சக்திபீடம்-10-லூ/ல்ரூம்
ஓம்நமசிவய!
முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.
#*#*#*#*#
எண் சக்திபீடம்-10
அட்சரம் லூ/ல்ரூம்(பத்தாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் ஏகாம்பர க்ஷேத்திரம்
அட்சரதேவிகள் லூகாரதேவி/ லூஞ்ச்சகாதேவி
அங்கம் மணிக்கட்டு
பைரவர்/இறைவன் சரவணாநந்தநாதர்
அங்கதேவி/இறைவி காயத்ரி
பீடங்கள் ஏகாம்பராயை நம
51-ல் நம் உடலில் இடது கன்னம்
ஊர் புஷ்கரம்
அருகில் ஆஜ்மீர் அருகில்
மாகாணம்/நாடு ராஜஸ்தான்
இது ஏகாம்பர எனும் மகாசக்தி பீடம். வித்யார்த்திகள் தவம் செய்யுமிடம். காய்த்ரி பீடம் கொண்ட தலம் இது. எனவே காயத்ரி பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. முத்தேவிகளின் உறைவிடம்(சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி)புஷ்கரம்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
சிகப்பு நிறமேனி- பத்து கரங்கள்- புஷ்பதந்தம் என்ற யானை வாகனம். வலது கரங்களில்- திரிசூலம், பாசம், முஸ்லம், பிறை போன்ற அரிவாள், வரமுத்திரை, இடது கரங்களில்- கட்கம், கதை, கத்தி, கேடயம், அபய முத்திரையுடன் காட்சி.
தியானஸ்லோகம்:
லுகாரா லூஞ்ஜி காரக்யைஷா புஷ்ப தந்த கஜாச் திதா
ரக்தா தச புஜார் தேந தக்ஷாதி க்ரமச கரை
த்ரிசூலம் பாச முஸலம் சந்த்ர ஹாஸ வாரந் சுபாந்
வாமை கரி கட்கடே கதா சக்த்ய பயாம் ஸ்ததா:
#####