சிரித்தார்,
கடவுளை பொதுவானவராக அன்றி, தன்னைச் சுற்றியிருக்கின்ற கூட்டத்திற்கு வேண்டியது செய்யும் கட்சித்தலைவராக நினைக்கக் கூடாது. 'எல்லோரையும் வாழ்விக்க ஒருபொது நியதி உண்டு, விவசாயி சம்பாதிக்க மழைக்காலம் உள்ளது. சூளைக்காரன் சம்பாதிக்க வெய்யில் காலம் உள்ளது.
அந்தந்த காலத்தை அவரவர்கள் பயன்படுத்தாமல் பேராசையினால் காலமற்ற காலத்தில் காரியங்கள் நடைபெற கடவுளின் துணை நாடுவது சரியன்று, 'எல்லோருக்கும் பொதுவானவர் கடவுள்' என்ற உண்மையை புரிந்து பிரார்த்தனைகளும் வேண்டுகோள்களும் நியாயமானவைகளாக இருக்க வேண்டும்.
என்றைக்கு உண்மையான பிரார்த்திக்கும் திறமை உங்களுக்கு வந்துவிடுகிறதோ, அப்போது நீங்கள் கோயில் தேடிப்போவதில்லை, நீங்கள் இருக்குமிடத்தில் கோயில் இருக்கும். கோவில் உங்களைச் சுற்றி சுழன்று, உங்களுக்கான ஒளிமண்டலமாகத் திகழும். உண்மையான பக்தன் கால்பதிக்கும் இடம் இறை இல்லமாக மாறும். மனதிற்குள் கடவுள் இருக்கிறார் என்று உணர்ந்தால் உங்கள் சக்தி புலப்படும்.
யுத்தமோ! விளையாட்டோ! போட்டி என வந்துவிட்டால் இரண்டில் ஒன்றுதான். ஒருவெற்றி! அடுத்து இரண்டாம் இடம். முதலிடத்தினின்று தோல்வி! வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டால் பிரார்த்தனையின் ஆழம், ஈடுபாடு, நீடித்தநேரம் ஆகியவற்றின் அடிப்படையிலோ, எளிய வேண்டுதலின் அடிப்படையிலோ, படோபடமான ஆரவார பிரார்த்தனையிலோ அருள் கிடைப்பதில்லை. பிரார்த்தனை செய்பவரின் நிலைப்பாடு குறித்து ஆராய்ப்படுகின்றது. அவரின் நியாயம், தர்மங்களின் படி தராசின் முள் சாய்ந்து தீர்ப்பு பிரார்த்தனைதாரர்களுக்கு அருளப்படுகின்றது.
எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, என்று கோரிக்கைகள் வைத்து பிரார்த்தனையின்போது வேண்டுவது உண்மையான பிரார்த்தனை இல்லை. அது தன்னலம் கருதி பிச்சை எடுப்பதற்கு சமம். மனிதநேயத்துடன் மற்றவர் நலம், மனநலம் கேட்டு மணமுருகி வேண்டுவது தான் பிரார்த்தனை. இறைவனிடம் பக்தி கொள். யாசிக்காதே. உலக உயிர்களின்மேல் அன்பை பொழிவதே பிரார்த்தனையின் சிறப்பு.
ஸ்ரீ கண்ணனை, நடக்கும் போரில் தங்கள் பக்கம் இருக்க வேண்டும் எனகேட்டுக் கொள்வதற்காக, துரியோதணன் சார்பில் துரியோதனும், தருமன் சார்பில் விஜயனும் சென்றனர். முன் சென்ற துரியோதணன் கிருஷ்ணன் துயில் கொண்டிருப்பதால் முழித்ததும் தன்னைதான் முதலில் பார்க்கவேண்டும் என்ற நினைவில் தலையருகில் அமர்ந்திருந்தான். பின் சென்ற பார்த்திபன் காலடியில் அமர்ந்து கொண்டான். மாயக் கண்ணன் இதை உணர்ந்து துயிலில் இருந்து எழுந்து அமருவதுபோல் அமர்ந்து முதலில் அர்ச்சுனனை நோக்கினார். பின்னர் துரியோதணனை நோக்கினார்.
நான் கண்டது முதலில் அர்ச்சுணனை எனவே, அர்ச்சுணா வந்த விபரம்சொல்! என்றார். அவனும் போரில் தாங்கள் எங்களுடன் இருக்க வேண்டும் என்றான். ஆனால் துரியோதணன் அவரின் பலம் பொருந்திய சேனைகளைத் தந்து உதவுமாறு கேட்டான்.
இருவரின் கோரிக்கைகளையும் ஏற்று சம்மதம் சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர். போரில் ஸ்ரீகிருஷ்ணரது சேனைகளைவிட அவரது பிரசண்ணம் எந்த அளவிற்கு பாண்டவர்களுக்கு பயன்பட்டது, தர்மங்களும், நியாயங்களும் வெற்றிபெற உதவியது என்பதை ‘மகாபாரதம்நமக்கு புரியவைக்கின்றது. எனவே உங்கள் பிரார்த்தனைகளில் உண்மை, நியாயங்கள் இருக்கவேண்டும். அப்போதுதான் பிரார்த்தனைகளின் பலன் கிட்டும்.
ஒருவரின் வளர்ச்சியில் பொறாமைகொண்டு நாம் பிரார்த்தனையில் ஈடுபாடு கொள்ளக்கூடாது. ஒருவரின் வளர்ச்சிக்குப் பின்னால் எத்தனையோ காரணகாரியங்கள் நிகழ்வுகள் அவரின் வெற்றிக்கு வழிவகுக்கின்றன. அவைகளை ஆராயாமல் போட்டியின் காரணமாக பொறாமைகொண்டு நோக்கினால் உண்மைகள் புலப்படாது. அவரின் வெற்றியின் ரகசியம் புலன்களுக்கு புரியாமல் போய்விடும்.
ஒருவரின் நல்லெண்ணங்கள், தீவிர சிந்தனைகள், கர்மபலன், செயல்பாடுகளில் தீவிரமுனைப்பு எனப்பல காரணங்களால் வெற்றிகள் கிடைத்திருக்கலாம். அந்த வெற்றிக்காண வழிமுறைகளைப் பற்றி யோசனை செய்து அதைப் பின்பற்ற முயற்சி செய்யவேண்டும். அதற்குப்பின்தான் பிரார்த்தனையில் ஈடுபாடும் அதன் பலாபலன்களும்.
பிரார்த்தனை என்பது அருளாளரை நம் பக்கம் ஈர்ப்பது என்று நினையாமல், நாம் கடவுளின் அருகில் இருக்க பிரார்த்திக்க வேண்டும். மேலும் பிரார்த்தனையில் இது வேண்டும் அது வேண்டும் என கோரிக்கைகள் வைப்பதைவிடுத்து, மரணத்திற்கு நான் தயார், அதுவரை எனக்கு வேண்டியதை நீயே கொடு எனக்கேட்பது சிறப்பு. உன்கையினால் பொருள்களை அள்ளும்போது உன்கைக்குள் இருப்பதைவிட, ஒருவர் அதே பொருளை அள்ளி உன்கைநிறைய வைப்பது, கொடுப்பது உன்கையில் அதிகமாக இருக்கும். அதேபோன்றுதான் அருளாளர் அருள்வதும். உனக்கு தேவையானது தேவையான சமயத்தில், ஏன் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கும்.
நீங்கள் விழித்திருக்கும்போது கனவுகள் பொய்யாகிறது. கனவு கானும்போது விழிப்பு பொய்யாகிறது. ஆழ்ந்த தூக்கத்தில் கனவு, விழிப்பு இரண்டுமே பொய்யாகிறது. பொதுவாக வாழ்வு பொய்மையில் மெய்மைகான விழைகிறது. மெய்யான உண்மைகளைக் காண அனுபவிக்க தினமும் பிரார்த்தனை உதவும். பிரார்த்தனை மெய்யான வாழ்வுக்காக முழு நம்பிக்கையுடன் நடை பெறவேண்டும். அப்போதுதான் அதன் பலன் தெரியவரும்.
துன்பங்களும், சோதனைகளும் நெருங்கும்போதும், உங்கள் உணர்வுகள் கோபத்தின் வயப்படும்போதும், பிரார்த்தனை செய்யுங்கள். முக்கியமாக நீங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு நன்றி செலுத்தி, சந்தோஷம் மீண்டும் மீண்டும் கிடைத்திட வணங்குங்கள்.
மூடநம்பிக்கை: மனிதனை மனிதன் வணங்குகின்றான். ஏன்! மதிப்புள்ள பெரியோர்களை ஞானிகளை வணங்குதல் முறையே! எல்லோரிடமும் வணக்கம்கூறி பணிவுடன் இருத்தலும் நன்றே! ஆனால் மறைமுக எண்ணங்களுடன் தன் சுயலாபத்துக்காக ஒருவரைத் துதிப்பதால் தனக்கு பெரும் நன்மை கிடைக்கும் என்றநோக்கில் மனிதனை மனிதன் வணங்குதல் கூடாது! அது முற்றிலும் தவறு.
ஓர் அரசன் ஓர் ஞானியின் காலில் விழுந்து தன்தலை அவர் பாதத்தில் படியும் படி வணங்கினான். ஏதும் புரியாத சேனாபதி இதைப்பற்றி கேட்க, மன்னர் தனக்கு ஓர் ஆட்டின் தலை, ஓர் புலித்தலை, ஓர் மனிதத் தலை கொண்டுவர பணித்தார்.
ஆட்டின் தலை சுலபமாகக் கிடைத்தது. புலியின் தலையை வேட்டையாடி பெற்றார். மனிதத்தலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மயானத்தில் இறந்து கிடந்த ஓர் உடலிலிருந்து தலையைப் பெற்றார். அதை மன்னரிடம் காட்ட அவர் அவைகளை விற்று வரும்படி கூறினார்.
ஆட்டுத்தலை விரைவில் உணவுக்காக விற்றது. புலியின் தலை அலங்காரத்திற்காக வாங்கப்பட்டது. மனிதனின் தலையை யாரும் வாங்கவில்லை. இத்தகவலை அரசனிடம் கூற அவர் அதை வாங்குபவருக்கு பணம் என அறிவித்தும் யாரும் வாங்க முன் வரவில்லை. மன்னர், சேனாதிபதியாரிடம், ‘யாரும் வாங்க முன்வராத மதிப்பில்லாத இந்த மனிதத் தலை மாபொரும் துறவிகளின், ஞானிகளின் காலடியில் வைத்து வணங்குவதே அதற்குரிய சிறப்பு’ என்றார்.
அழியும், மண்ணாகிப்போகும் மனித உடலை வணங்கும்போது அதிர்வுகளைக் கொண்ட ஓர் கல்லை வணங்குவதில் தவறில்லை. அதுவும் அந்த அதிர்வுகள் மனிதனுக்கு மிகவும் பயனுள்ளவையாக நன்மைகள் பயப்பனவாக இருக்கும்போது அங்கு சென்று அந்த கல்லுருவை மதித்து வணங்குவதில் தவறில்லை.
ஒரு மன்னர் இந்து மதத்தில் பக்தி கொண்டிருந்தார். ஆணால் அவருக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லை. ஒரு சமயம் பக்திமான் ஒருவர் மன்னரின் அரன்மணையில் தங்க வேண்டியிருந்தது. அவரிடம் விக்ரக ஆராதனையைக் கண்டித்து பேசினார் அரசர். பொறுமையாகக் கேட்டார் பக்திமான்.
மறுநாள் பக்திமானை பார்க்க வந்த ராஜவிசுவாசிகளிடம் என் மீது அன்பு வைத்திருக்கின்றீர்கள், எனக்காக எதுவும் செய்வீர்களா என்று கேட்டு அவர்களிடம், என் மீது காறி எச்சிலை உமியுங்கள் என்றார். அவர்கள் நீங்கள் அரசரின் மரியாதைக்கும் எங்கள் மரியாதைக்கும் உரியவர், நாங்கள் அவ்வாறு செய்ய முடியாது என்றனர். அவ்வாறு எனில் மனித உருவத்தை மதிக்கின்றீர்கள் மகிழ்ச்சி!
உருவமற்ற காகிதத்தில் துப்புவீர்களா எனக் கேட்டார். சரி! என்ற அவர்களிடம் மன்னரின் படம் உள்ள ஒரு பேப்பரில் உமிழச்சொல்ல அவர்கள் திகைத்தனர். அதில் அரசர் உருவம் உள்ளது. அதை அவமதிப்பதாகும் என்றனர். இதுகூடத் தெரியாமல் எப்படி கூறுகின்றீர்கள் என்றார்கள். அழியும் பேப்பரில் உள்ள உருவத்திற்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை பற்றி உங்கள் மன்னரிடம் கூறுங்கள் என்றார். இச்செய்தி கேட்ட மன்னர் அன்று முதல் உருவ வழிபாட்டை மனதார ஏற்றுக்கொண்டார்.
எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்கு ஆலயங்கள் எதற்கு! நிம்மதிக்காக சொத்து, மனைவி, நிலம், வீடு, பொருள் சேர்த்தாலும், மனிதனுக்கு தன் மனதை ஓர்நிலைப்படுத்த ஓர் இடம், தன் துயரங்களைப் பொறுமையாகக் கேட்க ஓர் உருவம் தேவைப்படுகின்றது. நிலத்தின் நீரோட்டங்கள் எல்லா இடத்தில் இருந்தாலும், ஒரு இடத்தின் வழியாக ஊற்றாக வெளிப்படுகின்றது, தாய்ப்பால் சுரக்கும் உடம்பில் இரத்த ஓட்டமிருந்தாலும் மடிவழியே வரும்போதுதான் பாலாக வெளிவருகின்றது.
அன்பு, கருணை சுரக்குமிடம் ஆலயங்கள். எல்லா மதத்திலும் இந்த பொது கொள்கை பின்பற்றப் படுகின்றது. புனிதம் எனக்கருதி ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து, ஓர் உருவத்தை நிலைநிறுத்தினால், மனித சமுதாயத்தின் அங்கங்கள் தன் மனம் குழம்பியபோது தெளிவுபெற, ஆறுதல் அடைய அந்த புனிதத்தை நாடுகின்றது. அது ஒரு புகழிடமாகிவிடுகிறது.
எந்த கோணத்தில் இருந்தாலும் மனித ஆன்மாவிற்கு பயணம் முடியும்வரை துன்பமாகத் தெரிகின்றது. அதிலிருந்து விடுபட ஓர் புகழிடம் தேடுகிறான். தனக்கு அடைக்கலம், ஆறுதல்தர யாராவது இருக்கின்றார்களா எனத் தேடுகின்றான்.
தன்னை சுற்றியுள்ள ஆன்மாக்களிடமிருந்து ஏதும் கிடைக்காது என்ற ஓர் நிலையில் அவன் இறையைத் தேடுகின்றான். அங்கு அவன் குறைகளை சொல்லி விடுதலிலேயே நிம்மதி காண்கின்றான். மூடநம்பிக்கை என்றும், மதபேதங்கள் என்றும் இதில் ஏதுமில்லை. எல்லாம் ஓர் நம்பிக்கையே! உடலும் மனமும் உள்ளத்தின் சக்தியோடு கூர்ந்து சிந்தித்து செயல்படும்போது வேறுபரிமாணத்திற்கு சென்றுவிடுவீர்கள்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880766
All
26880766
Your IP: 54.227.136.157
2024-03-19 16:25

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg

சந்தோஷப்பூக்கள்