ஊர்:திருமாற்பேறு#தி.த-11.திருமால்பூர்,ஹரிசக்ரபுரம், உத்திரக்காஞ்சி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமணிகண்டேஸ்வரர், ஸ்ரீதயாநிதீஸ்வரர், ஸ்ரீபிரவாளேஸ்வரர், ஸ்ரீசாதரூபர், ஸ்ரீபவளமலையார், ஸ்ரீவாட்டந்தவிர்த்தவர், ஸ்ரீமால்வணங்கீசர்
இறைவி: ஸ்ரீஅஞ்சனாட்சி, ஸ்ரீகருணாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:பஞ்சமாதாக்கள், சூரியன், சோளீஸ்வரர், பாலகணபதி, உச்சிஷ்டகணபதி, சிதம்பரேஸ்வரர், கஜலட்சுமி, முருகன்-வள்ளி தெய்வானை. வீரபத்திரர்,பைரவர், சந்திரன், துர்க்கை-8கரங்களுடன். மகாவிஷ்ணு
5நிலைராஜகோபுரம்.
மரம்- வில்வம்
தீர்- சக்கர, பழம்பாலாறு:
5காலபூஜைகள். தி.நே-0800-1200,1700-2000
#30062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
குபன் எனும் அரசன் பொருட்டு திருமால் ததீசி எனும் முனிவரின் மீது தமது சக்ராயுதத்தை ஏவ அது அவரது வஜ்ர உடலை தாக்க முடியாமல் மடிந்தது. வருந்திய திருமால் கோவிந்தவாடி வந்து சைவராய் மாறி சிவ தீட்சை பெற்று பாலாற்றின் தென்கரையில் அம்பிகை செம்மண்ணால் பிடித்து வழிபட்ட லிங்க சிவனை பூசித்தார். திருமால் சிவ பக்தனாகி நாள்தோறும் 1008 மலர்களால் அர்ச்சனை செய்து வருகையில் ஒருநாள் ஒரு மலர் குறைவாக இருக்கவே மலரில்லாமையால் தன் கண்மலரைப் பறித்து அர்ச்சனை செய்ய சிவன் தோன்றி சுதர்சனம் எனும் சக்ராயுதம் பெற்றதால் திருமால்பூர்- திருமேற்பேறு. தூண்களில் அரியவகை சிற்பங்கள் சிறப்பு. முலவர் கூம்பு வடிவில்-மணல் வடிவம்- தீண்டாதிருமேணி. அவ்வப்போது புணுகு சாத்தப்படும். ருத்திராசப் பந்தலின் கீழே லிங்கம். மகாவிஷ்ணுவிற்கு தீபாராதனைக்குப் பிறகு சடாரி சார்த்தி தீர்தம் வழங்கும் மரபு. மாசி மகம் 10நாள் பெருவிழா. ஞானசம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர்- பாடல் பெற்ற தலம். 10 நூற்றாண்டில் சோழர்கள் கட்டிய ஆலயம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)