ஓம்நமசிவய!
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!
&&&&&
சஷ்டி திதி!
திதிக்குரிய விநாயகர்- துவிஜ கணபதி. முருகனுக்குந்த இந்நாளில். பழம் மட்டும் உண்டு பூஜை. காய்கறிகள் சாப்பிடவும். முருகன் தேவரின் சேனாபதி ஆன நாள். புரட்டாசி சஷ்டி விசேஷ பலன் தரும். சஷ்டியில் உபவாசம் இருந்தால் கருப்பையில் கரு உண்டாகும்- ஐப்பசி வளார்பிறை சஷ்டியில் ஷண்முகனை நினைந்து விரதம்- சந்தான பாக்யம் கிடைக்கும். சர்வமங்களம் சேரும். சஷ்டி விரதம் என்பது ஐப்பசி மாதம் அமாவசையிலிருந்து தொடங்கி வளர்பிறை ஆறாவது நாள் சஷ்டி அன்று நிறைவு. சஷ்டி தேவி- தேவர்கள் அசுரர்கள் போரில் முருகன் தேவர்களின் படைத் தளபதியாகப் பொருப்பேற்று களத்தில் செய்த வீரத்தின் அழகைக் கண்ட மகாவிஷ்ணுவின் கண்ணில் ஆனந்தக்கண்ணீர் நிலத்தில் சிந்த அது ஒரு பெண் வடிவமானது. மக்களுக்கு ஆனந்தத்தையும் நலத்தையும் அருள வல்லவள் என மகாலட்சுமி ஆசீர்வதித்தாள். அமாவாசைக்கு அடுத்த ஆறாம் நாள் தோன்றியதாள் சஷ்டி எனப் பெயர் சூட்டினர். ஐராவதம் அப்பெண் குழந்தையை தேவேந்திரனிடம் கொடுக்க இந்திரனும் இந்திராணியும் சஷ்டி தேவியை தங்கள் மகளாகப் பாவித்து வளர்த்தனர். சஷ்டி தேவி வீரத்துடன் தேவர்கள் படையிலிருந்து போர் புரிந்தாள். தேவர்கள் சேனையில் இணைந்து போரிட்டதால் தேவசேனா எனப்பட்டாள். இந்திரன் தேவசேனாவை முருகனுக்கு மணம் செய்துவித்தான். இந்நிகழ்வே சூர சம்ஹார நிழ்வின் இறுதியில் தெய்வானையின் திருக்கல்யண வைபவம் நடைபெறுகின்றது. பெண்களுக்கும் குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கும் அவர்களது குழைந்தைக்கும் பாதுகாப்பு அளிப்பவள்
$$$$$