ஊர்: மேல்கோட்டை#திருநாராயணபுரம்
மூலவர்: ஸ்ரீமுத்துக்குமரன்(சு),செல்வநாராயணன்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீயதுகிரியம்மன்
உ: ஸ்ரீராமப்ரியர்
பிறசன்னதிகள்: ஸ்ரீராமானுஜர்,ஸ்ரீநரசிம்மர்-மலைமேல்
மரம்:
தீர்:
தி.நே-0830-13,16-18,19-2030
# 04-05-2009- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
1000 வருடங்கள் பழமை. மாசி-பங்குனி பிரமோற்சவம்- வைரமுடி உற்சவம் சிறப்பு.
காஞ்சி- கொடையழகு, ஸ்ரீரங்கம்- நடையழகு, திருப்பதி-வடையழகு, மேல்கோட்டை- முடியழகு.
விஷ்னு தானே தோன்றிய நான்கு சேத்திரங்கள்- காஞ்சி, ஸ்ரீரங்கம், திருப்பதி, மேல்கோட்டை.
கிருமிகண்ட சோழனால் தனக்கு வரவிருந்த ஆபத்தை உணர்ந்த இராமாநுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து இங்கே வந்து தங்கியிருந்தார். பூமியில் புதைந்து போன திருநாரயணப் பெருமானை எடுத்து கோவில் மற்றும் சன்னதிகள் கட்டி பூஜை வழிபாடுகள் நடத்தினார்.
வடக்கே கொண்டு செல்லப்பட்ட உற்சவர் சிலையை மீட்டுக் கொண்டுவந்தார். உற்சவ மூர்த்தியான ராமப்ரியர் கிருஷ்ணன் முதலானோரால் பூஜிக்கப்பட்டு வந்தார்.
கிருஷ்னனின் பேரனான அநிருத்தனின் வைர மகுடத்தை மகாபலியின் பேரனான விரோசனன் திருடிக் கொண்டுபோய்விட்டான். கருடபகவன் விரோசனுடன் போரிட்டு கிரீடத்தை மீட்டுவரும் வழியில் உச்சியிலிருந்த நீலமணி கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அருகே கீழே விழுந்து மணிமுத்தாறு என்ற நதியாக ஓடியது. இதனால் நாச்சியார் கோவில் கருடோத்ஸ்வம் மேல்கோட்டை வைரமுடிக்கு முதல்நாள் நடக்கும். பிருந்தாவனத்தில் இருந்த கிருஷ்ணனிடம் வைர கிரீடத்தை கருடன் கொடுக்க அதை அவர் தான் பூஜித்த ராமப்ரியருக்கு அணிவித்தார். அந்த ராமப்ரியரை மேல்கோட்டைக்கு தந்தார். அந்த மகுடத்திற்கு வஜ்ரமகுடி எனப்பெயர். மருவி வைரமுடி. கருடன் எடுத்து வந்ததால் (வைநதேயர்)- வைநதேயமுடி.
மாண்டியா அரசாங்க கஜானாவில் இருந்து மாலையில் திருநாரயணபுரம் வந்தடையும். பெருமால் சிரசிலிருந்து தனியாகப் பார்க்கக் கூடாது என்பதால் அர்ச்சகர் கண்ணைக் கட்டிக் கொண்டு பெட்டியிலிருந்து வைரமுடியை எடுத்து பெருமாளுக்கு அணிவிப்பார். வைரமுடி எடுத்தவுடன் ராஜமுடி பெருமாளுக்கு அணிவிப்பர்.
பஞ்சசாமிர்தம்-ராமாமிர்தம்-1/5, நரசிம்மர்-மலைமேல்- 5நிலை ராஜகோபுரம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)