ஓம்நமசிவய!
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.
#####
அருளுடைமையின் ஞானம் வருதல்!
1645. சிவபெருமானின் அருளானது உண்டாகுமானால் நல்ல செல்வம் உண்டாகும். சிவபெருமானின் அருள் உண்டானால் நல்ல ஞானம் உண்டாகும். சிவபெருமான் அருளில் பெருந்தன்மையுண்டாகும் அவர் பெருந்த்ய்வம் ஆகும்.
1646. சரியை வழி நிற்பவர் தமிழ்நாடும் அதைச் சுற்றியுள்ள கன்னடம் மலையாளம், துளுவம் தெலுங்கு ஆகிய மண்டலங்களில் உள்ள பதிகளை அடைந்து வழிபடின் அவர்களிடம் மறைந்துள்ள ஞானம் வெளிப்படும் என் எண்ணி அலைந்து திரிவர். இந்த உண்மையை தம் உடலில் உணர்ந்து ஒரு பொருளான சிவமே பலசக்திகளாக இருக்கின்றது என அறிந்து எங்கும் போகாமல் இருந்த இடத்திலேயே சிறந்த வழிபாட்டை ஆற்றிப் பெரும் பய்னை அடைவர்.
1647. உலகில் புண்ணியம் பாவம் என இரண்டு உள்ளன. அவை வினை காரணமாக இன்ப துன்பமாய் பொருந்துகின்றன் என்று உணர்வார் சிவஞானியர். உணர்ந்து இவற்றுக்குக் கார்ணமான வினை வேரினை அறுத்து அண்ணலை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.
1648. வினைகள் முடியும் காலத்தில் சிவம் தன் சத்தியை ப்திப்பித்து ஆள்வான். அந்த நிலை வராத இடைக்காலத்தில் உயிர்க்கு உயிராய் நின்?று வினைகளை தூய்க்கச் செய்யும். உயிர்க்குப் பின் நின்று பிறவியை நீக்கும், அவன் முன் தோன்றி வீடு பேற்றை அளிப்பான்.
1649 சிவத்தின் அருள் பதிவதால் சிலர் தேவ வடிவம் பெறுவர். சில்லர் அவன் அருளால் தெய்வத்தன்மை பெறுவர். சிவத்தின் அருளால் வினை சேராது. சிவனருள் பற்றிச் சொன்னால் சொன்ன மூவரும் சிவவுலகத்தார் ஆவர்.
1650. புண்ணியத்தின் பயன் ஆனவனும் என் தந்தையுமாகிய சிவத்தின் விந்து நாதமாகிய இரு திருவடிகளைப் பொருந்திய போது விளக்கொளிபோல் ஞானம் விளங்கும். ஞானியர் ஆவதும் விண்ணுலகில் தேவ வடிவில் விளங்குவதும் அண்ணலான சிவனது அருளைப் பெற்றபோதே ஆகும்.
1651. உடல் என்ற தேரில் ஏறி மனம் என்ற பாகன் இயக்க அழியும் தத்துவ உணர்வுகளில் தலைப்பட்டு மயங்கும் உயிர்கள் உணர்வில் விளங்கும் ஒலி மண்டலத்தில் அமர்ந்து மலம் அற்ற சதாசிவ குருவின் அருளைப் பெற்றால் அடியவ்ர் கூட்டத்தில் ஒருவனாகி சிவ வடிவு அடையலாம்.
1652. சீவன் உலக ஞானத்துடன் பிறந்தால் எடுத்த உடலிலேயே சிவவுலகு சேரும் அரிய தவத்தை நாடுவர். சிவவுலகத்தில் சிவன் அடியை அடைவர். சிவ உலகத்தில் சிவ சத்தியின் ஆற்றலை அடைவர்.
1653. பகலவனைக் கண்ட சூரிய காந்தக்கல் தீயின் வடிவம் ஆகும். திங்களைக் கண்ட சந்திரக் காந்தக்கல் முத்தினைப் போன்ற நீரின் வடிவம் ஆகும். சக்கியுடன் மோதும் முக்கியைக் கொண்ட சக்கி முக்கித் தீயை உண்டாக்கும் தீயின் வடிவம் ஆகும். அக்னிமண்டலத்தை தன்னகத்தே கொண்ட சிவன் அக்கினித் தன்மையை விட்டு அழகிய சந்திரன் ஒளிமயமாய் இருப்பான்.
1654. நான் தேடும் உறவாய் குருநாதனான சிவத்தை பொருந்தி தேடுவேன். சிவபெருமான் என்று கூடுவேன். கூடி ஒலிக்கும் திருவடிக்குச் செல்வதற்கு உடலை விட்டு உயிரைப் பிரிந்து அறிகின்ற வரையிலே விடமாட்டேன்.
#####