
ஊர்:திருநள்ளாறு#.தி.த-169+மு+நவ-7/9
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதர்ப்பாரண்யேசுவரர், ஸ்ரீதிருநள்ளாற்றீஸ்வரர்(சு), ஸ்ரீஆதிமூர்த்தி, ஸ்ரீநகவிடங்கர், ஸ்ரீநள்ளாறார்
இறைவி: ஸ்ரீபிராணாம்பிகை, ஸ்ரீபிராணேஸ்வரி, ஸ்ரீபோகமார்த்த ஸ்ரீபூண்முலையாள்-சக்தி பீடம். ஸ்ரீநீலோத்பலாம்பாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீசனிபகவான். ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீநளபக்தானுக்கிரகலிங்கம், ஸ்ரீசுவர்ண விநாயகர், ஸ்ரீஜண்பகத்தியாகர், ஸ்ரீஸ்கந்தர், ஸ்ரீசப்தவிடங்க லிங்கங்கள், ஸ்ரீகல்யாணசுப்ரமண்யர்-ஒருமுகம்- 2கரங்கள்- மயில்மீது,வள்ளி, தெய்வானையுடன் , ஸ்ரீநளநாராயணர், ஸ்ரீஞானபுரீஸ்வரர், ஸ்ரீபுவனேஸ்வரி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீஸ்ரீதியாகர், ஸ்ரீஜ்வரதேவர், ஸ்ரீஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்,
த.வி.சொர்ணவிநாயகர்.
5நிலைராஜகோபுரம். :
தீர்-நள,பிரம்ம,சரஸ்வதி,அகஸ்தியர்,அம்ச
மரம்-தர்ப்பை.
தி.நே-0600-1300,1600-2100
#03102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
தொலைபேசி-04368-2236530, 236504, 222501
சனிபகவான் நவக்கிரகத்தலம்-7/9 (சனி-தோஷ நிவர்த்தி-வியாதி, கடன், பேய், பிசாசு பயம் நீங்க). தேவர்களை புறக்கணித்து தமயந்தி நிடத நாட்டு மன்னன் நளனை மணந்தது கேட்ட சனி நளான்மேல் கோபமுற்று 12 ஆண்டுகளாக காத்திருந்து நளனிடம் குறை கானாது காலில் நீர்பட்டும் படாமலும் கழுவி சென்ற குற்றம் கண்டு, சனி பற்றிய நளன் துன்பங்கள் தீர்ந்து நாடாளத் தொடங்கியதும் சனியின் வேகந் தனியாமையால் தீர்த்த யாத்திரை சென்று பரத்வாஜ முனியின் அலோசனைப்படி திருநள்ளாறு வந்து தீர்த்தம் உண்டாக்கி நீராடி வழிபட கோவிலின் உள்ளே நுழைய, சனி நீதியாகவும் நேர்மையாகவும் நடப்பார் என்றாலும் நளன் வாழ்வில் சுயநலத்தைக் காட்டியதால் நளன் சிவ வழிபாட்டிற்கு கோவிலினுள் செல்ல, அவனைப் பற்றியிருந்த சனி கோவிலின் உள்ளே செல்லாமல் அஞ்சி வெளியில் நின்றான். தன் தவறுக்கு பரிகாரம் கேட்க அங்கேயே தியானத்தில் நின்று அருள்புரிய ஈசன் கட்டளை. நவகிரகங்களில் சனிக்கு மட்டுமே சன்னதி. பரிகாரச் சனித்தலம். மந்தன், சனைச்சரன்- என்பதே சனீஸ்வரன் என்றானது. சூரியன்- சாயாதேவியின் 2வது மகன் சனி. அண்ணன் யமன் தன் சிறுதாயின்மேல் உள்ள கோபத்தால் சனியை அடிக்க கால் ஒடிந்தது. தட்சன் யாகத்தில் கலந்துகொண்டதால் தன் ஒரு கண்ணை இழந்தார். சித்திரதர் என்பவரின் மகள் ஜ்யேஷ்டாவை சனிக்கு மணம் செய்வித்தார் சூரியன். ஒருநாள் கணவனின் பார்வைக்காக ஏங்கி நிற்க அது கவனியாமல் தியானத்தில் சனி இருக்க அவள் ஒரு பெண்ணின் மனத்தை கணவர் என்ற முறையில் புரிந்து கொள்ளாத உங்களுக்கு இப்போது கண்டு களிக்கும் ஆனந்தம் இல்லாமல் போகட்டும் என சபித்தாள். தியானம் கலைந்து எழுந்த சனி தவறை உணர்ந்தார். வருத்தத்தை தெரிவித்தார். ஆறுதல் அடைந்த அவள் தன் சாபத்தை நீக்க வழி தெரியாமல் தவித்தாள். இந்தச் சாபமே சனியின் பார்வை எப்போதும் வக்கிரமாக இருந்து தீமை தருவதாக அமைந்தது. சனி தோஷமுள்ளவர்கள் எள் முடிச்சு தீபம் பிரார்த்தனை. நவகிரகங்களில் சனிக்குமட்டுமே ஈஸ்வரன் எனப்பட்டம். இடையனார் கோவில் சிறப்பு. கோவிலுக்கு பால் கொடுத்த இடையனை காத்து அதை தன் வீட்டிற்கு அனுப்பி பொய்கணக்கு எழுதிய கணக்கனை தண்டிக்க சூலத்திற்கு வழி-பலி பீடம் விலகி இருத்தல். சப்தவிடங்கதலம்-1/7- நாகவிடங்கர்-உன்மத்த நடனம்- பித்து பிடித்தவன் போல.(திருவாரூர், நாகை, திருமறைக்காடு, திருக்காறவாசல், திருவாய்மூர், திருக்கோளிலி, திருநள்ளாறு) தேவி நீலோத்லாம்பாள்- சன்னதியில் மரகதலிங்க வழி பாடு மிகமிகச்சிறப்பு. தியாகவிடங்கர். முருகன் கையில் மாம்பழம் ஏந்தி. குழந்தைபாக்ய வழிபாடு. திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் வழிபட்டது. வைகாசி பெருவிழா. சம்பந்தர் சமணர்களை அனல் வாதத்தில் வென்ற - 'போகமார்ந்த' பதிகம் அனலில் இட்டபோது வேகாமல் பச்சை பதிகமாக இருந்தது இந்த தலத்திற்குரிய பாடல்அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். நள தீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து நீராடல். நளாகூபம்-நளனுக்காக கங்கையை நந்திகேஸ்வரர், பைரவர் மூலம் வருவித்தது-தரிசனம் மட்டும். சனிக்கிழமை- நீலநிறமலர்கள், கருங்குவளை மலர்களால் வழிபாடு சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
