ஓம்நமசிவய!
#^#^#^#^#
வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!
#^#^#^#^#
2.வாழ்க்கை தர்மம்!
எல்லா ஜீவராசிகளுக்கும் பிறப்பு என ஒன்றிருந்தால் இறப்பு நிச்சயம் என்பதை உணர்ந்து இயமனுக்குப் பயந்து நல்ல தர்மங்களைச் செய்திடல் வேண்டும். நாளை நாளை என தள்ளிப் போடாமல் யோகமும் போகமும் பெற்று நலமுடன் வாழ்ந்து இறுதியில் சொர்க்க போகத்தைப் பெற்றுவாழ முயற்சிக்க வேண்டும்.
அனைத்து உற்பத்திகளுக்கும் பசி-உணவு, உறக்கம்-விழிப்பு, அச்சம்-பயம், புணர்ச்சி ஆகிய உணர்வுகள் இருந்தாலும் மனிதனுக்கு மட்டும்தான் ஞானம் உண்டு. அதனால் கல்வி வித்தை எல்லாம் கற்று ஞானம் அடைந்து தெளிய வேண்டும். உடல் தேகம் பெற்ற ஜீவர்கள் சுவர்க்கம், மோட்சம் அடைய உள்ளத் தூய்மை, பக்தியுடன் பிரார்த்தனை செய்தும் தானதர்மங்களைச் செய்தும் தர்ம மார்க்கத்தைப் பின்பற்றி முக்திக்கு முயலவேண்டும்.
பிராணிகளைக் கொல்லாமை, உண்மையே பேசுவது, எளியோரிடம் இரக்கப் படுதல், பிராணிகளிடம் அன்பு, இறைவனிடம் பக்தி, மறையோர், மூத்தோர் முதலியவர்களிடம் பணிவாக நடத்தல், பெற்றவர்களை ஆதரித்தல், அனைவரிடமும் நட்பு பூணுதல், மூதாதையர்களை வணங்குதல், ராஜபக்தி, கஷ்டங்களில் மனம் தளராமை, கற்க வேண்டிய விஷயங்களை தெளிவாக நுட்பமாகக் கற்றல், இறையிடம் தளராத நம்பிக்கை வைத்தல் ஆகிய விதி முறைகளைக் கடைப்பிடிப்பதுடன் புல், பூண்டு, செடி, கொடிகள் போன்றவைகளை தெரிந்தோ தெரியாமலோ பிடுங்கி அல்லது வெட்டி எறிதல் உயிர்க் கொலை பாவத்திற்கு ஒப்பானவை என்பதையும் அரிய வேண்டும்.
அடுத்தவரைப் பார்த்து பொறாமை படாதிருத்தல், மன்னித்தல், சிரமமில்லாமல் இருத்தல், மங்களமாக இருத்தல், தீயச்சொற்களை உபயோகிக்காதிருத்தல், நல்ல வார்த்தைகளை பேசுதல், இருப்பதைக் கொண்டு திருப்தியடைதல், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாமல் இருத்தல் ஆகியவற்றை அறிந்து தர்மம் தவறாமல் அற வழியில் வாழ்க்கை நடத்துபவன் எந்த இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்கு பிரம்மத்துவ பதவி கிட்டும்.
மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ!
ஆசார்ய தேவோ பவ! அதிதி தேவோ பவ!
என்கிறது தைத்திரிய உபநிடதம். அதாவது தாய், தந்தை ஆசிரியர், விருந்தினர் ஆகியோரைத் தெய்வமாகப் போற்றி வாழ வேண்டும் என்கிறது உபநிடதம்.
#^#^#^#^#