ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#*#*#*#*#
12.ஆசாரியர்,உபாத்தியாயர்,குரு/ரிஷி,மகாகுரு/மகரிஷி!
உயர்ந்த நிலை யக்ஞம், வித்தை, உபநிஷதம் ஆகியவற்றின் உள்ளார்ந்த ரகசியங்களைக் கற்பிப்பவர் ஆசாரியர் எனப்படுவார்.
வாழ்க்கையில் வேத விதிப்படி தொழில் செய்ய கற்றுத் தருகிறவர் உபாத்தியாயர்.
மாணவனைத் தன்னுடன் தங்கவைத்து அன்னமளித்து போஷிப்பவர் குரு/ ரிஷி ஆவார்.
அக்னி ஹோத்ரம், யாக சம்ரட்சனம் ஆகியன சொல்லிக் கொடுப்பவர் மகாகுரு/ மகரிஷி எனப்படுவார். எல்லா சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர். வேதங்கள், தர்மங்கள், நியாயம், தர்மம் எல்லாம் தெளிந்து புரிந்தவர்.
ஆச்சாரியார்- பிரம்மாவிற்கு சமமானவர், பிதா-பிரஜாபதி, மாதா-பிருத்வி-மண்மாதா, அண்ணன்- ஆத்ம மூர்த்தி, ஆகிய இவர்களை அனாதையாய் விடக்கூடாது. பிதாவைப்போல் பிதாவின் பெறிய சிரிய சகோதர்களையும் உயர்வானவர்களாக கருத வேண்டும்.
கற்றுத் தேர்ந்தபின் தன் சொந்த முயற்சியால் தனத்தைச் சேகரிக்க வேண்டும் எப்படி வேண்டுமானாலும் சேமிக்கலாம் என்றில்லாமல் தர்ம வழிகளில் சேமிக்க வேண்டும். சொந்தமாகத் தனம் பெற்று குருவிற்கு தட்சினை கொடுக்க வேண்டும். குரு தட்சணை கொடுத்தால்தான் தான் கற்றது முழுமையான பலனைத் தரும். தனம் இல்லையென்றால் இல்லறம் கேள்விக்குறியாகி விடும்.
எந்த மனிதனும் அவன் நடத்தையின் மூலம்தான் உயர்வாகக் கருதப்படவேண்டும் என்கிறது புராணங்கள். வேதங்கள் படித்தால் மட்டும் போதாது அதன்வழி நின்று செயலாக்கம் வேண்டும்.
#*#*#*#*#