குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
4-4.இயற்கை! நியதிப் பூக்கள்!
Written by குருஸ்ரீ பகோராஇயற்கை! நியதிப் பூக்கள்!
இயற்கை எல்லையில்லா ஓர் உலகம். என்ன இல்லை அதில். எல்லாம் இருக்கின்றது. மனித வாழ்வின் இயக்கத்தில் பெரும் பங்கு கொண்டது. வான்மழை பொழிகின்றது. மன்னும், மரம், செடி, கொடிகள் எல்லாம் அதை ஏற்றுக்கொள்கிறது. அதில் எல்லாவற்றிற்கும் ஓர் ஆனந்தம் இருக்கின்றது. மழையில் நனைந்து பாருங்கள் அந்த ஆனந்தம் புரியும். இயற்கையின் மழையில் எத்தனை ஆனந்தம் பொதிந்துள்ளது. அதை வாங்கி மரங்களும், செடிகளும் எவ்வாறு அந்த ஆனந்தத்தை வெளிப்படுத்தி பூத்து குலுங்குகின்றன. இயற்கையின் வளத்திற்கு பயன்படுகின்றது என உணரும் போது அந்த மழையில் எவ்வளவு ஆனந்தமும் சந்தோஷமும் பொதிந்துள்ளது என்ற உண்மை நமக்கு தெளிவாகிறது.
மழையிலிருந்து பெற்ற ஆனந்தத்தை அவைகள் பூத்து குலுங்கி நமக்கு காட்டும் போது அதை உணர்ந்து, பார்த்த நாமும் ஆனந்தம் அடைகின்றோம். நாம் ஆனந்தம் அடைந்தால் நம் செயல்களில் மாற்றம் தோன்றி, நம்மை சுற்றியுள்ளவர்களும் ஆனந்தம் அடையமுடியும். இப்படியே ஒன்றிடத்திலிருந்து ஒன்றுக்கு மாறி மாறி ஆனந்த அலைகள் பரவவேண்டும் என்பது இயற்கையின் நியதி!
அதை உணர்ந்து செயல்பட்டு நம்மைச் சார்ந்தவர்களையும் உலகையும் சந்தோஷப்படுத்த நாம் செயல்படவேண்டும். வெய்யிலில் வாடிய ஒருவனுக்கு நிழலில் இருக்கும்போது ஆனந்தம் ஏற்படுகின்றது. தாகத்தில் இருப்பவனுக்கு நீர் ஆனந்தம் ஏற்படுத்துகின்றது. சோகத்தில் இருப்பவனுக்கும் இயற்கையின் சூழல் ஆனந்தத்தை ஏற்படுத்தும்.
வண்ணவண்ண மலர்கள், பறவைகள், ஊர்வன, விலங்குகள் இவைகளை எல்லாம் விதவிதமாக பார்க்கும் போது மன இறுக்கம் தளர்ந்து மகிழ்வு ஏற்படுகின்றது. தண்ணீர் ஓடும்நீர் தெரிந்ததுதான். அதையே உயரமான மலைமேலிருந்து கீழ் இறங்கும்போதும், அந்த சாரல் நம்மீது படும்போதும், அந்த தென்றலின் சுகம் மேனியில் படரும்போதும் இயற்கையின் மடியில் நம் உள்ளம் உணர்ச்சிவயப்பட்டு சந்தோஷம் காண்கின்றது.
எனவே இயற்கை நம்மை சந்தோஷிக்க, நாம் ஆனந்தமடைய தோன்றிய ஒன்று. நம் பயணத்தில் நாம் சந்தோஷம் என்ற இலக்கையடைய பயணிக்கும்போது இந்த நியதி நமக்கு மிகமிக உதவும். இயற்கையில் பழையன எதுமில்லை. எல்லாமே புதியனவே! உலகின் ஏற்படும் அதிர்வு அலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது இயற்கை தன்னை புதிப்பித்துக் கொள்கின்றது.
இயற்கையின் அழகை ரசித்த கவிஞர்களும், புலவர்களும், தாங்கள் ரசித்த அந்த அழகை வாழ்வியலில் பலநிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பாடல்களும், கவிதைகளும், புனைந்துள்ளதை நாம் இன்றும் படித்தும் கேட்டும் ஆனந்தப்படுகின்றோம். அதற்கு ஓர் ரசிகத்தன்மை இருந்தால் போதும் நீங்கள் புனையவேண்டும் என்பதில்லை.
பஞ்ச பூதங்களால் ஆன உடம்பு. பஞ்சபூதங்களால் ஆகிய இந்த உலகத்தை அனுபவித்து அதையே வாழ்க்கை என நினைக்கின்றது. நம் உடம்பு எதன் ஆதாரத்தில் அனுபவிக்கின்றது என்பதை நாம் உணரவேண்டும். நீர் உலக சூழலில் பனியுமாகலாம், இன்னொரு சூழலில் ஆவியாகி மேகமாகின்றது. ஆனால் மீண்டும் ஓர் சூழலில் மழையாகி பூமிக்கு நீராக வருகின்றது. அதைப் போலத்தான் வாழ்க்கையில் உடலும் உடலின் ஆன்மாவும் எதை அனுபவித்து சந்தோஷப்பட்டாலும் மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு வரவேண்டும் இதுதான் நியதி!
நீர்வாழ் உயிரினங்களுக்கு நீர்தான் ஆதாரம். நீரைவிட்டு வெளியில் வந்தால் மற்ற ஜீவராசிகளுக்கு உணவாகிவிடும். மண்ணில் பிறந்த உயிரினங்களுக்கு மண்ணில் தான் உணவு கிடைகின்றது. அதைவிடுத்து நீருக்கு சென்றால் அது அங்குள்ள ஜீவன்களுக்கு உணவாகிவிடும். எந்த உயிரினங்கள் எந்த பஞ்சபூதத்திலிருந்து தோன்றினவோ அதன்வழிதான் அதற்கு சரியான உணவு. இது நியதி!
மனிதனின் சேமிப்பு, பகிர்ந்து கொள்ளும் உணர்வை படிப்படியாக அழித்து விடுகின்றது. நாம் எதையும் நாமாகப் பெறவில்லை. எல்லாம் நம்மூலமாகத் தரப்படுகின்றது இது நியதி. இயற்கை தன்னிடம் இருப்பதை எல்லாம் நமக்கு தருகின்றது. அதன் மூலம் நாம் பயனடைந்து நம் சந்ததியும் வாழ வழிவகுக்க வேண்டும் என்பதுதான் நியதி. இந்த நியதியில்தான் உலகம் இயங்கி ஜீவராசிகள் அனைத்தும் வளர்ந்தும் வாழ்ந்தும் வந்துள்ளன.
ஒரு குழந்தை நடக்க முயற்சிக்கும்போது தடுமாறி பின் ஓர் நிலையில் தடுமாறாமல் நிற்க, நடக்க பழகிவிடுகிறது. புவியின் ஈர்ப்பு விசையை அதன் உணர்வுகள் புரிந்து கொண்டு விட்டன. இதைப்போன்றே இயற்கையில் பல இரகசிய விதிகள் உள்ளன. அவற்றைப் புரிந்து அனுசரித்து வாழ்கை முறைகளை நெறிப்படுத்தியுள்ளனர் முன்னோர்கள். அதில் ஒன்று தர்மம். அதை நாம் காத்தல், அழித்தல் செயல்களுக்கு ஏற்ப நம் வாழ்வில் காத்தலும், அழித்தலும் இருக்கும். நட்பு/உறவு-பகை, இன்பம்/சந்தோஷம்- துன்பம்/துயரம், இருள்- ஒளி, விருப்பு- வெறுப்பு, ஜனனம்/பிறப்பு-மரணம்/இறப்பு, இரவு-பகல், இல்லறம்- துறவறம், ஆண்-பெண், கருப்பு- வெண்மை என ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டாலும் அந்த இரண்டும்தான் உலக இயக்கத்தின் சிறப்பாகிறது. இது இயற்கையின் நியதி அதைப் புரிந்து ஏற்று வாழ்வை இனிமையாக்கிக்கொள்ள் ஆசிகள்.-குருஸ்ரீ பகோரா.
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.