ஊர்: கித்ராபூர்
மூலவர்:
இறைவன்: கோபேஷ்வர்(சிவன்),தோபேஷ்வர்(விஷ்ணு)
இறைவி:
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்: கிருஷ்ணா-எட்டு தீர்த்த கட்டங்கள்.
தி.நே-0800-1230,17-2000
1500 ஆண்டுகள் பழமை. தக்ஷப்பிரஜாபதிக்கு பதினாறு பெண் குழந்தைகள். அதில் கடைசிப் பெண் சதி சிவனைக் காதலித்து தன் தந்தையின் விருப்பதிற்கு மறாகக் சிவனைத் திருமணம் செய்து கொண்டாள். வாஜ்பேயி என்ற வேள்வி நடத்தும் போது தன் மருமகன் சிவனை அழைக்கவில்லை. சதியின் வற்புறுத்தலுக்காக அவளுடன் நந்தியை அனுப்ப, நந்தியை வெளியில் நிறுத்தி உள்ளே சென்ற சதி அவமானப்பட்டு யாகத்தீயில் குதித்து மாண்டாள். வெளியில் நந்தி குழம்பி நின்றார். இதையறிந்த சிவன் வீரபத்திரனை அழைத்து யாகத்தை அழித்து வரச்சொன்னார். கோபம் கொண்ட சிவன் ஆகையால் கோபேஸ்வரன்(செந்நிறம்). சிற்பத் தூண்கள் சிரப்பு. பொற்கொல்லர்கள் உருவாக்கியது போன்ற சிறப்புடன் சிற்பங்கள். கருவறையில் சிவனை சிறிது மறைத்த வண்ணம் இன்னொரு லிங்கம் நாமத்துடன்- தோபேஷ்வரர்- விஷ்ணு லிங்க வடிவில். சங்கநாதர்-சங்கேஸ்வர்,பகநாதர்-ராய்பாக்,கோபாஅதர்-கித்ராபூர் ஆகிய மூவரையும் ஒரே நாளில் தரிசித்து நிறைய மக்கள் மோட்சம் அடைய தேவர்கள் விஷ்ணுவிடம் மோடசம் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு வேண்டுதல் விடுக்க விஷ்ணு லிங்க உருவில் கோபேஷ்வரரைவிட உயரமாக மூல விக்ரகத்தின் முன் அமர்ந்து பக்தர்கள் சிவலிங்க தரிசனம் செய்ய முடியாமல் தடுத்தாராம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)