ஊர்: கைதாலா,குலூர்அருகில்# கிரீடனகிரி
மூலவர்: ஸ்ரீசென்னகேஸ்வரர்-6' ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மூன்று நிலை ராஜ கோபுரம் மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1600-1900
#04102009-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தாமரைபீடம் (பிரம்மா) மேல்- கருட உருவபீடம் மேல்-பெருமாள்-சுற்றிலும் பிரபையில் தசாவதார மூர்த்திகள்.
கை விரல் மோதிரத்தினுள் தர்பை செல்லும் அளவிற்கு சிற்ப வேலைப்பாடு. மூலவர் எந்த துனைமுட்டு இன்றி பின்னால் ஒளி வெளிச்சம் சிறப்பு.
தலபுராணம்: க்ரீடாபுரத்தின் இளைஞன் ஜெகநாதர். திருமணமானவர். சிற்ப வேலையில் சிறந்ததால் தொழில் நிமித்தம் அருகில் மாமன்னன் கட்டவிருந்த கோவில்களில் பணியாற்றினான். தன் குடும்பத்தை மறந்தான். அவனைப்போலவே அவன் மகனும் சிற்பக் கலையில் தேர்ச்சி பெற்று விளங்கினான். தன் தந்தையைத் தேடி ஊர் ஊராகச் சென்றான். போளூரில் சிற்ப வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த மூலவர் சிலையைப் பார்த்தவன் அதில் குற்றம் உள்ளது எனக்கூறினான். விஷயம் மன்னருக்கு எட்டியது. ம்ன்னரிடமும் அதையே கூறினான். தலைமை சிற்பி அப்படி யிருந்தால் தன் கையை வெட்டிக் கொள்வதாக சதியம் செய்தான். சிலை மேல் சந்தனம் தடவிட வயிற்றுப்பகுதியில் ஈரம் காயாமல் இருக்கவே அந்தப்பகுதியில் உளியால் தட்ட ஒரு தேரை வெளிவந்தது. தன் சிலையில் குற்றம் கண்டவன் தன் மகன் தங்கனாச்சேரி என்று விசாரித்து அறிந்தாலும் தான் முன்பே சொன்னபடி குற்றமுடன் சிலைவடித்த தன் கையை மன்னன் தடுத்தும் வெட்டிக்கொண்டான்.
பின் மகனுடன் சொந்த ஊர்வந்து மகனுடன் சென்னகேஸ்வரருக்கு ஆலயம் கட்டி முடித்தான். அமரசிற்பி ஜெகநாத ஆசாரியின் கை போளூரில் வெட்டப்பட்ட பின் சென்னகேஸ்வரர் (சென்ன- அழகான) சிலை வடிக்கும் போது கை வந்தது. அதனால் கைதாலா.ஐயர் அருகில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)