ஊர்:திருக்கோணமலை.தி.த-273+மு+அ-9.திருக்கோணேஸ்வரம்,திருக்குணமலை, திருமலை, திருகுணாமலை, திருகூடம்,
இறைவன்:ஸ்ரீதிருக்கோணசுவரப்பெருமான்
இறைவி:ஸ்ரீமாதுமையம்மை
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅருணகிரிநாதர். ஸ்ரீநடராஜர்-சிவகாமசுந்தரி, ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி,தெய்வானை.
நிலைராஜகோபுரம்.
சிவ ஆகமமுறப்படி 6காலவழிபாடு,
மரம்-கல்லால
தீர்:பவநாசம் தி.நே-
3000ஆண்டுகள் பழமை. தட்சிணகைலாயம். சுவாமிமலை என்ற குன்றின் மீது அமைந்துள்ளது. வரலாற்றுக்கு முற்பட்டகோவில் கடலில் மூழ்கியது. ஆழ்கடலில் மூழ்கிய கோணேஸ்வரருக்கு இப்போதும் கோவிலில் மலைபூஜை நடக்கின்றது. குறிஞ்சி முல்லை, மருதம் நெய்தல் ஆகிய மூவகை நிலப்பரப்புகள் ஒன்று சேருமிடத்தில் அமைந்துள்ளது. கிணறு தோண்டும்போது கிடைத்த கோணேஸ்வரர், மாதுமையாள், சந்திரசேகரர், பார்வதி, பிள்ளையார், அஸ்திரதேவர் திருமேனிகள் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ளன. இராவணன் தன் தாயார் பூஜிக்க கயிலையில் இருந்து பெயர்தெடுத்து கொணர்ந்த மலை. கடற்கரை கோட்டைக்குள் அமைந்துள்ளது. கனரகவாகனங்களுக்கு அனுமதியில்லை. 1950 ஆண்டு சிவனடியார்களால் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு 1963ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பங்குனி திருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(105)- பெற்ற தலம். ஆடி அமாவாசை, பங்குனி உத்திரத்தேர்