ஊர்: உஜ்ஜெயின்,# ஷிப்ராநதிக்கரை.
மூலவர்: காலபைரவர்
இறைவன்: சிவன் ஆலமரத்தடியில்
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: நந்தி, பாதாள பைரவி,
மரம்:
தீர்:
தி.நே-0700-1900
#-12-02-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
க்ஷேத்ரபாலகரான காலபைரவர் மூலவராக அருள் புரியும் தலம். பத்ராசென் என்ற மன்னரால் கட்டப்பட்டது. பஞ்சாக்னி நடுவே நீண்டகாலம் தவமிருந்து சிவனிடமிருந்து வரங்களைப் பெற்றதால் ஆணவம் கொண்டு தேவர்களைத் துன்புறுத்த அனைவரும் ஈசனிடம் முறையிட ஈசன் தன் அம்சமாக பைரவரை உருவாக்க அவர் அந்தகாசுரனைக் கொன்றார். தேவர்கள் ஈசனுக்கும் பைரவருக்கும் நன்றி சொன்னார்கள். ஐப்பசி தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம். கோவில் சுவர்களில் அழகிய வண்ண ஓவியங்கள். பூஜைக்கு கருப்புக் கயிறு, பத்தி,பூ,மதுபானம் எடுத்துச் செல்கின்றனர். அர்ச்சகர் மதுபானத்தை ஒர் கிண்ணத்தில் ஊற்றி பைரவர் வாயருகே வைக்கின்றார். மது உறிஞ்சப்படுகின்றது இரண்டுமுறை உறிஞ்சப்பட்டவுடன் மீதி இருக்கும் மது பிரசாதமாக தரப்படும். கபாலிகா, அகோரி பிரிவினரின் மாந்திரீக பூஜைக்கு முக்கியமான இடம். பூமிக்கு அடியில் இரண்டறை அடி சதுரவடிவிலான நுஷைவாயிலில் குனிந்து தவழ்ந்து சென்றால் பாதாள பைரவியின் தரிசனம்.- தந்திர பூஜைகள் நடைபெறும். கிருஷ்ணபட்ச தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் உடல்நலம் பெறும். தொழில் விருத்தி. இழந்த பொருட்கள் கிடைக்கும். தடைபட்ட திருமணம் நடைபெறும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)