ஓம்நமசிவய!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
#####
விந்து சயம்-போக சரவோட்டம்!
1937. நம்மை விருப்புடன் பார்க்கும் பெண்களை நாம் பாராமல் அகன்று போய் ஆராய்கின்ற மனமுருக மூலக்கனலை எழுப்பிக் கண்ணின் வழியாய்ப் போய்ப் பார்க்கும் விருப்பம் பாழாக மூலமான புருவ நடுவில் கண்ணைச் சேர்க்கும் யோகியே சிவம் ஆகும்.
1938. காம மிகுதியில் பொருந்தினால் திருவருளால் வரத்தக்க சிவயோகம் பொருந்தாது. அந்தக் காமம் முதலிய வற்றுள் பொருந்துவோனும் மனவனமை இழந்து அஞ்சுவான். உடம்பும் தன் இயல்பு கெடும். உலகில் உள்ள் தாதுக்கள் உயிரை பாதுகாக்காமல் அழிந்து விடும்.
1939. பெண்களின் வாய்ப்பட்டுச் சென்ற இவர் கூட விரும்பினால் தொடர்ந்து மாறி மாறி வரும் பூர்வம் அபரம் என்ற இரண்டு பக்கத்தில் பூர்வம் என்ற வளர்பக்கத்தில் பொருந்தாத முதல் எட்டு நாட்கள் கூடிய இன்பமானது துன்பம் ஆகும். வளர்பிறையில் பின் ஆறு நாட்களும் சிறுமை இல்லாத தேய்பிறையில் முன் ஆறு நாள்களும் புனர்வதற்கு ஆகும்.
1940. யோக நெறியில் நிற்பவர் வளர்பிறைப் பக்கத்தில் முன் ஆறு நாட்களும் தேய்பிறை பக்கத்தில் பின் ஐந்து நாட்களும் ஆகப் பதினொரு நாட்களையும் விலக்கி மற்ற நாட்களில் கூடலாம். இவரின் வேறான சரியை கிரியை நெறிகளில் நிற்பவர் மாதர் பூப்பு அடைந்த பின்பு கருப்பாயத்தில் உள்ள இதழ் வளர்ந்து கொண்டே வரும். இடைப்பட்ட இருபத்தொரு நாள்களில் பூப்புத் தொடங்கிய ஆறு நாட்களுக்குப்பின் உள்ள காலத்தில் கூடலாம்.
1941. பொருந்தும் அளவில் பொழுது விடிவதற்கு முன் உள்ள நான்கு முகூர்த்தமே விந்துவை பதிப்பதற்குரிய காலம். சந்திரகலை சூரியகலையில் அடங்கியபோது கலந்து கூடிக் காமநூலில் சொல்லியபடி புனர்க. விந்துவைப் பதிப்பதாயின் வலமாகவும் இடமாகவும் இல்லாமல் சுழுமுனையில் பொருந்தி விடுக.
1942. மிக்க காதலையுடைய பெண்களிடம் ஆசையை விட்டு மூலவாயுவையும் அந்தக் கரணங்களையும் அகமுமாக்கி எழுச்சி கொண்ட இந்திரியங்களைப் போன்று சலனம் இன்றி இருப்பானும் பொறி புலன் ஒருமைப் பட்டு நிற்க விந்துவினை விடுக.
1943. மங்கையர் குணமும் நலமும் நல்ல இளமையும் பழைய வடிவமும் பகர்கின்ற பவழம் போன்ற வாயும் மிண்டும் தனமும் புனரும்போது மனம் முதலிய அந்தக் கரணம் இவற்றுடன் பதியாது அகமார்க்கமாகச் செல்லக் கண்டு விந்துவை விடுவாயாக.
1944. விந்துமை மங்கையின் கருப்பையில் விட்ட பின்பு கர்ப்ப உற்பத்தி விதியின்படி தீண்டிய காலம் முதலியவற்றை நன்கு விளக்கமாக ஆராய்ந்து உடலுடன் பொருந்திய சிசுவின் வாழ் நாள் சாகும் நாளைப் பற்றியும் குணம் இழிவைப் பற்றியும் மேன்மையான நெறியைப் பற்றியும் இது இது என்று நினைத்துப் பார்த்து அறிவாயாக.
1945. உலகத் தொடர்பின்றி கருப்பையில் வளர்ந்து உறுப் பெற்றுப் பெண்ணினின்று நீங்கியே உலகில் சேர்க்கப் பெற்று அக்குழந்தை இரண்டு மாதங்கள்கூட வாழாமல் நீங்கி மூப்படைந்து பின்நாளில் நீங்கினும் எல்லாம் எண்ணுவதற்கு ஆகும்.
1946. விதை விதைப்பவர்க்கே அல்லாமல் விதைக்காதவர்களுக்குப் பயன் ஏதும் ஏற்படுவதில்லை. அங்ஙனமே வித்தின் பயனை அறிந்து ஒளி செய்பவர்க்கு அல்லாது அறிவும் இல்லை. விந்துவே ஒளியாய் மாறுகின்றது என்று சலனம் இல்லாது உணர்பவர்க்குத் தயிரில் இருக்கும் வெண்ணெய் போல் உயிரில் உள்ள சிவக்கனியாகும்.
1947 .தலையெழுத்து எனப்படும் பிரமன் எழுத்து ஆயுள் முதலிய யாவும் ஈசன் கருவில் பதியும் உயிருடன் கருத்தில் அமைத்துத் தானும் இருக்கின்றான். அவ்வாறு கருத்தில் உள்ளதே விந்தாய்ப் புறத்தில் உள்ளதைக் காரண காரியமாய்க் கருத்தில் எண்ணுவது கற்பனையாகும்.
1948. நீங்காத மனத்தின் ஒளி மண்டலம் உடலுடனே கூடி நிற்க நிற்கின்ற அழியா உயிரும் அவையற்ற ஆற்றலும் குறைவில்லாத அறிவின் அகலமும் தவம் செபம் பிரணவ சித்தியும் அழியாத எட்டுவகைச் சித்திகளும் பருவிந்து இவற்றினால் அடையத்தக்கனவாம்.
1949. பருவிந்துவற்றிப் போகும்படி மூலாதாரத்தில் உள்ள குண்டலியான தீயைப் பெருக்கி விந்து கீழ் நோக்காதவாறு தடுத்து மேல் ஏற்றுவதால் அமையும் விந்து ஞானத் தீயில் பொருந்தி அங்குள்ள ஒளியை அடைந்து பூரண சந்திரமண்டல அமுதைப் பல தடவை பெருக்கி உன்பவரே சிவயோகி ஆவர்.
1950. யோகியும் ஞானியும் உத்தமனான சித்தனும் போகியும் ஞானத்தில் உயர்ந்த பதவி வகிப்பவனும் காமம் வந்தபோதும் கூறப்பட்ட முறை அறிந்து அமுதம் உண்பவனும் என்னும் இவர் விந்துவை வென்ற வீரர் ஆவார்.
1951. சிவயோகியர்க்குச் சிவத்தின் உடலே தம் உடலாகும் சிவாக்கினியான ஒளியும் மண்ணுலகத்தின் அழிவைச் செய்யும் சத்தியான வீரியமும் மூலக் கனலுடன் சேர்ந்து உண்டால் அதுவே அமுதம் ஆகி அறிவாகும்.
1952. மக்கள் விந்துவின் அருமையும் பெருமையும் அறியாமலே கெடுகின்றனர். அதனால் நாள்தோறும் பொறிகள் வயப்பட்டு மனம் அழிந்து உடல் அழிந்து வருந்துகின்றார்கள். ஞானமே வடிவாய் நனவில் துரியாதீதத்தில் சிவத்துடன் செறிவாகப் பொருந்தியிருக்கக் கீழ் உள்ள வீரியம் மேல் முகமாகி ஒளியாகித் தூல விந்து அழிந்துவிடும்.
1953. பெண்களைக் கொல்லும் இயமன் என்று நினைக்க காதலால் விளைவதான காமமானது விலகும்.. காமக் கழிவில்லாததால் இறப்பு இல்லை. நூறு கோடி ஆண்டுகள் சிவச் சோதியில் கலந்து ஆணவக் குற்றம் நீங்கும் காலம் ஆகும்.
1954. விந்துவை வெற்றி கண்டவன் காலத்தை வென்றவன். விந்துவை அழித்தவன் காலத்தால் வெல்லப்பட்டு அழிந்தவன். விந்துவை வென்று விளங்கும் காலங்களில் குண்டலினி சத்தி மூலவாயுவில் பொருந்தி மேலே எழும் இன்பத்தை அடையமாட்டார்.
1955. மங்கை ஒருத்தியுடன் புணரும் நாளுக்கு முன் நாளில் கணவன் தன்னிடம் காதலால் விளையும் இன்பத்தை அடைய வேண்டின் அந்த மங்கையின் வயிறான பாண்டத்தில் மலத்தையும் வாத பித்த சிலேத்துமத்தையும் விலக்க வேண்டிய அளவுக்கு விலக்கிப் பொருந்துவர்.
1956. ஆஞ்ஞையில் உதிக்கின்ற விந்துவும் நாதமும் கீழ்முகம் ஆகும்படி சுழுமுனைத் தியானம் செய்து பிரமரந்திரத்தின் வழியே போய்ப் பால் போன்ற வெண்மையான மதிமண்டல ஒளியில் பொருந்திக் கீழ் உள்ள பற்றை விட்டால் கீழ் முகமான மயக்கம் கெட வீரியமும் வற்றிப் போகும்.
1957. பரு விந்து விளையும் முறையும் அந்த வீரியம் முதிர்ந்து நிற்பதால் அடையும் பயன் முழுவதையும் அறியாதவர் அடையும் அழிவும் அறிந்தவர் விந்துவை அடக்கி ஆள்வதால் அடையும் சிறப்பும் அதனால் பெருகிய நாதமும் அதன் வகையும் என்பவனவற்றை ஆராய்ந்து அறிவார்க்கு விந்து வெற்றி உண்டாகும்.
1958. விந்து என்ற பெயரையுடைய் வித்தை அது உள்ள மூலாதரத்திலே ஓங்கி எரியும் குண்டலினித் தீயால் விரும்பி எரித்து அந்தச் சத்தியை முடிவில்லாத கதிரவ மண்டலத்தில் ஏற்றி மதி மண்டலத்தைச் சாரச் செய்தால் குலிர்ந்த அமுதாகும்.
1959 அமுதமான சந்திர மண்டலத்தில் உள்ள விந்துவில் உடலில் தோன்றிய வீரியம் கலந்து கெட உடல் முழுவதும் புனல் பரவிச் சிவத்தீயில் இலயிக்க அமுதமயமான சிவபோகம் விளையும். ஆதலால் சிவயோகிக்கு அமுதமான சித்தி பொருந்தும்.
1960. யோக நெறி கொண்டு விந்து அழியாமல் புணர்ந்து ஆணும் பெண்ணும் ஆன இரு உடல்கள் கலந்தாலும் விந்து நழுவிப் பெண்ணிடம் சிந்தாமல் அமையும் புணர்ச்சியே சிவயோகம் ஆகும். இங்ஙனம் நல்ல முறையில் யோகத்தில் மாதர் ஆசையைப் போக்கமாட்டாதவர் மூடர் என்னே அவர்தம் அறியாமை.
1961. யோக நெறியில் நிற்பவர் மங்கையுருடன் புணர்ந்தாலும் அந்த விந்துவைக் காதலினால் விடமாட்டார். மங்கையரோ யோகியரை உயிர் போன்று எண்ணி ஆசை கொண்டு வருத்துவர். கூறப்போமால் நீண்ட காலம் பழகிய காதலைப் போன்று அப்பொழுதே உயிர்க்காதல் செய்வர்
1962. சத்தியால் விந்து வெற்றி உண்டாகும். தூண்டிய மூலாதாரத்தில் உள்ள அனலை மேல் செல்லும்படியாகச் செய்து நான்கு பக்கமும் சிதறிப் போகாதபடி வீணாத்தண்டினூடே அசைவு உணர்ச்சியில் பொருந்தச் செய்து அமுதம் உண்ண ஒளிமண்டலம் ஆகும்.
1963. தலைமீது விந்துவும் நாதமும் உயர்ந்து பொருந்தி வந்த மூலாதாரத் தீயின் வெப்பம் மயிர்க்கால் தோறும் நிறைய நம் சிந்தனை ஆன்ம போதத்தை விட்டுச் சிவோகமப் பாவனையில் நிலைபெற உண்மையான உடலில் விந்து வற்றிப் போகும்.
1964. விதையினைக் குத்தி உண்பவ்ன் விதையால் ஆன பயனை அடைய மாட்டான். விதையைக் குத்தி உண்ணாமல் விதையை வறுத்து உண்பவன் விதையைக் குத்தி உண்பவனைப் போன்றவனே தவிர வேறல்லன். இவ்விரண்டும் அல்லாத மூன்றாமவன் விதையைக் குத்தி உண்ணாமல் விதையை விதைத்து விதையின் பயனைப் பெருக்கிக் கொண்டவன் ஆவான்.
1965. இந்த உடம்பு அன்னமய கோசம். இதில் விந்து வற்றும் முறையை அறிந்து பிராண சத்தியான வீரியம் கீழ் நோக்காதபடி தடுத்து மேலே பொருந்தும் வகையில் மின்னல் ஒளியுடன் கூடிய விந்து நாதாந்தத்தில் நிலை பெற்றால் பிரணவ ஒளி தோன்றும் காரணமான தூல வீரியம் வெளிப்படாமல் உடம்பில் வற்றி விடும்.
1966. மக்கள் எல்லோருக்கும் அன்ன சாரமான வீரியம் எனவும் பிராணசாரமான ஒளி மண்டலம் எனவும் இரண்டு வகையுண்டு. பிராண சார்மான ஒளி மண்டலத்தை அறிந்து அதிலே நிலைபெற்றுச் சாதிக்க வல்லார்க்குப் பொன்னொளிமயமான உடல் சித்தியும் எண்பெருஞ் சித்தியும் உடல் சித்தியும் வாய்க்கும். அத்தகைய சிவ யோகிகள் அழியாமல் நீடு வாழ்வார்கள்.
1967. திருவைந்தெழுத்தில் முதலாவதாய் உள்ள சி கரம் இருகண்களில் அக்னி தன்மையுடன் ஒளிரும் கலையாக, பிரணவத்தில் உள்ள ம கரம் தொண்டையைக் கடந்து வெளியான் போது அ, உ, ம மூன்றும் ஒன்றாக அவை பராசத்தி நிலையமான புருவத்தின் நடுவில் போய்ப் பொருந்துவதால் உண்டாகும் விந்து வெற்றியைப் பொருந்த உரைப்பதே உபதேசம் ஆகும்.
1968. ஆன்மாவான தான் அடையும் உபதேசம் என்பதும் தானே அனைத்துப் பொருள்களிலும் கலந்துள்ளவன், தன்னை அல்லாது வேறு ஒரு பொருள் இல்லை என்பதுமாம். அத்தகைய ஆன்மா விளங்கும் ஒளி மண்டலத்தில் உயர்ந்து செல்கின்ற ஒளியாய் அதனால் காரியப்படும் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் அந்தக் காரணங்கள் ஆகிய பதினான்கும் வெளியே செல்வதை விட்டு உள்ளே அடங்க அதன் ஆன்ம அறிவும் அகன்ற அறிவும் ஒன்றாதல் அமையும்.
1969. நுண்மையான விந்து நாதங்கள் விளைதலால் இந்த உலகத்தில் உயிர்களுக்கெல்லாம் உடலுடன் கூடிய தோற்றம் உண்டாகியது. உயிர்களுக்கு முடிவும் தோற்றமும் மந்திரங்களின் ஆற்றலும், விந்து நாதம் ஆகியவற்றில் உள்ளன். விந்து அமைய அகண்ட சிவம் முடிவும் தோற்றமும் மந்திரங்களின் ஆற்றலும் விந்து நாதம் ஆகியவற்றில் உள்ளன. விந்து அமைய அகண்ட சிவம் அகம் ஆகும்.
1970. விந்துவை மறுபடியும் தோன்றாதபடி வறுக்கும் முறையும். எவ்விடத்தும் உலவும் உள்ளத்தைத் தடுத்து நிறுத்துவதால் வெற்றியைத் தரும் முறையும் அதை உயர்ந்து போகும் சகசிர தளத்தில் செலுத்திப் பக்குவம் செய்யும் முறையையும் அந்தக் கொடிய வினைகளைப் போக்கும் நாளில் வரும் .அவ்வமய்த்தில் சிவாக்கினி பக்குவமான கனியாகும்.
1971. விந்துவும் நாதமும் பொருந்தி உயர்ந்து போய்ச் சந்திரம்ண்டலத்தில் அமையும்போது பராகாயத்தில் ஒளி மண்டலம்- அமுதம் சிறந்து விளங்கும் அங்கு ஏற்படும் பிரணவ ஒளியே ஆகுதிக்குரிய மந்திரம் ஆகும்.
1972. மனத்தின் சத்துப் பாகம் வேள்விப் புலன் வழியாய் நாதமயமாய்ப் பொருந்தியவற்றை நாடி அதன் இன்பமான விந்துவில் திகழ்வர். உள்ளத்தில் அசத்துப் பாகத்தில் தோன்றுகின்ற நுண்மை வாக்கும் பரு வைகரியான வாக்கும் காம நோக்காய் இருக்குமாயின் தூல விரியம் உண்டாகிக் கெடுவர்.
1973. நாதமும் அதனை உணர்கின்ற மனமும் மனக் கருத்து ஒருமித்துச் சிவம் உள்ள இடத்தையும் அறியார். அதை உள்ளபடி உணர்ந்தாரானால் சிவபெருமான் இருக்கும் இடம் அதுவே என்பதையும் அறிவர்.
1974 .வன்மையான பாதம் நிலம், கொப்பூழ் நீராகும் கொப்பூழ் முதல் மார்பு வரை நெருப்பாகும். மார்பு முதல் தோள்வரை காற்ராகும். கழுத்தும் அதன்மேலும் வான் ஆகும்.
#####